Jump to content

யாழ்ப்பாண-பேச்சு-வழக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für யாழà¯à®ªà¯à®ªà®¾à®£ பà¯à®à¯à®à¯ வழà®à¯à®à¯

யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே.

மெய்யே!
இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம்.

கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது.

இவர்கள் காணவர்மாரை இஞ்சரும்! இஞ்சருங்கோ! என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்ததும் இஞ்சரும் அப்பா! இஞ்சருங்கோ அப்பா என அது பதவிப் பெயர் கொண்டழைக்கப்படும் வழக்கு இன்றும் இருக்கிறது.(இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ…. என்று ஒரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.)

அதற்கு, என்ன சங்கதி? என்றவாறு கணவர்மாரின் பதில் கேள்வி ஆரம்பமாக இப்படியாகச் அவர்களின் சம்பாஷனைகள் தொடரும். ஆனாலும் கணவர்மார் மனைவிமாரின் பெயரைச் சொல்லியோ அன்றேல் அவர்களின் செல்லப்பெயர் / வீட்டுப் பெயர்களைச் சொல்லியோ (பொதுவாக கிளி, ராசாத்தி, செல்லம், குட்டி, …இப்படியாகச் செல்லப் பெயர்கள் இருக்கும்)அழைக்கும் வழக்கு இருக்கிறது.

என்றாலும் இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு. கணவன்மாரை மனைவிமார் மெய்யே! மெய்யே!! (உண்மையே! உண்மையே!)என்று கூப்பிட்டதனால் போலும் நீங்களும் நாங்களும் பிறந்திருக்கிறோம்!!

பறை
பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் “பறை” எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் “பறைதல்” என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் “பறையர்” என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் “பறை” எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில…

“பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்

பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

“பறைசாற்றுதல்” எனும் சொல்லும் “பறை” எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பல சொல்லாடல்கள் உள்ளன. இவை இன்றும் யாழ்ப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த “பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை “பறையன்”, “பறையன் போன்று” எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்
தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த “பறை” எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே “வகே” எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் “வகை” எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்
அதேவேளை “பறை” எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற” என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான “பறையர்” எனும் தமிழ் சொல், சிங்களத்தில் “பெறவா” என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த “பெறை” இசைக்கருவியை அடிப்பவர்களை “பெறக்காரயா” என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்
பறை > பறை > பெறை > பெற
பறையர் > பறையோ > பெறவா
பறை அடிப்பவர் > பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த “பறை” எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் “பெறக்காரயா” என்பதில் உள்ள “காரயா” எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள “காரன்” எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட “பறை” எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த “Pariah” வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சு
குஞ்சு என்றால் “சிறிய” அல்லது “சிறியது” என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை “குஞ்சு” என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

“குஞ்சு குருமன்கள்” என்பதும் “சின்னஞ் சிறிசுகள்” அல்லது “சின்னஞ் சிறியவர்கள்” எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் “என்ட செல்லம்“, “என்ட குஞ்சு” என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.

உறவுமுறைச் சொற்கள்
யாழ்ப்பாணத் தமிழரிடையே “குஞ்சு” என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை “குஞ்சையா“, “குஞ்சியப்பு“, “குஞ்சையர்” போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.

சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்

தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; “குஞ்சம்மா”, “குஞ்சாச்சி” என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.

சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி

சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; “குஞ்சித்தம்பி”, “சின்னக்குஞ்சு” என அழைக்கும் வழக்கும் உள்ளது.

சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு

மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் “குஞ்சு” எனும் சொற்பதம் “சிறிய” எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.

துலைக்கோ, கனக்க, வயக்கெட்டுப் போனியள்!
* ”அண்ணை! துலைக்கோ போறியள்?”, “துலைக்கோ போட்டு வாறியள்”, இதில ‘துலை’ என்பது ‘தொலை தூரம்’ எண்டதில இருந்து வந்திருக்கும் என நினைக்கிறேன்.

* “கண்டு கனகாலம்”. இதுல ‘கனகாலம்’ என்பது அதிக காலம் என்பதைக் கூறிக்குது. ‘கனக்க’ நிறைய/அதிக என்றாகிறது. “இதையும் கொண்டு போங்கோ. இங்க கனக்கக் கிடக்கு”. ‘கனக்க’ என்பது ‘கனதியான’ எண்டதில இருந்து வந்திருக்குமோ?

* ”எப்ப கொழும்பாலை வந்தனீங்கள்? நல்லா வயக்கெட்டுப் போனியள்”. இதுல வயக்கெட்டு எண்டது, ‘மெலிந்து’ எண்டதைக் குறிக்குது. ‘வயக்கெட்டு’ எண்டது ‘வயசு கெட்டு’ எண்ட அர்த்ததில் வருமோ? வயசு போனால் மெலிந்து சோர்வது இயல்புதானே என்பதால் இருக்கலாம்.

இளந்தாரிப் பெடியள், குமர்ப் பெட்டையள்
“ஊரில் ஒரு குமர் தனியனாப் போக வழியில்லை, சந்தியிலை நிண்டு இளந்தாரிப் பெடியள் அவளவையை சைற் அடிக்கிறாங்கள்”

ஈழத்து ஊர்களில் மேற்கண்ட சம்பாஷணையை ஊர்ப் பெரியவர்கள் வாயிலிருந்து விழக் கேட்கலாம். அந்த வாக்கியத்தில் வந்த இளந்தாரி என்பது கட்டிளம் காளை என்ற சொற்பதத்திற்கு நிகரானது. காதல் வயப்படுகின்ற பருவம் என்பது இன்னும் நெருக்கமான அர்த்தம் கொள்ளத்தக்கதாக அமையும். பெடியள் என்பது தமிழகத்தில் பொடியன் என்று புழங்கும் சொல்லுக்கு நிகரான அர்த்தம் கொண்டு அமையும்.

இளவட்டப் பொண்ணு, குமரிப் பெண் என்று அர்த்தம் கொள்ளும் சொற்பதமே ஈழத்துப் பேச்சு வழக்கில் அர்த்தப்படும் “குமர்ப்பெட்டை“. பருவமடைந்த பெண்களை இங்கே அர்த்தப்படுத்தி அழைப்பதுண்டு. முன் சொன்ன இளந்தாரிக்கு பெண் பால் அர்த்தமாகவும் இது அமையும்.

ஆக்கினை விழுந்த வேலை
ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ, அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ, என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம். நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருக்கிறார்கள், அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள், அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கும் போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு பாருங்கோ, வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவாறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் “ஆக்கினை விழுந்த வேலை” என்பதை “ஆக்கினை பிடிச்ச வேலை” என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு. எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல். இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம். என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது, இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

குடுதேனோ– கொடுத்தேனோ எங்கடை– எங்களுடைய
நினைவுவரேக்கை– நினைவு வரும்பொழுது

தீர அயத்துப்போனன்
பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?” எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா, என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும். ”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும், இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம். அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான், காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,

இங்கு முத்தம்– முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,

ஒரு நாள் பொழுது
எணேய் அம்மா, இவன் தம்பி இன்னும் நித்திரையாலை எழும்பேலை.. பக்கத்து வீட்டில பொங்கும் பூம்புனல் கேட்குது… பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுதணை…

நான் வாறன் இப்ப.. உவனுக்கு மோனை கொஞ்சம் தண்ணி, வாளியோடை கொண்டே ஊத்தினனெண்டா எல்லா நித்திரையும் இப்ப போகும்.. சரி மோனை கொப்பர் எங்கே போட்டார்?

அப்பு ஆலங்குச்சி எடுக்கவெண்டு சந்திக்குப் போனவர்.. இன்னும் காணேலை…

இண்டைக்கு பல்லு விளக்கின மாதிரித்தான். உந்த மனிசனுக்க கதை கண்ட இடம் கயிலாயம் தான்… அங்கை ஆரும் ஓசியிலை பேப்பர் பாக்க வந்திருப்பினம், பின்னை சமா வைக்கினமாக்கும் என்று புறுபுறுத்தாள்..

தம்பி அப்பத்தான் நித்திரையால எழும்பி வாறான்.. எட தம்பி கொப்பர் ஆலங்குச்சி எடுக்க போனவர். சீமான் வரக் காணேலை. ஒருக்கா உந்த சின்னக் காலாலை ஓடிப்போய் குச்சியை கொப்பரிட்டை வாங்கி பல்லை மினிக்கிக் கொண்டு தோட்டத்திலை மிஸின் றைக்குது. அதிலை குளிச்சிட்டுவா பவுண்.

வந்த மணியிடம், கொப்பருக்கு கொஞ்சம் பழஞ்சோறு கிடக்கு… உனக்கு கொஞ்சம் ஒடியல் புட்டு அவிச்சனான் .. மாங்காயும், நேற்று அவிச்சு வைச்ச நெத்தலி மீனும் போட்டனான். கெதிபண்ணி சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடு மோனை. உன்ரை கூட்டாளி நீ குளிக்கப் போனாப்போலை வந்தவன். மினைக்கெட்டால் வாத்தியிட்டை இண்டைக்கு பூசை தான் எண்டிட்டு போட்டான்.

அம்மா நாலுறூள் கொப்பி வேண்டி வரச் சொல்லி ஆங்கிலப்பாட வாத்தி சொன்னவர். காசு தாவணெணை. அடுப்படி மட்டை வரிக்கடிலிலை ஒரு தகரப்பேணி கிடக்கு.. அதுக்கை சின்ன மடிலேங்சிக்கை சீட்டுக்காசு கிடக்கு.. அதிலை 2ருபாயை எடன் முருங்கையில கொஞ்ச காய் ஆயலாம் . தேசிக்காயும் கிடக்கு… சந்தையிலை குடுத்திட்டு எடுத்த காசை வைப்பம்.

பள்ளிக்கூடத்தில்
டேய் மணி நேற்று தந்த வீட்டுப்பாடம் செய்து போட்டியே?

இல்லயடா.. நேற்று ரா தோட்டவெளியில அரிச்சந்திரன் கூத்து ஆடினவங்கள் அதுதான் பார்க்கப் போனன். அயத்துப்போனனடா.

சரியடா நான் செய்தனான். கெதியா பார்த்து எழுது.

வாத்தியார் வாரார். வணக்கம் ஐயா. எல்லாரும் இருங்கோ. ஏன் வகுப்புக் கூட்டேலை. கூட்டு முறையாள் வரேலை ஐயா. நல்ல சாட்டு.. சரி எல்லாரும் முழங்காலிலை வெளியிலை நில்லுங்கோ. இண்டைக்கு இந்தப்பாடம் நடத்தேலாது.

வெளில வந்த அதிபர், ஏன் வெளியிலை நிக்கிறியள் என்று கேட்க கணக்கு வாத்தியார் நிப்பாட்டிப் போட்டார் ஐயா.. வகுப்புக் கூட்டேல எண்டு..

சரி.. சரி.. வகுப்பைக் கூட்டிப்போட்டு இருங்கோ. இனிமேல் உப்பிடிச் செய்யக்கூடாது.

மூன்றரை மணியளவில்… பள்ளிக்கூட மணி அடிக்க தேவாரம் பாடி முடிச்சு பொடியள் வெளியே வருகினம். மணி இண்டைக்கு தோட்ட வேலிக்கு கதியால் போடவேணும். வீட்டை வாறியே?. போடா நான் எங்கடை தோட்டத்துக்கு வெருளி கட்டவேணும். கிளியள் எல்லாம் தோட்டத்திலை காய்களை எல்லாம் சிதிலப்படுத்துதுகள்.

வீட்டை வந்தான் மணி..

தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…

சரி சரி.. சாப்பாட்டை போட்டுத் தா கெதியா.. விளையாடப் போக வேணும்…

நீயே போட்டுச் சாப்பிடு… அம்மா வரட்டும். அவாட்டை ரண்டு வக்கணை வேண்டித் தாரன். அப்ப சரிவரும் உன்ர வாய்க்கு,.

கண்ணன் வாறான். டேய் மணி.. நாளைக்க திருவிழாவிலை பொம்மலாட்டம் வருகுதாம். நான் போகப்போறன்.

ஏன்டா சின்ன மேளம் இல்லையே?

சின்ன மேளம் வர 3மணியாய் போம். வாணவெடியும் அப்பத்தானே போடுவங்கள். 3மணிக்குப் பிறகு சின்னண்ணணோடையும், பெடியளோடையும் போவம்.

அப்பத்தான் அங்க வந்த அம்மா.. கண்ணனைக் கண்டிட்டு, மருமேன் ஒருக்கா மறக்காமல் கொப்பரட்டைச் சொல்லு வீட்டை வரட்டாம் எண்டு. கனக்க கதைகிடக்கு.

சரி மாமி… சொல்லி விடுறன்.. நாங்கள் திருவிழாக்கு போட்டு வாறம்…

பொருள் விளக்கம்:

எணேய் – வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது

மோனை – வயதானவர்கள் சிறியவர்களை , பிள்ளைகளை அழைப்பது

கொப்பர் -முன்னால் நிற்பவரின் தகப்பனை அழைப்பது

சமா – நிறைய நபர்கள் சேர்ந்து கதைப்பது

புறுபுறுத்தல் – வாய்க்குள் சத்தம் வராமல் தானே ஏசுவது.

சீமான் – மரியாதைக்கும், நக்கலுக்குத் அதை சொல்வார்கள். செல்வந்தர் என்பது பொருள்.

மினைக்கெட்டால் – நேரத்தை விரயம் செய்தால்

பூசை – அடிப்பது

மடிலேஞ்சி – பணம் வைக்கும் சிறிய கை பை(Purse)

ரா -இரவு

அயத்துப்போனனடா – மறந்துபோதல்

கெதியா – விரைவாக

பொடியள் -பிள்ளைகள்.

கதியால் – மரத்தில் இருந்து வெட்டிய கிளைகள்

சிதிலப்படுத்துதுகள். – பழுதுபடுத்துவது.

புசல்மா – முகத்திற்கு போடும் பவுடர். குட்டிகுரோப் அப்போது பிரபலமானது.

சின்ன மேளம் – கோவிலில் குழுவாக நடனமாடும் பெண்கள். சினிமா பாட்டுக்கு ஆடுவார்கள்.

கனக்க – நிறைய

செட்டாக – நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி – அகில்

பொறுக்கி – கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் – மாமா

பொடியன் – பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி – புத்திமதி

கேளான் – கேட்க மாட்டான்

சொச்சமாக – கிட்டத்தட்ட

கொட்டுண்டு – சிந்துப் பட்டு

ஆய்ந்து – பிடுங்கி

காணன் – காணவில்லை

வீபூதி – திருநீறு

பள்ளி – பாட சாலை

சர்வகலாசாலை – பல்கலைக் கழகம்

குருத்துகள் – இளம் பிள்ளைகள்

புலவு – தோட்டம்

முதுசம் – பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி – புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் – கவலையீனம்

கதியால் – வேலி

காம்புக் சத்தகம் – ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் – குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு – ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை – முயற்சி

புளுக்கொடியல் – பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி – பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் – வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி – பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் – புறுபுறுத்தல்

பூராடம் – விடுப்பு,விண்ணாணம்

கோடி – கொல்லைப் புறம்

பொட்டு – வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை – உன் மீது ஆணையாக

எப்பன் – கொஞ்சம்

வளவு – காணி

சவர் – உப்பு

எல்லே – அல்லவா

ஏலாது – முடியாது

மே(மோ)ள் – மகள்

பாவாடை – முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் – இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் – கோவிக்கப் போகிறாள்

போகேக்க – போகும் போது

களு நீர் – சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் – வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி – பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அண்ணாந்து – மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் – ஆர்ப்பரிப்பு

மணிக்காய் – குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய் – கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன் – மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த –இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு – “அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

1. இல்லுபோலை/ எல்லுபோலை: இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு – இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை.

6. அரக்கி (வினை சொல்லாய்??): ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது,

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்
8. ஏதனம்: சமையல் பாத்திரங்கள்

குமாரசாமி குமாரசாமியின் முகநூல் பக்கத்தில் இருந்து....

Link to comment
Share on other sites

அருமையான பதிவு. " இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக்காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு." எமது முன்னோர்களின் அன்பின் வெளிப்பாட்டை  அழகாக  வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு.....!பொதுவாக நான் எழுதும் கருத்துக்களில் இதுபோன்ற சொற்பிரயோகங்களை அதிகம் பாவிப்பது வழக்கம்....... இப்ப என்ர யோசனையெல்லாம் எங்கட புரட்சியும் , வன்னியரும் உதைப் பார்த்திட்டு கலாய்க்கப் போக்கினம். உங்களுக்கு குத்திப்போட்டன், குமாரசாமிக்கு எங்க குத்திறதெண்டு தெரியேல்ல . பார்ப்பம் வசதியா கொழுவேக்க  குத்துவம் பச்சையை .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

.... இப்ப என்ர யோசனையெல்லாம் எங்கட புரட்சியும் , வன்னியரும் உதைப் பார்த்திட்டு கலாய்க்கப் போக்கினம். 😁

எணேய் சுவியர், உண்ணாணை புறுபுறுக்க மாட்டன்..
உந்த யாழ்க் களத்தை கனகாலம் அயத்துப்போன னப்பு..😔
நான் எப்பன் மணிக்காயப்பு..! 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடுங்கெட்டிக்காரன் ....கடுங்கெட்டிக்காரன்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மெய்யே!
இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம்.

மெய்யே கேட்டுதாப்பா... நான் இப்ப சந்தையாலை வரேக்கை  உவர் கந்தப்பர்ரை பொடியனும் சின்னப்புவின்ரை கடைக்குட்டியும் கோயில் கிணத்தடியிலை நிண்டு குசுகுசுத்துக்கொண்டு நிக்கினம்...என்னை கண்டுட்டு  இரண்டு பேரும் திகைச்சுப்போச்சினம்

உண்ணானை???

உண்ணானை என்ரை கண்ணாலை கண்டனான் எண்டுறன்....

சின்னாச்சிக்கு தெரிஞ்சுதெண்டால் கொண்டுபோடுவாள்......

ஏன் குஞ்சாச்சி என்ன லேசுப்பட்டவளோ எண்டு தெரியாமல் கேக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீலம் - கீலம் கீலமாக கிழிஞ்சு போச்சுது. இதில் கீலம்  என்பது  strip

கிழிஞ்சுது போ - முயற்சி எல்லாம் பயனின்றி வீணாகிவிட்டது.

விடலைப் பருவம்  - adolescent

பருவம்

பறுவம் - பூரண நிலவு
 
கனத்த நாள்  

சாப்பாடு மணிய இருக்குது,  - உணவு சுவையாக உள்ளது,

மணி வேலை - வேலை மிகவும் கனகச்சிதமாக செய்யப்பபட்டுள்ளது.  

சாப்பாடு - உணவு

பெட்டை - விடலைப் பருவப் பெண். ஆனால் இதன் உள் அர்த்தம் (துணை தேடும்) சூட்டில் இருக்கும் விடலைப் பருவப் பெண். அவன் பெட்டையளை சுழட்டிக் கொண்டு திரியிறான்.

சுழட்டுதல் - சைட் அடித்தல்.   

வடிவு - பெட்டை வடிவயிருக்கிறாள் எனபது அவளின் (கவர்ச்சி)அழகு சிற்பியால் வடிக்கப்பட்டதாகவே அவளை சுழட்டும்  பெடியன் உணர்கிறான் . வடிவான குழந்தை என்பது குழந்தையின் தோற்றம் அளந்து வடிக்கப்பட்ட (தமிழ் நாடு தமிழில், லட்சணமான) அங்கஅவயவங்கள் உள்ள அழகான குழந்தை.  எம்மவர்கள் இந்த சொல்லை இப்பொது cute என்கிறார்கள்.

எளிய பழக்கம் - தீய பழக்கம்     

புசத்துதல் - அவன் வெறியில புசத்துறான் (slurred speech)

திரியிறான். எங்க திரிஞ்சிட்டு வாற? - அலைந்து திரிதல்

 அலைக்கழிவு - வீண அலைக்கழிஞ்சது தான் மிச்சம் - சென்ற காரியம் நிறைவேறவில்லை.   

காரியம் - காரியமாய போறியள்? - எந்த முக்கிய அலுவலுக்கு செல்கிறீர்கள்?  - காரியத்தில் கண்ணாய் இரு என்பது பழமொழி.

காரிய விசர் - தன் நலனிற்காக விசரான  (பைத்தியமான) வெளித்தோற்றம் உடையவர்.    

விசர் - (தெனாலி புகழ்) பைத்தியம்.

அலுவல் -  chore

மிச்சம் சொச்சம் - மிஞ்சியவை, எஞ்சியவை.

அனுங்குதல் -  தேகம் மிகவும்  நலிந்த போது முணுமுணுப்பிலும் மென்மையான, ஆனால் கூர்மையான, அண்ணாகை  அழுத்தி உருவாகும் ஒலி (ஆங்கிலத்தில் moan என்பது கிட்டத்தட்ட பொருந்தி வரும் சொல், ஆனால் அனுங்குதல் moan அல்ல.)  

கிட்டத்தட்ட  -  ஏறத்தாழ

தேகம் - உடல்

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நல்லதொரு பகிர்வு.....!பொதுவாக நான் எழுதும் கருத்துக்களில் இதுபோன்ற சொற்பிரயோகங்களை அதிகம் பாவிப்பது வழக்கம்....... இப்ப என்ர யோசனையெல்லாம் எங்கட புரட்சியும் , வன்னியரும் உதைப் பார்த்திட்டு கலாய்க்கப் போக்கினம். உங்களுக்கு குத்திப்போட்டன், குமாரசாமிக்கு எங்க குத்திறதெண்டு தெரியேல்ல . பார்ப்பம் வசதியா கொழுவேக்க  குத்துவம் பச்சையை .......!   😁

 சில முன்னமே கை ரேடியோவில்

Vintage-NATIONAL-R-1012-Taiwan-Matsushit

அறிமுகம் தோழர் .. இப்போ களத்தில் பல புதிய வார்த்தைகள் அறிமுகம்  .. 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முதுசம்

முதிசம்  என்பதே சரியான பதம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயக்கெட்டு என்பது முக, உடல் (வனப்பு) வளம் கெட்டு போனது என்பதன் திரிபு

உண்ணானை - உன் மேல் (ஆனை) சத்தியம்.

பேய்க்காய் - காய் என்பது தமிழ் சொல் காய் அல்ல...  guy எனும் ஆங்கில சொல். அந்தGuy (க்காய்) வந்துட்டு, வெள்ளனயா (அப்பவே) போட்டுது.

அதேபோல் அடம் பிடியாத என்பதில் (பிடிவாதம் பிடியாத என்பது) அடம், adamant என்ற ஆங்கில சொல்.

தமிழகத்தில் தலைவர் கெத்துடா என்பார்கள். ஆங்கிலத்தில், guts ன் அர்த்தம் துணிச்சல்.

பெட்டிக்கடை என்பது Boutique shop என்பதன் திரிபு. 

அனுங்குதல்... தமக்கு தானே செல்லமாக மழழைகள் போல் பேதுவது.

இந்த, இது என்பதை குறிக்கும் உந்த, உது .... யாழ்ப்பாணத்துக்கு உரிய ஆதி தமிழ் மொழிப் பயன்பாடு. 

இலங்கையில் இஸ்லாமியர்கள் தம்மை முஸ்லிம்கள் என கூறிக் கொண்டாலும், தமிழ் மொழி பேசுபவர்களாக இருப்பதால், தமிழ் மொழி, இலங்கையின் வடக்கு, கிழக்குக்கு வெளியே சிங்களவர் பகுதி எங்கும் வாழ்கின்றது.

இவர்கள் வடக்கு, கிழக்கில் அந்த பகுதிக்குரிய வட்டாரத்து தமிழ் மொழியைப் பேசினாலும், கொழும்பில், மற்றும் தென் இலங்கையில் அவர்களது தமிழ், சென்னைத்தமிழ் போன்று வித்தியாசமானது.

மேலே (சின்னாச்சிக்கு தெரிஞ்சுதெண்டால்) கொண்டுபோடுவாள்...... என்பதை அவர்கள் (பெரிய நானாவுக்கு தெரிஞ்சிச்சுன்னா  அப்டியே ) துன்னுடுவாரு என்பார்கள்.

சரக்கு அடித்தல் தமிழகத்தில் மப்பு அடித்தல், யாழ்பாண தமிழில் வேறு அர்த்தம். இது  'படு காணவா' (படு - சரக்கு, காணவா - அடித்தல்) என்னும் சிங்களத்தின் நேரடி மொழி பெயர்ப்பு என நினைக்கிறேன். தமிழ் படங்களில் இதைக் கேட்கும் போது.... அட தண்ணி அடிப்பதை சொல்கிறார்கள் என நினைப்போம். (வேற ஒண்டும் இல்லை, உடம்புக்கு சுகமில்லை....பத்திய சரக்கு கறி சாப்பிடுதல் தான் -- ஹீ, ஹீ.).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கதைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லொரு  திரி.
கணவன் மனைவிக்கு இடையில் கடிதம் எழுதும் போது தொடக்கத்தில் " அன்புள்ள பிராணநாயகருக்கு..." என்று ஆரம்பிப்பார்கள்.
இதன் அர்த்தம் "என் உயிர் மூச்சே" என்று வரலாம்.
தகப்பனாரை "ஐயா " என்று இப்பவும் சிலர் அழைக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை எண்டும் அங்கை எண்டும் நங்கள் பறையிறதுண்டு (கதைக்கிறதுண்டு)

அதவிட உங்கை எண்டும் கதைக்கிறனாங்கள் உங்கை என்டால் இங்கைக்கும் அங்கைக்கும் நடுவிலவரும்

இன்னுமொண்டு இருக்கு அது

பங்கை

அனேகமாக நாங்கள் அதை "பங்கை பாரணை" எனக் கதைக்கிறதுண்டு

அதைவிட திடீரென "பங்கைபார் பங்கைபார் " எனவும் சொல்லுறதுண்டு அது எதைக்குறிக்கும் எண்டால் விரைவாக அசையும் பொருள் அல்லது உயிர்களைக்குறிக்கும் பங்கை பார் எனக்கூறும் போது அச்சொல்லின் அவசரம் அறிந்து நாமும் சுறுக்காக அவர்கள் காட்டும் திசையில பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

---- முனுமுனுக்கிறது .....குடும்ப விழாக்கள் நடக்கும்போது இரண்டு பேர் பேசிகொள்ளுவினம் உதடுகள் அசையாமல் வேறெங்கோ பராக்கு பார்த்து கொண்டு சுருக்கமாய் கதைத்தல்.

----  தடவுதல்  ....... தேடிப்பார்த்தல் . பின்னால முன்னால இருக்கும் பொருள் மற்றும் இருட்டுக்குள் ஒரு பொருளை தடவிப்பார்த்து எடுத்தல்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

டுங்கெட்டிக்காரன் – மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

விண்ணன். அவன் கணக்கில விண்ணன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சேர்.... என்னை ஒரு விடுபேயன் (ஒண்ணும் தெரியாத முடடாள்) எண்டு நினைச்சுட்டாய் போல கிடக்குது... 

உந்தக் குறுக்கால போவான்.... கோதாரி விழுவான் இன்னும் சீட்டுக் காசை அனுப்பி வைக்கல.

வெயில் தாள விட்டு, கோயிலடிக்கு வருவன்.... உந்த சீட்டுக்காசை வரக் காட்டு, பிள்ளை.

சுப்பையர் நிறை மப்புல வாறார்... ஓடுங்கோ பிள்ளையள்... மனிசன் வாயத் திறந்தால்...தார்.. எவர்.. எண்டு..பாராது... செந்தமிழ் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஏனப்பா சைக்கிளை  இப்பிடி இறுக்கி ஓடுறியள்...சில்லு பள்ளத்துக்கை விழ வயித்துக்கை எல்லே கொழுவப்போகுது.....மெல்லமாய் ஓடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2019 at 3:49 AM, குமாரசாமி said:

இஞ்சை ஏனப்பா சைக்கிளை  இப்பிடி இறுக்கி ஓடுறியள்...சில்லு பள்ளத்துக்கை விழ வயித்துக்கை எல்லே கொழுவப்போகுது.....மெல்லமாய் ஓடுங்கோ.

நீங்கள் உழத்துறத்தில பரிமளம் ஆச்சி குலுங்காமல் இருந்தால் சரி சாமியோவ்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு - gossip

உளையுது - கால் உளையுது - கால் வலித்தல் என்பது உளைதலின் உண்மையான உணர்ச்சி  அல்ல.

துடிக்க துடிக்க - பொதுவாக மீன் வாங்கும் அல்லது வாங்கிய மீனின் புத்துணர்ச்சி ( freshness ).

மைமல் நேரம் - அந்தி சாய்ந்து மங்கலாக தெரியும் நேரம் - dusk - மைமலுக்குள்ளெ கைக்குழந்தையை வெளியிலே கொண்டு போகாதே பிள்ளை.

மங்கிபோஞ்சு - நிறம் குறைந்து வெளிறி விட்டது - dull

வெளிறிப்போச்சு - நிறம் முழுமையாக இழந்து, வெண்மையான தன்மையுடைய நிறமாக மாறிக்கொண்டிருக்கிறது - fade.   

உழட்டுதல் - வயித்துக்குள்ளே உழட்டுது - வயிறு பிசைகிறது.

உலாத்துதல் - அவர் உலாத்திப்போட்டு வாறார்.

ஊர்த்துழவாரம் - கொப்பருக்கு உந்உச்சரிப்பை த ஊர்த்துழவாரம் எல்லாம் பார்க்கிறதுக்கு நேரம் இருக்கு. வீட்டு வேலையெண்டா மனுஷனுக்கு ... - ஆனால், ஊர்துலவாராம் என்பதே சரியான உச்சரிப்பா?

உச்சரிப்பு - pronounce

மடியில கனம் - சந்தேகப்படும் படியான அறிகுறிகள் - மடியில கனம் இல்லாட்டி ஏன் மசுங்கி கொண்டு நிக்குதுகள்?

மசுங்கி - crouch

 

உசாத்துணை - எழுத்து மொழி - reference

கம்பீரம் - எழுத்து மொழி - smart.

பூராயம் - எழுத்து மொழி - scrutiny - பேச்சு மொழியில் குழந்தைகள், மழலைகள் செய்யும் துருதுருத்தும் புதிய பொருட்களில் செய்யும் ஆய்வு.

வழக்கம் - வழமையான பழக்கவழக்கம் - custom.

உழுவை அல்லது உளுவை - அநேகமாக எழுத்து வழக்கத்தில் பாவிக்கப்படுவது. புலிகள் காலத்தில் பிரபல்யமான சொல், ஏனெனில், உழுவை / உளுவை என்பது புலி என்னும் சொல்லின்  ஒத்த கருத்துள்ள சொல். புலிகளின் சங்கேத தொடர்பாடல்களில் பாவிக்கப்பட்டது. கிந்தியாவால் கூட மிகவும் குறிப்பிடத்தக்க காலத்திற்கு புரியாத சொல்லாக இருந்தது என்று கேள்விப்பட்டேன்.

பிரபல்யம் - எழுத்து மொழி - எல்லாராலும் அறியப்பட்ட - prominent.

கேள்விப்பட்டேன் - அறிந்தேன் - எழுத்து மொழி.

சங்கேதம் (மொழி) - code words.

பூதாக்கலம் - தாலி கட்டி, சம்பிரதாய கடன்கள் எல்லாம் முடித்து, கணவனும் மனைவியும் வெகு இரகசியமாக ஒருவருக்கு மற்றவர் ஊட்டும் உணவு. இந்த உணவு முக்கியமாக விருந்தினர் எல்லோரும் உண்டு களைத்து, மிகுதியாக இருக்கும் இருக்கவேண்டியது என்பது சம்பிரதாயம்.   

இங்கிதம் - mannerism.

திரி (பெயர்ச் சொல்) - விளக்குத் திரி.

திரி (வினைச் சொல்) - கயிறு திரித்தல், அலைதல், உண்மை சம்பவத்தை திரித்தல் (distort).

அரை - அரைத்தல்

அருணாக் கயிறு - அரைஞாட்கயிறு

அரை - below hip line and  above lower  abdomen  - bikini தமிழரின் கலாசாரத்தில் இருந்ததா? - இப்போதைய காலத்தில் அரையில் இருக்கும் bikini சற்று இறங்கியிருந்தால் இன்னும் sexy  ஆக இருக்கும் என்ற பிரயோகம் அரை என்னும் சொல்லை வழக்கொழிந்து போகாமல் வைத்திருக்க உதவும்.  

கச்சை - crotch  

வியாக்கியானம்  - விளக்கம் - எழுத்து ஈழத் / யாழ்ப்பாணத் தமிழில் பாவிப்பது.

புழுக்கம் - சரியா புழுங்குது - excessive humidity.

புழுங்கல் அரிசி - கொதி நீரில் புழுக்கிய நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசி.

கொதி - சட்டென்று கோபமடையும் குணத்தை குறிப்பது.

கொதி தண்ணி - மமலமலவென்று கொதி நிலையில் (100 degree celsius) உள்ள நீர் (தண்ணீரல்ல - ஏனெனில் தண்ணீர் - தண்மை + நீர் - குளிர்ச்சியும், மலர்ச்சியும் உடையது).

முலை  - பாலூட்டும் மிருகங்களின் பால் சுரக்கும் மார்பக சுரப்பி. - udder

கொங்கை - எழுத்து மொழி - மனிதப் பெண்ணின் மார்பகம். ஆயினும், இப்போது 100 வயது உள்ளவர்கள் இதை அம்மம்மா என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. இப்போது அருகிவிட்டதா?

மொண்ணி (தூசணச் சொல்) - tits - nipple.

<u><em><span style="color:#FF0000;">களத்தில் தவிர்க்கப்படவேண்டிய சொல் நீக்கப்பட்டுள்ளது</span></em></u> (தூசணச் சொல்) - cunt. பெண்களை தெய்வமாக மதிக்கும் கலாசாரத்தில் ஏன் மொண்ணி, பு*டை என்னும் சொற்கள் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றது? ஆனால், இந்தக்கலாசாரம் இனியும் நின்று பிடிக்கும் என்று நான் நம்பவில்லை.

சுண்ணி(தூசணச் சொல்)  - willy.

ஓழ்  (தூசணச் சொல்) - fuck . ஆனால், சு*ணி, ஓ*  என்னும் சொற்கள் முதல் இரண்டு சொற்களிலும் பார்க்க குறைவாகவே பாவிக்கப்படுகிறது?

அரிப்பு - கடல் அரிப்பு உள்ள  இடங்களை குறிப்பது.

அரிப்பு (தூசணச் சொல்) - horny.
  

 

 

Link to comment
Share on other sites

நாளைக்கு வெள்ளாப்பு தோட்டம் போகவேண்டும் - எங்களது ஊர் பேச்சுவழக்கில் வெள்ளாப்பு என்பது அதிகாலை 3 - 4 மணியை குறிக்கும்.

தொட்டம்  தொட்டமா பயிர் கருகிபோச்சுது - தொட்டம்  தொட்டமா என்பது இடைக்கிடை என பொருள்படும்.

தூரமொண்டு  - அங்கொன்றும் இங்கொன்றுமாக

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பேச்சு வழக்கு

Image result for à®à®´à®µà®¾à®°à®®à¯
 

யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே.

மெய்யே!

இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம்.

கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது.

இவர்கள் காணவர்மாரை இஞ்சரும்! இஞ்சருங்கோ! என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்ததும் இஞ்சரும் அப்பா! இஞ்சருங்கோ அப்பா என அது பதவிப் பெயர் கொண்டழைக்கப்படும் வழக்கு இன்றும் இருக்கிறது.(இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ…. என்று ஒரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.)

அதற்கு, என்ன சங்கதி? என்றவாறு கணவர்மாரின் பதில் கேள்வி ஆரம்பமாக இப்படியாகச் அவர்களின் சம்பாஷனைகள் தொடரும். ஆனாலும் கணவர்மார் மனைவிமாரின் பெயரைச் சொல்லியோ அன்றேல் அவர்களின் செல்லப்பெயர் / வீட்டுப் பெயர்களைச் சொல்லியோ (பொதுவாக கிளி, ராசாத்தி, செல்லம், குட்டி, …இப்படியாகச் செல்லப் பெயர்கள் இருக்கும்)அழைக்கும் வழக்கு இருக்கிறது.

என்றாலும் இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு. கணவன்மாரை மனைவிமார் மெய்யே! மெய்யே!! (உண்மையே! உண்மையே!)என்று கூப்பிட்டதனால் போலும் நீங்களும் நாங்களும் பிறந்திருக்கிறோம்!!

பறை

பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் “பறை” எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் “பறைதல்” என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் “பறையர்” என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் “பறை” எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில…

“பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்

பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

பறைசாற்றுதல்” எனும் சொல்லும் “பறை” எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பல சொல்லாடல்கள் உள்ளன. இவை இன்றும் யாழ்ப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த “பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை “பறையன்”, “பறையன் போன்று” எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்

தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த “பறை” எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை  தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே “வகே” எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் “வகை” எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்

அதேவேளை “பறை” எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற” என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான “பறையர்” எனும் தமிழ் சொல், சிங்களத்தில் “பெறவா” என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த “பெறை” இசைக்கருவியை அடிப்பவர்களை “பெறக்காரயா” என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்
பறை > பறை > பெறை > பெற
பறையர் > பறையோ > பெறவா
பறை அடிப்பவர் > பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த “பறை” எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் “பெறக்காரயா” என்பதில் உள்ள “காரயா” எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள “காரன்” எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட “பறை” எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த “Pariah” வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சு

குஞ்சு என்றால் “சிறிய” அல்லது “சிறியது” என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை “குஞ்சு” என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

குஞ்சு குருமன்கள்” என்பதும் “சின்னஞ் சிறிசுகள்” அல்லது “சின்னஞ் சிறியவர்கள்” எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் “என்ட செல்லம்“, “என்ட குஞ்சு” என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.

உறவுமுறைச் சொற்கள்

யாழ்ப்பாணத் தமிழரிடையே “குஞ்சு” என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை “குஞ்சையா“, “குஞ்சியப்பு“, “குஞ்சையர்” போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.

சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்

தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; “குஞ்சம்மா”, “குஞ்சாச்சி” என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.

சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி

சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; “குஞ்சித்தம்பி”, “சின்னக்குஞ்சு” என அழைக்கும் வழக்கும் உள்ளது.

சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு

மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் “குஞ்சு” எனும் சொற்பதம் “சிறிய” எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.

துலைக்கோ, கனக்க, வயக்கெட்டுப் போனியள்!

* ”அண்ணை! துலைக்கோ போறியள்?”, “துலைக்கோ போட்டு வாறியள்”, இதில ‘துலை’ என்பது ‘தொலை தூரம்’ எண்டதில இருந்து வந்திருக்கும் என நினைக்கிறேன்.

* “கண்டு கனகாலம்”. இதுல ‘கனகாலம்’ என்பது அதிக காலம் என்பதைக் கூறிக்குது. ‘கனக்க’ நிறைய/அதிக என்றாகிறது. “இதையும் கொண்டு போங்கோ. இங்க கனக்கக் கிடக்கு”. ‘கனக்க’ என்பது ‘கனதியான’ எண்டதில இருந்து வந்திருக்குமோ?

* ”எப்ப கொழும்பாலை வந்தனீங்கள்? நல்லா வயக்கெட்டுப் போனியள்”. இதுல வயக்கெட்டு எண்டது, ‘மெலிந்து’ எண்டதைக் குறிக்குது. ‘வயக்கெட்டு’ எண்டது ‘வயசு கெட்டு’ எண்ட அர்த்ததில் வருமோ? வயசு போனால் மெலிந்து சோர்வது இயல்புதானே என்பதால் இருக்கலாம்.

இளந்தாரிப் பெடியள், குமர்ப் பெட்டையள்

“ஊரில் ஒரு குமர் தனியனாப் போக வழியில்லை, சந்தியிலை நிண்டு இளந்தாரிப் பெடியள் அவளவையை சைற் அடிக்கிறாங்கள்”

ஈழத்து ஊர்களில் மேற்கண்ட சம்பாஷணையை ஊர்ப் பெரியவர்கள் வாயிலிருந்து விழக் கேட்கலாம். அந்த வாக்கியத்தில் வந்த இளந்தாரி என்பது கட்டிளம் காளை என்ற சொற்பதத்திற்கு நிகரானது. காதல் வயப்படுகின்ற பருவம் என்பது இன்னும் நெருக்கமான அர்த்தம் கொள்ளத்தக்கதாக அமையும். பெடியள் என்பது தமிழகத்தில் பொடியன் என்று புழங்கும் சொல்லுக்கு நிகரான அர்த்தம் கொண்டு அமையும்.

இளவட்டப் பொண்ணு, குமரிப் பெண் என்று அர்த்தம் கொள்ளும் சொற்பதமே ஈழத்துப் பேச்சு வழக்கில் அர்த்தப்படும் “குமர்ப்பெட்டை“. பருவமடைந்த பெண்களை இங்கே அர்த்தப்படுத்தி அழைப்பதுண்டு. முன் சொன்ன இளந்தாரிக்கு பெண் பால் அர்த்தமாகவும் இது அமையும்.

ஆக்கினை விழுந்த வேலை

ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ, அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ, என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம். நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருக்கிறார்கள், அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள், அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கும் போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு பாருங்கோ, வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவாறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் “ஆக்கினை விழுந்த வேலை” என்பதை “ஆக்கினை பிடிச்ச வேலை” என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு. எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல். இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம். என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது, இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

குடுதேனோ– கொடுத்தேனோ எங்கடை– எங்களுடைய
நினைவுவரேக்கை– நினைவு வரும்பொழுது

தீர அயத்துப்போனன்

பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?” எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா, என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும். ”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும், இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம். அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான், காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,

இங்கு முத்தம்– முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,

ஒரு நாள் பொழுது

எணேய் அம்மா, இவன் தம்பி இன்னும் நித்திரையாலை எழும்பேலை.. பக்கத்து வீட்டில பொங்கும் பூம்புனல் கேட்குது… பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுதணை…

நான் வாறன் இப்ப.. உவனுக்கு மோனை கொஞ்சம் தண்ணி, வாளியோடை கொண்டே ஊத்தினனெண்டா எல்லா நித்திரையும் இப்ப போகும்.. சரி மோனை கொப்பர் எங்கே போட்டார்?

அப்பு ஆலங்குச்சி எடுக்கவெண்டு சந்திக்குப் போனவர்.. இன்னும் காணேலை…

இண்டைக்கு பல்லு விளக்கின மாதிரித்தான். உந்த மனிசனுக்க கதை கண்ட இடம் கயிலாயம் தான்… அங்கை ஆரும் ஓசியிலை பேப்பர் பாக்க வந்திருப்பினம், பின்னை சமா வைக்கினமாக்கும் என்று புறுபுறுத்தாள்..

தம்பி அப்பத்தான் நித்திரையால எழும்பி வாறான்.. எட தம்பி கொப்பர் ஆலங்குச்சி எடுக்க போனவர். சீமான் வரக் காணேலை. ஒருக்கா உந்த சின்னக் காலாலை ஓடிப்போய் குச்சியை கொப்பரிட்டை வாங்கி பல்லை மினிக்கிக் கொண்டு தோட்டத்திலை மிஸின் றைக்குது. அதிலை குளிச்சிட்டுவா பவுண்.

வந்த மணியிடம், கொப்பருக்கு கொஞ்சம் பழஞ்சோறு கிடக்கு… உனக்கு கொஞ்சம் ஒடியல் புட்டு அவிச்சனான் .. மாங்காயும், நேற்று அவிச்சு வைச்ச நெத்தலி மீனும் போட்டனான். கெதிபண்ணி சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடு மோனை. உன்ரை கூட்டாளி நீ குளிக்கப் போனாப்போலை வந்தவன். மினைக்கெட்டால் வாத்தியிட்டை இண்டைக்கு பூசை தான் எண்டிட்டு போட்டான்.

அம்மா நாலுறூள் கொப்பி வேண்டி வரச் சொல்லி ஆங்கிலப்பாட வாத்தி சொன்னவர். காசு தாவணெணை. அடுப்படி மட்டை வரிக்கடிலிலை ஒரு தகரப்பேணி கிடக்கு.. அதுக்கை சின்ன மடிலேங்சிக்கை சீட்டுக்காசு கிடக்கு.. அதிலை 2ருபாயை எடன் முருங்கையில கொஞ்ச காய் ஆயலாம் . தேசிக்காயும் கிடக்கு… சந்தையிலை குடுத்திட்டு எடுத்த காசை வைப்பம்.

பள்ளிக்கூடத்தில்

டேய் மணி நேற்று தந்த வீட்டுப்பாடம் செய்து போட்டியே?

இல்லயடா.. நேற்று ரா தோட்டவெளியில அரிச்சந்திரன் கூத்து ஆடினவங்கள் அதுதான் பார்க்கப் போனன். அயத்துப்போனனடா.

சரியடா நான் செய்தனான். கெதியா பார்த்து எழுது.

வாத்தியார் வாரார். வணக்கம் ஐயா. எல்லாரும் இருங்கோ. ஏன் வகுப்புக் கூட்டேலை. கூட்டு முறையாள் வரேலை ஐயா. நல்ல சாட்டு.. சரி எல்லாரும் முழங்காலிலை வெளியிலை நில்லுங்கோ. இண்டைக்கு இந்தப்பாடம் நடத்தேலாது.

வெளில வந்த அதிபர், ஏன் வெளியிலை நிக்கிறியள் என்று கேட்க கணக்கு வாத்தியார் நிப்பாட்டிப் போட்டார் ஐயா.. வகுப்புக் கூட்டேல எண்டு..

சரி.. சரி.. வகுப்பைக் கூட்டிப்போட்டு இருங்கோ. இனிமேல் உப்பிடிச் செய்யக்கூடாது.

மூன்றரை மணியளவில்… பள்ளிக்கூட மணி அடிக்க தேவாரம் பாடி முடிச்சு பொடியள் வெளியே வருகினம். மணி இண்டைக்கு தோட்ட வேலிக்கு கதியால் போடவேணும். வீட்டை வாறியே?. போடா நான் எங்கடை தோட்டத்துக்கு வெருளி கட்டவேணும். கிளியள் எல்லாம் தோட்டத்திலை காய்களை எல்லாம் சிதிலப்படுத்துதுகள்.

வீட்டை வந்தான் மணி..

தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…

சரி சரி.. சாப்பாட்டை போட்டுத் தா கெதியா.. விளையாடப் போக வேணும்…

நீயே போட்டுச் சாப்பிடு… அம்மா வரட்டும். அவாட்டை ரண்டு வக்கணை வேண்டித் தாரன். அப்ப சரிவரும் உன்ர வாய்க்கு,.

கண்ணன் வாறான். டேய் மணி.. நாளைக்க திருவிழாவிலை பொம்மலாட்டம் வருகுதாம். நான் போகப்போறன்.

ஏன்டா சின்ன மேளம் இல்லையே?

சின்ன மேளம் வர 3மணியாய் போம். வாணவெடியும் அப்பத்தானே போடுவங்கள். 3மணிக்குப் பிறகு சின்னண்ணணோடையும், பெடியளோடையும் போவம்.

அப்பத்தான் அங்க வந்த அம்மா.. கண்ணனைக் கண்டிட்டு, மருமேன் ஒருக்கா மறக்காமல் கொப்பரட்டைச் சொல்லு வீட்டை வரட்டாம் எண்டு. கனக்க கதைகிடக்கு.

சரி மாமி… சொல்லி விடுறன்.. நாங்கள் திருவிழாக்கு போட்டு வாறம்…

பொருள் விளக்கம்:

எணேய் – வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது

மோனை – வயதானவர்கள் சிறியவர்களை , பிள்ளைகளை அழைப்பது

கொப்பர் -முன்னால் நிற்பவரின் தகப்பனை அழைப்பது

சமா – நிறைய நபர்கள் சேர்ந்து கதைப்பது

புறுபுறுத்தல் – வாய்க்குள் சத்தம் வராமல் தானே ஏசுவது.

சீமான் – மரியாதைக்கும், நக்கலுக்குத் அதை சொல்வார்கள். செல்வந்தர் என்பது பொருள்.

மினைக்கெட்டால் – நேரத்தை விரயம் செய்தால்

பூசை – அடிப்பது

மடிலேஞ்சி – பணம் வைக்கும் சிறிய கை பை(Purse)

ரா -இரவு

அயத்துப்போனனடா – மறந்துபோதல்

கெதியா – விரைவாக

பொடியள் -பிள்ளைகள்.

கதியால் – மரத்தில் இருந்து வெட்டிய கிளைகள்

சிதிலப்படுத்துதுகள். – பழுதுபடுத்துவது.

புசல்மா – முகத்திற்கு போடும் பவுடர். குட்டிகுரோப் அப்போது பிரபலமானது.

சின்ன மேளம் – கோவிலில் குழுவாக நடனமாடும் பெண்கள். சினிமா பாட்டுக்கு ஆடுவார்கள்.

கனக்க – நிறைய

செட்டாக – நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி – அகில்

பொறுக்கி – கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் – மாமா

பொடியன் – பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி – புத்திமதி

கேளான் – கேட்க மாட்டான்

சொச்சமாக – கிட்டத்தட்ட

கொட்டுண்டு – சிந்துப் பட்டு

ஆய்ந்து – பிடுங்கி

காணன் – காணவில்லை

வீபூதி – திருநீறு

பள்ளி – பாட சாலை

சர்வகலாசாலை – பல்கலைக் கழகம்

குருத்துகள் – இளம் பிள்ளைகள்

புலவு – தோட்டம்

முதுசம் – பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி – புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் – கவலையீனம்

கதியால் – வேலி

காம்புக் சத்தகம் – ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் – குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு – ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை – முயற்சி

புளுக்கொடியல் – பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி – பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் – வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி – பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் – புறுபுறுத்தல்

பூராடம் – விடுப்பு,விண்ணாணம்

கோடி – கொல்லைப் புறம்

பொட்டு – வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை – உன் மீது ஆணையாக

எப்பன் – கொஞ்சம்

வளவு – காணி

சவர் – உப்பு

எல்லே – அல்லவா

ஏலாது – முடியாது

மே(மோ)ள் – மகள்

பாவாடை – முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் – இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் – கோவிக்கப் போகிறாள்

போகேக்க – போகும் போது

களு நீர் – சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் – வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி – பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அண்ணாந்து – மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் – ஆர்ப்பரிப்பு

மணிக்காய் – குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய் – கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன் – மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த –இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு – “அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

1. இல்லுபோலை/ எல்லுபோலை: இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு – இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை.

6. அரக்கி (வினை சொல்லாய்??): ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது,

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்
8. ஏதனம்: சமையல் பாத்திரங்கள்

https://ourjaffna.com/en/additional/யாழ்ப்பாண-பேச்சு-வழக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•11:08 AM
ஊரிலே சொல்லுவார்கள்.. "கார் மோதி ஆள் சரியாம்".

இதைக் கேள்விப்பட்டிருப்பீங்க:
ஓர் ஊரில ஒரு நரியாம்.. அதோட கதை சரியாம்.

நரி இருந்துது, அத்துடன் கதையும் முடிந்தது. இதுதான் எங்களுக்குத் தெரிந்த பொருள். இதுக்கு நீட்டி முழக்கின பொருள்:
ஓர் ஊரில நிறைய்ய்ய்ய்ய்ய நாளா ஒரு நரி இருந்திச்சாம்.. (அப்பிடி நிறைய நாளா இருந்து இருந்து வயது போனதால) நரியின் கதை சரியாம்". அதாவது நரி இறந்து விட்டதாம்.

அதேமாதிரித்தான் முதல் வசனத்துக்கும் பொருள்: "ஆள் சரியாம்" என்றால் ஆள் இறந்துவிட்டார் என்று பொருள்.
போந்த பொலிஞ்ச

ஒரு நல்ல வாட்ட சாட்டமான (குண்டான என்பதை இப்படி நாகரீகமாக சொல்லுறன்) ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கூறியது. “நீர் நல்ல போந்த பொலிஞ்ச Santa வாத்தான் இருக்கிறீர்”. நத்தார் காலமானதால், காலத்துக்கேற்ற படி (பகிடியாக) சொன்னார்.

கம்பி நீட்டிறது

அவளை தனிய விட்டால் கம்பி நீட்டினாலும் நீட்டிடுவாள்” என்றால், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிடுவாள் என்பதாகப் பொருள் வரும். 

பேய்.... உடன் வரும் சொற்கள் :)

கவனிக்க! பேய்க்கதை என்பது பேயைப்பற்றின கதையல்ல :). ”என்ன பேய்க்கதைகதைக்கிறாய்?, என்றாலோ அல்லது “சும்மா பேய்க்கதை கதையாதை” என்றாலோ, அதில 'பேய்க்கதை' என்பது 'விசர்க்கதை' அல்லது 'அர்த்தமற்ற கதை' என்பதாகப் பொருள்படும். 

அதே நேரம், ”அந்தாள் பேய்க்கடி கடிக்கும்” என்றாலோ, அல்லது “அந்தாள் பேய் அறுவை அறுக்கும்” என்றாலோ, ‘அந்த ஆள் நிறையவே வேண்டாத பேச்சுக்கள் பேசி நம்மை உண்டு, இல்லையெண்டு ஆக்கிவிடும்' என்பதாகப் பொருள்படும். அதாவது இந்த இடத்தில் ‘பேய்' என்பது, ‘நிறைய' என்ற பொருளில் வரும்.
Author: கலை
•1:30 AM
கொழுவல்!

.......................................

விடுப்பு (பூராயம்) கதைக்கிறவர் ஒருவர்: “அந்த கமலன் வீட்டில அண்ணனுக்கும், தம்பிக்குமிடையில நல்ல கொழுவலாம்”. (சிலபேர் இதை ஒருவித மகிழ்ச்சியுடன் சொல்வார்கள். மற்றவை கொழுவுப்படுறதில இவைக்கு அவ்வளவு மகிழ்ச்சி :)

(பூராயம் என்பது நல்ல பழங்காலத்தில பாவித்த ஒரு சொல் என்று நினைக்கிறன். ஆச்சி சொன்னதைக் கேட்டிருப்பதாக சின்ன ஞாபகம்.)

........................................

அம்மா மகனிடம்: “தங்கச்சியோட ஏன் நீ கொழுவிக்கொண்டு இருக்கிறாய். சும்மா உன்ரை வேலையைப் பாத்துக்கொண்டு போ பாப்பம்”
மகன்: “நானெங்கை கொழுவுறன். அவள்தான் என்னோட கொழுவலுக்கு வாறாள்”.

.........................................

நல்ல நோக்கமுள்ள ஒருவர்: “இவ்வளவுநாளும் நல்ல சினேகிதமா இருந்திட்டு, இப்ப சும்மா தேவையில்லாம கொழுவுப்பட்டுக் கொண்டு இருக்கிறாங்கள். நாந்தான் ஒருமாதிரி சமாதானம் பிடிச்சு விட்டனான்”

..........................................

எனக்கொரு சந்தேகம். 'கொழுவுதல்' என்பதை நேரடியாக யோசித்துப் பார்த்தால், ‘இணைதல் அல்லது இணைத்தல் என்ற பொருள்தானே வரும். அப்படியிருக்க, அதற்கு நேரெதிரான சண்டை பிடித்தல் என்னும் பொருளில் ஏன் ‘கொழுவுத' பாவிக்கப்படுகிறது?



(இதையெல்லாம் இங்க எழுதி நான்தான் இப்ப பேய் அறுவை அறுக்கிறேனோ தெரியேல்லை, ஹி ஹி. அதால இப்போதைக்கு நிப்பாட்டுறன்). 

 

*****
ஈழத்து முற்றத்தில இப்ப கொஞ்ச நாளா, நிறைய கேட்டு மறந்திருந்த சொற்கள் நினைவுபடுத்தப்பட்டிருக்கு. அப்படியே எனக்கும் சில சொற்கள் நினைவுக்கு வந்தது.

1. ஆச்சி முந்தி கேப்பா “என்ன நீ கிரந்தம் பறையிற?” என்று. ஏதாவது விடயத்தை சரியாக சொல்லாமல், அல்லது புரிய வைக்காமல் இருந்தால், (அல்லது உளறுவதுபோல் தோன்றினால்) இந்தக் கேள்வி வரும். 'பறையிறாய்' என்பது 'கதைக்கிறாய் / பேசுகிறாய்' என்பது. பறையிறது என்பது மலையாள சொல் போல என நினைக்கிறேன்.

2. இதுவும் ஆச்சி சொல்லிக் கேள்விப்பட்டதுதான். ”எப்பன் சொதி குத்தட்டோ?”. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “கொஞ்சம் சொதி விடட்டுமா?” என்பதைத்தான் அப்படிக் கேட்பா. ‘விடட்டுமா?' என்பதை, ‘குத்தட்டுமா?' என்று கேட்பது யாழில் தென்மராட்சி வழக்கா என்று தெரியவில்லை. வேறு பகுதிகளிலும் இப்படி கேட்பார்களா என்பது தெரியவில்லை.

3. 'மல்லுக்கட்டிறது' என்னும் சொல் தற்போதும் பலர் பாவிக்கிறார்கள் என நினைக்கிறேன். ”எதுக்கு வீணா மல்லுக்கட்டுறாய்?” என்றால், ”ஏன் வீண் விவாதம் செய்கிறாய் அல்லது சண்டை பிடிக்கிறாய்?” என்பதைக் குறிக்கும்.

******
இந்தியத் தமிழர்களுடன் பேசும்போது அவர்கள் வித்தியாசமாக உணர்ந்த சில சொற்கள்.

1. குழப்படி = குறும்பு

2. கெதியா = விரைவாக

3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.

4. வெளிக்கிட்டாச்சோ? = தயாராகியாச்சா? (கிளம்பியாச்சா?)
எங்கேயாவது வெளியே செல்ல தயாராகுவதைக் குறிக்கும். சில சமயம் ஆடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொள்வதை மட்டுமே குறிக்கும். உதாரணமாக, திருமணத்திற்கு ‘பொம்பிளையை வெளிக்கிடுத்தியாச்சோ?' என்பார்கள்.

5. மோனை' என்று தம்மை விட வயது குறைந்தவர்களை விழிப்பார்கள். தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி எனப் பலரும், இப்பவும் ‘மோனை' என்று அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘மோனை' என்ற அந்த அழைப்பில் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதான உணர்வு இருக்கும்.

6. நாம் பயன்படுத்தும் உறவு முறைகள் சிலவும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
குஞ்சையா (சித்தப்பா), குஞ்சம்மா (சித்தி). பழைய காலத்தில், அம்மாவை 'ஆச்சி'என்றும், அப்பாவை 'ஐயா' என்றும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் பின்னர், பாட்டியைத்தான் ஆச்சி என அழைக்கும் வழக்கம் வந்தது.
Author: சினேகிதி
•1:45 PM
?q=uggc%3A%2F%2Ffpurveznq.svyrf.jbeqcerf

தோலங்கெட்டது, வெக்கங்கெட்டது, மானம் கெட்டது,ரோசம் இல்லாதது, சூடு சுரணையில்லாதது இதெல்லாம் ஒரே அர்தத்திலதான் வருமென்டு நினைக்கிறன்.

இந்தச்சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீங்கிளோ? இதுக்கு நேரடி அர்த்தம் என்னென்டு எனக்குத் தெரியாது ...தோலம் என்டால் என்ன? ஆனால் எங்கட ஊரில பரவலாப் பாவிக்கிற ஒரு சொல்லிது. இப்ப சகோதரங்கள் 2 பேர் சண்டை கட்டிப்புரண்டு சண்டை பிடிக்க அம்மாவோ அப்பாவோ 2பேருக்கும் நல்லா விளாசிப்போட்டு ஒராளோடை ஒராள் கதைக்கப்படாதெண்டு சொல்லி விட அடுத்த நிமிசமே சண்டை பிடிச்சதை மறந்திட்டுசேர்ந்து விளையாடினால்அங்கால அம்மாவோ அம்மம்மாவோ புறுபுறுப்பினம் தோலம் கெட்டதுகள் இப்பத்தான் 2ம் மல்லுக்கு நிண்டுதுகள் இப்ப பாருங்கோ ஒன்டும் நடக்காதது போல விளையாடுறதை. 

இல்லாட்டப் பக்கத்து வீட்டுப்பிள்ளைட்ட நுள்ளு வேண்டிப்போட்டு வீட்ட வந்து அழுற பிள்ளைக்கு அறிவுரை சொல்லிப்போட்டு அம்மா நீ இனி அங்க விளையாடப்போவேண்டாம் என்டு சொல்லுவா. பிள்ளை அடுத்தநாளே போய் திரும்ப நுள்ளு வேண்டிக்கொண்டு வரும் அப்ப சொல்லுவா அம்மா தோலங்கெட்டது நேற்றெல்லே சொன்னான் போகதயெண்டு.

இல்லாட்டி வளர்ந்தாக்கள் ஒரு காலத்தில ஊருக்கே தெரியுற மாதிரிச் சண்டை பிடிச்சுப் போட்டுக் கொஞ்சகாலத்தில திரும்பக் கதைக்கத் தொடங்கினாலும் தோலங்கெட்டதுகள் உதுகளின்ர சண்டைக்க நாங்கள் விலக்குப்பிடிக்கப் போய் காயப்பட்டதுதான் மிச்சம்...இப்ப பாருங்கோ அவை இரண்டுபேற்ற குடும்பத்தையும்...ஒரே வாரப்பாடு இப்ப.

இல்லாட்டி இரண்டு பேர் சண்டைபிடிச்சு என்ர வீட்டு முத்தம் நீ மிரிக்கக்கூடாதெண்டு சவால் விட்டுப்போட்டு பிறகு எதுக்காகவோ வீட்டுப்படியேறி வந்தால் தோலங்கெட்ட ஜென்மம் எந்த முகத்தை வைச்சுக்கொண்டு எங்கட வீட்ட வருது என்று சொல்லுவினம்.

இல்லாட்டி வேலை செய்து முடிக்கும் வரைக்கும் ப்ளாக்ல எழுதிறேல்ல என்டுபோட்டு திரும்பவும் வந்து குதியன் குத்துறாக்களையும் சொல்லலாம்....
 
 
Author: வந்தியத்தேவன்
•10:59 AM
கொழும்புத் தமிழர்கள் என் ஆரம்பகாலத்தில் கொழும்பில் வசித்துவந்த செட்டிமார்களையே குறிக்கும். பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்களாக இருக்கிறார்கள். கொழும்பு என்பது ஸ்ரீலங்காவின் தலைநகரமாகும். அதனால் அங்கே பல்லின மக்கள் வசிக்கின்றார்கள். சிங்கள மக்களைப் பொறுத்தவரை கொழும்பு சிங்களவர்கள் என்ற பதம் மிகக் குறைவாகவே பாவிக்கப்படுகின்றது. கொழும்பு செவன்(7) சிங்களவர்கள் என்ற பதம் பரவலாக பாவிக்கப்படுகின்றது.

இந்த கொழும்பு 7 மக்கள் பெரும்பாலும் உயர்தட்டுமக்களாகவே காணப்படுகின்றார்கள். ஜேஆர் ஜெயவர்த்தனா, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் சிறந்த உதாரணங்களாகும். 

கொழும்பில் வசிக்கும் பெரும்பாலான சிங்கள மக்கள் வேறு இடங்களில் இருந்து தங்கள் வேலை வியாபாரம் காரணமாக கொழும்பில் வசிப்பவர்களாகும். தமிழ் சிங்களப் புதுவருட காலத்தில் பெரும்பாலான சிங்கள மக்களின் வீடுகளில் யாரும் இருக்கவே மாட்டார்கள் அவர்கள் தங்கள் சொந்த ஊரில் புதுவருடத்தைக் கொண்டாடச் செல்வார்கள். 

கொழும்புத் தமிழர்களாக காலங்காலமாக அங்கேயே வசிக்கும் தமிழர்களுடன் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் இருந்து கொழும்பில் வேலை வியாபார நிமித்தம் சென்று நிரந்தரமாக குடியேறியவர்களைக் குறிப்பிடலாம். இதனைவிட யுத்த சூழல் காரணமாக அங்கே சென்று குடியேறியவர்களையும் குறிப்பிடலாம். இவர்களின் அடையாள அட்டைகளில் வசிக்கும் முகவரி கொழும்பாக இருந்தாலும் பிறந்தது யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரஎலியா என இருக்கும். இதனால் சில பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. 

இவர்களின் தமிழ் பல பிரதேசத் தமிழ்களை கொண்டு ஒரு கதம்பமாகவே இருக்கும். அத்துடன் பல சிங்களச் சொற்களையும் சரளமாகப் பாவிப்பார்கள். இவர்களின் உச்சரிப்புகூட கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். பிரதேசங்களின் உச்சரிப்புகள் பற்றி தமிழறிவு அதிகம் கொண்ட ஒருவர் எழுதினால் பலருக்கும் உதவும். 

எனது வாழ்க்கையின் முதல் பகுதி காலம் யாழ்ப்பாணத்தில் கழிந்தது. அடுத்த பகுதி கொழும்பில் கழிந்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் யாழ்ப்பாண நினைவுகளும் சொற்களும் பெரும்பாலும் நினைவில் நிற்கின்றன. கொழும்புத் தமிழ் ஓரளவு விளங்கும். ஏதோ எனக்குத் தெரிந்தவை. ஏனைய நண்பர்கள் தமக்கு தெரிந்தவற்றை தெரியப்படுத்தவும்.

அந்தி ‍- பின்னேரம் அந்திக்கு வீட்டுக்கு வாறேன்

மறுவ ‍- பிறகு 

கதேய் ‍- விடயம் என்ன கதேய்

கேந்தி - கோபம் (சிங்களச் சொல்)

படு (சிங்களச் சொல்) - பெண்களையே குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதன் தமிழ் அர்த்தம் பொருட்கள். இதனைப் பாவிப்பது நாகரீகம் இல்லையென்பார்கள். 

ஐஸ்சுட்டி -அதனாலே பஸ் லேட் ஐஸ்சுட்டி நான் ஸ்கூலுக்கு லேட்டாப் போயிட்டேன்

வேல‌ - நேரத்திற்க்கு. வேல‌க்கு வாங்க எந்த லையா லாவா என்பது எனக்கு சந்தேகம்

அய்த்தானே - அதுதானே

மாற - நல்ல அழகான என்ற அர்த்தங்கள் வரும். நாடோடிகள் மாற படம். (சிங்களச் சொல் என நினைக்கிறேன்)

நோண்டி - ‍ அவமானப்படுதல். மச்சான் நேற்று கீழே விழுந்து மாற நோண்டி. எந்த மொழிச் சொல் என்பது தெரியாது.

பெரும்பாலும் இவர்களின் உச்சரிப்பு வித்தியாசமாகவே இருக்கும். பெரும்பாலான தமிழ்ச் சொற்கள் உச்சரிப்பு வித்தியாசத்தால் மருவி வழக்கில் இருக்கின்றன. ஓரளவு முயற்சி செய்திருக்கிறேன். பிழை இருந்தால் திருத்தவும். 

முக்கிய குறிப்பு : தமிழ்மொழி பேசும் இஸ்லாமியச் சகோதரர்களை நான் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவில்லை. கொழும்பு இஸ்லாமியர்களின் தமிழ் பெரும்பாலும் கொழும்புத் தமிழர்களின் தமிழ்போலவே இருக்கும்.
குல்லம் கொண்டுவா என்டுதான் சொல்லுவினம் சுளகு கொண்டுவா என்டு சொல்றேல்ல...

ஓமோம் வயலுக்க நிண்டால் அப்பிடிச் சொல்லமாட்டினம். எங்கட ஐயாவும் அப்பிடித்தான். அதமாதிரி நெல்லு அளக்கேக்கயும் முதலாவது கொத்தை ஒன்டு என்டு சொல்றேல்ல..லாபம் என்டுதான் சொல்லுவினம்.

?q=uggc%3A%2F%2Fvzt.qvanznyne.pbz%2Fqngn

நான் இன்டைக்கு வேலையால வாறன் அப்பம்மா சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கேக்குது...ஆரெண்டு பார்த்தால் என்ர ரீச்சர். அவா என்னட்ட வந்திருக்கிறா அவவை இருத்திவைச்சு நடக்குது அப்பம்மான்ர கச்சேரி.

ரீச்சர் உள்ளுக்க வந்து இருந்த உடனே முதல் கேள்வி கேட்டாவாம் "அப்ப பிள்ளை நீங்கள் எந்த ஊர்?"

ரீச்சர் குமிழமுனை என்டு சொல்லி வாய்மூடேல்ல கேட்டாவாம் நீங்கள் தங்கண்ணைன்ர மகளே என்டு...ரீச்சர் நல்லாப் பயந்திருப்பா இதென்னடா வந்த இடத்தில வம்பாப்போட்டென்டு.

அப்பம்மாக்கு 80 வயசாகப்போகுது ரீச்சருக்கு 50 வயசாகப்போகுது. நான் வீட்டுக்குள்ள வாறன் ஏதோ ஏதோ கதையெல்லாம் நடக்குது. ஏதோ குல்லம் புசல் கொம்பறை கொத்து மரக்கால் பச்சைக்குிறியன் அணில்குிறியன் என்றெல்லாம் புரியாத பாசைல நடக்குது கதை. சத்தியமா அவை கதைச்சதொண்டும் எனக்கு விளங்கேல்ல.

இடையில புகுந்து விளக்கம் கேக்கலாமெண்டால் இரண்டுபேரும் நிப்பாட்டுற மாதிரித் தெரியேல்ல. அப்பம்மா கேக்கிறா உங்கட வீட்டுக்கு நிலையம் பாத்து தந்தது எங்கட அவர்தானே.

சரி இதுக்குமேல பொறுக்கேலாது...நான் கேட்டிட்டன்.

நான்: நிலையம் பார்க்கிறதோ?? அப்பிடியென்டால் என்ன?

அப்பம்மா : தாத்தாதான் இவேன்ர வீட்டுக்கு கிணத்துக்கு எல்லாம் நிலையம் பார்த்துக்குடுத்தது. எந்த இடத்தில கிணறு தோண்டலாம்...வீட்டுக்கு வாசல் எங்க வைக்கலாம் இதுகள் எல்லாம் பார்த்துச் சொல்றது.

நான்: என்னத்த பார்த்துச் சொன்னவர்?

அப்பம்மா: இதுக்கு என்னத்த சொல்றது நான்? அவர் அதுகள் எல்லாம் படிச்சுத் தேர்ந்தவர். 
வைத்தியம் பார்க்கிறது...தொய்வு பார்க்கிறது என்டு அவர் எல்லாம் 
தெரிஞ்சவர். குமிழம்முனையில தாத்தான்ர படம் இல்லாத வீடில்லை.

நான்: கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ கொம்பறை கொறியன் என்டெல்லாம் சொன்னீங்கள்..அதெல்லாம் என்ன?

ரீச்சர் : வெப்பில் கொடி வெட்டிக்கொண்டு வந்து குடில் மாதிரிச் சுத்திக்கட்டிப்போட்டு மேல பச்சைமண் பூசி மெழுகுறது. அந்து பிடிக்காமல் இருக்க வேப்பக்கொட்டை கொண்டு வந்து போடுறது சுத்தவர. கொம்பறைக்குள்ள மூட்டைக்கணக்கில நெல்லைக்கொண்டுவந்து கொட்டி வைச்சால் அடுத்த வருசம் வரைக்கும் இருக்கும். சோத்துக்கும் எடுக்கிறது விதைக்கவும் எடுக்கிறது.

நான் : என்ன ரீச்சர் நீங்களும் அப்பம்மா மாதிரிக் கதைக்கிறீங்கள்...அந்து என்டால் என்ன.

ரீச்சர் : அப்பம்மாவைக் கண்டது ஊருக்குப்போனது போல இருக்கு. ஊர்ப்பக்கம் போய் 20 வருசமாகப்போது. மறந்துபோன சொல்லெல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டா. பச்சைக்குறியன் எல்லாம் சுத்தமா மறந்திட்டம். இந்தச்சொல்லெல்லாம் நடுகிலும் பாவிச்சனாங்கள்.

நான் : ஹி ஹி...அந்து..

ரீச்சர் : அந்து பிடிக்காமல் என்டால் பூச்சி பிடிக்காமல்

நான் : அப்ப பச்சைக்குறியன் எண்டால்...

?q=uggc%3A%2F%2F1.oc.oybtfcbg.pbz%2F_Dby

அப்பம்மா : நாலு சுண்டு நெல்லு = ஒரு கொத்து.
பத்து கொத்து = ஒரு மரக்கால்
28 கொத்து = ஒரு புசல்
பச்சைக்குறியான் என்றது பச்சைக்குறி போட்ட சாக்கு ; அதுக்குள்ள 3 புசல் போடலாம். போட்டு சணல் போட்டுத் தைக்கிறது.
அணில்குறியன் சாக்கில 78 கொத்துப் போடலாம்.

நான் : ஓ அப்ப உங்கட வயல்ல எத்தின கொத்து நெல்லு வரும்?

அப்பம்மா : என்ன எங்கட 2 வயல்லயும் சேர்த்தா 200-250 மூடைக்கு வரும்.

நான் : ஆஆஆஆஆ..அவ்வளவு நெல்லா? அப்ப நீங்கள் உங்களுக்கு கஸ்டம் அப்பா எல்லாம் சந்தைக்கு கச்சான் கொண்டுபோய் விக்கிறவர் என்றெல்லாம் சொன்னீங்கள்.

அப்பம்மா: பின்ன குடிமக்களுக்கு குடுக்க சாமான்கள் வேண்ட எண்டு குடுக்கிறது போக ...

ரீச்சர் : குடிமக்கள் என்றால் விளங்காது.

அப்பம்மா : அதான் மோனை தலைமயிர் வெட்ட வந்தால் எங்கட வீட்டில மட்டும் 10 பேர் அப்ப 2 மூடை நெல்லு குடுப்பம்.

நான் : 2 மூடை??? ஏன் அவ்வளவு.

அப்பம்மா : ஒரு வரியத்துக்கு 2 மூடை குடுக்கத்தானே வேணும்.

நான் : ஏதோ குல்லம் கொண்டுவாறதெண்டு சொன்னீங்கள்?? ஏன் வயலுக்க நிண்டு சுளகு என்டு சொல்லக்கூடாது? சொன்னால் என்ன நடக்கும்?

அப்பம்மா: அப்பிடிச் சொல்றேல்ல. சொன்னால் கூடாதாம். குல்லம் என்டுதான் சொல்றது.

நான்: அதான் ஏனென்டு கேக்கிறன்..சொன்னால் என்ன நடக்கும்.

அப்பம்மா: சொன்னால் விளைச்சலுக்குக் கூடாதாம். 

நான்: குல்லம் என்று சொல்றதுக்கும் சுளகு என்றதுக்கும் என்ன வித்தியாம்...2ம் சொல்லுத்தானே.

(பதில் வரேல்ல).

நான்: ம் அப்ப இப்ப எவ்வளவு காணியிருக்கு உங்களுக்கு??? இப்ப எங்க இருக்கு....

அப்பம்மா: ஒன்டுமில்லாமல் போச்சு.

மிச்ச கதை கேக்க ஆறுதலா வாறன் என்டிட்டு போட்டா ரீச்சர்.

வேலைகாரன் கம்பின்ர தலை கொக்கின்ர தலை போல இருக்குமாம். அதால வைக்கோலை தட்டிக்கொண்டு போறதாம். மிச்சமொன்டும் ஞாபகம் வரேல்ல...அடுத்த முறை அப்பம்மா கதைக்கேக்க றக்கோர்ட் பண்ணி வைக்கிறன்.

{ஈழமுற்றத்தில இது சினேகிதின்ர குதியம் குத்தல் வாரம் :) கவலைப்படாதயுங்கோ கொஞ்ச நாளைக்கு நான் எழுத மாட்டன்.}
 
 
Author: வி. ஜெ. சந்திரன்
•7:04 AM
ஈழத்து முத்ததிலை கன பேர் சேந்திருக்கிறியள், ஆனா ஒரு சிலர் தானே எழுதியிருக்கினம், மிச்ச ஆக்கள் என்ன செய்யினம்? என்ன நான் எங்கையிருந்தனானோ ? சரி சரி எனக்கு அடிக்கவரதையுங்கோ? சும்மா பகிடிக்கு கேட்டனான். 

இண்டைக்கு ஏதவது எழுதுவம் எண்டு வெளிக்கிட்டா என்ன எழுதுற எண்டு தெரியேல்லை. மணிமேகலை ஆச்சியிடை (ஆப்பு மார் எல்லாரும் அவவை ஆச்சி எண்டு சொன்னா, நான் ஆச்சி எண்டு சொல்லலாம் தானே) எழுதினதை வாசிச்சன் நல்ல வடிவா எழுதியிருக்கிறா. அவவின்ரை பதிவை வாசிச்சு கனபேர் தங்கடை அம்மம்மா மார் கதைக்கிற மாரி கிடக்காம் எண்டு சொல்லினம். எனக்கு அப்பா வழி ஆச்சி (அப்பம்மா), அப்பு (அப்பப்பா) வோடை கதைக்கிற சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அம்மா வழி அப்புவும் அம்மா சின்னனா இருக்கேக்கையே செத்துபோனார். அம்மா வழி ஆச்சியும் எனக்கு ஒரு எழெட்டு வயது இருக்கேக்கை போய் சேந்திட்ட. அதாலை அவவோடை கதைச்சதுகள் கூட எனக்கு பெரிசா நினைவில்லை. ஒரு சில சொல்லுகளை தவிர மிச்சமேல்லாம் மறந்துபோச்சு. ஆனா அவவிடை சுருங்கின தோலிலை அடிக்கடி நுள்ளியும், இழுத்தும் அவாவுக்கு ஆக்கினை குடுத்தது ஞாபகம் இருக்கு.

ஆச்சி அந்த மாரி அப்பஞ்சுடுவாவாம், அதுவும் தணல் சட்டியெல்லாம் மேல வச்சு. உங்களுக்கு அந்த கதையள் தெரியுமோ தணல் சட்டி வச்சு அப்பஞ்சுடுறது? நான் ஒரு நாளும் பாக்கேல்லை. நாட்டைவிட்டு வெளிக்கிட்டாப்பிறகு அண்ணைவீட்ட போகேக்கை அண்ணா தான் சொன்னார் ஆச்சி அவைக்கு தணல் சட்டிவச்சு அப்பஞ்சுட்டு குடுத்தவவாம். எனக்கு குடுப்பினைஇல்லை அதை பக்கவும், சாப்பிடவும். அதவிட கத்தரிக்கை பழப்புளி கறி, பாவக்காய் கறியெல்லாம் திறமாய் சமைப்ப எண்டும் அண்ணை சொல்லுவார்.

உந்த பழங்கதையளை விடுவம். பேச்சு வழக்கு பற்றி சொல்லுறதெண்டா கொஞ்சம் கரைச்சல் தான்.

உதாரணமா

இரண்டு நண்பர்கள் கதைக்கேக்க, கன நாள் காணாத நண்பனை கண்டால்

டேய், எங்கையடா இவவளவு நாளும் ஆளை காணகிடைக்கேல்லை எனும் போது வரும் டேய், அடா போன்றவை நட்பின் நெருக்கதை குறித்தாலும்,
ஒருவரை மரியதை குறைவாக விழிக்கவும் இதே போல பயன்படுத்தாலாம். சரி இதிலை என்ன புதினம் கிடக்கு எண்டு கேக்கிறியளோ. இஞ்சை என்ரை ஆங்கிலத்தை தாய் மொழியா கொண்ட நண்பனுக்கு ஒரு நாள் கதைகேக்க, டேய், அடா போட்டு ஆரும் சொன்னா அது மரியாதையில்லாத முறை எண்டு சொல்லிபோட்டன். பிறகொரு நாள் செல்பேசிலை எனரை இன்னொரு நண்பனோட கதைகேக்க டேய், டா க்களை கண்ட படி பாவிச்சு கதைச்சா, பக்கத்திலையிருந்து கேட்டு கொண்டிருந்திட்டு கேட்டான் ஆரோடை சண்டை பிடிச்சனி எண்டு. 

உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே நாங்கள் வயது கூடின ஆக்களை பெயரெல்லாம் சொல்லி கூப்பிடுறேல்லை, அதப்போலை அவன், போனான், வந்தான் எண்டு கதைக்க மாட்டம். அது 4 - 5 வயது கூடின அண்ணையாக கூட இருக்கலாம். 

அண்ணை எங்க போன்னீங்கள் எண்டு தான் கேக்கிறது வழக்கம். எங்க போன்னீர் எண்டோ இல்லாட்டி எங்க போன்னீ எண்டோ கேக்க மாட்டம். அப்பிடி கதைச்ச கூட இருக்கிற ஆக்காளே சில நேரம் பகிடி பண்ணுவினம். என்ன உப்பிடி கதைக்கிறாய் எண்டு. நான் என்ரை அண்ணையோட போன்னீர், வந்தனீர், செய்தனீர் எண்டு தான் கதைக்கிறனான். அதை பாத்திட்டு என்ரை கூட்டாளிமார் நக்கலடிப்பாங்கள் உன்ரை அண்ணேன்ரை வயதென்ன, உன்ரை வயதென்ன (அண்ணைக்கும் எனக்கும் 16 வயது வித்தியாசம்), அண்ணையை மரியாதையில்லாம கூப்பிடிறாய் எண்டு. 

ஒவ்வோரு ஊர்ப் பேச்சு வழக்கிலை ஒரு பொது வடிவம் இருந்தாலும், ஒரு கோடு கீறி இது இப்பிடிதான் எண்டு சொல்லுறது சரியான கசிட்டம் பாருங்கோ. பேச்சு வழக்கு எண்டிறது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்தப் போலை மாறும்.

சரி சரி கனக்க எழுதி பதிவை இழுத்துகொண்டு போகாம எனக்கு இப்ப ஞாபகம் வந்த சில வித்தியசமான சொல்லுகளை கீழ சொல்லுறன்.





1. இல்லுபோலை/ எல்லுபோலை: இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும். 

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு - இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை. 

6. அரக்கி (வினை சொல்லாய்??): ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது, 

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்
8. ஏதனம்: சமையல் பாத்திரங்கள்


சரி மிச்சம் பிறகு சொல்லுறன்.

அப்ப வரட்டே....
 
 
19.06.09 வெள்ளிக் கிழமை இண்டைக்கு. ஈழத்து முற்றக்காரர் எல்லாரும் இண்டைக்கு எனக்குச் சொந்தமாப் போச்சினம்.சொந்த பந்தம் எண்டு இருக்கிறது எவ்வளவு சந்தோஷம்!இண்டைக்கு அவை எல்லாரும் என்னட்ட வந்தாலும் வருவினம்.நான் அவைய வரவேற்கத்தானே வேணும். 

அதால இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைச்சு,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ஞ்சு தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தில கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெத்தீல கையில மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி றோட்டில எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிற நித்திய கல்யாணிச் செடியள் பூத்திருக்கிறதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்ரை பைக்குள் அதுகளப்போட்டுக் கொண்டு அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் இப்ப பள்ளிக் கூடம் போகத் தொடங்கி விட்டுதுகள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னி திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாப் போறது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட ஐயாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை. 

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு அம்மா வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத்
தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

ஐயாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வளவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே!நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்வி மாட்டுக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு அம்மா அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்வி குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கண்டுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து,மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வளவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.) 

ஏனைய பிரதேசங்களின் காலை, மாலை நேரங்களையும் ஆண்களின், பெண்களின் சிறுவர்களின் வாழ்க்கை முறைகள், எண்ணப் பாங்குகள் பற்றியும் அறிய ஆவல். இது முன்பொரு முறை என் பதிவொன்றில் எழுதப் பட்டது தான். சிறு மாற்றங்களோடு அறிமுகப் பதிவாக இங்கு இடப் படுகிறது.
 
 
Author: கலை
•2:10 PM
ஒருநாள்..................

நான்: அம்மாட்ட எனக்கு நாளைக்கு phone பண்ணச் சொல்லி சொன்னன். அவசொன்னா, அவவுக்கு நேரமில்லையாம்.

அடுத்தவர்: என்ன அவவா??????

...................................................................................

இன்னொருநாள்

நான்: மாமி விட்டுக்கு போகவேணும். அவ நெடுக என்னை வரச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறா.

அடுத்தவர்: என்ன அவவா?

........................................................

என்ன, ஏதாவது புரியுதா? யாழில் (அல்லது ஈழம் முழுமையிலுமா என்று சரியாகத் தெரியவில்லை) அவ, இவ என்பது மரியாதையாகவே சொல்லப்படும் சொற்கள்தான். ஆனால் வேற்றிடத்தினருக்கு, இதைக் கேட்கும்போது, என்ன இவர்கள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் ‘அவ (அவள்)', ‘இவ (இவள்) என்றெல்லாம் சொல்கிறார்கள் என்று தொன்றுகிறது. இந்தியாவில் ‘அவங்க', ‘இவங்க' என்னும் சொற்களுக்கு சமமான சொற்கள்தான் இவை என்பதை விளக்க வேண்டி வருகிறது. எங்களுக்கு அவ என்று சொல்வதற்கும், அவள் என்று சொல்வதற்கும் வேறுபாடு இருப்பதை புரிய வைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. காதலன் படத்தில் வடிவேல் ‘எவ அவ' என்று கேட்டது வேறு நினைவுக்கு வருகிறது.

சிலர் இந்த அவ என்னும் சொல்லை அவா என்றும் உச்சரிப்பதுண்டு.

வேறும் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சொல்லுங்கோ.
 
 
Author: சினேகிதி
•6:40 AM
?q=uggc%3A%2F%2F3.oc.oybtfcbg.pbz%2F_Rmy


லான்ட்மாஸ்ரர் என்றால் என்னென்டு தெரியாதோ???லான்ட்ஐ மாஸ்ரர் பண்றதுதான் லான்ட்மாஸ்ரர் :-))

விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). ரக்ரரால உழுறது போல இதாலயும் உழுறவை. அந்த உழுவை இயந்திரத்துக்குப் பின்னால ஒரு பெரிய பெட்டியிருக்கு அதில ஒரு 10-15 ஆக்கள் பயணம் செய்யலாம். அநேகமாக கோயில் போன்ற கொஞ்சம் தூரப் பயணங்களுக்குப் போறாக்கள் லான்மாஸ்ரரில் போறவை. 

நான் வல்லிபுரக்கோயிலுக்கும் செல்வச்சந்நிதி கோயிலுக்கும் லான்மாஸ்ரரில் போயிருக்கிறன். அம்மம்மான்ர வீடு றோட்டுக்கரைல இருக்கு அங்கால முழுவதும் எங்கட தோட்டம்....வல்லிபுரத் திருவிழா நேரம் அந்த றோட்டுக்கரைல நிண்டால் யார் யார் கோயிலுக்குப் பொங்க போயினம் என்டு தெரியும். பெரிய அண்டா, குண்டா, அகப்பை, பாய் மிச்ச தட்டு முட்டுச் சாமான் எல்லாத்தையும் நடுவில வைச்சிட்டு கரைத்தட்டில நிறையப்பேரிருந்து போவினம் கோயிலுக்கு.

லான்மாஸ்ரரில் கனதூரம் போகேலாது பேய் நோ நோகும். ஆனால் குடும்பமாப் பொங்கப் போறவை அப்பிடித்தான் போறவை. காத்துக்கு விழுந்திடுவம் என்று அநேகமா சின்னப்பிள்ளையளை தட்டில இருக்க விட மாட்டினம். நடுவில வயசுபோனாக்கள் காலை நீட்டி கஞ்சி வடிச்சுக்கொண்டிருப்பினம் அவையளோட இருக்கேலாது தட்டிலயும் இருக்கேலாது சில சின்னப்பிள்ளையள் அழுது அடம்பிடிச்சு டிரைவர் பக்கமா இருக்கிற கரைத்தட்டில இடம்பிடிச்சிடுவினம்...அதில பிடிமாதிரி ஒன்டு இருக்கு அதைப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் விழமாட்டம் என்டு பெருசுகளைச் சமாளிக்கலாம். கோயிலால வரேக்க பானை எல்லாம் கரி பிடிச்சு இருக்கும் அப்ப இன்னும் இடம் காணாமல் போகும் அப்பவும் பாதிக்கப்படுறது சின்னப்பிள்ளையள்தான்.கொடுமை கொடுமை.

?q=uggc%3A%2F%2F1.oc.oybtfcbg.pbz%2F_Rmy
உண்மைாய இந்த வாகனம் விவசாயம் செய்யிறாக்கள் வெங்காயம் , புகையிலை ஏற்றி இறக்கப் பயன்படுத்தும் நோக்கில வாங்குவினம் பிறகு அது கோயிலுக்கும் இடம்பெயர்ந்து போறதுக்கும் பாம்பு கடிச்சாக்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவும் பயன்ட்டுக்கொண்டிருக்கும். வாடகை லான்மாஸ்ரர்களில் அழகான ஓவியங்கள் எல்லாம் கீறி நல்ல கலர்புல்ல வச்சிருப்பினம்.

லான்மாஸ்ரரும் மண்ணெண்ணெயிலதான் ஒடுறதென்று நினைக்கிறன்.
 
 
வட்டார வழக்குகள் எனும் போது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணம் அல்லாத தமிழர்களின் பேச்சு வழக்கில் இருந்து வேறுப்பட்டாலும், அவை “அமெரிக்கன் செலாங்”, “பிரிட்டிசு செலாங்” போன்றதான ஒரு வழக்காகவே பார்க்கலாம்.

இருப்பினும் சொற்களை உச்சரிப்பதில், யாழ்ப்பாணத் தமிழரின் ஒலிப்பு மிகவும் துல்லியமானது.

எடுத்துக்காட்டு:

“தேங்காய்” எனும் சொல்லை எடுத்துக்கொண்டோமானால், இந்த “தேங்காய்” எனும் சொல்லை நாம் உச்சரிக்கும் பொழுது, தேங்-காய் என்பதனை துல்லியமாகவே உச்சரிக்கின்றோம். இச்சொல்லின் கடைசி எழுத்தான “ய்” மௌனமாக ஒலிக்கப்பட்டாலும், இவ்வுச்சரிப்பை அவதானித்தால் “தேங்” என்பதுடன் “காய்” என்பதும் மிகத் துல்லியமாக ஒலிக்கப்படும்.

இவ்வாறு வேறு சில சொற்கள்:

புடலங்கா(ய்)
மாங்கா(ய்)
கத்தரிக்கா(ய்)
பூசணிக்கா(ய்)

அதேவேளை கொழும்பு தமிழர், தமிழகத் தமிழர் உச்சரிக்கும் பொழுது இந்த “தேங்காய்” என்பதில் “காய்” என்பது சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. தேங்-காயீ என்பது போன்று சிலரும், தேங்-கா என்பது போன்று "ய்" ஒலிப்பின்றிய சிலரும் உச்சரிக்கின்றனர். 

இதில் கத்தரிக்கா(ய்), பூசணிக்கா(ய்) போன்றச் சொற்களை, கத்தரிக்கா, பூசணிக்கா என சின்னக்கா, பெரியக்கா போன்றும் உச்சரிக்கின்றனர்.

இங்கே "காய்" அக்கா ஆகிவிடுகின்றது.

உயிர் – மெய்

யாழ்ப்பாணத் தமிழர் பேசும் பொழுது சொற்களை மிகவும் கடினப்பட்டு ஒலிப்பதாக என்னுடன் சிலர் வாதிட்டனர். உண்மையில் யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் சொற்களை உச்சரிக்கும் போது அதில் உயிர் மெய் எழுத்துக்கள் திருத்தமாகவும் துல்லியமாகவும் உச்சரிக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:

மலர் – இதில் “ம்” எனும் மெய் எழுத்தும் “அ” எனும் உயிர் எழுத்தும் துல்லியமாக உச்சரிக்கப்படும்.

ம்+அ+ல்+அ+ர் = மலர்

இவ்வாறான துல்லியமான ஒலிப்புக்களையே மற்றோர்கள் கடினத்துடன் உச்சரிக்கப்படுவதாகக் நினைக்கின்றனர். அதேவேளை மற்றோரின் உச்சரிப்புக்களில் உயிர்-மெய் எழுத்துக்கள் துல்லியமாக ஒலிக்கப்படாமல், மேலெழுந்த வாரியாக உச்சரிக்கப்படுகின்றது. இன்னும் சிலரோ மலரு.. என்றும் உச்சரிக்கின்றனர்.

இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கோவன்.

அன்புடன் 
மொழிவளன்
 
 
இலங்கையில் பொதுவாக அனைத்து மக்களிடமும் பாவனையிலிருக்குமொரு சொல் குசினி. எல்லோருடைய வீடுகளிலும் இருக்குமிது அனேகமாகப் பெண்கள் தங்கள் காலங்களை அதிகம் செலவழிக்கும் இடமாகவும் இருக்கிறது.

போர்த்துக்கேய மொழியிலிருந்து வரப்பெற்ற இச் சொல் சமையலறையைக் குறிக்கிறது. இந்தியா, தமிழ்நாட்டில் இச் சொல்லின் பரவல் அவ்வளவாக இருக்காது என நினைக்கிறேன். எனது சிறுகதையொன்றுக்கு வந்த பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல் கருத்துக்களிலும் 'குசினி' என்றால் என்னவென்று கேட்டுவந்தவை அனேகம்.

சமையலறை , சிங்கள மொழியில் 'குஸ்ஸிய' என அழைக்கப்படுகிறது. அச் சொல்லிலிருந்து மருவித்தான் 'குசினி' எனும் சொல் வந்தது எனச் சொல்லப்பட்டாலும் கூட, இச் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்தே இலங்கைக்கு வந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் வட்டாரத்தில் 'குசினி' எனும் சொல்லோடு, 'அடுப்படி' எனும் சொல்லும் பரவலாகப் பாவிக்கப்படுகிறது. பண்டைய வீடுகளிலும், இன்னும் சில கிராமத்து வீடுகளிலும் , இச் சமையலறையானது வீடுகளின் பின்புறத்தில் , வீட்டை விட்டும் தனியாகக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அன்றைய காலத்தில் விறகுச் சமையலால் எழும் புகை வீட்டுக்குள் பரவாமல் இருப்பதற்காகவும், சமையற்காரர்கள் எளிதாக வந்துபோகும் படியாகவும் இப்படி அமைக்கப்பட்டிருந்ததென நினைக்கிறேன்.
 
 
" மீன்பாடும் தேன் நாட்டின் மட்டு வாவி கரையினிலே ஆடவர் தோளிலும் கா.. அரிவையர் நாவிலும் கா.." ஈழத்துக் கலைஞர் யாழ்ப்பாணம் விரமணிஐயருடன் உரையாடும் சந்தர்ப்பங்களில், ஈழத்தின் கிழக்குக்கரைபற்றிய பேச்சு வரும்போதேல்லாம் அவர் சொல்லி இரசிக்கும் வரிகளவை. அந்த வரிகளின் சொந்தக்காறரும் அநேகமாக அவராகவே இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

ஈழத்து முற்றத்தில் உரையாட அழைத்தபோதே, வடக்கின் பேச்சுக்களைப் பதிவு செய்ய பலர் இருக்கின்றார்கள். ஆகவே கிழக்கின் மொழியைப் பதிவு செய்ய எண்ணியிருந்தேன். முன்னைய பதிவொன்றில் மணிமேகலை என்ற சகோதரியும் இதே கருத்தைப் பின்னூட்டத்தில்
காலாகாலமாக ஈழத்து வரலாற்றில் ஈழத் தமிழர் என்றால் யாழ்ப்பாணத்தவர் என்றும் ஈழத் தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் என்றும் ஒரு பரவலான எண்ணப் பாங்கு வளர்ந்திருக்கிறது.
அதன் தவறு யாராலும் சுட்டிக் காட்டப் படவில்லை.
இனியேனும் நாம் அந்தத் தவறுகளை விடாமல் மற்றவர்களையும் (மட்டக் களப்பு,திருகோணமலை,மலையகம்)சேர்த்து கொண்டு போக வேண்டிய கடமை நம்மெல்லோருக்கும் உண்டு.
நம் கடந்த கால வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடங்களைப் படிக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
அப்போது தான் நாம் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம்.
இது என் அறிவுரையல்ல; ஒரு ஆதங்கம் அவ்வளவு தான்.
 எனத் தெரிவித்திருந்தார். சகோதரி உங்கள் விருப்பமும் இணைந்ததே இவ்விடுகை.
என் வளர்விலும் வாழ்விலும் நிறைந்த அந்த மக்களின் மொழியில் அவர்களின் மனந்தெரியும்.

கிழக்கு மக்களின் பேச்சு மொழியில் அதிலும், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேச மக்களின் பேச்சில் 'கா' எனும் ஒலி நயம் கலந்திருக்கும். அதிலம் அங்குள்ள பெண்கள் அதை மிக லாவகமாக பேச்சு மொழியில் சேர்ப்பார்கள்.
" ஏங்கா மறுகா போவிகளா..?" ( ஏனக்கா மறுபடியும் போவீர்களா )
"இல்லை மக்கா..இன்னிக்கு போறதிக்கு இல்லக்கா.." (இல்லை மக்களே இன்று போவதிற்கில்லை)
" சொன்னாக்கா கேக்கனும் மக்கா.." (சொன்னால் கேட்கணும் மக்களே)
இப்படி பேச்சு வழக்கில் சரளமாக கா வந்து சேரும்.
இந்தப் பெண்களின் பேச்சில் கலந்திருக்கும் மற்றுமொரு சொல்
"கிளி". இது அவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு மொழியடையாளம்.
"ஏன்ங்கிளி..?" " இல்ல கிளி" இது ஆண், பெண் வித்தியாசமில்லாது, இளையவர்களை அழைக்கும் போது சேர்த்துக் கொள்வார்கள். இந்த வகையில் " ஏன் மக.."" என்ன மகா" என்பதையும் சேர்க்கலாம்.
பெண்கள் இதனை சரளமாகப் பேசுவார்கள் எனினும், ஆண்களின் உரையாடலிலும் அப்படியே கலந்திருக்கும். மிகச்சிறந்த ஊடகவியலாளனாக அறியப்பட்ட தராக்கி சிவராம் அப்படிப் பேசுபவர்களில் ஒருவர். மிக அழகாகவும், இயல்பாகவும், இந்த மொழிநடையில் அவர் பேசுவார்.
"ஆளே!.. என்னாளே..?" (என்னடாப்பா என்பது போல்)
"ஓண்டாப்பா" ( ஓமடாப்பா என்பது போல)

அது சரி தொடக்கத்தில் சொன்னபடி அரிவையர் நாவில் கா வருவது புரிகிறது, அதென்ன ஆடவர் தோளில் கா என்கிறீர்கள் அப்படித்தானே..?
முன்னைய நாட்களில் மட்டக்களப்புப் பகுதியில் சில்லறை வியாபரிகள், மீனவர்கள், தங்களுடை பொருட்களை, நீளமான கயிறுகளில் இணைக்கப்பட்ட கூடைகளில் வைத்து , கயிற்றின் நுணியை நீளமான தடிக்கம்புகளில் கோர்த்த பின் தடிகளைத் தோளில் சுமந்து செல்வார்கள். தூக்குபவரின் முன்னும் பின்னும் பொருட்கள் கூடைகளில் தூக்கிச் சொல்லப்படும். அந்தத் தூக்குத்தடியை ' கா ' என்று அழைப்பார்கள்.

அதுவே ஆடவர் தோளில் கா, அரிவையர் நாவில் கா

மக்கா மறுவாட்டி பாப்பம்...
 
 
பஞ்சியாக்கிடக்கெண்டா, இங்க எழுதிறதுக்கில்லை அந்தப் பஞ்சி :). அந்தச் சொல்லையும் இந்த முற்றத்தில இணைத்து வைக்கலாமேயெண்டுதான். ஏனெண்டால், நான் அடிக்கடி இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' அல்லது ‘பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்லேக்கை (அதுக்காக நான் எப்பவுமே பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்கிறன் எண்டு நினைக்காதையுங்கோ), இந்த வார்த்தையை விளக்கவேண்டி வந்திருக்கு.

”பஞ்சியாக்கிடக்கா? அது என்னது?” எண்டு கேக்கக்கூடிய இடத்திலதான் நானும் ஆரம்பத்தில வளர்ந்தது. பிறகு அந்த சொல் பரிச்சயத்தில வந்ததும், எனக்கு பிடித்திருந்ததால, அடிக்கடி சொல்லத் தொடங்கியிட்டன். 'அலுப்பாயிருக்கு' எண்ட சொல்லும் இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' எண்ட சொல்லின்ரை தம்பிதான் எண்டு நினைக்கிறன்.

மொத்தத்தில, எதையும் செய்ய விருப்பமில்லாமல் சோர்ந்து போயிருக்கிறன் என்பதை இப்படிச் சொல்லலாம்.

பி.கு. : நான் மட்டும் பஞ்சிப் பட்டது காணாதெண்டு, இந்தச் சொல்லையே தெரியாமல் இருந்த சிலரையும்கூட (இந்தியத் தமிழர்கள்), 'பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்ல வைச்சிட்டன் எண்டால் பாருங்கோவன் :).
 
 
Author: மொழிவளன்
•5:49 AM
இது அநேகமாக பெடியலிண்ர பேச்சு வழக்கிலேயே அதிகம் என நினைக்கின்றேன்.

மணிக்காய்

குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய்
 
கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன்
 
மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த
 
இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.
 
அப்பு
 
“அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

அப்பு ஆச்சியர் வாழ்ந்தப் பூமி இந்தப் பூமி தானடா!

ஒரு தாயகப் பாடலின் வரிகள். (நினைக்கும் போது நெஞ்சில் வலி பிறக்கிறது.)

மீண்டும் அடுத்தப் பதிவில்

அன்புடன் மொழிவளன் ஹொங்கொங்கிலிருந்து
 
 
Author: தமிழன்-கறுப்பி...
•1:50 AM
எந்த மொழியாயிருந்தாலும் அதனை அந்தஊர் பெண்கள் பேசிக்கேட்கும் பொழுதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது அதுவும் வயதுப்பெண்களிடமிருந்து கேட்கும் பொழுதில் அந்த மொழிக்கு ஒரு தனித்தன்மை வந்து விடுகிறது. உதட்டசைவுகளும், உடல் மொழியும் அவளவளுக்கே உரிய தனி இயல்புகளோடும் பேசக்கேட்கையில் அது ஒரு தனி பரவசம் தருகிற நிகழ்வு. இப்படி நான் கேட்க விரும்பியிருக்கிற மொழிகள் தற்போதைக்கு அரேபியப்பெண்களின் ஹபீபிக்கள், கேரளத்துப்பெண்களின் திறக்கப்டாத உதடுகளினுடு வருகிற வார்ததைகள், கறுப்பு நிற தேவதைகளிடமிருந்து தமிழ், பதின்மங்களில் இருக்கிற குரல்களினூடு சிங்களம் சாதாரணமாய் பேசும் பொழுதே பெண்கள் மொழியை இயல்பாக அழகுசெய்கிறார்கள்.இப்படி இருக்க நெருக்கம் நிறைந்த பெண்மையின் அழைப்புகள் எப்படி இருக்கும்?! அப்படி ஒரு பரவசம் மிகுகிற வார்த்தைதான் இஞ்சையப்பா இந்த இஞ்சையப்பா(அல்லது இதனுடைய பொருள் தருகிற மற்றய வார்த்தைகள்) என்கிற வார்த்தையை கேட்காத யாழ்ப்பாணத்து ஆண்கள் யாராவது இருந்தால் இவர்களுடைய வாழ்க்கை இளம்பெண்களால் சபிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

அவள் என்னை எப்பொழுது அப்படி அழைக்கத்தொடங்கினாள் என்பது தெரியாது ஆனால் அது அவள் என் மீது வைத்திருந்த பிரியங்களின் நம்பிக்கையின் அளவீடாக எனக்கு தோன்றியது அவளோடு ஊரில் இருக்கும் வரையும இந்த வார்த்தைகளை நான் கவனித்ததே இல்லை. கடல் கடந்து வந்த பிறகு ஒரு அடைமழை நாளின் பின்னேரமொன்றில் அவள் என்னை அப்படி அழைத்த பொழுது சிலிர்த்துப்போயிருந்தேன் அதற்கு பிறகு அவள் என்னை அழைக்கும் பொழுதில் அவளோடு முழுவதுமாய் வாழ்ந்ததுபோலவும் அந்த நெருக்கத்தை புதுப்பிப்பது போலவும் உணரத்தொடங்கினேன்.. பிரிவறிவித்த பொழுதுகளில் கூட அவளால் இந்த வார்ததைகளை உச்சரிக்காமல் பேச முடியவில்லை அந்தளவுக்கு ஜீவ நெருக்கம் நிறைந்த உறவாக அவளெனக்கு இருந்தாள்.

எனக்கும் அவளுக்கும் இடையில் அவள் என்னை அப்பா என்ற விழிப்புகளோடு எப்பொழுது அழைக்கத்தொடங்கினாள் என்பது தீர்மானமாக தெரியவில்லை அனால் அவள் அப்படி அதிகம் விழிப்பது தொலைபேசியில் அவளோடு பேசும் பொழுதுகளிலென்றுதான் நினைக்கிறேன் அதற்கு நானும் அவளும் தொலைபேசியில்தான் அதிகம் பேசியிருப்பது ஒரு காரணமாயிருக்கலாம்.மற்றும்படி நேரில் சந்திக்கிற பொழுதுகளில் பெரும்பாலும் பேசுவதில்லை என்பது வேறுகதை.சுருக்கமாக சொல்லப்போனல் பேசிக்கொண்டடிருக்கும் பொழுதில் அது தெரியாவிட்டாலும் இஞ்சையப்பா என்று ஒரு தேவதை அழைக்கிற தருணங்கள் அந்த அழைப்புக்குரியவன் வாழ்கிற பொழுதுகள். நினைவுகளை அசைபோடுகிற தனிமைகளில் தெரியும் அந்த நெருக்கம் நிறைந்த வார்ர்ததைகளின் சுகம்! அது அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

காதலர்களுக்கிடையில் கூட பெண்கள் இயல்பாகவே இப்படி அழைக்கத்தொடங்கி விடுவார்கள் அது அவர்களுக்கிடையில் இருக்கிற நம்பிக்கை மற்றும் நெருக்கத்தை குறித்து வெளிப்படும் என்பது என்னுடைய எண்ணம் மற்றும்படி அனேகம் காதலர்களுக்கிடையில் இது இருக்கும் ஆகக்குறைந்து அவர்கள் இரண்டு பேருக்குமான பொழுதுகளிலாவது கட்டாயமாய் இருக்கும். இது யாழ்ப்பாணத்தில் கணவனை அழைக்கும் வழக்கமாக அன்று தொட்டு இருந்த வருவதில் இருக்கிற அனிச்சையான இயல்பு என்று நினைக்கிறேன்.இந்த இஞ்சையப்பா என்கிற வார்ததை கொடுக்கிற பொருள் அழைக்கிற தொனியிலும் சத்தத்தின் அளவிலும் கூடவே அந்த நேரத்திற்கும் உடல் மொழிக்கும் உரியதாக அமையும் அதை சரியாக கண்டு கொள்வது ஆண்களின் பொறுப்பு.

'இஞ்சருங்கோ' என்பது தற்பொழுது வழக்கத்திலிருந்த குறைந்து விட்டதென்பது நான் அந்த அழைப்புகளை கேட்டது குறைவென்பதிலிருந்து கண்டு கொண்டது. அதன் மருவு வழக்குகளாக இஞ்சையப்பா இஞ்சையுங்கோ போன்றவை இருக்கிறது. இஞ்சருங்கோ என்று பாவிக்கிறவர்கள் முந்தைய தலை முறையினர்தான், உதாரணமாய அப்துல்ஹமீத் யாழ்ப்பாணம் பார்த்தபொழுதில்(தெனாலி) இருந்த யாழ்ப்பாணத்து தலை முறையினர்தான் இப்பொழுது கணவனை இப்படி அழைக்கிறவர்களுக்கு குறைந்தது நாற்பது வயதிருக்கலாம் இது என்னுடைய கருத்து மட்டுமே! மற்றபடி நீங்கள் அப்படி அழைக்கக்கூடாதென்றெல்லாம் நான் சொல்லவில்லை அது உங்களிருவரையும் பொறுத்தது. எனக்கெல்லாம் அவள் சிணுங்கலாய் இஞ்சையங்கோ (இஞ்சையப்பா)என்கையில் செத்துவிடலாம் போலிருக்கும்.


இப்பொழுதிலிருக்கிற தலைமுறை என்னங்கோ அல்லது அப்பா அல்லது இஞ்சையப்பா என்றுதான் அதிகம் பயன் படுத்துவதாய் என்னளவிலான அனுபவம் இருக்கிறது அந்தந்த ஊர் வழக்கத்தின் படிதான் இந்த வார்த்தைகளின் தொனி இருக்கும்.யார் பயன் படுத்துகிறார்களோ இல்லையோ எனக்கந்த மொழி நிறையப்பிடிக்கிறது.பெயர் சொல்லி அழைக்கிற தருணங்கள் போலவே நம்பிக்கைகளோடு நெருக்கத்தின் உறுதியல் தானாக வெளிப்படுகிற இந்த வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் அதற்கதற்குரிய வேளையில் அதற்கதற்குரிய தொனிகளில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மிக விருப்பமாக பல நாட்களாக எழுத வேண்டுமென நினைத்திருந்த ஒரு விசயம் இப்பொழுதெல்லாம் என்னை எந்த தேவதையும் அப்படி அழைப்பதில்லை என்கிற உணர்வுகள் குறுக்கிடுவதில் மழுமையில்லாமல் வந்திருக்கிறது,பார்க்கலாம் இந்த பதிவையே இன்னொரு பொழுதில் என்னால் வேறுமாதிரியாக எழுத முடியும் எனறு நம்புகிறேன்.இப்போதைக்கு மிகுதியை பின்னூட்டங்களில் பார்த்துக்கொள்ளலாம்.


நன்றி!
 
 
Author: மொழிவளன்
•8:03 AM
?q=uggc%3A%2F%2F3.oc.oybtfcbg.pbz%2F_Vyy
சொல்லில் அருஞ்சுவை அள்ளித்தரும் சுரங்கம் தமிழ் மொழியாகும். அதனால் தான் தமிழுக்கும் அமுதென்று பெயர் எனப் பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தமிழ் பல கிளை மொழிகளை உடையது. அதில் யாழ்ப்பாணத் தமிழ் சிறப்பானதாகும். அதற்குப் பல தனிச்சிறப்புக்கள் உள்ளன.

படைப்பிலக்கியங்கள் மொழி வளர்ச்சிக்கு ஆதாரமாகவுள்ளன. சிறுகதைகள், நாவல்கள் என்பன பிரதேச பேச்சு வழக்கை பிரதிபலிப்பனவாக உள்ளன. யாழ்ப்பாண மக்களின் பேச்சுத் தமிழ் அந்தப் பிரதேசப் படைப்பாளர்களால் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

ஆரம்பகால ஈழத்து சிறுகதைகள் எழுத்து தமிழிலும், இந்தியப் பேச்சு வழக்கிலும் எழுதப்பட்டன. இதற்கு காரணம் அக்காலத்து எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை கூடுதலாக தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதினர். பின்னர் இந்தப் போக்கில் மாற்றம்ஏற்பட்டது. சிறுகதையோ, நாவலோ உயிர்த்துடிப்புடன் அமைய வேண்டுமானால் பேச்சு மொழியில் எழுதப்பட வேண்டும். அதில் வரும் உரையாடல்கள் கதை இடம்பெறும் களத்தின் பேச்சு மொழியில் இருப்பது அந்தப் படைப்புக்கு சிறப்புச் சேர்ப்பதாக அமையும்.

ஈழத்தில் மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களின் படைப்புக்களில் பிரதேச பேச்சு மொழி கையாளப்பட்டிருப்பதை காண முடியும். இவர்களே முதலில் பிரதேச பேச்சு மொழியை தமது சிறுகதைகளில் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஈழத்து சிறுகதைகள் பலவற்றில் யாழ்ப்பாணத் தமிழ் கையாளப்பட்டிருக்கிறது.

எஸ். பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ சிறுகதையில் வரும் உரையாடல் இவ்வாறு அமைகிறது.

“என்ன அப்பு இண்டைக்கு காலமைக் கோச்சியிலை மூத்தண்ணர் வருவாரெல்லே?”

“எப்படியும் அவன் வருவான். காதுப்பிடியிலை கமலா கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற்குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத் துவங்கினாலும், நேரத்தோடை ஸ்ரேசனுக்குப் போயிடலாம். ஆனா அவனுக்கு உதொண்டும் புடிக்கிறேல்லை. நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத் தேவையில்லை எண்டு, எத்தினை கோசு கோவிச்சது எனக்கெல்லோ தெரியும்”

தமிழகத்திலே புகை வண்டி எனச் சொல்லப்படுவது, எமது நாட்டில் புகையிரத வண்டி என அழைக்கப்பட்டாலும், பேசும் போது அவ்வாறு சொல்வதில்லை. யாழப்பாண மாவட்டத்திலுள்ள கிராமப் புறங்களில் கோச்சி என சொல்லப்படுகிறது. இரயில் கடவைகளிலும் மக்களுக்கு விளங்கும் வகையில் கோச்சி வரும் கவனம் என்றே முன்பு எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ணுற்ற வர கவியான கல்லடிவேலன் கொப்பர் எப்போ வருவார் என அருகில் எழுதி வைத்தார், எனச் சொல்வார்கள்.

கோச்சி என்ற சொல் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அம்மாவைக் குறிக்கப் பயன்பட்டது. அவ்வாறே கொப்பர் என்ற சொல் அப்பாவைக் குறித்தது. ஆச்சி, அப்பு என்ற சொற்களும் அங்கு அம்மா, அப்பாவை அழைக்கப் பயன்பட்டன.

காலை என்பது யாழ்ப்பாணத் தமிழில் காலமை எனப்படுகிறது. எத்தனை முறை என்பதற்கு பபதிலாக எத்தினை கோசு எனச் சொல்லப்படுகிறது. அக்காவை அக்கை என்றும் கொக்கா எனவும் அழைப்பதுண்டு. அத்தான் அத்தார் எனச் சொல்லப்படுகின்றார்.

க. சட்டநாதன் எழுதிய ‘உலா’ சிறு கதையில் வரும் உரையாடலில் இடைப்பட்ட சொற்கள் கையாளப்பட்டுள்ளன. “உதென்ன விடுப்பு? தேரிலை சாமி கூட வரேல்லை”. உவர் பெரிய மீசை முளைச்ச கொம்பர். சனத்துக்கை போய் நெரியப் போறாராம்”. இப்படி ‘உலா’ சிறுகதையில் இடைப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தகப்பன் என்ற சொல் தேப்பன் என யாழ்ப்பாணத் தமிழில் வழங்கப்படுகிறது. வருடம், ஜீவிதம் ஆகிய சொற்கள் முறையே வரியம், சீவியம் என வழங்கப்படுகின்றன. போய்விட்டு வருகிறேன் என்பது போட்டு வாறன் எனச் சொல்லப்படுகிறது.

பேராசிரியர் ஆ. கார்த்திகேயன் யாழ்ப்பாணத் தமிழ் எவ்வாறு தமிழக பேச்சு மொழியில் இருந்து வேறுபட்டுள்ளது என்பது பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இங்க என்பது இஞ்ச என்றும் இங்காலை என்பதை இஞ்சாலை என்றும் யாழப்பாண பேச்சுத் தமிழில் காணமுடியும்.

ஈழத்து சிறுகதை மூலவர் என இலங்கையர் கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் ஆகியோர் போற்றப்படுகின்றனர். இவர்களது சிறுகதைகளில் பேச்சுத் தமிழ் சிறப்பாக மையாளப்படவில்லை என விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இலங்கையர் கோனின் சிறுகதைகளில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அமைந்த உரையாடல்களை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அவரது ‘மச்சாள்’ என்ற சிறகதையில் வரும் உரையாடல்கள் இவ்வாறு அமைந்துள்ளன.

“அதெல்லாம் என்னை ஏன் கேட்கிaர்? மக்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந்திடுவார் அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ எண்டு. அவர் நல்லாய்ச் சொல்லுவார்” என்றும் அதே சிறுகதையில் இன்றுமொரு இடத்தில் வரும் உரையாடலில்,

“சும்மா கணக்கு விடாதையும் மச்சாள்! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கை போய் ஒளிச்சுக் கொண்டு யன்னற் சீலையை நீக்கி நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரியாதோ” என்பதாக இலங்கையர் கோனின் ‘மச்சாள்’ சிறுகதையில் உரையாடல்கள் யாழ்ப்பாணத் தமிழில் உள்ளன. இன்றைக்கு என்பது இண்டைக்கு என இந்த உரையாடலில் சுட்டப்பட்டுள்ளது.

அழகு என்ற சொல்லுக்கு பதிலாக வடிவு என்ற சொல் அதிகமாக யாழ்ப்பாண பேச்சுத்தமிழில் பயன்படுத்தப்படுகிறது. வடிவு என்பது அழகுக்கு மாத்திரம் பயன்படவில்லை. ஒரு செயலை சிறப்பாகச் செய்து முடித்தலையும் குறித்தது.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வினைச்சொல் அமைப்பும் ஏனைய பேச்சுத் தமிழில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. சில வினைச் சொல் விகுதிகள் பழந்தமிழோடு ஒத்துள்ளது. எடுத்துக் காட்டாக நன்மை ஒருமை சுட்டும் விகுதியைக் குறிப்பிடலாம். ஏனைய பிரதேச பேச்சுத் தமிழில் பங்கெடுப்பேன், சுடுவேன், தருவேன் என வழங்கப்படும் சொற்கள் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் பங்கெடுப்பன், சுடுவன், தருவன் எனச் சொல்லப்படுகின்றது.

“இன்பம் தருவன் குயிலே, உன்னை உகப்பன் குயிலே” எனத் திருவாசகத்தில் குயில் பத்தில் பாடப்பட்டுள்ளது. இங்கே வருகின்ற தருவன், உகப்பன் போன்ற வினைச் சொற்கள் யாழ்ப்பாண பேச்சு மொழியில் வழங்கப்படுகிறது. இது

ஜி>ஓம் என்பது பிரணவ வடிவமாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் வடிவம் ஓம் என்ற பிரணவப் பொருளை உணர்த்துகிறது. பிரணவ மந்திரத்தை சிவபிரானுக்கு முருகன் போதித்தார். இதனால் ஓங்கார மூர்த்தியாக முருகன் போற்றப்படுகிறார். ஓம் என்ற சொல் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சம்மதம் தெரிவிக்க ஓம் எனச் சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல் விகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பழந்தமிழில் எண்ணுவம், அறிகுவம், வேண்டுவம், வருவம் போன்ற வடிவங்களில் அம்விகுதி வருவதைக் காண முடியும். நீ. பி. அருளானந்தம் எழுதியுள்ள ‘பெட்டைக்குட்டி’ என்ற சிறுகதையில் வரும் உரையாடலில் ஓம் என்ற சொல் விகுதியாக கையாளப்பட்டுள்ளது.

“அந்தப் பூனைக்குட்டிகள் முழுக்கலும் பெட்டைக் குட்டிகளாய் இருந்தாலும் பரவாயில்லை. அவையளை வீட்டிலை வைச்சு வளர்ப்பம். ஆராவது பிறகு வந்து எங்களுக்கு வளர்க்கத் தாருங்கோ வெண்டு கேட்டால் கொடுப்பம்”

இங்கே வளர்ப்பம், கொடுப்பம் என்ற சொற்கள் யாழ்ப்பாண பேச்சு மொழியினை நினைவுபடுத்துவதாய் உள்ளன.

வரும் போது, போகும்போது, சாப்பிடும் போது, குடிக்கும் போது என்ற சொற்கள் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் வரேக்கை போகேக்கை, சாப்பிடேக்கை, குடிக்கேகை என்பதாக உரையாடப்படுகிறது.

ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் வழங்கப்படுவதுமுண்டு. உழைத்தல் என்ற சொல் உடல் உழைப்பை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. யாழ்ப்பாண பேச்சு மொழியில் பணம் ஈட்டுதலையும் குறிக்கும். எடுத்தல் என்பது பொருட்களை எடுப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட வில்லை கைநிறையச் சம்பளம் எடுப்பதையும் சுட்டுகிறது.

நிற்கிறான் என்பது யாழ்ப்பாணத் தமிழில் நிற்பதை மாத்திரம் குறிக்கவில்லை. “தான் காதலிச்ச நிர்மலாவைக் கட்ட வேணும் எண்டு நிக்கிறான்” என்பதாக உரையாடலில் வழங்கப்படுகிறது. “மாமி வீட்டுச் சாப்பாடு நல்லாய் இருக்கு தாக்கும் அதுதான் அங்கேயே நிண்டுட்டான். என நிற்றல் என்பது பல்வேறு பொருள்களில் வழங்கப்படுகிறது.

குஞ்சு என்பது கோழிக் குஞ்சு, குருவிக் குஞ்சு என்பவற்றை மாத்திரம் குறிக்கவில்லை. “என்ரை குஞ்செல்லே குளப்படி செய்யாதேங்கோ” எனத் தாய் தனது மகனையோ மகளையோ பார்த்துச் சொல்வதுண்டு. காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரும் அன்புப் பெருக்கினால் குஞ்சு என ஒருவரை ஒருவர் அழைப்பதை யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் காண முடியும். இலங்கையில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தமிழ் மொழி அந்தப் பிரதேசத்துக்குரிய சிறப்புடன் பேசப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையக தமிழ் என்பவை தனித்துவமானவை.

யாழ்ப்பாண தமிழ் அந்த உச்சரிப்பின் அடிப்படையிலேயே பிற மொழிச் சொற்களையும் உள்வாங்கியுள்ளது. முன்பெல்லாம இலக்கியக் கல்வி கற்றோர் மட்டுமே எழுத முடியும் என்ற நிலைப்பாடு இருந்தது. உரை நடை இலக்கியங்களும் அதிகம் எழுதப்படவில்லை. செய்யுள்களாகவே படைப்புகள் காணப்பட்டன.

யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் சிறுகதைகள், நாவல்கள் வெளியானபோது சில தமிழக எழுத்தாளர்கள் அதனை கேலி செய்தனர். இந்தப் படைப்புகளுக்கு அடிக் குறிப்புத் தேவை என்றனர். நம் நாட்டு பண்டிதர்கள் பலரும் சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை ஆரம்பத்தில் ஏற்கவில்லை. ஆனால் இன்று நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தலித் இலக்கியம் கரிசல் இலக்கியம் என மண் வாசனையோடு எழுதப்படும் படைப்புக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிறுகதைகள், நாவல்களில் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் உரையாடல்கள் அமைந்தால் அவற்றுக்கு அடிக்குறிப்பு எழுதப்பட வேண்டும். இவ்வாறான கருத்து கி. வா. ஜகநாதன், பகீரதன் போன்ற தமிழக எழுத்தாளர்களால் முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இன்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த ஆக்கங்கள் பல வெளிவருகின்றன. இதனை யாழ்ப்பாண பேச்சுத் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதலாம்.

தினகரனில் வந்தது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல தகவல்கள். இந்த யாழ்ப்பாண பழைய வழக்கு சொற்கள் எமது குடும்பத்தில் நிறய பாவிக்கிறோம்.மெய்யே, உன்னாணை, கிழிஞ்சுது போ, நாச்சியார், ரொக்கம், பேச்சு மூச்சு , வீட்டறை என்னும்   நிறைய ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போல கீழே உள்ள சொற்களும் நான் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் கற்றுக்கொண்ட சொல்லாடல்கள்.


பேந்து - பிறகு 
சவம் - கேவலம் 
சவத்தை -  கேவலத்தை 
பனி பிடிச்சிட்டுது - 
சரக்கு - 
விசர் - 
விசுக்கோத்து - 
வாச்சுது - சேர்ந்தது 
வலசு -  
சோடாமூடி - 
அடிசரக்கு - விபச்சாரி 
கம்பி - தன்னின சேர்க்கை 
சிங்கன் - 
மாதா - ஏமாற்று பேர்வழி
பேய்க்காய் - கெட்டிக்காரன்
வம்பில பிறந்தது - ?

விண்ணானம் - 
வெள்ளி பார்க்குது - 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு தமிழ் பற்றி மேலே கூறியவற்றுக்கு விளங்கங்கள் சில:

1. ஐஸ்சுட்டி - இது ஐஸ்சுட்டி அல்ல               ஐ - சுட்டி, அதாவது அதைச் + சுட்டி= அதைச்சுட்டி, மருஉ ஐசுட்டி.

2. வேள - “அவர் கடையை வேளக்கி திறக்கிற” - வேளை எனும் கால அளவிடை early எனும் அர்த்தத்தில் வருகிறது இங்கே. இதையே யாழில் “நேரத்துக்கு”  அல்லது “வெள்ளன” என்பார்கள். 

3. அந்தி - தூய தமிழே- அந்தி சாயும் நேரம் - யாழில் “மம்மல்” என்பார்கள்.

4. நோண்டி, மாற, எல, எலகிரி, எலந்த,  வழி (சண்டை) இவை எல்லாம் சிங்களம் என்பதை விட, கொழும்பு இளஞர்களின் குழூஊகுறிகள் என்பதே சரியாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.