Jump to content

ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !!


Recommended Posts

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று:  மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக  எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம்.

என்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.

 

LGBTQ நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தம் விருப்பப்படி அதை தெரிவு செய்வோரை விட திட்டமிட்ட வகையில் அவர்களை உருவாக்குவது அதிகரித்துள்ளது. அதற்கு நான் எதிர்.

உலகத்தில் பல கொடுமைகள் நடக்குது. சொன்னால் என்னை முட்டாள் என நிரூபிக்க நிற்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை). அதனால் சொல்வதை குறைத்து விட்டேன், விரைவில் நிறுத்தி விடுவேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது

அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் Image captionஅருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர்

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவு சான்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.

அப்பொழுது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் மற்றும் திருநங்கை இடையிலான திருமணத்தை பதிவு செய்ய வழிவகை இல்லாததால் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று சார்பதிவாளர் கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ஆனால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அதில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கலப்புத் திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதி பெறத் தகுதியானது என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றி கொண்டனர்.அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-48341076

Link to comment
Share on other sites

ஒரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமான உறவு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவு.

திருநங்கை என்பவர் ஆணாக பிறந்து பின் உடலில் பெண் தன்மையை பெற்றுக்கொண்டவர். இலங்கை, இந்தியாவில் இவர்கள் சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக வாழ்வோர். இவர்கள் ஆண்களை திருமணம் செய்வதை ஓரினச்சேர்க்கை என கூற முடியாது. திருநங்கைகளுக்கு தனிச்சட்டம் உள்ளது.

வெளிநாடுகளில் திருநங்கைகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளார்கள். அது வேறு.

Link to comment
Share on other sites

பிறிதொருவருக்கு தீங்கு ஏற்படாத வகையில் இருவர் தமக்கிடையே உறவினை ஏற்படுத்துவது அவர்களது உரிமை. அதனைப் புரிந்து கொண்டு மதித்து நடப்பது நாகரீக சமூகத்தின் பண்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ஒரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமான உறவு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவு.

திருநங்கை என்பவர் ஆணாக பிறந்து பின் உடலில் பெண் தன்மையை பெற்றுக்கொண்டவர். இலங்கை, இந்தியாவில் இவர்கள் சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக வாழ்வோர். இவர்கள் ஆண்களை திருமணம் செய்வதை ஓரினச்சேர்க்கை என கூற முடியாது. திருநங்கைகளுக்கு தனிச்சட்டம் உள்ளது.

வெளிநாடுகளில் திருநங்கைகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளார்கள். அது வேறு.

அந்த ஓரின சேர்கையாளர்களில்  கூட அது ஆண் ஓரின சேர்க்கையாக இருந்தாலும் சரி பெண் ஓரின சேர்க்கையாக இருந்தாலும் சரி....
அந்த சோடிகளில் ஒருவர் ஆண்மைத்தன்மையானவராகவும் மற்றவர் பெண்மைத்தன்மையானவராகவும் இருப்பர்.அவர்களின் நடத்தைகளும் புருசன் பெண்சாதி மாதிரியே இருக்கும். ஆகவே அங்கு தொக்கி நிற்பது ஆண்மையும் பெண்மையும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

உலகத்தில் பல கொடுமைகள் நடக்குது. சொன்னால் என்னை முட்டாள் என நிரூபிக்க நிற்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை). அதனால் சொல்வதை குறைத்து விட்டேன், விரைவில் நிறுத்தி விடுவேன். 😎

உலகத்தைப் (சமூகத்தை) பற்றி சிந்திக்கும் உங்களைப் போன்றோர் சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஊதுகிற சங்கை ஊதத்தான் வேண்டும். சமூக அக்கறையுள்ளோருக்கு நேரம் காலம் கிடையாது; சோம்பல் (மடி), மானம் இவையெல்லாம் பார்த்தால் எடுத்த காரியம் கெடும் என்பான் நம் முன்னவன் வள்ளுவன் :

குடி செய்வார்க்கு இல்லை பருவம்

மடி செய்து மானம் கருதக் கெடும்.

           அதிகாரம்: குடிசெயல் வகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, manimaran said:

பிறிதொருவருக்கு தீங்கு ஏற்படாத வகையில் இருவர் தமக்கிடையே உறவினை ஏற்படுத்துவது அவர்களது உரிமை. அதனைப் புரிந்து கொண்டு மதித்து நடப்பது நாகரீக சமூகத்தின் பண்பு. 

சில உயிரிகள்.... டி என் ஏயில் ஏற்படும் பிறழ்வுகளோடு பிறந்து விடுவது என்னவோ இயற்கையாக இருந்தாலும்.. இயற்கையின் அந்தத் தவறு கடத்துப்படக் கூடாது என்பதற்காகவே இயற்கை பல தடவைகள்.. ஒன்றில் அவர்களுக்கு இனப்பெருக்கும் தகுதியை இல்லாமல் செய்யும்.. அல்லது இனப்பெருக்க வயதை அடைய முன் மரணிக்கச் செய்யும்.. இப்படி இயற்கையும் தன் தவறை திருத்த முயல்வதுண்டு.

நாகரிகம் என்ற மனித இயற்றுகை என்பது கூட இயற்கையில் மனிதனின் கூர்ப்பியலுக்கு இதுகாள் வரையும்.. உதவுவதால் தான்.. மனிதன் அதனை மதிக்க விளைகிறான். 

ஆனால்.. மனிதனுக்கும் அதன் சந்ததிக்கும் எந்த வகையிலும்.. இயற்கையின் விதிக்கமைய பிரயோசனம் அற்றதுகளை செய்யும் தனியன்களை.. எப்படி நாகரிக வரம்புக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.. புரியல்லையே..??!

காமம் என்பது இனப்பெருக்கம் கருத்திய ஒரு தூண்டல். அதனை இயற்கைக்கு மாறாக பாவிக்க விளைவது அல்லது வழிகாட்டுவது எப்படி நாகரிகமாகும்..?????! அது வியாபாரம்.. இயற்கையின் உயிரியல் விதிகளை மலினப்படுத்தும் மிக மோசமான செயல். 

மனித உருவில் உள்ள எல்லோரினதும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால்.. அதுக்காக மனிதனை மனிதன் கொலை செய்யும் போது.. கொலை செய்பவனின் மனித உரிமையை பாதுகாக்கக் கோர முடியாது. 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2019 at 2:46 AM, Lara said:

LGBTQ நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தம் விருப்பப்படி அதை தெரிவு செய்வோரை விட திட்டமிட்ட வகையில் அவர்களை உருவாக்குவது அதிகரித்துள்ளது. அதற்கு நான் எதிர்.

இயற்கையாக உருவாக்கினாலும், திட்டமிட்டு உருவாக்கினாலும் என்னைப்பொறுத்தவரையில் அது அவர்களது விருப்பம், உரிமை..

அத்தோடு அவர்கள் தத்தெடுத்து, IVF மூலமோ அல்லது surrogacy மூலமோ பெற்று வளர்க்கும் பிள்ளைகளும் மதிக்கப்பட வேண்டும்

எல்லா உயிர்க்கும் இந்த பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. 

 

Link to comment
Share on other sites

29 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இயற்கையாக உருவாக்கினாலும், திட்டமிட்டு உருவாக்கினாலும் என்னைப்பொறுத்தவரையில் அது அவர்களது விருப்பம், உரிமை..

அத்தோடு அவர்கள் தத்தெடுத்து, IVF மூலமோ அல்லது surrogacy மூலமோ பெற்று வளர்க்கும் பிள்ளைகளும் மதிக்கப்பட வேண்டும்

எல்லா உயிர்க்கும் இந்த பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. 

சனத்தொகை அதிகரிப்பை குறைக்க சிறு குழந்தைகளுக்கு chemical ஏற்றி அவர்களை gay, lesbien, asexual என மாற்றுவது, சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அவர்களது பாலியல் தெரிவை மாற்றுவது, baphomet ஐ கடவுளாக வழிபடுவோர் சிறு குழந்தைகளை transgender ஆக மாற்றுவது போன்றன வெளிநாடுகளில் நடப்பவை. இவற்றை செய்வோரை என்னால் ஆதரிக்க முடியாது. இதில் பாதிக்கப்படுவோர் இவற்றை இன்னும் பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அதையும் என்னால் ஆதரிக்க முடியாது.

மற்றும் படி அவர்கள் விருப்பத்தை அவர்களுடன் வைத்துக்கொள்வதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.