Jump to content

யாழ்ப்பாண-பேச்சு-வழக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுத் தமிழில் நானறிந்த சில:

1. ஒசில், ஒயில் எனும் சொல்லின் மருஉ.  நேரடி அர்த்தம் -அழகு. ஆனால் புழக்கத்தில் அழகு இன்மையை குறிக்கவே பயன்படும்.

“அவவும் அவவிண்ட ஒசிலும்”

2. மனே- மகனே என்பதின் திரிபு. யாழில் இதுவே “மோனே”.

3. “மதிக்கல்ல” - “என்னை மதிக்கல்ல” மட்டக்களப்பில் இதன் அர்த்தம் என்னை அடையாளம் காணவில்லை. யாழில் இதன் அர்த்தம் “என்னை மரியாதையாக நடத்தவில்லை”.

4. **ப்பாய் (** இல் ஓ எனும் எழுத்தைப் போடவும்) - யாழில் கோதாரி - “என்னா **ப்பாய்டா இது”.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.

வடிவாக (அழகாக) சாப்பிடுங்கோ என்பதன் அர்த்தம் அதுவல்ல.

சாப்புடுவதில் ஒரு மேனரிசம், ஒரு நாகரிகம் இருக்க வேண்டும். 

பெரிய சத்தம் இட்டு, உறிஞ்சி, உதடுகள், கன்னங்கள், வாயெல்லாம் உணவுப்பருக்கைகள் பட்டிருக்க, ஆவேசமாக, பக்கத்தில் இருப்பவர் அருவருக்க தக்க வண்ணம் சாப்பிடாமல், அழகாக, டீசெண்டாக, சாப்பிடுங்கோ என்பதே அதன் அர்த்தம்.

ஆசியாவில், ஐரோப்பியர்களினால், முதல் முதலாய் அக்கிரமிக்கப்ப பட்ட யாழ்ப்பாண தமிழர்கள், இந்த மேனரிசம் குறித்து சொல்லிக் கொடுக்கப் பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் விருந்தினருக்கு மேலே உள்ள விளக்கமே கொடுக்கப்பட்டிருக்கும் என்பதும் 'விருந்தோம்பலின்' பண்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.

வடிவாக (அழகாக) சாப்பிடுங்கோ என்பதன் அர்த்தம் அதுவல்ல.

சாப்புடுவதில் ஒரு மேனரிசம், ஒரு நாகரிகம் இருக்க வேண்டும். 

பெரிய சத்தம் இட்டு, உறிஞ்சி, உதடுகள், கன்னங்கள், வாயெல்லாம் உணவுப்பருக்கைகள் பட்டிருக்க, ஆவேசமாக, பக்கத்தில் இருப்பவர் அருவருக்க தக்க வண்ணம் சாப்பிடாமல், அழகாக, டீசெண்டாக, சாப்பிடுங்கோ என்பதே அதன் அர்த்தம்.

ஆசியாவில், ஐரோப்பியர்களினால், முதல் முதலாய் அக்கிரமிக்கப்ப பட்ட யாழ்ப்பாண தமிழர்கள், இந்த மேனரிசம் குறித்து சொல்லிக் கொடுக்கப் பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் விருந்தினருக்கு மேலே உள்ள விளக்கமே கொடுக்கப்பட்டிருக்கும் என்பதும் 'விருந்தோம்பலின்' பண்பு.

இல்லையே “வடிவாச் சாபிடுங்கோ” என்பதன் அர்த்தம் “திருப்தியாக” என்பதே.

சாப்பிட வந்த விருந்தினரை, அருவருக்கிற மாரி சாப்பிடாதேங்கோ என்பது, விருந்தோம்பல் இல்லையே?

”சோதனையை வடிவாச் செய்தனியே?” இங்கே வடிவாக என்பதன் பொருள் சரியாக, அல்லது திருப்தியாக.

“இந்த வாளியை வடிவாப் பிடியடா தம்பி” இங்கேயும் வடிவாய் என்பது சரியாய் என்றே அர்த்தப்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
26 minutes ago, goshan_che said:

இல்லையே “வடிவாச் சாபிடுங்கோ” என்பதன் அர்த்தம் “திருப்தியாக” என்பதே.

சாப்பிட வந்த விருந்தினரை, அருவருக்கிற மாரி சாப்பிடாதேங்கோ என்பது, விருந்தோம்பல் இல்லையே?

”சோதனையை வடிவாச் செய்தனியே?” இங்கே வடிவாக என்பதன் பொருள் சரியாக, அல்லது திருப்தியாக.

“இந்த வாளியை வடிவாப் பிடியடா தம்பி” இங்கேயும் வடிவாய் என்பது சரியாய் என்றே அர்த்தப்படும்.

 

சிங்கத்தார்,

நான் சொன்னதிலயும் என்ன பிழை கண்டீர் காணும்? அதுவும் சரிதானே? :grin:

இதென்ன சில்லெடுப்பா கிடக்குத்தப்பா (இதுவம் யாழ்ப்பாண தமிழ் தான்)

வடிவாய் சோதனை செய்யாட்டிலும், வடிவாய் வாளியை பிடிக்காட்டிலும், கதை கந்தல் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாக என்பதன் ஆங்கில இணையான சொல் Don't (No) Mess up என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பெரிய சத்தம் இட்டு, உறிஞ்சி, உதடுகள், கன்னங்கள், வாயெல்லாம் உணவுப்பருக்கைகள் பட்டிருக்க, ஆவேசமாக, பக்கத்தில் இருப்பவர் அருவருக்க தக்க வண்ணம் சாப்பிடாமல், அழகாக, டீசெண்டாக, சாப்பிடுங்கோ என்பதே அதன் அர்த்தம். 

ரத்தின சுருக்கமாக  'கலீசி'  மாதிரி சாப்பிடாதிங்க ..👌 எனலாம் .. அருமை தோழர் தொடருங்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
20 hours ago, Sasi_varnam said:

இது போல கீழே உள்ள சொற்களும் நான் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் கற்றுக்கொண்ட சொல்லாடல்கள்.


பேந்து - பிறகு 
சவம் - கேவலம் 
சவத்தை -  கேவலத்தை 
பனி பிடிச்சிட்டுது - 
சரக்கு - 
விசர் - 
விசுக்கோத்து - 
வாச்சுது - சேர்ந்தது 
வலசு -  
சோடாமூடி - 
அடிசரக்கு - விபச்சாரி 
கம்பி - தன்னின சேர்க்கை 
சிங்கன் - 
மாதா - ஏமாற்று பேர்வழி
பேய்க்காய் - கெட்டிக்காரன்
வம்பில பிறந்தது - ?

விண்ணானம் - 
வெள்ளி பார்க்குது - 

😁

என்னப்பா, எல்லாத்தையும் பொசுக்கென்று  சொல்லிப்போட்டியள்....

தமிழகத்தில் பிகர், யாழ்ப்பாணத்தில் சரக்கு... சிங்களத்தில் (B ) ப்படு - (படு அல்ல)

சோடாமூடி - விபச்சாரி 

வம்பில பிறந்தது - தகப்பன் என்று சொல்லப்படுபவர் தகப்பன் அல்ல.. (தாயின் நடத்தை குறித்தது)

மாதாமுடி - ஏமாத்து பேர்வழி என்பதிலும் பார்க்க, அலெர்ட் ஆனா ஆள் (ஏமாத்த முடியாது) என்பதும் சரி.

விண்ணானம் - விடுப்பு கேட்பவர்கள், கேட்டதை அடுத்தவர்களுக்குவிலாவரியாக சொல்பவர்கள் . 

வலசு -  ஏதோ ஒன்று குறைவானவர்கள் என பொருள் படும். மாற்று திறனாளிகள் அல்ல. எதாவது அசட்டு வேலைகளை செய்பவர்கள்.

சிங்கன் - எல்லாத்திலும் பெரும் விண்ணன் (கடும் கெட்டிக்காரன்) - நம்ம கோசன்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு ---- இரு வீடுகளின் வேலியில் இருக்கும் துவாரம்......!

அவனோட என்ன குசு குசு என்று கதைத்தனி =  ரகசியம் பேசுதல்.....!

கொத்தான் எங்க துலைக்கே = எங்க போகிறாய் (நண்பர்களுக்குள் உரையாடல்)....!

செவிட்ட பொத்தி தருவன்= காதில் ங்கொய் சத்தம் வர கன்னத்தைப் பொத்தி அடித்தல்.......!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில யாழ்ப்பாணச் சொற்கள்.

1. அமசடக்கி -  தமிழ்நாட்டில் கல்லுளிமங்கன்

2. அட்டாதுட்டி- அதிகம் குழப்படி செய்யும் பிள்ளை

3. அரிச்சுப் பொரிச்சு- சிறுகச் சிறுகச் சேமித்தல்

7 hours ago, Nathamuni said:

சிங்கத்தார்,

நான் சொன்னதிலயும் என்ன பிழை கண்டீர் காணும்? அதுவும் சரிதானே? :grin:

இதென்ன சில்லெடுப்பா கிடக்குத்தப்பா (இதுவம் யாழ்ப்பாண தமிழ் தான்)

வடிவாய் சோதனை செய்யாட்டிலும், வடிவாய் வாளியை பிடிக்காட்டிலும், கதை கந்தல் தான்.

நீங்கள் சொல்லும் வடிவா விற்கு அர்த்தம் “ஒழுங்காக” எனும் பொருளில் சரியானதே.

” கொட்டாம ஒழுங்கா சாப்பிடு” = “கொட்டாம வடிவாச் சாப்பிடு”.

ஆனால் மேலே சொன்ன விருந்தினர் உதாரணத்தில் “வடிவாச் சாபிடுங்கோ” என்பது “ போதுமானளவு எடுத்து திருப்தியா சாப்பிடுங்கோ” என்றே அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்கிலி 
பொருக்கி 
சீளம்பாய் 
அம்மாவான 
விளங்கேல்ல 
புண்ணாக்கு 
நெடுகிலும் 
பெட்டையள் 
டக்கெண்டு 
காணும் 
விடாய்  (மாதவிடாய் ???)
பண்ணாடை 
சுவாத்தியம் 
புக்கை 
எடுபட்டவன் 
போக்கிலி                                                                                                                                                                          
அவையள் /இவையள் 
உங்கண்ட /எங்கண்ட 
தொலைக்கோ 
போட்டு வாறன் 
வாருமன் /போமன் /இருமன் 
சுழட்டுறான் 
வீழ்தீட்டன் 
மடக்கிட்டான் 
சொறி சேட்டை                                                                                                                                                                
கழிசடை  
காவாலி
புறுபுறுக்குறான்                                                                                                                                      
கொதியன்                                                                                                                                                       
கெதியா

பெரிய எண்ணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. விறுத்தம் - “அவற்ற சமையலிண்ட விறுத்தத்துக்கு கூலிய கூட்டி வேற தரட்டாம்”.

2. முசுப்பாத்தி- ஜோக்

3. முசுப்பாத்திக் கட்டை - ஜோக்கர்

4. A9- கொழும்பில் இருந்த வந்த பெட்டை

5. செம்மறி - புத்தி மங்கிய மனிதன் - “ அவன் ஒரு செம்மறி, சொல்ற ஒண்டும் விளங்காது.

6. 90 - வயோதிப ஆண்

7. எடுத்தல் - தூக்கல், “பிள்ளையை நான் எடுக்கிறன் நீங்கள் bagஐ எடுங்கோ”.

8. எளிய - வறுமைப்பட்ட என்ற கருத்தில் அன்றி தகாத என்ற அர்த்ததில் வரும். “பாத்தியே அவன் செஞ்ச எளிய வேலைய?”

9. வடுவா - மோசமான பேர்வழி. “எளிய வடுவா” “வடுவா ராஸ்கோல்”. இது தெலுங்கு வடுகர் மீதான இழிவிழிப்பாயும் இருக்கலாம்.

10. வெளுவை, வெளுத்துப் போடுவன் -துணி துவைத்தல் என்ற அர்த்தமன்றி, ஆளை அடித்தல் என்று பொருள்படும்.

11. பாடை - தமிழகத்தில் இழவு - “ இப்ப என்ன பாடைக்கு இதை இஞ்ச கொண்டு வந்தனீ?

12 - அறுவான், துலைவான் - மோசமானவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
1 hour ago, Sasi_varnam said:


சுழட்டுறான் 
வீழ்தீட்டன் 
மடக்கிட்டான் 

சுழட்டுறான் - சைட் அடித்தல் (தமிழகத்தில்) 

வீழ்தீட்டான் & மடக்கிட்டான் - கரெக்ட் பண்ணியாச்சு (தமிழகத்தில்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் போலவே.....பல பிற மொழிச்சொற்களும்....எமது.....அழ்கு தமிழில் கலந்து....எமது மொழியை வளமூட்டுகின்றன!

அவை...என்ன மொழியில் இருந்து கடன் வாங்கப் பட்டன என்று யாராவது....கூறுங்களேன்!

இந்தச் சொற்கள்....மட்டக்கிளப்புத் தமிழில்....இருக்குதோ எண்டும் அறிய ஆவல்!

 

அலவாங்கு

அலுமாரி

கக்கூசு

அப்புக்காக்து

பிரக்கராசி

வீறு

கம்மார்ஸு

ஆடித்தன்

விறுசு

விசுக்கோத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

இதைப் போலவே.....பல பிற மொழிச்சொற்களும்....எமது.....அழ்கு தமிழில் கலந்து....எமது மொழியை வளமூட்டுகின்றன!

அவை...என்ன மொழியில் இருந்து கடன் வாங்கப் பட்டன என்று யாராவது....கூறுங்களேன்!

இந்தச் சொற்கள்....மட்டக்கிளப்புத் தமிழில்....இருக்குதோ எண்டும் அறிய ஆவல்!

 

அலவாங்கு - 

அலுமாரி

கக்கூசு

அப்புக்காக்து

பிரக்கராசி

வீறு

கம்மார்ஸு

ஆடித்தன்

விறுசு

விசுக்கோத்து

அலவாங்கு - போர்த்துகீசு

அலுமாரி -போர்த்துகீசு

கக்கூசு -போர்த்துகீசு

அப்புக்காக்து - ஆங்கிலம் Advocate

பிரக்கராசி - ஆங்கிலம் Proctor

வீறு

கம்மார்ஸு - commerce - கையோட கம்மார்சு - உடனடிப் பலன் -ஆங்கிலம்

ஆடித்தன்

விறுசு

விசுக்கோத்து - biscuit - ஆங்கிலம்.  

தமிழ இலக்கணம் இவற்றை திசை சொற்கள் என வகுக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொத்துக்கரி (டச்சு ) 
ஆஸ்பத்திரி 
கந்தோர் 
லாச்சி (டச்சு)
அருதாப்பில் (டச்சு)  
சப்பாத்து (போர்த்துகீசு)
பெரக்கதொரு - (வக்கீல்)
ஒசக்க (முஸ்லீம்)
பணிய (முஸ்லீம்)
ஜாதீ  (முஸ்லீம்)
(B )போக்கு 
கான் 
சட்டி /முட்டி
பொஸ்தகம் 
பெருநாள் (முஸ்லீம்)
மொடக்கு 
தலையிடி (யாழ்ப்பாணம்) /  தலைவலி (மலையகம்/இந்தியா)
மாடு இடிக்கும் (யாழ்ப்பாணம் ) / மாடு முட்டும் (மலையகம் /இந்தியா)
போட்டு வாறன் (யாழ்ப்பாணம்) / போயிட்டு வாரேன்  (மலையகம் /இந்தியா)
பெய்த்து வாரேன் (முஸ்லீம்)
சொல்லி (தமிழ் ) / செல்லி (முஸ்லீம்)
பொட்ட சான்ஸ் (முஸ்லீம்) - அதிஸ்டவசம் 
ஊருபளாய் (முஸ்லீம்) - வெட்டிப்பேச்சு / கிசுகிசு 
கிச்சி கொளுத்துறான்  (முஸ்லீம்) - கூச்சம் காட்டுறான் 
ஹராங்குட்டி (முஸ்லீம்) - கேவலம்கெட்டது 
ஜுவால் (முஸ்லீம்) - கோபம்
குருட்டான் வாக்கில (முஸ்லீம்) - எதிர்பாராவிதம் 
தாய்புள்ள (முஸ்லீம்) - சொந்தங்கள் 
மொந்து பாரு (முஸ்லீம்) - முகர்ந்து பார் 
ஆணம் (முஸ்லீம்) - குழம்பு 
கந்தூரி (முஸ்லீம்) - விருந்து
ஆத்தள் (முஸ்லீம் / சிங்களம்) - 
அம்பானாக்கி (முஸ்லீம்/ சிங்களம்) - முறையாக  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.