Jump to content

கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக வாணிபத்துக்கு மிகவும் முக்கியமானதாக இந்துசமுத்திரம் விளங்குகின்ற நிலையில், கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் இணங்கியிருப்பதாக டோக்கியோ பங்குப் பரிவர்த்தனையின் சந்தை நிலைவர ' நிக்கீ ' அட்டவணையின் மூலம் தெரியவந்திருக்கிறது.

Colombo_Harber.jpg

 தெற்காசியாவிலும் அதைச் சுற்றியும் கடல் போக்குவரத்தை மேம்படுத்துவதும் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பரும அளவை அதிகரிப்பதுமே இந்த கூட்டுச் செயற்திட்டத்தின் இலக்குகளாகும்.

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தொடங்கப்படவிருக்கும் திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் மூன்று நாடுகளும் விரைவில் கைச்சாத்திடவிருப்பதாக கூறப்படுகிறது.

 இந்த பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு சீனா அதன் நவீன பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தை பயன்படுத்துகின்ற அதேவேளை, ஜப்பான் அதன் திறந்த பசுபிக் -இந்து சமுத்திர மூலோபாயத்திட்டத்தை தீவிரப்படுத்தி பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரமொன்றை வகிப்பதில் நாட்டம் காட்ட ஆரம்பித்திருக்கின்ற ஒரு நேரத்தில் மூன்று நாடுகளும் கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கு இணங்கியிருக்கின்றமை கவனிக்கத்தக்கதாகும். 

புதிதாக விஸ்தரிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் கிழக்கு கொள்கலன் முனையத்தை மூன்று நாடுகளும் அபிவிருத்தி செய்யும். 

இந்த திட்டத்தில் கோர்ப்பரேட் நிறுவனங்களும் பங்கேற்பதற்கு  வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.virakesari.lk/article/56515

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு நாளும் கிண்டிக்கொண்டு இருந்தவன் சைனா காரன் கதை முடிஞ்சு போச்சாக்கும் .

 

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

அப்ப இவ்வளவு நாளும் கிண்டிக்கொண்டு இருந்தவன் சைனா காரன் கதை முடிஞ்சு போச்சாக்கும் .

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் ஒரு பகுதியை மட்டுமே சீனா எடுத்திருந்தது. மிகுதி இலங்கையின் பொறுப்பில்.

ஆரம்பத்தில் கொழும்பு துறைமுக அபிவிருத்தியை சீனா ஆரம்பித்த போது அதை எதிர்த்த இந்தியா பின் 2016 இல் தனது நிறுவனங்களையும் முதலிட வைக்கும் எண்ணத்தில் கதைத்த போது அதை சீனா வரவேற்றிருந்தது. இந்தியா மட்டுமல்ல வேறு நாடுகளின் முதலீடுகளையும் வரவேற்பதாக கூறியது.

2016 ஆம் ஆண்டே கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியில் இந்தியாவுக்கு நாட்டம் இருந்ததால் அதை இந்தியாவுக்கு கொடுக்கும் நோக்கில் கருத்து பகிரப்பட்டது.

பின் போன வருடம் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு தர முடியாது, வேண்டுமானால் மேற்கு கொள்கலன் முனையத்தை அவர்கள் அபிவிருத்தி செய்யட்டும் என்று மைத்திரிபால சிறிசேன சொல்லி ஒரே புடுங்குப்பாடு நடந்து இப்ப கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பானுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்ய முடிவு செய்திருக்கினம்.

சீனா தனது பக்க அபிவிருத்தியை தொடரும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அப்ப இவ்வளவு நாளும் கிண்டிக்கொண்டு இருந்தவன் சைனா காரன் கதை முடிஞ்சு போச்சாக்கும் .

 

சிறிலங்காவை இப்ப ஆர் வைச்சிருக்கினம்....சொறி ஆர் இப்ப வைச்சு பராமரிக்கினம்? 🤣

Link to comment
Share on other sites

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியப் பயங்கரவாதிகள் இலங்கை மண்ணில் இருந்து பூரணமாக அகற்றப்படும்வரை இலங்கையில் அமைதிக்கு சாத்தியமே இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவை இப்ப ஆர் வைச்சிருக்கினம்....சொறி ஆர் இப்ப வைச்சு பராமரிக்கினம்? 🤣

வந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎

Link to comment
Share on other sites

8 hours ago, போல் said:

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியப் பயங்கரவாதிகள் இலங்கை மண்ணில் இருந்து பூரணமாக அகற்றப்படும்வரை இலங்கையில் அமைதிக்கு சாத்தியமே இல்லை!

அப்ப அமெரிக்கா, சீனா, மற்றும் பல நாடுகள் பயங்கரவாதிகள் இல்லையோ? அவர்களும் சேர்ந்து தான் புலிகள் உட்பட தமிழர்களை அழித்தார்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

அப்ப அமெரிக்கா, சீனா, மற்றும் பல நாடுகள் பயங்கரவாதிகள் இல்லையோ? அவர்களும் சேர்ந்து தான் புலிகள் உட்பட தமிழர்களை அழித்தார்கள்.

மெய் தானுங்கோ!
இப்படி கேட்ட படியா, ஒரு பெரிய லிஸ்டே வச்சிருப்பீங்கள் என்டு நினைக்கிறன் எடுத்து விடுங்கோ பாப்பம்.
நானும் தெரிஞ்சுகொள்ளலாம் தானே!
அவை எத்தனை பேரை நேரடியா படுகொலை செய்தவை?
அவை எந்த ஆசுபத்திரிக்கை நோயாளிகளையும் வைத்தியர்களையும் நேரடியா படுகொலை செய்தவை?
அவை எத்தின தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவை?

 

-----

------

 

Link to comment
Share on other sites

7 hours ago, Rajesh said:

மெய் தானுங்கோ!
இப்படி கேட்ட படியா, ஒரு பெரிய லிஸ்டே வச்சிருப்பீங்கள் என்டு நினைக்கிறன் எடுத்து விடுங்கோ பாப்பம்.
நானும் தெரிஞ்சுகொள்ளலாம் தானே!
அவை எத்தனை பேரை நேரடியா படுகொலை செய்தவை?
அவை எந்த ஆசுபத்திரிக்கை நோயாளிகளையும் வைத்தியர்களையும் நேரடியா படுகொலை செய்தவை?
அவை எத்தின தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவை?

-----

------

உங்களை பொறுத்தவரை நேரடியாக இவ்வளவையும் செய்பவை மட்டும் தான் பயங்கரவாதி, மற்றவை இல்லை? இவை தாங்கள் இராணுவத்தை அனுப்பிற நாடுகளிலை உதையெல்லாம் நேரடியா செய்தவை தான். அந்தந்த நாட்டு பத்திரிகைகளை பாருங்கோ. அதைவிட நிறைய செய்யினம். உங்களுக்கு உலகத்திலை நடக்கிற ஒன்றும் தெரியாட்டி அதுக்கு நான் ஒன்றும் செய்யேலாது.

இந்தியா தமிழருக்கு கிடைத்த சாபக்கேடு தான். ஆனால் இந்தியாவை குறை சொல்பவர்கள் ஏன் மற்றைய நாடுகளை எளிதில் விட்டு விடுகிறார்கள்?

போர் நிறுத்தம், சமாதான பேச்சு வார்த்தை என்று உள்ளை வந்து புலிகளின் பலம், பலவீனத்தை மதிப்பிட்டு, அங்காலை இலங்கை அரசுக்கும் தகவல் வழங்கி, அவர்களை பலப்படுத்தி புலிகளை பலவீனப்படுத்தினவை.

இலங்கை அரசுக்கு ஆயுதங்கள், இரசாயன குண்டுகள், புலனாய்வுத்தகவல்கள், நிதியுதவி மற்றும் பல உதவிகளை வழங்கினவை. மக்களை இரசாயன குண்டு போட்டு கொல்லும் போது பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நாடுகள் தான் இவை. புலிகளை சரணடைய சொன்னதிலும் இவையின்ட பங்கு இருக்கு. போர் முடிந்த பின்னும், satellite படங்களை வைத்திருந்தும், நடந்த கொடூரங்கள் பற்றிய காணொளிகள் ஆதாரமாக இருந்தும் இப்ப வரைக்கும் ஒரு நீதி இல்லை. இவையும் போர்க்குற்றவாளியாச்சே.

நேரடியா ஒருத்தனை கொல்லாமை இன்னொருத்தனுக்கு முழு உதவியையும் வழங்கி கொன்றால் அதிலை உங்களுக்கு ok போல.

இந்த நாடுகளின் உதவி இல்லாட்டி இலங்கை அரசு புலிகளை போரில் வென்றிருக்காது, இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டும் இருக்க மாட்டார்கள். அது தன்னும் தெரியுமோ?

Link to comment
Share on other sites

17 hours ago, Lara said:

அப்ப அமெரிக்கா, சீனா, மற்றும் பல நாடுகள் பயங்கரவாதிகள் இல்லையோ? அவர்களும் சேர்ந்து தான் புலிகள் உட்பட தமிழர்களை அழித்தார்கள்.

இவற்றுக்கும் இந்திய மிலேச்சப் பயங்கரவாதத்துக்கும் ஒப்பிட முடியாதளவு நிறைய வித்தியாசம் உண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துவுக்கு 6000 வருடங்கள் முன்பு ...........

என்று வரலாறு எழுதுற மாதிரி..
 வர்த்தகம் வணிகம் முதலீடு உலக அரசியல் செய்திதொகுப்பு  தமிழ்மொழி 
கட்டுரை  காவியம் என்பதில் எதுவுமே தெரியாத இணையத்தில் நாலு தமிழ் சொற்கள் 
எழுத தெரிந்த அரைவேக்காட்டு செய்திகளை வைத்து இனியும் தயவு செய்து கருத்து எழுதி உங்கள் 
நேரங்களை வீணாக்காதீர்கள்.
வீரகேசரி என்பது முன்பு பல நல்ல செய்தியாளர்களால் முன்னெடுக்க பட்ட ஒரு பத்திரிகை 
இப்போ வியாபார நோக்கம் கொண்டு இப்படி அசிங்கமாகி சந்தி சிரிக்க நிற்கிறது கவலையானது. 

துறைமுக விரிவாக்கங்கங்கள் பல பில்லியன் டொலர் செலவில் செய்ய படுபவை 
இவை இருக்கும் வீடடை புதுப்பிக்கிற மாதிரி முதலில் குசுனி பின்பு ஆடு மாடு கட்ட கொட்டில் 
விறாந்தை என்று செய்ய முடியாது.

இப்போது சாதாரண வீதி புராணமைப்பு கூட பூர்த்தியான வரைபடத்துடன்தான் செய்ய முடியும் 
காரணம் திரும்ப திரும்ப கிளறினால் ஒவ்வரு முறையும் பல மில்லியன் டொலரை விழுங்கி விடும். 

இலங்கை துறைமுகம் 
காலிமுகத்திடலில் கடலுக்கு உள்ளே போர்ட் சிட்டி 
இரண்டும் சீனா நிறுவனம்தான் செய்கிறது 

துறைமுகத்த்தில் தெற்கு டெர்மினல் முடிவு பெற்று பாவனை நடைபெறுகிறது 
மேற்கு டெர்மினல் முடியும் தருவாயில் இருக்கிறது  
வடக்கு டெர்மினல்  மற்றும் பின் டெர்மினல் என்பதுக்கான வேலைத்திட்டம் 
மேற்கு டெர்மினல் முடியும்போதுதான் தொடங்கப்படும் என்பதும் அதுக்கான முதலீடுகளை 
வெளியில் இருந்து இலங்கை எதிர்பார்ப்பதாகவும் 2016லேயே அறிவித்து இருந்தது.
அப்போதான் இந்திய பிரதமர் மோடி சென்று இந்தியா முதலீடு செய்வதாகவும் குத்தகையாக மேற்கு 
டெர்மினல் வேண்டும் என்றும் குளறுபாடு நடந்தது பழைய செய்தி.
சீனா தொடங்கும்போதே மேற்கு டெர்மினலை குத்ததகைக்கு கையெழுத்து வாங்கிவிட்டே தொடங்கியது 
மற்ற டெர்மினல்களுக்கும் மேற்கு டெர்மினலுக்கும் உள்ள வித்த்தியாசம்  இது ஆழமானது  எந்த பெரிய கப்பலும் வந்து செல்ல வசதி உடையது. 

இந்தியா .... ஜப்பான் ..... சீனா ... அமேரிக்கா ..... அங்கோலா 
என்று அரசியல் நாடகம்  எழுத இதில் ஒன்றும் இல்லை இவை அனைத்தும் 
தனியார் நிறுவனங்களால் இலங்கை அரசின் சம்மதத்துடன் செய்யப்படுபவை 
இந்த நிறுவனங்களுக்கு  தமது சொந்த நாட்டினதும் இலங்கை அரசினதும் பச்சை கொடி 
அசைப்பு  தேவை அவளவுதான். இப்போதும் நிறைய பணம் தேவை முதலீடு செய்ய பலரை 
எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தில்  சிங்கப்பூர் போல இலங்கை வரியில்லா இறக்குமதி ஏற்றுமதி செய்யப்போகிறது  அப்போ பல நாடுகளின் பண்ட மாற்றம் (Goods Trade) இலங்கையில் நடக்கலாம். 
முதலீடு செய்பவர்கள் எவ்ளவு லாபம் எப்போது லாபம் வந்து சேரும் போன்றவற்றையே பார்ப்பார்கள். 
தவிர முதன்மையாக தமது முதலீட்டுக்கு எவ்ளவு நிச்சய தன்மை அல்லது பாதுக்காப்பு உண்டு என்பதை மட்டுமே பார்ப்பார்கள். 
இங்கே பூதரமாக ஒன்றும் இல்லை எல்லாம் பட்ட பகலில் எமது கண் முன்னாலேயே நடக்கிறது. 
இலங்கை 2050-2075 இல் துபாய் சிங்கப்பூர் போல மாறுவது சாத்தியம் 
மருதடி குளத்து காணிதானே என்று அசதியாக இருக்காதீர்கள் ..... முடிந்த அளவில் முதலீடு செய்து 
லாபம் பெற பாருங்கள். 

 

துறைமுக வேலை தொடங்குமுன்பு வரைபடம் 

Image result for sri lanka colombo harbour development project

கால எல்லைகளுடனான மீளமைப்பு திட்டம் 

Image result for sri lanka colombo harbour development project

நடந்து முடிந்த நடந்துகொண்டு இருக்கிற வேலைகள் 
சென்ற ஆண்டு 2018இல் 

Image result for sri lanka colombo harbour development project

 

Image result for sri lanka colombo harbour development project

பயன்பாட்டில் தெற்கு டெர்மினல் 

Related image

 

 

போர்ட் சிட்டி வரைபடம் 
இது 2040இல் தான் முழுமை பெறும் 

Image result for sri lanka colombo harbour development project

இதுவரையில் முடிந்துவிட்ட வடிவம் ..... 

Related image

துரித கதியில் நடைபெறும் வேலை திட்டம் 

Chinese dredgers work at the construction site of the Colombo Port City project. Photo: Xinhua

 

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, போல் said:

இவற்றுக்கும் இந்திய மிலேச்சப் பயங்கரவாதத்துக்கும் ஒப்பிட முடியாதளவு நிறைய வித்தியாசம் உண்டு!

அது உங்கள் பார்வை.

Rajesh என்பவர் எல்லா திரியிலும் ஓடி ஓடிப்போய் உங்கள் பதிவுகளுக்கு like போடுவதையும் நீங்கள் அவர் பதிவை like போடுவதையும் பார்த்தால் உங்களின் மறு அவதாரமோ அவர் என்று ஒரு சந்தேகம். அதாலை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. சும்மா ஒரு சந்தேகம் மட்டுமே.

Link to comment
Share on other sites

8 hours ago, Maruthankerny said:

துறைமுகத்த்தில் தெற்கு டெர்மினல் முடிவு பெற்று பாவனை நடைபெறுகிறது 
மேற்கு டெர்மினல் முடியும் தருவாயில் இருக்கிறது  
வடக்கு டெர்மினல்  மற்றும் பின் டெர்மினல் என்பதுக்கான வேலைத்திட்டம் 
மேற்கு டெர்மினல் முடியும்போதுதான் தொடங்கப்படும் என்பதும் அதுக்கான முதலீடுகளை 
வெளியில் இருந்து இலங்கை எதிர்பார்ப்பதாகவும் 2016லேயே அறிவித்து இருந்தது.
அப்போதான் இந்திய பிரதமர் மோடி சென்று இந்தியா முதலீடு செய்வதாகவும் குத்தகையாக மேற்கு 
டெர்மினல் வேண்டும் என்றும் குளறுபாடு நடந்தது பழைய செய்தி.
சீனா தொடங்கும்போதே மேற்கு டெர்மினலை குத்ததகைக்கு கையெழுத்து வாங்கிவிட்டே தொடங்கியது 
மற்ற டெர்மினல்களுக்கும் மேற்கு டெர்மினலுக்கும் உள்ள வித்த்தியாசம்  இது ஆழமானது  எந்த பெரிய கப்பலும் வந்து செல்ல வசதி உடையது. 

இந்தியா .... ஜப்பான் ..... சீனா ... அமேரிக்கா ..... அங்கோலா 
என்று அரசியல் நாடகம்  எழுத இதில் ஒன்றும் இல்லை இவை அனைத்தும் 
தனியார் நிறுவனங்களால் இலங்கை அரசின் சம்மதத்துடன் செய்யப்படுபவை 
இந்த நிறுவனங்களுக்கு  தமது சொந்த நாட்டினதும் இலங்கை அரசினதும் பச்சை கொடி 
அசைப்பு  தேவை அவளவுதான்.

கால எல்லைகளுடனான மீளமைப்பு திட்டம் 

Image result for sri lanka colombo harbour development project 

கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை தான் இந்தியா கேட்டிருந்தது. ரணிலுக்கு அதை அவர்களுக்கு கொடுக்க விருப்பம் இருந்த போது மைத்திரி கிழக்கு கொள்கலன் முனையத்தை இலங்கையே அபிவிருத்தி செய்து தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்புவதாக கூறி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியா அபிவிருத்தி செய்ய விரும்பினால் செய்யட்டும் என்றும் கூறியிருந்தார். இதில் ஜப்பானின் முதலீட்டையும் விரும்புவதாக கூறியிருந்தார். பின் இப்ப இந்தியா விரும்பிய மாதிரி கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியையே அதனுடனும் ஜப்பானுடனும் சேர்ந்து செய்ய இணக்கத்துக்கு வந்துள்ளார்கள்.

மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நீங்கள் இணைத்த படத்தில் கூறப்படும் ஆண்டுகள் ஆரம்பிக்கப்படும் ஆண்டுகள். அதனால் தான் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2020 என்று போட்டுள்ளார்கள். செய்தியிலும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2023 என போடப்பட்டிருப்பதால் அவ் ஆண்டு அதை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது போல. அதற்கான முதலீடுகள் பற்றி கலந்துரையாடுவார்கள் என நினைக்கிறேன். தெற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை சீனா செய்து வந்தது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியையும் சீனா செய்து வந்தது. (துறைமுக நகரத்தின் நிர்மாண வேலைகள் காரணமாக கொழும்பு நகரம் பூமியில் அமிழ்வதாக ஒரு கதையும் போனவருடம் அடிபட்டிச்சு. உண்மையோ பொய்யோ தெரியேல்லை. 😀)

கொழும்பு துறைமுக அபிவிருத்தி 2050 ஆம் ஆண்டளவில் முற்றாக முழுமையடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

வெளிக்கு அபிவிருத்தியாக தோன்றினாலும் பின்னணியில் அரசியலும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Lara said:

கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை தான் இந்தியா கேட்டிருந்தது. ரணிலுக்கு அதை அவர்களுக்கு கொடுக்க விருப்பம் இருந்த போது மைத்திரி கிழக்கு கொள்கலன் முனையத்தை இலங்கையே அபிவிருத்தி செய்து தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்புவதாக கூறி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியா அபிவிருத்தி செய்ய விரும்பினால் செய்யட்டும் என்றும் கூறியிருந்தார். இதில் ஜப்பானின் முதலீட்டையும் விரும்புவதாக கூறியிருந்தார். பின் இப்ப இந்தியா விரும்பிய மாதிரி கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியையே அதனுடனும் ஜப்பானுடனும் சேர்ந்து செய்ய இணக்கத்துக்கு வந்துள்ளார்கள்.

மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நீங்கள் இணைத்த படத்தில் கூறப்படும் ஆண்டுகள் ஆரம்பிக்கப்படும் ஆண்டுகள். அதனால் தான் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2020 என்று போட்டுள்ளார்கள். செய்தியிலும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு 2023 என போடப்பட்டிருப்பதால் அவ் ஆண்டு அதை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது போல. அதற்கான முதலீடுகள் பற்றி கலந்துரையாடுவார்கள் என நினைக்கிறேன். தெற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை சீனா செய்து வந்தது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியையும் சீனா செய்து வந்தது. (துறைமுக நகரத்தின் நிர்மாண வேலைகள் காரணமாக கொழும்பு நகரம் பூமியில் அமிழ்வதாக ஒரு கதையும் போனவருடம் அடிபட்டிச்சு. உண்மையோ பொய்யோ தெரியேல்லை. 😀)

கொழும்பு துறைமுக அபிவிருத்தி 2050 ஆம் ஆண்டளவில் முற்றாக முழுமையடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

வெளிக்கு அபிவிருத்தியாக தோன்றினாலும் பின்னணியில் அரசியலும் உள்ளது.

நீங்கள் எந்த செய்தியை வைத்து எழுதுகிறீர்கள் என்பது தெரியவில்லை 
மேற்கு டெர்மினல் தான் சர்ச்சைக்கு உரியதாக இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 
இருக்கிறது காரணம் பாரிய எண்ணெய் தாங்கிகள் மற்றும் விமானங்கள் இறங்கி எற 
கூடிய கடற்படை கப்பல்கள் இங்குதான் தரிக்க முடியும் மற்றவை அவ்வளவு  ஆழமும் அற்றவை. 
இந்தியாவுக்கு இது தேவையோ இல்லையோ சீனாவுக்கு இது போகாது இருக்க பெரும்பாடு 
பட்டார்கள் என்பது தான் நடந்தது. மற்ற டெர்மினல்கள் எல்லாம் திசைதான் வேறு தவிர பெரிதாக 
அடிபட்டு கைப்பற்ற ஒன்றும் இல்லை 

மேற்கு டெர்மினல் நிலத்தடி வேலைகள் முடிவுற்று விட்டதாகவே சீனா ஹார்பர் எஞ்சினீரிங் 
தளம் சொல்கிறது .. போர்ட் சிட்டி வேலைகள் நில அமைப்பு முடியும்வரை காத்திருப்பதாக அங்கே 
இருக்கிறது மற்றது போர்ட் சிட்டிக்கு 65 மில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் மணல் தேவை இதை கடலின் அடியில் இருந்துதான் எடுக்கிறார்கள் .. இதனால் துறைமுகத்தை அண்டி கடல் இன்னமும் ஆழமாகிறது. 
தெற்கு டெர்மினல் செயல்பாட்டில் இருக்கும்போது மேற்கு டெர்மினல் கடல் அடி வேலைகள் செய்வது 
இடையூறாக இருக்கும் என்பதால் அதை ஏற்கனவே முடிவுற்றதாக தான் ப்ராஜெக்ட் பிளானிலும் இருக்கிறது.

இதில் அரசியல் இல்லாமல் இல்லை தமிழ் செய்திகள் எழுதும் விசுக்கோத்து அரசியல் 
இல்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது. ரணில் பிரதமராக வந்தபோது அவருக்கு முண்டு கொடுத்து 
போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டை நிறுத்துவத்துக்கு இந்தியா முயற்சி செய்தது. அதுக்காக கூறப்பட்ட காரணம்தான்  கடலோர வாழ்வாதாரம் அழிகிறது என்பதும் கொழும்பு அமுல்கிறது என்பதும் ரணில் சீனாவுக்கு கூறிய காரணம்கள்  ... அப்போது இந்த ப்ராஜெக்ட் தற்காலிகமாக இடைநிறுத்த பட்டது. 

இவை அனைத்தையும் செய்வது சி சி சி சி  எனும் (சீனா கொம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் கொம்பனி) (CCCC China Communication Construction Company)  
இவர் நாள் ஒன்றுக்கு அரை மில்லியன் அளவில் நஷ்ட்ட படுவதாக கூறினார்கள் அதை இலங்கை அரசின் தலையில் கட்டிவிடுவதுக்கு முண்டு கொடுக்கும்போதுதான் ரணில் மீண்டும் இதை தொடர சம்மதித்தார்கள். 

பெருத்த அரசியல்...... எல்லாம் கடனில் நடக்கிறது 
ப்ராஜெக்ட் 2050இல் முடியும் ... இலங்கைக்கு கடன் 
3050வரை தொடர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை ... முதலீடு செய்வோருக்கு குத்ததகைக்கு கொடுத்தால் 
என்ன வருமானம் எடுத்து கடன் முடிப்பது? என்று எனக்கு புரியவில்லை.
கொழும்பு சனத்தொகை 2040இல் இரட்டிப்பாகும் இப்போது அண்ணளவாக 8 லட்ஷம் என்றால்  2041இல் 
16 லட்ஷம் ஆகும் ஒரு அடுக்குமாடி வீடே அமெரிக்க டாலர் படி மில்லியனுக்கு விற்கலாம். 
அதனால் கூடிய அளவில் எம்மவர்கள் முதலீடு செய்வது மிகுந்த லாபத்தை கொடுக்கும். இப்படி ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வராது. 

Link to comment
Share on other sites

3 hours ago, Maruthankerny said:

நீங்கள் எந்த செய்தியை வைத்து எழுதுகிறீர்கள் என்பது தெரியவில்லை 
மேற்கு டெர்மினல் தான் சர்ச்சைக்கு உரியதாக இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 
இருக்கிறது காரணம் பாரிய எண்ணெய் தாங்கிகள் மற்றும் விமானங்கள் இறங்கி எற 
கூடிய கடற்படை கப்பல்கள் இங்குதான் தரிக்க முடியும் மற்றவை அவ்வளவு  ஆழமும் அற்றவை. 
இந்தியாவுக்கு இது தேவையோ இல்லையோ சீனாவுக்கு இது போகாது இருக்க பெரும்பாடு 
பட்டார்கள் என்பது தான் நடந்தது. மற்ற டெர்மினல்கள் எல்லாம் திசைதான் வேறு தவிர பெரிதாக 
அடிபட்டு கைப்பற்ற ஒன்றும் இல்லை 

மேற்கு டெர்மினல் நிலத்தடி வேலைகள் முடிவுற்று விட்டதாகவே சீனா ஹார்பர் எஞ்சினீரிங் 
தளம் சொல்கிறது .. போர்ட் சிட்டி வேலைகள் நில அமைப்பு முடியும்வரை காத்திருப்பதாக அங்கே 
இருக்கிறது மற்றது போர்ட் சிட்டிக்கு 65 மில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் மணல் தேவை இதை கடலின் அடியில் இருந்துதான் எடுக்கிறார்கள் .. இதனால் துறைமுகத்தை அண்டி கடல் இன்னமும் ஆழமாகிறது. 
தெற்கு டெர்மினல் செயல்பாட்டில் இருக்கும்போது மேற்கு டெர்மினல் கடல் அடி வேலைகள் செய்வது 
இடையூறாக இருக்கும் என்பதால் அதை ஏற்கனவே முடிவுற்றதாக தான் ப்ராஜெக்ட் பிளானிலும் இருக்கிறது.

இதில் அரசியல் இல்லாமல் இல்லை தமிழ் செய்திகள் எழுதும் விசுக்கோத்து அரசியல் 
இல்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது. ரணில் பிரதமராக வந்தபோது அவருக்கு முண்டு கொடுத்து 
போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டை நிறுத்துவத்துக்கு இந்தியா முயற்சி செய்தது. அதுக்காக கூறப்பட்ட காரணம்தான்  கடலோர வாழ்வாதாரம் அழிகிறது என்பதும் கொழும்பு அமுல்கிறது என்பதும் ரணில் சீனாவுக்கு கூறிய காரணம்கள்  ... அப்போது இந்த ப்ராஜெக்ட் தற்காலிகமாக இடைநிறுத்த பட்டது. 

இவை அனைத்தையும் செய்வது சி சி சி சி  எனும் (சீனா கொம்யூனிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் கொம்பனி) (CCCC China Communication Construction Company)  
இவர் நாள் ஒன்றுக்கு அரை மில்லியன் அளவில் நஷ்ட்ட படுவதாக கூறினார்கள் அதை இலங்கை அரசின் தலையில் கட்டிவிடுவதுக்கு முண்டு கொடுக்கும்போதுதான் ரணில் மீண்டும் இதை தொடர சம்மதித்தார்கள். 

பெருத்த அரசியல்...... எல்லாம் கடனில் நடக்கிறது 
ப்ராஜெக்ட் 2050இல் முடியும் ... இலங்கைக்கு கடன் 
3050வரை தொடர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை ... முதலீடு செய்வோருக்கு குத்ததகைக்கு கொடுத்தால் 
என்ன வருமானம் எடுத்து கடன் முடிப்பது? என்று எனக்கு புரியவில்லை.
கொழும்பு சனத்தொகை 2040இல் இரட்டிப்பாகும் இப்போது அண்ணளவாக 8 லட்ஷம் என்றால்  2041இல் 
16 லட்ஷம் ஆகும் ஒரு அடுக்குமாடி வீடே அமெரிக்க டாலர் படி மில்லியனுக்கு விற்கலாம். 
அதனால் கூடிய அளவில் எம்மவர்கள் முதலீடு செய்வது மிகுந்த லாபத்தை கொடுக்கும். இப்படி ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வராது. 

நான் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளை வாசித்து வந்ததன் அடிப்படையில் தான் எழுதினேன்.

நீங்கள் இணைத்த படத்தில் கூட கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) 2020 என காட்டுகிறது. செய்தியிலும் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அத்திட்டம் தொடங்கவிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி மேற்கு கொள்கலன் முனையம் (WCT) 2023 என காட்டப்பட்டிருப்பதால் அதை அந்த ஆண்டு ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது என அர்த்தப்பட வேண்டும்.

கிழக்கு கொள்கலன் முனைய பிரச்சினை பற்றி நீங்கள் கேட்பதற்காக google இல் தேடி இணைப்பு தருகிறேன். போன வருட செய்தி.

https://www.pathivu.com/2018/10/Ranil-Maithre.html?m=1

இன்னொரு இணைப்பு.

http://www.virakesari.lk/article/43159

வேறு தமிழ், ஆங்கில ஊடகங்களிலும் இது பற்றி செய்தி வந்தது.

தவிர கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளால் கொழும்பு நகரம் அமிழ்ந்து செல்வதாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பொறியியலாளரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்றே செய்தி வெளியிட்டிருந்தது. அதுவும் போன வருடம். அது உண்மையா பொய்யா என எனக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Lara said:

நான் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளை வாசித்து வந்ததன் அடிப்படையில் தான் எழுதினேன்.

நீங்கள் இணைத்த படத்தில் கூட கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) 2020 என காட்டுகிறது. செய்தியிலும் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அத்திட்டம் தொடங்கவிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி மேற்கு கொள்கலன் முனையம் (WCT) 2023 என காட்டப்பட்டிருப்பதால் அதை அந்த ஆண்டு ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது என அர்த்தப்பட வேண்டும்.

கிழக்கு கொள்கலன் முனைய பிரச்சினை பற்றி நீங்கள் கேட்பதற்காக google இல் தேடி இணைப்பு தருகிறேன். போன வருட செய்தி.

https://www.pathivu.com/2018/10/Ranil-Maithre.html?m=1

இன்னொரு இணைப்பு.

http://www.virakesari.lk/article/43159

வேறு தமிழ், ஆங்கில ஊடகங்களிலும் இது பற்றி செய்தி வந்தது.

தவிர கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளால் கொழும்பு நகரம் அமிழ்ந்து செல்வதாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பொறியியலாளரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்றே செய்தி வெளியிட்டிருந்தது. அதுவும் போன வருடம். அது உண்மையா பொய்யா என எனக்கு தெரியாது.

Image result for sri lanka colombo harbour development project

மேல் இருக்கும் செய்திகள் இலங்கை அரசியல்வாதிகள் பேசுவதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் 
உள் இருக்கும் அரசியலையே தேவையோ காரணத்தையோ தேடி எழுதுவதில்லை.

நீங்கள் எழுதுவது உண்மைதான் 
நீங்கள் இறுதிவரைக்கும் இருந்து பாருங்கள் மேற்கு முனை 
இது சீனாவுக்கே இதை சீனா ஒருபோதும் விட்டு கொடுக்க போவதில்லை.

கிழக்கு டெர்மினல் வேலைத்திட்டம் இப்போது இடை செருகலாக 
போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டால் முன்னெடுக்க படுகிறது காரணம் வருமானம். 
இது போர்ட் சிட்டி வேலைக்குகளுக்கு இடைஞ்சலாக இருக்காது என்பதாலும் துரித கதியில் 
முடிக்க கூடியதாக இருக்கும் என்பதிலும்  மற்றும் சுங்க சாவடிகள்  போன்றவற்றை 
நிரந்தரமாகவே இந்த வாசலில் கட்ட போவதாலும் இதை முன்னெடுக்கிறார்கள்.

முதலீடாளர்கள் (இந்தியா ஜப்பான்) இதில் கவனம் செலுத்துவத்துக்கு காரணமும் 
உடனடி வருமானம் வரும் என்பதால்தான். 
ரணில் இதில் லூசு மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கிறார் 
உடனடி வருமானம் வர கூடிய மற்றும் சுங்க சாவடிகளோடு அமைய கூடிய டெர்மினலை 
சீனாவிடம் கடன் வாங்கி என்றாலும் இலங்கை வைத்திருப்பதே நாட்டுக்கு நன்று. 

நான் இந்த செய்திகள் வாசிப்பது குறைவு 
நான் இவர்களின் ஸ்டாக் வாங்கி வைத்திருந்தேன் (CCCGY
2016 இல் $16 டாலருக்கு வாங்கி  2017 இல் $26 டாலருக்கு விற்றுவிட்டேன் 
இப்போதும் கொஞ்சம் இருக்கிறது மீண்டும் $15 டாலருக்கு வரும்போது வாங்கலாம் என்று இருக்கிறேன்.
ஒவ்வரு 3 மாதத்துக்கும் (Quarter) எமக்கு விலாவாரியான விளக்கம் அனுப்புவார்கள்  என்ன ப்ராஜெக்ட் நடக்கிறது என்ன எதிர்கால திட்டம் என்று .... அதில்தான் இலங்கை லோக்கல் பொலிடிக்ஸ் தாமதபடுத்துவதை சுட்டி காட்டி கொண்டு இருந்தார்கள். 

Link to comment
Share on other sites

சரி சரி, அவை முந்தி செய்தா என்ன பிந்தி செய்தா என்ன. ஏதோ செய்து முடிக்கட்டும். 😀

ஆங்கில ஊடகமொன்றில் சீனா இன்னொரு கொள்கலன் முனைய அபிவிருத்தியை செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறது என வாசித்தேன். அது நீங்கள் கூறுவது போல் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியாக இருக்கவும் கூடும்.

Link to comment
Share on other sites

The Hindu இல் வெளிவந்துள்ள செய்தி. 

Sri Lanka, Japan, India sign deal to develop East Container Terminal at Colombo Port

Sri Lanka, Japan and India on Tuesday signed an agreement to jointly develop the East Container Terminal at the Colombo Port. The joint initiative is estimated to cost between $500 million and $700 million, a senior official of the Ministry of Ports, Shipping and Southern Development told The Hindu. 

The signing of the Memorandum of Cooperation (MoC) is significant, given that the countries had been negotiating the deal since last year, with little success. As per the agreement signed on Tuesday, the Sri Lanka Ports Authority (SLPA) retains 100% ownership of the East Container Terminal (ECT), while the Terminal Operations Company, conducting its operations, is jointly owned, the SLPA said in a statement. 

Sri Lanka will hold a 51 per cent-stake in the project and the joint venture partners will retain 49%.

The ECT is located some 3 km away from the China-backed international financial city, known popularly as “port city”, being built on reclaimed land on Colombo’s sea front.

“Japan is likely to provide a 40-year soft loan with a 0.1 percent interest rate,” said Sudarshana Gunawardana, Director of Development Communications at the Prime Minister’s office. The SLPA described the “envisaged Japanese loan” as “one of the best loan terms Sri Lanka has obtained”.

Details of India’s contribution to the initiative are awaited, but New Delhi’s interest in partnering the project is well known. Over 70 per cent of the transhipment business at the strategically located ECT is linked to India, according to official sources. 

However, last year, India’s possible role in developing the terminal had become a major flashpoint within the government. President Maithripala Sirisena had opposed any Indian involvement in the project, as roping in foreign actors for developing “national assets” remains a politically sensitive call in the island, especially among nationalist trade unions. Mr. Sirisena and Prime Minister Ranil Wickremesinghe had a heated argument on the matter during a cabinet meeting in October 2018, with the PM apparently more inclined towards allowing Indian participation.

While Japan had been part of negotiations even last year, the project assumed a predominantly ‘Sri Lanka-India’ dimension, especially in the local media. Japan has been a long-standing partner of Sri Lanka, and one of Sri Lanka’s biggest donors in the past decades. Japan also helped develop of the Jaya Container Terminal at the Colombo Port, supporting its operations since the 1980s.

The specific terms of the agreement to jointly develop the ECT will soon be finalised at a joint working group meeting, a diplomatic source said.

https://www.thehindu.com/news/international/sri-lanka-japan-india-sign-deal-to-develop-east-container-terminal-at-colombo-port/article27273794.ece

Link to comment
Share on other sites

நேற்று சொறிலங்காவும் ஹிண்டியாவும் அலறிமாளிகையில் ஒப்பந்தம் செய்ததா செய்திகள் சொல்லுது. மோடிட வெற்றி சொறிலங்காவை கொஞ்சம் கலங்கடிச்சிருக்கு. இல்லையென்டா ஒப்பந்தம் வழமை போல இழுத்தடிக்கப்பட்டிருக்கும்! இந்த கலக்கம் எத்தின நாளைக்கு என்டு தெரியல்ல.

Link to comment
Share on other sites

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது.

http://athavannews.com/கொழும்பு-துறைமுக-அபிவிரு/

Link to comment
Share on other sites

பிவிருத்திக்கு, எனக்கு இன்னொரு பெயரும் உண்டு, க்கிரமிப்பு ( உள்ளூர் திறனை அழித்தல்).


ழிச்சவாயர்கள் உள்ளநாடுகளில், உள்நாட்டு சண்டைகளை உருவாக்கி நான் அதில் குளிர் காய்வேன்.  
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/24/2019 at 1:37 PM, Maruthankerny said:

இலங்கை 2050-2075 இல் துபாய் சிங்கப்பூர் போல மாறுவது சாத்தியம் 
 

வரும் என்று நம்புறீங்கள்......50 களில் சிறிலங்கா என்று இருப்பதே சந்தேகம்....லங்கஸ்தான்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.