Jump to content

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள்

என்.கே. அஷோக்பரன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:08 Comments - 0

பகுதி -1   

மிகக்கோரமான உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, அச்சமும் துயரமும் பயங்கரமும் இலங்கை மக்களின் மனதை, மீண்டும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ள வேளையில், அரசியல் பரப்பில், முக்கியமான சில காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.   

இந்தக் காய் நகர்த்தல்கள் எல்லாம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, இடம்பெற்று வருவதையும் உணரக் கூடியதாக உள்ளது.   

2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி, நடைபெற்ற ‘வரலாற்று முக்கியத்துவம் மிக்க’ ஜனாதிபதித் தேர்தலின் ஞாபகங்கள் கூட, இன்னும் இலங்கையர்களின் மனதிலிருந்து நீங்கியிருக்காது.   

2009இல் யுத்தத்தை வென்ற வீரத் தலைவனாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்கிருக்கும் பெரும்பான்மை மக்கள் செல்வாக்கின் உச்சத்தில், ஜனநாயக விழுமியங்களிலிருந்து நீங்கி, எதேச்சதிகாரம், வல்லாட்சி, குடும்ப ஆட்சி என்ற வழியில், அரசமைப்பு ரீதியில் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதிக்கு இருந்த, குறைந்தபட்ச மட்டுப்பாடுகளைக் கூட இல்லாதொழித்து, ஒரு சர்வாதிகாரியாகும் பாதையின் உச்சத்தில் நின்றிருந்த பொழுதில், ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் வேண்டிய பல்வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து, பொது வேட்பாளராக, அதுவரை மஹிந்தவின் அமைச்சரவையில் முக்கிய அங்கத்தவராக இருந்த மைத்திரிபால சிறிசேனவைக் களமிறக்கின.   

2015 ஜனாதிபதித் தேர்தல் என்பது, மஹிந்த எதிர் மைத்திரி அல்ல; அது மஹிந்தவா, இல்லையா என்ற கேள்வியையே, இலங்கை மக்களுக்கு முன்பாக வைத்தது. தான் எப்படியும் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில், தனது பதவிக்காலம் முடிவதற்குச் சிலகாலமிருந்தும் கூட, முன்னதாகவே மஹிந்த தேர்தலுக்குச் சென்றிருந்தார்.   

தேர்தல் பிரசாரக் காலம் முழுவதும், அரச இயந்திரம் முழு மூச்சுடன் மஹிந்தவின் வெற்றிக்காக உழைத்தது என்றால் அது மிகையல்ல. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, அவருடைய வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருவதை அவரே உணர்ந்திருப்பார். 2015 ஜனவரி ஒன்பதாம் திகதி அதிகாலை, தன்னுடைய தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய அரண்மனையாகவே அவர் மாற்றியிருந்த அலரி மாளிகையில் இருந்து, மஹிந்த வௌியேறினார்.   

நல்லாட்சி தருவதாக வாக்களித்து, தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால ஜனாதிபதியானார்.   
தொடர்ந்து, ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ‘நல்லாட்சி’ வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருந்தார்கள். ஆனால், மஹிந்தவை எதிர்க்க ஒன்றிணைந்தவர்களால், அந்த ஒற்றுமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.   

விளைவு, மைத்திரி நல்லாட்சியை மறந்துவிட்டுத் தன்னையும் தன் கட்சியையும் பலப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். நல்லாட்சிக்காக ஒன்றிணைந்தவர்களின் ஒற்றுமை, அடுத்த சில மாதங்களிலேயே அர்த்தமற்றதாகிப் போனது. அடுத்த சிலமாதங்களில், இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரை கூட, அவர்களால் அந்த ஒற்றுமையைப் பேணிப்பாதுகாக்க முடியவில்லை.   

அதன் பின்னர், தற்காலிக மற்றும் சந்தர்ப்பவாத ஒற்றுமையாகவே, இன்றுவரை நல்லாட்சி அரசாங்கம் கொண்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இடைநடுவே உருவான ஊழல் குற்றச்சாட்டுக்கள், குறிப்பாக மத்தியவங்கி முறிகளில் இடம்பெற்ற ஊழல், நல்லாட்சி மீது மட்டுமல்ல, இதுவரை காலமும் ‘கனவான்’ பிம்பத்தைக் கொண்டிருந்த பல தலைவர்களின் மீது அழியாக் கறையை ஏற்படுத்திவிட்டது.   

ஏனோ தானோவென்றே, நிலையுறுதியில்லாது நல்லாட்சி அரசாங்கம் சென்று கொண்டிருந்த வேளையில்தான், 2018 பெப்ரவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. அதுவரை மஹிந்த ராஜபக்‌ஷ நேரடியாகத் தலைமையேற்காவிட்டாலும், அவரது தலைமையில் புதிதாக உருவான ‘மொட்டு’ (சிங்களத்தில் பொஹொட்டுவ) என்று அவர்களது சின்னத்தைச் சுட்டி, பொதுவாக விளிக்கப்படும் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ (இலங்கை பொதுமக்கள் முன்னணி) போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளோடும் ஒப்பிடுகையில், அதிகபட்ச வாக்கு சதவீதத்தைப் (40.47%) பெற்றிருந்தது. இது ராஜபக்‌ஷ குழுமத்துக்குப் புது நம்பிக்கையை அளித்தது.   

ஒரு புதிய கட்சி, அது தொடங்கிய மாத்திரத்திலேயே இத்தகைய மக்களாதரவைப் பெறுவதானது, நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. இதில் மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிநபரின் செல்வாக்கு முக்கியமானது என்றாலும், மறுபுறத்தில், நல்லாட்சி அரசாங்கத்தின் சொதப்பல்களும் மஹிந்தவின் இந்த மறு பிரவேசத்துக்குப் பெரும்பங்களித்தன என்பதை மறுக்க முடியாது.   

இந்தச் சூழலில் தான், 2018இல், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் குறிப்பாக, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது. ‘ரணிலோடு வேலை செய்ய முடியாது’ என்ற நிலை உருவானதாக, 2018இல் மைத்திரி குறிப்பிட்டிருந்தது, நாம் இங்கு கருத்திற்கொள்ளலாம்.   

ஆனால், இது வெறும் இணைந்து இயங்க முடியாத பிரச்சினை என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. இதற்குள் நிச்சயமாக வேறு பிரச்சினையொன்று இருக்க வேண்டும். அந்தப் பிரச்சினை அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றியது என்பதுதான் இங்கு பொதுவான ஊகம்.   

2015 ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரி பொது வேட்பாளராகக் களமிறங்கியபோது, தன்னுடைய பேச்சுகளில், தான் ஒரு முறை மட்டும்தான் ஜனாதிபதி பதிவியிலிருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் அன்று மைத்திரியை ஆதரித்த ஒன்றிணைந்த கட்சிகளினதும், ஏனைய அமைப்புகளினதும் நிலைப்பாடாகவும் இருந்தது.   

மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதும், ஒருவர் இருமுறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்ற மட்டுப்பாட்டை மீளக் கொண்டுவருவதும் எல்லாம் மைத்திரியின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.   

அரசமைப்புக்கான 19ஆம் திருத்தத்தினூடாக, 18ஆம் திருத்தத்தினூடாக மஹிந்த தகர்த்தெறிந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி மீதான பல மட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், சில மட்டுப்பாடுகளிலிருந்து, தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிக்கு மட்டும் விதிவிலக்களிக்கப்பட்டது. அந்த மட்டுப்பாடு, எதிர்கால ஜனாதிபதிகளுக்கு மட்டுமே வலுவுள்ளதாக அமையும். குறிப்பாக, ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொள்வது அவ்வாறு விதிவிலக்களிக்கப்பட்ட மட்டுப்பாடுகளில் ஒன்று.   

ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது? தான் முன்னர் அளித்த வாக்குறுதிகளை மீறி, இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகும் முயற்சியில் மைத்திரி செயற்படத் தொடங்கியமை அனைவருக்கும் வெட்டவௌிச்சமாகவே தெரிந்தது. ஆனால், மஹிந்த தரப்பு மீண்டும் பலமடையத் தொடங்கியிருந்த வேளையில், தான் மீண்டும் பொது வேட்பாளராகக் களமிறங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.   

ஆனால், அதற்கு ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிச்சயம் தயாராக இருந்திருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்வதானால், சுதந்திர இலங்கையின் பழம்பெரும் தேசியக் கட்சியாக, ஐக்கிய தேசியக் கட்சி இருந்தும், கடந்த 25 வருடங்களாக, அவர்களால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இதில், கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில், ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேயில்லை. மாறாகப் பொதுச் சின்னமொன்றில், பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கி அவரை ஆதரித்திருந்தது.   

அதிலும் 2015இல், தமது பிரதான வைரியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கும் நிலைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினர் தள்ளப்பட்டிருந்தனர். அரசியல் ரீதியான காய்நகர்த்தல்களைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையின் இந்த முடிவுகள் சரியானதெனக் கருத முடியும். என்றாலும், கட்சித் தொண்டனுக்கு, இது தொடர்ந்தும் பலத்த ஏமாற்றத்தைத் தந்துகொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.   

ஆகவே, அடுத்த முறையேனும், ஐக்கிய தேசியக் கட்சி, தன்னுடைய தலைவரை அல்லது தன்னுடைய சொந்தக் கட்சி முக்கியஸ்தரை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டிய சூழ்நிலைக் கட்டாயம், கட்சிக்குள் இருக்கவே செய்கிறது. மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதிக் கனவு நிறைவேற வேண்டுமானால், 2020ஐத் தாண்டி, வேறொரு சந்தர்ப்பம் அவருக்கு அமையாது. ஆனால், ரணிலுக்கு இன்னோர் எண்ணமும் இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதையும் இங்கு கூர்மையாக அவதானிக்க வேண்டும்.   

19ஆம் திருத்தத்தினூடாக, நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீதான மட்டுப்பாடுகள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடுத்து இன்னொரு திருத்தத்தினூடாகவோ அல்லது புதிய அரசமைப்பினூடாகவோ நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை மாற்றியமைக்கும் திட்டம் ரணிலிடம் நீண்ட காலமாகவே இருப்பதையும் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். அதற்கான முஸ்தீபுகளையும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்திருக்கிறார்.   

ஆகவே, ஜனாதிபதியாகும் தனது நிறைவேறாத கனவை அவ்வாறு விட்டுவிட்டு, அதிகாரம் மிக்க பிரதமராகத் தன்னை உருவாக்கிக்கொள்ளும் எண்ணத்தில் ரணில் இருக்கலாம். எது எவ்வாறெனினும், ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரியை மீண்டும் ஆதரிக்காது என்ற நிலைப்பாடு, வெட்டவௌிச்சமாக மக்களுக்கும் மைத்திரிக்கும் புரிந்த நிலையில்தான், தன்னுடைய அடுத்த காய்நகர்த்தலை, மைத்திரி மேற்கொண்டார்.  அதுதான் மைத்திரி, 2018 ஒக்டோபர் 26 அன்று, ரணிலைப் பிரதமர் பதிவியலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததனூடாக ஏற்படுத்திய அரசமைப்புச் சிக்கல்.   

‘மஹிந்த மீண்டும் ஜனாதிபதியானால், தானும் தன்னுடைய குடும்பமும் மண்ணில் புதைக்கப்படுவோம்’ என்ற தொனியில், 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் முழங்கிய மைத்திரி, 2018 ஒக்டோபரில், அதே மஹிந்தவை அழைத்துப் பிரதமராக, அதுவும் அரசமைப்புக்கு முரணான வகையில், நியமித்தார்.   

அடுத்த 52 நாள்கள், இலங்கை பெரும் அரசமைப்பு நெருக்கடிக்குள் சிக்கித் தவித்தது. நாடாளுமன்றம், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களால் வன்முறைகொண்டு முடக்கப்பட்டது. மைத்திரி-மஹிந்தவின் அரசமைப்புக்கு எதிரான சதிப்புரட்சியை, பொதுமக்கள் வீதிக்கு இறங்கி எதிர்த்தார்கள். மேன்முறையீட்டு நீதிமன்றில், மஹிந்த தலைமையிலான சட்டவிரோத அமைச்சரவைக்கு எதிராகவும் மீயுயர் நீதிமன்றில், நாடாளுமன்றம் சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டதுக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.   

மேன்முறையீட்டு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அமைச்சரவை இயங்குவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. மீயுயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசமைப்புக்கு முரணாணது என்று தீர்ப்பளித்து, குறித்த கலைப்பை இரத்துச் செய்தது. இத்தோடு 52 நாள் கூத்து முடிவுக்கு வந்தது.   

ஆனால், 2018இல் ஏறிக்கொண்டு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் செல்வாக்கையும் ஆதரவையும் இந்த 52 நாள் கூத்து, பொதுமக்களிடையே பெரிதும் சிதைத்தது என்றால் அது மிகையல்ல. ஏற்கெனவே செல்வாக்கின்றி, பிரபல்யம் இழந்துபோயிருந்த மைத்திரி, மேலும் பிரபல்யம் இழந்தார்.  இப்படி ஓர் ஆபத்தான செயலை, ஏன் மைத்திரியும் மஹிந்தவும் செய்ய வேண்டும்? இதனால் யாருக்கு என்ன இலாபம்?   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதித்-தேர்தல்-முஸ்தீபுகள்/91-233346

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள்

என்.கே. அஷோக்பரன் / 2019 மே 27 திங்கட்கிழமை, பி.ப. 05:36 Comments - 0

(பகுதி - 2)

ஒக்டோபர் 26, 2018 அன்று அரங்கேறி, அடுத்த 52 நாள்கள் தொடர்ந்த அரசமைப்பு நெருக்கடி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இருவரினதும் பெயருக்கும் பிரபல்யத்துக்கும் கடும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருந்தது.  

இதில், ஏலவே பிரபல்யம் இழந்திருந்த மைத்திரி, இன்னும் பிரபல்யம் இழந்ததில் அதிகம் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், 2018இல் பொதுஜன பெரமுனவை (மொட்டுக் கட்சியை) தொடங்கி, தன்னுடைய அரசியல் மீள்பிரவேசத்தை முத்திரை பதித்து, ஏற்றப் பாதையில் ஆரம்பித்திருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த 52 நாள் கூத்தில் பங்கெடுத்து, தன்னுடைய பெயருக்குக் களங்கம் விளைவித்துக் கொண்டது ஏன் என்ற கேள்விதான் முக்கியமானது.   

பொதுவாகவே தன்னுடைய அரசியல் காய்நகர்த்தல்களைக் கவனமாக முன்னெடுக்கும் பக்குவம் மஹிந்தவிடம் இருக்கிறது. மொட்டுக் கட்சியை மஹிந்த ராஜபக்‌ஷவே ஆரம்பித்திருந்தாலும், அதற்கு நேரடித் தலைமையையோ, அதன் அங்கத்துவத்தையோ மஹிந்த உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை, நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.   

அடுத்த தேர்தல் வரை, பொறுமை காப்பதில் அவர் கவனமாக இருந்தார் என்பதே, அவருடைய அந்த நடவடிக்கை உணர்த்தும் செய்தியாக இருந்தது. அவ்வளவு கவனமாகக் காய்நகர்த்தல்களைச் செய்தவர், மைத்திரியுடன் 52 நாள் கூத்தில் கைகோர்த்து, தனக்குச் சற்றேனும் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டது வியப்புக்கு உரியதே.   

ரணிலைப் பதவி நீக்கி, மஹிந்தவைப் பிரதமராக நியமித்ததற்கு, மைத்திரி சொன்னதாகச் சொல்லப்படும் காரணம், “ரணிலுடன், தன்னால் வேலை செய்ய முடியாது” என்பதாகும்.   

ரணிலை நீக்க, மைத்திரி எடுத்துக் கொண்ட முதலாவது முயற்சி இதுவல்ல. 2018ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில், ரணிலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் இருந்த அழுத்தம், யாருடையது என்பது, 52 நாள் கூத்தில், இலங்கையர்கள் அனைவருக்கும் வெட்டவௌிச்சமானது.   

ஆகவே, ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்தும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதிவியிலிருந்தும் விரட்டியடிக்க வேண்டிய தேவை, ஐக்கிய தேசியக் கட்சிக்காரரைவிடவும் மைத்திரிக்கே அதிகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை எம்மால் ஊகிக்க முடிகிறது.   

ரணிலுக்கு மாற்றாக, மைத்திரி முதலில் தேர்ந்தெடுத்தது மஹிந்தவை அல்ல. ஒருவகையில் பார்த்தால், ஆளில்லாத பட்சத்தில், தன்னுடைய கடைசித் தெரிவாகவே மைத்திரி, மஹிந்தவை அழைத்து, அரசமைப்புக்கு விரோதமான முறையில், பிரதமராக நியமித்திருந்தார்.  

 52 நாள் அரசமைப்பு நெருக்கடிக் காலத்தில் வௌிவந்த தகவல்கள், வதந்திகள் என்பவற்றில் உண்மை ஏதுமிருப்பின், மைத்திரி முதலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலின் தலைமைக்குப் போட்டியாக இருந்தவர்களையே பிரதமராகப் பதவியேற்க அழைத்திருந்ததாகத் தெரிகிறது.   

ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ரணிலை ஆக்ரோஷமாக எதிர்க்கும் ‘அடுத்த தலைவர்’ என்ற நிலையில் இருப்பவர்கள் கூட, ரணிலை நீக்கி, குறுக்குவழியில் தாம் பிரதமராகும் முயற்சியை ஏற்கவில்லை என்பது, இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டியதொன்று.   

இதற்கான காரண காரியங்கள் எவ்வாறு இருப்பினும், ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியினரைவிடவும் மைத்திரி அதிகம் அக்கறைப்படக் காரணம் என்ன என்ற கேள்வி இங்கு முக்கியமானதாகிறது.   

இதில் நாம் ஊகிக்கக்கூடிய ஒரே காரணம், 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்ற மைத்திரியின் பகீரதப் பிரயத்தனமே ஆகும்.  

“ஒரு முறை மட்டும்தான் நான், ஜனாதிபதி பதவியிலிருப்பேன்” என்பது, மைத்திரி 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் முழங்கிய முக்கிய வாசகம். பதவிக்கு வரும் வரை யாவரும் புனிதர்களாக இருப்பதும், பதவிக்கு வந்தபின்னர் பதவிச்சாத்தானின் ஆசைப்பிடிக்குள் சிக்கிக்கொள்வதும், அரசியல் என்பது என்று தொடங்கியதோ, அன்றிலிருந்து உலகம் கண்டுகொண்டிருக்கும் ஒன்று. இதற்கு மிகச் சில விதிவிலக்குகளே இருக்கிறார்கள்.   

மைத்திரிக்கு நடந்ததும் நடப்பதும் இதுதான் எனலாம். இரண்டு முறை ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பிருக்கும் போது, அதனை எப்படியாவது அடைந்து கொள்ளவே அவர் முயல்கிறார். மஹிந்தவைப் போல் தானாகத் தனித்து நின்று வெல்லக்கூடிய தனிநபர் பிரபல்யம், மைத்திரிக்கு இல்லை.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி இருந்தாலும், முழுச் சுதந்திரக் கட்சியும் மைத்திரியோடு இல்லை; அதில் பெரும்பங்கு மஹிந்த ஆதரவாகவும், ஒரு பங்கு இன்னும் சந்திரிக்காவுடனும் இருக்கிறது.   

ஆகவே, ரணில் விக்கிரமசிங்கவைப் போல, ஒரு தேசியக் கட்சியின் பின்புலப்பலமும் மைத்திரிக்கு இல்லை. ஆகவே, சமகால அரசியலைப் பொறுத்தவரை, மைத்திரி அதிகாரம் நிறைந்த பதவியிலிருக்கும் ஒரு தனிநபர். 

ஆகவே, தன்னுடைய மீண்டும் ஜனாதிபதியாகும் கனவு நிறைவேற வேண்டுமானால், அதற்கு இரண்டு பிரதான தரப்புகளில் ஒன்றினது ஆதரவு அவசியம். அது ஏலவே, தன்னை ஆதரித்த ஐக்கிய தேசியக் கட்சியாக இருப்பது சாலப் பொருத்தமானது என்பதே, மைத்திரியின் முதல் தெரிவாக இருந்தது.   

தான் போட்டியிடுவதா, இல்லையா என்பது ஒரு புறமிருக்க, மைத்திரியை மீண்டும் பொது வேட்பாளராக நிறுத்தும் எண்ணம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்பதை, ரணில் விக்கிரமசிங்க மிகத்தௌிவாக, மைத்திரிக்கு உணர்த்தியிருக்கிறார்.   

ரணில்-மைத்திரி விரிசலுக்கு இதுதான் காரணம் என்பது ஊகிக்க முடியாததொன்றல்ல. ‘ரணிலோடு வேலை செய்ய முடியாது’ என்ற மைத்திரியின் கருத்துக்குப் பின்னால், இருக்கும் நிதர்சனம், ‘ரணில் என்னை மீண்டும் பொது வேட்பாளராக நிறுத்த மறுத்துவிட்டார்’ என்பதுதான்.   

தன்னுடைய பதவிக்காலத்தை நீடிக்கும் நப்பாசையுடன், மைத்திரி தன்னுடைய பதவிக்காலம் ஐந்து வருடமா, ஆறு வருடமா என்று மீயுயர் நீதிமன்றிடம் வினவியிருந்தமையும் மைத்திரிக்கு அதிருப்தி ஏற்படும் வகையில், மீயுயர் நீதிமன்று ஐந்து வருடமே அவரது பதவிக்காலம் என்ற தனது அபிப்பிராய தீர்மானத்தை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

மீண்டும் பொதுவேட்பாளராக மைத்திரி போட்டியிட, ரணில் அனுமதிக்காததன் விளைவாக ஏற்படுத்தப்பட்டதுதான், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம்; அது நாடாளுமன்றத்தில் பெருந்தோல்வியடைந்தது.   

அதன் பின்னர் கொஞ்சக் காலம் அமைதியாக இருந்த மைத்திரி, தன்னுடைய அடுத்த காய் நகர்த்தலுக்குத் தயாரானார். அதுதான் பிரதமரான ரணிலை நீக்கி விட்டு, இன்னொருவரை நியமித்தல். அது ஐக்கிய தேசியக் கட்சிக்காரராக இருப்பதையே மைத்திரி முதலில் விரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மறுத்துவிடவே, மைத்திரிக்கு எஞ்சியிருந்த ஒரே தெரிவு, மஹிந்த மட்டும்தான்.   

மஹிந்தவை, தான் பிரதமராக்கினால் மஹிந்த தரப்பின் பொது வேட்பாளராகத் தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களம் காணலாம் என்று மைத்திரி நம்பியிருக்கலாம்.   

இது தொடர்பில், இருவேறு கருத்துகளுண்டு. முதலாவது, அதற்கு வாய்ப்பே இல்லை; மஹிந்த தரப்பு ஒரு போதும் அதனை விரும்பப் போவதில்லை என்பதாகும். இதற்கு மாற்றான கருத்து யாதெனில், தான் தேர்தலில் நிற்க முடியாது என்ற பட்சத்தில், தன் தரப்பில் யாரை நிறுத்துவது என்பது மஹிந்தவுக்கு மிகச்சிக்கலானதொரு தெரிவு.   

கோட்டாபய ராஜபக்‌ஷ என்பது, பொதுவாகச் சொல்லப்பட்ட பெயராக இருந்தாலும், கோட்டாபயவை ஆதரிப்பதில் மஹிந்தவுக்கு நிறையத் தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது. மக்கள் மத்தியில், குறிப்பாக கொழும்பு வாழ் உயர் மத்தியதர, உயர் குழாமிடையே கோட்டாபயவுக்குக் கொஞ்சம் ஆதரவு இருக்கிறது.   

மேலும், பொதுவாகவே இலங்கை வாழ் மக்களிடையே கோட்டாபய மீதான பயம்கலந்த செயல்வீரர் என்ற அபிப்பிராயமும் காணப்படுகிறது. ஆனால், கோட்டாபயவுக்குக் கட்சி ஆதரவோ, தொண்டர் ஆதரவோ இல்லை. கோட்டாபயவின் பொதுமக்களுடனான உறவு, கட்சித் தொண்டர்களுடனான உறவு என்பது மேலிந்து கீழானதாகும். அதாவது, அதிகாரத் தோரணையுடன் கூடியதாகவே இருந்திருக்கிறது.   

ஆகவே, மஹிந்த மீதிருக்கும் ‘நம்மவர்’ என்ற உணர்வு, கோட்டா மீது கட்சியினருக்குக் கிடையாது. இது பற்றி, நாம் பின்பு விரிவாகப் பார்ப்போம். மறுபுறத்தில், மஹிந்தவின் மற்றையதொரு தம்பியான பசில் ராஜபக்‌ஷவுக்கு, கட்சிக்குள் ஆதரவு நிறையவே இருந்தாலும் (மொட்டுக் கட்சி இதுவரை பெற்ற வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தூண், பசில் ராஜபக்‌ஷவே என்றால் அது மிகையல்ல) பொது மக்கள் மத்தியில், ஊழல் கறைபடிந்தவர் எனும் அபிப்பிராயம் காணப்படுவது அவருக்குச் சாதகமானதாக இல்லை.   
மறுபுறத்தில், மஹிந்தவின் அண்ணனான சமல் ராஜபக்‌ஷவுக்கு நல்லவர் என்ற பெயர் இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குப் போதுமான பிரபல்யம் இருக்கிறதா என்பது நிச்சயமல்ல.   

மேலும், தன் குடும்பத்தவரையே மீண்டும் தேர்தல் களத்தில் இறக்கும் போது, அது ‘குடும்ப ஆட்சி’ என்ற 2015இன் முழக்கத்தை மீண்டும் ராஜபக்‌ஷவை நோக்கிச் செலுத்த வாய்ப்பளிப்பதாகவும் அமையும்.   
இந்தச் சிக்கல் எல்லாம் தான், இன்றுவரை தமது அடுத்த வேட்பாளர் யார் என்ற தெரிவை மேற்கொள்வதில், மஹிந்த தயக்கம் காட்டுவதற்கான காரணங்களாகத் தெரிகின்றன.   

மேலும், 19ஆம் திருத்தத்தின் கீழ், இன்று மைத்திரிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களில் சிலவும் கூட, அடுத்ததாகப் பதவிக்கு வரும் ஜனாதிபதிக்கு இருக்காது. இந்தச் சூழலில், மைத்திரி மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியானால், தான் பிரதமராக இருந்து கொண்டு, தனது கையில் அரசாங்கப் பலத்தை வைத்துக் கொண்டால், பலமான பிரதமராகத் தான் இருக்க முடியும் என்பதோடு, அரசமைப்புத் திருத்தத்தினூடாகவோ, புதியதோர் அரசமைப்பை அறிமுகப்படுத்துவதன் ஊடாகவோ, நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கும் ரணிலின் திட்டத்தைத் தானும் முன்னெடுக்க, மஹிந்த யோசித்திருக்கலாம்.  

ஆயினும், அரசமைப்புக்கு விரோதமான முறையில், மைத்திரி தன்னைப் பிரதமராக்கியதை மஹிந்த ஏற்றுக்கொண்டது ஏன் என்ற கேள்வி முக்கியமானது? பிரதமராகத் தொடர்வது, மஹிந்தவின் எண்ணமாக இருந்திராது. மாறாக, எப்படியாவது, நாடாளுமன்றத்தைக் கலைத்து, உடனடியாகத் தேர்தல் களம் காண வேண்டும் என்பதுதான் மஹிந்தவின் நோக்கமாக இருந்திருக்கும்.   

அதேவேளை, தேர்தலை எதிர்க்கட்சியாகச் சந்திப்பதைவிட, அரச இயந்திரத்தை கையில் வைத்திருக்கும், அரச ஊடகங்களையும் வளங்களையும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பைத் தரும் வகையில் ஆளுங்கட்சியாகத் தேர்தலைச் சந்திப்பது, சாதகமானது என்பதுதான் மஹிந்த பிரதமராகப் பதவியேற்றமையைப் புரிந்துகொள்வதற்குப் பொருத்தமானதொரு காரணமாகத் தெரிகிறது.   

ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது, அரசமைப்புக்கு முரணானது என்று மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமையும் அந்தக் கலைப்பை ரத்துச் செய்தமையும் மைத்திரிக்கு மட்டுமல்ல, மஹிந்தவுக்கும் பெரும் பின்னடைவாகும். ஒக்டோபர் 26இன் பின்னர் மைத்திரி-மஹிந்த எதிர்பார்த்திராக ஒன்று, அவர்களுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாகவும் ஏற்பட்ட மக்கள் எழுச்சியாகும். தாமாகவே மக்கள் வீதிக்கிறங்கினார்கள்.   

ஆனால், இந்த 52 நாளில் தமக்கு ஆதரவாக ஏற்பட்ட இந்த எழுச்சியை, அதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து கொண்டு சென்றதா என்று கேட்டால், அதற்கு ‘இல்லை’ என்ற பதிலை, ஒரு கணம் கூட சிந்திக்கத் தேவையில்லாது சொல்லிவிடலாம்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதித்-தேர்தல்-முஸ்தீபுகள்/91-233571

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள்

என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூன் 03 திங்கட்கிழமை, மு.ப. 03:21 Comments - 0

(பகுதி - 3)

ஒக்டோபரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, மிகநீண்ட காலத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு பெரும் எழுச்சி கிடைத்திருந்தது.  

அந்த 52 நாள்களில், வீதிக்கு இறங்கிய மக்களில் சிலர், “நாம் ரணிலுக்காகவோ, ஐக்கிய தேசியக் கட்சிக்காகவோ வீதிக்கு இறங்கவில்லை; மாறாக, எமது நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவும் எமது அரசமைப்பாட்சியைக் காக்கவுமே களம் கண்டோம்” என்று சொல்லியிருந்தாலும், அவர்களின் எழுச்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சாதகமாகவே இருந்தது என்பதுடன், அந்த எழுச்சியின் பலனையும் அவர்களே அறுவடை செய்தார்கள்.   

மிக நீண்ட காலத்தின் பின், ஐக்கிய தேசியக் கட்சி, தமக்குள் ஒன்றுபட்டு நின்ற ஒரு சந்தர்ப்பம் இது எனலாம். தலைமைப் போட்டியால் பிரிந்து நின்ற ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் கூட, ஒரே மேடையில், ஒரே குரலாக ஒலித்தார்கள். கட்சியினரிடையே புது உற்சாகம் உருவாகியிருந்தது.   

உடனடியாகத் தேர்தல் ஒன்று வந்தால், தாம் வெல்வோம் என்று மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்த நம்பிக்கை கூட, 52 நாள்கள் கூத்தின் இறுதி வாரங்களில், இல்லாமல் போயிருந்தது என்றால் அது மிகையல்ல.  

 பக்கம்சாரா வாக்காளர்கள் கூட, மைத்திரியும் மஹிந்தவும் செய்த அரசமைப்புக்கு விரோதமான காரியத்தைக் கண்டிப்புப் பார்வையுடனேயே நோக்கினார்கள். சில மஹிந்த ஆதரவாளர்கள்கூட, “மஹிந்த ஏன் இந்தக் கூத்தில் பங்காளியானார்” என்று குழம்பிக் கொண்டார்கள். 

மைத்திரி தன் பிரபல்யத்தையும் செல்வாக்கையும் முற்றிலும் இழந்திருந்த சூழலில், மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயர் 52 நாள்கள் கூத்தில் களங்கப்பட்டிருந்த நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியிருக்கலாம். 

ஆனால், தம்முடைய பதவிப் பிரச்சினை முடிவடைந்து, தாமே அரசாங்கமாகப் பதவியேற்றதும் சீறிப்பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாம்பு, மீண்டும் சத்தமில்லாது தன்னுடைய புற்றுக்குள் சென்று ஒளிந்துகொண்டதைப் போலவே, அந்த எழுச்சியை ஐக்கிய தேசியக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும் சரி வரப் பயன்படுத்தாது, அருமையானதோர் அரசியல் வாய்ப்பை, வீணாக்கிக் கொண்டார்கள்.   

மிகத் திறமையான அரசியல்வாதிகள், தமக்கான அரசியல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வார்கள். எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோர் இந்த ரகம் எனலாம். 

திறமையான அரசியல்வாதிகள், அரசியல் சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது, அதனை இறுகப் பற்றித் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். ரணசிங்க பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இந்த ரகம் எனலாம். 

மூன்றாவதாக, வாய்ப்புகள் அமைந்தும், அதனைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாத அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இந்த மூன்றாவது ரகத்தைப் போலத்தான், 52 நாள்கள் கூத்தின் பின்னரான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலையும் ஆகும். 

52 நாள்கள் கூத்தின் பின்னரான தம்முடைய நடவடிக்கைகள் ஊடாக, ஜனநாயகத்துக்கான,  அரசமைப்புக்கான மக்கள் எழுச்சியாக, உருப்பெற்றதொரு பெரும் மக்கள் சக்தியை, கடைசியில் தமது பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கானதோர் எழுச்சியாக, சுருக்கிவிட்டிருந்த சிறுமைத்தனமானதொரு விடயமாக மாற்றிவிட்டிருந்தார்கள். 

குறைந்தபட்சம் அரசமைப்புக்கு விரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கெதிரான நடவடிக்கைகளையாவது முன்னெடுத்திருந்திருக்க வேண்டும். அரசமைப்பை வௌிப்படையாக மீறிய ஜனாதிபதிக்கெதிராக, ‘பழிமாட்டறைதல்’ பிரேரணை இல்லாவிட்டாலும், ஆகக் குறைந்தது நம்பிக்கையில்லாப் பிரேரணையை என்றாலும் நிறைவேற்றியிருக்க வேண்டும். 

நாடாளுமன்றத்தை இயங்கவிடாது செய்தவர்களின், நாடாளுமன்றப் பதவிகளை இரத்துச் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். சட்டவிரோத அரசாங்கத்தைச் சட்டவிரோதமாக ஏற்றுக்கொண்ட பொதுச் சேவை அதிகாரிகளை, பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களில் தவறுள்ள பட்சத்தில், அவர்களைப் பதவி நீக்கியிருக்க வேண்டும். இதனைச் செய்வதே 52 நாள்கள் காலப்பகுதியில் வீதிக்கிறங்கி ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்கப் போரடிய மக்களுக்குச் செய்யும் நியாயமான பிரதியுபகாரமாகவும் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உபகாரமாகவும் அமைந்திருக்கும். 

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இதில் எதையும் செய்யவில்லை. தமது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதுடன் அவர்கள் அமைதியாகிவிட்டார்கள். இந்த நிலையில்தான், 2019இன் முதல் நான்கு மாதங்களும் கழிந்தன.   

2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்தெழுந்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையைப் புரட்டிப் போட்டது. அச்சமும் பீதியும் நிறைந்த சூழலில், இலங்கை மக்கள் சிக்கிக்கொண்டார்கள். நாட்டு மக்களின் அதிர்ச்சியும் அச்சமும் துன்பமும் துயரமும் தொடரும் போதே, 2019இல் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது முதற்படியை, மக்களின் அச்சத்தையும் துன்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு நபர் ஆரம்பித்திருந்தார். 

அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதம் இது என்றால், அது மிகையல்ல. 2019 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட முடியாத நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு கடந்த இரண்டு வருடங்களில் மஹிந்தவின் தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவார் என்ற கருத்து, பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

அதற்கேற்றாற் போல 2018 மே மாதத்தில், தன்னுடைய ‘வியத்மக’ என்ற செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்திய கோட்டாபய, அதனூடாக 2030க்கான இலங்கைக்கான தனது தூரநோக்குத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்போதும் சரி, அதன் பின்னரும் சரி, ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று அவர் வௌிப்படையாக அறிவிக்கவில்லை. 

‘வியத்மக’ அமைப்பை நாட்டுக்கான புத்திஜீவிகள் அமைப்பைப் போலவே, அவர் உருவகப்படுத்த முனைந்தார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டிருப்பதை அனைவரும் உணரவே செய்தார்கள். ஆனால் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலும் சரி, ஜனாதிபதியாவதிலும் சரி, ஒரு பெரிய சிக்கல் அவருக்கு இருந்தது (இருக்கிறது!?), அதுதான் அவரது அமெரிக்கக் குடியுரிமை. 

கோட்டாபய தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கும் வரை, அவரால் இலங்கை ஜனாதிபதியாகவோ, ஏன் நாடாளுமன்ற உறுப்பினராகவோ கூட ஆக முடியாது. ஒரு சிங்கப்பூர் குடிமகன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக எவ்வாறு இருந்தார் என்று கேள்வியெழுப்பும் ‘தேசபக்தர்கள்’, ஓர் அமெரிக்கக் குடிமகன் எவ்வாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார் என்று கேள்வியெழுப்பாதது மட்டுமல்ல, அவரை ஆதரிப்பதும் பெரும் நகைமுரண். 

இந்த அமெரிக்கக் குடியுரிமைச் சிக்கல் கோட்டாவுக்குப் பெரும் தடையாக வந்து நின்றது (நிற்கிறது!?). இதனால்தான், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அடித்தளத்தை அவர் ‘வியத்மக’ ஊடாகப் போட்டுக் கொண்டாலும், போட்டியிடுவதுபற்றி அடக்கியே வாசித்தார். 

ஆனால், 2019 ஜனவரியில் கோட்டாவின் ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் தீவிரப்படுத்தப்பட்டதாக அப்போது வௌிவந்த செய்திகள் குறிப்பிடுவதை நாம் அவதானிக்கலாம். ஜனவரியில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்த கோட்டா, தமது ‘வியத்கம’ அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து, அனைவரும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை இலக்கு வைத்துப் பயணிக்க வேண்டும் எனவும், கூட்டணியாகவோ அல்லது தமது அணியாகவோ களமிறங்கி அதிகாரங்களைக் கைப்பற்றும் முயற்சிகளைக் கையாள வேண்டும் என கருத்துகளை முன்வைத்துள்ளதுடன், மக்கள் மத்தியில் தம் மீதான அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொண்டு, அதில் சாதகமான தன்மைகள் காணப்படும் பட்சத்தில், அடுத்த கட்ட அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் தமது தலைமையில் முன்னோக்கிச் செல்லக்கூடிய சாதகமான காரணிகளை அமைத்துக் கொண்டால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ அதற்கு முழுமையான ஆதரவை வழங்கத்  தயாராக உள்ளதாகவும் தாம் இருவரும் கலந்துரையாடி உள்ளதாகவும் அந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளதாக, 2019 ஜனவரியில் வந்த செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

மேலும் ஒரு கூட்டத்தில், “மக்கள் தயார் என்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு நான் தயார்” என்று கோட்டா பேசியதாகவும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கோட்டாவுக்குத்  தன்னுடைய மக்கள் செல்வாக்கை, தன்னுடைய தமையனாருக்கும் நிரூபிக்க வேண்டியதொரு தேவையேற்பட்டிருந்தது என்பது உண்மை. தன் தரப்பாக யாரை நிறுத்துவது என்று மஹிந்த ராஜபக்‌ஷ முடிவெடுக்கும் போது, அதில் தவிர்க்க முடியாத தெரிவாக, தான் அமைவதற்கான முஸ்தீபுகளைக் கோட்டா செய்யத் தொடங்கியிருந்தார் என்பது இந்தச் செய்திகளிலிருந்து தௌிவாகிறது. ஆனால் அதன்பின்னர் இந்தப் பேச்சுகள் அடங்கியே இருந்தன. 

பெரும் அறிவிப்புகளோ, பரபரப்போ இடம்பெறவில்லை. ஆனால் தனக்கான ஆதரவாளர்களை, குறிப்பாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவை கோட்டா திரட்டிக் கொண்டிருந்தார். கோட்டாதான், மஹிந்த சார்பில் அடுத்ததாகப் போட்டியிடப் போகிறார் என்பது, பரவலாக அனைவராலும் உணரப்பட்டது.   

2018 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மக்கள் பெரும் அச்சத்திலும், பீதியிலும் ஆழ்ந்திருந்த சந்தர்ப்பத்தில், தாக்குதல் நடந்து சில நாள்களிலேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கோட்டா அறிவித்தார். 

இது மிகப் பெரும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், கோட்டாவின் அறிவிப்பின் பின்னர் நடந்த கூட்டமொன்றில் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். நாடே சோகத்திலும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்திருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதை அறிவிப்பதற்கு கோட்டா பயன்படுத்த என்ன காரணம்? கோட்டா ஒரு பலமான ஜனாதிபதி வேட்பாளரா? கோட்டாவை தேர்தலில் எதிர்க்கப்போவது யார்?  

(அடுத்த திங்கட்கிழைமை தொடரும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்தல்-முஸ்தீபுகள்/91-233738

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள்

என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூன் 10 திங்கட்கிழமை, மு.ப. 10:48 Comments - 0

ஒரு தேர்தலில், மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை, எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.   

இந்தக் கேள்விக்கான பதிலை ஊகித்து, தம்முடைய வாக்கு வங்கி எது, தமக்கு யார் வாக்களிப்பார்கள், அவர்கள் எதற்காகத் தம்மைத் தெரிவுசெய்வார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்றாற் போல தம்முடைய அரசியலையும் பிரசார உத்தியையும் வடிவமைத்து, தேர்தலை எதிர்கொள்வதுதான் பொதுவான அரசியல் நடைமுறை.   

தனிப்பட்ட வாழ்க்கையில் இறைநம்பிக்கை உள்ளவர்கள் கூட, அரசியலில் இறைமறுப்பாளர்களாகத் தம்மை முன்னிறுத்துவதும், தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவத்தையே கைக்கொள்பவர்கள், அரசியலில் பெரும் சோசலிஸவாதிகளாகத் தம்மை முன்னிறுத்துவதெல்லாம் இதில் அடங்கும்.  

ஆனால், மக்கள், ஒரு தனிநபர், தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எவ்வாறு தீர்மானிக்கிறார் என்ற ஆய்வுக் கேள்விக்குச் சமூகவியல், அரசறிவியல், உளவியல், மானுடவியல் ஆய்வுப்பரப்பில் பல்வேறுபட்ட ஆய்வுகள் நிறைந்து கிடக்கின்றன.   

சில அமெரிக்க ஆய்வுகள், எமது அரசியல் விழுமியங்களில் ஏறத்தாழ 40 சதவீதமளவுக்கு, எமது மரபணுக்களின் செல்வாக்குள்ளது என்று குறிப்பிடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், தாராளவாதி (இடது), பழைமைபேண்வாதி (வலது) என்று இருதுருவ அரசியல் பரப்பில், உங்கள் அரசியல் விழுமியம் எந்தத் துருவம் சார்ந்தது என்பதைத் தீர்மானிப்பதில் உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பம் ஆகியன குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   

அதைவிடவும் சில ஆய்வுகள், உங்களுடைய வயது, உங்கள் வாழ்க்கையின் காலகட்டம் என்பனவும் உங்கள் அரசியல் போக்கைத் தீர்மானிப்பதில், முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிடுகிறது. குறிப்பாக, பல்கலைக்கழகக் கல்வி பெறுவோரில் கணிசமானோர் தாராளவாத, இடதுசார் அரசியல் விழுமியங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதையும் தொழில், குடும்பம் என்று வாழ்வின் பொறுப்புகளைச் சுமக்கும் நிலையில் உள்ளவர்கள், பழைமைபேண், வலதுசார் அரசியல் விழுமியங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதையும் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுக்கின்றன.   

இது, ‘20 வயதில் கொம்யூனிஸம் பேசாதவனுக்கு இதயம் இல்லை; 40 வயதிலும் கொம்யூனிஸம் பேசுபவனுக்கு மூளையில்லை’ என்ற மிகப் பொதுப்படையான, மிக நீண்டகாலமாக எம்மிடையே நிலவும் ஒரு பொது நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றும் சொல்லலாம்.   

ஆயினும், இவ்வாறு பொதுப்படையாகக் கூறிவிட முடியாது என்பதைச் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதையும் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். எது எவ்வாறாயினும், எம்முடைய குடும்பம், சுற்றம், மதம், வாழ்க்கைத்தரம் என்பவை எம்முடைய அரசியல் தெரிவுகளைத் தீர்மானிப்பதில், மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை, நாம் மறுக்க முடியாது.   

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அங்கிருக்கும் இருதுருவ அரசியல் என்பது தாராளவாத (இடதுசார்), பழைமைபேண் (வலதுசார்) என்ற அடிப்படைகளில் அமைந்தது. அறிவத‌ற்கு இலகுக்காக, மிகச் சுருக்கமாகப் பார்த்தால், இடதுசார் தாராளவாதிகளானவர்கள் பொதுவாகச் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள், அதிக வரிகள், இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், கருக்கலைப்பு உரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை, அனைத்துப்பாலினங்களின் சமத்துவம், குடியேற்றங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பை முதன்மைப்படுத்துதல் என்பவற்றை ஆதரிப்பவர்களாகவும் மதத்தின் தலையீடு, அனைத்துக் குடிமக்களும் ஆயுதம் வைத்திருப்பதற்கான அமெரிக்க அரசமைப்பு வழங்கியிருக்கும் உரிமை ஆகியவற்றை எதிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.  

அதேபோல, வலதுசார் பழைமைபேண்வாதிகள், பொதுவாக திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் மதசார் விழுமியங்களையும் அமெரிக்க அரசமைப்பு உறுதிப்படுத்தும் உரிமைகள், பொருளாதார வளர்ச்சி என்பவற்றை ஆதரிப்பவர்களாகவும் கருக்கலைப்பு, மதவிழுமியங்களுக்கு (குறிப்பாக கிறிஸ்தவ விழுமியங்களுக்கு) எதிரான விடயங்கள், அதிக வரி விதிப்பு என்பவற்றை எதிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பிரித்தானியாவிலும் இடது (தொழிற்கட்சி) வலது (பழைமைபேண்வாதக் கட்சி) துருவங்கள் இருந்தாலும், பிரித்தானிய வலது துருவம் அமெரிக்க வலது துருவமளவுக்கு அதீதமானதல்ல.   
இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கை அரசியலில் மேற்குறித்த இடது-வலது துருவ அரசியல் இருமுனைகள் பலமானது அல்ல. அதற்கு முக்கிய காரணம், இலங்கை அரசியல் இனம், மதம், சாதி ரீதியில் கட்டமைக்கப்பட்டமைதான். இலங்கையின் பெரும்பான்மை வாக்கு வங்கி என்பது, அநகாரிக தர்மபாலவில் உதித்த ‘சிங்கள-பௌத்த’ இனம், மதம் தேசியவாதத்தின்படி கட்டமைக்கப்பட்டுவிட்டது.   

ஆகவே, இலங்கையின் வாக்குவங்கி, பொதுவாகப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம், அதற்கு எதிரானவை என்றே பார்க்கப்பட வேண்டும்.   

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்றால், என்னவென்பதற்கு மிக அண்மையை உதாரணம், இரண்டு முஸ்லிம் ஆளுநர்களும், ஒரு முஸ்லிம் அமைச்சரும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, பௌத்தபிக்கு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் கண்டார். அவருக்கு ஆதரவாக, அவசரகாலநிலை நடைமுறையில் உள்ளபோதே, வீதிக்கிறங்கிய பிக்குகளும் மக்களும் ஆவர். இவற்றை ஒன்றும் செய்யமுடியாது, வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, அத்தனை பதவி விலகல்களையும் ஏற்றுக்கொண்ட அரசுத்தலைமையின் நிலை. இதுதான், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம்.  இன்னுமோர் அண்மைய உதாரணம், இலங்கை ‘பௌத்த நாடு அல்ல’ என்ற உண்மையைச் சொன்னதற்காக, அதைச் சொன்ன அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராகச் சில பிக்கு அமைப்புகள் புறக்கணிப்புத் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தன. குறித்த மாவட்டத்திலுள்ள எந்தவொரு பௌத்த ஸ்தலத்துக்கும், மங்களவை அனுமதிப்பதில்லை என்றும் அவை தீர்மானித்திருந்தன. இந்த நாட்டின் நிதியமைச்சரின் நிலை இது.   

எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, இந்த நாட்டின் பிரதமராக இருந்தும், ஒரு பௌத்த பிக்கு கை நீட்டி அச்சுறுத்தும்போது, கைகளைப் பின்னால் கட்டி, வாய்பொத்தி என்றைக்கு நின்றாரோ, என்றைக்குப் பிக்குக்களின் அழுத்தத்தால் தான் கையெழுத்திட்ட ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தாரோ, அன்று தொடங்கியது இந்தச் சாபக்கேடு.   

ஆகவே, இலங்கை அரசியலில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், இந்தச் ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியை, யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பதுதான் முக்கிய போட்டி.   

உயிர்த்தெழுந்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடந்த சில நாள்களிலேயே கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தான் போட்டியிடுவதாக அறிவித்தார். நாடே மிகுந்த அதிர்ச்சியில் பேயறைந்ததைப் போல உணர்ந்த வேளையில், துன்பத்தில் துக்கத்தில் துவண்டுகொண்டிருந்த போதிலே, கோட்டாபய இந்த அறிவிப்பை வௌியிடக் காரணம் என்ன? அரசியல் சந்தர்ப்பவாதம் தான்.   

ராஜபக்‌ஷக்களின் அரசியல் என்பது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் மய்யத்தில் உதித்தது. யுத்த ‘வெற்றி’யைத் தொடர்ந்து, தன்னை அடுத்த துட்டகைமுனுவாகவே மஹிந்த வடிவமைத்துக் கொண்டார். உயிர்த்தெழுந்த ஞாயிறுத் தாக்குதல்கள், முழு இலங்கையையுமே ஆட்டிப் போட்டிருந்தது. தற்போது பதவியிலுள்ள ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ பலவீனங்களை, அது வெட்டவௌிச்சமாக்கி இருந்தது. மக்களுக்கு, அரச இயந்திரத்தின் மீது நம்பிக்கை குறைந்திருந்த நிலை அது.   

ஏற்கெனவே, 2015இல் மாற்றத்துக்கு வாக்களித்த பலரும் கூட, மைத்திரியின் நடவடிக்கைகளால், ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ வினைத்திறனற்ற செயற்பாடுகளால், அவ்வப்போது வௌிச்சத்துக்கு வந்த ஊழல் செய்திகளால், அதிருப்தி அடைந்திருந்திருந்த வேளையில், நாட்டின் பாதுகாப்பிலும் இந்த அரசாங்கம் கோட்டைவிட்டுவிட்டது என்பது, இதே அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே, இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருந்தது என்பதை, மறுக்க முடியாது.  

குறிப்பாக, பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கி, இந்தத் தாக்குதலின் பின், கடும் அச்சமான சூழலுக்குள் தள்ளப்பட்டது. இதற்கு அவர்களிடமும், ஏன் கணிசமானளவு தமிழர்களிடமுமிருந்து எழுந்த எதிர்வினை, கடுமையான இனவாதப் போக்குடையதாக இருந்தது. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் என்பது, இயல்பானதொன்றாக மாறிக்கொண்டு வருகிறது.   

‘முஸ்லிம்களின் வியாபாரங்களையும் வணிகங்களையும் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரம் சர்வசாதாரணமாக, சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பின் பெயரால், அவசரகாலச்சட்டத்தின் கீழ், முகத்தை மூடும் ‘நிகாப்’ ஆடை தடைசெய்யப்பட்டது. இந்த இனவாத எழுச்சியைத்தான், கோட்டா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க முனைந்திருந்தார் என்பது இங்கு தௌிவாகிறது.   

கோட்டாபய ராஜபக்‌ஷ தீவிர ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதியாகவே பார்க்கப்பட்டார். சில தீவிர பௌத்த அமைப்புகளுக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் பற்றிப் பல தகவல்களும் ஊடகங்களில் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடியும்.    

ஆகவே ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி, தமது பாதுகாப்புத் தொடர்பான கடும் அச்சத்தில் உள்ளதொரு சந்தர்ப்பத்தில், அவர்களை மீட்கும் இரட்சகன் விம்பத்தை, அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்களின் மனங்களில் பதியவைக்கும் உபாயத்தைக் கைக்கொண்டு, இந்த அரசியல் சந்தர்ப்பத்தைக் கோட்டா பயன்படுத்திக் கொண்டார் என்றால் அது மிகையல்ல.   

இலங்கையின் முஸ்லிம் வாக்குவங்கி என்பது, அதிகபட்சமாக ஒன்பது சதவீதம்தான். ஆகவே ஜனாதிபதித் தேர்தலொன்றில் ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கி ஒன்றுபடும் போது, சிறுபான்மை வாக்குவங்கியின் வலு என்பது அர்த்தமற்றது. அச்சம் என்ற ஓர் உணர்வு, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, ஒரு மனிதனை என்னவும் செய்ய வைக்கக்கூடியது என்கிறது உளவியல்.   

ஆகவே, இன்று துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டிருக்கும் அரசியல் சந்தர்ப்பத்தை ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியை ஒன்றுதிரட்டும் வாய்ப்பாக, கோட்டா தரப்பு கைக்கொள்கிறது என்றால் அது மிகையல்ல. இந்த ஒன்று திரட்டலில், கணிசமானளவு தமிழர்களின் வாக்குகளைத் திரட்டும் முயற்சியும் பின்புலத்தில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.  குறிப்பாக, தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகள் நிலவும் கிழக்கு மாகாணத்தில், தமிழ், ‘சிங்கள-பௌத்த’ இணைப்பைத் தோற்றுவிக்கும் முயற்சிகளையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தமையை, இங்கு அவதானிக்க வேண்டும்.   
வடக்கு, கிழக்கு தமிழர்களிடையேயும் குறிப்பாக, தமிழ் அரசியல்வாதிகளிடையே, காலங்காலமாக ஒரு முரண்பாடு இருந்து வருகிறது. இது விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளும் இருந்தது. கருணா அம்மானின் பிரிவும் அதற்கு அவர் சொன்ன நியாயங்களும் சந்தர்ப்பவாதத்தில் சொன்னவை என்றால் கூட, அதற்குள் நியாயங்களும் கிழக்குவாழ் தமிழர்கள், வடக்குசார் தமிழ் தலைமைகளால் தாம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறோம்; எமது பிரச்சினைகளுக்கு வடக்குசார் தமிழ்த் தலைமைகள் முக்கியத்துவம் தருவதில்லை என்ற குறையைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கிறார்கள். இன்று இந்தப் பிரிவு கூட, கோட்டாவுக்குச் சாதகமாக அமையலாம் என்ற நிலை காணப்படுகிறது.   

ஆனால், இங்கு இன்னும் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ராஜபக்‌ஷக்கள் ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி மய்ய அரசியல் செய்வதானால், ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கி பெரும்பான்மையானதாக இருந்தாலும், மஹிந்த ராஜபக்‌ஷ 2015இல் தோல்வி கண்டது ஏன்?   சமகால இலங்கையில், மிகக் கணிசமானளவில் காணப்படும் கட்சி பேதமற்ற ஊசலாடும் வாக்குவங்கி, கோட்டாவையோ, ராஜபக்‌ஷ சார்பில் போட்டியிடும் வேட்பாளரையோ ஆதரிக்குமா?  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்தல்-முஸ்தீபுகள்/91-233992

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை வாக்குவங்கிதான் வெற்றியை தீர்மானிக்கிறதா?

என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூன் 17 திங்கட்கிழமை, மு.ப. 07:25 Comments - 0

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் - 5

இலங்கையின் வாக்கு வங்கி அரசியல் கட்டமைப்பு என்பது, நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன-மத தேசியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது.   

கொள்கைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறு அமைந்தாலும், வாக்கு வங்கியின் அத்திவாரம் என்பது, இன்றும் இன, மத தேசிய அடிப்படைகளில்தான் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் இலங்கையின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக, நாம் அவதானிக்கக்கூடியதொரு விடயம், கட்சி சார்ந்த வாக்குவங்கியின் வீழ்ச்சியாகும்.   

சுதந்திர இலங்கையில், முதன் முதலில் ஆட்சிப்படியேறி, இலங்கையைப் பலமுறை ஆண்ட கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். இந்தக் கட்சிக்கு, விசுவாசமான வாக்கு வங்கியைப் பற்றிக் குறிப்பிடும்போது, பொதுவில் “கபுவத் கொள, மறுவத் கொள” (வெட்டினாலும் பச்சை; கொன்றாலும் பச்சை) என்று குறிப்பிடுவார்கள். ஆனால், இன்று இந்த வாக்குவங்கி, கணிசமானளவில் குறைவடைந்துள்ளது. இது ஒரு உதாரணம்தான்.   

இந்த நிலை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமல்ல; பாரம்பரியமாக, இது போன்ற வாக்கு வங்கியைக் கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளினதும் நிலை இதுவாகத்தான் இருக்கிறது.   

கட்சி விசுவாச வாக்கு வங்கி, பலமாக இருந்திருக்குமானால், இலங்கையில் கடைசியாக நடைபெற்ற தேர்தலான 2018 உள்ளூராட்சித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் புதிதாகப் பிறந்திருந்த மொட்டுக் கட்சி, (பொதுஜன பெரமுன) பாரம்பரியக் கட்சிகளைவிட, அதிக வாக்குவீதத்தைப் பெற்றிருந்திருக்க முடியாது. சிறுபான்மை இன வாக்கு வங்கிகளிலும் இதையொத்ததொரு போக்கை நாம் அவதானிக்கலாம்.   

வடக்கு, கிழக்கு தமிழர்களின், ஏறத்தாழ ‘ஏக’ பிரதிநிதிகள் என்ற நிலையில், உருவாகிய காலம் முதல் இருக்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குவங்கி சதவீதத்திலும் சரிவை அவதானிக்கலாம். 

அந்த வாக்குகள், மாற்றுத் தமிழ்க் கட்சிகளையும் தேசியக் கட்சிகளையும் நோக்கிச் செல்வதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, நிச்சயமாக “வெட்டினாலும் கொன்றாலும் நான் இந்தக் கட்சிதான்” என்ற மனநிலையிலான வாக்கு வங்கி, அருகிவரும் விடயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இது நல்ல விடயம்தான்.  

 குறிப்பாக, ஜனநாயகமொன்றுக்கு இது மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில், கண்மூடித்தனமான விசுவாசம் என்பது, அது தலைமைக்காகட்டும், கட்சிக்காகட்டும், கொள்கைக்காகட்டும், மிகவும் ஆபத்தானதும், பல சந்தர்ப்பங்களில் அழிவைத்தரக் கூடியதுமான விடயமாகும்.   

ஆகவே, கண்மூடித்தனமான கட்சி ஆதரவு எதுவுமின்றிய வாக்குவங்கி ஒன்று உருவாவது, நல்ல விடயம்தான். ஆனால், இங்கு கட்சி ஆதரவு மட்டும் என்பதல்லப் பிரச்சினை. 

கட்சி ஆதரவு வாக்குவங்கி என்பது, வீழ்ச்சி கண்டுகொண்டு வந்தாலும், இன மய்ய வாக்குவங்கி என்ற அடிப்படைக் கட்டமைப்பு, இன்னும் மாறவில்லை.   

பன்மைத்துவ தன்மை வாய்ந்த கொழும்பு நகரில், இனம், மதம் சார்ந்த தேசியவாதத்தைத் தாண்டிய, ஒரு சிறிய வாக்குவங்கியொன்று இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இலங்கைத் தீவைப் பார்க்கும் போது, புவியியல்சார் குடிப்பரம்பலுக்கும் இனம், மதம் சார் வாக்குவங்கிக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவே இருக்கிறது.   

இலங்கையின் குடிப்பரம்பல் என்பது, முழுத் தீவு ரீதியாக ஓரினம், மிகப்பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், மாகாணம் சார்ந்து, மாவட்டம் சார்ந்து, சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள மாகாணங்களும் மாவட்டங்களும் உண்டு. குறிப்பாக, வடக்கு, கிழக்கின் நிலை இதுதான். 

ஆகவே, வாக்கு வங்கி இனமய்ய ரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ள காரணத்தால், யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களவரோ, மாத்தறையில் ஒரு தமிழரோ, முஸ்லிமோ அவர்களது இனம், மதம் ஆகிய அடையாளங்களைத் தாண்டி, தேர்தலில் வெற்றிபெறக் கூடிய நிலை என்பது கடினமானதே.   

கட்சி ஆதரவு மனப்பான்மையை, இலங்கையின் வாக்கு வங்கி இழந்துகொண்டிருக்கலாம். ஆனால், இனம், மதம் சார் அடையாள அரசியல், இன்னும் வலுவடைந்து கொண்டு வரும் துர்ப்பாக்கிய சூழலைத்தான், நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.   

2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், குறிப்பாக சிங்கள-பௌத்த வாக்குவங்கியின் பாசமிகு வேட்பாளரான மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வியைத் தொடர்ந்து, இலங்கையின் வாக்குவங்கி பற்றிய ஒரு மாயை உருவானது. அதாவது, சிறுபான்மை வாக்குவங்கியின் பலம் பற்றி, அதீதமான, அடிப்படையற்ற நம்பிக்கைகள் உருவாகத் தொடங்கின.   

பெரும்பான்மை வாக்குவங்கியானது, சிறுபான்மை வாக்கு வங்கியின் பலம் பற்றிய அதீதமான யதார்த்தத்துக்கு  ஏதுவற்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பது ஒரு புறமிருக்க, சிறுபான்மை வாக்குவங்கி, தன்னுடைய பலத்தைத் தானே உயர்வாக எண்ணத்தொடங்கியது என்பது, அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.   

எப்போதும் ஒரு விடயத்தை, நாம் மறந்துவிடக்கூடாது. இலங்கை வாக்குவங்கியின் ஏறத்தாழ 75% ஆன வாக்குவங்கி, சிங்கள வாக்குவங்கி என்பதோடு, ஏறத்தாழ 70% ஆன வாக்குவங்கி, சிங்கள-பௌத்த வாக்குவங்கியாகும். ஆகவே, சிறுபான்மை வாக்குவங்கி என்பதுதான், வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குவங்கி என்பது, ஒரு மாயை.   

ஆனால், இந்த மாயை உருவாகக் காரணம் என்ன? இரண்டு நிலைமைகள் ஒருசேர நிலவும்போது, சிறுபான்மை வாக்குவங்கி தீர்மானிக்கும் பலத்தைக் கொண்டுள்ளதான தோற்றப்பாடு எற்படுகிறது. சிங்கள வாக்குவங்கி, கட்சி ரீதியில் இருகூறாகவோ, அதிகமாகவோ பிரிந்து நிற்கும் போது, எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்க முடியாத நிலை சிங்கள வாக்குவங்கிக்கு ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில், சிறுபான்மை வாக்குவங்கி என்பது பெருமளவுக்கு ஒன்றுசேர்ந்து நின்று, ஒரு தரப்புக்கு ஆதரவளிக்கும் போது, சிங்கள வாக்குவங்கியால் மட்டும், அறுதிப்பெரும்பான்மையைப் பெறமுடியாத ஒரு தரப்பு, பெருமளவுக்கு  ஒன்றுபட்டு நிற்கும் சிறுபான்மை வாக்குவங்கியின் ஆதரவால், அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று, வெற்றி பெறுகிறது. இது, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி, சிறுபான்மையினருக்கே உண்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி விடுகிறது.   

பெரும்பான்மையின வாக்குவங்கி பிரிந்திருக்கும் போதுதான், சிறுபான்மையின வாக்கு வங்கி, தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைச் சிறுபான்மையினர் புரிந்துகொள்வது அவசியம்.   
ஏனென்றால், சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல்சக்தி, இதனை நன்கே புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் இன்று, அதன் முயற்சிகள், சிங்கள-பௌத்த வாக்குவங்கியைச் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் கீழ், ஒன்றிணைக்கும் பாதையில், வலுவாகப் பயணித்துக் கொண்டிருப்பதுடன், ஒன்றுபட்டிருக்கும் சிறுபான்மை வாக்குவங்கிகளைச் சிதறடிப்பதிலும் கவனமாக உள்ளது.   

ஒரு மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ‘அச்சம்’ என்பது முக்கிய ஆயுதம் என்பது, அரசியல் தந்திரோபாயங்கள் உரைக்கும் நூல்கள் பல, சுட்டிக்காட்டும் முக்கிய விடயமாகும். இந்த அச்ச எண்ணமும் பாதுகாப்பின்மை தொடர்பிலான உணர்வுமே, தேசியவாதங்களின் எழுச்சிக்கு, முக்கியமான காரணம் எனச் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.   

ஆகவே, மக்களின் துரதிர்ஷ்டமோ, இத்தகைய பேரினவாதிகளின் அதிர்ஷ்டமோ உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள், இந்தப் பேரினவாத சக்திகளுக்குத் தேவையான அரசியல் சந்தர்ப்பத்தை, உருவாக்கிக் கொடுத்துள்ளது.   

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமும் பீதியும், சிறுபான்மையினரை ‘அடுத்தவனாக’ உணரும் நிலையும் பெரும்பான்மையினத்தை ஒன்றுபடுத்தவல்லதொரு சந்தர்ப்பமாகப் பேரினவாதிகள் காண்கிறார்கள்.   
தாராளவாதிகளை நிராகரிக்கவும் பெரும்பான்மையினருக்கான பாதுகாப்பு என்ற மாயையை விதைக்கவும் பேரினவாத ஒற்றுமை ஒன்றுதான் வழி என்ற பகீரதப் பிரயத்தனத்தில், பேரினவாத அரசியல் சக்திகள் இயங்குவதைக் காணலாம். 

இதெல்லாம் சிறுபான்மையினரை எதிர்க்கும் செயல் என்பதைவிட, சிறுபான்மையினரை எதிர்ப்பதைக் காரணம் காட்டி, பெரும்பான்மையினரை ஒன்றிணைக்கும் முயற்சி என்ற பார்வையைத் தான், இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.   

2015 ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர், சிறுபான்மையினர் என்னைத் தோற்கடித்துவிட்டார்கள் என்ற தொனியில் மஹிந்த ராஜபக்‌ஷ பேசியிருந்தார். ஆனால், அதற்குள் ஓர் உட்பொருள் உண்டு. அதாவது, சிங்களவர்கள் ஒன்றுபட்டிருந்தால், சிறுபான்மையினருக்கு அந்தத் தோற்கடிக்கும் பலம் போயிருக்காது என்பதுதான் அது.   

ஆகவே, இம்முறை ராஜபக்‌ஷ முகாமைப் பொறுத்தவரையில், அவர்களது தந்திரோபாயமானது, சிங்கள-பௌத்த வாக்கு வங்கியை ஒன்று திரட்டுவதாகத்தான் இருக்கிறது.

இலங்கை, வாக்கு வங்கியின் கட்சி ஆதரவு நிலை, கட்சி விசுவாசம் என்பதெல்லாம் மிகவும் வீழ்ச்சி கண்டிருக்கலாம். ஆனால், இன அடையாளப் பிரக்ஞை, இனம், மதம் சார்ந்த தேசியவாத உணர்வு என்பது, இன்னமும் மங்கவில்லை என்பதை, நாம் இன்று கண்டுகூடாகவே கண்டுகொண்டிருக்கிறோம்.  

 உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், சமூக ஊடகங்களெங்கும் நிறைந்து வழியும் இனரீதியான வன்மமும் காழ்ப்புணர்வுமே இதற்குச் சாட்சிகள் ஆகும்.   

ஆகவே, எதிர்வரும் தேர்தலுக்கான ராஜபக்‌ஷ முகாமின் தந்திரோபாயம் என்பது, ‘சிங்கள-பௌத்த வாக்கு வங்கியை’ ஒன்றுதிரட்டி, அதன் பலத்தில் மட்டும் வெற்றிகாண்பதில் குறியாக இருக்கிறது. 

ராஜபக்‌ஷ முகாம் சார்ந்து போட்டியிடுவது யாராக இருந்தாலும், இந்தத் தந்திரோபாயம் மாறாது. கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற முகம், இந்தத் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதற்கு, மிகப் பொருத்தமானதொரு முகமாகும்.  

 பயங்கரவாதம் என்ற அச்சத்தின் மீது, கட்டியெழுப்பப்பட்ட ‘சிங்கள-பௌத்த தேசியவாத மீட்சி’ என்ற குரலுக்கு, பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காக்கும் வல்லமை வாய்ந்த இரட்சகன் என்ற பிரசார முகம், கோட்டாவுக்கு  மிகப் பொருத்தமானதாகவே அமையும். ஆயினும், அவர்களது துரதிஷ்டம், கோட்டாபய ராஜபக்‌ஷவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகும்.   

இந்த ஆரோக்கியப் பின்னடைவிலிருந்து, அவர் முழுமையாக மீண்டுவந்தால், அவர்தான் ராஜபக்‌ஷ முகாமின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதில், இன்றைய நிலைமைகளின் கீழ், எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.   

அவ்வாறு, அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டாலும், ராஜபக்‌ஷ முகாமிலிருந்து முன்வரப்போகும் முகம், நிச்சயமாக ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியை ஒன்றுதிரட்டக்கூடியதொரு பிரபல முகமாகவே இருக்கும்.   

அப்படியானால், ராஜபக்‌ஷ முகாமின் வேட்பாளரை எதிர்த்து நிற்கப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பின், வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான பதில் முக்கியமானது. இதுவரை, ஐக்கிய தேசியக் கட்சி, இது பற்றி எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வௌியிட்டிருக்கவில்லை.  

 இந்தக் கேள்விக்கான பதிலைத் தேட விளையும் போது, எழுகின்ற முதலாவது கேள்வி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா? அல்லது, கடந்த இருமுறை செய்ததுபோல, வேறொரு நபரைப் பொது வேட்பாளராக நிறுத்துவாரா? என்பதுதான்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறுபான்மை-வாக்குவங்கிதான்-வெற்றியை-தீர்மானிக்கிறதா/91-234274

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலும் ‘கோட் சூட்’ அரசியலும்

என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூன் 24 திங்கட்கிழமை, பி.ப. 05:47 Comments - 0

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் - 06

இலங்கை அரசியலில் சகுனம், காலம், நல்ல நேரம், ஜோதிடம், மந்திரம், மாந்திரீகம், பூஜைகள், திருத்தல தரிசனம் போன்றவற்றின் மீதான அதீத நம்பிக்கை என்பது, மிக வௌிப்படையாகவே நாம் கண்டுணரக்கூடிய விடயமாக இருக்கிறது.  

‘சிங்கள-பௌத்தத்தின்’ காவலாளிகளாகத் தம்மை மார்தட்டிக்கொள்வோர் கூட, திருப்பதிக்கும் பத்மநாபசுவாமி கோவிலுக்கும் ஓடி ஓடிச் சென்று, தரிசனங்களில் ஈடுபடுவது எல்லாம் இந்த அதீத நம்பிக்கையால்த்தான்.  

 ஜோதிடரைக் கேட்டே தேர்தல் தினத்தைத் தீர்மானிக்கும், முடிவுகள் எடுக்கும் கால நேரத்தைத் தீர்மானிக்கும் போக்கும் இலங்கைக்குப் புதியதல்ல. அதுபோலவே, அதிர்ஷ்டத்தின் மீதான நம்பிக்கையும் அரசியல்பரப்பில் மிகுந்தே காணப்படுகிறது.   

ரணில் விக்கிரமசிங்க என்ற ஆளுமையின் மேல், விரும்பியோ விரும்பாமலோ தோல்வியின் முத்திரை மிக அழுத்தமாகக் குத்தப்பட்டிருக்கிறது. சுதந்திர இலங்கையின், மூத்த தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக, 1994 முதல் கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரணில்.   

இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த காலப்பகுதியில் நான்கு ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் இரண்டில் மட்டுமே ரணில் போட்டியிட்டார் (1999, 2005). இரண்டு தடவையும் மிக நெருக்கமான போட்டி நிலவிய நிலையில், ரணிலால்  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.  குறிப்பாக, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கக் கோராது, வடக்கு, கிழக்கு வாக்களித்திருக்குமானால் ரணில் விக்கிரமசிங்க அந்தத் தேர்தலில் வென்றிப்பார் என்பதே நிலவும் பொதுவான அபிப்பிராயமாகும்.   

2005 இன் பின்னர், நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் (2010, 2015) ரணில் போட்டியிடவில்லை. மாறாக, பல எதிர்க்கட்சிகளையும் ஒன்றுதிரட்டிய ஒருமித்த எதிரணியின் பொதுவேட்பாளராக, 2010இல் சரத் பொன்சேகாவையும் 2015இல் மைத்திரிபால சிறிசேனவையும் களமிறக்கி, அவர்களுக்கு ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளித்திருந்தது.  

ஜனாதிபதித் தேர்தல் தோல்விகள் மட்டுமல்ல, ரணிலின் தலைமையின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு முறை மட்டுமே ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. முதலாவதாக, 2001இலும்  பின்னர் 2015இலும் ஆகும்.   

image_d8c5084296.jpg2001இல் தொடங்கிய ஆட்சி, ஜனாதிபதி சந்திரிக்காவுடனான முறுகல் நிலையையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவாலும் 2004இல் முடிவுக்கு வந்தது.   

அதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு, ஏறத்தாழ ஒரு தசாப்தத்துக்கும் மேற்பட்டகாலம் தேவைப்பட்டது. இந்த ஒரு தசாப்தகாலம், ரணிலுக்கு இலகுவானதாக இருக்கவில்லை. குறிப்பாகக் கட்சிக்குள், ரணிலின் தலைமைக்கெதிராக எழுந்த குரல்களும் தலைமைக்கு ஏற்பட்ட போட்டியும் உட்கட்சி முறுகலை அதிகப்படுத்தியதுடன், ஐ.தே.க என்ற பலமான தேசியக் கட்சி, வினைத்திறனாகச் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டது.   

ரணில் தலைவராகத் தொடர்ந்ததால் கட்சியிலிருந்து சில அரசியல்வாதிகள் விலகினார்கள். சிலர், தாம் கட்சிதாவிப் பதவிகளைக் கைப்பற்றிக்கொள்ள இதை ஒரு சாட்டாக்கிக் கொண்டார்கள். எது எவ்வாறாக இருப்பினும், கட்சிக்கு வௌியில் மாத்திரமில்லாமல், கட்சிக்குள்ளும் ரணில் மீதான அதிருப்தி இருக்கவே செய்தது.  

 ஆனால், இந்த அதிருப்தியாலும் எதிர்ப்பாலும் ரணிலை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில், இனி ரணில், தலைவராகத் தொடர முடியாது என்ற கடுமையான நெருக்கடிச் சூழல் கட்சிக்குள் எழுந்தபோது, அனைவரும் ரணிலின் இராஜாங்கம் இதோடு முடிவடைகிறது என்று நினைக்குமளவுக்கு நிலைமை வந்தபோதும் கூட, அதையெல்லாம் கடந்து, ரணில் இன்றுவரை கட்சியின் தலைமையைத் தன்னிடம் வைத்திருப்பதானது ஆச்சரியமானதுதான்!   

2015 ஜனவரிக்கு முன்பாக, ரணில் மீண்டும் இலங்கையின் பிரதமராவார் என்று யாராவது சொல்லியிருந்தால், அதை அனைவரும் நகைச்சுவையாக எதிர்கொள்ளும் நிலையே இருந்தது. ஆனால், 2015 ஜனவரியில் இலங்கையின் பிரதமராக ரணில் மீண்டும் ஆனார்.    

ஆனால், இந்த இராஜதந்திரங்களையெல்லாம் அவரால் தேர்தல் வெற்றிகளாக மாற்றமுடியாமைதான், அவர் தோல்வியின் அடையாளமாகப் பார்க்கப்படக் காரணமாகும்.  

‘கோட் சூட்’ அரசியல் என்பது, சுதந்திர இலங்கையில் கொலனித்துவம் விட்டுச்சென்ற முக்கிய அடையாளங்களில் ஒன்று. இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனநாயக்க, அவரது மகன் டட்லி, அவரது உறவினர் சேர்.ஜோன் கொத்தலாவல என, இலங்கையின் ஆரம்பகாலத் தலைமைகள் ‘கோட் சூட்’ அரசியல்வாதிகளாகவே இருந்தார்கள்.   

இதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க. இலங்கை அரசியல் பரப்பில், அநகாரிக தர்மபாலவிலிருந்து ஆரம்பித்த ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை, நேரடி அரசியலில் தத்தெடுத்து, உயிர்கொடுத்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க ஆவார். ‘கோட் சூட்’ அரசியலுக்கு மாற்றாக, ‘தேசிய உடை’ அரசியலைப் பிரபல்யம் செய்தவர் அவர்.   

சுதந்திர இலங்கை அரசியலில், இன்றுவரை இந்தக் ‘கோட் சூட்’ - ‘தேசிய உடை’ பிரிவினையைக் காணலாம். சமூகவியல் ரீதியில் பார்த்தால், இந்தக் ‘கோட் சூட்’ - ‘தேசிய உடை’ வேறுபாடுகளுக்கும் இனம், மதம், கல்வி, சமூகம், அந்தஸ்து, சாதி, வர்க்கம், அரசியல் கொள்கை ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்புகளை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும். இவை நிரந்தரமானவையல்ல; ஆனால் பொதுவான அம்சங்கள் பல தொடர்புபடுவதை நோக்கலாம்.   

இலங்கையைப் பொறுத்தவரை, ஓர் அரசியல் தலைவர் அணியும் ஆடை, பேச்சு, மொழி, உச்சரிப்பு என்பன, அவரது இனம், மதம், கல்வி, சமூக அந்தஸ்து, சாதி, வர்க்கம், அரசியல் கொள்கை ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவதாகவே இருக்கிறது. அத்துடன், வாக்குவங்கியைப் பொறுத்தவரையும் வாக்குவங்கியானது, தமது தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதிலும் மேற்குறித்த விடயங்கள், குறிப்பிடத்தக்க ப‍ங்கை வகிக்கின்றன என்பது மறுக்க முடியாதது.  

இந்தக் ‘கோட் சூட்’ - ‘தேசிய உடை’ இருதுருவ பிரிநிலையில், ரணில் விக்கிரமசிங்க ‘கோட் சூட்’ பிரிவுக்குரியவர் என்பது வௌ்ளிடைமலை. அதனை மறைக்கவோ, மாற்றவோ கூட அவர் முனையவில்லை. இதுதான், தான் என்பதை மறைக்க, அவர் எண்ணியதில்லை; எத்தனித்ததும் இல்லை. அதனால்தான், பௌத்த விகாரைகளுக்கும், கோவில்களுக்கும் பூஜை வழிபாட்டுக்குச் சென்றாலும் கூட, ரணில் ‘சாரம்’ கட்டியதில்லை.   

மறுபுறத்தில், அவருடைய சரளமான ஆங்கிலப் பேச்சும், மேற்குலக ஆதரவு நிலைப்பாடும், திறந்த பொருளாதாரக் கொள்கை நிலைப்பாடும், தனியார்மயமாக்கல் மீதான நம்பிக்கையும் ஒப்பீட்டளவில் தாராளவாதக் கொள்கை மீதான சற்றேனுமான சார்பும் தேசியவாதிகளும் இடதுசாரிகளும் ரணில் மீதான கடுமையாக விமர்சனங்களை முன்வைக்க முக்கிய காரண‍ங்களாகும். மறுபுறத்தில், கட்சிக்குள் அவருடைய மேலாதிக்கப் போக்கும், கட்சியைக் கொண்டு நடத்தும் விதமுமே, தான் நினைத்ததிலிருந்து மாறாத பற்றுறுதியும் அவரைச் சர்வாதிகாரி என விமர்சிக்கக் காரணம் என, கட்சிக்குள் அவரை எதிர்ப்பவர்கள் சொல்லும் கருத்தாகும்.   

மறுபுறத்தில், இவற்றுற்கு எல்லாம் மாறுபட்ட வகையில், முடிவெடுக்க முடியாதவர், ஒரு விடயத்தை நடத்தும் வல்லமையற்றவர், தனது நிலைப்பாட்டில் நிற்க முடியாவர், பலமற்றவர், வெற்றிபெற முடியாதவர், உறுதியாகப் பேசமுடியாதவர் என்ற கருத்தும் பொதுவில் நிலவுவதையும் அவதானிக்கலாம்.   
மேலும், சாணக்கியப் பேர்வழி, தந்திரோபாயக்காரர், நம்பமுடியாதவர் என்ற அடையாளங்களும் ரணில் மீது சாற்றப்படுவதைக் காணலாம். இத்தனை ஒன்றுக்கொன்று முரணாண அடையாளங்களைக் கொண்ட முரண்பாடுகள் நிறைந்த ஆளுமையாகவே ரணில் காணப்படுகிறார்.   

எத்தனை எதிர்மறை அடையாளங்கள் ரணில் மீது இருந்தாலும், கற்றவர், அறிவுள்ளவர், நேர்மையானவர், கறைபடியாத கரம் என்ற அடையாளங்களும் அவர் மீதான பொது அபிப்பிராயமாக இருந்ததையும் மறுக்க முடியாது.   

ஆனால், மத்தியவங்கி முறிகள் மோசடி தொடர்பில், அவரது பெயர் அடிபடத் தொடங்கியதிலிருந்து ‘கறைபடியாத கரம்’ என்ற அடைமொழியில் கறைபடிந்துவிட்டது என்பதுதான் யதார்த்தம்.  

இந்த நிலையில்தான், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவாரா, அல்லது கடந்த இருமுறை செய்ததைத் போலவே, இன்னொருவரைக் களத்தில் இறக்கிவிடுவாரா என்ற கேள்வி முக்கியம் பெறுகிறது.   
அண்மையில், அமைச்சர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் ஒரு சுவாரஷ்யமான செய்தியைப் பகிர்ந்திருந்தார். அலரி மாளிகையில், முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி நஷீட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்த இரவுச் சந்திப்பொன்றின் முடிவில், “நீங்கள் ஓய்வுபெற நேரமாகிவிட்டது” என்று நஷீட், ரணிலுக்குச் சொல்ல, “ஓய்வா”? என்று ரணில் ஆச்சரியமாக வினவியதாகவும் “இல்லை, இன்றைய நாளுக்கு ஓய்வுபெற என்பதைச் சொன்னேன்” என்று அவர் தௌிவுபடுத்த, அனைவரும் சிரித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.   இதில் குறிப்பிடத்தக்க விடயம், அரசியலிலிருந்து ஓய்வுபெற ரணில் விக்கிரமசிங்க தயாராகவில்லை என்பதாகும். ஆகவே, அரசியலில் தொடர்ந்தும் பயணிக்கும் திட்டம் அவருக்கு இருக்கிறது.   

அப்படியானால், நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை அவர் உடனடியாக யாருக்கும் விட்டுத்தரப்போவதில்லை என்பது நிச்சயம். இந்தச் சூழலில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான, அவரது திட்டம் என்னவாக இருக்கும் என்ற ஊகம் முக்கியம் பெறுகிறது.   

குறிப்பாக, கரு ஜெயசூரிய போட்டியிடுவார்; சஜித் பிரேமதாஸ போட்டியிடுவார் என்ற வதந்திகள் பலமாகப் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், ரணில் போட்டியிடுவாரா என்று கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.  

ஆனால், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முன்பதாக, இன்னொரு முக்கிய விடயத்தை கருத்திற்கொள்ள வேண்டும். அரசமைப்புக்கான 19ஆம் திருத்தத்துக்குப் பின்பு, அடுத்ததாக வரும் ஜனாதிபதி, இதுவரை காலமும் இருந்த மற்றும் தற்போது இருக்கின்ற ஜனாதிபதியை விட ஒப்பீட்டளவில் குறைந்த அதிகாரத்தையே கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பார். அவரால் அமைச்சுப் பதவிகளைக் கூட வகிWக்க முடியாது.   

நாடாளுமன்றமும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் தற்போதுள்ளதைவிடச் சற்றே பலம்வாய்ந்ததாக இருக்கும். இந்த நிலையைக் கருத்திற் கொள்ளும் போது, ஜனாதிபதி ஆவதற்கான ஊக்கவிசை, முன்பை விடக் குறைவாகவே இருக்கிறது. ஆகவே, ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற நீண்டநாள் ஆசையை (?) தவிர, ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேறென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதும், அவர் போட்டியிடும் பட்சத்தில் இலங்கையின் வாக்குவங்கியை அவரால் தனக்குச் சாதமாக்க முடியுமா, அதன் மூலம் வெற்றிபெற முடியுமா என்பதும் எமக்கு எழும் முக்கிய கேள்விகளாகும்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலும்-கோட்-சூட்-அரசியலும்/91-234545

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில்களம் காண்பாரா ரணில்

என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 01 திங்கட்கிழமை, மு.ப. 11:03 Comments - 0

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள்-7

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் மாதமளவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

யுத்தகாலத்தில் இடம்பெற்ற சித்திரவதைகள், கொலைகள் தொடர்பில் வழக்குகள் பல, வௌிநாடுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வேளையில், அவரது உடல்நிலையும் சவாலாகி, சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷதான் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்பதில், கடந்தமாதம் வரை இருந்த உறுதிநிலையில், தற்போது சில கேள்விகள் எழுந்துள்ளன.   

எது எவ்வாறாயினும், கோட்டா உடல்நிலை தேறும் பட்சத்தில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, அவர் களம் காண்பதற்கான வாய்ப்பு பெருளமளவுக்கு இருக்கிறது. இது நடக்கும் பட்சத்தில், ‘மஹிந்த-கோட்டா’ என்ற பலமான இணைவை, ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?  

இலங்கையின் பழம்பெரும் தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் கடந்த கால் நூற்றாண்டாக, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. 1994 ஜனாதிபதித் தேர்தலின் பின்பிருந்து, இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொடரும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், இது தனிப்பட்ட ரீதியிலும் கூட, ஒரு மிகப்பெரும் கரும்புள்ளியாகும்.   

2015இல், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்த வேட்பாளர் வெற்றிபெற்றிருந்தாலும், அவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தவர் இல்லை என்பதும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய வைரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதும், அதன் பின்னர் அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையுமெல்லாம், அந்த வெற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய வெற்றியல்ல என்பதை மீண்டும், மீண்டும் பறைசாற்றுவதாகவே அமைகிறது.   

இந்தச் சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வௌியிலுள்ள ஒருவரை பொதுவேட்பாளராக ஆதரிக்கக் கூடிய மனநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இல்லை. கட்சிசார்ந்த வேட்பாளரே களமிறங்க வேண்டும் என்ற ஏக்கம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடையே பலமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.  image_f7f734d4db.jpg

ஆனால், அந்த நபர் யார் என்பது தொடர்பில் அவர்களிடையே அபிப்பிராய பேதங்கள் இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  

ஒரு கட்சியின் தலைவர், அக்கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்பது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி, கட்சிக்குள்ளாகவே சில அதிருப்தி அலைகள் எழுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  

 ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாற்றாக, வேறொருவர் களமிறங்க வேண்டும் என்பது அதிருப்தியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில், கட்சியில் சிலர், அதிருப்தி வௌியிடக் காரணம் என்ன?   

தற்போதுள்ள சூழலில் ரணிலால் இலங்கையின் பெரும்பான்மை வாக்குவங்கியைத் திருப்திசெய்ய முடியாது என்பது அவர்கள் குறிப்பிடும் பல்வேறு காரணங்களுக்குள் மேலோங்கி நிற்கும் காரணமாக இருக்கிறது.   

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருக்கின்ற அளவுக்கு, ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தனிமனித ஆதரவு என்பது இல்லை என்பது, யதார்த்தமாக இருக்கலாம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி, புதியதொரு கட்சியை ஆரம்பித்து, இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதைவிட, மஹிந்தவின் வேட்பாளர் யார் என்பதே அடுத்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் முக்கியமாகி இருக்குமளவுக்கு தனிமனித மக்களாதரவு மஹிந்தவுக்கு உண்டு.   

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்த்துவிட்டால், தனி மனிதனாக ரணிலுக்கு, மஹிந்தவுக்கு நிகரான ஆதரவு இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், இந்தப் புள்ளி மட்டும், தேர்தல் கணக்கைச் சமன் செய்யப் போதுமானதல்ல.  

அண்மைக் காலங்களில், இலங்கையில் தேர்தல் வாக்களிப்புப் பாணியை அவதானித்தோமானால், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி, கடும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. ஆனால் அந்தக் கடும் பின்னடைவின் போதுகூட, 29.34 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷ யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த, அவரது வார்த்தைகளில் ‘இந்த நாட்டை 30 வருட இருண்ட காலத்திலிருந்து மீட்டதன்’ பின், மஹிந்த ராஜபக்‌ஷ தன்னுடைய புகழின் உச்சியிலிருந்த பொழுதில் கூட, ஐக்கிய தேசியக் கட்சி 29.34 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது என்பது, அந்த 29.34 சதவீத வாக்குகள் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவு, அதாவது ‘கப்புவத் கொள; மறுவத் கொள’ (வெட்டினாலும் பச்சை; கொன்றாலும் பச்சை) என்று பொதுவில் விளிக்கப்படும் ஆதரவு என்பது, ஏறத்தாழ 29 சதவீதமாகும் என்று கொள்ளலாம்.   

மஹிந்தவுக்கு எதிரான அலை மீண்டும் ஓங்கியிருந்த, மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஒரு சிறு எழுச்சி கிடைத்திருந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 45.66 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. ‘நல்லாட்சி’ பற்றிய அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருந்தாலும், அந்த 45 சதவீத வாக்கு வங்கியில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த நிலையில்தான், 2019 ‘உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள்’ இடம்பெற்றன.   

இதன் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியைக் கணிசமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக இருந்த ஊசலாடும் ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி, மஹிந்தவை நோக்கி நகரும் பாணியை, நாம் அவதானிக்கலாம். இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு, பெரும் சவாலான சூழலாகும்.  

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, அதன் சார்பில் எவர் நிறுத்தப்பட்டாலும், குறைந்த பட்சம் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவு வாக்குவங்கியான ஏறத்தாழ 30 சதவீத அளவிலான வாக்குகளைப் பெறுவர். இன்றுள்ள சூழலில், சிறுபான்மை வாக்குவங்கியின் பெருமளவு மஹிந்தவுக்கு எதிரானது என்ற அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் பட்சத்தில், ஏறத்தாழ இன்னொரு 10 சதவீத வாக்குகளேனும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கும்.  

ஆனால், இந்த 40 சதவீதம் என்பது, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போதுமானதல்ல. 50 சதவீதம் என்ற புள்ளியை, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தாண்ட வேண்டுமானால், ஊசலாடும் ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியிடமிருந்து குறைந்தபட்சம் 11சதவீதமான வாக்குகளேனும் தேவை.   

2015 இல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுவேட்பாளரை நிறுத்தவும் மேற்சொன்ன வாக்குவங்கிக் கணக்குதான் முக்கிய காரணம். ஐக்கிய தேசியக் கட்சி, அனைத்துச் சிறுபான்மையினக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பங்கு ஆகியவை ஒன்றிணைந்த போதுதான், மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தேர்தல்களத்தின் அசகாயசூரனை வீழ்த்தக் கூடியதாக இருந்தது.   

ரணில் விக்கிரமசிங்க எனும் அரசியல் தந்திரோபாயக்காரன் மீண்டும் மீண்டும் தேர்தல் கூட்டுகளை நாடவும் இதுதான் காரணம். பொதுவில் சிலர், ரணில் பலமற்றவர், தனியே களம் காணப் பயம்கொள்கிறார் என்பார்கள். ஆனால், இது வீரம், பயம் சார்ந்த பிரச்சினையல்ல. இது கணிதம். வாக்குவங்கியின் கட்டமைவு; அதன்படி ஒவ்வொரு தரப்புக்கு குறைந்தபட்ச அடிப்படை வாக்குவங்கி, அது பற்றிய கணிதம். இதனால்தான் ரணில் மிகப்பொறுமையாகத் தன்னுடைய காய்களை நகர்த்துகிறார். இந்தக் கணக்கு தனக்குச் சாதகமாக வரும் என்று அவர் உணரும் போது மட்டுமே, அவர் நேரடியாக ஜனாதிபதித் தேர்தலில் களம் காண்பார்.  

‘உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களை’ தொடர்ந்து, இந்த நாட்டில் பேரினவாத சக்திகள் மீண்டும் பலமாகத் தலைதூக்கியுள்ளன. இனப்பிரச்சினையின் வடிவம் சிங்களம், தமிழ் என்பதிலிருந்து, சிங்களம், முஸ்லிம் என்பதாக மாறத்தொடங்குகிறதோ, என்ற எண்ணத்தை ஏற்படுத்துமளவுக்கு சூழ்நிலை உருவாகிக்கொண்டு வருகிறது.   

ஆனாலும், தன்னுடைய மாமனார் ஜே.ஆர், 1980 களில் விட்ட பிழையை, ரணில் விடத்தயாராக இல்லாதது ஒருவகையில் பாராட்டுக்குரியதே. தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்வதற்காக, இன்னோர் இனப்பிரச்சினைக்குத் தூபம் போட அவர் தயாராகவில்லை. அல்லது இதுவரை அவர் அதைச் செய்யவில்லை.   

தந்திரோபாய நோக்கில் பார்த்தால், இதுவும் ரணிலின் ஒரு தந்திரோபாய நகர்வுதான். தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியானது ரணிலை ஆதரிப்பதற்கு உள்ள வாய்ப்பு என்பது மிகச் சிறியது. ஏலவே பெருமளவுக்கு மஹிந்தவுக்கு எதிரான, ரணிலுக்கு ஆதரவான முஸ்லிம் வாக்கு வங்கியின் ஆதரவோடு ஒப்பிடுகையில், இதைவிட்டுவிட்டு, தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்திசெய்வது, அரசியல் ரீதியில் பயனற்றது.   

ரணில் இன்று திருப்தி செய்ய வேண்டியது, தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியை அல்ல. அது மஹிந்தவைத் தாண்டி, ரணிலை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை எனலாம்.   
ரணில், திருப்தி செய்ய வேண்டியது ஊசலாடிக்கொண்டிருக்கின்ற, தீவிர வலதுசாரித் தன்மையற்ற, நடுநிலையான ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியையே ஆகும். அதன் மூலம், இன்னொரு 11 சதவீதமான வாக்குகளைப் பெறமுடியுமானால், அவரால் 51 சதவீதமான என்ற இலக்கை அடைய முடியும்.   

ஆனால், அது இலகுவானதல்ல என்பது அவருக்கும் தெரியும். குறிப்பாக, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, பொருளாதார ஸ்திரத் தன்மையின்மை, அதிகப்படியான வரிச்சுமை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்கவின் மேலும் ஏற்பட்டுள்ள மத்தியவங்கி முறிகள் மோசடிக் கறை என்பனவெல்லாம், அந்த ஊசலாடும் வாக்குவங்கியைத் தன்னை நோக்கி திருப்புவதில் ரணிலுக்குள்ள மிகப்பெரும் சவால்களாகும்.  

ஒரு தெரிவை விரும்பாதவனைக் கூட, அந்தத் தெரிவைத் தேர்ந்தெடுக்கச் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, அவன் விரும்பத்தக்க வகையில் அந்தத் தெரிவை மேம்படுத்துதல். இரண்டு, மற்றைய தெரிவுகள் இதனைவிட மோசமாக அமையும் போது, வேறு வழியின்றி ‘உள்ளதற்குள் சிறந்ததாக’ இந்தத் தெரிவை அவன் மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.   

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், அதில் மைத்திரிபால என்ற நபர், வெற்றிபெற மேற்சொன்னதில் இரண்டாவது வழிதான் பயன்பட்டது. 2015இல் மைத்திரிபாலவுக்கு வாக்களித்த பெரும்பாலானவர்கள், மைத்திரிபால என்ற நபருக்காக வாக்களித்தார்கள் என்பதைவிட, மஹிந்த வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காக வாக்களித்தார்கள் என்பதுதான் நிதர்சனம்.   

ஆகவே, இதே உத்தி இம்முறை தேர்தலில் ரணிலுக்கு, பலனளிக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. மேலும், ஒரு வேளை ரணில் போட்டியிடாது விட்டால், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், வேறு யார் களம் காண்பார்கள் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதித்-தேர்தலில்களம்-காண்பாரா-ரணில்/91-234783

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலா சஜித்தா?

Editorial / 2019 ஜூலை 08 திங்கட்கிழமை, பி.ப. 02:50 Comments - 0

-என்.கே.அஷோக்பரன் 

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி விடையில்லாது தொக்கி நின்று கொண்டிருக்கும் பொழுது, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய முக்கியஸ்தர்களுள் ஒருவரான அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஜூலை 2ஆம் திகதி வௌியிட்டிருந்த அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஜனாதிபதி வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார்.  

மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியானது தன்னுடைய கட்சி சார்ந்தவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவில்லை என்பதை அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்த மங்கள சமரவீர கடந்த ஐந்தாண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சி தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றிக் கருத்துரைக்கும் போது, அடுத்த முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுபவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. ஆனால், அது மட்டும் போதாது, மாறாக அவர் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன், அத்தகைய வெற்றிபெறக்கூடிய சகல தகுதிகளும் கொண்டவர் சஜித் பிரேமதாஸ என்று குறிப்பிட்டதுடன், சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கான தனது ஆதரவையும் வௌிப்படுத்தியிருந்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவரான மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது வௌ்ளிடைமலை. சந்திரிக்காவின் பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் அவர்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது மங்களவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.  

மஹிந்தவின் வெற்றியைத் தொடர்ந்து 2007 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். ஆயினும் 2007இல் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான உறவில் கசப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மங்கள சமரவீர, அநுர பண்டாரநாயக்க, மற்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் பின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்த மங்கள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (மஹஜன) பிரிவை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரசியலில் அஸ்தமனமாகிக் கொண்டிருந்த மங்களவை அரவணைத்து அவருக்கு அரசியல் மறுவாழ்வளித்தவர் ரணில் விக்கிரமசிங்க. அதில் ரணிலின் சுயநலம் இல்லாமல் இல்லை. ரணிலின் ஆதரவுக்கரத்தை இறுகப் பற்றிக் கொண்ட மங்கள 2010இல் தன்னுடைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (மஹஜன) பிரிவை கலைத்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.  

அன்றிலிருந்து ரணிலின் ஆதரவாளராகவே மங்கள கட்சிக்குள் அடையாளங்காணப்பட்டார். கட்சிக்குள் ரணிலின் தலைமைக்கு எதிரான எதிர்ப்பு வலுத்த போதெல்லாம், ரணிலுக்கு பக்கபலமாக  மங்கள நின்றார். 2013இல் ரணிலுக்கு எதிராக மங்களவின் கோட்டையான மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதில் நேரடியாக தடையீடு செய்தவர் மங்கள. ஆகவே இன்று மங்கள தானாக முன்வந்து சஜித் பிரேமதாஸதான் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அறிக்கை வௌியிட்டிருப்பதானது பல கேள்விகளை எழுப்புகிறது.  

சந்திரிக்காவோடும், பின்னர் மஹிந்தவோடுமான உறவு கசந்ததைப் போல, ரணிலுடனான உறவும் மங்களவுக்கு கசந்துவிட்டதா, அல்லது ரணிலின் சம்மதத்தோடுதான் மங்கள குறித்த அறிக்கையை வௌியிட்டாரா என்ற கேள்வி முக்கியமானது. மேலும் தன்னுடைய அறிக்கையில் சஜித் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும், கட்சித் தலைமை ரணிலிடம் தொடரவேண்டும் என்ற தொனியிலும் ஒரு சிறு கருத்தை மங்கள பதிவு செய்திருந்தார்.  

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் போட்டியிட வேண்டுமானால், கட்சிக்குள் அதற்கான ஆதரவை ரணில் திரட்ட வேண்டும். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் தனக்குரியவர்களை ரணில் வைத்திருப்பது அவருக்குச் சாதகமானதாக இருந்தாலும், ஒரு வேளை இன்று மங்கள மாறியதைப் போல அவர்களும் மாறலாம். அரசியலில் ஆதரவு என்பது பெரும்பாலும் காற்றுவீசும் பக்கத்துக்கு சாயக்கூடியதொன்றாகவே இருந்துவருகிறது.  

சந்திரிக்காவின் மிக நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த பலர், மஹிந்த ஜனாதிபதி வேட்பாளரானதும் அவர் பக்கம் சாயத் தொடங்கினார்கள். மேலும் பண்டாரநாயக்க குடும்பத்தின் விசுவாசிகளாக பரம்பரை பரம்பரையாக இருந்த பலர் மஹிந்த ஜனாதிபதியானதும் ஒட்டுமொத்தமாக பண்டாரநாயக்க குடும்பத்தை மறந்துவிட்டு, ராஜபக்‌ஷ குடும்ப ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள். இது அரசியல் யதார்த்தம். ஆகவே ஜனாதிபதியாக சஜித், கட்சித்தலைவராக ரணில் என்பதெல்லாம் இலங்கை அரசியலில் நடப்புச்சாத்தியம் குறைந்த விடயங்கள்.  

இது ரணில், சஜித் என்ற இரண்டு ஆளுமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, அவர்கள் பின்னாலுள்ள ஆட்டுவிக்கும் சக்திகள், ஆதரவுப்புலம், நிகழ்ச்சிநிரல்கள் ஆகியவற்றையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். ஆகவே சஜித் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், ரணிலின் அரசியல் வாழ்க்கை அத்தோடு நிறைவடைந்துவிடும். ஏனெனில்
சஜித் பிரேமதாஸவே விரும்பினால் கூட, அதன் பின்னர் கட்சித் தலைவராகவோ, பிரதமராகவோ ரணில் தொடர்வதை சஜித்தின் ஆதரவுப்புலம் விரும்பாது, அந்த ஆதரவுப்புலத்தை மீறி எவ்வளவுதூரம் சஜித்தால் செயற்படமுடியும் என்பதும் யதார்த்த அரசியலைக் கருத்திற்கொண்டால் ஐயத்துக்குரியது.  

இதற்கு முன்னர் மங்கள ஒருபோதும் சஜித் ஆதரவாளராக இருந்தவரல்ல. மாறாக சஜித்-ரணில் தலைமை முறுகல் நிலைமைகளின் போது, மங்கள ரணிலோடு நின்றவர். இன்று அவர் சஜித் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக வேண்டும் என்று கருத்துரைத்திருக்கிறார் என்றால், அதற்குள் வேறு நிகழ்ச்சிநிரல் இருக்கலாமா என்ற ஐயம் இயல்பானதே. ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள்வரை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் பெரும் கேள்விகள் இருக்கவில்லை.  

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ரணிலே போட்டியிடுவார் என்பது ஐக்கிய தேசியக் கட்சி மட்டத்திலேனும் வௌிப்படையாகச் சொல்லப்படா விட்டாலும் அனைவரும் உணர்ந்திருந்ததொன்றாகவே இருந்தது. ஆனால் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீதான மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வலுவைச் சிதைத்ததுடன், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புக்கான பெரும் ஆதரவு எழுச்சி அலையை உருவாக்கியிருந்தது. இந்தத் திருப்புமுனைகூட ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யத் தூண்டியிருக்கலாம். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலோ, அல்லது சஜித் பிரேமதாஸ போட்டியிட்டு வெற்றி பெற்றாலோ ரணிலின் அரசியல் வாழ்க்கை என்பது அத்தோடு அஸ்தமனமாகிவிடும். ரணிலின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால், ரணிலின் ஆதரவாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் அரசியலையும் அது பெருமளவு பாதிக்கும். ஆகவே தற்போதுள்ள சூழலில் அடுத்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உசிதமானதா என்று ரணில் சிந்தித்திருக்கலாம்.  

வாக்குவங்கி யதார்த்த நிலையைப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படை ஆதரவு வாக்குவங்கி மட்டும்தான் ரணிலுக்கு உறுதியாகக் கிடைக்கும். ராஜபக்‌ஷ எதிர்ப்பு என்ற ரீதியில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி ரணிலை ஆதரிக்கலாம். ஆனால், தமிழர்களின் வாக்குவங்கி என்றுமில்லாதது போல பிரிந்து நிற்கும் யதார்த்தத்தையும் நாம் மறுக்கமுடியாது. வடக்கு-கிழக்கு என்று ஒன்றாக நின்ற தமிழர் வாக்குவங்கி, இன்று வடக்காகவும், கிழக்காகவும் பிரிந்து நிற்கிறது. வடக்கின் தமிழர்களுக்கு, கிழக்கின் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் புரியவில்லை என்பது கிழக்கு தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.  

ஆகவே, பிரிந்துநிற்கும் தமிழர் வாக்குவங்கி ரணிலை முழுமையாக ஆதரிக்கும் என்று சொல்லவும் முடியாது. மறுபுறத்தில் “சிங்கள-பௌத்த” வாக்குவங்கியின் எழுச்சி அலை மஹிந்த தரப்புக்கு ஆதரவாக இருக்கிறது. குறிப்பாக அரசியலில் நேரடியாக கருத்துரைத்துக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குகள் மஹிந்த தரப்பை நேரடியாக ஆதரிப்பார்கள் என்றே தோன்றுகிறது. இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது, ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்தும் ரணிலின் தந்திரோபாய நகர்வாகக் கூட மங்களவின் அறிக்கையை நாம் கருத இடமில்லாமல் இல்லை.  

மஹிந்த தரப்புக்கு ஆதரவு அலை பெருமளவு உள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ள சூழலில், சஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கும் போது, அவர் தோல்விகண்டால் ரணிலினால் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்க முடியும். மேலும், அரசியலமைப்புக்கான 19ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிப் பதவியில் அதிகாரங்கள் முன்னர் இருந்ததைவிட பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அதிலும் குறிப்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்ததாக வரும் ஜனாதிபதிக்கு மைத்திரிபாலவுக்கு உள்ள அதிகாரங்கள் கூட இருக்காது.  

ஆகவே, எவர் ஜனாதிபதியானாலும், நாடாளுமன்றப் பலத்தை தான் தக்கவைத்துக் கொண்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கத்தக்க, அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் மட்டுப்படுத்தும் இன்னோர் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்தால், பலமுள்ள பிரதமராக தொடரமுடியும் என்பது ரணிலின் எண்ணமாக இருக்கலாம். ஏனென்றால், வாக்குவங்கியின் ஆதரவு குறைவாகவுள்ள காலகட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் அத்தோடு, ரணிலின் அரசியல்வாழ்வு முடிந்துவிடும்.  

அதுபோலவே சஜித் வென்றாலும், அதற்குப் பின்னர் கட்சியைத் தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினம். ஆகவே மிகச் சுயநலமான மக்கியாவலிய தந்திரோபாயப் பார்வையில் பார்த்தால், வாக்குவங்கியின் ஆதரவை மீட்டெடுக்க முடியாத சூழலில், ரணில் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது தவிர்ப்பார் என்பதோடு, தன்தரப்பைச் சார்ந்த வேறொரு வேட்பாளரை நிறுத்துவார் என்பதும், அதேவேளை, மறுதரப்பு வெல்வதையே விரும்புவார் என்பது தந்திரோபாயரீதியாக தௌிவாக விளங்குகிறது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சஜித் தோல்வியடைந்தால், அத்தோடு கட்சித் தலைமைக்கான சஜித்தின் போட்டியும் அடங்கும் என்ற கணக்கையும் நாம் இங்கு கருத்திற் கொள்ளலாம்.  

எது எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது பேரினவாதத்தின் மறுமலர்ச்சிக்கான தேர்தலாகவே அமையப்போகிறது. இதனை இலங்கை மக்கள் அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். மக்களின் அதிருப்தியை, அச்சத்தை, பாதுகாப்பின்மை தொடர்பிலான உணர்வை பேரினவாதிகள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள முனைகிறார்கள். இது பெரும் அவலத்துக்குத்தான் வழிவகுக்கும். இந்த விஷச்சுழலிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ளாவிட்டால், இந்த நாட்டையும், இந்த மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டியதாக உள்ளது. 

(முற்றும்)

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலா-சஜித்தா/91-235007

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.