Jump to content

தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Over the phone referrals.!!
தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.
**********************************

..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்).
போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது.

"ஹலோ"
"ஹலோ, சஜீதன் டொக்டரா"
"ஓம், சொல்லுங்க, நீங்க?"
" நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப"

சத்தியமாக ஞாபகம் இல்லை.

" ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்"
" இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்.."

எதிர்பார்த்தது தான்..!

" என்ன பிரச்சனை"
" கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இருக்காம், இரவுல நித்திரையும் வரல்லியாம், டொட் டொட் டொட்ட்ட்ட்...."
அவர் முடிக்கும் வரை கேட்டு விட்டு,
" எவ்வளவு காலமா? எந்தப் பக்கம்".. என்று வழமையாக கேட்கும் ஓரிரு கேள்விகளை கேட்டேன்.
" அக்கா இப்ப நித்திர கொள்ளுவா, எழும்புன உடனே கேட்டு சொல்லட்டா"?

நேரம் அப்போது காலை 10 மணி.

" என்ன இந்த நேரத்துல நித்திரை கொள்ளுறா" என்று கேட்டேன்.
" என்ன இப்பிடி கேக்கீங்க, இந்த நேரத்துல தானே நித்திரை கொள்ளணும்" என்றார்.
ஒருவேளை நைட் டியூட்டி செய்பவராக இருக்குமோ என்று நினைத்து,
"ஒருவேளை இரவு கண்முழிச்சி வேலை செய்றதாலயும் தலையிடி வரலாம் " என்றேன்.
" என்ன டொக்டர் சொல்றீங்க? என்ன இரவு கண்முழிக்கிறது?அவ இரவுலதானே நித்திரை கொள்றா.."

எனது கடிகாரம் இப்போது காலை 10.06 என்றது.

" இப்ப இரவா காலையா" என்றேன்.
" நமக்குத்தான் காலை, அவக்கு இரவு தானே" என்றவர், " என்ன டொக்டர், எங்கட அக்காவ தெரியாதா உங்களுக்கு.. நீங்க சின்னப்புள்ளையா இருக்கக்குள எத்தின தரம் தூக்கியிருக்கா.. ஒருக்கா அவட சட்டையில சூ போய்.. ஞாபகம் இல்லியா..
அவ யூ.எஸ் போனது கூட தெரியாதா உங்களுக்கு " என்றார்.

இப்போது எனக்கு தலையிடித்தது.
***********************

தலைப்புள் நுழையுமுன் சிறு சம்பவத்துடன் வருவோமென்று தொடங்கினால், அது அனுமார் வால் போல நீண்டு விட்டது.

தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.. இதுதான் தலையங்கம்!

மருத்துவத்துறை சார்ந்த அனைவரும் இதை எதிர்கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் தங்கள் மருத்துவ நண்பர்களுக்கோ, உறவினருக்கோ, தெரிந்தோருக்கோ இல்லை தெரிந்தவரின் தெரிந்தவருக்கோ இது தொடர்பாக போன் போட்டிருப்பீர்கள்.

முதலில் ஒரு நோய் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பார்ப்போம் ( மருத்துவ துறைசார்ந்தோர் இப்பகுதியை ஸ்கிப் செய்து உங்கள் வாழ்நாளின் இரண்டு நிமிடங்களை சேமித்துக்கொள்ளுங்கள்)

😊 நோயாளி நோய்க்கான அறிகுறிகளுடன் வைத்தியரை சந்திப்பார். இங்கு அவரின் நோய்க்குணங்குறிகள் கேட்டறியப்படும்.
இதை history என்போம்.

இதிலிருந்து நமக்கு ஒரு "வடிவம்" கிடைக்கும். ஆனால் உள்ளடக்கம் இன்னும் தெரியாது.

😊😊 அதன் பின் நோயாளி வைத்தியரால் பரிசோதிக்கப்படுவார். Examination எனப்படும்
இது மிகவும் முக்கியமான கட்டம். நோய் தொடர்பான பல முடிவுகள் இங்கு எடுக்கப்படும். ஒரு வைத்தியரின் அனுபவம் வெளிப்படுத்தப்படும் படிமுறை இது.
இங்கு நோயாளியின் பொதுவான உடல்நிலை, நாடித்துடிப்பு, குருதியமுக்கம், இதயத்துடிப்பு, நுரையீரல்கள் என்று நிறைய விடயங்கள் பரிசோதிக்கப்படும்.

😊😊😊 அதன்பின் தேவையான பரிசோதனைகள் செய்யப்படும்.
குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், ஈசீஜீ, எக்ஸ்ரே எல்லாம் இதில் அடங்கும்.

இவை அனைத்தையும் வைத்தே நோய் நிர்ணயிக்கப்பட்டு, மருந்து முடிவு செய்யப்படும்.

***************

இப்போது நமது " தொலைபேசி மருத்துவத்துக்கு" வந்தால், இங்கு மேற்கூறிய இரண்டாவது படியான examination ( நேரடியான உடல் பரிசோதனை) நடைபெற சாத்தியமேயில்லை.

உதாரணமாக, " நான்கு நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, பசியில்லை, தலைசுற்றுகிறது" என்ற முறைப்பாட்டின் காரணம் - சாதாரண சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்றாகவும் இருக்கலாம், அல்லது டெங்கு குருதிப்பெருக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை நேரில் பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.

இன்னும் சிலர் நாலைந்து இரத்த மற்றும் சிறுநீர் ரிப்போர்ட்டுகளை வட்சப்பில் அனுப்பி, மருந்து கேட்பார்கள்.
ஒருவேளை மருத்துவ பாடத்திட்டத்தில் சாத்திரம், மந்திர தந்திரம் எல்லாம் இருக்கும் என்று நினைத்திருப்பார்களோ தெரியாது.

இதில் மிக அபாயமான விடயம் சிறுவர்களின் நோய் தொடர்பானது.
" டொக்டர், பிள்ளைக்கு ஆறுமாசம் இப்ப. ரெண்டு நாளாக தொடர்ந்து அழுது கொண்டே இருக்கு. பால் குடிக்கிறதும் குறைய.."
" மகன் நாலைஞ்சி நாளா ஒரே சோர்வா இருக்கான். எப்ப பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருக்கான்..."

இப்படி சில முறைப்பாடுகள் வரும். இவை சில பாரதூரமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவர்களுக்கு நான் சொல்லும் பதில், " உடனே அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பிள்ளையை கொண்டு செல்லுங்கள்" என்பதே!

***************
யோசித்துப் பாருங்கள்..!
அமரிக்காவில் இருக்கும் அக்காவின் தலையிடியை மட்டக்களப்பில் இருந்து கொண்டு சுகமாக்க வேண்டுமானால் , நான் வைத்தியராக இருக்க வேண்டுமா இல்லை மந்திரவாதியாக இருக்கவேண்டுமா?

மருத்துவம் என்பது ஒரு கலை. அனுபவித்துச் செய்ய வேண்டியது.
ஒரு ஓவியனிடம் ஒரு காட்சியை விவரித்து அதை படமாக வரையச் சொல்வதற்கும், காட்சியை நேரில் பார்த்து , அனுபவித்து வரைவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரண்டாவதில் தான் உயிரோட்டமான ஓவியம் உருவாகும்.

மருத்துவமும் அதே போலதான்.

நோயாளி நம்மை நோக்கி வருகையில், அவரின் நடையை அவதானிப்பதிலிருந்து மருத்துவம் தொடங்குகிறது. அவரது பேச்சு, தொனி, உடல்மொழி எல்லாவற்றிலும் மருத்துவம் கலந்திருக்கிறது.
ஒருவரின் நாடித்துடிப்பு நிறைய விடயங்களை நமக்கு சொல்லும்.

இவையொன்றுமில்லாமல் வெறுமனே ரிப்போர்ட்டுகளை மட்டும் வைத்து மருத்துவம் பார்க்கவேண்டுமானால் அதை ஒரு கம்பியூட்டர் செய்துவிடுமே..!

விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறியிருந்தும் ஏன் ஒரு " ரோபோ மருத்துவரை" உருவாக்க முடியவில்லை?
ஏனெனில் ஒரு குறித்த நோய் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுத்தப்படும் விதம் ஆளுக்காள் வேறுபடும். அதைக் கண்டுபிடிக்கக் கூடிய அல்கோரிதம் இன்னும் உருவாக்கப்படவில்லை.

************

சாதாரண மருத்துவ ஆலோசனைகளை தொலைபேசியில் கேட்பது பிரச்சனையில்லை.

உதாரணமாக " எனக்கு சீனிவருத்தம் இருக்கிறது, மெட்போர்மின் குளிசை பத்துவருடங்களாக பாவிக்கிறேன், மெட்போர்மின் கிட்னியை பாதிக்கும் என்று சொல்கிறார்கள், அதனால் குளிசை போடப் பயமாக இருக்கு.. என்ன செய்யலாம்" என்று ஒருவர் கேட்டார்.
அவருக்கு ஏறத்தாழ 15 நிமிடங்கள் மெட்போர்மினும், கிட்னியும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினேன் - தொலைபேசியூடாகத் தான்..!😆

இவ்வாறான ஆலோசனை கேட்கும் அழைப்புகள் ஆபத்தற்றவை; ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

*****************

எனவே, இயலுமான வரை தொலைபேசியூடான நோய்நிர்ணய முயற்சிகளை தவிர்க்கப்பாருங்கள்.
நோயாளியை வைத்தியரிடம் நேரடியாக காட்டுங்கள்.
முக்கியமாக நெஞ்சுவலி, மூச்சு கஷ்டம், திடீர் மயக்கம், காய்ச்சல் போன்ற ஆபத்தான அறிகுறிகளுக்கு ஒருநாளும் தொலைபேசி ஆலோசனைகளை நாட முயற்சிக்காதீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு!

 

 
DR சஜிதனின் முகப்புத்தகத்தில் இருந்து சுட்டேன் 
 
 
206
 

 

Show More React

 
Comments
 
  •  
     
    Hide or repor
     
     

    •  

     
  •  
     
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன ஊர் டாக்குத்தரோ..?!

-------------------

அண்மையில் ஊருக்குப் போயிருந்த வேளை.. நுளம்புக் கடியோ என்னவோ தெரியவில்லை.. உடம்பில் குறித்த சில பாகங்களில்..குறிப்பாக கை.. கால்...நெற்றி..  சிறிய சிவப்புக் கொப்புள வீக்கங்கள். சொறிய ஆரம்பித்தால்.. சொறிந்து கொண்டே இருக்கனும்.. அவ்வளவு சொறி. அது தாங்கேலாமல்..

ஒவ்வாமையாத்தான் இருக்கும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால்.. ஒவ்வாமை எதுக்கு வந்தது.. வித்தியாசமா ஒன்னும் சாப்பிடவும் இல்லை.. என்பது தான் புரியாத புதிராக இருக்க..

ஓர் நாள் மாலை.. யாழ் நல்லூரடியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருந்தகத்திற்கு ஒவ்வாமை மருந்து வாங்கச் சென்றேன்.

அந்தம்மா பார்த்திட்டு.. இது அலேர்ஜியா தான் இருக்கும்.. ஆனால்.. மருந்தெடுக்கனும் என்றால்.. டாக்டரிடம் துண்டு கொண்டு வரனும். இங்கையே உள்ள டாக்டர் இருக்கிறார்... நீங்கள் உடன புக் பண்ணிக்காட்டலாம் என்றார்.

இல்லை.. இல்லை.. டாக்டர் தேவை இல்லை.. நீங்கள் நான் கேட்கிற மருந்தை தந்தாலே காணும்.. என்றேன்.

இல்லை.. டாக்டரின் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல்.. அது தரேலாது.. நீங்கள் உள்ள போய் புக் பண்ணி டாக்டரிடம் காட்டுங்கள் என்றார்.

சரி.. என்னவோ.. தொலையுது என்றுவிட்டு..

உள்ள போய் டாக்டரிடம் புக் பண்ணி.. ஒரு 30 நிமிடம் வெயிட் பண்ணி..

டாக்டர் ரூமுக்குள்ள போனால்..

டாக்டர் என்பவர்.. ஓர் இளைஞர் தான்.. ஆனால்.. ஊரில மதில் மேல சில காவாலிகள் இருக்குங்கள்.. அது போல இருக்கார். ஒரு ஊத்தை ரீசேட்..முழுக்காற்சட்டை அப்படி இப்படின்னு..

மனதுக்குள்.. ஐயையோ.. உதட்ட வந்து மாட்டிட்டமே... என்று நினைக்கிறத்துக்குள்ள..

டாக்டர்.. தமிழின தான் கேட்டார்.. என்ன பிரச்சனை என்று.

நானும் பிரச்சனையை சொன்னன்.

உடம்பு பூரா கடியோ இல்ல.. சில இடங்கள் தானோ என்று. 

உடம்பு பூரான்னு இல்ல.. முக்கியமா உடுப்புக்கு வெளியில்.. வெளிப்படும்.. பாகங்களில் என்றேன்..

பெரும்பாலும்.. உது நுளம்புக்கடியாத் தான் இருக்கும்.. நீங்கள் யோசிக்கத் தேவை இல்லை என்றார்.

நான் சொன்னேன்.. இல்லை நான் நுளம்பு வலைக்குள்ள தான் தூங்கிறனான். இந்தளவுக்கு நுளம்பு கடிக்கிறதுக்கு வாய்ப்புக் குறைவு என்றேன்..

இது எப்ப இருந்து ஆரம்பிச்சது என்றார்...

இந்த நாட்டுக்கு வந்திறங்கின நாளில இருந்து ஆரம்பிச்சுட்டு என்றேன்..

அப்ப நீங்கள் வெளிநாடோ என்றார்..

ஓம்.. வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கிறேன்.. என்றேன்..

உள்ள வரேக்கையே தெரிஞ்சது... நான் நீங்கள் தப்பா நினைப்பீங்களோ என்று கேட்கவில்லை.. இது பெரும்பாலும் நுளம்புக்கடி தான். வேற பிரச்சனை இருக்கோ என்றார்.

ஆம் தொண்டை நோவும்.. இருக்குது என்றேன்.

-- அப்படியா.. என்று வாயை திறந்து ரோச் அடிச்சுப் பார்த்திட்டு..--

பெரிசா ஒன்னுமா தெரியல்ல.. வைரல் தாக்கமா இருக்கும்.. அதுக்கு மருந்து தாறன்.. என்றார்.

வைரல் தாக்கத்துக்கு மருந்தா.. அல்லது நோவுக்கு மருந்தா என்றேன்..

நோவுக்கு என்றார்.

நான் சொன்னேன்.. இது அலேர்ஜியா இருக்கலாம்.. தூசி சம்பந்தப்பட்டு.. இங்க காற்றில சரியான தூசு.. எதுக்கும் நான் கேக்கிற மருந்தையும் எழுதுங்கோவன் என்றேன்.. நான் மருந்தின் பெயரைச் சொன்னதும்..

அதுக்கு... நீங்கள் பிரிஸ்கிரிப்சன் கொடுக்கத் தேவையில்லை.. கவுன்டரில் கேளுங்கள் தருவினம் என்றார்.

இல்லை.. அவை தான் கேட்டவை என்றேன்.

அவை.. மாறிக் கேட்டிட்டினம்.. போல.. 

நீங்கள் நான் சொன்னது என்று சொல்லுங்கோ.. தருவினம்.

அப்ப நன்றி டாக்டர் என்று அவர் எழுதின மருந்துத் துண்டோடு வெளியில் வந்து..

அந்த மருந்தக அம்மையாரிடம்... சென்று.. அந்த துண்டையும் கொடுத்து நான் முன்னர் கேட்ட மருந்தையும் கேட்க.. ஒரு சத்தமும் இல்லாமல்.. இரண்டையும் தந்தார். அத்தோடு... டாக்டர் பார் கூலி 1500 + மருந்து + உதவியாளர் கொடுப்பனவு = 2500 ரூபாக்கு பில்.

நான் கேட்டேன்.. இந்த மருந்தை முதலே தந்திருந்தால்.. நான் 250 ரூபா செலவோடு போயிருப்பன்.  இப்ப 2500 ரூபா செலவு. எதுக்கு.. 

இல்லை.. நாங்கள் வெளியார் வந்தால்.. செக் பண்ணித்தான் மருந்து கொடுக்கிறது என்றார்.

இதுக்கு மேல.. அவர்களுடன் நின்று தகராறுப்பட விருப்பாமல்.. நான் வெளியேறிப் போய் விட்டேன்.

நான் நினைக்கிறேன்.. குறித்த மருந்தகம்.. மற்றும் தனியார் வைத்தியசாலை மாலை நேரத்தில்.. பயிலுனர் டாக்டர்களை வைச்சு இப்படிப் பிழைப்பை ஓட்டுதுன்னு. 

 

இதை ஏன் இங்க எழுதிறேன் என்றால்..

மக்கள் மட்டுமல்ல.. நம் டாக்டர்களும் பலே கில்லாடிகள் தான். அதுவும் ஊரில்..... சப்பா.. பார்த்திருக்கப் பகற்கொள்ளை நடக்கும். 😂

----------------------

ஆ... அந்தக் கடிக்கு என்னாச்சுது... என்றால்.. அது எந்த மருந்து சாப்பிட்டும் நிற்கவில்லை. மருந்து சும்மா சாப்பிட்டது தான் மிச்சம். தொண்டை நோவும் மாறவில்லை. ஊரில் இருந்து கிளம்பி.. மீண்டும் வாழிடம் வந்து இரண்டு நாளில் எல்லாம் அடியோடு ஓடிவிட்டது.

இன்னும்.. அதற்கான காரணம்.. புரியவில்லை. ஒன்றில்.. தூசி.. சம்பந்தப்பட்ட ஒவ்வாமை..இல்ல.. தூசி சம்பந்தப்பட்ட தொற்றுகள் காரணமாக இருக்கலாம். அல்லது நுளம்புக்கடி.. + மற்றைய காரணிகள்.. கூட்டு. 

ஆனால்.. அது யாழ்ப்பாணத்தூசி என்றில்லை.. கொழும்புத் தூசி.. கண்டித்தூசி.. குருணாகல் தூசி.. எல்லாத்துக்கும் கடிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட  தமிழ் வித்தியாசம் தெரியவில்லையா?...மட்டக்களப்பு தமிழ் அங்கால பகுதியில் வைத்தியராய் வேலை செய்கிறார் 

On ‎5‎/‎21‎/‎2019 at 10:23 PM, nedukkalapoovan said:

இவர் என்ன ஊர் டாக்குத்தரோ..?!

-------------------

அண்மையில் ஊருக்குப் போயிருந்த வேளை.. நுளம்புக் கடியோ என்னவோ தெரியவில்லை.. உடம்பில் குறித்த சில பாகங்களில்..குறிப்பாக கை.. கால்...நெற்றி..  சிறிய சிவப்புக் கொப்புள வீக்கங்கள். சொறிய ஆரம்பித்தால்.. சொறிந்து கொண்டே இருக்கனும்.. அவ்வளவு சொறி. அது தாங்கேலாமல்..

ஒவ்வாமையாத்தான் இருக்கும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால்.. ஒவ்வாமை எதுக்கு வந்தது.. வித்தியாசமா ஒன்னும் சாப்பிடவும் இல்லை.. என்பது தான் புரியாத புதிராக இருக்க..

ஓர் நாள் மாலை.. யாழ் நல்லூரடியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருந்தகத்திற்கு ஒவ்வாமை மருந்து வாங்கச் சென்றேன்.

அந்தம்மா பார்த்திட்டு.. இது அலேர்ஜியா தான் இருக்கும்.. ஆனால்.. மருந்தெடுக்கனும் என்றால்.. டாக்டரிடம் துண்டு கொண்டு வரனும். இங்கையே உள்ள டாக்டர் இருக்கிறார்... நீங்கள் உடன புக் பண்ணிக்காட்டலாம் என்றார்.

இல்லை.. இல்லை.. டாக்டர் தேவை இல்லை.. நீங்கள் நான் கேட்கிற மருந்தை தந்தாலே காணும்.. என்றேன்.

இல்லை.. டாக்டரின் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல்.. அது தரேலாது.. நீங்கள் உள்ள போய் புக் பண்ணி டாக்டரிடம் காட்டுங்கள் என்றார்.

சரி.. என்னவோ.. தொலையுது என்றுவிட்டு..

உள்ள போய் டாக்டரிடம் புக் பண்ணி.. ஒரு 30 நிமிடம் வெயிட் பண்ணி..

டாக்டர் ரூமுக்குள்ள போனால்..

டாக்டர் என்பவர்.. ஓர் இளைஞர் தான்.. ஆனால்.. ஊரில மதில் மேல சில காவாலிகள் இருக்குங்கள்.. அது போல இருக்கார். ஒரு ஊத்தை ரீசேட்..முழுக்காற்சட்டை அப்படி இப்படின்னு..

மனதுக்குள்.. ஐயையோ.. உதட்ட வந்து மாட்டிட்டமே... என்று நினைக்கிறத்துக்குள்ள..

டாக்டர்.. தமிழின தான் கேட்டார்.. என்ன பிரச்சனை என்று.

நானும் பிரச்சனையை சொன்னன்.

உடம்பு பூரா கடியோ இல்ல.. சில இடங்கள் தானோ என்று. 

உடம்பு பூரான்னு இல்ல.. முக்கியமா உடுப்புக்கு வெளியில்.. வெளிப்படும்.. பாகங்களில் என்றேன்..

பெரும்பாலும்.. உது நுளம்புக்கடியாத் தான் இருக்கும்.. நீங்கள் யோசிக்கத் தேவை இல்லை என்றார்.

நான் சொன்னேன்.. இல்லை நான் நுளம்பு வலைக்குள்ள தான் தூங்கிறனான். இந்தளவுக்கு நுளம்பு கடிக்கிறதுக்கு வாய்ப்புக் குறைவு என்றேன்..

இது எப்ப இருந்து ஆரம்பிச்சது என்றார்...

இந்த நாட்டுக்கு வந்திறங்கின நாளில இருந்து ஆரம்பிச்சுட்டு என்றேன்..

அப்ப நீங்கள் வெளிநாடோ என்றார்..

ஓம்.. வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கிறேன்.. என்றேன்..

உள்ள வரேக்கையே தெரிஞ்சது... நான் நீங்கள் தப்பா நினைப்பீங்களோ என்று கேட்கவில்லை.. இது பெரும்பாலும் நுளம்புக்கடி தான். வேற பிரச்சனை இருக்கோ என்றார்.

ஆம் தொண்டை நோவும்.. இருக்குது என்றேன்.

-- அப்படியா.. என்று வாயை திறந்து ரோச் அடிச்சுப் பார்த்திட்டு..--

பெரிசா ஒன்னுமா தெரியல்ல.. வைரல் தாக்கமா இருக்கும்.. அதுக்கு மருந்து தாறன்.. என்றார்.

வைரல் தாக்கத்துக்கு மருந்தா.. அல்லது நோவுக்கு மருந்தா என்றேன்..

நோவுக்கு என்றார்.

நான் சொன்னேன்.. இது அலேர்ஜியா இருக்கலாம்.. தூசி சம்பந்தப்பட்டு.. இங்க காற்றில சரியான தூசு.. எதுக்கும் நான் கேக்கிற மருந்தையும் எழுதுங்கோவன் என்றேன்.. நான் மருந்தின் பெயரைச் சொன்னதும்..

அதுக்கு... நீங்கள் பிரிஸ்கிரிப்சன் கொடுக்கத் தேவையில்லை.. கவுன்டரில் கேளுங்கள் தருவினம் என்றார்.

இல்லை.. அவை தான் கேட்டவை என்றேன்.

அவை.. மாறிக் கேட்டிட்டினம்.. போல.. 

நீங்கள் நான் சொன்னது என்று சொல்லுங்கோ.. தருவினம்.

அப்ப நன்றி டாக்டர் என்று அவர் எழுதின மருந்துத் துண்டோடு வெளியில் வந்து..

அந்த மருந்தக அம்மையாரிடம்... சென்று.. அந்த துண்டையும் கொடுத்து நான் முன்னர் கேட்ட மருந்தையும் கேட்க.. ஒரு சத்தமும் இல்லாமல்.. இரண்டையும் தந்தார். அத்தோடு... டாக்டர் பார் கூலி 1500 + மருந்து + உதவியாளர் கொடுப்பனவு = 2500 ரூபாக்கு பில்.

நான் கேட்டேன்.. இந்த மருந்தை முதலே தந்திருந்தால்.. நான் 250 ரூபா செலவோடு போயிருப்பன்.  இப்ப 2500 ரூபா செலவு. எதுக்கு.. 

இல்லை.. நாங்கள் வெளியார் வந்தால்.. செக் பண்ணித்தான் மருந்து கொடுக்கிறது என்றார்.

இதுக்கு மேல.. அவர்களுடன் நின்று தகராறுப்பட விருப்பாமல்.. நான் வெளியேறிப் போய் விட்டேன்.

நான் நினைக்கிறேன்.. குறித்த மருந்தகம்.. மற்றும் தனியார் வைத்தியசாலை மாலை நேரத்தில்.. பயிலுனர் டாக்டர்களை வைச்சு இப்படிப் பிழைப்பை ஓட்டுதுன்னு. 

 

இதை ஏன் இங்க எழுதிறேன் என்றால்..

மக்கள் மட்டுமல்ல.. நம் டாக்டர்களும் பலே கில்லாடிகள் தான். அதுவும் ஊரில்..... சப்பா.. பார்த்திருக்கப் பகற்கொள்ளை நடக்கும். 😂

----------------------

ஆ... அந்தக் கடிக்கு என்னாச்சுது... என்றால்.. அது எந்த மருந்து சாப்பிட்டும் நிற்கவில்லை. மருந்து சும்மா சாப்பிட்டது தான் மிச்சம். தொண்டை நோவும் மாறவில்லை. ஊரில் இருந்து கிளம்பி.. மீண்டும் வாழிடம் வந்து இரண்டு நாளில் எல்லாம் அடியோடு ஓடிவிட்டது.

இன்னும்.. அதற்கான காரணம்.. புரியவில்லை. ஒன்றில்.. தூசி.. சம்பந்தப்பட்ட ஒவ்வாமை..இல்ல.. தூசி சம்பந்தப்பட்ட தொற்றுகள் காரணமாக இருக்கலாம். அல்லது நுளம்புக்கடி.. + மற்றைய காரணிகள்.. கூட்டு. 

ஆனால்.. அது யாழ்ப்பாணத்தூசி என்றில்லை.. கொழும்புத் தூசி.. கண்டித்தூசி.. குருணாகல் தூசி.. எல்லாத்துக்கும் கடிதான். 

இப்ப அங்கு டாக்குத்தர்மார் வலு சிம்பிள் தெரியுமோ?...நீங்கள் போட்ட சோப் ஒத்துக் கொள்ளவில்லையாக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில எங்கட வீட்டுக்கு முன்னால கொஞ்சாம் தள்ளி இருந்த ஒரு அன்டிக்கு வேலை ரோட்டுல நின்று கொண்டு போற , வாற ஆட்களை பற்றி கிரந்தம் கதைக்கிறது அதுவும் பொம்பிளை பிள்ளையளை பற்றி கண்ணு,மண்ணு தெரியாமல் கதைக்கிறது...ஒரு நாள் பள்ளிக்கு போன அவன்ட மகள் வீட்டுக்கு வரேல்ல...அந்த அக்காவை யாரோ அண்ணா தள்ளிட்டு போயிட்டாங்களாம் 


நந்தனுக்கு நான் என்ன சொல்ல வாறன் என்று விளங்கி இருக்கும்...விளங்காட்டில் பெருமாள் விளங்கப்படுத்துவார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில எங்கட வீட்டுக்கு முன்னால கொஞ்சாம் தள்ளி இருந்த ஒரு அன்டிக்கு வேலை ரோட்டுல நின்று கொண்டு போற , வாற ஆட்களை பற்றி கிரந்தம் கதைக்கிறது அதுவும் பொம்பிளை பிள்ளையளை பற்றி கண்ணு,மண்ணு தெரியாமல் கதைக்கிறது...ஒரு நாள் பள்ளிக்கு போன அவன்ட மகள் வீட்டுக்கு வரேல்ல...அந்த அக்காவை யாரோ அண்ணா தள்ளிட்டு போயிட்டாங்களாம் 

உந்த கதையை எங்கையோ கேள்விப்பட்டமாதிரி கிடக்கு......அது சரி அந்த ஆன்டியை டாக்குத்தர் தனிய கூப்பிட்டு வருத்தம் பாத்தவரோ? tw_glasses:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.