Jump to content

ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !!


Recommended Posts

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று:  மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக  எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம்.

என்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.

 

LGBTQ நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தம் விருப்பப்படி அதை தெரிவு செய்வோரை விட திட்டமிட்ட வகையில் அவர்களை உருவாக்குவது அதிகரித்துள்ளது. அதற்கு நான் எதிர்.

உலகத்தில் பல கொடுமைகள் நடக்குது. சொன்னால் என்னை முட்டாள் என நிரூபிக்க நிற்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை). அதனால் சொல்வதை குறைத்து விட்டேன், விரைவில் நிறுத்தி விடுவேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது

அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் Image captionஅருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர்

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவு சான்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.

அப்பொழுது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் மற்றும் திருநங்கை இடையிலான திருமணத்தை பதிவு செய்ய வழிவகை இல்லாததால் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று சார்பதிவாளர் கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ஆனால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அதில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கலப்புத் திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதி பெறத் தகுதியானது என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றி கொண்டனர்.அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-48341076

Link to comment
Share on other sites

ஒரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமான உறவு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவு.

திருநங்கை என்பவர் ஆணாக பிறந்து பின் உடலில் பெண் தன்மையை பெற்றுக்கொண்டவர். இலங்கை, இந்தியாவில் இவர்கள் சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக வாழ்வோர். இவர்கள் ஆண்களை திருமணம் செய்வதை ஓரினச்சேர்க்கை என கூற முடியாது. திருநங்கைகளுக்கு தனிச்சட்டம் உள்ளது.

வெளிநாடுகளில் திருநங்கைகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளார்கள். அது வேறு.

Link to comment
Share on other sites

பிறிதொருவருக்கு தீங்கு ஏற்படாத வகையில் இருவர் தமக்கிடையே உறவினை ஏற்படுத்துவது அவர்களது உரிமை. அதனைப் புரிந்து கொண்டு மதித்து நடப்பது நாகரீக சமூகத்தின் பண்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ஒரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமான உறவு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவு.

திருநங்கை என்பவர் ஆணாக பிறந்து பின் உடலில் பெண் தன்மையை பெற்றுக்கொண்டவர். இலங்கை, இந்தியாவில் இவர்கள் சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக வாழ்வோர். இவர்கள் ஆண்களை திருமணம் செய்வதை ஓரினச்சேர்க்கை என கூற முடியாது. திருநங்கைகளுக்கு தனிச்சட்டம் உள்ளது.

வெளிநாடுகளில் திருநங்கைகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளார்கள். அது வேறு.

அந்த ஓரின சேர்கையாளர்களில்  கூட அது ஆண் ஓரின சேர்க்கையாக இருந்தாலும் சரி பெண் ஓரின சேர்க்கையாக இருந்தாலும் சரி....
அந்த சோடிகளில் ஒருவர் ஆண்மைத்தன்மையானவராகவும் மற்றவர் பெண்மைத்தன்மையானவராகவும் இருப்பர்.அவர்களின் நடத்தைகளும் புருசன் பெண்சாதி மாதிரியே இருக்கும். ஆகவே அங்கு தொக்கி நிற்பது ஆண்மையும் பெண்மையும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

உலகத்தில் பல கொடுமைகள் நடக்குது. சொன்னால் என்னை முட்டாள் என நிரூபிக்க நிற்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை). அதனால் சொல்வதை குறைத்து விட்டேன், விரைவில் நிறுத்தி விடுவேன். 😎

உலகத்தைப் (சமூகத்தை) பற்றி சிந்திக்கும் உங்களைப் போன்றோர் சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஊதுகிற சங்கை ஊதத்தான் வேண்டும். சமூக அக்கறையுள்ளோருக்கு நேரம் காலம் கிடையாது; சோம்பல் (மடி), மானம் இவையெல்லாம் பார்த்தால் எடுத்த காரியம் கெடும் என்பான் நம் முன்னவன் வள்ளுவன் :

குடி செய்வார்க்கு இல்லை பருவம்

மடி செய்து மானம் கருதக் கெடும்.

           அதிகாரம்: குடிசெயல் வகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, manimaran said:

பிறிதொருவருக்கு தீங்கு ஏற்படாத வகையில் இருவர் தமக்கிடையே உறவினை ஏற்படுத்துவது அவர்களது உரிமை. அதனைப் புரிந்து கொண்டு மதித்து நடப்பது நாகரீக சமூகத்தின் பண்பு. 

சில உயிரிகள்.... டி என் ஏயில் ஏற்படும் பிறழ்வுகளோடு பிறந்து விடுவது என்னவோ இயற்கையாக இருந்தாலும்.. இயற்கையின் அந்தத் தவறு கடத்துப்படக் கூடாது என்பதற்காகவே இயற்கை பல தடவைகள்.. ஒன்றில் அவர்களுக்கு இனப்பெருக்கும் தகுதியை இல்லாமல் செய்யும்.. அல்லது இனப்பெருக்க வயதை அடைய முன் மரணிக்கச் செய்யும்.. இப்படி இயற்கையும் தன் தவறை திருத்த முயல்வதுண்டு.

நாகரிகம் என்ற மனித இயற்றுகை என்பது கூட இயற்கையில் மனிதனின் கூர்ப்பியலுக்கு இதுகாள் வரையும்.. உதவுவதால் தான்.. மனிதன் அதனை மதிக்க விளைகிறான். 

ஆனால்.. மனிதனுக்கும் அதன் சந்ததிக்கும் எந்த வகையிலும்.. இயற்கையின் விதிக்கமைய பிரயோசனம் அற்றதுகளை செய்யும் தனியன்களை.. எப்படி நாகரிக வரம்புக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.. புரியல்லையே..??!

காமம் என்பது இனப்பெருக்கம் கருத்திய ஒரு தூண்டல். அதனை இயற்கைக்கு மாறாக பாவிக்க விளைவது அல்லது வழிகாட்டுவது எப்படி நாகரிகமாகும்..?????! அது வியாபாரம்.. இயற்கையின் உயிரியல் விதிகளை மலினப்படுத்தும் மிக மோசமான செயல். 

மனித உருவில் உள்ள எல்லோரினதும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால்.. அதுக்காக மனிதனை மனிதன் கொலை செய்யும் போது.. கொலை செய்பவனின் மனித உரிமையை பாதுகாக்கக் கோர முடியாது. 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2019 at 2:46 AM, Lara said:

LGBTQ நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தம் விருப்பப்படி அதை தெரிவு செய்வோரை விட திட்டமிட்ட வகையில் அவர்களை உருவாக்குவது அதிகரித்துள்ளது. அதற்கு நான் எதிர்.

இயற்கையாக உருவாக்கினாலும், திட்டமிட்டு உருவாக்கினாலும் என்னைப்பொறுத்தவரையில் அது அவர்களது விருப்பம், உரிமை..

அத்தோடு அவர்கள் தத்தெடுத்து, IVF மூலமோ அல்லது surrogacy மூலமோ பெற்று வளர்க்கும் பிள்ளைகளும் மதிக்கப்பட வேண்டும்

எல்லா உயிர்க்கும் இந்த பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. 

 

Link to comment
Share on other sites

29 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இயற்கையாக உருவாக்கினாலும், திட்டமிட்டு உருவாக்கினாலும் என்னைப்பொறுத்தவரையில் அது அவர்களது விருப்பம், உரிமை..

அத்தோடு அவர்கள் தத்தெடுத்து, IVF மூலமோ அல்லது surrogacy மூலமோ பெற்று வளர்க்கும் பிள்ளைகளும் மதிக்கப்பட வேண்டும்

எல்லா உயிர்க்கும் இந்த பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. 

சனத்தொகை அதிகரிப்பை குறைக்க சிறு குழந்தைகளுக்கு chemical ஏற்றி அவர்களை gay, lesbien, asexual என மாற்றுவது, சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அவர்களது பாலியல் தெரிவை மாற்றுவது, baphomet ஐ கடவுளாக வழிபடுவோர் சிறு குழந்தைகளை transgender ஆக மாற்றுவது போன்றன வெளிநாடுகளில் நடப்பவை. இவற்றை செய்வோரை என்னால் ஆதரிக்க முடியாது. இதில் பாதிக்கப்படுவோர் இவற்றை இன்னும் பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அதையும் என்னால் ஆதரிக்க முடியாது.

மற்றும் படி அவர்கள் விருப்பத்தை அவர்களுடன் வைத்துக்கொள்வதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.