Jump to content

பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

 

 

தமிழின அழிப்பின் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது. அதேவேளை வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த உறவுகளால் நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், பிரான்ஸின் பரிஸில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான லா சப்பல் (la chapelle) பகுதியில் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி பேரணியாகச் சென்று அஞ்சலி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திடலில் உயிரிழந்த தமது தாய்த்தமிழ் உறவுகளுக்காக அஞ்சலியை செலுத்தினர்.

பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்த குறித்த திடலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மக்கள் உயிர்நீத்த உறவுகளுக்காக மலர்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவுகூரல் நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிலும் இருந்துவந்த புலம்பெயர் உறவுகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.

France-Paris-La-Chappalle-Mullivaikkal-R

France-Paris-La-Chappalle-Mullivaikkal-R

France-Paris-La-Chappalle-Mullivaikkal-R

France-Paris-La-Chappalle-Mullivaikkal-R

France-Paris-La-Chappalle-Mullivaikkal-R

France-Paris-La-Chappalle-Mullivaikkal-R

France-Paris-La-Chappalle-Mullivaikkal-RFrance-Paris-La-Chappalle-Mullivaikkal-R

 

 

http://athavannews.com/பிரான்ஸில்-ஆயிரக்கணக்கா/

Link to comment
Share on other sites

பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து இந்த நினைவுகூரல்கள் அவலங்களுக்கான வடிகால்கள் என்பதைத் தாண்டி என்ன சமூகப் பெறுமதியைக் கொண்டிருந்தன என்ற வினா தொக்கி நிற்கின்றது. இந்த பத்தாண்டுகளில் புதிய தலைமுறையொன்று இலங்கையிலும் புலம்பெயர் சமூகத்திலும் உருவாகியுள்ளது. அவர்கள் தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை அறிவார்களா, மேற்குலகக் தலைநகர வீதிகளில் தவங்கிடந்தும் தவிர்க்கவியலாமல் போல மனித அவலத்தையும் அந்த இயலாமைக்கான அரசியல் வங்குரோத்தையும் அறிவார்களா.

புலம்பெயர்ந்து வாழ்வோர் இலங்கையில் நடப்பதை இலங்கையில் உள்ளவர்களை விடத் தாங்களே முழுமையாக அறிவார் என நம்புகிறார்கள். தாங்களே போராட்ட குணத்தோடு இருப்பதாகவும் இலங்கையில் உரிமைக்கான தாகம் நீர்த்துப் போய்விட்டதாகவும் எண்ணுகிறார்கள். தமிழ் மக்களின் விடுதலையை ஜெனீவாவிலும் பல மேற்குலகக் தலைநகரங்களிலும் கண்டெடுக்கலாம் என்பது அவர்கள் முடிவு. மே 18 சடங்காகவும் வீரப்பேச்சுக்களாகவும் குறுகுவதன் பின்னாலுள்ள எண்ணவோட்டம் இதுவே. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மே-18யை-நினைவுகூரல்-சடங்குகளுக்கும்-சம்பிரதாயங்களுக்கும்-அப்பால்/91-233455

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.