Jump to content

சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும்

உயிர்த்த ஞாயிறு  தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும்,  திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார்.

Batticaloa.JPG

ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Batti_zion_Church.JPG

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12.00 மணியளவில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசையும் நடைபெறவுள்ளது.

அத்துடன் அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56308

 

Link to comment
Share on other sites

ஒரு கேள்வி

ஆண்டகை சீயோன் தேவாலயத்துக்கோ அல்லது மட்டக்களப்புக்கோ குண்டு வெடித்த பின் வந்தவரா? ஆருக்காவது இது தொடர்பாக தெரியுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒரு கேள்வி

ஆண்டகை சீயோன் தேவாலயத்துக்கோ அல்லது மட்டக்களப்புக்கோ குண்டு வெடித்த பின் வந்தவரா? ஆருக்காவது இது தொடர்பாக தெரியுமா

இதுவரைக்கும் ரணில்,மைத்திரி,நாமல்  மூன்று பேரும் போயிருந்தார்கள் ...மெதடிஸ்த ஆலய தாக்குதலுக்கு ஏன் கத்தோலிக்க மதகுரு போக வேண்டும் ?

 

Link to comment
Share on other sites

On 5/20/2019 at 12:46 PM, ரதி said:

இதுவரைக்கும் ரணில்,மைத்திரி,நாமல்  மூன்று பேரும் போயிருந்தார்கள் ...மெதடிஸ்த ஆலய தாக்குதலுக்கு ஏன் கத்தோலிக்க மதகுரு போக வேண்டும் ?

 

நன்றி ரதி

உண்மையில் இந்த தேவாலயம் மெதடிஸ் தேவாலயம் என்பதை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அத்துடன் மெதடிஸ் தேவாலயம் என்றால் ஏன் கத்தோலிக்க தலைவர் போகக் கூடாது என்றும் விளங்கவில்லை. எல்லாரும் மனுசர்கள் தானே...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎22‎/‎2019 at 2:28 AM, நிழலி said:

நன்றி ரதி

உண்மையில் இந்த தேவாலயம் மெதடிஸ் தேவாலயம் என்பதை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

அத்துடன் மெதடிஸ் தேவாலயம் என்றால் ஏன் கத்தோலிக்க தலைவர் போகக் கூடாது என்றும் விளங்கவில்லை. எல்லாரும் மனுசர்கள் தானே...?

அவர்,நீர்கொழும்பு சேர்ச்சை போய்ப் பார்த்தவரா?..தன் மதத்தில் இருந்து பிரிந்த ஒரு மதப் பிரிவினரை ஏன் பார்க்கப் போகோணும் என்று நினைத்திருக்கலாம்...அவர் முஸ்லீம் மக்களுக்கு மட்டும் நல்லவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நடந்த நினைவு கூரலில் ஒரு முஸ்லீம் மக்கள் கூட கலந்து கொள்ளவில்லை என்றும்,ஒன்றும் நடவாத மாதிரி கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்விப் பட்டேன்...குறைந்த பட்சம் தங்களுடைய மசூதிகளிலாவது ஒரு அஞ்சலி நிகழ்வை நடத்தி தாங்களும் மனிதாபிமானவர்கள் என்று காட்டி இருக்கலாம் ...சிங்களவன் அடிச்ச பிறகு சேர்ந்து வெசாக் கொண்டாடினம் தங்கட இருப்பை தக்க வைக்க ...தமிழன் ஒரு மடப் பயல் எப்படியும் அவனை ஏமாத்தலாம் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கு...இதற்கு பிறகும் இவர்களது கடையில் பொருட்களை வாங்கும் தமிழரை சொல்ல வேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2019 at 7:41 PM, நிழலி said:

ஒரு கேள்வி

ஆண்டகை சீயோன் தேவாலயத்துக்கோ அல்லது மட்டக்களப்புக்கோ குண்டு வெடித்த பின் வந்தவரா? ஆருக்காவது இது தொடர்பாக தெரியுமா

கன பேரிடம்  நானும் ஏன் செல்லவில்லை என கேட்டேன்   அவர்கள் சொன்னது அவர்கள் வேற வேதம் என்று  அவர்களுக்குள்ளும் கன பிரிவுகள் (இந்த சேர்ஜ் ஆட்கள் இடையில் மதம் மாறினவர்களாம் )  

Link to comment
Share on other sites

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கன பேரிடம்  நானும் ஏன் செல்லவில்லை என கேட்டேன்   அவர்கள் சொன்னது அவர்கள் வேற வேதம் என்று  அவர்களுக்குள்ளும் கன பிரிவுகள் (இந்த சேர்ஜ் ஆட்கள் இடையில் மதம் மாறினவர்களாம் )  

சைவ மதத்தில் இருந்தா, ஏன் என்றால் இவர்கள் பலரது பெயர்கள் சுத்தமான சைவ சமய பெயர்களாக. இருந்தன;  பரம்பரை கிறிஸ்த்தவர்களுக்கு தமிழ் பெயர் இருக்கும் ஆனால் சுத்தமான சைவ பெயர் இருக்காது ....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அல்லேலுயா (?) போல் தென்படுகிறது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.