Jump to content

அமெரிக்கா போர் அச்சுறுத்தலை விடுக்காது ஈரானை மரியாதையுடன் நடத்த வேண்டும் - ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா போர் அச்சுறுத்தலை விடுக்காது ஈரானை மரியாதையுடன் நடத்த வேண்டும் - ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர்

 

அமெ­ரிக்­கா­வா­னது  ஈரானை   போர் அச்­சு­றுத்தல் விடுப்­பதை விடுத்து  மரி­யா­தை­யுடன் நடத்த வேண்டும் என  ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர்  மொஹமட் ஜாவத் ஸரீப் அழைப்பு விடுத்­துள்ளார்.

ஈரான் போரில் ஈடு­பட விரும்­பு­மானால் அது அதற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மான முடி­வா­கவே அமையும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் அச்­சு­றுத்தல் விடுத்து  ஒரு நாள் கழித்து ஈரா­னிய  வெளிநாட்டு அமைச்சர் மேற்­படி அழைப்பை விடுத்­துள்­ளமை  குறிப்­பி­டத்­தக்­கது.

"அமெ­ரிக்க ஜனா­தி­பதி வர­லாற்றை நோக்க  வேண்டும். ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் அனை­வரும் சென்­று­விட்ட  நிலையில்  ஈரா­னி­யர்கள் மிலேனியம் ஆண்­டுக்­காக நிமிர்ந்து நிற்­கின்­றனர். அத­னது பணிக்­காக அதற்கு மரி­யாதை செய்ய முயற்­சி­யுங்கள்"  என ஜாவத் ஸரீப் தெரி­வித்தார்.

 ஈரா­னி­ட­மி­ருந்­தான தாக்­குதல் அச்­சு­றுத்­தலைக் காரணம் காட்டி அமெ­ரிக்கா வளை­குடா பிராந்­தி­யத்தில் அண்­மைய நாட்­களில் மேலும் தனது போர் கப்பல்களையும் விமா­னங்­களையும் நிலை­நி­றுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கி­றது.

 அமெ­ரிக்­காவில் கல்வி கற்­ற­வ­ரான  ஜாவத் ஸெரீப்   இதற்கு முன்னர் அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனால்ட் ட்ரம்பால் வெளியி­டப்­பட்ட விமர்­ச­னங்கள் குறித்து பாராட்டைத் தெரி­வித்து வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் பகு­தி­யாக அர­சாங்­கத்­திற்கு உடை­மை­யான தஸ்னிம் செய்தி முகவர் நிலையம்  ஈரானின்  அணு­சக்தி நிலை­யத்தின் பேச்­சா­ள­ரான பெஹ்ரோஸ் கமல்­வன்­டியை  மேற்­கோள்­காட்டி வெளியிட்ட செய்­தியில், பொது­மக்­களின் பயன்­பாட்­டுக்கு பொருத்­த­மான   அணு­சக்தி உற்­பத்­திக்­காக யுரே­னிய உற்­பத்­தியை 3.67 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

குறைந்­த­ளவில் செறி­வாக்­க­ப்பட்ட யுரே­னிய உற்­பத்­தியை  நான்கு மடங்­காக அதி­க­ரிக்கும் நகர்வு குறித்து சர்­வ­தேச அணு­சக்தி நிலை­யத்­துக்கு  அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தாக கமல்­வன்டி தெரி­வித்­துள்ளார்.

அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் கைச்­­சாத்­திட்ட ஏனைய நாடு­க­ளான  ரஷ்யா, சீனா,  பிரித்­தா­னியா,  பிரான்ஸ், ஜேர்­மனி  ஆகிய நாடுகள்  60 நாட்­களில் தனது  முக்­கிய எண்ணெய் மற்றும் வங்கித்துறை­களை  பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் தாம் யுரே­னிய மட்­டத்தை 3.67 சத­வீ­தத்­திற்கும் அப்பால் மேற்­கொள்ள நேரிடும் என ஈரான் எச்­ச­ரிக்கை விடுத்துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட்  ட்ரம்ப் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவால் கைச்­சாத்­தி­டப்­பட்ட  அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யா­னது  ஈரா­னிய ஏவு­க­ணைகள் மற்றும்  மத்­திய கிழக்­கி­லான பிரச்­சி­னை­களில் அதன் வகிபாகம் என்பவற்றை  உள்ளடக்கவில்லை என குற்றஞ்சாட்டி அந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை  வாபஸ் பெற்றுக் கொண்டது முதற்கொண்டு ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

இன்றைய நிலைமை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் பொருத்தமானதாக இல்லை அதனால் எதிர்த்து நிற்பதே  ஒரே தெரிவாகவுள்ளது என ஈரானிய ஜனாதிபதி  ஹஸன் ரோஹானி தெரிவித்ததாக அந்நாட்டு ஐ.ஆர்.என்.ஏ. ஊடகம் நேற்று முன்தினம்  திங்கட்கிழமை இரவு அறிக்கையிட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56455

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.