Jump to content

மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்

இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் வெட்டைவெளிப் பிரதேசங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கு இரவின் இருள் மாத்திரமே அவர்களுக்குக் கூரையாக அமைந்தது. அவர்கள் இருளை அதிகம் நேசிக்க வேண்டியவர்களானார்கள். அது அவர்களை சுட்டெரித்த சூரியனிலிருந்து பாதுகாத்தது. தாய்மார்கள் பிள்ளைகளை மர நிழலிலும் பழுதடைந்து நகரமுடியாமல் கைவிடப்பட்ட வாகனங்களின் நிழலிலும் கிடத்தி வெயிலிலிருந்து பாதுகாத்தார்கள். யுத்தம் முனைப்படைய முனைப்படைய துன்பங்களும் அதிகரித்தன. அவர்கள் கஞ்சியை மட்டுமே பருகி உயிரைப் பிடித்துக்கொண்டார்கள். படிப்படியாக கஞ்சியின் கட்டித்தன்மை குறைந்து நீர்த்தாக உப்பில்லாக் கஞ்சியாக வழங்கப்பட்டது. கஞ்சி வழங்கும் அறிவித்தல் கிடைத்தவுடன் சிறுவர்கள் தங்களது குடும்பங்களுக்காக அதைப் பெறுவதற்குப் பாத்திரங்களுடன் ஓடுவார்கள். இவ்வாறு கஞ்சியைச் சேகரிக்கச் சென்றிருந்த பல சிறுவர்கள் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் ஷெல் தாக்குதல்களுக்கும் அகப்பட்டார்கள்.

போரின் இறுதிப்பகுதியில் இறந்த தம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை புதைக்கக்கூட முடியாத நிலையில் இறந்த உடலங்களை வீதியிலேயே விட்டுவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்து போனார்கள். தாய்மார்களின் கைகளிலிருந்து பிள்ளைகள் விடுபட்டுப்போனார்கள். தங்களுடைய உயிரைக் காக்க இறந்த உடலங்களின் மேலாகவே அவர்கள் ஓடவேண்டியிருந்தது. இவ்வாறு மே 18 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தது.

போரில் கொல்லப்பட்ட மக்களையும் அவர்கள் பட்ட துன்பங்களையும் நினைவு கூர்தல் என்பது மக்களினுடைய உரிமை. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது அரசியல் ஆதிக்கம் உடையவர்களால் வடிவமைக்கப்பட்டு அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவே இருந்தது. யுத்தத்தின் வடுக்களை சுமந்தவர்களுக்கும் தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களுக்கும் நினைவு கூர்தலில் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறு அரசியல் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தும் பொருட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது யுத்த வடுக்களை சுமந்த மக்களையும் மற்றும் பொதுமக்களையும் 10ஆம் ஆண்டு நினைவு கூர்தலை கூட்டாக மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய சொந்த இடங்களில் நினைவு கூர்தலை ஏற்பாடும் செய்திருந்தது. நிலையான அடையாளங்களை உருவாக்கும் வகையில் “மரங்களை நட்டு எங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூர்வோம்” என்றும் மக்களுடைய இழப்புக்களையும் துயரங்களையும் வலிகளையும் கூட்டாக பகிர்ந்துகொள்ளும் வகையில் “உப்பில்லா கஞ்சி சமைத்து உண்போம்” எனவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு மக்களிடம் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, பாடசாலைகள், வைத்தியசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், பொது இடங்கள் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கின் பின் தங்கிய கிராமங்கள் பலவற்றில் 5000 தென்னங்கன்றுகள், 125 நிழல் தரு மரங்கள், பனை விதைகள் என்பன  இறந்த அன்புக்குரியவர்களின் நினைவாக நாட்டப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரான போரில் தம் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரினால் அங்கவீனமுற்றோர், யுத்தம் காரணமாக விதவைகளாக்கப்பட்டவர்கள், பெற்றாரை இழந்த குழந்தைகள் அடங்கலாக  சமூகமட்ட அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள், மீன்பிடி மற்றும் விவசாய அமைப்புக்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் முனைப்புடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

20190517_132351
??
children plant

விசேட நினைவு கூர்தல் மற்றும் பூசை வழிபாடுகள் என்பன தேவாலயங்களிலும் இந்து ஆலயங்களிலும் போர்ப் பாதிப்புக்குள்ளான மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது. கிராமத்தவர்களும் அயலவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். மன்னார் மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் ஈச்சலவக்கை எனும் கிராமத்தில் போரில் தனது நான்கு பிள்ளைகளை இழந்த ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் அவருடைய பிரதேசத்தில் யுத்தத்தில் இறந்து போன 26 பேர் சார்பாகவும் தென்னங்கன்றை தன்னுடைய பிள்ளையாகவே கருதி நாட்டினார். அவர் நடப்பட்ட மரத்தை மரியாதை உணர்வோடு பூக்களால் பூசித்தார்.

இக் கூட்டு நினைவு கூர்தலில் பல்வேறுபட்ட தலைமுறையினரின் பங்குபற்றல் அவதானிக்கப்பட்டது. வயதான தாய்மார்கள் கஞ்சியை தமது வீடுகளில் காய்ச்சி தமது அயலவர்களுடன் அருந்தினர். இளைஞர்களோ லொறிகளிலும் லாண்மாஸ்டர்களிலும் எடுத்துச் சென்று வீதிகளிலும் பொது இடங்களிலும் பரிமாறினார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு போர் நடந்த நேரம் 9 வயதாக இருந்த ஒருவர் தன்னுடைய  அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார், “நான் கஞ்சி குடுபடுற நேரம் வரிசையில் நிண்டு போறனான். பல நேரங்களில் நான் கஞ்சி கொடுப்பவரை அண்மிக்கிற பொழுது கஞ்சி முடிஞ்சு போடும். வெறும் யொக்கோடை நான் திரும்பிப் போறனான்.” யாழ்ப்பாணத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர், “கஞ்சியை என்னாலை மறக்கவே முடியாது. கடைசி நேரம் கஞ்சி குடிச்சிட்டு வந்திருக்கேக்கை தான் என்னுடைய அக்காவும் அப்பாவும் ஷெல் விழுந்து செத்துப்போனவை” என்று கூறியிருந்தார். கஞ்சியைக் குடிக்கும் பொழுது மக்கள் தங்கள் அனுபவங்களை வீதியில் நின்ற ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் சொப்பின் பைகளில் தங்களுடைய குடும்பத்தவர்கள் அயலவர்களுக்காக எடுத்துச் சென்றார்கள்.

20190518_105822
20190518_112731
20190518_112821
IMG_6483
kanchi University

இத்தகைய மக்கள் சார்ந்த நினைவு கூர்தல்கள் மக்களை நினைவு கூர்தல்களில் உரிமைகொள்ளச் செய்வதற்கும் அவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்கும் மக்களைப் பரவலாக இந்நிகழ்வுகளில் ஈடுபடச் செய்வதற்கும் உதவியதை அவதானிக்க முடிந்தது. பருமட்டான கணிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 25,000 மக்கள் வடக்கு கிழக்கில் மக்கள் மயப்படுத்தப்பட்ட இந்த நினைவு கூர்தலை மேற்கொண்டிருந்தார்கள்.

இரண்டு இடங்களில் நினைவுக் கஞ்சி என்று தெரிந்திருந்தும் வழங்கப்பட்ட கஞ்சியை இராணுவத்தினர் அருந்தியிருந்தனர். இராணுவத்தினரின் இம் மனநிலையை மக்கள் வரவேற்றிருந்தனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு

https://maatram.org/?p=7852

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.