Jump to content

இந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு


Recommended Posts

இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர்.

தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன்.

சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்.

அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்று வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படும் பௌத்த எச்சங்களாகும்.

அவை தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த எச்சங்களாகும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின 'தெமளபௌத்தயோ' அதாவது தமிழ் பௌத்தர்கள் என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார்.

தமிழர்கள் பௌத்தர்களாக ஒருகாலத்தில் வாழ்ந்து வந்தமை பற்றி அந்த நூலில் அவர் ஆராய்ந்துள்ளார்.

'தெமளபௌத்தயோ' காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்து சமயத்தை மீண்டும் தழுவினர்.

சிங்கள மொழியானது கிறிஸ்துவுக்கு பின் 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே நடைமுறைக்கு வந்தது.

அதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் பாளிமொழியிலேயே எழுதப்பட்டது.

அப்போது சிங்கள மொழி பிறக்கவில்லை.

இந்த நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியை அத்திவாரமாக வைத்து அதன் மேல் பாளிமொழியினால் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த மொழியே சிங்கள மொழியாகும்.

பாளிமொழியில் சிகல என்றால் சிங்கம்.

முதன் முதலில் சிகல என்ற சொல் கிறிஸ்துவுக்கு பின் 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளின் படைப்பான பாளி மொழியில் வெளிவந்த தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது

சிங்கள மொழியோ அல்லது சிங்கள இனமோ இந்த இரண்டு பாளிமொழி நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துட்டகைமுனுவை சிங்கள அரசன் என்று குறிப்பிடுவது தவறானது.

எல்லாளன் இந்துத் தமிழன் துட்டகைமுனு பௌத்த தமிழன் என்பதே உண்மையாகும்.

எனவே, சரித்திர ரீதியாகப் பார்த்தால் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் இலங்கையில் ஆதியில் குடிகொண்டிருந்தவர்கள் தமிழ் மொழி பேசிய இந்துக்கள் என்பதையும் விட சைவ சமயிகளே என்று கூறினால் அதுவே பொருத்தமானது.

இதனால்தான் வடகிழக்கை இணைத்து தமிழ் மக்களின் தாயகப் பகுதியை அடையாளப்படுத்தி, அதற்கென ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுவருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கட்டமைப்பினுள் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகை ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டு வருகின்றோம்.

அவ்வாறான ஒரு அரசியல் தனித்துவம் வழங்கப்பட்டால், தமிழர்களின் அலகு சமயச் சார்பற்ற ஆனால் எல்லா சமயங்களையும் சமமாகக் கருதும் ஒரு அலகாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120509

Link to comment
Share on other sites

நீதியரசர் உஷாராத்தான் இருக்கிறார்!
சிங்களவன்டை பொய்களை பிரிச்சு மேய்கிறார்!

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்கா பௌத்தநாடே அல்ல! - மீளவும் உறுதிப்படுத்தினார் அமைச்சர் மங்கள!

ஸ்ரீலங்காவில் பெரும்பான்மையினமாக பௌத்த மக்கள் இருந்தாலும் இதனை பௌத்த நாடு என்று அழைக்க முடியாது என்று தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அடித்துக் கூறியுள்ளார்.

மீண்டுமொரு கறுப்புஜுலை இனக் கலவரத்தையும், மோதல்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிதி அமைச்சர் மங்கள, இந்த முயற்சிகளை முறியடித்துக்காட்டுவதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது. இதற்கமைய நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா என்பது பௌத்த நாடே அல்ல என்று அறிவித்தார்.

ஏற்கனவே மாத்தறையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா நாடானது ஒரு பௌத்த நாடே கிடையாது என்றும்,ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து பிரஜைகளினுடையது நாடே இது எனவும் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சரின் இந்தக் கூற்றுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த – கோட்டா விசுவாசிகளான கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சிங்கள பௌத்த தலைமை பீடங்கள் உட்பட தலைமை பௌத்த பிக்குகளும், தென்னிலங்கையிலுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இந்த எதிர்ப்புக்களை மீறி இன்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்றில் தனது நிலைப்பாட்டை அமைச்சர் மங்கள் சமரவீர மீண்டும் முன்வைத்தார்.

“சர்வதேச தீவிரவாதத்தை நாம் தற்போது கட்டுப்படுத்தியுள்ள போதிலும் இந்த நாட்டிலுள்ள வங்குரோத்து நிலை யை அடைந்திருக்கும் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயற்சிக்கி ன்றனர். இம்முறை சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும், முஸ்லிம் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரையை குத்துவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம் மக்களில் 90 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அவர்கள் வழங்கிய தகவ லின் அடிப்படையிலேயே தீவிரவாதிகளை முடக்கினோம். எனினும் மஹாசோன் படையணி போன்றன இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மினுவாங்கொடையில் இனவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த பலரும் சிங்களவர்கள்.

முஸ்லிம் மக்களின் வர்த்தகங்களினால் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருவாய் வருடாந்தம் கிடைக்கிறது. சிலோன் டீ ஏற்றுமதி செய்யும் நிறுவனம்கூட முஸ்லிம்களுடையது. அதேபோல ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார,மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் முஸ்லிம் வர்த்தக முயற்சிகளுக்கான விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல.

ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பிரஜைகளினதும் நாடாகும் என்று நான் கூறுகையில் தூஷண வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்க்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளமை உண்மைதான். ஆனாலும் இந்த நாடு ஸ்ரீலங்கா பிரஜைகளுக்குரியது.

புத்த பெருமானால் போதிக்கப்பட்ட பௌத்தம் என்பது ஒரு மார்க்கமே தவிர அது மதமாகாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர,அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினார்.

பௌத்த மதம் என்று கூறினால் அது தவறாகும். பௌத்த மார்க்கம் என்று சொல்வதே சரியானதாகும். பௌத்த தர்மம் என்பது மதமல்ல. புத்த பெருமான் வழங்கிய இந்த தர்மமானது இனத்துக்கு, மதத்துக்கு வரையறுக்கப்பட்டதல்ல. அதனால் பௌத்தர்கள் என்று கூறுவதற்கு நாம் வெட்கமடைய வேண்டும். ஏனென்றால் சில பௌத்த பிக்குமார்கள் இந்த புனிதமான பௌத்த தர்மத்தை விற்பனை செய்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனிலும் எமது பௌத்த தர்மத்திலுள்ள விடயங்கள்தான் உள்ளன.

எனவே நீங்கள் கொண்டுவருகின்ற இந்தப் பிரேரணையானது ரிஸாட் பதியுதீனுக்கு விரோதமானதல்ல மாறாக முஸ்லிம் மக்களுக்கு விரோதமானதாகும். முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்திலிருந்து பிரிக்கவே பார்க்கின்றனர்.யார் எவ்வகையான கனவுகளைக் கண்டாலும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று சவால் விடுக்கின்றேன்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்த உரைக்கு மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச பலதடவை குறுக்கீடு செய்தார்.இருப்பினும் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய கீர்த்தி அபேவிக்ரமவின் மைத்துனரான விமல் வீரவன்ச, அவருடைய மரபணு உறவுமுறையின் உந்துதலே இந்தக் குறுக்கீடுகளுக்கு காரணம் என கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, விமல் வீரவன்சவின் குறுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/120574

Link to comment
Share on other sites

இவ்வாறு உண்மையை - வரலாற்றுச் சான்றைத் துணிந்து கூறுவதற்கு ஒரு தலைவன் வேண்டும்.


அதுதான் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தமிழ் மக்களில் பலரும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாகிறது.

 
பெளத்தத்துக்கே முன்னுரிமை என்று அவர்கள் கூறட்டும். அதுபற்றி நமக்குக் கவலை யில்லை. 
 
ஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும். 
Link to comment
Share on other sites

3 minutes ago, ampanai said:

ஆனால் இலங்கையின் பூர்வீகம் இந்துத் தமிழ் என்பதை எப்போதும் நாம் கூற வேண்டும். அதுவே உண்மை. அதுவே தமிழனைத் தமிழனாக வாழ வைக்கும். 

தமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான்.  அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் செய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.

Link to comment
Share on other sites

3 hours ago, Paanch said:

தமிழனை இந்துத் தமிழன் என்று கூறுவதே தவறு. தமிழன் தமிழன்தான்.  அதுதான் அவன் பூர்வீகம் என அறியக்கிடக்கிறது. ஏனெனில் அவன் இயற்கையோடு இணைந்து அது வழங்கும் இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ முற்பட்டவன். இடையே மதங்கள் புகுந்து அவனையும் இன்று மதம்பிடித்து வாழ வைத்துள்ளது. இருப்பினும் அதனை உணர்த்தி தமிழனைத் தமிழனாக வாழவைக்கும் முயற்சிகளும் அங்காங்கே எழத்தான் செய்கிறது. இந்நூற்றாண்டில் அதனை ஈழத்திலும் காண முடிந்தது.

மனிதர்களால் உருவாக்கப்பட்டதே அனைத்து சமயங்களும் மதங்களும். காலப் போக்கில் தங்களால் அறியமுடியாத ஒரு இயற்கைச் சக்தியை கடவுள் என அழைக்கத் தலைப்பட்டனர்! இவ்வாறான ஒரு நம்பிக்கையினூடாக சில ஒழுக்கநெறிகளை மக்கள் பின்பற்றும் சூழலும் உருவாக்கப்பட்டது.

உலகில் மிகமிகத் தொன்மையான இனம், மொழியாக தமிழும் தமிழினமும் கருதப்படும் நிலையில் ஆதிகாலத்து தமிழன் இந்த சமயம் அல்லது மதம் என்பதற்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும்!

மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு சமயங்கள் அல்லது மதங்களைக் கருதும் போது, சைவ சமயம் (இந்து சமயம்) ஆனது பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களைவிட மிகவும் தொன்மையானதாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கமுடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.