Jump to content

1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....

கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது.

pak1.jpg

* அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

* கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup)

* 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன.

* 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே)

இனவெறி கொள்கையால் தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தில் சேர்க்கப்பட்டது. 

* அணி வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட வர்ணமயமான உடைக்கு மாறினர். 

* முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. 

*  பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின. 

*  முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் நிற்கும் விதியும் அறிமுகம். 

* 9 அணிகள் கலந்துகொண்டமையினால் போட்டி அட்டவணை மாற்றப்பட்டு ரவுண்ட் ரொபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின

 

  • ரவுண்ட் ரொபின் சுற்று முடிவு :

நியூஸிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் முதல் இடம்.

இங்கிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்.

தென்னாபிரிக்கா அணி மொத்தமாக 8 போடிகளில் விளையாடி 5 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் முன்றாவது இடம்.

பாகிஸ்தான் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் நான்காவது இடம்.

அவுஸ்திரேலியா அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடம்.

இந்திய அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் ஏழாவது இடம்.

இலங்கை அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி, 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் எட்டாவது இடம்.

சிம்பாப்வே அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, 7 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம்.

icc.JPG

ரவுண்ட் ரொபின் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

 

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி எடன் பார்க்கில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி நியூஸிலாந்து - பாகிஸ்தான்

 

நியூஸிலாந்து 262/7 (50 overs)

பாகிஸ்தான் 264/6 (49 overs)

4 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

 

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி சிட்டினியில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்து   252/6 (45 overs)

தென்னாபிரிக்கா 232/6 (43 overs)

20 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்து மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கான அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கிரேஹம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி இடம்பெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை குவித்தது.  

இம்ரான் கான் 110 பந்துகளை எதிர்கொண்டு 72 ஓட்டங்களையும், ஜாவிட் மியாண்டட் 98 பந்துகளில் 58 ஓட்டத்தையும், இன்சமாம்-உல்-ஹக் 46 பந்துகளில் 42 ஓட்டத்தையும் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டி.ஆர். ப்ரிங்கன் 3 விக்கெட்டுக்களையும், பொத்தம் மற்றும் ஆர்.கே.இல்லிங்வொர்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

250 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பெயர்பிரதர் 70 பந்துகளில் 62 ஓட்டத்தையும், ஏ.ஜே. லாம்ப் 31 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய வாசிம் அக்ரம், முஸ்தாக் அகமட் தலா 3 விக்கெட்டுக்களையும், ஆகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தியதுடன் இம்ரான் கானும் ( தற்போதைய பாகிஸ்தான் பிரதமர்) சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 

d5cf6-1522075260-800.jpg 

semi.JPG

* போட்டியின் ஆட்டநயகனாக பாகிஸ்தான் அணியின் வசிம் அக்ரம்

* அதிக ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குரோவ் ( 9 போட்டிகளில் 456 ஓட்டம்)

* அதிக விக்கெட்டுகள் - பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (10 போட்டிகளில் 18 விக்கெட்)

 

 

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)

 

 

http://www.virakesari.lk/article/56474

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கர்தினால் கர்தினால் ரஞ்சித் தம்மீது அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வியாழன் (25) வன்மையாக மறுத்துள்ளார். 250 க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கியது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திய படுகொலையின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் கார்டினல் நான்கு குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக   முன்வைத்தார்.   முதலாவது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, “ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நான் கார்டினலுடன் தொலைபேசியில் பேசவில்லை எனவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் நான் உறுதியாகக் கூறுகின்றேன். அது மக்களைக் கைது செய்வதற்கும் என்னுடன் இணைந்த அமைப்புகளைத் தடை செய்வதற்கும் கூட வழிவகுக்கும்.   இரண்டாவது குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (பிசிஓஐ) அறிக்கையின் முதல் தொகுதியின் நகலை கார்டினாலிடம் ஒப்படைப்பதில் 'தாமதம் இல்லை' என்று ராஜபக்ச வலியுறுத்தினார்.   “ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 2021 பெப்ரவரி 1ஆம் திகதி என்னிடம் கையளிக்கப்பட்டது. அதனை நானே ஆராய்ந்து சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்து, 2021 பெப்ரவரி 23ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டு 2021 மார்ச் 1ஆம் திகதிக்குள் பிரதிகள் கையளிக்கப்பட்டன. வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள், கர்தினால் மற்றும் கத்தோலிக்க ஆயர்களுக்கு வழங்கப்பட்டது.   ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துமாறு 6 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவிடம் தாம் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.   ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்யவில்லை என்றும், விசாரணையை சீர்குலைக்கும் வகையில் மூத்த அதிகாரி ஒருவரை சிறையில் அடைக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் மறுத்தார்.   ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கர்தினால் ரஞ்சித் தன்னைத் தொடர்ந்து 'இடைவிடாமல் தாக்கி விமர்சித்து வருவதை' சாடிய ராஜபக்ச, தாக்குதலைத் தடுக்கத் தவறியது அதன் அப்போதைய இயக்குனரின் கீழ் இருந்த சிஐடியின் தோல்வி என்று கூறினார்.   https://www.madawalaenews.com/2024/04/i_111.html
    • ஆமாம்   உண்மை தான்  ஜேர்மனியில்  முன்னாள் ஐனதிபதி    சுற்றுலாவின்போது   இத்தாலி. ஸ்பானியன் இடையில் ஒரு தீவில்  இலவசமாக தங்கியிருக்கிறார்  உணவு கூட இலவசம்  ...பதவியில் இருந்தவர்  மூன்று மாதம்  அவரை ஊடகங்கள்  கேள்விக்கணையால். பிய்த்தெடுத்து விட்டார்கள்   கடைசியாக உண்மை ஒத்துக் கொண்டு பதவி விலகினார். 
    • Published By: DIGITAL DESK 3    25 APR, 2024 | 03:44 PM முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றில் சிங்கள மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கரில் 74.24 வீதமான காணிகள் வன இலாகாவினுடைய பொறுப்பில் இருக்கின்றது.  விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த பகுதிகளுக்கெல்லாம் வர பயந்து கொண்டிருந்த நிலையில்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அடர்ந்த காடுகள் என்று கூறக்கூடிய அளவில் 36.72 வீதமான காணிகளும் அதாவது 2 இலட்சத்தி  இருபத்தி இரண்டாயிரத்தி ஆறு ஏக்கர் காணிகள்தான் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுடைய பாவனையில் இருந்த காணிகள்  2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஒவ்வொரு திணைக்களங்களாக ஆட்சியாளர்கள் மக்களுடைய பெரும்பாலான விவசாய காணிகளை அபகரித்து வைத்துள்ளார்கள்.  அபகரிக்கப்பட்ட காணிகளில் சில இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதாவது வெலிஓயா என்று சொல்லக்கூடிய 28,500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிங்கள குடியேற்றத்தை ஏற்றி தனி ஒரு சிங்கள பிரதேச செயலக பிரிவாக உருவாக்கி இன்று எங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மக்கள் தொகையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன இது தவிர 2009 ஆம் ஆண்டுக்கு பின் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு ஒரு இலட்சத்தி 67 ஆயிரத்தி 484 ஏக்கர் 30.37 வீதமான முல்லைத்தீவின் காணிகளை அபகரித்து வன இலாகா மட்டும் வைத்திருக்கின்றது. இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 42631 ஏக்கர் காணி அதாவது 7.15 வீதமான காணிகள் அபகரித்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 இலட்சத்தி பத்தாயிரம் ஏக்கர் காணிகள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு வன இலாகாவினால் மட்டும் அபகரிக்கப்பட்டு எல்லைக்கல்லினை நாட்டி தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில்  விவசாய நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதற்கு முழுமுதல் காரணம் வனஜீவராசிகள் , வன இலாகா, தொல்லியல்  திணைக்களங்கள் அதனைவிட மகாவலி எல் வலயம் இவ்வாறாக மக்களுடைய காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் காதர் மஸ்தானின் அறிக்கை ஒன்றில் ஏற்கனவே உள்ள இரண்டு ஜனாதிபதி அவர்களும் பிழைதான் விட்டிருக்கின்றார்கள் என்ற கருத்தையும் ஏற்றுகொண்டு அதாவது, இந்த காணிகள் பறிக்கப்பட்டதில் பிழை நடந்திருக்கின்றது என்ற கருத்தை கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களூடாக காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டு இலட்சத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களிலுமாக தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். நிலங்களை அபகரித்து வைத்துக் கொண்டு சிங்கள மக்களை குடியேற்றுவதும், தங்களுடைய திணைக்களங்களூடாக அபகரித்து வைத்து கொண்டிருப்பதும் தான், அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கப்பட வேண்டும்.  இதே ஒரு நிலைமையில் ஆறுகள் உள்ள நீர் பரப்புகளாக சுண்டிக்குளம், நாயாறு, நந்திக்கடல் ஆகியன கிட்டத்தட்ட 69401 ஒரு ஏக்கர் நிலம் நீர்நிலைகளோடு சேர்ந்த நிலங்களாக முல்லைத்தீவு மாவட்ட  செயலகத்தினுடைய புள்ளிவிவரத்தின் ஊடாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. 29401 ஏக்கர் நிலம் வனஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய வழக்கு தவணையிடப்பட்டு எதிர்வரும் வைகாசி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அறுநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் மக்களுடைய நிலங்களை இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன் பொக்கணை, மாத்தளன், வலயர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுடைய காணிகள் தான் இவை. இந்த காணிகளை கூட வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய பறவைகள் சரணாலயம் என்ற பகுதிக்குள் இணைத்து அவர்களுடைய காணிகளையும் பறித்து வைத்திருக்கிறார்கள். மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்துக்கு மக்கள் அல்ல. அரசாங்கத்துக்கு மக்கள் என்ற நிலையில் அரசு இயங்கக்கூடாது. மக்களுடைய காணிகளை மக்களுக்கு விடுவித்து அந்த காணிகளின் ஊடாக மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கையை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக கொண்டு நாட்டுக்கு உதவக்கூடிய நிலையில் தான் மக்களை அரசாங்கம் பாவிக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களை ஒடுக்கும் விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக முழு ஏக்கர் காணிகளையும் அபகரித்து கொண்டு சென்றால் மக்கள் எங்கே போவது? மஸ்தான் அவர்கள் கூறிய கருத்தானது உண்மையை ஏற்றுக்கொண்டதாகவும் இருக்கின்றது. அதேநேரம் இன்னும் காணிகள் விடுவிப்பதாகவும் இருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் சேர்க்கப்பட்டால் நல்லது என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181947
    • இலங்கை  இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .
    • அவர்கள் செய்தால், அது சரியான அறவழியாகதானிருக்கும்👍, ஈரக்கில் செய்ததைவிட ஆப்கானில்  கொஞ்சம் குறைவே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.