Jump to content

சிறிசேன சீனாவிற்கு ஏன் அவசர விஜயத்தை மேற்கொண்டார்..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிசேன சீனாவிற்கு ஏன் அவசர விஜயத்தை மேற்கொண்டார்..?

 

சண்டே டைம்ஸ்

"யானைகள் மோதலில் ஈடுபடும்போது அதன் அடியில் சிக்கி இறப்பது எறும்புகளே என்பது ஆபிரிக்க பழமொழி." பலம் வாய்ந்த நாடுகள் ஆதிக்கத்திற்காக மோதிக்கொள்ளும்போது சிறிய நாடுகள் எப்படி பலவீனமானதாக விளங்குகின்றன என்பதை இந்த பழமொழி தெரிவிக்கின்றது.

இலங்கையின் இன்றைய நிலையும் இதுதான்.

பலம வாய்ந்த நாடுகளின் அதிகாரபோட்டியில் மற்றொரு அத்தியாயத்தை சேர்த்துவிட்டு  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியாழக்கிழமை நாடு திரும்பினார். அவரது ஊடக பிரிவு சீனாவுடன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன என தெரிவித்தது.

சிறிசேனவின் பயணத்திற்கான காரணங்களும் இடம்பெற்ற விடயங்களும் சுவாரஸ்யமானவை. ஆசிய நாகரீகங்கள் குறித்த கலந்துரையாடலிற்கு சீனாவிற்கு வருமாறு பெப்ரவரியிலேயே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவர் அதனை ஏற்றுக்கொண்ட போதிலும் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வது குறித்து உறுதிமொழிகளை வழங்கவில்லை. உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து இலங்கைக்கான சீனா தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அமெரிக்கா பிரிட்டன் உட்பட பல நாடுகளின் புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு தரப்பினரும் இலங்கையில் நிலை கொண்டிருப்பது குறித்த தனது கவலையை அவர் வெளியிட்டார்.

சீனா இலங்கையில் தனது முதலீடுகளின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர்  குறிப்பிட்டார். இந்த சந்திப்புகளிற்கு இரண்டு நாட்களிற்கு பின்னர் தூதுவர் மீண்டும் சிறிசேனவை சந்தித்தார்.

இம்முறை அவர் சீனா ஜனாதிபதியின் செய்தியொன்றை சிறிசேனவிடம் கையளித்தார். அந்த செய்தியில் சீனா ஜனாதிபதி சிறிசேனவை சீனாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்

இதனை சிறிசேன ஏற்றுக்கொண்டார். சீனாவிடம் 50 ஜீப்புகளை கோருவது என்ற எண்ணத்துடனேயே சிறிசேன அந்த நாட்டிற்கு சென்றார்,ஆனால் அங்கு 100 ஜீப்களை கோரியிருந்தார்.

சீனா ஜனாதிபதி ஆம் என தெரிவித்தார். இலங்கை படையினருக்காக 2600 மில்லியனை வழங்க இணங்கிய அவர் இலங்கை பொலிஸாருக்கு 1500 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை வழங்குவதற்கு இணங்கினார்.

இன்னும் சிறிது நாட்களில் சிறிசேன சீனாவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகிவிடும்.

இதில் ஒரு உடன்படிக்கை விசேடமாக பாதுகாப்பு தொடர்பானது என்ற தகவல் சண்டே டைம்ஸிற்கு கிடைத்துள்ளது.

இலங்கையில் மேற்குநாடுகளின் இராணுவ செயற்பாடுகள் அதிகரித்து வருவதே- குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள்- இலங்கை ஜனாதிபதியை சீனாவிற்கு வருமாறு சீனா ஜனாதிபதி அழைத்தமைக்கான காரணம் என்பது தெளிவாகியுள்ளது.

- ஏ.ரஜீபன் -

 

http://www.virakesari.lk/article/56265

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களை காட்டி இவங்களிட்ட வாங்குவது! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?!
உயிர்த்த ஞாயிறு சம்பவங்களிற்கும் சீன பயணத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்குமோ?!

Link to comment
Share on other sites

யார் உலகின் முதன்மை வல்லரசு? என்ற கேள்விக்கான போட்டி நடக்கின்றது. சீனா, உலகின் இரண்டவாவது பொருளாதார வல்லரசாக வளர்ந்து, அமெரிக்கவிற்கு சவாலாக வளர்த்து வருகின்றது. இதற்காக, தனது நட்பு நாடுகளாக பணத்தை, கடனை கொடுத்து வளைத்து போடுகின்றது, ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் சீனாவின் பொருளாதார முதலீடுகள் அதிகரித்து அதன் ஊடாக அரசியல் செல்வாக்கை அதிகரித்து வருகின்றது. 

பூட்டினின் ஆதரவும் ட்ரம்பின் 'அமெரிக்க முதலாவது ' என்ற கொள்கையும் இந்த சீனாவின் கொள்கைக்கு உதவு நிற்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் தமிழ் பேசும் மக்கள் உடன் எதையுமே பகிர விரும்பாத சிங்களம், சீனா, அமெரிக்கா ஆகிய வல்லரசுகளின் போட்டியில் சிக்கி விட்டது. 

இந்தியா அணிலை மரமேற விட்ட நாய் போல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். இதுக்குத்தான் பிரபாகரன் மீண்டும், மீண்டும் அழுத்தி சொன்னார், நாம் உங்களுக்கு நேச சக்தி என்று.

இனி இந்த வல்லரசுகள் போட்டியில் நாடு சின்னாபின்னமாக போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கிந்தியா!
நீ உன்னையும் நம்பமாட்டாய்.....நல்லவனையும் நம்பமாட்டாய்.
இப்ப.......
தலைமாட்டிலையும் எதிரி
கால்மாட்டிலையும் எதிரி
பக்கத்துணை பாக்கிஸ்தானும் எதிரி
பொதுமக்களே! படங்களையும் ரிவி சீரியலையும் பார்த்து சாவுங்கடா..:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.