Jump to content

"He will not waste a single bullet on a civilian like me" - Anita Pratap


Recommended Posts

இது மீள்பதிவு. இறுதிப்போர்க் காலகட்டத்தில், புலிகள் தப்ப விரும்பிய தமிழ் மக்கள்மீதே தாக்குதல் நடத்தினார்கள் போன்ற அயோக்கியத்தனங்களுக்கு...

"He will not waste a single bullet on a civilian like me" - Anita Pratap

இதனை எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, அனிதா பிரதாப் அவர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள். (அனிதா பிரதாப் முதன்முதலாக தலைவர் பிரபாகரனை பேட்டி கண்டவர். இதுவரை அதிக அளவில் பேட்டி கண்டவரும் அவரென்று தான் நினைக்கிறேன்) அவருக்கு தேவையானவற்றை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது. அனிதா பிரதாப், ரொம்பவே இனிமையானவர் என்றாலும், 2009க்குப் பிறகு, Anti-LTTE ஆக மாறியவர்களில் அவரும் ஒருவர் என்று கேள்விப்பட்டதால், ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. எனவே, கலந்துரையாடலின் போது, அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் என்று நான் கொடுத்தவை பெரும்பாலும் விடுதலைப் புலிகள் சார்ந்தவை தான். அப்போது அவரிடம் ராஜிவ் காந்தி கொலை பற்றி ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். (நான் கொடுத்த கேள்வியா என்று நினைவில்லை)

அதற்கு அவர் கூறிய பதில்,

"ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு வைக்கப்பட்ட ஜெயின் கமிஷனிலிருந்து என்னுடைய ஸ்டேட்மெண்டையும் கேட்க வந்திருந்தார்கள். நான் பிரபாகரனிடம் இதைப்பற்றி கேட்ட போது, 'அவர் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்தார். என்னிடம் அவர் இதுவரை பொய் பேசியது கிடையாது. எனவே, நான் விடுதலைப் புலிகள் தான் ராஜிவ் காந்தியைக் கொன்றது என்று நம்புகிறேன்' என்றேன். ராஜிவ் காந்தி ஈழத்தில் செய்த அநியாயங்களை நேரில் பார்த்தவள் நான். இப்படி நான் சொன்னதும், கமிஷனில் இருந்து வந்தவர்கள், 'அது எவ்வளவு பெரிய இயக்கம். அவர்களுக்கு இங்கும் கூட உளவாளிகள் இருக்கலாம். நீங்கள் இப்படி எங்களிடம் கூறியது தெரிந்தால், உங்களை அவர்கள் கொலை செய்துவிடுவார்கள்' என்று கூறினார். நான், 'அவர் என்னைப்போன்ற ஒரு சாமானியனின் மீது ஒரு தோட்டாவினைப் பயன்படுத்தி அதனை வீணடிக்க மாட்டார் (He will not waste a single bullet on a civilian like me)' என்று பதிலளித்து, பாதுகாப்பு எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இந்த நூற்றாண்டு கண்ட உண்ணதமான இயக்கம் விடுதலைப் புலிகள். அவ்வளவு ஒழுக்கமான (disciplined) இயக்கம் அது. இதே போன்று, மும்பை கலவரம் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, பால் தாக்கரே தான் கலவரத்திற்கு காரணம் என்று நான் சொன்னேன். அதன் பின் அவரிடம் இருந்து பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்தன. எனவே, ஒரு மாதம் காவல் துறை பாதுகாப்போடு வீட்டிலேயே இருந்தேன்"

என்றார்.

ராஜிவ் காந்தியின் கொலை பற்றிய பதிலில் நம் பலருக்கும் மாற்றுக்கருத்து உண்டு. ஆனால், அவர் விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை, அது தான் விடுதலைப் புலிகள் இயக்கம். என்னுடைய கல்லூரி மலையாளிகள் நிறைந்தது. மலையாளிகள் பொதுவாகவே விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அனிதா பிரதாப்பும் ஒரு மலையாளி தான். அன்றைக்கு அவர் விடுதலைப் புலிகளைப் பற்றி தவறாக பேசி இருந்தால், அதிகபட்சம் தமிழ் மாணவர்களால் கேள்விகளை கேட்டு கோஷங்களை மட்டுமே எழுப்பி இருக்க முடியும். ஆனாலும், அங்கு அவர் விடுதலைப் புலிகளைப் பற்றி "அவர்கள் விடுதலைக்காக போராடினர். அதற்காகவே மடிந்தனர்" என்று சொன்னார்.

அவர் விடுதலைப் புலிகளைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் பேசிய ஒவ்வொன்றையும் வீடியோ ஆவணமாகச் செய்ய வேண்டுமென்று ஆசை. அதனால் தான் அதனை எழுதியது கிடையாது.

இன்றைக்கு மண்டை வீங்கிகள் மீண்டும் நம்மை பிராண்ட ஆரம்பித்ததிருக்கிறார்கள். தவறினை ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதவர்கள், ஓர் உன்னதமான போராட்டத்தை இழித்துப் பேசுகிறார்கள். மே மாதமும், நவம்பர் மாதமும் எப்போதுமே உணர்ச்சிகரமானது. அதுவும் நினைவேந்தலின் போது, எந்தக் கடலுக்காக, கடலுக்கு அப்பால் இருக்கும் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனறோ, அதே கடலில் நின்று அவர்களது நினைவினை ஏந்தி, மனதில் தமிழீழத்தின் தேவையை ஏந்தும், உணர்வுமிக்க நாள். ஒருவருடைய துக்கத்தில் கலந்து கொள்வது தான் தமிழர் மரபு; மனிதப் பண்பு. கவலைப் படாதீர்கள், உங்கள் வீடுகளில் துக்கம் நடக்கும் போது, பிணத்தின் எலும்புகளை நாங்கள் எண்ண மாட்டோம். நாங்கள் தமிழர்கள்; மனிதர்கள். பிணந்தின்னி கழுகுகள் அல்ல.

நாளை நினைவேந்தல். தமிழர் கடலில் கூடுவோம்.

#Justice4TamilGenocide

 

https://m.facebook.com/story.php?story_fbid=2358724101032341&id=100006843225344

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்......!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.