Jump to content

இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்  எவ்வித போர்  குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முப்படையினரின் சேவையினாலேயே நாடு  பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு இராணுவத்தை  நாம் முதலில் எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இனியாவது பெருமைப்படுத்த அரசாங்கம்  பழகிக் கொள்ள வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

Mahindha.jpg

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ  வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

பல உயிரிழப்புக்களுடன்  வெற்றிக் கொண்ட  பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில்  நாம் பிறிதொரு   அடிப்படைவாத  தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.   சர்வதேசத்துடன் தொடர்புடைய தேசிய  தீவிரவாதத்தின்  தாக்குதலே  அண்மையில் இடம்பெற்றது. 2008ஆம் ஆண்டு  மும்பை  நகரில்   குண்டு தாக்குதல்  நடத்தியது  இந்நிய  பிரஜை  அல்ல   ஆனால்  கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில்  தற்கொலை குண்டுதாக்குதலை    நடத்தியவர்கள்  இலங்கை   பிரஜைகள்    என்பது  ஒரு கட்டத்தில் வருந்தத்தக்கது.

விடுதலை புலிகளினால்  நடத்தப்பட்ட ஒரு  தாக்குதலினால்  கொல்லப்பட்ட உயிர்களை விட அதிகமான  உயிரிழப்புக்கள் ஒரு  தற்கொலை குண்டுதாரியினால் சம்பவிக்கப்பட்டது.   தொடர்ந்து அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் பழி சொல்லுக்கும் உள்ளாகிய இராணுவமே  இன்று  இந்த  நாட்டை பாதுகாத்துள்ளது.     அனைத்து  மக்களும் இராணுவத்தினரை போற்றி  மதிக்க வேண்டும் நிலையில்  நாம் அனைவரும் இன்று  உள்ளோம்.

இலங்கையில்  எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை என்று  10 வருட கால     வெற்றியினை  கொண்டாடும் இத்தருணத்தில் தைரியமாக குறிப்பிட  முடியும்.  யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச  போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட  போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே   யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. 

 நாட்டுக்காக  போராடிய  இராணுவத்தினர்  தொடர்ந்தும்  மதிக்கப்பட வேண்டும்.  அரசியல் கொள்கைகள் மாற்றமடையும் போது   இராணுவத்தினரை ஒருபோதும்  வேறுப்படுத்தி அரசியல் தேவைகளுக்காக  பயன்படுத்திக் கொள்ள கூடாது.   இராணுவத்தினரது   தேவையினை    தற்போதே  அரசாங்கம் முழுமையாக  புரிந்துள்ளது  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56290

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்களின் நாயகனே போர்க்குற்றங்கள் நடந்ததாக ஒத்துக்கொண்டால்,  முப்படைகளின் தளபதி என்கிற வகையில் அவரல்லவா முதலில் சிறைக்குச் செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்வன் களவெடுத்தேன் என்று சொல்வதும் இல்லை.. கொலைஞன் கொலைசெய்தேன் என்றும் சொல்வதில்லை. 

இவர் தானும் இந்தச் சந்தில ஒரு சிந்து பாடிடுவம்.. சுத்தவான் ஆகிடுவம் என்று பார்க்கிறார்.

அப்பு நீவீரும் உம் குலாத்தினரும் செய்த மானுடப் படுகொலைப் பாவம்.. உங்களை சும்மா விடாது.

இன்னும் நிறைய துன்பங்களை சந்தித்தே ஆக வேண்டி இருக்கும்... உங்களின் சாவு வரை. 

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

இலங்கையில்  எவ்வித போர்  குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

சிங்கள-பௌத்தர்கள் மகா பொய்யர்கள் மகா பொய்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெசாக் காலத்தில் நிரூபிக்கின்றனர்!

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச  போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட  போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே   யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. 

இதே சட்டங்களைப் பயன்படுத்தி இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தலைவிரித்தாடும் சிங்கள-பௌத்த பயங்கரவாதம் zero-casualities  உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.