Jump to content

இரத்த ஆறு பெருக்கெடுக்கும்! - எச்சரிக்கிறது ஜேவிபி


Recommended Posts

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டு வென்றால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோத்தாபய, ஜனாதிபதியானால் மீண்டும் அந்தத் தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார். அந்தத் தீவிரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://seithy.com/breifNews.php?newsID=224379&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

அமெரிக்க முன்னாள் தூதுவரும் கோத்தாவை ஆதரிக்கின்றார். ஆனால், அமெரிக்க வழமையாக ஐ.தே.க வை ஆதரிப்பது வழக்கம். இந்தியா யாரை ஆதரிக்கும் என்பது ஒரு காரணியாக இருக்கும்.   சீனாவும் தந்து பொருளாதார நலன்களை பேண விரும்பும். 

ஆனால், சிறுபான்மையான தமிழர்களும் முஸ்லீம்களும் தொடர்ந்து இரத்தம் சிந்துவதே வழமை.  

அமெரிக்காவின் அரசியலில் யார் வெல்வது என்பதை உருசியா தீர்மானிக்கும் என்றால் இன்னொரு சக்தியும் இலங்கையின் தலை விதியை தீர்மானிக்கலாம். 

ஆக மொத்தத்தில் இலங்கையில்  சனநாயகம் ஒரு கேலிக்குரிய விடயமே. 

Link to comment
Share on other sites

3 minutes ago, ampanai said:

அமெரிக்க முன்னாள் தூதுவரும் கோத்தாவை ஆதரிக்கின்றார். ஆனால், அமெரிக்க வழமையாக ஐ.தே.க வை ஆதரிப்பது வழக்கம். இந்தியா யாரை ஆதரிக்கும் என்பது ஒரு காரணியாக இருக்கும்.   சீனாவும் தந்து பொருளாதார நலன்களை பேண விரும்பும். 

அமெரிக்கா, இந்தியா, சீனா மூன்றுக்கும் கோத்தா வருவது தான் விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாதத்துக்கு ஒரு முறை வரும் அமேரிக்க குடியுரிமை இழந்தோர் லிஸ்டில் கோத்தா பெயர் இல்லை என்கிறது அல்ஜஸிரா.

அடுத்தது ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

அமெரிக்கா, இந்தியா, சீனா மூன்றுக்கும் கோத்தா வருவது தான் விருப்பம்.

இந்த மூன்று முக்கிய நாடுகளுக்கும் கோத்தா கதாநாயகன் எண்டால்.... வில்லன் யார்? மாலை தீவா?

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

இந்த மூன்று முக்கிய நாடுகளுக்கும் கோத்தா கதாநாயகன் எண்டால்.... வில்லன் யார்? மாலை தீவா?

கோத்தா இவர்களின் கதாநாயகன் கிடையாது. மாலைதீவு இவர்களின் வில்லனும் கிடையாது. 😂 

தமிழர்களுக்கு கோத்தா வருவதில் உடன்பாடில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 😎

Link to comment
Share on other sites

மைத்திரிபால சிறிசேன SLFP சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் சஜித் பிரேமதாச UNP சார்பில் போட்டியிடுவார் என்றும் ஒரு கதை அடிபடுது. இதில் எவ்வளவு உண்மைத்தன்மை உள்ளது என தெரியாது.

போட்டியிடுவோரில் மாற்றம் வந்தால் சர்வதேச நிலைப்பாடுகளும் அதற்கேற்ப மேற்கொள்ளப்படும்.

வழமை போல் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் யாருக்கு என்பதிலும் இலங்கை தேர்தல் தங்கியிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் மனித இரத்தம் ரெம்ப சீப்பா போச்சு. 

ஆளாளுக்கு ஆறா ஓட விடுறாய்ங்க. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Lara said:

அமெரிக்கா, இந்தியா, சீனா மூன்றுக்கும் கோத்தா வருவது தான் விருப்பம்.

அவை மூன்றுபேரும் விரும்பித்தான் மைத்திரியை கொண்டுவந்தவை வந்தபின் அவர் சைனாவுக்கு வாலாட்டுறார் என்று கோத்தாவை கொண்டுவந்தால் நாளைக்கு அதுவும் சைனா பக்கம் போகாது என்று என்ன நிச்சயம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்காவில் மனித இரத்தம் ரெம்ப சீப்பா போச்சு. 

ஆளாளுக்கு ஆறா ஓட விடுறாய்ங்க. 🙄

இரத்த ஆறு தெற்கில் மட்டும் பட்டி தொட்டியெல்லாம் பாய்ந்து ஓடட்டும். அதற்கு முதல்
வடக்கையும் தெற்கையும் தமிழர்கள் கையில் ஒப்படைத்து விடட்டும்.:(

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

அவை மூன்றுபேரும் விரும்பித்தான் மைத்திரியை கொண்டுவந்தவை வந்தபின் அவர் சைனாவுக்கு வாலாட்டுறார் என்று கோத்தாவை கொண்டுவந்தால் நாளைக்கு அதுவும் சைனா பக்கம் போகாது என்று என்ன நிச்சயம் ?

மகிந்த, கோத்தா போன்றோர் ஏற்கனவே சீன ஆதரவு நிலைப்பாடுடையவர்கள், இதில் கோத்தாவுக்கு அமெரிக்க ஆதரவும் இருக்கு, இந்திய ஆதரவும் இருக்கு.

ஆனால் இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பம் செய்த அட்டூழியங்களால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இவரைப்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அதேநேரம் இனவாத சிங்களவர் மத்தியில் இவருக்கு இன்னும் ஆதரவு இருக்கு.

இலங்கை தேர்தலை பொறுத்தவரை சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இவரை தவிர்த்து வேறொருவரை ஜனாதிபதியாக்குவது இலகு. 

ஆனால் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மைத்திரி, ரணில் அரசு மேலும் கடும் விமர்சனத்தை உருவாக்கியதால் அவர்களும் இப்ப சிங்களவர் மத்தியில் ஆதரவை இழந்து செல்கிறார்கள். இந்திய அரசின் வால் சுப்ரமணிய சுவாமியும் இது தான் சாட்டென்று கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

மைத்திரி இப்ப அமெரிக்காவுடன் இசைந்து போகிறார். ஒருவேளை இவர் தேர்தலில் போட்டியிட்டால் மைத்திரி-ரணில் கூட்டு உருவான மாதிரி நாளை மைத்திரி-கோத்தபாய கூட்டு உருவாகாது என்று சொல்லவும் முடியாது.

சர்வதேசம் யாரை ஜனாதிபதியாக்க விரும்புகிறதோ அது பற்றி தமிழ், முஸ்லிம் தலைமைகளுடனும் கலந்துரையாடுவர். அத்தலைமைகளும் அவர்கள் காட்டும் ஒருவரை மக்களுக்கு காட்டி வாக்களிக்க கேட்பார்கள். தமிழர்களை கோத்தபாயவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாது.

எனவே என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் அமெரிக்காவின் John Bolton, Mike Pompeo போன்றவர்கள் ஆபத்தானவர்கள். என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

On 5/20/2019 at 12:20 AM, Nathamuni said:

மூன்று மாதத்துக்கு ஒரு முறை வரும் அமேரிக்க குடியுரிமை இழந்தோர் லிஸ்டில் கோத்தா பெயர் இல்லை என்கிறது அல்ஜஸிரா.

அடுத்தது ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என நினைக்கிறேன்.

இது பற்றிய அல்ஜஸிரா பதிவு.

Rajapaksa has to renounce his US citizenship in order to run for president. His name does not appear on the most recent quarterly filing to the US registry on those who have lost their citizenship, which covers the three months until the end of March.

https://www.aljazeera.com/news/2019/05/gotabaya-rajapaksa-confirms-presidential-run-anxious-sri-lanka-190517033533121.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.