Jump to content

மோடி அலையை தடுத்து நிறுத்திய திமுக: ஸ்டாலின் தலைமையில் மெகா வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத் தேர்தலில் மோடி அலையை கடந்தமுறை அதிமுக தடுத்து நிறுத்தியதுபோல் இம்முறை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியா முழுவதும் வீசியது. மோடி அலையால் வெல்வோம் என மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்டோர் மெகா கூட்டணி அமைத்தனர். மறுபுறம் திமுக கூட்டணி தனியாகவும், அதிமுக தனியாகவும் இயங்கியது.

அந்தத் தேர்தலில் மோடி அலை இங்கு ஒன்றும் செய்யாது, மோடி அல்ல இந்த லேடி என ஜெயலலிதா கர்ஜித்தார். சொன்னதைச் செய்தும் காட்டினார். இந்தியாவெங்கும் வீசிய மோடி அலை தமிழகத்தில் எழும்பவே இல்லை. அதிமுக 37 தொகுதிகளை வென்றது. பாஜக கூட்டணிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன.

இம்முறையும் அதேபோன்று மெகா கூட்டணி அதைவிட வலுவாக அமைந்தது. அதிமுக, பாமக, தேமுதிக என வலுவான கூட்டணி அமைந்தது. கட்டாயம் 11 தொகுதிகள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மாவட்டங்களில் அதிமுக வெல்லும், இது தவிர தென் மாவட்டங்களில் சில தொகுதிகள் என வெற்றி வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மறுபுறம் திமுகவும் வலுவான கூட்டணியுடன் களம் கண்டது. தமிழகமெங்கும் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். வலுவாக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இம்முறை திமுக 100 சதவீத வெற்றி பெறும் என்று தெரிவித்தார். அதன்படியே திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலைக்குச் செல்கிறது.

இம்முறை மோடி அலையை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் தனது வெற்றியை பிரகாசமான முகத்துடன் திமுக பதிவு செய்துள்ளது.   

https://tamil.thehindu.com/tamilnadu/article27218527.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ஹக்கீம் ஸ்டாலினுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

1503CBEC-FAC5-410C-BDE6-C9BA5FDDE220.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

ஹக்கீம் ஸ்டாலினுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

1503CBEC-FAC5-410C-BDE6-C9BA5FDDE220.jpg

முஸ்லீம் மக்கள்... அரசியல் செய்வதில்,  திறமையானவர்கள்.
தமிழரிடமும்.. சம்பந்தன், சுமந்திரன், மாவை.... என்று,  இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு,  இதெல்லாம்.... சுட்டுப்  போட்டாலும் வராது. 🤬

இருந்ததையும் கெடுத்துப் போட்டு, சொந்த மக்களை... பிச்சை  எடுக்க வைத்து,
அடுத்த  தீபாவளிக்கும், தைப் பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று அறிக்கை மட்டும் விட்டு விட்டு,  
சாணக்கிய அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன் நிலை.

21 சட்ட மன்ற தொகுதிகளில் குறைந்தது 15 முதல் 20 வரை ஸ்டாலின் வென்றிருந்தால், அதன் மூலம் முதல்வர் ஆகியிருந்தால், ஸ்டாலின் வென்றார் என்பதில் சந்தேகமே இருக்காது.

ஆனால், எடப்பாடி பதவியில் தொடருமளவுக்கு தேவையான வெற்றியை அடைந்தது, ஸ்டாலினின் தோல்வி.

திண்டுக்கல் தொகுதியில், தமிழ் நாட்டிலேயே மிக அதிக வாக்குகள் பெற்று பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது திமுக.

ஆயினும் அங்கே நடந்த சட்டமன்ற தொகுதி தேர்தலில் தோல்வி, அதிமுக வென்றுள்ளது.

தேனீ தொகுதியில், பன்னீர் மகன் வெற்றி. அதே தொகுதியில், சூலூர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி.

மக்கள் கணக்கே வேறு போல உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.