Jump to content

‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’

எம். காசிநாதன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:00 Comments - 0

image_777f00c9a5.jpgஇந்திய மக்களவைக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. டொக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றில், சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு ஆகியன நடந்து முடிந்திருக்கின்றன. 

இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான, அச்சாரமாக அமையுமா அல்லது ஆட்சி கலைவதற்கான காரணமாக உருவெடுக்குமா என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் நடப்பது இடைத் தேர்தல் என்றாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பம்பரமாகச் சுற்றி, அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி மீதான தாக்குதல், பிரதமர் மோடி மீதான தாக்குதல் என்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.கவின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஸ்டாலின் மீதான தாக்குதல், தினகரன் மீதான தாக்குதல் என்று பிரசாரத்தை முடித்தார். 

ஆனால், நடிகர் கமல்ஹாசனின் பிரசாரம்தான் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தை திடீரென்று அகில இந்திய அளவில் திசை திருப்பியது. “மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேதான், முதல் இந்துத் தீவிரவாதி” என்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல் வெடிகுண்டை வீசினார். உடனே பா.ஜ.கவும், அதன் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவும் கமல்ஹாசன் மீது தாக்குதலைத் தொடுத்தன. 

அமைச்சராக இருக்கும் ராஜேந்திரபாலாஜி, எல்லையைத் தாண்டி “கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்” என்றார். பின்னர் ஒரு கட்டத்தில் “ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் பணம் வாங்கிக் கொண்டு கமல்ஹாசன் பேசுகிறாரா என்பதை இந்தியஉளவுத்துறை விசாரிக்க வேண்டும்” என்றே கோரிக்கை விடுத்தார். 

அதேநேரத்தில் கமலின் இந்த ‘இந்து தீவிரவாதி’ பிரசாரத்துக்கு திராவிட கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அ.தி.மு.க கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தி.மு.க கூட்டணியின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினோ நடிகர் கமலின் பேச்சுப் பற்றி கருத்துக் கூறவில்லை. 

அதேநேரத்தில் எதிர்பாராத விதமாக, குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் உடன் பதில் சொல்லாத பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமலின் கருத்துக்கு மறு கருத்துச் சொன்னார். “எந்த ஓரு் இந்துவும் தீவிரவாதியாக இருப்பதில்லை” என்று சுடச்சுட பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார்.

ஆகவே, கமலின் ‘இந்து தீவிரவாதி’ பிரசாரம் ஏதோ ஓர் அரவாக்குறிச்சி இடைத் தேர்தலில் சிறுபான்மையின சமுதாயத்தின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல, அந்த பிரசாரத்தின் பின்னணி அகில இந்திய அளவில் இருக்கிறது என்பது பிரதமர் உடனே பதிலளித்த விதத்தில் எதிரொலித்தது. 

தமிழ்நாடு தேர்தல் களம், இதுவரை இந்து, இந்து அல்லாதோர் என்ற பிரசாரக் களத்தைப் பார்த்தது இல்லை. பா.ஜ.க பல வருடங்களாகத் தேர்தல் களத்தில் தமிழ்நாட்டில் போட்டியிட்டாலும், இந்த முறை போல் இந்து மத உணர்வுகள் அடிப்படையில் இவ்வளவு ஆவேசமாக பிரசாரத்தை மேற்கொண்டதில்லை. சமூக வலைத்தளங்களிலும் முழு வீச்சில் பிரசாரம் நடைபெற்றதில்லை. 

அதற்கு முக்கியக் காரணம், இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்தார். அவர் மீது சிறுபான்மை மக்கள் அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதற்காக தி.மு.கவில் உள்ள இந்து வாக்காளர்கள் கருணாநிதியிடம் கோபித்துக் கொள்ளவில்லை. 

அ.தி.மு.கவின் சார்பில் ஜெயலலிதா களத்தில் இருந்தார். அவரை பொதுமக்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவும் கூட, இந்துக்களின் உணர்வுகளின் ஆதரவாளராகவே பார்த்தனர். உ.பியில் ராமர் கோவில் கட்ட கரசேவைக்கு தமிழகத்தில் இருந்து தொண்டர்களை அனுப்பியது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவளித்தது என்று பா.ஜ.கவை விட, ஜெயலலிதா மிகவும் உறுதியாக இருந்தார். ஆகவே அவரது தலைக்கு மேல் சென்று, இந்துமத உணர்வாளர்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க நம்பவில்லை. 

அதேபோல், “கருணாநிதி இந்து மத விரோதி” என்று பிரசாரம் செய்து அனைத்து இந்துகளின் ஆதரவையும் பெற்றுவிட முடியும் என்றும் பா.ஜ.க. நினைக்கவில்லை. அதனால் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த தேர்தல்களில் பா.ஜ.க, இந்துமத உணர்வுகள் அடிப்படையில், ஏன் இந்துத்துவா பிரசாரத்தை முன் வைத்துச் செல்வதில் பின்னடைவு பெற்ற நிலையிலேயே இருந்தது. 

ஆனால் தற்போது ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்ற நேரத்தில், திராவிட இயக்க உணர்வுகளைப் பின்னுக்குத்தள்ளி இந்துத்துவா களத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் தேர்தலை பா.ஜ.க சந்தித்தது. 

பா.ஜ.கவின் இந்தப் பிரசாரத்துக்கு மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் அ.தி.மு.கவும் ஒத்துழைத்தது. ஆகவேதான், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கிருஷ்ணர் பற்றிக் கூறிய கருத்துகளுக்கு அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் போட்டி போட்டுக் கொண்டு கண்டனக் கணைகளைத் தொடுத்தன. குறிப்பாக தி.கவை விட தி.மு.க மீதுதான் அதற்காகக் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி, “இந்துக்கள் யாரும் தி.மு.கவுக்கு வாக்களிக்கக் கூடாது” என்றே பிரசாரத்தை சூடுபிடிக்க வைத்தன.

அதன் தொடர்ச்சியை அரவாக்குறிச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏப்ரல் 18ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர்களுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள், தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டாம் என்று கருதும் வாக்காளர்கள் எல்லாம் கணிசமாக வாக்களித்துள்ளார்கள் என்று பரவலான கருத்து நிலவுகிறது. ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் உருவாகலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. 

அந்த வேளையில், ரஜினி அரசியலுக்கு வராத நிலையில், நடிகர் கமல்ஹாசனின் கட்சி இப்போதுள்ள திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வரும் என்ற எண்ணம் பா.ஜ.கவில் உள்ள பல தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அ.தி.முகவை வழி நடத்திய ஜெயலலிதாவின் இடத்தில் வைத்து, நடிகர் கமல்ஹாசனை அவர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே, இவரை முன் நிறுத்தி இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் முழு வீச்சில் கொண்டு வந்து விட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இந்துத்துவா மற்றும் இந்துத்துவா அல்லாதோர் என்ற அரசியல் மட்டுமே தமிழகத்தில் நடக்க வேண்டும் என்றும் பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் விரும்புகிறார்கள். 

திராவிட அரசியலைப் பின்னுக்குக் கொண்டு சென்று, இந்துத்துவா அரசியலை முன் வைக்க, தமிழக மக்களின் மனதில் பதிய வைக்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத இந்தத் தருணமே தக்க தருணம் என்று பா.ஜ.கவின் சிந்தனையாளர்கள் எண்ணுகிறார்கள். அதன் தாக்கமே நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சும் அதற்கும் உடனடியாக வட இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கமும் ஆகும். 

சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் தற்போது தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளிடம் உள்ள இந்து வாக்காளர்கள் மத்தியிலும் நடிகர் கமல்ஹாசன் இடம்பிடித்துக் கொள்ள வேண்டும். முழுக்க முழுக்க இந்துத்துவா எண்ணம் கொண்ட மக்களைக் கடுமையான பிரசாரத்தின் மூலம் அதிகப்படுத்தி அந்த ஆதரவை பா.ஜ.க பெற்றுவிட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் முக்கிய நோக்கம். 

அதை நிறைவேற்றும் வகையில்தான், இந்த நான்கு இடைத் தேர்தல்களில் குறிப்பாக அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு அகில இந்திய முக்கியத்துவம் கிடைத்தது.

திராவிட அரசியல் பற்றிப் பேசுவதற்கு இப்போது தி.மு.கவிலும் சரி, அ.தி.மு.கவிலும் சரி, முக்கியத் தலைவர்கள் இல்லை என்பதைத் திடமாக பா.ஜ.க நம்புகிறது. தி.மு.க ஆரம்பித்து 70 வருடங்கள்; அ.தி.மு.க தொடங்கி 47 வருடங்கள். இந்நிலையில் திராவிட இயக்கக் கொள்கைகள் பலவீனமடைந்து விட்டன என்று இந்துத்துவா ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். ஆகவே, இந்துத்துவாக் கொள்கையை, முழு வீச்சில் தமிழகத்தில் பயன்படுத்தி, ஆட்சிக்கு வந்து விட முடியும் என்பது பா.ஜ.கவின் தொலைநோக்கு கணிப்பு. 

‘இந்துத்துவா என்ற துருவத்துக்கு பா.ஜ.க; எதிர் துருவத்துக்கு நடிகர் கமல்ஹாசன்’ ‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது அரங்கேறி விட்டது. விழித்துக் கொள்ள வேண்டியது திராவிட இயக்கங்கள் தானே தவிர, தமிழக மக்கள் அல்ல. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்துத்துவா-வரும்-பின்னே-மணியோசை-வரும்-முன்னே/91-233345

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.