Jump to content

அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி

May 19, 2019

scott-morrison.jpg?resize=800%2C450அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர்.  இதனால் லிபரல்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போதிலும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

 #scottmorrison #australia #election #அவுஸ்திரேலியா  #லிபரல்கட்சிகூட்டணி   #வெற்றி

 

http://globaltamilnews.net/2019/122203/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரபார்க்காத வெற்றி. தோற்பார்கள் என்று பலராலும் ஆருடம் கூறப்பட்ட நிலையில், லிபரல்க் கட்சி வென்றிருக்கிறது.

முதலாளிகளுடனான நட்பு, வர்த்தக வங்கிகளுக்கான சலுகைகள், கல்வி மற்றும் வயோதிபர்களுக்கான கொடுப்பனவுகளில் வெட்டு, அதிகரித்துவரும் உலக வெப்பநிலை பற்றிப் பாராமுகம், வீட்டு விலையுயர்வு போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பாக லிபரல் கட்சிக்கெதிராக மக்களின் தேர்வு இருக்கும் என்று தேர்தல்கள் நெருங்கும் தறுவாய்வரை பல ஊடகங்களில் கருத்துக் கணிப்புக்கள் ஆருடம் கூறின. அதுமட்டுமல்லாமல்,  தொழிற்கட்சி தலைவர்மேல் லிபரல்க் கட்சியும் அக்கட்சிக்குச் சார்பான ஊடகங்களும் தொடுத்திருந்த அனாகரீகமான தனிநபர் தாக்குதல்களும் தொழிற்கட்சிக்குச் சார்பான அனுதாப அலையொன்றை ஏற்படுத்தியிருக்கும் என்றும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், இவையெல்லாவற்றையும் ஏறெடுத்தும் பார்க்கத்தவறிய வாக்காளர்கள்,  இரு முக்கிய விடயங்களை மட்டுமே முன்னிறுத்தி தமது வாக்கை அளித்திருக்கின்றனர். முதலாவது, தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி  சேமிப்பை அதிகரிக்க செய்வதாகச் சொல்லிவந்த வரி அதிகரிப்பு. இது பெருவாரியான மக்களின் கரிசணையாக அமைந்துவிட்டதோடு, லிபரல்க் கட்சியும் இதுதொடர்பாக கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது. 

அடுத்தது, தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருந்து, வாடகைக்கு கொடுப்பதால் ஏற்படும் செலவுகளுக்கான வரி விலக்கீட்டை அகற்றிவிடப்போவதாக சொல்லிவந்தமை. அப்படி நடக்கும் பட்சத்தில் வீட்டு விலைகள் சரியலாம், இது கடன்களுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்கச் செய்யும், பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்று லிபரல்க் கட்சியினர் கூறிவந்ததை மக்களும் நம்ப ஆரம்பித்து விட்டனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இத்தேர்தல் வெற்றி கூறுவது என்ன?

முதலாவது, லிபரல்க் கட்சியினர் இனவாதிகள், பழமைவாதிகள் எனும் அபிப்பிராயம் உள்ளது. அகதிகளை ஏற்றுக்கொள்ளுதலில் மிகவும் கராரான கொள்கையைக் கொண்டுள்ள இக்கட்சி, கடந்த சில வருடங்களில் அகதிகளாகக் கடல்மார்க்கமாக அவுஸ்த்திரேலியாவினுள் தஞ்சம் கேட்டு வந்தோரைத் திருப்பியனுப்பியுள்ளதோடு, படகுகளை முற்றாகத் தடுத்துவிட்டோம் என்றும் மார்தட்டிக் கொள்கிறது. 

அத்துடன், அவுஸ்த்திரேலியாவினுள் தஞ்சமடைந்து இதுவரை வதிவிட உரிமை இல்லாதவர்களை திருப்பியனுப்பவும் தொடங்கியிருக்கிறது. இது, இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இலங்கையின் இனவழிப்பு போர் முடிந்த கையோடு, அங்குசென்று, இரு ரோந்துக்கப்பல்களையும் அன்பளிப்பாக வழங்கி, இலங்கையிலிருந்து அகதிகளாக வருவோரைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான உதவி என்கிற பெயரில் பெருமளவு பணத்தினை மகிந்த அரசிற்குக் கொடுப்பதில் முன்னால் நின்று செயற்பட்ட அந்நாள் வெளிவிவகார அமைச்சரான ஸ்கொட் மொரிசனே இன்று பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதைப் பார்த்தால் ஈழத்தமிழ் அகதிகள் நிலை இனிமேல் என்னாகும் என்பது ஓரளவிற்குப் புலப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறியது போல தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி சேமிப்பை அதிகரிக்க செய்வதற்காக வரி அதிகரிப்பு, negative gearing சலுகையை இல்லாமல் செய்வது, franking credits cash back திட்டத்தை இல்லாமல் செய்வது போன்ற கொள்கைகள்தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணங்கள் என்று.

அத்துடன் பெருமளவு சுற்றுலாத்துறை மற்றும் கனிமவளத்துறையில் தங்கியிருக்கும் Queenslanders, Adani Coal Mine ஒப்பந்தம் தொடர்பான தொழிற்கட்சியின் மதில் மேல் பூனை போக்கால், அவர்களின் வாக்குகளை லிபரலை நோக்கி திரும்பியதும் பெரியளவிலான வாக்கு சரிவிற்கு காரணம் எனவும்,

Pauline Hanson’s One Nation மற்றும் Clive Palmer’s United Australia கட்சி போன்ற சிறிய கட்சிகளின் பங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், (இதில் Clive Palmer தொழிற்கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதே United Australia கட்சியின் முக்கிய நோக்கம் என வெளிப்படையாக கூறி வந்துள்ளார்),

மேலும் Bill Shorten அதிவிருப்பத்திற்குரிய தலைவராகவோ, ஆளுமைமிக்கவராகவோ கருதப்படாமையும் தொழிற்கட்சியின் படுதோல்விக்கு காரணங்கள் என ஊடகங்கள் கூறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் கூறியது போல தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி சேமிப்பை அதிகரிக்க செய்வதற்காக வரி அதிகரிப்பு, negative gearing சலுகையை இல்லாமல் செய்வது, franking credits cash back திட்டத்தை இல்லாமல் செய்வது போன்ற கொள்கைகள்தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணங்கள் என்று.

அத்துடன் பெருமளவு சுற்றுலாத்துறை மற்றும் கனிமவளத்துறையில் தங்கியிருக்கும் Queenslanders, Adani Coal Mine ஒப்பந்தம் தொடர்பான தொழிற்கட்சியின் மதில் மேல் பூனை போக்கால், அவர்களின் வாக்குகளை லிபரலை நோக்கி திரும்பியதும் பெரியளவிலான வாக்கு சரிவிற்கு காரணம் எனவும்,

Pauline Hanson’s One Nation மற்றும் Clive Palmer’s United Australia கட்சி போன்ற சிறிய கட்சிகளின் பங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், (இதில் Clive Palmer தொழிற்கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதே United Australia கட்சியின் முக்கிய நோக்கம் என வெளிப்படையாக கூறி வந்துள்ளார்),

மேலும் Bill Shorten அதிவிருப்பத்திற்குரிய தலைவராகவோ, ஆளுமைமிக்கவராகவோ கருதப்படாமையும் தொழிற்கட்சியின் படுதோல்விக்கு காரணங்கள் என ஊடகங்கள் கூறுகின்றன.

உண்மைதான், குயீன்ஸ்லாந்து வாக்குகளே தேர்தலின் போக்கை மாற்றியமைத்ததாகப் பலரும் கூறுகிறார்கள். விவசாயத்துறையிலும், கனிமவள உற்பத்தியிலும் முன்னிற்கும் இம்மாநிலம் இயல்பாகவே தொழிற்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட காலம் போய், இன்று லிபரல் நஷனல் கட்சியின் இருப்பைத் தக்கவைக்க உதவிய மாநிலம் என்று சொல்லுமளவிற்கு மாறியிருக்கிறது.

லிபரல்க் கட்சிமீது பெருகிவந்த மக்கள் வெறுப்பினைச் சரியான முறையில் தொழிற்கட்சி பாவிக்கத் தவறிவிட்டதும் அதன் தோல்விக்கு இன்னொரு காரணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.