Jump to content

பொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே தாக்குதல் ; அரச பயங்கரவாதம் தலைதூக்குமோ என அச்சம் - பாதிக்கப்பட்டவர்கள் அங்கலாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே தாக்குதல் ; அரச பயங்கரவாதம் தலைதூக்குமோ என அச்சம் - பாதிக்கப்பட்டவர்கள் அங்கலாய்ப்பு

( களத்திலிருந்து எம்.டி. லூசியஸ், வீ.பிரியதர்சன் )

இரத்தக்கறை படிந்த மரண வேதனைகள் நிறைந்த அந்த '21 ஆம் திகதி" இன்னும் நினைவில் இருந்து நீங்கவில்லை.  பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் புதையுண்ட இடங்களில் இன்னும் புற்கள் கூட முளைக்கவில்லை.

minuwangoda.jpg

அதற்குள் இனவாதம், மதவாதம், துவேஷம், வன்முறைகள் என நாடே அதாளபாதாளத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது.

உயிர்த்த யேசுவின் பெருநாள் அன்று பல அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுப்பட்டு கிறிஸ்த்தவர்கள் அமைதி காத்து வந்தார்கள். 

கழுகு போன்று சமயம் பார்த்துக்கொண்டிருந்த சில காடையர் குழுக்கள் இந்த சம்பவத்தை தமக்கு சாதமாக்கிக்கொண்டு இனங்களுக்கு இடையே குரோதத்தை வளர்த்து வன்முறைகளை தூண்டுவித்து அரசியல் இலாபம் தேட முயற்சித்துள்ளன.

இதற்கு அப்பால், குறித்த காடையர்களால் கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கொடூர தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

' எமது பொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே திட்டமிட்டு எம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அப்பாவி முஸ்லிம்களின் ஆதங்கமும் இதுவாகவே இருக்கின்றது.

நீர்கொழும்பு, சிலாபம் எனத் தொடங்கிய வன்முறைகள், குருநாகல் மாவட்டத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பகுதியிலும் கோரத் தாண்டவமாடப்பட்டுள்ளதை நேரில் சென்ற எம்மால் அவதானிக்க முடிந்தது.

உயிர் பலி

பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த வன்முறை தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதில் நீர்கொழும்பில் அப்பாவி முஸ்லிம் தந்தை ஒருவரின் உயிரும் பறிபோயிருந்து.

வீரகேசரி குழுவினர் விஜயம்

மினுவாங்கொடை நகருக்கு செல்லும் வீதியில் காடையர் குழுக்களினால் அரங்கேற்றப்பட்டிருந்த அட்டகாசங்களை அவதானித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தோம். வீதிகள் தோறும் பாரிய கற்கள், பொல்லுகள், கண்ணாடித்துகள்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

முற்றாக எரிந்து சாம்பராகிய தாக்குதல் வடுக்களைக்கொண்ட வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்புக்காக முழத்துக்கு முழம் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் தரித்து நின்றனர். 

IMG_4454.jpg

ஒவ்வொரு கடைகளும் வீடுகளும் தாக்குதலின் கொடூரத்தை சுமந்து நிறக்கின்றன. ஆங்காங்கே கடைகள் எரிந்தும் எரியாமலும் புகைத்துக்கொண்டிருந்தன. இந்தக்காட்சி சற்று எமக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

திடீரென படைவீரர் ஒருவர் 'எங்கே போகின்றீர்கள் என சற்று கடும் தொனியில் எம்மிடம் கேட்டார். எமது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னும் கடைகள் கடுமையாக சேதமாக்கப்பட்டிருந்த பகுதிக்கு அவர் எம்மை அனுமதிக்கவில்லை.

இதன் பின்னர் வன்முறை நிகழ்ந்தேறி தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். பள்ளிவாசல் முற்றாக சேதமாக்கப்பட்டிருந்தது. வாயில் கதவுகள் கண்ணாடி யன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டிருந்தன.

பள்ளிவாசல்களுக்குள் அதிகளவு ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். அனைவர் முகத்திலும் கோபம். அங்கும் இங்குமாக குழுக்கள் குழுக்களாகக்கூடி ஆதங்கமாககதைத்து கொண்டிருந்தார்கள்.

60734370_328411721179602_437940303732460

பள்ளிவாசலினுள் இருந்த கல்லொழுவை பள்ளிவாசலைச் சேர்ந்த 35 வயதுடைய சப்றி மௌவி எம்முடன் பேசத்தொடங்கினார். அவரொரு சமூக செயற்பாட்டாளர். அனைத்தின, மத செயற்பாடுகளில் பாரபட்சமின்றி கலந்துகொள்ளும் மனிதர்.

60854543_2254941224754514_83186146359640

படையினரின் உதவியுடனேயே தாக்குதல்

இராணுவ பாதுகாப்பும் பொலிஸ் பாதுகாப்பும் இருக்கும் போதே எமது சொத்துக்கள் மீது சேதம் விளைவிக்கப்பட்டன. அவர்களின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே அனைத்தும் அரங்கேற்றப்பட்டன.

நோன்பு திறப்பதற்கு ஆயத்தமாக இருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் மாலை 5.15 மணியளவில் வந்த கும்பலொன்று சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். இதன் பின்னர் இரவு 7 மணியளவில் வன்முறைகள் உக்கிரமடைந்தன. இதன் போதும் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டவர்களைத் தடுக்கவில்லை.

7.15 மணியளவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. எமது கடைகளுக்கு பாதுகாப்பாக நாம் இருந்த போதும் படையினர் எம்மைத் தகாத வார்த்தைகளினால் திட்டி விரட்டியடித்தனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னரே கடைகளுக்கு தீவைப்பு

ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரும் முன்னர் சில கடைகள் சேதமாக்கப்படவில்லை. ஊரடங்குச் சட்டத்தின் பின்னர் மினுவாங்கொடை நகர் பகுதியில் படையினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.

இதன் பின்னரே அங்கு வந்த கும்பல் படையினரின் கண்ணெதிரே எமது கடைகளுக்கு தீவைத்ததைக் கண்டோம். அந்தக் கணொளியை அவர் எம்மிடம் காண்பித்தார். அவர் கூறியது போன்று வர்த்தக நிலையங்களுக்கு காடையர் குழு தீவைப்பதை எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மீண்டும் எம்முடன் பேசிய அவர்,

முதன்முலாவதாக எமது பிரதேசத்திலுள்ள விமான நிலைய வீதியிலுள்ள பிரபலமானதும் பெரிய ஹோட்டலான பௌசுல் ஹோட்டலை தாக்கித் தகர்த்தனர்.

_106949477_2ea6591e-3bc0-4a51-a4fd-aa9a1

அந்தக் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. 24 மணித்தியாலமும் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. ஒரு நேரத்தில் 300 மற்றும் 400 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக உணவருந்தலாம். ஒரு செல்வாக்கு நிறைந்த இடத்தையே தரை மட்டமாக்கிவிட்டார்கள். 

இந்த இடத்திலும் படையினர் விடுப்பு பார்த்துக்கொண்டே இருந்தனர். காடையர் குழு இந்த இடத்திலிருந்தே மினுவாங்கொடை நகர் மீது நகர்ந்தது. அவர்களின் பின்னே படையினரும் தொடர்ந்து அங்கு வந்தனர்.

இந்த நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் எமக்கு அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் அந்த காடையர் குழு தமது விருப்பத்தின் போல் செயற்பட விட்டு விட்டு படையினர் வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தனர்.

அரைக்காற்சட்டை அணிந்து கொண்டு பொல்லுகள் தடிகளுடன் மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வாகனங்களில் வந்து இறங்கினர்.

அந்த காடையர் குழுவுக்கு உள்ளூர் பெரும் பான்மையினத்தவர்களும் வழிகாட்டலுடனேயே இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. மினுவாங்கொடை நகரத்தின் சந்தைத் தொகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களுடன் இணைந்த முஸ்லிம் சில்லறை வியாபார நிலையங்கள் கலந்து காணப்படுகின்றன.

வெளிப் பிரதேசத்தில் இருந்து வந்த காடையர் கும்பலுக்கு எவ்வாறு முஸ்லிம்களின் கடைகளை மாத்திரம் இனம் காணமுடியும். அந்தக் கும்பலுக்கு எமது பிரதேசத்தவர்களே வழிகாட்டிகளாக இந்துள்ளமை வெளிப்படையாகத் தெரிகின்றது.

எமது முஸ்லிம் மக்களின் சுமார் 20 க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சிறிதுசிறிதாக சேர்த்து கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி அல்லாஹ்வின் ஆசீர்வாதத்தால் சேர்த்த அனைத்து சொத்துக்களும் இன்று சாம்பராகிவிட்டன. இதற்கு யார் பொறுப்புக் கூறுவார்கள். எம்மை இலக்கு வைப்பார்கள் என்று நாம் ஒருபோதம் நினைக்கவில்லை.

சுமார் 40 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத் தரப்பின்  ஒத்துழைப்புடனேயே அனைத்தும் அரங்கேற்றப்பட்டன. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தும் போது குறிப்பிட்ட சிலர் தொழுதுகொண்டு இருந்தனர். அல்லாஹ்வின் உதவியால் அவர்கள் தாக்குதலுக்குள்ளாகாது தப்பிச்சென்று விட்டனர். இந்தப்பள்ளியைப் பாருங்கள் எவ்வளவு கல்லுகள். இந்த கல்லுகள் மனிதர்களுக்குப்பட்டாலே பலியாகியிருப்பர்.

60792679_355680158630592_159738228251820

மௌலவியொருவரை முழங்காலில் வைத்து படையினர் தாக்கினர். பக்கத்திலுள்ள கல்லொழுவ பகுதியில் எமது மக்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தனர். அந்தப்பகுதிக்கு வந்த ஆயுதப்படையினர் எமது மக்களைப் பார்த்துக்கேட்ட கேள்வி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன்கவலையையும் ஏற்படுத்தியது.

“ உம்பாலாயே எயுன்ஹ் அப்பே எயுன்ட கால தியனவத ? ”உங்கட ஆட்கள் எங்கட ஆட்களுக்கு அடித்து விட்டார்களா ” என கேட்டார்கள்.

இதன் பின் எமது மௌலவியொருவரையும் முழங்காலில் இருக்க வைத்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்த நேரத்தில் ஊர்மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட ஊர்மக்கள் மீது தாக்குதல் நடத்துவதே பாதுகாப்பு படையினரின் நோக்கமாக இருந்தது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் அங்கு வந்த படையினர் “தங் அத்தி உம்பலா யன்ட”அடித்தது போதும் வெளியேறுங்கள் என்று கூறிய காணொளி எம்மிடம் இருக்கின்றது. காணொளியை எமக்கு காண்பித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது இருந்தும் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டார்கள். 

நாங்கள் இலங்கை பிரஜைகள் இல்லையா ? எமக்கும் இந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமையுள்ளது. சட்டமென்பது அனைவருக்கும் சமமானது. ஆனால் இங்கு நடப்பதை நோக்கினால் ...... அவர் கதைக்கமுடியவில்லை. ஆதங்கமடைகின்றார்.

புரட்டி போடப்பட்ட ஏழை மகனின் 'வடைத் தட்டு'

60614886_878704762470296_130108973306085

பின்னர் அங்கு வீதியின் ஓரத்தில் புரட்டி தள்ளப்பட்டிருந்த கடை கூடாரம் ஒன்றை ஒருவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரை அனுகிய போது அவரின் முகத்தில் ஆயிரம் வேதனைகளும் துன்பமும் பிரதிபலித்தன.

'வாங்க தம்பி. வந்து பாருங்கள். எனது வடைத் தட்டை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. வீதியில் செல்பவர்களுக்கு வடை விற்று அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தேன். ஆனால் இன்று எனது வாழ்வாதாரத்தையே இல்லாமல் செய்துள்ளார்கள் என்றார்.

பாவம் ஒரு ஏழை மனிதை கூட விட்டு வைக்கவில்லை இந்த காடையர் கூட்டம். 

பாரிய அரசியல் பின்னணி உள்ளது

அந்த இடத்தில் இருந்து மற்றுமொரு நபர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வன்முறை சம்பவங்களின் பின்னால் பாரிய அரசியல் பின்னணியொன்று காணப்படுகின்றது. காட்பொட் வீரர்களே இவ்வாறு வந்துசென்றுள்ளார்கள். 

நேருக்குநேர் மோதத்தெரியாதவர்கள் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்து எம்மை வீட்டுக்கு அனுப்பிவிட்டு எமதுசொத்துக்களை சேதப்படுத்திவிட்டார்கள்.

இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைபெற அச்சமாக இருக்கின்றது.

அவர்களுக்கு. அவ்வாறு சென்று சிகிச்சைபெற்றால் அவர்களின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம் சுமார் 10 ,15 பேர் காயமடைந்திருப்பர்.

மினுவாங்கொடை முதல் கல்லொழுவை எக்சத் சந்திவரை முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்தப் பகுதியில் தான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன என்றார்.

பொருளாதாரத்தை வீழ்த்தவே தாக்குதல்

உடைத்து நொருக்கப்பட்ட கடைக்குள் நின்ற ஒருவரை அணுகினோம். அந்த அழகிய கடை நாசமாக்கப்பட்டிருந்து. அவருடைய மனநிலை எவ்வாறு இருக்கின்றது அவரின் முகத்தின் மூலம் தெரிந்தது.

என்ன நடந்தது என கேட்ட போது?

'எரியூட்டப்பட்ட கடைகள் அனைத்தும் 10 வருடங்கள் பழைமையான கடைகள். நல்ல முறையில் வியாபாரம் இடம்பெற்ற கடைகள்.

முஸ்லிம் சமூகத்தை பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை ஏற்படுத்தவே இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செயற்பாட்டால் இலங்கையின் பொருளாதாரமே பின்னடைவை சந்தித்துள்ளது என்று அவர்களுக்கு புரியவில்லை. இந்த வன்முறையால் நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அரசாங்கமே பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தான் இந்த வீழ்ச்சியை ஈடுசெய்யவேண்டும்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்கு நாம் சென்றபோது, அங்கிருந்த படையினர் நம்மை மறைத்தார் இதன்போது குறுக்கிட்ட நபரொருவர் எமது வேலையை செய்ய இடமளியுங்கள். சட்டத்தின் அனுமதியுடனேயே நாங்களும் இங்கு வந்துள்ளோம் என குறித்த படை வீரரிடம் தெரிவித்தார். அவர் தான் 46 வயதுடைய சட்டத்தரணி நியாஸ் முஹம்மட்.

60583150_860424490975398_559493995101683

இயல்பாகவே அவர் எம்முடன் கதைக்க ஆரம்பித்தார்.

முஸ்லிம்களை இல்லாதொழிப்பதற்கு முயற்சி 'பாருங்கள் உங்களது கடமையை செய்யக்கூட இவர்கள் இடையூறு செய்கின்றனர். 

இலங்கை நான்கு இனங்களை உள்ளடக்கிய ஒரு அழகான நாடு. 30 வருடங்களாக ஒரு இனத்திற்கு எதிராக போராடி தீயில் கருகி இப்போது தான் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் தீவிரவாதிகளின் செயற்பாடால் நாடு முற்றாக நாசமாகியுள்ளது.

முஸ்லிம்களை வேற்று இனத்தவர்களுடன் பகைமையை ஏற்படுத்தி அவர்களை இல்லாமொழிப்பதற்கே தற்போது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்திற்கு ஏனையவர்களைவிட கவலைப்பட்டவர்களும் நாமே. அதனை இல்லாதொழிக்கவேண்டுமென முன்னின்று செயற்பட்டவர்களும் நாமே. 

சஹ்ரான் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னே நாம் தகவல் வழங்கியுள்ளோம். 21 ஆம் திகதி சம்பவத்தின் பின்னரும் கூட சஹ்ரானின் குழுவினரை முஸ்லிம் மக்கள் காட்டிக்கொடுத்தார்கள். அவர்களுக்கு பொலிஸாரினால் சன்மானம் கூட வழங்கப்பட்டது. 

எம்மால் தகவல்கள் மாத்திரமே வழங்க முடியும் நாம் புலனாய்வுப் பிரிவினராக செயற்பட முடியாது.

ஐ.எஸ். தொழினுட்ப ரீதியில் பயங்கரமான இயக்கம் ஐ.எஸ். இயக்கமானது உலகளவில் தொழிநுட்ப ரீதியில் மிக பயங்கரம் வாய்ந்த இயக்கமாகும். பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பதால் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்தி விட முடியாது. ஏனெனில் அவர்கள் தொழில்நுட்பரீதியில் வலுவான இயக்கமாகும்.

மத்ரசாக்களில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுவதில்லை. சஹ்ரான் ஒரு மௌவிகூட இல்லை. அவர் மௌவியாகக் கூட பதிவு செய்யப்படவில்லை. அவர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று தேவையில்லாத விடயங்களை தலையில் போட்டு நாசகாரசெயல்களை செய்துள்ளார்.

இவர்களின் செயற்பாடால் எமது சகோதர தமிழனம் கூட இஸ்லாமியர்களைக் தீவிரவாதிகளாகப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்நேரத்தில் 3 இனங்களும் ஒன்றுபட்டு ஆரம்பகாலத்தில் இருந்ததைப்போன்று அந்நியோன்யமாக இருக்க வேண்டும். அதாவது மதங்களை கேவலப்படுத்தும் நோக்கிலேயே தற்பேது பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

'கடவுள் காடையன்"

ஒரு மதத்தின் கடவுள், 'நீ அவனை கொண்டுவிட்டு வா உனக்கு நான் 72 தேவகன்னியர்களைத் தருகிறேன்" என்று கூறினால் அந்த கடவுள் காடையனே !

கடவுள் தூண்டுபவரென்றால் கடவுள் ஒரு பயங்கரவாதி. ஆனால் இஸ்லாம் மாதத்தில் இவ்வாறானதொரு கருத்து இல்லை, அப்படி இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஷரியா சட்டத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென இஸ்லாமியர்கள் கோரவில்லை. 

யாழ்ப்பாணத்தவர்களுக்கு தேச வழமைச்சட்டம் உள்ளது. கண்டி மக்களுக்கு கண்டிச் சட்டம் உள்ளது. முஸ்லிம்களுக்கு முஸ்லிம் விவாகரத்துச் சட்டமுள்ளது. 

அதாவது அந்தந்த இனங்களின் தனித் தன்மையை பேணுவதற்காக இந்த சட்டங்கள் காணப்படுகின்றது. அதனைக்கூட தீவிரவாதிகள் இல்லாமலாக்க நினைக்கின்றார்கள்.

21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டும் சுமார் 3 கிழமைகள் கடந்துள்ள போதும் பள்ளிவாசல்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் பாரிய அரசியல் நோக்கம் இருக்கின்றதென்பதை உறுதியாக புலப்படுகின்றது.

பாதுகாப்புப் படையின் தீவிரவாதமும் இதில் காணப்படுகின்றது. இதற்கு காரணம் எமது பிரதேசத்திற்கு வந்த பாதுகாப்புப் படையினர் பள்ளி மௌவிகளின் தாடியைப் பிடித்து அடித்தார்கள். அவர்களை ஒரு வார்ததை கூட பேச அனுமதிக்கவில்லை. காரணமில்லாது அடித்தார்கள்.

அரச பயங்கரவாதமோ என்ற சந்தேகம்

ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தால் வீட்டுக்குள் மின்குமிழ்களை போடுவதற்கோ வீட்டுக்குள் கதைப்பதற்கோ சட்டமில்லை. எமது வாலிபர்கள் தாக்கப்பட்டார்கள். 

அரச பயங்கரவாதம் தலைதூக்கப்படுகின்றதாக என்ற பாரிய சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தலைதூக்கினால் இந்த நாட்டில் எந்தவொரு சிறுபான்மையினரும் வாழ முடியாத நிலையேற்கடும். நாம் நாட்டுக்கு எதிராக பேசவில்லை. யதார்த்தத்தை புரிந்து கொண்டே பேசுகின்றோம்.

எமது பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்கள் சுமார் 100 கோடி பெறுமதியான நஷ்டமேற்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதை நான் எங்கு வந்து கூறவும் தயார். இந்த தாக்குதலுக்கு அனுமதித்தவர்கள் யார். தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.

சிறுபான்மை மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி

1990 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட அரசாங்கம் முயற்சித்தது. காத்தான்குடி சமமபவங்கள் கூட இவ்வாறே இடம்பெற்றன. சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து வாழ்வது பெரும்பான்மைனயினத்தவர்களுக்கு அச்சுறுத்தலாகக் கூட இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினத்தவர்களை பிரிப்பதற்கு ஒரு சக்தி முயற்சிக்கின்றது.

பாதுகாப்பு இந்த நாட்டிலுள்ளதென்று எவ்வாறு நம்பமுடியும் டென் பிரியசாத், அமித் வீரசிங்க போன்றோர் திகன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு வழக்கு இடம்பெற்றது. இந்த வழக்கிற்கு என்ன நடந்தது. தற்போது அவர்களை கைதுசெய்து சிலரை விடுதலை செய்துள்ளனர்.

பள்ளிவாசல்களில் கத்தி, வாள்களை மீட்பதாக ஊடகங்களில் தெரிவித்து சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மீது ஒரு கிளர்ச்சியை தூண்டியுள்ளார்கள்.

யுத்த களத்தில் கூட பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்களை தாக்கக் கூடாதென மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஷரியா சட்டத்திலும் சொல்லப்படவில்லை. ஐ.எஸ் தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்மே இவர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு கடுமையான உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். 

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தேற்றுவிப்பர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தெற்காசிய அரசியலை எடுத்துக்கொண்டால் இனவாதத்தை கொண்டே நடத்தப்படுகின்றது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இனவாத அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டை நாசமாக்கும் எண்ணமில்லை

வரலாறு உணர்த்துவதென்றால் ஒரு இனம் நசுக்கப்படும் போது விடுதலைப் போராட்டங்கள் உருவாகும் . அதற்காக நாம் தீவிரவாதிகளாக மாறப்போகின்றோம் என்று அர்த்தமில்லலை. 

எமது இளைஞர்களை அதற்குள் தள்ளிவிட்டு நாட்டை நாசமாக்கும் எண்ணமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து சுயாட்சி, சமத்துவத்தை உருவாக்க வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாததடைச்சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் ஒரு இனத்திற்கு எதிராக கருத்துத் தெரிவிப்பர்கள் கூட கைதுசெய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டள்ளது.

ஆனால் சில பெரும்பான்மை ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வைகயில் செயல்பட்டுவருகின்றன. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் அமைப்பின் 14 ஆவது உறுப்புரையின் கீழ் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் காணப்படுகின்றது. அந்த கருத்துச் சுதந்திரம் இனமுறுகலை ஏற்படுத்துவதாக அமைந்து விடக்கூடாது. இனவாதக் கருத்துக்களை தெரிவித்தவர்களை ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடியாதுள்ளனர். இது எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் ஒருபோதும் தமது கையில் சட்டத்தை எடுக்க மாட்டார்கள். அதனை நாம் வரலாற்றில் பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

முதல் நாளே எனக்கு தகவல் வந்தது

 

மினுவாங்கொடையில் முதல்முதல் தாக்குதல் நடத்தப்பட்ட பிரபலமான பவாஸ் என்ற ஹோட்டலின் உரிமையாளரான 52 வயதுடைய எம்.எம். இம்தாஸ் வாக்குமூலம் வழங்குவதற்காக தாக்குதல் இடம்பெற்ற பள்ளிவாசலுக்கு வந்திருந்தார். அவரை சந்தித்த நாம்...

IMG_3112.jpg

21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் எமது வியாபார நடவடிக்கைகள் குறைவடைந்து விட்டது. பெரும்பான்மை சிறுபான்மையென சகல இனமக்களும் வருவார்கள். ஆனால் தற்போது யாரும் வருவதில்லை. 

21 ஆம் திகதி தாக்குதலுக்குப்பின்னர் ஒவ்வொருநாளும் 30 ஆயிரம் ரூபா நஸ்டம் ஏற்பட்டது. இருந்தும் அதனைக்கொண்டு நடத்தினோம்.

மினுவாங்கொடையில் தாக்குதல் நடத்துவதற்கு முதல் நாள் இரவு எமக்கு தகவல் கிடைத்தது முஸ்லிம் வியாபார நிலையங்களை தாக்கப் போவதாக. இதனையடுத்து மறுநாள் கோப்பிவத்தை பள்ளிவாசலுக்கு இந்து, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் இஸ்லாம் மதகுருமார்கள் அனைவருடன் பொலிஸாரையும் அழைத்து இந்த முன்னெச்சரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

இந்த சந்திப்பிற்காக பௌத்த தேரரருக்கு தொலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தும் போது எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது எனது ஹோட்டல் மீது தாக்குதல் இடம்பெறுவதாக. சரியாக மாலை 5.30 மணியிருக்கும் தாக்குதல் இடம்பெறும் போது. நான் எனது வாகனத்தையும் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தேன். இடையில் என்னைத் தடுத்தார்கள் அங்கு போக வேண்டாமென்று. அங்கு எனது மகன் மற்றும் ஊழியர்கள் இருந்ததால் நான் அங்கு சென்றேன்.

மோட்டார் சைக்கிளில் 30 பேர் தாக்குதலுக்கு தயாராகி வந்திருந்தனர். பொல்லுகள், வாள்களுடன் வந்திருந்தார்கள். திடீரென 15 நிமிடத்தில் 300 மற்றும் 400 பேர் அவ்விடத்தில் குவிந்தனர். அவர்கள் எவ்வாறு எங்கிருந்து வந்தனர் என்று நான் நினைத்தேன். உடனே அங்கிருந்த பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்படும்படி. நான் வாகனத்தில் ஏறு முற்பட்டபோது கல்லொன்று வந்து என் வாகனத்தின் மீது விழுந்தது நான் அச்சமடைந்து விட்டேன்.

அங்கிருந்த பெரும்பான்மையின இளைஞரொருவர் என்னை பின்பக்கமாக இருந்த வயல்வெளியூடாக தப்பி ஓடச்சொன்னார் நான் எவ்வாறு தப்பியோடினேன் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

கைவிட்டுச்சென்ற 75 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். எடுப்பதற்கு வழியில்லை. கடையையும் தரைமட்டமாக்கிவிட்டார்கள். கடையிலும் 75 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு நஷ்டமேற்பட்டுள்ளது.

40 பேர் தொழிலை இழந்துள்ளார்கள்

எனது கடையில் சிங்களவர்கள் 15 பேரும் தமிழர்கள் 10 பேரும் முஸ்லிம்கள் 15 பேரும் பணிபுரிந்து வந்தனர். இன்று அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. பிரதேசத்தில் கஸ்டப்பட்ட பிள்ளைகள் பாடசாலை முடிந்து செல்லுபோது உணவு கோட்டால் பணமில்லாது கடந்த 8 வருடங்களாக உணவு வழங்கிவந்தேன்.

தாக்கியவர்களில் முக மூடி அணிந்து வந்தவர்கள் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தாக்குதல் சம்பவத்தை ஒரு வலையமைப்பின் மூலமே செயற்படுத்தியுள்ளனர். 

வெளிப்பிரதேசவாசிகளுக்கு முஸ்லிம்களின் கடைகள் தெரியாது எமது பிரதேசவாசிகளே அடையாளம் காட்டியுள்ளனர். சனச கட்டத்தொகுதியில் 80 கடைகள் காணப்படுகின்றன. அதில் உள்ள 3 முஸ்லிம் கடைகள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளது. இந்த 3 கடைகளுகளும் முஸ்லிம் கடைகளென எவ்வாறு வெளிமாவட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு தெரியும். எனது ஹோட்டிலில் இருந்த 19 வயது மகன் காயமடைந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் சி.சி.ரி.வி. கமெராவின் வயர்களை கழற்றும் காட்சிகளும் ஹோட்டலில் இருந்து சுமார் 20 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச்செல்லும் காடட்சிகளும் சி.சி.ரி.வி. கமெராவில் உள்ளது.

மினுவாங்கொடையில் வெசாக் தினத்தில் தோரணங்களை அமைப்பதை நானே முன்னின்று செய்வேன். ஏனைய பிரதேசங்களை விட மினுவாங்கொடையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைவாகவே காணப்பட்டது. என்ன செய்வோம். தொழிலும் இல்லை சொத்தும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது. இலங்கை பிரஜைகளுக்கு கிடைத்த பரிசே இது என்றார்.

மக்கள் மீது அன்புகொண்ட அரசியல்வாதிகளே தேவை 

மினுவாங்கொடையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலளித்துக்கொண்டிருந்த மினுவாங்கொடை மெதடிஸ் ஆலயத்தின் அருட்தந்தை நதீர எம்முடன் பேசத் தொடங்கினார்.

IMG_3067.jpg

இங்கு நடத்தப்பட்ட தாக்குதலை எவ்வித்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் கடைகளும் பள்ளிவாசல்களும் இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் கடைகளுக்கு இடையில் அமைந்துள்ள 4 பெரும்பான்மைக் கடைகளும் தீயில் எரிந்துள்ளன.

மனிதனை மனிதன் அச்சத்துடன் நோக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலைமையை நீடிக்கவிடாது மதத்தலைவர்கள் இனஙங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தாது ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அரசியல்வாதிகள் நாட்டு மக்களிடையே வன்முறையைத் தூண்டாது பொறுப்புடன் செயற்படுவதுடன் அரசாங்கமும் அவ்வாறு பொறுப்புடன் செயற்படவேண்டும். 

மக்கள் மீது அன்பு செலுத்தும் அரசியல்வாதியே எமக்குத் தேவை. அவர்களின் சுயலாத்திற்காக செயற்படக்கூடாது.

மினுவாங்கொடை தாக்குதலின் பின்னரும் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னரும் அரசியல்வாதிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

அரசியல்வாதிகள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சொத்துக்களை சேர்ப்பதற்கும் முன்னிற்காது மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நான்கினத்தவர்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்திருந்தால் ஒன்றுமையனெக்கருதுவது மடமைத்தனமாகும். அதாவது ஒரு இனத்தின் தேவையையும் உரிமையையும் அறிந்து அவர்களுடன் சமத்துவத்துடன் செயற்படுவதே ஒற்றுமையாகும்.

தாக்குதல் மேற்கொள்வதற்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கின்றேன். உங்களுடைய உடற்பலத்தை காட்டவேண்டாம். அறிவு பூர்வமாக இனங்களுடன் ஒன்றுபட்டு செயற்படுங்கள் அப்போது தான் நாட்டைக்கட்டியெழுப்ப முடியும்என்றார்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற மூன்று வாரங்களின் பின்னர் பாரிய வன்முறைகள் வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. 

இந்த சம்பவங்களின் பின்னணியில் பாரிய வலையமைப்பு ஒன்று செயற்பட்டுள்ளது என எம்மால் ஊகிக்க முடிகின்றது.

சுயஇலாபத்தை எட்டவும் அரசியல் இலக்கை அடையவுமே இது போன்ற கேவலமான சம்பவங்கள் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே தண்டிப்பது எவ்விதத்தில் நியாயமாகும். மேலும் ஜனநாயக நாட்டில் யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. ஆனால் எமது நாட்டில் அனைத்தும் தலைகீழாகவே இருக்கின்றது.

சட்டம் ஒழுங்கு என்பன இன்று கேள்விக்குறியாகியுள்ளன. பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்துடனேயே கடத்திகொண்ருக்கின்றனர்.

குறிப்பாக வன்முறைகளோ அல்லது பாரிய அழிவு சம்பவங்களோ இடம்பெற்ற பின்னர் அங்கு சென்று துக்கம் விசாரிப்பதும் அதற்கு நஸ்ட கொடுப்பதுமே அரசாங்கத்தின் செய்பாடாக இருக்கின்றது. ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் அதனை தடுத்து நிறுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் இது செயற்பட்டதாக தெரியவில்லை. அரசாங்கம் என்னதான் நஸ்டஈடு வழங்கினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் உள்ள வேதனைகளையும் வலிகளையும் நீக்க முடியாது. 

எனவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும்குறிப்பாக சில முஸ்லிம் பிரதேசங்களில் முன்னெடுக்கபட்ட வன்முறைகள், ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே காடையர் குழுக்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனை பிரதேசங்களில் இருந்த சி.சி.ரி.வி. கமராக்கள் மூலமும் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.

இதுவொரு பாரதூரமான பிரச்சினை. இதுதொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

 

http://www.virakesari.lk/article/56248

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.