Jump to content

யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி

இராணுவ வீரர்களின் போர்த்திறமை தேசப்பற்று மற்றும்  உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி  தெரிவித்தார்.

maithiri.jpg

அதனை வாசிப்பதனூடாக நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய எதிர்கால தலைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், 30 வருட கால யுத்தத்தின் உண்மைக் தன்மை, பின்னணி மற்றும் அதற்கான காரணங்களைப் போன்ற உண்மையான விபரங்களை உலகத்தினருக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் இன்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “உத்தமாச்சாரய” (வணக்கம்) நூல் வெளியீட்டு விழாவின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி  போர்க் களத்தில் போராடிய இராணுவ வீரன் முதல் கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி வரையிலான அனைவரினதும் அனுபவங்கள், வாழ்க்கை முறை மற்றும் போர்த்திறமை ஆகியன பாராட்டுக்குரியவை என்றும் இன்றும் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் அவர்களது கடந்தகால அனுபவங்களை கௌரவத்தோடு நினைவுகூர்ந்து வருவதுடன். தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய விபரங்களை அவர்களோடு அழிவதற்கு உரிய தரப்பினர் இடமளிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அத்தகைய நூலொன்றினை வெளியிடுவதன் ஊடாக 30 ஆண்டு கால யுத்தத்தில் உயிர்தியாகம் செய்த சகல இராணுவ வீரர்களுக்கும் செலுத்தப்படும் மரியாதையாகும் எனத் தெரிவித்தார்.

பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாறாக “உத்தமாச்சாரய” எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. தனது உயிரை துச்சமாக மதித்து தனது சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் படையணியின் குறிக்கோளினை வெற்றிகொள்வதற்காகவும் தன்னிச்சையாக முன்வந்து, எதிரிகளுடன் போராடி வீர தீர செயல்களைப் புரிந்த இராணுவ வீரர்கள் பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

ஆயுதம் தாங்கிய படையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமிக்க பதக்கம்  இதுவாகும் என்பதுடன்இ இதுவரையில் இலங்கையின் 11 இராணுவ அதிகாரிகளுக்கும் ஏனைய பதவி நிலைகளிலுள்ள 19 பேருக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் நினைவுகூரப்படும் சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்ததாக இலங்கை இராணுவத்தினரின் பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் வீர தீர செயல்களை எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் “உத்தமாச்சாரய” (வணக்கம்) என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது. 

பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஜனாதிபதி நூல்களை வழங்கி வைத்தார். 

சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சல் உறையும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரால் மஹரகம அபேட்சா மருத்துவமனைக்கு வழங்கப்படும் 70 மில்லியன் ரூபாவுக்கான காசோலையினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொடஇ பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள்இ முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்இ ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள்இ இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்தாக தாய்நாட்டுக்கு சிறப்பான சேவை ஆற்றிய பிரிகேடியர் பதவிகளை வகித்த 10 அதிகாரிகளை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்துவதற்கும் முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/56530

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக...!

வருங்கால போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும்!

மகா வம்சம் மாதிரிப் பொய் எழுதக் கூடாது!

நடந்ததை நடந்த படியே எழுதவும்!

Link to comment
Share on other sites

2 hours ago, புங்கையூரன் said:

நிச்சயமாக...!

வருங்கால போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும்!

மகா வம்சம் மாதிரிப் பொய் எழுதக் கூடாது!

நடந்ததை நடந்த படியே எழுதவும்!

அவர்கள் எப்படியும் தம்மை நியாயப்படுத்தி பொய் புரட்டுடன் தான் எழுதுவார்கள். இப்பொழுது மக்கள் முன் ஆற்றும் உரைகளிலேயே அவர்கள் இலட்சணம் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Lara said:

அவர்கள் எப்படியும் தம்மை நியாயப்படுத்தி பொய் புரட்டுடன் தான் எழுதுவார்கள். இப்பொழுது மக்கள் முன் ஆற்றும் உரைகளிலேயே அவர்கள் இலட்சணம் தெரிகிறது. 

அவர்களைக் குறை கூற முடியாது, லாரா!

மனித இயல்பு அது! ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டதின் மூலம் புலிகள் ஒரு பிரம்மாஸ்திரத்தையும் எமக்காக  விட்டுச் சென்றார்கள்! அதன் பெயர் தான் போர்க்குற்றம்! ஒரு போர்க்குற்ற தேசம்... இன்னொரு போர்க்குற்ற தேசத்தைப் பாதுகாத்தது! இதை அறிந்தும் எமது அரசியல் வாதிகள் திறந்த கண்களுடனேயே எங்களுக்கு நிலா காட்டினார்கள்! அவர்களை அண்ணார்ந்து பார்த்தது தான் எமது தவறு! இன்னும் காலம் கடந்து விடவில்லை!

Link to comment
Share on other sites

4 hours ago, புங்கையூரன் said:

நிச்சயமாக...!

வருங்கால போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும்!

மகா வம்சம் மாதிரிப் பொய் எழுதக் கூடாது!

நடந்ததை நடந்த படியே எழுதவும்!

மகாவம்ச மனோநிலைல இருக்கிறவங்களிட்ட எப்பிடி உண்மையை எதிர் பாக்கலாம்!

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

அவர்களைக் குறை கூற முடியாது, லாரா!

மனித இயல்பு அது! ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டதின் மூலம் புலிகள் ஒரு பிரம்மாஸ்திரத்தையும் எமக்காக  விட்டுச் சென்றார்கள்! அதன் பெயர் தான் போர்க்குற்றம்! ஒரு போர்க்குற்ற தேசம்... இன்னொரு போர்க்குற்ற தேசத்தைப் பாதுகாத்தது! இதை அறிந்தும் எமது அரசியல் வாதிகள் திறந்த கண்களுடனேயே எங்களுக்கு நிலா காட்டினார்கள்! அவர்களை அண்ணார்ந்து பார்த்தது தான் எமது தவறு! இன்னும் காலம் கடந்து விடவில்லை!

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசின் மேல் அழுத்தம் பிரயோகிக்கும் தேவை ஏற்பட்டால் தான் ஐ.நா போர்க்குற்ற விசாரணையை கையிலெடுப்பார்கள். இல்லாவிட்டால் அது கிடப்பில் இருக்கும்.

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடரலாம்.

தம்மை நியாயப்படுத்தி எழுதும் வரலாறுகளிலும் சில விடயங்களை நாம் பெற்றுக்கொள்வது போல் இதிலும் ஏதும் பெற முடியுமென்றால் நல்லதே. அதே நேரம் தவறான வரலாறு எழுதப்படும் போது அது சிங்களவர்களை இன்னும் தவறான பாதையை நோக்கியே கொண்டு செல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Rajesh said:

மகாவம்ச மனோநிலைல இருக்கிறவங்களிட்ட எப்பிடி உண்மையை எதிர் பாக்கலாம்!

உண்மை தான்...!

இருப்பினும் சிலவற்றைத் தெரிந்து பொறுக்கியெடுக்கலாம்!!

வடக்கிலும்....கிழக்கிலும்....தன் மானமுள்ள தமிழர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள்!
அவர்களை வஞ்சகமாகவே.......எம்மால் தோற்க்கடிக்க முடிந்தது....!

ஏதோ ஒரு வகையில்.....எல்லாளன் பெயர்....துட்டகைமுனுவின் வரலாறு வாழும் வரையும்...வாழும் என்பது போல....பிரபாகரனின் பெயரும்....மகாவம்சம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கப் போகின்றது!

மாணிக்கவாசகர் நரியைப் பரியாக்கிய கதையை...நம்புவர்களை...நாம் தடுக்கத் தேவையில்லை!

எனினும்....மாணிக்கவாசகர் என்ற ஒரு அமைச்சர்....அரேபியாவில் குதிரைகள் வாங்கினார் என்பதை மட்டுமே...எடுத்துக் கொள்வோமே....!

நானும், நீங்களும் நினைப்பது  போல.....நாளைய சிங்களத் தலை முறை.....எழுதப் படும் புனை கதைகளை அப்படியே நம்புகின்ற தலை முறையாக இருக்கப் போவதில்லை!

Link to comment
Share on other sites

23 hours ago, Lara said:

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசின் மேல் அழுத்தம் பிரயோகிக்கும் தேவை ஏற்பட்டால் தான் ஐ.நா போர்க்குற்ற விசாரணையை கையிலெடுப்பார்கள். இல்லாவிட்டால் அது கிடப்பில் இருக்கும்.

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடரலாம்.

தம்மை நியாயப்படுத்தி எழுதும் வரலாறுகளிலும் சில விடயங்களை நாம் பெற்றுக்கொள்வது போல் இதிலும் ஏதும் பெற முடியுமென்றால் நல்லதே. அதே நேரம் தவறான வரலாறு எழுதப்படும் போது அது சிங்களவர்களை இன்னும் தவறான பாதையை நோக்கியே கொண்டு செல்லும்.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ள வரை அவர் ஐநா வின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அமெரிக்காவை விலக்கி கொண்டு செல்வார். (UNHRC இலிருந்து விலக்கியது போல்)

ஆனாலும் நான் அமெரிக்கா என குறிப்பிட்டது அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த உலகளாவிய ஒரு கூட்டம் தான் ஐநா இன் அனைத்து பிரிவுகளையும் கையாள்கிறது என்ற அர்த்தத்தில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.