Jump to content

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

சுயத்தொழிலால் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவது பகுதி இது.)

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள பெண் ஒருவர் முல்லைத்தீவில் வாழ்ந்து வருகிறார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள கிருஷ்ணதாஸ் சாய்ராணிதான் அவர். கிருஷ்ணதாஸ் சாய்ராணியின் கணவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக செயற்பட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதித் தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் சாய்ராணியின் கணவர் உயிரிழந்தார்.

சுயத்தொழிலால் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

அதனைத் தொடர்ந்து, யுத்தம் வலுப்பெற்ற நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் சாய்ராணி சென்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த முகாமொன்றில் தனது அம்மா மற்றும் மகனுடன் வாழ்ந்த அவர், அந்த இடத்திலேயே தனது சுயதொழிலை ஆரம்பித்துள்ளார்.

தனது இரு தங்கத் தோடுகளை ஒரு வர்த்தகரிடம் வழங்கி, அதற்கு 1300 ரூபாய் பெறுமதியாக பப்பட மா மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த இரு பொருட்களை வைத்துக் கொண்டு தனது சுயத்தொழிலை ஆரம்பித்த சாய்ராணி, இன்று தனது உற்பத்திகளை சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு 10 வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் முன்னேறியுள்ளார்.

ரசாயண கலவைகள் அற்ற இயற்கை பாரம்பரிய மூலிகை உணவு உற்பத்தி, இன்று அவரை சர்வதேச அளவிற்கு செல்ல கைக்கொடுத்துள்ளது.

சுயத்தொழிலால் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

குறிப்பாக, இன்று அவரது உற்பத்தி பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாய்ராணி இன்று தொழில்வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளமையும் பாராட்டத்தக்கது.

மூலப்பொருள் கொள்வனவில் மாத்திரமே தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்ட அவர், தற்போது தமது உற்பத்திக்கு பெரும் வரவேற்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், தனது உற்பத்திகளில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை என்பதை வரவேற்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அவருக்கு தேசிய விருது வழங்கியுள்ளது.

அது மாத்திரமன்றி, சாய்ராணியின் உற்பத்தியை ஊக்கப்படுத்த எதிர்காலத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க உலக வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சாய்ராணி.

https://www.bbc.com/tamil/sri-lanka-48319110

வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் உண்மையான சாதனைப் பெண். குறைந்த வளத்தோடு.. சொந்த மண்ணில் இருந்து.. நிமிர்ந்து நிற்கும்.. தமிழிச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.பலருக்கு முன் மாதிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..,💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அது மாத்திரமன்றி, சாய்ராணியின் உற்பத்தியை ஊக்கப்படுத்த எதிர்காலத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க உலக வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சாய்ராணி. 

தமிழினப் படுகொலையின் நிதிப் பங்காளர்கள், சாய்ரணி போன்றவர்கள் அழிவிலும், தமிழினப் படுகொலைக்கு சொறி லங்காவிற்கு நிதி வழங்கிய உலகவங்கி ஓநாய்கள், தற்போது சாரணி போன்றவர்கள் களையும் கையையும் முறித்து விட்டு, ஊன்று கோலும், கரண்டியும் கொடுக்கின்றனர்.  

இந்த பயங்கரவாத உலக வாங்கி ஓநாய்களை நம்பாதீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kadancha said:

தமிழினப் படுகொலையின் நிதிப் பங்காளர்கள், சாய்ரணி போன்றவர்கள் அழிவிலும், தமிழினப் படுகொலைக்கு சொறி லங்காவிற்கு நிதி வழங்கிய உலகவங்கி ஓநாய்கள், தற்போது சாரணி போன்றவர்கள் களையும் கையையும் முறித்து விட்டு, ஊன்று கோலும், கரண்டியும் கொடுக்கின்றனர்.  

இந்த பயங்கரவாத உலக வாங்கி ஓநாய்களை நம்பாதீர்கள்.  

அவை ஓநாய்கள்... அதில் மாற்றுக்கருத்தில்லை. 

அதற்காக இந்த மான்களை விட்டு அவற்றை வேட்டையாட முடியாது.

இந்த மான்கள்.. அந்த ஓநாய்கள் உலகத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். அந்த வகையில் இந்த மான்கள் தப்பிப்பிழைக்க வழிகாட்டுதலே இந்தச் சந்தர்ப்பத்தில் தகும். 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

இவ்வாறு ஊருக்கு ஒரு பெண் இருந்தால் அது சமுகத்தின் பொருளாதார வளர்ச்சிற்கு வழியிட்டு அவர்களின் அரசியல் விடுதலைக்கும் வழிசமைக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள். தன்னம்பிக்கை உள்ளவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு ஒரு சாட்சி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

உலக வங்கியுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களை பயன்படுத்தி தாம் நினைப்பதை அரங்கேற்றப்பார்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.