Jump to content

தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Over the phone referrals.!!
தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.
**********************************

..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்).
போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது.

"ஹலோ"
"ஹலோ, சஜீதன் டொக்டரா"
"ஓம், சொல்லுங்க, நீங்க?"
" நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப"

சத்தியமாக ஞாபகம் இல்லை.

" ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்"
" இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்.."

எதிர்பார்த்தது தான்..!

" என்ன பிரச்சனை"
" கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இருக்காம், இரவுல நித்திரையும் வரல்லியாம், டொட் டொட் டொட்ட்ட்ட்...."
அவர் முடிக்கும் வரை கேட்டு விட்டு,
" எவ்வளவு காலமா? எந்தப் பக்கம்".. என்று வழமையாக கேட்கும் ஓரிரு கேள்விகளை கேட்டேன்.
" அக்கா இப்ப நித்திர கொள்ளுவா, எழும்புன உடனே கேட்டு சொல்லட்டா"?

நேரம் அப்போது காலை 10 மணி.

" என்ன இந்த நேரத்துல நித்திரை கொள்ளுறா" என்று கேட்டேன்.
" என்ன இப்பிடி கேக்கீங்க, இந்த நேரத்துல தானே நித்திரை கொள்ளணும்" என்றார்.
ஒருவேளை நைட் டியூட்டி செய்பவராக இருக்குமோ என்று நினைத்து,
"ஒருவேளை இரவு கண்முழிச்சி வேலை செய்றதாலயும் தலையிடி வரலாம் " என்றேன்.
" என்ன டொக்டர் சொல்றீங்க? என்ன இரவு கண்முழிக்கிறது?அவ இரவுலதானே நித்திரை கொள்றா.."

எனது கடிகாரம் இப்போது காலை 10.06 என்றது.

" இப்ப இரவா காலையா" என்றேன்.
" நமக்குத்தான் காலை, அவக்கு இரவு தானே" என்றவர், " என்ன டொக்டர், எங்கட அக்காவ தெரியாதா உங்களுக்கு.. நீங்க சின்னப்புள்ளையா இருக்கக்குள எத்தின தரம் தூக்கியிருக்கா.. ஒருக்கா அவட சட்டையில சூ போய்.. ஞாபகம் இல்லியா..
அவ யூ.எஸ் போனது கூட தெரியாதா உங்களுக்கு " என்றார்.

இப்போது எனக்கு தலையிடித்தது.
***********************

தலைப்புள் நுழையுமுன் சிறு சம்பவத்துடன் வருவோமென்று தொடங்கினால், அது அனுமார் வால் போல நீண்டு விட்டது.

தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.. இதுதான் தலையங்கம்!

மருத்துவத்துறை சார்ந்த அனைவரும் இதை எதிர்கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் தங்கள் மருத்துவ நண்பர்களுக்கோ, உறவினருக்கோ, தெரிந்தோருக்கோ இல்லை தெரிந்தவரின் தெரிந்தவருக்கோ இது தொடர்பாக போன் போட்டிருப்பீர்கள்.

முதலில் ஒரு நோய் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பார்ப்போம் ( மருத்துவ துறைசார்ந்தோர் இப்பகுதியை ஸ்கிப் செய்து உங்கள் வாழ்நாளின் இரண்டு நிமிடங்களை சேமித்துக்கொள்ளுங்கள்)

😊 நோயாளி நோய்க்கான அறிகுறிகளுடன் வைத்தியரை சந்திப்பார். இங்கு அவரின் நோய்க்குணங்குறிகள் கேட்டறியப்படும்.
இதை history என்போம்.

இதிலிருந்து நமக்கு ஒரு "வடிவம்" கிடைக்கும். ஆனால் உள்ளடக்கம் இன்னும் தெரியாது.

😊😊 அதன் பின் நோயாளி வைத்தியரால் பரிசோதிக்கப்படுவார். Examination எனப்படும்
இது மிகவும் முக்கியமான கட்டம். நோய் தொடர்பான பல முடிவுகள் இங்கு எடுக்கப்படும். ஒரு வைத்தியரின் அனுபவம் வெளிப்படுத்தப்படும் படிமுறை இது.
இங்கு நோயாளியின் பொதுவான உடல்நிலை, நாடித்துடிப்பு, குருதியமுக்கம், இதயத்துடிப்பு, நுரையீரல்கள் என்று நிறைய விடயங்கள் பரிசோதிக்கப்படும்.

😊😊😊 அதன்பின் தேவையான பரிசோதனைகள் செய்யப்படும்.
குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், ஈசீஜீ, எக்ஸ்ரே எல்லாம் இதில் அடங்கும்.

இவை அனைத்தையும் வைத்தே நோய் நிர்ணயிக்கப்பட்டு, மருந்து முடிவு செய்யப்படும்.

***************

இப்போது நமது " தொலைபேசி மருத்துவத்துக்கு" வந்தால், இங்கு மேற்கூறிய இரண்டாவது படியான examination ( நேரடியான உடல் பரிசோதனை) நடைபெற சாத்தியமேயில்லை.

உதாரணமாக, " நான்கு நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, பசியில்லை, தலைசுற்றுகிறது" என்ற முறைப்பாட்டின் காரணம் - சாதாரண சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்றாகவும் இருக்கலாம், அல்லது டெங்கு குருதிப்பெருக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை நேரில் பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.

இன்னும் சிலர் நாலைந்து இரத்த மற்றும் சிறுநீர் ரிப்போர்ட்டுகளை வட்சப்பில் அனுப்பி, மருந்து கேட்பார்கள்.
ஒருவேளை மருத்துவ பாடத்திட்டத்தில் சாத்திரம், மந்திர தந்திரம் எல்லாம் இருக்கும் என்று நினைத்திருப்பார்களோ தெரியாது.

இதில் மிக அபாயமான விடயம் சிறுவர்களின் நோய் தொடர்பானது.
" டொக்டர், பிள்ளைக்கு ஆறுமாசம் இப்ப. ரெண்டு நாளாக தொடர்ந்து அழுது கொண்டே இருக்கு. பால் குடிக்கிறதும் குறைய.."
" மகன் நாலைஞ்சி நாளா ஒரே சோர்வா இருக்கான். எப்ப பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருக்கான்..."

இப்படி சில முறைப்பாடுகள் வரும். இவை சில பாரதூரமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவர்களுக்கு நான் சொல்லும் பதில், " உடனே அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பிள்ளையை கொண்டு செல்லுங்கள்" என்பதே!

***************
யோசித்துப் பாருங்கள்..!
அமரிக்காவில் இருக்கும் அக்காவின் தலையிடியை மட்டக்களப்பில் இருந்து கொண்டு சுகமாக்க வேண்டுமானால் , நான் வைத்தியராக இருக்க வேண்டுமா இல்லை மந்திரவாதியாக இருக்கவேண்டுமா?

மருத்துவம் என்பது ஒரு கலை. அனுபவித்துச் செய்ய வேண்டியது.
ஒரு ஓவியனிடம் ஒரு காட்சியை விவரித்து அதை படமாக வரையச் சொல்வதற்கும், காட்சியை நேரில் பார்த்து , அனுபவித்து வரைவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரண்டாவதில் தான் உயிரோட்டமான ஓவியம் உருவாகும்.

மருத்துவமும் அதே போலதான்.

நோயாளி நம்மை நோக்கி வருகையில், அவரின் நடையை அவதானிப்பதிலிருந்து மருத்துவம் தொடங்குகிறது. அவரது பேச்சு, தொனி, உடல்மொழி எல்லாவற்றிலும் மருத்துவம் கலந்திருக்கிறது.
ஒருவரின் நாடித்துடிப்பு நிறைய விடயங்களை நமக்கு சொல்லும்.

இவையொன்றுமில்லாமல் வெறுமனே ரிப்போர்ட்டுகளை மட்டும் வைத்து மருத்துவம் பார்க்கவேண்டுமானால் அதை ஒரு கம்பியூட்டர் செய்துவிடுமே..!

விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறியிருந்தும் ஏன் ஒரு " ரோபோ மருத்துவரை" உருவாக்க முடியவில்லை?
ஏனெனில் ஒரு குறித்த நோய் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுத்தப்படும் விதம் ஆளுக்காள் வேறுபடும். அதைக் கண்டுபிடிக்கக் கூடிய அல்கோரிதம் இன்னும் உருவாக்கப்படவில்லை.

************

சாதாரண மருத்துவ ஆலோசனைகளை தொலைபேசியில் கேட்பது பிரச்சனையில்லை.

உதாரணமாக " எனக்கு சீனிவருத்தம் இருக்கிறது, மெட்போர்மின் குளிசை பத்துவருடங்களாக பாவிக்கிறேன், மெட்போர்மின் கிட்னியை பாதிக்கும் என்று சொல்கிறார்கள், அதனால் குளிசை போடப் பயமாக இருக்கு.. என்ன செய்யலாம்" என்று ஒருவர் கேட்டார்.
அவருக்கு ஏறத்தாழ 15 நிமிடங்கள் மெட்போர்மினும், கிட்னியும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினேன் - தொலைபேசியூடாகத் தான்..!😆

இவ்வாறான ஆலோசனை கேட்கும் அழைப்புகள் ஆபத்தற்றவை; ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

*****************

எனவே, இயலுமான வரை தொலைபேசியூடான நோய்நிர்ணய முயற்சிகளை தவிர்க்கப்பாருங்கள்.
நோயாளியை வைத்தியரிடம் நேரடியாக காட்டுங்கள்.
முக்கியமாக நெஞ்சுவலி, மூச்சு கஷ்டம், திடீர் மயக்கம், காய்ச்சல் போன்ற ஆபத்தான அறிகுறிகளுக்கு ஒருநாளும் தொலைபேசி ஆலோசனைகளை நாட முயற்சிக்காதீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு!

 

 
DR சஜிதனின் முகப்புத்தகத்தில் இருந்து சுட்டேன் 
 
 
206
 

 

Show More React

 
Comments
 
  •  
     
    Hide or repor
     
     

    •  

     
  •  
     
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன ஊர் டாக்குத்தரோ..?!

-------------------

அண்மையில் ஊருக்குப் போயிருந்த வேளை.. நுளம்புக் கடியோ என்னவோ தெரியவில்லை.. உடம்பில் குறித்த சில பாகங்களில்..குறிப்பாக கை.. கால்...நெற்றி..  சிறிய சிவப்புக் கொப்புள வீக்கங்கள். சொறிய ஆரம்பித்தால்.. சொறிந்து கொண்டே இருக்கனும்.. அவ்வளவு சொறி. அது தாங்கேலாமல்..

ஒவ்வாமையாத்தான் இருக்கும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால்.. ஒவ்வாமை எதுக்கு வந்தது.. வித்தியாசமா ஒன்னும் சாப்பிடவும் இல்லை.. என்பது தான் புரியாத புதிராக இருக்க..

ஓர் நாள் மாலை.. யாழ் நல்லூரடியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருந்தகத்திற்கு ஒவ்வாமை மருந்து வாங்கச் சென்றேன்.

அந்தம்மா பார்த்திட்டு.. இது அலேர்ஜியா தான் இருக்கும்.. ஆனால்.. மருந்தெடுக்கனும் என்றால்.. டாக்டரிடம் துண்டு கொண்டு வரனும். இங்கையே உள்ள டாக்டர் இருக்கிறார்... நீங்கள் உடன புக் பண்ணிக்காட்டலாம் என்றார்.

இல்லை.. இல்லை.. டாக்டர் தேவை இல்லை.. நீங்கள் நான் கேட்கிற மருந்தை தந்தாலே காணும்.. என்றேன்.

இல்லை.. டாக்டரின் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல்.. அது தரேலாது.. நீங்கள் உள்ள போய் புக் பண்ணி டாக்டரிடம் காட்டுங்கள் என்றார்.

சரி.. என்னவோ.. தொலையுது என்றுவிட்டு..

உள்ள போய் டாக்டரிடம் புக் பண்ணி.. ஒரு 30 நிமிடம் வெயிட் பண்ணி..

டாக்டர் ரூமுக்குள்ள போனால்..

டாக்டர் என்பவர்.. ஓர் இளைஞர் தான்.. ஆனால்.. ஊரில மதில் மேல சில காவாலிகள் இருக்குங்கள்.. அது போல இருக்கார். ஒரு ஊத்தை ரீசேட்..முழுக்காற்சட்டை அப்படி இப்படின்னு..

மனதுக்குள்.. ஐயையோ.. உதட்ட வந்து மாட்டிட்டமே... என்று நினைக்கிறத்துக்குள்ள..

டாக்டர்.. தமிழின தான் கேட்டார்.. என்ன பிரச்சனை என்று.

நானும் பிரச்சனையை சொன்னன்.

உடம்பு பூரா கடியோ இல்ல.. சில இடங்கள் தானோ என்று. 

உடம்பு பூரான்னு இல்ல.. முக்கியமா உடுப்புக்கு வெளியில்.. வெளிப்படும்.. பாகங்களில் என்றேன்..

பெரும்பாலும்.. உது நுளம்புக்கடியாத் தான் இருக்கும்.. நீங்கள் யோசிக்கத் தேவை இல்லை என்றார்.

நான் சொன்னேன்.. இல்லை நான் நுளம்பு வலைக்குள்ள தான் தூங்கிறனான். இந்தளவுக்கு நுளம்பு கடிக்கிறதுக்கு வாய்ப்புக் குறைவு என்றேன்..

இது எப்ப இருந்து ஆரம்பிச்சது என்றார்...

இந்த நாட்டுக்கு வந்திறங்கின நாளில இருந்து ஆரம்பிச்சுட்டு என்றேன்..

அப்ப நீங்கள் வெளிநாடோ என்றார்..

ஓம்.. வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கிறேன்.. என்றேன்..

உள்ள வரேக்கையே தெரிஞ்சது... நான் நீங்கள் தப்பா நினைப்பீங்களோ என்று கேட்கவில்லை.. இது பெரும்பாலும் நுளம்புக்கடி தான். வேற பிரச்சனை இருக்கோ என்றார்.

ஆம் தொண்டை நோவும்.. இருக்குது என்றேன்.

-- அப்படியா.. என்று வாயை திறந்து ரோச் அடிச்சுப் பார்த்திட்டு..--

பெரிசா ஒன்னுமா தெரியல்ல.. வைரல் தாக்கமா இருக்கும்.. அதுக்கு மருந்து தாறன்.. என்றார்.

வைரல் தாக்கத்துக்கு மருந்தா.. அல்லது நோவுக்கு மருந்தா என்றேன்..

நோவுக்கு என்றார்.

நான் சொன்னேன்.. இது அலேர்ஜியா இருக்கலாம்.. தூசி சம்பந்தப்பட்டு.. இங்க காற்றில சரியான தூசு.. எதுக்கும் நான் கேக்கிற மருந்தையும் எழுதுங்கோவன் என்றேன்.. நான் மருந்தின் பெயரைச் சொன்னதும்..

அதுக்கு... நீங்கள் பிரிஸ்கிரிப்சன் கொடுக்கத் தேவையில்லை.. கவுன்டரில் கேளுங்கள் தருவினம் என்றார்.

இல்லை.. அவை தான் கேட்டவை என்றேன்.

அவை.. மாறிக் கேட்டிட்டினம்.. போல.. 

நீங்கள் நான் சொன்னது என்று சொல்லுங்கோ.. தருவினம்.

அப்ப நன்றி டாக்டர் என்று அவர் எழுதின மருந்துத் துண்டோடு வெளியில் வந்து..

அந்த மருந்தக அம்மையாரிடம்... சென்று.. அந்த துண்டையும் கொடுத்து நான் முன்னர் கேட்ட மருந்தையும் கேட்க.. ஒரு சத்தமும் இல்லாமல்.. இரண்டையும் தந்தார். அத்தோடு... டாக்டர் பார் கூலி 1500 + மருந்து + உதவியாளர் கொடுப்பனவு = 2500 ரூபாக்கு பில்.

நான் கேட்டேன்.. இந்த மருந்தை முதலே தந்திருந்தால்.. நான் 250 ரூபா செலவோடு போயிருப்பன்.  இப்ப 2500 ரூபா செலவு. எதுக்கு.. 

இல்லை.. நாங்கள் வெளியார் வந்தால்.. செக் பண்ணித்தான் மருந்து கொடுக்கிறது என்றார்.

இதுக்கு மேல.. அவர்களுடன் நின்று தகராறுப்பட விருப்பாமல்.. நான் வெளியேறிப் போய் விட்டேன்.

நான் நினைக்கிறேன்.. குறித்த மருந்தகம்.. மற்றும் தனியார் வைத்தியசாலை மாலை நேரத்தில்.. பயிலுனர் டாக்டர்களை வைச்சு இப்படிப் பிழைப்பை ஓட்டுதுன்னு. 

 

இதை ஏன் இங்க எழுதிறேன் என்றால்..

மக்கள் மட்டுமல்ல.. நம் டாக்டர்களும் பலே கில்லாடிகள் தான். அதுவும் ஊரில்..... சப்பா.. பார்த்திருக்கப் பகற்கொள்ளை நடக்கும். 😂

----------------------

ஆ... அந்தக் கடிக்கு என்னாச்சுது... என்றால்.. அது எந்த மருந்து சாப்பிட்டும் நிற்கவில்லை. மருந்து சும்மா சாப்பிட்டது தான் மிச்சம். தொண்டை நோவும் மாறவில்லை. ஊரில் இருந்து கிளம்பி.. மீண்டும் வாழிடம் வந்து இரண்டு நாளில் எல்லாம் அடியோடு ஓடிவிட்டது.

இன்னும்.. அதற்கான காரணம்.. புரியவில்லை. ஒன்றில்.. தூசி.. சம்பந்தப்பட்ட ஒவ்வாமை..இல்ல.. தூசி சம்பந்தப்பட்ட தொற்றுகள் காரணமாக இருக்கலாம். அல்லது நுளம்புக்கடி.. + மற்றைய காரணிகள்.. கூட்டு. 

ஆனால்.. அது யாழ்ப்பாணத்தூசி என்றில்லை.. கொழும்புத் தூசி.. கண்டித்தூசி.. குருணாகல் தூசி.. எல்லாத்துக்கும் கடிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட  தமிழ் வித்தியாசம் தெரியவில்லையா?...மட்டக்களப்பு தமிழ் அங்கால பகுதியில் வைத்தியராய் வேலை செய்கிறார் 

On ‎5‎/‎21‎/‎2019 at 10:23 PM, nedukkalapoovan said:

இவர் என்ன ஊர் டாக்குத்தரோ..?!

-------------------

அண்மையில் ஊருக்குப் போயிருந்த வேளை.. நுளம்புக் கடியோ என்னவோ தெரியவில்லை.. உடம்பில் குறித்த சில பாகங்களில்..குறிப்பாக கை.. கால்...நெற்றி..  சிறிய சிவப்புக் கொப்புள வீக்கங்கள். சொறிய ஆரம்பித்தால்.. சொறிந்து கொண்டே இருக்கனும்.. அவ்வளவு சொறி. அது தாங்கேலாமல்..

ஒவ்வாமையாத்தான் இருக்கும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால்.. ஒவ்வாமை எதுக்கு வந்தது.. வித்தியாசமா ஒன்னும் சாப்பிடவும் இல்லை.. என்பது தான் புரியாத புதிராக இருக்க..

ஓர் நாள் மாலை.. யாழ் நல்லூரடியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருந்தகத்திற்கு ஒவ்வாமை மருந்து வாங்கச் சென்றேன்.

அந்தம்மா பார்த்திட்டு.. இது அலேர்ஜியா தான் இருக்கும்.. ஆனால்.. மருந்தெடுக்கனும் என்றால்.. டாக்டரிடம் துண்டு கொண்டு வரனும். இங்கையே உள்ள டாக்டர் இருக்கிறார்... நீங்கள் உடன புக் பண்ணிக்காட்டலாம் என்றார்.

இல்லை.. இல்லை.. டாக்டர் தேவை இல்லை.. நீங்கள் நான் கேட்கிற மருந்தை தந்தாலே காணும்.. என்றேன்.

இல்லை.. டாக்டரின் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல்.. அது தரேலாது.. நீங்கள் உள்ள போய் புக் பண்ணி டாக்டரிடம் காட்டுங்கள் என்றார்.

சரி.. என்னவோ.. தொலையுது என்றுவிட்டு..

உள்ள போய் டாக்டரிடம் புக் பண்ணி.. ஒரு 30 நிமிடம் வெயிட் பண்ணி..

டாக்டர் ரூமுக்குள்ள போனால்..

டாக்டர் என்பவர்.. ஓர் இளைஞர் தான்.. ஆனால்.. ஊரில மதில் மேல சில காவாலிகள் இருக்குங்கள்.. அது போல இருக்கார். ஒரு ஊத்தை ரீசேட்..முழுக்காற்சட்டை அப்படி இப்படின்னு..

மனதுக்குள்.. ஐயையோ.. உதட்ட வந்து மாட்டிட்டமே... என்று நினைக்கிறத்துக்குள்ள..

டாக்டர்.. தமிழின தான் கேட்டார்.. என்ன பிரச்சனை என்று.

நானும் பிரச்சனையை சொன்னன்.

உடம்பு பூரா கடியோ இல்ல.. சில இடங்கள் தானோ என்று. 

உடம்பு பூரான்னு இல்ல.. முக்கியமா உடுப்புக்கு வெளியில்.. வெளிப்படும்.. பாகங்களில் என்றேன்..

பெரும்பாலும்.. உது நுளம்புக்கடியாத் தான் இருக்கும்.. நீங்கள் யோசிக்கத் தேவை இல்லை என்றார்.

நான் சொன்னேன்.. இல்லை நான் நுளம்பு வலைக்குள்ள தான் தூங்கிறனான். இந்தளவுக்கு நுளம்பு கடிக்கிறதுக்கு வாய்ப்புக் குறைவு என்றேன்..

இது எப்ப இருந்து ஆரம்பிச்சது என்றார்...

இந்த நாட்டுக்கு வந்திறங்கின நாளில இருந்து ஆரம்பிச்சுட்டு என்றேன்..

அப்ப நீங்கள் வெளிநாடோ என்றார்..

ஓம்.. வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கிறேன்.. என்றேன்..

உள்ள வரேக்கையே தெரிஞ்சது... நான் நீங்கள் தப்பா நினைப்பீங்களோ என்று கேட்கவில்லை.. இது பெரும்பாலும் நுளம்புக்கடி தான். வேற பிரச்சனை இருக்கோ என்றார்.

ஆம் தொண்டை நோவும்.. இருக்குது என்றேன்.

-- அப்படியா.. என்று வாயை திறந்து ரோச் அடிச்சுப் பார்த்திட்டு..--

பெரிசா ஒன்னுமா தெரியல்ல.. வைரல் தாக்கமா இருக்கும்.. அதுக்கு மருந்து தாறன்.. என்றார்.

வைரல் தாக்கத்துக்கு மருந்தா.. அல்லது நோவுக்கு மருந்தா என்றேன்..

நோவுக்கு என்றார்.

நான் சொன்னேன்.. இது அலேர்ஜியா இருக்கலாம்.. தூசி சம்பந்தப்பட்டு.. இங்க காற்றில சரியான தூசு.. எதுக்கும் நான் கேக்கிற மருந்தையும் எழுதுங்கோவன் என்றேன்.. நான் மருந்தின் பெயரைச் சொன்னதும்..

அதுக்கு... நீங்கள் பிரிஸ்கிரிப்சன் கொடுக்கத் தேவையில்லை.. கவுன்டரில் கேளுங்கள் தருவினம் என்றார்.

இல்லை.. அவை தான் கேட்டவை என்றேன்.

அவை.. மாறிக் கேட்டிட்டினம்.. போல.. 

நீங்கள் நான் சொன்னது என்று சொல்லுங்கோ.. தருவினம்.

அப்ப நன்றி டாக்டர் என்று அவர் எழுதின மருந்துத் துண்டோடு வெளியில் வந்து..

அந்த மருந்தக அம்மையாரிடம்... சென்று.. அந்த துண்டையும் கொடுத்து நான் முன்னர் கேட்ட மருந்தையும் கேட்க.. ஒரு சத்தமும் இல்லாமல்.. இரண்டையும் தந்தார். அத்தோடு... டாக்டர் பார் கூலி 1500 + மருந்து + உதவியாளர் கொடுப்பனவு = 2500 ரூபாக்கு பில்.

நான் கேட்டேன்.. இந்த மருந்தை முதலே தந்திருந்தால்.. நான் 250 ரூபா செலவோடு போயிருப்பன்.  இப்ப 2500 ரூபா செலவு. எதுக்கு.. 

இல்லை.. நாங்கள் வெளியார் வந்தால்.. செக் பண்ணித்தான் மருந்து கொடுக்கிறது என்றார்.

இதுக்கு மேல.. அவர்களுடன் நின்று தகராறுப்பட விருப்பாமல்.. நான் வெளியேறிப் போய் விட்டேன்.

நான் நினைக்கிறேன்.. குறித்த மருந்தகம்.. மற்றும் தனியார் வைத்தியசாலை மாலை நேரத்தில்.. பயிலுனர் டாக்டர்களை வைச்சு இப்படிப் பிழைப்பை ஓட்டுதுன்னு. 

 

இதை ஏன் இங்க எழுதிறேன் என்றால்..

மக்கள் மட்டுமல்ல.. நம் டாக்டர்களும் பலே கில்லாடிகள் தான். அதுவும் ஊரில்..... சப்பா.. பார்த்திருக்கப் பகற்கொள்ளை நடக்கும். 😂

----------------------

ஆ... அந்தக் கடிக்கு என்னாச்சுது... என்றால்.. அது எந்த மருந்து சாப்பிட்டும் நிற்கவில்லை. மருந்து சும்மா சாப்பிட்டது தான் மிச்சம். தொண்டை நோவும் மாறவில்லை. ஊரில் இருந்து கிளம்பி.. மீண்டும் வாழிடம் வந்து இரண்டு நாளில் எல்லாம் அடியோடு ஓடிவிட்டது.

இன்னும்.. அதற்கான காரணம்.. புரியவில்லை. ஒன்றில்.. தூசி.. சம்பந்தப்பட்ட ஒவ்வாமை..இல்ல.. தூசி சம்பந்தப்பட்ட தொற்றுகள் காரணமாக இருக்கலாம். அல்லது நுளம்புக்கடி.. + மற்றைய காரணிகள்.. கூட்டு. 

ஆனால்.. அது யாழ்ப்பாணத்தூசி என்றில்லை.. கொழும்புத் தூசி.. கண்டித்தூசி.. குருணாகல் தூசி.. எல்லாத்துக்கும் கடிதான். 

இப்ப அங்கு டாக்குத்தர்மார் வலு சிம்பிள் தெரியுமோ?...நீங்கள் போட்ட சோப் ஒத்துக் கொள்ளவில்லையாக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில எங்கட வீட்டுக்கு முன்னால கொஞ்சாம் தள்ளி இருந்த ஒரு அன்டிக்கு வேலை ரோட்டுல நின்று கொண்டு போற , வாற ஆட்களை பற்றி கிரந்தம் கதைக்கிறது அதுவும் பொம்பிளை பிள்ளையளை பற்றி கண்ணு,மண்ணு தெரியாமல் கதைக்கிறது...ஒரு நாள் பள்ளிக்கு போன அவன்ட மகள் வீட்டுக்கு வரேல்ல...அந்த அக்காவை யாரோ அண்ணா தள்ளிட்டு போயிட்டாங்களாம் 


நந்தனுக்கு நான் என்ன சொல்ல வாறன் என்று விளங்கி இருக்கும்...விளங்காட்டில் பெருமாள் விளங்கப்படுத்துவார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில எங்கட வீட்டுக்கு முன்னால கொஞ்சாம் தள்ளி இருந்த ஒரு அன்டிக்கு வேலை ரோட்டுல நின்று கொண்டு போற , வாற ஆட்களை பற்றி கிரந்தம் கதைக்கிறது அதுவும் பொம்பிளை பிள்ளையளை பற்றி கண்ணு,மண்ணு தெரியாமல் கதைக்கிறது...ஒரு நாள் பள்ளிக்கு போன அவன்ட மகள் வீட்டுக்கு வரேல்ல...அந்த அக்காவை யாரோ அண்ணா தள்ளிட்டு போயிட்டாங்களாம் 

உந்த கதையை எங்கையோ கேள்விப்பட்டமாதிரி கிடக்கு......அது சரி அந்த ஆன்டியை டாக்குத்தர் தனிய கூப்பிட்டு வருத்தம் பாத்தவரோ? tw_glasses:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.