Jump to content

1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....

கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது.

pak1.jpg

* அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

* கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup)

* 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன.

* 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே)

இனவெறி கொள்கையால் தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தில் சேர்க்கப்பட்டது. 

* அணி வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட வர்ணமயமான உடைக்கு மாறினர். 

* முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. 

*  பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின. 

*  முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் நிற்கும் விதியும் அறிமுகம். 

* 9 அணிகள் கலந்துகொண்டமையினால் போட்டி அட்டவணை மாற்றப்பட்டு ரவுண்ட் ரொபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின

 

  • ரவுண்ட் ரொபின் சுற்று முடிவு :

நியூஸிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் முதல் இடம்.

இங்கிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்.

தென்னாபிரிக்கா அணி மொத்தமாக 8 போடிகளில் விளையாடி 5 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் முன்றாவது இடம்.

பாகிஸ்தான் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் நான்காவது இடம்.

அவுஸ்திரேலியா அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடம்.

இந்திய அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் ஏழாவது இடம்.

இலங்கை அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி, 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் எட்டாவது இடம்.

சிம்பாப்வே அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, 7 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம்.

icc.JPG

ரவுண்ட் ரொபின் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

 

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி எடன் பார்க்கில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி நியூஸிலாந்து - பாகிஸ்தான்

 

நியூஸிலாந்து 262/7 (50 overs)

பாகிஸ்தான் 264/6 (49 overs)

4 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

 

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி சிட்டினியில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்து   252/6 (45 overs)

தென்னாபிரிக்கா 232/6 (43 overs)

20 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்து மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கான அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கிரேஹம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி இடம்பெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை குவித்தது.  

இம்ரான் கான் 110 பந்துகளை எதிர்கொண்டு 72 ஓட்டங்களையும், ஜாவிட் மியாண்டட் 98 பந்துகளில் 58 ஓட்டத்தையும், இன்சமாம்-உல்-ஹக் 46 பந்துகளில் 42 ஓட்டத்தையும் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டி.ஆர். ப்ரிங்கன் 3 விக்கெட்டுக்களையும், பொத்தம் மற்றும் ஆர்.கே.இல்லிங்வொர்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

250 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பெயர்பிரதர் 70 பந்துகளில் 62 ஓட்டத்தையும், ஏ.ஜே. லாம்ப் 31 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய வாசிம் அக்ரம், முஸ்தாக் அகமட் தலா 3 விக்கெட்டுக்களையும், ஆகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தியதுடன் இம்ரான் கானும் ( தற்போதைய பாகிஸ்தான் பிரதமர்) சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 

d5cf6-1522075260-800.jpg 

semi.JPG

* போட்டியின் ஆட்டநயகனாக பாகிஸ்தான் அணியின் வசிம் அக்ரம்

* அதிக ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குரோவ் ( 9 போட்டிகளில் 456 ஓட்டம்)

* அதிக விக்கெட்டுகள் - பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (10 போட்டிகளில் 18 விக்கெட்)

 

 

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)

 

 

http://www.virakesari.lk/article/56474

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.