Jump to content

ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
May 21, 2019

gnanasara-thero-found-guilty-sandya-ekna

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைளை, சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பிலேயே ஞானசரர் தேரர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமென, ஞானசாரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். மேலும், ஞானசரரின் விடுதலை தனக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதற்கு எதிராக மீண்டும் தான் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஞானசாரதேரர் #சந்தியாஎக்னலிகொட

http://globaltamilnews.net/2019/122381/

Link to comment
Share on other sites

அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின் இவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் பரவி வந்தது.

இவர் விடுதலை செய்யப்பட்டால் மைத்திரியும் கொஞ்சம் மக்கள் ஆதரவை பெறுவார், இவரும் வெளியில் வந்த பின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ganasara.jpg

அதற்கமைவாக ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் சற்றுமுன்னர் கையெழுத்திட்டுள்ளார். 

http://www.virakesari.lk/article/56512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினகெட்டு வெசாக் கூடு கட்டி தாமரை பூ கொண்டு போய் கையில் நூல் கட்டினது எல்லாம் வீணா போச்சு வாப்பா ..........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

மினகெட்டு வெசாக் கூடு கட்டி தாமரை பூ கொண்டு போய் கையில் நூல் கட்டினது எல்லாம் வீணா போச்சு வாப்பா ..........................................

அவர் விடுதலை ஆகிட்டாராம் செய்திகள் சொல்லுது 

Link to comment
Share on other sites

49 minutes ago, பெருமாள் said:

மினகெட்டு வெசாக் கூடு கட்டி தாமரை பூ கொண்டு போய் கையில் நூல் கட்டினது எல்லாம் வீணா போச்சு வாப்பா ..........................................

அடுத்த கட்ட ஆட்டம் ஆரம்பம் சிங்கம் களமிறங்கிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலோலியூரான் ரவீ..ன் said:

அடுத்த கட்ட ஆட்டம் ஆரம்பம் சிங்கம் களமிறங்கிட்டுது.

தேவை  கருதி....

எதிரி  என்றாலும்  இது    போன்ற  ஆட்டங்களுக்கு  சிங்களவனிடம்  நாம  பிச்சை  வாங்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

தேவை  கருதி....

எதிரி  என்றாலும்  இது    போன்ற  ஆட்டங்களுக்கு  சிங்களவனிடம்  நாம  பிச்சை  வாங்கணும்

  10 வருசத்துக்கு பிறகும் எங்கடையள் இப்பவும் புலிவாந்தி எடுத்துக்கொண்டு திரியிறதை என்னவெண்டு சொல்லுறது?????   சிங்களம் ரொம்ப ரொம்ப நல்லது போலை கிடக்கு.....

Link to comment
Share on other sites

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் விடுதலை ஆகிட்டாராம் செய்திகள் சொல்லுது 

நாளை (23) மாலை தான் விடுவிக்கப்படுவாராம்.

இன்று பிற்பகல் அசாத் சாலி இவரை சிறையில் சென்று சந்தித்திருந்தாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

நாளை (23) மாலை தான் விடுவிக்கப்படுவாராம்.

இன்று மாலை அசாத் சாலி இவரை சிறையில் சென்று சந்தித்திருந்தாராம்.

வெளியே வந்து எங்களுக்கு எதிராக சதிராட வேண்டாமென கேட்க போயிருப்பாரோ?

Link to comment
Share on other sites

அமெரிக்காவிலேயே தாக்குதல் நடத்தப்படுகின்றது என்றால் இந்த தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையல்ல – அசாத் சாலி

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்படுமானால், இந்த நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையல்ல என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஞானசார தேரரை, மேல் மாகாண ஆளுநர் இன்று (புதன்கிழமை) சந்தித்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான ஞானசார தேரரின் எதிர்வுகூறல்கள் மிகச் சரியாக அமைந்திருந்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், தேரருடன் காணப்பட்ட மத ரீதியிலான வேறுபாடுகள் அவர் சிறைக்கு செல்வதற்கு முன்னதாகவே சுமூகமாகிவிட்டதாகவும், தேசிய அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்ள இரு சமூகத்தவர்களின் இணைப்புடன் குழுவொன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒரே குடையின் கீழ் பணியாற்ற வேண்டிய முக்கிய தருணம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்னும் இரண்டொரு தினங்களில் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறேன் என்றும் கூறினார்.

http://athavannews.com/ஞானசாரரின்-விடுதலை-குறித/

Link to comment
Share on other sites

45 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளியே வந்து எங்களுக்கு எதிராக சதிராட வேண்டாமென கேட்க போயிருப்பாரோ?

அசாத் சாலி பணத்தை வாங்கிக்கொண்டு அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒருவர். ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டால் அதனால் அவருக்கு பாதிப்பு இருக்காது என நினைக்கிறேன். சாதாரண முஸ்லிம்களுக்கு தான் பாதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

நாளை (23) மாலை தான் விடுவிக்கப்படுவாராம்.

இன்று மாலை அசாத் சாலி இவரை சிறையில் சென்று சந்தித்திருந்தாராம்.

 

59 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளியே வந்து எங்களுக்கு எதிராக சதிராட வேண்டாமென கேட்க போயிருப்பாரோ?

நான் தான் மைத்திரியிடம் சொல்லி, கையை பிடித்து  பேனாவை வைத்து கையெழுத்து போட வைத்தவன் எண்டு சொல்ல போய்  இருப்பார்.

Link to comment
Share on other sites

Image may contain: 1 person, standing
 

இன குரோதம் தொடக்கம் இன வன்முறை என அத்துணை அசிங்கங்களையும் செய்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஞானசார தேரர் அவர்களை சிறை சென்று சந்தித்து ஜனாதிபதி விடுவித்து இருக்கிறார்.

ஆனால் சந்திரிகா கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு உதவியதாக ரகுபதி சர்மா என்கிற சைவ மத குருவிற்கு 300 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது .இந்த வழக்கில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தது .நீதிமன்றத்தில் இது தொடர்பாக மத குரு சொன்ன போதும் அவர் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள படவில்லை

நீதி துறை மற்றும் நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களை ஓரவஞ்சனையாக நடத்துவதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

நான் தான் மைத்திரியிடம் சொல்லி, கையை பிடித்து  பேனாவை வைத்து கையெழுத்து போட வைத்தவன் எண்டு சொல்ல போய்  இருப்பார்.

Minister Ravi Karunanayake and Governor Azath Salley met with Venerable Galagoda Aththe Gnanasara Thero today (May 22).

Speaking to the media Governor Azath Salley said that they hope that Gnanasara Thero will be released soon and noted that they have also spoken to the President concerning the release of  Gnanasara Thero.

He added that what was mentioned by Gnanasara Thero in the past has now been proven and all nationalities in Sri Lanka must stand together.

He added that the country cannot go forward divided and that there must be national reconciliation.

https://www.newsfirst.lk/2019/05/22/ravi-karunanayake-and-azath-salley-meet-gnanasara-thero/

😀😀

Link to comment
Share on other sites

On 5/21/2019 at 4:58 PM, பிழம்பு said:

ஞானசாரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். மேலும், ஞானசரரின் விடுதலை தனக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதற்கு எதிராக மீண்டும் தான் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள-பௌத்த மத்தியில் சுய நீதிக்காக போராடும் ஒருசிலரில் இவரும் ஒருவர். சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் சார்பாக சிந்திக்குமே தவிர தனது நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களால் அவமதிக்கப்பட்டதை கூட கணக்கில் எடுக்காது. 

Link to comment
Share on other sites

பொதுபலசேனா ஆதரவாளர்கள் சிறைச்சாலைக்கு வெளியில் ஞானசார தேரர் விடுதலைக்காக காத்திருக்கிறார்களாம். ஆனால் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதற்கான உத்தியோகபூர்வ பத்திரம் இன்னும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வந்துசேரவில்லையாம்.

CCC4192B-7DD2-42F8-874E-2CE663BB9094.jpg

Link to comment
Share on other sites

எல்லாரும் (சிங்களவர் தான்) இந்தாள்ட வெளிவருகையை ஆவலோடு எதிர் பாக்கினாமாம்!
ஆள் வந்த பிறகு ஆப்பு மைத்திரிக்கும், சாலிக்கும் நிச்சயம் இருக்கு!

Link to comment
Share on other sites

இது ( இவரின் விடுதலை) எங்கே போய் முடியப்போதோ 🙂 

 

Link to comment
Share on other sites

ஞானசார தேரரின் விடுதலை குறித்து சுமந்திரனின் ஊடக அறிக்கை.

D7RUX4nV4AEnecH?format=png&name=900x900

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன்.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.