Jump to content

உலகத்துக்கானவர்கள் - சோம.அழகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                           உலகத்துக்கானவர்கள்

 

            ஒவ்வொரு நாளையும் வருத்ததுடனும் சோகத்துடனும் தொடங்கி அன்றைய நாளுக்கான அலுவல்களில் மூழ்கி (அலுவல்களில் பின்னால் ஒளிந்து கொண்டு என்பதே பொருந்தும்) சிறிது மறந்திருந்து உறங்கச் செல்லுகையில் மனதின் பாரம் பாதியாய்க் குறைந்து, மறுநாள் காலை தினமும் மறதியைக் காரணம் காட்டித் தப்ப முயலும் அக்குற்றவுணர்வு முழுவதுமாக என்னை ஆட்கொள்வதுமாகக் கழிந்த சில பல நாட்களின் முடிவாகிப் போன ஏதோ ஒரு நாளில்தான் நான் அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். ‘உலக நடப்புகளை இனி கவனிப்பதில்லை’ – கண்களை இறுக மூடிக் கொள்ளும் முட்டாள்தனத்தைச் செய்ய எத்தனித்தேன்…. உலகம் இருண்டு விட்டது என்று நினைக்க அல்ல; உலகமெங்கும் உவகையும் வெளிச்சமுமே நிறைந்து இருக்கிறது என்று நம்புவதற்கு. சமூக வலைதளங்களின் வலையில் சிக்க மறுத்ததால் நான் புறக்கணிக்க வேண்டியவை தொலைக்காட்சியையும் நாளிதழ்களையும். இதுதான் எளிதாயிற்றே ! இப்படித்தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் ஆழ்மனதின் தூண்டுதலால் நான் மறக்க விரும்பிய அல்லது மறந்துவிட்டதாய் மனதுக்குள் சொல்லிக் கொண்ட அம்மனிதர்களையும் அவர்கள் தொடர்புடைய செய்திகளையும் பற்றிய நூல்களை உலகத் திரைப்படங்களை நாடிச் சென்ற மனதை நான் தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன்.

 

            ‘அம்மனிதர்கள்’ – உலகத்துக்கானவர்கள். அடையாளம் தொலைத்து நிற்பவர்களை உலகம் தனது கதகத்தப்பான கரங்களால் வாரியணைத்துக் கொள்ள வேண்டாமா? அதை விடுத்து…  ‘நாடற்றவர்கள்’ – இச்சொல் பிடிக்கவில்லை. அவர்களது இழப்பை மீண்டும் மீண்டும் நினைவுகூறும் பொருளில் விளிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன் ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் அனைத்தையும் இழந்தவராகிறார்? யாருக்கோ யாருடனோ பிணக்கு. தமது நிலங்களை அடையாளங்களை உரிமைகளை மீட்டெடுக்கும் விடுதலைக்கான அறப் போர்; அதை எதிர்த்து அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர்; அதிகாரத்தின் தலைமையிடம் யாருக்கானது என்பதற்கான போர்; இயற்கை வளங்களை அபகரிக்கும் போர்; என்னுடைய கட்டுக்கதைதான் சிறந்தது என்று (உருவில்லா / உரு கொடுக்கப்பட்ட) கற்பனைகளின் பெயரில் நடக்கும் புனிதப் போர்…. இதில் முதல் பிரிவில் வரும் வணக்கத்திற்குரிய போராளிகளை விடுத்து இதர பிரிவுகளில் வரும்…… என்ன பெயர் சொல்லி விளிப்பது இப்பேய்களை ? அதிகார அட்டைகள், கண்றாவி கம்பிளிகள், பித்துப்பிடித்த பிசாசுகள்….. அடச்சே! இந்தக் கருமாந்திரங்களுக்கு ஏன் பெயர்சூட்டு விழா நடத்த முற்படுகிறேன்?

 

            வேர்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படும்போது உண்டாகும் வலிக்கு நிகரானது, பாதுகாப்பின் பொருட்டு வேர்களைத் தாமே உதறித் தள்ளித் தொலைக்க வேண்டிய நிலைக்கு ஆளாவது. இன / மதக் கலவரங்கள், போர், மனித உரிமை மீறல் மட்டுமல்ல….. பஞ்சம், இயற்கை பேரழிவுகள், நெருக்கடி நிலை, பிழைப்புக்கு வழியில்லாமை – இவற்றில் ஏதோ ஒன்று கூட மனிதர்களை வேறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்யலாம். இயற்கை பேரழிவுகள் தவிர்த்து மற்றவை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள். வேறு நாடுகளுக்குப் புலம் பெயரும் அந்தப் பயணமே அவர்களைப் பாதி கொன்றுவிடும். வான்வழிப் பயணத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் சாலை/தரை வழிப் பயணம் அல்லது கடல் வழிப் பயணம் என்ற யோசனைக்கே வந்து நிற்க வேண்டியிருக்கும்.

 

தரை வழிப்பயணம் : சுற்றி என்ன இருக்கிறது? வெளியே மழையா? வெயிலா? குளிரா? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் இல்லாத அவர்கள் இடித்துப் பிடித்து அமர்ந்து முழங்கால்களுக்கிடையில் தலை புதைத்து, வழியில் எங்கேனும் சோதனைச் சாவடியில் மாட்டிக்கொண்டு முகாமுக்கு அனுப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இரு கைகளாலும் படபடக்கும் நெஞ்சையும் உயிரையும் பிடித்தவாறே அந்த இருட்டடைந்த டிரக்கினுள் தம் வாழ்வு வெளிச்சத்தை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நம்ப விழைவது ….

 

கடல் வழிப்பயணம் : ஆழியினால் சூழப்பட்ட இக்கள்ளத் தோணி புணரியின் முனிவுக்கு இரையாகாமல் நல்லதொரு நிலத்தைக் கண்டடைய வேண்டும்; இத்தோணியில் இருந்து இறங்குகையில் தமது உடலில் உயிர் இருக்க வேண்டும்; அந்நிலத்தில் தமக்காகக் காத்திருக்கும் (கண்டிப்பாய்க் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன்) நல்வாழ்வை இருகரங்களாலும் இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற வேண்டுதல்களால் நிரம்பியது கடல் வழிப் பயணம். இவ்வேண்டுதல்களைத் தாங்கிச் செல்லும் கனத்த இதயங்களின் சுமைகளைத் தாங்க இயலாமல் கொஞ்சம் தள்ளாடித்தான் போகும் தோணி.

 

            ‘வேறு வழியே இல்லை, உயிரை இழக்காதிருக்க மற்ற எல்லாவற்றையும் இழக்கத்தான் வேண்டும்’ என்று உணர்ந்த பின் புலம் பெயர வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் வலியை அவ்வளவு எளிதில் எழுத்தில் வடிக்க இயலாது.  

 

            தன்னை ஈன்றெடுத்த மண்ணை, தான் ஒவ்வொரு முறையும் தடுக்கி விழுந்த போது தாங்கிப் பிடித்த மண்ணை, நீண்ட நெடிய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டிருக்கும் மண்ணை, அம்மண்ணுக்கே உரிய தனித்துவமான வாசத்தை, தனது உலகமாகிப் போன ஊரை, தன் ஊருக்கே உரித்தான மரம் செடி கொடிகளை, அவை வீசிய தென்றல் காற்றை, நீச்சல் பழகிய கிணற்றை, மீன் பிடித்த குளத்தை, குறுக்கும் நெடுக்குமாக வளைய வளைய ஓடி விளையாடிய ஒழுங்கைகளை….. நெருப்புக்கோழி முட்டை சமைக்கும் போதெல்லாம் தனது வீட்டுக்கும் கொடுத்து அனுப்பும் ஃபர்ஹானா அத்தையை, சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்த செழியன் அண்ணாவை, தினமும் மதிலின் மீது எட்டி எட்டிப் பார்த்து ‘டாட்டா’ சொல்லும் நிலா குட்டியை, ஒவ்வொரு ஈஸ்டர் திருவிழாவுக்கும் கேக் கொண்டு வரும் ஏஞ்சல் அக்காவை…. (இவர்களும்தான் சிதறப் போகிறார்கள் என்றாலும் கூட…) – இவ்வாறு எல்லோரையும் எல்லாவற்றையும் விட்டுச் செல்வது என்பது தன்னை இழப்பதுதானே?

 

            புலம் பெயர்வது என்று முடிவான பின்னும் கூட அனைவரும் சேர்ந்து செல்லும் வசதியோ சூழலோ அமையாமல் போகலாம். ஒவ்வொருவராகச் செல்வது என்னும் முடிவு அதனுடன் எதிர்காலம் குறித்த நிலையற்ற தன்மையையும் அச்சத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வரலாம். குடும்பத்தலைவர் தாம் முதலில் சென்று தம்மை அரவணைத்துக் கொள்ளும் ஒரு நாட்டில் தம்மை ஓரளவு நிலைபடுத்திக் கொண்ட பின் குடும்பத்தினரை வரவழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒன்றை மட்டுமே நம்பிச் செல்வாராய் இருக்கலாம். சென்றவரிடமிருந்து பல காலமாக ஒரு தகவலும் வராமல் போகையில், இவ்வுலகில் அன்னாரது இருப்புக்கான கேள்விகளை எழுப்பும் வலிமை இல்லாது அதையும் தாண்டி, ‘தாம் இப்போது வேறு இடத்திற்குப் புலம் பெயர்வதா ?’ அல்லது ‘அவர் வந்து தேடும் போது தாம் இங்கு இல்லாதது கண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார் ஆகையால் இங்கேயே கிடந்து உயிர் விடுவதா?’ என்னும் குழப்பங்கள் எழலாம். ஏனெனில் அக்குடும்பத்தையும் தலைவனையும் இணைக்கவல்ல ஒரே சாதனம் அவ்விடம் மட்டுமே.

 

             ‘இது தற்காலிகமான ஏற்பாடா?’ அல்லது ‘காலாகாலத்திற்கும் இங்குதானா?’ போன்ற கேள்விகள் தலையினுள் சுற்ற ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள் முகாம் வாழ்விற்குப் பழக வேண்டும். அருவியில் களித்துக் குளித்துப் பெற்ற கட்டுக்கடங்காத உற்சாகத்தை ஒரு வாளித் தண்ணீரில் கட்டாயம் பெற்றே ஆக வேண்டும். நதிக்கரையில் குப்புறப்படுத்து தலையை மட்டும் முழுவதுமாக நீரினுள் விட்டு மூச்சை அடக்கி வேண்டுமட்டும் நீரைப் பருகித் தீர்த்துக் கொண்ட தாகத்தை அன்றாடம் தரப்படும் ஒரு பாட்டிலில் தணித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மண்ணின் சுகந்தத்தின் மூலம் தன் வரவை முன்னரே அறிவித்து குதியாட்டம் போட வைத்த மழைக்கு இப்போது பயந்தே ஆக வேண்டும்…. டென்டிடுள் நீர் புகுந்து விடுமோ என்று. தமது செல்லப் பெயரின் மூலம் தமது ஊர்க்காரர்கள் அனைவருக்கும் பரிச்சயமாகிப் போனவருக்கு இப்போது தம்மை ‘அகதி’ என்று நிலைநாட்டிக் கொள்ள எப்போதும் நாற்பது ஐம்பது காகிதங்களுடன் இருக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒருவர், தமது கையறு நிலையைப் பிரகடனப் படுத்த, அத்தியாவசப் பொருட்கள் வாங்க, பத்து டென்ட் கழித்து இருக்கும் தமது புதிய நண்பரைச் சந்திக்கச் செல்லுகையில் எதிர்ப்படுவோரிடம் காட்ட….. என எல்லாவற்றிற்கும் அவர் கையில் ஒரு கத்தைக் காகிதக் குப்பையைத் திணித்திருக்கிறது உலகம். 

 

            ஏன் ? ஏன் ? ஏன் ? இவையெல்லாம் ஏன் நடக்கின்றன ? என்று உரக்கக் கத்திக் கேட்டாலும் சமாதானம் தரும் பதில் கிடைப்பதே இல்லை. இதற்குச் சமாதானம் தரும் பதில் என்று ஒன்று இருக்கவா செய்கிறது ? பூமிப்பந்தில்  நாம் வரைந்து தொலைத்த அத்தனை கோடுகளையும் அழிப்பது மட்டுமே தீர்வாகத் தோன்றுகிறது. காகிதங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வறட்டுச் சட்ட திட்டங்களை ஒழித்துக் கட்டி ‘மனிதர்கள் எங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கு எவ்விதத் தடையுமின்றி வசிக்கலாம். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை’ என்ற பொதுவானதொரு சட்டம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?

 

            இவ்வளவிற்கும் பெரும்பாலும் காரணமாகிப் போகும் அதிகாரப் பிரியர்களை வெறியர்களை வறுத்தெடுக்கும் உன்னத பணியை இதை விட கூர்மையான வலிமையான பேனாவிற்கு விட்டுவிடுகிறேன். எனது நோக்கம் உலகம் முழுதும் ஆங்காங்கே நிராதரவாகப் பரிதவித்து நிற்பவர்களை அணைத்து நம் மனங்களை (கொஞ்ச நேரத்திற்கேனும்) அவர்களோடு இருத்தி வைப்பது. இருப்பினும்….. மனிதத்தையும் மனிதகுலத்தையும் குலைத்துச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியாக முன் எடுத்து வைக்கும் சர்வாதிகாரிகளிடம், எதேச்சதிகாரிகளிடம், தீவிரவாதிகளிடம் ஒரே ஒரு கேள்வி – “என்னதான்டா வேணும் ஒங்களுக்கு?”

 

 

-       சோம.அழகு

 

நன்றி,  கீற்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.