Jump to content

புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது…

May 20, 2019

 

mahinda-rajapaksa-prabhakaran.jpg?resizeவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆற்றிய விசேட உரையில்,

அமெரிக்காவின் FBI அமைப்பு உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை 2008 ஆம் ஆண்டு ஜனவரி அன்று அறிவித்தது. விடுதைலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் துணை புரிந்தன.

அண்மைய கால வரலாற்றில் பயங்கரவாத அமைப்பொன்றை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை என்றும் அவர் பெருமிதம் கொண்ட மகிந்த ராஜபக்ஸ, யுத்தத்தின் போது அமெரிக்கா இலங்கைக்கு உதவியதுடன் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என 2006 ல் பெயரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அமெரிக்காவால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 2007 ல் புலிகளின் ஆயுதங்கள் கடத்தப்படும் கப்பல்களை அழிக்க முடிந்தது என்றும், இதன் பின்னர் பெப்ரவரி 2009 இல் அமெரிக்காவில் அரசாங்கம் மாறியதால் அதன் பின்னரான அணுகுமுறை மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

இதேவேளை நடந்து முடிந்த போரில் முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என 25 ஆயிரத்து 367 படையினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான சாதாரண காவற்துறை அதிகாரிகள், சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கிலும் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த போர் காரணமாக உயிரிழந்தனர் என சுட்டிக் காட்டியுள்ளார்.

தனது அரசாங்கம் வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது போரை முடிவுக்கு கொண்டு வந்தது என தெரிவித்த அவர் இதுதொடர்பாக தெரிவிக்காமல் போரை முடித்தமையே சிலருக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் கூறினார். குறிப்பாக சீனா இலங்கைக்கு உதவுவது வெளிநாட்டு சக்திகளுக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். #விடுதலைப்புலிகள்  #வேலுப்பிள்ளபிரபாகரன் #mahindarajapaksa

 

http://globaltamilnews.net/2019/122300/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.