Jump to content

சாதிப்பாகுபாட்டால் நிறுத்தப்பட்டது ஆலய திருவிழா : போராட்டத்தில் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. 

01__5_.jpg

இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது 

கடந்த வருடம் குறித்த வறணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக (பெக்கோ) இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இதனால் இந்த வருட திருவிழா சம்பந்தமாக தென்மராட்சி பிரதேச செயலர் குறித்த ஆலய அனைத்து சமூகத்தினரையும் அழைத்து ஒற்றுமையாக திருவிழாவை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

01__3_.jpg

ஆனால் அதனையும் மீறி நேற்று திங்கட்கிழமை (20)  ஆரம்பமாகவிருந்த வருடாந்த உற்சவம் ஒருதரப்பினால் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் இன்று மதியம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது ஆலயத்தில் அனைவருக்கும் சமவுரிமை வேண்டும் சாதிப்பாகுபாடு பார்க்கக்கூடாது, கடந்த வருடம் இயந்திரத்தால் தேர் இழுக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாது அதற்கான தீர்வு என்ன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர். 

01__1_.jpg

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதேச செயலர் இந்த ஆலய பிரச்சினையை தம்மால் தீர்க்க முடியாதுள்ளமையால் நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் 

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் ஏழாந்திருவிழாவினை எமது சமூகத்தை சேர்ந்த மக்கள்தான் செய்கின்றோம். ஆனால் இந்த முறை திருவிழா செய்வதானால் நாம் சுவாமி தூக்கக்கூடாது என்று கூறினார்கள் இதற்கு நாம் உடன்படவில்லை இதனால் நேற்று தொடங்க  வேண்டிய வருடாந்த திருவிழாவையே நிறுத்திவிட்டார்கள் எனத் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/56429

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிய வேறுபாடுகள் களைய பட வேண்டும்..

Link to comment
Share on other sites

17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாதிய வேறுபாடுகள் களைய பட வேண்டும்..

அடக்குமுறைகளிலிருந்து விடுபட போராடும் இனம் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறையையின் விழுமியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் போது இந்த இனம் சுதந்திரத்திற்கு தகுதியானதா என்ற இயல்பாக எழும் கேள்வியை தவிர்க்க முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணிகளில் ஒன்று சாதிய ஏற்றத்தாழ்வு.
எங்களுக்கு விடுதலை ஒரு நாளும் கிடையாது, அடிமை வாழ்வு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிற்போக்கான சாதிப்பாகுபாடுகள் மூலம் கோயில் திருவிழாவை நிறுத்தும் அளவுக்கு  2019 இலும் சாதியம் வேரூன்றி உள்ளது. இப்படியான ஏற்றத்தாழ்வுகளை விடுதலைப்போராட்டம்கூட வரணி போன்ற இடங்களில் மாற்றவில்லை. தேசவழமைச் சட்டம், ஷரியா சட்டம் போன்றவற்றை இல்லாமல் செய்து எல்லோருக்கும் பொதுவான நீதி வந்தால்கூட மாற்றம் வருமா தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதியில்   சாதி குளறுபடிகளுக்கு  தென்மராட்சிதான் முதன்மையானது. அதனால் தான்  தென்மராட்சியை குழைக்காடு என்று சொல்வார்கள். இதற்கு காரணம் புரிந்துணர்வு என்பது இரு பகுதிகளுக்கும் இல்லை.

ஆகையால் தாம் தாழ்த்தப்பட்டவர்கள் என நினைப்பவர்கள் தங்களுக்கென கோவில் கோபுரங்களை கட்டி புண்ணியங்களை தேடலாம்.

சுப்பன் கோவிலில் குப்பன் உரிமை கேட்காமல் குப்பனே சொந்த கோவில் கட்டட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

,யாழ்பாணத்தில் பல இடஙகளில் சாதி குறைந்தவர்களுக்கு வீடுகள் விற்கவோ வாடகைக்குவிடவோ படுவதில்லை,ஆனால் முஸ்லீம்களுக்கு தாராளமாக வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன,காலபோக்கில் அவர்கள் காசினை அள்ளி இறைத்து அவற்றை தமது சொந்தவீடு ஆக்கி கொள்வார்கள்.

தமது பிரதேசஙகளில் அந்நியன் விகாரையோ  பள்ளிவாசலோ கட்டகூடாது அது எமது இனத்துக்கு இழைக்கப்படுகின்ற அநீதி என்று போர்கொடி தூக்கும் எமது சமூகம்,சொந்த இன மக்களை சொந்த இனத்தின் வழிபாட்டு தலஙகளுக்குள் நுழையகூடாது வடம் பிடிக்க கூடாது என்பதெல்லாம் எந்த ஊரு நியாயம் ?

Link to comment
Share on other sites

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கு. எங்கட சனம் இன்னும் சாதி பாகுபாட்டிற்குள். இது கூட ஒரு காரணம் எம் மக்கள் முன்னேறாமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஆகையால் தாம் தாழ்த்தப்பட்டவர்கள் என நினைப்பவர்கள் தங்களுக்கென கோவில் கோபுரங்களை கட்டி புண்ணியங்களை தேடலாம்.

சுப்பன் கோவிலில் குப்பன் உரிமை கேட்காமல் குப்பனே சொந்த கோவில் கட்டட்டும்.

கோயில் என்பது எல்லோரும் வழிபடும் பொதுவான இடம். சாதிக்கொரு கோவில் கட்டலாம் என்று தீர்வு சொல்வது சாதீயத்தை தொடர்ந்து தக்க வைக்கவே சொல்லும் சாட்டு.

சுப்பன் கோவில், குப்பன் கோவில் என்று தனியாரின் கோவில்கள் அமைவது மதவுணர்வை வளர்க்க அல்ல. பிரிவினைகளை வளர்க்கத்தான்.

இவையெல்லாம் 1960, 70 களில் நடந்த சாதீய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை நினைவுபடுத்தும் சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்” என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது வரலாறு என்று நினைத்தேன். ஆனால் அது இப்போதும் நிகழ்வதும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு காவப்படுவதும் மிகவும் கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..

May 22, 2019

 

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது.

மேற்படி ஆலய நிர்வாகத்தை தம்வசம் வைத்திருக்கின்ற சிலர் அப்பகுதியில் உள்ள மக்களை சாதீய ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் (2018) வருடாந்த திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது என்பதற்காக ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுந்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தினர்.

எனினும், ஆலய வீதியில் புதிதாக மணல் கொட்டப்பட்டதால் தேர் இழுப்பதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டியே கனரக வாகனத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டது என அப்போது ஆலய நிர்வாகத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விடயம் பெரும் பூதாகரமானதைத் தொடர்ந்து அகில இலங்கை சைவ மகா சபையின் அங்கத்தவர்கள் நேரடியாக அங்கு சென்று பல தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அப்போது கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வருடம் (2019) வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றபோது 7 ஆம் திருவிழா உபயகாரர்களான குறித்த சமூகத்தினர் தேர் வடம் பிடித்து இழுக்கக்கூடாது எனக் கூறப்பட்டது. இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

இவ்விடயம் தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி திருவிழாவை நடத்துமாறு ஆலய நிர்வாகத்தினரை பிரதேச செயலாளர் அறிவுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது.

எனினும், ஆலய நிர்வாகத்தினர் திடீரென திருவிழாவை நிறுத்தியிருக்கின்றனர். கடந்த 20 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகவிருந்த நிலையில், அது திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சாதிப் பாகுபாடு இன்றி திருவிழாவை நடத்த அனுமதிக்குமாறு கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சாதியப் பாகுபாடு காட்டுவதன் மூலம் எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருதிய சைவ மகா சபை குறித்த ஆலய நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீர்மானித்துள்ளது.

சைவ மகா சபையின் அங்கத்தவர்கள் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்ததன் அடிப்படையில், வழிபடுவோரின் உரிமையை மறுத்த ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு எதிராக பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளின் கீழ் வழக்கைத் தாக்கல் செய்வது எனத் தீர்மானித்துள்ளனர்.

#வரணிசிமிழ்கண்ணகைஅம்மன்ஆலயம் #சாதிப்பாகுபாடு

 

http://globaltamilnews.net/2019/122417/

Link to comment
Share on other sites

இந்த சிவசேனை, இந்துமாமன்றம், உலக சைவ பேரவை போன்ற அமைப்புகள்  செய்கின்றன?  

இவர்கள் அமைதியாக இருப்பதன் மூலம் இவர்களும் இதை ஆதரிக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்!

எனவே சைவர்கள் (இந்துக்கள்) இன்னுமா சாதிப் பாகுபாடுகளை பார்க்கும் மிக மோசமான, மிகக் கேவலமான மனித ஜென்னமங்களாக இருக்கிறார்கள்?

உயர்சாதி என குறிப்பிடப்படும் பிரிவினரின் ஆதிக்க  வெறியும், தாழ் சாதி என குறிப்பிடப்படும் பிரிவினரின் தாழ்வு மனோநிலையால் ஏற்படும் முரண்பாடுகளும் முழுமையாக களையப்பட வேண்டும்! இதற்கு சிவசேனை, இந்துமாமன்றம், உலக சைவ பேரவை போன்ற அமைப்புகள் உடனடி  முயற்சி எடுக்காவிட்டால் அவர்கள் தங்கள் அமைப்புக்களை கலைத்துவிடுவது  நல்லது.

சாதிப் பாகுபாடுகள் வேரோடு அறுத்து எறியப்பட வேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.