Jump to content

இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை .#கண்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1558438249561.png

 

 

இக்பால் அலி
யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. 
 
 
இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம்  செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர்.  எந்த வேறுபாடுகளின்றி  நாங்கள் எல்லோரும்  மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல  இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார்
 
 
கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.
 
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி பள்ளேகல  இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
 
 
அவர் அங்கு தொடர்ந்து பேசுiயில்
யுத்த காலத்தில் அதிகளவிலான முஸ்லிம்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. இராணுவத்தில் கூடுதலான முஸ்லிம் சகோதரர்கள் இருந்தார்கள்.
 
 
 இன்னும் இருக்கின்றார்கள். என்னுடைய தகுதியை ஒத்த சகோதரர் ஜமால்தீன் என்பவர் இருந்தார். அவர் புலிகளின் தாக்கதல் காரணமாக உயிரிழந்து விட்டார். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். முஸ்லிம் சகோதரர்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றினார்கள். 
 
 
எங்களுக்கிடையே எந்தவிதமான வேறுபாடும் இருக்க வில்லை. அதேபோன்று தமிழ் மக்களுக்கிடையே எந்தவிதமான வேறுபாடு இருக்க வில்லை. எங்களுடைய கடமையைச் செய்யும் போது எல்லோரையும் ஒரு சாதாரண அப்பாவி மனிதர்களாகவே நாங்கள் பார்ப்போம்.  படைவீரர்கள் உட்பட எல்லோரும் தாய் நாட்டை சேர்ந்தவர்கள். 
 
 
நாங்கள் எல்லோருடனும் நேசம் வைத்துள்ளோம். நாங்கள் இராணுவ சீருடை அணிந்தாலும் சிங்களவர்கள் என்று பார்ப்பதில்லை. நாங்கள் எல்லோரும் மனிதர்கள்.
 
 
 மாவில்லாறு யுத்ததின் போது இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இருந்தார்கள்.  அதில் ஒரு இலட்சம் மக்கள் எங்கள் பக்கம் வந்தார்கள்.  
 
 
அந்த மக்களை இல்லாமற் செய்தது நாங்கள் அல்ல.   7 கிலோ மீட்டர் அளவில் நெருங்கி விட்டோம். அவர்களுக்கு எங்களால் எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை. 
 
 
அந்த இடத்துக்கு எங்களுக்குச் செல்ல முடியாது. அந்த சனங்கள் பலத்த காயங்களுடன் எங்களை நோக்கி  வந்தார்கள். அவர்கள் வரும் போது எங்களுடைய கண்களில் இருந்த கண்ணீர் வடிந்தது. அவர்கள் வரவிட வில்லை. அவர்களை புலிகளே சுட்டார்கள். ஆனால் அவர்கள் இதனை திரிவுபடுத்தினார்கள். 
 
 
அப்பொழுது எங்களுடைய ஊடகம் மந்தகதியில் இருந்தது. 
நான் 1991, 1992 காலப் பகுதியில் வடக்கு மன்னார், கல்முனை உட்பட கிழக்குப் பகுதியில் கடமையாற்றியிருக்கின்றேன். அப்பொழுது அவர்கள் புலிகளுடைய நெருக்குவாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். 
 
 
கடைகள் மூடப்பட்டிருந்தது. வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியாது. இப்படி பல சொல்லொண்ணாத் துயரங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மக்களை  நாங்கள் இன்று சந்தோசமாக வாழ வைத்துள்ளோம். இராணுவத்தினர் என்போர் சந்தோசமாக வாழ வைப்பவர்கள் ஆவர். காலி முகத்திடலில் மிகவும் சந்தோசமாக இருப்பவர்கள் முஸ்லிம்களாவர். 
 
 
இதை நாம் அறிவோம்.  எனினும் துரதிருஷ;டவசமாக மீண்டும் குண்டுகள் வெடிக்குமளவுக்கு முகம் கொடுத்துள்ளோம். இது பற்றி நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம்.
 
 
நாங்கள் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில்லை. என்ன நடந்துள்ளது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.  இதற்கு முஸ்லிம்கள் யாவரும் சம்மந்தம் இல்லை என அறிந்து வைத்துள்ளனர்.  அடிப்படைவாதிகளை பற்றி எங்களால் அறிந்து கொள்ள முடியாது. 
 
அவ்வாறு இருப்பார்களாயின் எங்களுக்கு அறியத் தாருங்கள் என்று கூறியுள்ளோம். சிங்கள மக்கள் ஒரு போதும் அடுத்தவரை உயிரை மாய்த்து சந்தோசப்படும் மனிதர்கள்  அல்லர். அப்படி செய்வார்களாயின் கடந்த காலங்களில் அதானித்திருக்க முடியும். அவ்வாறு அவர்கள் செய்ய வில்லை.  
 
 
பௌத்த சமயம் சிறந்த ஒழுங்கை காட்டியுள்ளது.  பழிக்குப் பழி தீர்க்கின்ற  சமூகமல்ல எங்கள் சமூகம். பேருவளை, திகன, உள்ளிட்ட பல இடங்களைப் பார்க்கலாம். போட்டித் தன்மை இருக்கிறது.  அந்த போட்டித் தன்மை எவை என்று பார்த்து அதன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டி இருக்கிறது. ஏன் நாங்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க முடியாது. கடந்த தீவிர வாதத் தாக்குதல் காரணமாக  அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
இந்நிகழ்வில் கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் பஸ்லுர் ரஹ்மான் , கண்டி மாநகர சபை உறுப்பினர் மாத்தலி மரைக்கார், பள்ளேகலை இராணுவ முகாமிலுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் விசேட துஆப் பிரார்த்தனை கண்டி ஹீரஸ்ஸெகல ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதான இமாம் எஸ். எம். இர்சாத் நடத்தினார்.
இக்பால் அலி
20-5-2019
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம். சிங்கள இராணுவமும் முஸ்லிம் மத அடிப்படைவாத காடைகளும்.. ஒன்றுமே செய்யவில்லை. புலிகள் மட்டும் மக்களைக் கொன்றார்கள்.. தங்களை தாங்களே சுட்டுக்கொன்று செத்தார்கள். அவர்கள் எல்லாம் மனிதர்களே அல்ல. வேற்றுக்கிரகவாசிகளாவர்.

இன்னும் ஒரு 10 வருடத்தில் இப்படி தான் எழுதுவார்கள்.. இந்த தொ**  பிரட்டிக்கூட்டம். 

எம்மவர்கள் எவ்வளவு தான் இவர்களுக்கு மாங்கு மாங்கென்று கத்தினாலும்.. அதுகள் எப்பவுமே யார் அங்க பலமோ அவர் பக்கமே நிற்குங்கள். அப்பதான் அதுகளுக்கு பிழைப்பை ஓட்ட முடியும். அதுகளிடம் போய் இன மானம்.. வீரம்.. மனிதம் கதைப்பது கருத்துச் சொல்வது மிகத்தவறான விடயமாகும்.

இப்ப சிங்களவனட்ட அடி வாங்கினாலும்.. அங்க தானே பதுங்கி ஆகனும். அதுக்குத்தான் உந்தப் பசப்புகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
2 hours ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம். சிங்கள இராணுவமும் முஸ்லிம் மத அடிப்படைவாத காடைகளும்.. ஒன்றுமே செய்யவில்லை. புலிகள் மட்டும் மக்களைக் கொன்றார்கள்.. தங்களை தாங்களே சுட்டுக்கொன்று செத்தார்கள். அவர்கள் எல்லாம் மனிதர்களே அல்ல. வேற்றுக்கிரகவாசிகளாவர்.

இன்னும் ஒரு 10 வருடத்தில் இப்படி தான் எழுதுவார்கள்.. இந்த தொ**  பிரட்டிக்கூட்டம். 

எம்மவர்கள் எவ்வளவு தான் இவர்களுக்கு மாங்கு மாங்கென்று கத்தினாலும்.. அதுகள் எப்பவுமே யார் அங்க பலமோ அவர் பக்கமே நிற்குங்கள். அப்பதான் அதுகளுக்கு பிழைப்பை ஓட்ட முடியும். அதுகளிடம் போய் இன மானம்.. வீரம்.. மனிதம் கதைப்பது கருத்துச் சொல்வது மிகத்தவறான விடயமாகும்.

இப்ப சிங்களவனட்ட அடி வாங்கினாலும்.. அங்க தானே பதுங்கி ஆகனும். அதுக்குத்தான் உந்தப் பசப்புகள். 

நீங்கள் வேற... ஆமிக்காரர்களின் முகத்தை பாருங்கோ... அரண்டு போய் இருக்கினம்... கூப்பிட்டு.... வெடியை, கிடியை போட்டாலும் எண்டு ஓர் பயம் இருக்காதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுதான் சாமரம் வீனாலும் விழப்போற அடி விழும்...இனி உங்கடை கோவிலில் புத்தர் இருப்பார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை வழியில்லாட்டி இன்னும் எத்தனை ஆராதனை பிரார்த்தைனை செய்வாங்களோ?
சொந்த கடவுளுக்கே துரோகம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

சிங்கள மக்கள் ஒரு போதும் அடுத்தவரை உயிரை மாய்த்து சந்தோசப்படும் மனிதர்கள்  அல்லர். அப்படி செய்வார்களாயின் கடந்த காலங்களில் அதானித்திருக்க முடியும். அவ்வாறு அவர்கள் செய்ய வில்லை.  

உள்ளம் உருகுதையா.....சாந்த.....!

உன் குரல் கேட்கையிலே.....!

பச்சைப் பெரிய  பொய்கள்......!

உந்தன்  வாயில்  வருகையிலே!  

Link to comment
Share on other sites

16 hours ago, colomban said:

இக்பால் அலி

யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. 

புலிகள் இப்ப இருந்திருந்தால் நீங்கள் நல்ல ஹாயா இருந்திருக்கலாம். அரசு, சர்வதேசத்துடன் நீங்களும் சேர்ந்து அழிச்சிட்டியள். இனி உங்களுக்கு கஷ்ட காலம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.