Jump to content

சாதனை படைத்த தமிழர்கள்


Recommended Posts

#1:  கந்தசாமி திருக்குமார்

புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்
பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. 

மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....ம்ம்ம்ம்

இது ஒரு வித கடின உழைப்பு.

சாதனை அல்ல... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா???????
நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம்.

கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா???????
நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம்.

கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

Link to comment
Share on other sites

#2: விசாகன் 
இந்தோனேசியா தொடக்கம் தென் கிழக்காசியாவில் எவ்வாறு தமிழர்களின் வணிகத்தை ஊக்குவிற் கலாம். 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

'வலண்டைன் நாளுக்கு முன்னராக ரோசாப்பூவின் விலை அதிகரிக்கின்றது. ஆனால், 'பியரின் விலை அமெரிக்காவின் 'சூப்பர் போல்'  ( அமெரிக்க உதை பந்தாடடம் ) விளையாட்டுக்கு முன்னர் ஏன் அதிகரிப்பதில்லை? "

பியர் விநியோகம் சீராக இருப்பதால் தேவை அதிகரித்த பொழுதும் விலை ஏறவில்லை. 
ஆனால், ரோசாப்பூவின் விநியோகம் சீரற்றது, அதனால், தேவை அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கின்றது. 

Link to comment
Share on other sites

#3: ஆல்பிரெட் பெர்க்மானஸ்

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து ஒரு வெளிநாடு ஒன்றில் ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்கவும் ஆல்பிரெட் பெர்க்மானஸ் !
 

 

Link to comment
Share on other sites

#4:  மகேஸ்வரநாதன் கிரிசன், அல்லைப்பிட்டி

நாளாந்தம் உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்து வரும் செய்திகள் அச்சமூட்டுவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழர்களாகி நமது உணவுப் பழக்கவழக்கம் இயல்பாகவே இயற்கையான நஞ்சற்ற உணவுப்பொருட்களை விளைவிப்பதும், அதனை குறைந்தளவான இலாபத்திற்கு விற்பனை செய்வது, அயலாருடன் பகிர்ந்து உண்பதாக இருந்திருக்கிறது. 2000 ஆம் வருடங்களின் பின்னர் இந்தப் பண்பாடு முற்றிலும் மாறிவிட்டது. வாழைக்காய் பிஞ்சைக்கூட மஞ்சள் நிறமாக்கி பழமென விற்கும் அளவிற்கு உணவில் இரசாயனங்களை சேர்க்கின்றனர் வியாபாரிகள். இவ்வாறு உணவில் கூட நஞ்சைக் கலந்து விற்பனை செய்யும் மிலேச்சத்தனமான சூழலில், தீவகம், அல்லைப்பிட்டி மண்ணிலிருந்து தமிழ் இளைஞரான மதிப்புக்குரிய ம. கிரிசன் என்னும் விவசாயி நஞ்சற்ற உணவுப்பொருட்களை விளைவிப்பதிலும், அதனை விற்பனை செய்வதிலும் தொடர்ந்தும் போராடி வருகிறார். தமிழ் சமூகத்தைப் புதியவிடயமொன்றுக்குள் கொண்டு செல்வது எவ்வளவு கடினமானதென்பது நம் அனைவருக்குமே தெரியும். அவருக்கு உதவிடவும், தமிழ் சமூகத்தை ஆரோக்கியமான சுயபொருளாதார முயற்சிகளில் சாதனைசெய்ய வைக்கவும் கிரிசன் போன்றவர்களுக்கு ஆதரவாய் இருப்போம். 

http://www.tamiltradepost.com/blog/யாழ்-மண்ணில்-விவசாயத்து-2/

எமது நாட்டுக்கு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. ஆனாலும் நாம் இன்னும் அடிமைத்தனத்தில் தான் வாழுகின்றோம். எமக்குத் தேவையான உணவுகளை நமே உற்பத்தி செய்து கொள்ளமுடியாத ஒரு நிலைமையில் தான் நம் இருக்கின்றோம். எமது விவசாயத்துக்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் , கிருமிநாசினிகள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் வருகின்ற நோய்களுக்கான மருந்துகளையும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம். இப்படியான செய்கைகள் மூலமாகவே எமது நாடுகளை அடிமைப்படுத்துகின்றனர்.

http://www.nimirvu.org/2018/12/blog-post_68.html

https://www.facebook.com/Oorukai/videos/2339413286081675/?t=2

 

Link to comment
Share on other sites

#5 : டிராபிக் ராமசாமி  (Traffic Ramaswamy, பிறப்பு: ஏப்ரல் 1, 1934) (கே. ஆர். ராமசாமி)   

ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

 

 

 

Link to comment
Share on other sites

#6 : மருத்துவர் இரவி பெருமாள்பிள்ளை 

தாயகத்தில் பிறந்த இந்த முன்னாள் இதய சத்திர சிகிச்சை நிபுணர் (ஆக்ஸ்போர்ட் , இங்கிலாந்து ), தான் பிறந்த நாட்டில் ஒரு விவசாய முயற்சியையும் முன்னெடுத்து வந்தார், இந்த முயற்சி மூலம் ஒரு கிருமி நாசினிகள் அற்ற, புதுமையான மற்றும் வித்தியாசமான வருமானம் ஈட்டக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்தார். 

2020ல் தடை செய்யப்படவுள்ள புகையிலை உற்பத்திக்கு மாற்றீடாக காத்தாளை வளர்ப்பது பற்றி ஒரு முயற்சியை முன்னெடுத்தார். 

ஒரு வருடத்திற்கும் சற்று கூடிய கால அளவில் ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் இதை வடிவமைத்தார். 

ஆனால், சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர் கடந்த மார்கழி மாதம் இறைவனடி சேர்த்தார். 

அல்லைப்பிட்டி, வேலணையில் வைத்தியர் வடிவமைத்த கத்தாளை (Aloe Vera) பண்ணை 

Land.jpg

இவரின் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது என எண்ணுகின்றேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2019 at 11:11 PM, Nathamuni said:

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

இவர் அடுத்த கட்டத்துக்கு போய் வெகு நாளாகி விட்டது.இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவரிடம் மிகப்பிரமான்டமான தொழில் முறை சமையலறை உள்ளது.இப்பவும் சாலையோர வண்டில் கடை இவரது அடையாளம்.ம்ம்
சுய தம்பட்டமும் விளம்பரமும் இல்லாவிட்டால் இப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இவர் அடுத்த கட்டத்துக்கு போய் வெகு நாளாகி விட்டது.இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவரிடம் மிகப்பிரமான்டமான தொழில் முறை சமையலறை உள்ளது.இப்பவும் சாலையோர வண்டில் கடை இவரது அடையாளம்.ம்ம்
சுய தம்பட்டமும் விளம்பரமும் இல்லாவிட்டால் இப்படித்தான்.

விபரத்தை தாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

விபரத்தை தாருங்கள்

சில வருடங்களுக்கு முன் இவர் பற்றிய கானொழி பார்த்தேன்.அதைத் தேடத்தான் இவளவு நாழும் சென்றது கருத்திட.அம்பிட்டால் இங்கு இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சில வருடங்களுக்கு முன் இவர் பற்றிய கானொழி பார்த்தேன்.அதைத் தேடத்தான் இவளவு நாழும் சென்றது கருத்திட.அம்பிட்டால் இங்கு இணைக்கிறேன்.

தெரு முணையில், பார்க்கில் தோசை வித்தவர், பார்க்கில் கடை வைக்க தந்த, லைசென்ஸ் விரைவில் முடியப் போகுது என்று சொல்கிறார். 

அவர் வேறு யாவாரம் செய்ந்தால், ஏன் லைசன்ஸ் குறித்து கவலைபடவேணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா எனக்கு அவரை தனிப்பட தெரியாது.நான் கேள்விப்பட்டதை எழுதினேன்.மற்றும் படி உங்கள் பொருளாதரம் சம்பந்தமான கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அப்படியான நீங்கள் பிளையாக விளக்கம் கொள்ளக் குடாது என்பதற்றகாக எழுதப்பட்டது தான் எனது கருத்து.நானும் ஏதாவது செய்யாலும் என்ற்ற தேடலில் வந்ததுதான் இவரின் பதிவு.மற்றும்படி உங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்று இல்லை.நன்றி.

Link to comment
Share on other sites

#6 : சரவணமுத்து 

படுத்தப்படுக்கையாய் எழும்புவதற்கு சிரமப்படும் நோயாளிகள் தாங்களே இயற்கை கடமைகளை நிறைவேற்றி கொள்ள வசதியையும் வழங்கியுள்ளது மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சரவணமுத்து கண்டுபிடித்துள்ள "டாய்லெட் படுக்கை". தென்காசியில் பிறந்து, பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்து தற்போது தளவாய்புரத்தில் இவர் வசித்து வருகிறார்.

இவர் கண்டுபிடித்துள்ள படுக்கையில் நோயாளிகள் சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது டாய்லெட் செல்ல வேண்டும் என்றால், அவர்களின் கையில் ரிமோட் இருக்கும்

இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 167 கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியில், தனது கண்டுபிடிப்பான "டாய்லெட் படுக்கை" முதலில் வைக்கப்பட்டதை பார்த்து மிகவும் பெருமிதம் அடைந்ததாகக் கூறுகிறார் சரவணமுத்து.

அந்த அரங்கில் தனது கண்டுபிடிப்பு தேசிய அளவில் இரண்டாவது இடம்பெற்று விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றதாக சரவணமுத்து குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

#7  ஷிவ் நாடார்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ‘ஷிவ் நாடார்’, ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான’ இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்’ (HCL)-இன்  தலைமை செயல் அதிகாரி மற்றும் ‘ஷிவ் நாடார் அறக்கட்டளையின்’ தலைவரும் ஆவார். சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக வளர்ச்சியடைந்த ஷிவ் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 14,  1945

இடம்: மூலைபொழி (தூத்துக்குடி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்                                                                                                                         

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

கும்பகோணத்திலுள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய ஷிவ் நாடார், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு கோயமுத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு,1968  ஆம் ஆண்டு தில்லி சென்றார்.

எச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்குதல்

தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, தில்லிக்கு சென்ற அவர், அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், ஷிவ் நாடார் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

விருதுகளும் பிற பணிகளும்

  • 1996 ல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் (தமிழ்நாடு) நிறுவினார்.
  • 2007 ல் சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ கொடுத்து கெளரவித்தது.

 

Link to comment
Share on other sites

On 5/20/2019 at 5:11 PM, Nathamuni said:

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

மாதகலை சேர்ந்த இவர் அமெரிக்கா வந்த ஆரம்பத்தில் கட்டிட நிர்மாணத்துறையில் வேலைசெய்துள்ளார். 
பின்னர் ஒரு உணவகத்தையும் நடாத்தியுள்ளார். ஆனால், மக்களுடன் தானே நேரடியாக கதைத்து சேவைசெய்யவும், உணவகம் நடத்துவதால் வரும் பல வேறு சிக்கல்களை தவிர்க்கவும் இதை செய்வதாக கூறுகின்றார், இன்று, பலவேறு இடங்களிலும் இவருக்கு ' நண்பர்கள் குழுமங்கள்' உள்ளன. பல நாடுகளிலும் இருந்து தம்மை தேடி வருவதாக கூறுகின்றார். 


ஆரம்பத்தில் பல வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்த முயற்சியை தொடர்ந்ததாக கூறுகின்றார். ஒரு சுய தொழில் செய்பவர் என்பதே ஒரு சாதனை. தெரியாத நாடு மற்றும் புரியாத மொழி - இதை எல்லாம் எதிர்கொண்டவர். பலருக்கு கீழே கை கட்டி தொழில் செய்யும் அதிகமான எம்மவர்களிடம் சுயதொழில் புரியும் அனைவருமே ஒரு சாதனையாளர்கள்.   

தனது மக்களை உலகின் ஒரு பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழத்தில் இரண்டு பொருளாதார பட்டங்களை  இவ்வாறு வேலை செய்து உயர்த்தியவர்.

கடும் உழைப்பால் பல வெற்றிகளை சாதித்த ஒரு புலம்பெயர் தமிழர். 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உழைப்பை விட சிறந்த கல்வி கிடையாது

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
On 5/20/2019 at 3:21 PM, ampanai said:

#1:  கந்தசாமி திருக்குமார்

புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்
பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. 

மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.