Jump to content

பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்றவர்கள் 104 இடங்களில் வெற்றி பெறும் எனவும் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக இன்று 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து கருத்து கணிப்பு இன்ற மாலை முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

டைம்ஸ் நவ் கணிப்பு

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்றவர்கள் 104 இடங்களில் வெற்றி பெறும் எனவும் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சிவோட்டர் கணிப்பு

பாஜக கூட்டணி: 287

காங்கிரஸ் கூட்டணி: 128

மற்றவர்கள் 127

ஜன்கிபாத்

பாஜக கூட்டணி: 305

காங்கிரஸ் கூட்டணி: 124

மற்றவர்கள் 137

நியூஸ் நேஷன்

பாஜக கூட்டணி: 282- 290

காங்கிரஸ் கூட்டணி: 118- 126

மற்றவர்கள் 130- 138

நியூஸ் எக்ஸ்

பாஜக கூட்டணி: 300

காங்கிரஸ் கூட்டணி: 127

மற்றவர்கள் 115

https://tamil.thehindu.com/india/article27178319.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ..பாகிஸ்தானுக்கு கெட்ட நேரம்.. இனி இந்திரஜித் மாதிரி அல்லோ குண்டு போடுவினம் ..😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொதுத் தேர்தல் ; பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் ! தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.

Prime-Minister-Narendra-Modi.jpg

இந்நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

இறுதி மற்றும் 7 ஆவது கட்டமாக நேற்று உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு இடம்பெற்றது. 

542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எதிர்வரும் 23 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முடிவுகள் வெளியாகும் போது தான் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது உறுதியாக தெரிய வரும்.

மத்தியில் ஆட்சி அமைக்க தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 336 தொகுதிகளை கைப்பற்றியது. 

தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்ற பாரதீய ஜனதா, தனது கூட்டணி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு மோடி தலைமையில் புதிய அரசை அமைத்தது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 60 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. இதில் காங்கிரசுக்கு மட்டும் 44 இடங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், நேற்றுடன் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்குகளைப் பதிவுசெய்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பற்றிய முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 306 இடங்கள் கிடைக்கும் என்றும்,  இதில் தனிப்பட்ட முறையில் பாரதீய ஜனதா 262 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 78 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பிற கட்சிகளுக்கு 104 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்கிபாத் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 305 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும், பிற கட்சிகளுக்கு 113 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சி-ஓட்டர் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 

இந்தியா டூடே-சாணக்கியா சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 340 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்களும், பிற கட்சிகளுக்கு 104 இடங்களும் கிடைக்கும் என்றும் வெளிவந்துள்ளது.

நியூஸ் நேஷன் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 282 முதல் 290 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 126 இடங்களும், பிற கட்சிகளுக்கு 130 முதல் 138 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

‘போல் ஒப் போல்ஸ்’ சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 317 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களும், பிற கட்சிகளுக்கு 115 இடங்களும் கிடைக்கும் என்றும் வெளியாகியுள்ளது.

சுதர்சன் நியூஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 313 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 121 இடங்களும், பிற கட்சிகளுக்கு 109 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

நியூஸ் எக்ஸ் நேட்டா சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்குகோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை பலம் கிடைக் காது என்று தெரியவந்து உள்ளது. இதன் கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 242 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 164 இடங் களும், பிற கட்சிகளுக்கு 137 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்து இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தமட்டில் தேர்தல் நடந்த 39 பாராளுமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவுக்கு பின்னர் தந்தி டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 19 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்றும், 14 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 29 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியா டூடே-ஆக்சிஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது.

என்.டி.டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 25 இடங் களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

சி.என்.என். நியூஸ்-18 சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம் இறுதியில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கப்போகின்றதென ?

 

http://www.virakesari.lk/article/56299

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய ஜனநாயகம் (அதுவே சிரிப்புக்கு இடமானது ) நாட்டில் ஓட்டு இயந்திரத்தை  நம்புவதும் ஊழல் கடலில் மிதக்கும் நாட்டில் தேர்தல் முடிந்தபின் அறைக்குள் பூட்டி வைத்து அதுவும் கிட்டத்ததட்ட ஒருமாத இடைவெளிக்கு பின் ஓட்டுக்கள் என்னபடுவதும் கேலிக்கூத்து .

ஆனாலும் பாஜக வரனும் அப்பத்தான் தென்னிந்தியர்கள் இந்தியா எனும் சொல் மூலம் வடக்கர்கள் தங்களை அடிமை படுத்தி உள்ளதை உணர்வார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இவ்வளவு பெரிய ஜனநாயகம் (அதுவே சிரிப்புக்கு இடமானது ) நாட்டில் ஓட்டு இயந்திரத்தை  நம்புவதும் ஊழல் கடலில் மிதக்கும் நாட்டில் தேர்தல் முடிந்தபின் அறைக்குள் பூட்டி வைத்து அதுவும் கிட்டத்ததட்ட ஒருமாத இடைவெளிக்கு பின் ஓட்டுக்கள் என்னபடுவதும் கேலிக்கூத்து .

ஆனாலும் பாஜக வரனும் அப்பத்தான் தென்னிந்தியர்கள் இந்தியா எனும் சொல் மூலம் வடக்கர்கள் தங்களை அடிமை படுத்தி உள்ளதை உணர்வார்கள் .

ஒரு மாத காலம் பூட்டி வைத்தது என்று சொல்வது சரியாக இல்லை. வாக்களிப்பு ஒரே நாளில் நடக்கவில்லை. பகுதி பகுதியாக / மாநிலம் மாநிலமாக வாக்களிப்பு நிகழ்ந்தமையால் தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை, இறுதி கட்ட வாக்களிப்பு கடந்த வாரம் தான் முடிந்தது. வாக்களிப்பு முற்றாக முடியும் வரைக்கும் பொதுவாக எந்த நாடுகளிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது இல்லை.

 

ஆனால் இப்படி சொல்வதால் இந்தியா வுக்கு பலம் இருக்கு / தகுதி இருக்கு என்று அர்த்தம் இல்லை. பெண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்கு கக்கூஸ் கட்டிக் கொடுக்க கூட வக்கற்ற அரசுகளால் ஆளப்படும் தேசம் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பிழம்பு said:

ஒரு மாத காலம் பூட்டி வைத்தது என்று சொல்வது சரியாக இல்லை. வாக்களிப்பு ஒரே நாளில் நடக்கவில்லை. பகுதி பகுதியாக / மாநிலம் மாநிலமாக வாக்களிப்பு நிகழ்ந்தமையால் தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை, இறுதி கட்ட வாக்களிப்பு கடந்த வாரம் தான் முடிந்தது. வாக்களிப்பு முற்றாக முடியும் வரைக்கும் பொதுவாக எந்த நாடுகளிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது இல்லை.

 

நீங்கள் சொல்வது சரி ஆனால் தேர்தல் முன்பே நடந்த மாநிலங்களில் வாக்கு சீட்டு இயந்திரங்கள் எங்கிருந்தன ?

அனுமதி இல்லாமல் தாசில்தார் போன்றவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு சென்றுவந்தார் போன்ற செய்திகள் வருகின்றனவே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

 

அனுமதி இல்லாமல் தாசில்தார் போன்றவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு சென்றுவந்தார் போன்ற செய்திகள் வருகின்றனவே ?

இந்திய சனனாயக பாரம்பரியப்படி மோடியை உள்ளே அனுமதித்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை தானே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.