Jump to content

பார்ப்பரேட்டுகளின் எழுச்சி.... எகனாமிக் டைம்ஸ்" தரும் எச்சரிக்கை


Recommended Posts

Image may contain: outdoor
R R SrinivasanFollow

"பார்ப்பரேட்டுகளின் எழுச்சி....
எகனாமிக் டைம்ஸ்" தரும் எச்சரிக்கை

பிறப்பின் அடிப்படையில்தான் பார்ப்பனர்கள் உயர் ஜாதி யினர் என்று கருத வேண்டாம் - பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்கள் முதலிடத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஊடகங்கள் பார்ப்பனர்களின் கரங்களில் வசமாகக் சிக்கிக் கொண்டிருக்கும் காரணத்தால் ஒரு தவறான கருத்தைப் பரப்பி வைத்துள்ளனர்.

அய்யோ பாவம் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் சர்வராக வேலை பார்க்கிறார்கள். இடஒதுக்கீடு இருப்பதால் அவர் களுக்குப் படிக்கவும், வேலைக்கு போகவும் வாய்ப்பு இல்லாமல் சதி செய்யப்பட்டு விட்டது என்று உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகிறார்கள். பார்ப்பனர் அல்லாதாரும் இந்த மாயச் சுழலில் சிக்கி தாளம் போடுகிறார்கள்.

இந்தப் பொய்த்திரையை கிழிக்கும் வகையில்தான் "எகனாமிக் டைம்ஸ்" ஏடு (2019 மே 12 - 19) ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விவரங்களைத் தந்துள்ளது.

பணக்காரர்கள் என்று வரும் பொழுது பார்ப்பனர்கள் 49.9 விழுக்காடாகும். பிற்படுத்தப்பட்டோர் 15.8 விழுக் காடாகும். தாழ்த்தப்பட்டோர் 9.5 விழுக்காடாகும்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க பார்ப்பனர் எல்லாம் பரம ஏழைகள் போல பம்மாத்து பிரச்சாரம் நியாயம்தானா? இதனை நம்பும் பார்ப்பனரல்லாத மக்களின் மனநிலையை என்னவென்று சொல்லுவது!

ஏழை என்று எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் 4.6 விழுக்காடுதான், பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகள் 18.9 விழுக் காட்டினர் ஆவர். பிற்படுத்தப்பட்டோரில் பார்ப்பனர் களை விட ஏழைகள் அதிகம் என்பதை கவனிக்க வேண்டும். அதே போலவே தாழ்த்தப்பட்டவர்களில் ஏழைகள் 28.4 விழுக்காடாகும். இவர்களில் பணக்கார்கள் 9.5 விழுக்காடே!

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன? ஏழ்மைக்கும், ஜாதிக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்.

அதே போல பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதற்கான காரணிகளையும் தெரிந்து கொள்ளலாம். உத்தியோக நிலைமையை எடுத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம்.

எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஓபிசி அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்த இடங்களைக் காண்க:

1. குடியரசுத் தலைவர் செயலகத்தின் மொத்த இடுகைகள்- 49 இவர்களில் 39 பார்ப்பனர்கள் SC, ST - 4 OBC - 6

2. குடியரசு துணைத் தலைவர் செயலகத்தின் பதவிகள் 7 இங்கே 7 பதவியிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். SC-0 ST- 0 OBC - 0

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20 பார்ப்பனர்கள்- 17 SC, ST-1 OBC - 2

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் பார்ப்பனர்கள் - 31 - SC, ST - 2 OBC - 2

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் 274 பார்ப்பனர்கள் - 259 SC, ST - 5 OBC - 10

6. பாதுகாப்பு அமைச்சகம் 1379 பார்ப்பனர்கள் - 1300 SC, ST - 48 OBC - 31

7. சமுக நல மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 209 பார்ப்பனர்கள் - 132 SC, ST - 17 OBC - 60

8. நிதி அமைச்சின் மொத்த இடுகைகள் 1008 பார்ப்பனர்கள் - 942 SC, ST - 20 OBC - 46

9. பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 409 பதவிகள் பார்ப்பனர்கள் - 327 SC, ST - 19 OBC - 63

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 74 பார்ப்பனர்கள் - 59 SC, ST- 4 - OBC - 9

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121 பார்ப்பனர்கள் -SC, ST-0 OBC- 22

12. ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் 27, ஒட்டுமொத்தம் பார்ப்பனர்கள் - 25 SC, ST- 0 OBC - 2

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140 பதவி. பார்ப்பனர்கள் - 140 SC, ST - 0 OBC - 0

14. மத்திய அரசு பல்கலைக் கழக துணைவேந்தர் 108 பதவி. பார்ப்பனர்கள் - 100 SC, ST- 3 OBC - 5

15. மத்திய செயலாளர் பதவிகள் 26 பார்ப்பனர்கள் - 18 SC, ST - 1 OBC -7

16. உயர்நீதிமன்ற நீதிபதி 330 பதவி. பார்ப்பனர்கள் - 306 SC, ST - 4 OBC - 20

17. உச்சநீதிமன்ற நீதிபதி 26 பதவி. பார்ப்பனர்கள் - 23 SC, ST-1 OBC - 2

18. மொத்த அய்.ஏ.எஸ். அதிகாரி 3600 பதவி. பார்ப்பனர்கள் - 2750 SC, ST - 300 OBC - 350

(டில்லியினை அடிப்படையாகக் கொண்ட , 'யங் இந்தியா' எனப்படும் நிறுவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டில் கிடைத்த தகவல்)

இப்படி எல்லா நிலைகளிலும் வலுவாக வளமாக இருக்கும் பார்ப்பனர்கள் எல்லாம் ஏதோ பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று கூறி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்காக பாரதீய ஜனதா என்ற பார்ப்பன ஜனதா அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசு - அரசனை மிஞ்சிய விசுவாசியாக இதனைச் செயல்படுத்த முண்டா தட்டி எழுகிறது.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் திராவிட இயக்கம் - வேரூன்றிய மண்ணில், திராவிட என்ற பெயரையும், அண்ணா பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுக ஆட்சி, இடஒதுக்கீட்டில் பார்ப்பனத் தன்மையோடு செயல்படுவது மன்னிக்கவே முடியாத வெட்கக் கேடாகும். 'பலனை' வட்டியும் முதலுமாக அஇஅதிமுக அரசு சந்திக்க நேரும் என்று எச்சரிக்கிறோம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.