Jump to content

இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்
 
  •  
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?படத்தின் காப்புரிமை Getty Images

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் குறுகிய நீளம் கொண்ட காணொளிகளை பகிர்ந்து கொள்ளும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள், எவ்வித கடவுச்சொல்லும் இன்றி அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ளதாக டெக்கிரன்ச் எனும் இணையதள செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்டது.

"அனுராக் சென் எனும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை கொண்ட தரவுத்தளம் இணையத்தில் காணக்கிடைப்பதாக எங்களிடம் தெரிவித்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கசிந்தது என்ன?

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?படத்தின் காப்புரிமை Getty Images

இணையத்தில் கசிந்ததாக கூறப்படும் அந்த தரவுத்தளத்தில், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களின் கணக்கு விவர குறிப்பு (பயோ), புகைப்படம், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, வசிக்கும் நகரம் - நாடு ஆகிய தகவல்கள் மட்டுமின்றி, ஒவ்வொருவரது தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவையும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் கசிவு குறித்த மேலதிக விவரங்களை ஆராயும்போது, இந்தத் தரவுகளை தன்னகத்தே கொண்டிருந்த தரவுத் தளம் மும்பையை சேர்ந்த மின்னணு சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) நிறுவனமான சாட்டர்பாக்ஸுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விளம்பரத்தை பெற்று அதை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளவர்களின் வாயிலாக அவர்களது தனிப்பட்ட பக்கத்தில் வெளியிட வைத்து சந்தைப்படுத்தும் பணியை சாட்டர்பாக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது கசிந்துள்ள தரவுத்தளத்தில், ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளருக்கு உள்ள பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை, பதிவுகள் பெற்ற விருப்பக்குறிகள், பகிர்வுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு ஒரு விளம்பரத்தை பகிர்வதற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்ற மதிப்பீடும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவலை தெரிந்துகொள்வதற்காக சாட்டர்பாக்ஸ் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால், இதுவரை எவ்வித பதிலும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்களின் மில்லியன்கணக்கான அந்தரங்க தகவல்களை கொண்டிருந்த அந்த தரவுத்தளம் தற்போது பொதுவெளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கேட்க இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, "இன்ஸ்டாகிராம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இன்ஸ்டாகிராமிலிருந்து எடுக்கப்பட்டதா அல்லது மற்ற மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதுமட்டுமின்றி, இந்த தரவுத்தளம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? பொதுவெளியில் எப்படி வெளியானது? என்பது குறித்து அறிவதற்காக சாட்டர்பாக்ஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இன்ஸ்டாகிராமின் தனியுரிமை கொள்கையின்படி, அதன் பயன்பாட்டாளர்களின் கணக்கு சார்ந்த விவரங்களை திரட்டுவது சட்ட விரோதமானது ஆகும்.

திருடப்பட்டதா? பயனாளர்களால் கொடுக்கப்பட்டதா?

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?படத்தின் காப்புரிமை Getty Images

சமூக ஊடகங்களில் ஆதிக்கம் மிக்க சுமார் 1,84,840 பேர் தங்களுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்படுவதாக சாட்டர்பாக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை சாட்டர்பாக்ஸ் போன்ற மின்னணு சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் எவ்வாறு திரட்டுகின்றன என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்த விளக்கத்தை பெறுவதற்காக சென்னையை சேர்ந்த மின்னணு சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) நிறுவனமான எக்கோவிஎம்ஈயின் தலைமை செயலதிகாரி சௌரவ் ஜெயினிடம் பேசினோம்.

"இது கண்டிப்பாக தவறான வழிகளில் திரட்டப்பட்ட தரவாக இருக்க முடியாது. ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் எவ்வளவு பயனர் தரவை கொண்டிருக்கிறதோ அது அவ்வளவு வணிகத்தை மேற்கொள்ள முடியும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, எங்களது நிறுவனத்தில் கூட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் பெயர், வயது, இருப்பிடம், அலைபேசி எண்/ மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளன" என்று சௌரவ் கூறுகிறார்.

பிறகு எந்த வழியை பயன்படுத்தி இணையதள பயன்பாட்டாளர்களின் அந்தரங்க தகவல்கள் திரட்டப்படுகின்றன என்று அவரிடம் கேட்டபோது, "பல்வேறு இணையதளங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் தனிப்பட்ட ஒருவரை மையமாக கொண்டு ஏற்படுத்தப்படும் கண்ணை பறிக்கும் விளம்பரங்கள், கருத்துக் கணிப்புகள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றை கிளிக் செய்யும்போது ஒருவர் அறிந்தோ, அறியாமலோ தன்னை பற்றிய தகவல்களை பறிகொடுக்கிறார். அந்த தகவலை பெறும் நிறுவனம் அதை மற்றொரு நிறுவனத்திற்கு விற்பதற்கு கூட வாய்ப்புள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?படத்தின் காப்புரிமை Getty Images

சாட்டர்பாக்ஸ் நிறுவனத்தின் விவகாரத்தை பொறுத்தவரை, அவர்கள் திரட்டிய தகவலை சரியான முறையில் பாதுகாக்காமல் விட்டதே தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குறித்த தரவை அந்நிறுவனம் கடவுச்சொல் கூட இல்லாமல் நிர்வகித்துள்ளது" என்று சௌரவ் மேலும் கூறுகிறார்.

சாட்டர்பாக்ஸ் நிறுவனம் தற்போது அந்த தரவை பொதுவெளியில் இருந்து நீக்கியிருக்கலாம்; ஆனால், அவர்கள் நீக்குவதற்கும் முன்னர் யாராவது பயனர்களின் தகவல்களை பிரதியெடுத்து வைத்திருப்பார்களா? அதன் காரணமாக மேலதிக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

உங்களது அந்தரங்க தரவை பாதுகாப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களின் அந்தரங்க தகவல்கள் பொதுவெளியில் வெளியாவது இது முதல் முறையல்ல.

2017ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டை பயன்படுத்தி கொண்ட ஹேக்கர்கள் அதன் ஆறு மில்லியன் பயன்பாட்டாளர்களின் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை திருடி அவற்றை பிட்காயினுக்கு பதிலாக விற்பனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பயன்பாட்டாளர்கள் தங்களது அந்தரங்க தகவல்கள் பறிபோவதை தடுப்பதற்கான சில வழிமுறைகளை காண்போம்.

  • "அமேசான் இணையதளத்தில் பொருட்களை வாங்க 50 சதவீத தள்ளுபடி! கூப்பனுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்' என்பது போன்ற கண்ணை பறிக்கும் போலி விளம்பரங்களை நம்பாதீர்கள்.
  • 'எங்களது இணையதளத்தின் சேவையை தொடர்ந்து பயன்படுத்த உங்களது கூகுள்/ ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி புகுபதிகை செய்யுங்கள்' என்று கேட்கப்படுவதைப் போன்ற சூழ்நிலைகளில், அந்த குறிப்பிட்ட இணையதளத்திலேயே தனி கணக்கு ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
  • 'எங்கள் சர்வேவுக்கு பதிலளியுங்கள் - 1000 ரூபாய் கூப்பனை பரிசாக வெல்லுங்கள்' என்பது போன்ற போலியான கருத்துக்கணிப்புகளில் பங்கேற்று உங்களது அந்தரங்க தகவல்களை இழக்காதீர்கள்.
  • ஒரு மென்பொருளையோ, செயலியையோ நிறுவுறும்போது அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்யுங்கள்.
  • கல்வி கண்காட்சி, பொருட்காட்சி, விற்பனை மையங்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது கண்மூடித்தனமாக உங்களை பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

https://www.bbc.com/tamil/science-48355518

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.