Jump to content

மோடி அலையை தடுத்து நிறுத்திய திமுக: ஸ்டாலின் தலைமையில் மெகா வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத் தேர்தலில் மோடி அலையை கடந்தமுறை அதிமுக தடுத்து நிறுத்தியதுபோல் இம்முறை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியா முழுவதும் வீசியது. மோடி அலையால் வெல்வோம் என மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்டோர் மெகா கூட்டணி அமைத்தனர். மறுபுறம் திமுக கூட்டணி தனியாகவும், அதிமுக தனியாகவும் இயங்கியது.

அந்தத் தேர்தலில் மோடி அலை இங்கு ஒன்றும் செய்யாது, மோடி அல்ல இந்த லேடி என ஜெயலலிதா கர்ஜித்தார். சொன்னதைச் செய்தும் காட்டினார். இந்தியாவெங்கும் வீசிய மோடி அலை தமிழகத்தில் எழும்பவே இல்லை. அதிமுக 37 தொகுதிகளை வென்றது. பாஜக கூட்டணிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன.

இம்முறையும் அதேபோன்று மெகா கூட்டணி அதைவிட வலுவாக அமைந்தது. அதிமுக, பாமக, தேமுதிக என வலுவான கூட்டணி அமைந்தது. கட்டாயம் 11 தொகுதிகள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மாவட்டங்களில் அதிமுக வெல்லும், இது தவிர தென் மாவட்டங்களில் சில தொகுதிகள் என வெற்றி வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மறுபுறம் திமுகவும் வலுவான கூட்டணியுடன் களம் கண்டது. தமிழகமெங்கும் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். வலுவாக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இம்முறை திமுக 100 சதவீத வெற்றி பெறும் என்று தெரிவித்தார். அதன்படியே திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலைக்குச் செல்கிறது.

இம்முறை மோடி அலையை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் தனது வெற்றியை பிரகாசமான முகத்துடன் திமுக பதிவு செய்துள்ளது.   

https://tamil.thehindu.com/tamilnadu/article27218527.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ஹக்கீம் ஸ்டாலினுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

1503CBEC-FAC5-410C-BDE6-C9BA5FDDE220.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

ஹக்கீம் ஸ்டாலினுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

1503CBEC-FAC5-410C-BDE6-C9BA5FDDE220.jpg

முஸ்லீம் மக்கள்... அரசியல் செய்வதில்,  திறமையானவர்கள்.
தமிழரிடமும்.. சம்பந்தன், சுமந்திரன், மாவை.... என்று,  இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு,  இதெல்லாம்.... சுட்டுப்  போட்டாலும் வராது. 🤬

இருந்ததையும் கெடுத்துப் போட்டு, சொந்த மக்களை... பிச்சை  எடுக்க வைத்து,
அடுத்த  தீபாவளிக்கும், தைப் பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று அறிக்கை மட்டும் விட்டு விட்டு,  
சாணக்கிய அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன் நிலை.

21 சட்ட மன்ற தொகுதிகளில் குறைந்தது 15 முதல் 20 வரை ஸ்டாலின் வென்றிருந்தால், அதன் மூலம் முதல்வர் ஆகியிருந்தால், ஸ்டாலின் வென்றார் என்பதில் சந்தேகமே இருக்காது.

ஆனால், எடப்பாடி பதவியில் தொடருமளவுக்கு தேவையான வெற்றியை அடைந்தது, ஸ்டாலினின் தோல்வி.

திண்டுக்கல் தொகுதியில், தமிழ் நாட்டிலேயே மிக அதிக வாக்குகள் பெற்று பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது திமுக.

ஆயினும் அங்கே நடந்த சட்டமன்ற தொகுதி தேர்தலில் தோல்வி, அதிமுக வென்றுள்ளது.

தேனீ தொகுதியில், பன்னீர் மகன் வெற்றி. அதே தொகுதியில், சூலூர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி.

மக்கள் கணக்கே வேறு போல உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.