Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எங்கள் ஊரவன் இல்லை தமிழ்நாட்டான். ஆனால் எங்கள் ஊரவன் எங்களை இப்பவும் ஏமாத்திப்பிழைக்கிறான் தலைவர் இருக்கிறார் இன்னும் கொஞ்சநேரத்தில் வருவார் எனக்கூறுபவர்களும் புலம்பெயர் தேசங்களில் இப்பவும் அமைப்பு நடாத்துபவர்களும் நாங்கள் அடுத்து எல்லாம் என்பவர்களும் இவர்களுக்கு வைகோ திருமா சுபவீரபாண்டியன் நெடுமாறன் குளத்தூரார் வீரமணி ஆகியோர் எப்போதோ கைவிட்ட இனிமேல் வேலைக்காவாது என ஒதுங்கிச் சொல்ல மறுத்த தேசியத்தலைவரது பெயர அந்த ஒற்றை மனிதனாகுதல் அஞ்சுக்கும் பத்துக்கும் புறியாணிப்பொட்டலத்துக்கும் இருபது ரூபாய் டோக்கனுக்கும் குவாட்டருக்கும் அலையும் மக்களுக்கு அடிக்கடி நினைவூட்டுகிறாரே அந்தமட்டில் சந்தேசம்.

சீமான் தமிழ் நாட்டை ஆள்வதால் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை ஆனால் திராவிடக்கட்சிகளது கபடத்தனத்திலிருந்து அவர்கள் விடுதலைபெறலாம். அவ்வளவே 

ஈழத்தமிழர் உரிமைகளை ஈழத்தமிழந்தான் போராடிப்பொறவேண்டும் மாற்றான் இல்லை 

நாங்கள் ஓட்டுப்போட்டு உரிமைக்காகப் போராடு எனக்கூறியவர்களே ரணிலுக்கு மைத்திரிக்கும் சொம்பு தூக்கும்போது சீமான் வந்து உரிமை பெற்று எனக்கனவு காணக்கூடாது.

ஈழத்தமிழினம் புலம்பெயர்ந்து வேறுநாடுகளுக்குப் போக எத்தனிக்கையில் வறுமையான நாடுகளுக்கோ அல்லது வளர்முக நாடுகளுக்கோ செலவில்லை ஏற்கனவே யாராலோ அபிவிருத்தியடையப்பண்ணிய, பொருளாதாரத்தில் தற்சார்பான நாடுகளுக்கேதான் சென்றனர் காரணம்

யாரோ கையில் உள்ள நெல்லுப்பொரியில் தன் கையிலுள்ள உமியைக் கலந்து ஊதி ஊதித் தின்று பழகியவர்கள் நாங்கள் 
அதுபோலவே இப்போதும் யாராவது அறுதாலி பெத்தது போராடும் நாங்கள் யூரோபியன்ஸ் கனேடியனஸ் எனப் பீற்றிக்கொண்டு திரியலாம் என நினைக்கூடாது. 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, சண்டமாருதன் said:

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

எமது தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்தியாவின் அரசியல் இருப்பதுபற்றித்தான் நான் அங்கலாய்த்து எழுதியிருந்தேன். மற்றும்படி, சீமான் செய்யும் அரசியலில் எனக்கும் நாட்டமிருக்கிறது. அவருக்கு இன்று தமிழகத்திலி இருக்கும் ஆதரவென்பது பற்றி எனக்கு எப்போதுமே வியப்பும், கூடவே தமிழக வாக்களர்கள் மீது கோபமும் இருக்கிறது. முட்டாள்கள், பணத்தின்பின்னாலும், சம்பிரதாய கட்சி அரசியலின் பின்னாலும் இழுபடுபவர்கள், சரியான பாதையைப் பார்க்கத்தெரியாமல், அன்றாட நண்மைகளுக்காகவும் இலவசங்களுக்காகவும் அரசியல் செய்பவர்கள் என்கிற ஆதங்கம் இருக்கிறது.

ஆனால், நான் மேலே எழுதியது இதுபற்றியல்ல. பூகோள ரீதியாக நாம் இந்தியா எனும் அகம்பாவமும், மேலாதிக்கமும் கொண்ட ஒரு பெரு நாட்டின் காலடியில்  மாட்டிக்கொண்ட எமது துர் அதிஷ்ட்டம் பற்றி. காலத்திற்கும் எமது கைகள் அடிமைகளாக அந்தப் பெருநாட்டால் விலங்கிடப்பட்டது பற்றி. எம்மால், அவற்றை உடைத்துக்கொண்டு வெளியேற முடியாதது பற்றி. இந்தியாவிடமிருந்து எமக்கேது நண்மைகள் கிடைக்கமுடியாதது பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் மோடி அலை, ஆனால் தமிழகத்தில் துளிகூட வரவில்லை.  இதை வெறும் மோடி எதிர்ப்பென்றோ, திராவிடக் கட்சிகளின் மீதான மாயை என்றோ தள்ளிவிட்டுப் போகமுடியவில்லை. 

இதைவிட வேறொன்றிருக்கிறது.

தமிழருக்கு மட்டுமே இருக்கும் அந்தக் குணம். 

சீமானைத் தமிழகத் தமிழர்கள் கைவிட்டதற்கு ஆத்திரம் இருந்தாலும், அடங்காத் தமிழினம் குறித்துப் பெருமைப்படுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஊரெல்லாம் மோடி அலை, ஆனால் தமிழகத்தில் துளிகூட வரவில்லை.  இதை வெறும் மோடி எதிர்ப்பென்றோ, திராவிடக் கட்சிகளின் மீதான மாயை என்றோ தள்ளிவிட்டுப் போகமுடியவில்லை. 

இதைவிட வேறொன்றிருக்கிறது.

தமிழருக்கு மட்டுமே இருக்கும் அந்தக் குணம். 

சீமானைத் தமிழகத் தமிழர்கள் கைவிட்டதற்கு ஆத்திரம் இருந்தாலும், அடங்காத் தமிழினம் குறித்துப் பெருமைப்படுகிறேன். 

இது கரணம்  தப்பினால் மரணம் என்ற வகையானது

சீமானும்  படிப்படியாக  வளரணும்

தற்பொதைக்கு  ஒரு  பேரம் பேசும்  சக்தியாக வளர்ந்திரப்பதே போதுமானது தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60882699-1856694121098153-89683643236593

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஊரெல்லாம் மோடி அலை, ஆனால் தமிழகத்தில் துளிகூட வரவில்லை.  இதை வெறும் மோடி எதிர்ப்பென்றோ, திராவிடக் கட்சிகளின் மீதான மாயை என்றோ தள்ளிவிட்டுப் போகமுடியவில்லை. 

இதைவிட வேறொன்றிருக்கிறது.

தமிழருக்கு மட்டுமே இருக்கும் அந்தக் குணம். 

சீமானைத் தமிழகத் தமிழர்கள் கைவிட்டதற்கு ஆத்திரம் இருந்தாலும், அடங்காத் தமிழினம் குறித்துப் பெருமைப்படுகிறேன். 

தென் மாநிலங்களில் ஆந்திராவும் தமிழ்நாடும் இந்திய தேசிய கட்சிகளுக்கு சிம்மசொற்பனமாக திகழ்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60913651-2352006818412518-22195202525327

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

மாருதன், சும்மா இணையத்தில் வந்து நாங்களும்,அவர்களும் ஒன்று என எழுதலாம் ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் வேற,அவர்கள் வேற...அவர்கள் தம்மை தமிழன்,நாம் தமிழால் ஒன்று பட்டவர்கள் என்று சொன்னாலும் அவர்கள் முதலில் இந்தியன் பிறகு தான் தமிழர்...அதே போல நாம் தனி நாட்டுக்காய் போராடி சிங்களவன் எமக்கு எதிரியாய் இருந்தாலும்,நாம் முதலில் இலங்கையர் அதன் பிறகே தமிழர்...சும்மா எல்லோரும் சொல்கின்ற மாதிரி நாம் தமிழர்,தமிழால் ஒன்றுபட்டோம்/படுவோம் என்று சொல்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...சொல்லப் போனால் இப்படி சொல்வதால் எங்களுக்கு பாதிப்பு தான் அதிகம்...சீமான் மட்டும் இல்லை நாளைக்கு விஜய் அரசியலுக்கு வந்தாலும் இது தான் என் கருத்து.

எங்கட தமிழர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு...எப்பவும் யாருக்கும் விசிலடிச்சு கொண்டே இருக்க வேண்டும்...இப்ப ஈழத்தில் ஒருத்தரும் இல்லை சீமான் இருக்கார் அவருக்கு விசிலடிக்கினம்,,,,நாளைக்கே ஈழத்தில் சீமானையும் விட கதைக்க கூடிய ஒருவர் வந்தால் அவருக்கு விசிலடிப்பினம்...சீமான் தமிழகத்தில் அரசியல் செய்யட்டும். முதல்வராக வரட்டும்...ஆனால் வந்தால் எங்கட மக்களுக்கு ஏதாவது கிழிப்பார் என்று மட்டும் எதிர் பார்க்க வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

மாருதன், சும்மா இணையத்தில் வந்து நாங்களும்,அவர்களும் ஒன்று என எழுதலாம் ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் வேற,அவர்கள் வேற...அவர்கள் தம்மை தமிழன்,நாம் தமிழால் ஒன்று பட்டவர்கள் என்று சொன்னாலும் அவர்கள் முதலில் இந்தியன் பிறகு தான் தமிழர்...அதே போல நாம் தனி நாட்டுக்காய் போராடி சிங்களவன் எமக்கு எதிரியாய் இருந்தாலும்,நாம் முதலில் இலங்கையர் அதன் பிறகே தமிழர்...சும்மா எல்லோரும் சொல்கின்ற மாதிரி நாம் தமிழர்,தமிழால் ஒன்றுபட்டோம்/படுவோம் என்று சொல்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...சொல்லப் போனால் இப்படி சொல்வதால் எங்களுக்கு பாதிப்பு தான் அதிகம்...சீமான் மட்டும் இல்லை நாளைக்கு விஜய் அரசியலுக்கு வந்தாலும் இது தான் என் கருத்து.

எங்கட தமிழர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு...எப்பவும் யாருக்கும் விசிலடிச்சு கொண்டே இருக்க வேண்டும்...இப்ப ஈழத்தில் ஒருத்தரும் இல்லை சீமான் இருக்கார் அவருக்கு விசிலடிக்கினம்,,,,நாளைக்கே ஈழத்தில் சீமானையும் விட கதைக்க கூடிய ஒருவர் வந்தால் அவருக்கு விசிலடிப்பினம்...சீமான் தமிழகத்தில் அரசியல் செய்யட்டும். முதல்வராக வரட்டும்...ஆனால் வந்தால் எங்கட மக்களுக்கு ஏதாவது கிழிப்பார் என்று மட்டும் எதிர் பார்க்க வேண்டாம் 

மேலே யாராவது  அப்படி  எழுதி  இருக்கிறார்களா  ரதி??

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மாருதன், சும்மா இணையத்தில் வந்து நாங்களும்,அவர்களும் ஒன்று என எழுதலாம் ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் வேற,அவர்கள் வேற...அவர்கள் தம்மை தமிழன்,நாம் தமிழால் ஒன்று பட்டவர்கள் என்று சொன்னாலும் அவர்கள் முதலில் இந்தியன் பிறகு தான் தமிழர்...அதே போல நாம் தனி நாட்டுக்காய் போராடி சிங்களவன் எமக்கு எதிரியாய் இருந்தாலும்,நாம் முதலில் இலங்கையர் அதன் பிறகே தமிழர்...சும்மா எல்லோரும் சொல்கின்ற மாதிரி நாம் தமிழர்,தமிழால் ஒன்றுபட்டோம்/படுவோம் என்று சொல்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...சொல்லப் போனால் இப்படி சொல்வதால் எங்களுக்கு பாதிப்பு தான் அதிகம்...சீமான் மட்டும் இல்லை நாளைக்கு விஜய் அரசியலுக்கு வந்தாலும் இது தான் என் கருத்து.

எங்கட தமிழர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு...எப்பவும் யாருக்கும் விசிலடிச்சு கொண்டே இருக்க வேண்டும்...இப்ப ஈழத்தில் ஒருத்தரும் இல்லை சீமான் இருக்கார் அவருக்கு விசிலடிக்கினம்,,,,நாளைக்கே ஈழத்தில் சீமானையும் விட கதைக்க கூடிய ஒருவர் வந்தால் அவருக்கு விசிலடிப்பினம்...சீமான் தமிழகத்தில் அரசியல் செய்யட்டும். முதல்வராக வரட்டும்...ஆனால் வந்தால் எங்கட மக்களுக்கு ஏதாவது கிழிப்பார் என்று மட்டும் எதிர் பார்க்க வேண்டாம் 

பிரிட்டிஸ்காரன் தான் அவுஸ்திரேலியாவில், நீயூசிலாந்தில், கனடாவில், அமேரிக்காவில் குடியேறினான். ஆனாலும் நாம் ஆங்கிலயர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை.

தமிழக, ஈழ வரலாறைப் பார்த்தால், எப்போதுமே, சிங்களவர்கள் கொட்டம் தமிழக சேனைகளினால் தான் அடக்கப்பட்டுள்ளன என்கிறார் அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு.

ஈழ விடுதலையின் சாவி, கொழும்பில் இல்லை, தமிழகத்தில் தான் உள்ளது என்கிறார் அவர்.

அதனாலேயே, சீமானுடன் அவரறியாமல் ஒரு உளவாளியை நெருக்கமாக பழக வைத்து, அவரை மதிப்பீடு செய்தே தலைவர் அழைத்து பேசினார் என்று சீமான், தான் தலைவரிடம் அறிந்ததாக சொன்னார்.

கிருபன் சொல்வது நடந்தது தான், ஆயினும் இந்த உண்டியல் கோஸ்டிகள் குறித்து தெளிவான புரிதல் இப்போது சீமானுக்கு உள்ளது.

சீமானுக்கு வாக்களித்தவர் தொகை, ஈழத்தமிழர் தொகையிலும் அதிகம். இவர்கள் பணத்துக்கு வந்தவர்கள் அல்ல. ஆகவே இந்த தொகை கூடும்.

கூடி, ஒரு காலத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய அளவு வளர்ந்தாலே நமக்கு போதும்.

சந்திரிக்கா தருவார், மகிந்த கிழிப்பார், மைத்திரி புடுஙகுவார், இனி ரணில் வந்தா ஓகே, கோத்தா வந்தாலும்.... அவர் துணிவான ஆள், நிணைச்சா செய்வார் என்று சப்பை கொட்டாமல், நம்மவன் சீமானையும் வளர்ந்து வரட்டும். வந்தால் டெல்லியை அசைப்பார் எனவும் நம்புவோம். அதனால் குடிமுழுகப்போவதில்லையே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சண்டமாருதன் said:

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

மிக உண்மையான கருத்து. சண்டமாருதன்.   அழகாக  எழுதியுள்ளீர்கள். :)

Link to comment
Share on other sites

13 hours ago, putthan said:

தென் மாநிலங்களில் ஆந்திராவும் தமிழ்நாடும் இந்திய தேசிய கட்சிகளுக்கு சிம்மசொற்பனமாக திகழ்கின்றது...

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே பாஜக விற்கு ஆசனங்கள் எதுவும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அபராஜிதன் said:

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே பாஜக விற்கு ஆசனங்கள் எதுவும் இல்லை

தமிழ் நாட்டிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் பாஜகவுக்கு பூச்சியம்தான். தெலுங்கானாவில்தான் 7.

ஆனால் தேசிய கட்சிகள் தனித்து ஒரு சீட்டும் பெற முடியாமல் தவிக்கும் இடங்கள் என்றால் 80 களுக்கு பிந்திய தமிழ்நாடும், தெலுங்கான பிரிந்த பின் எஞ்சியுள்ள ஆந்திராவும்தான்( ராயல சீமா மற்றும் கரையோர ஆந்திரா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, அபராஜிதன் said:

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே பாஜக விற்கு ஆசனங்கள் எதுவும் இல்லை

கேரளாவில் இந்திய தேசியகட்சி((காங்கிரஸ்) அநேக இடங்களை கைப்பற்றியுள்ளது....(காங்கிரஸ்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு விழுந்த வாக்கு வெறித்தனமான வாக்கு 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎24‎/‎2019 at 3:53 PM, Nathamuni said:

பிரிட்டிஸ்காரன் தான் அவுஸ்திரேலியாவில், நீயூசிலாந்தில், கனடாவில், அமேரிக்காவில் குடியேறினான். ஆனாலும் நாம் ஆங்கிலயர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை.

தமிழக, ஈழ வரலாறைப் பார்த்தால், எப்போதுமே, சிங்களவர்கள் கொட்டம் தமிழக சேனைகளினால் தான் அடக்கப்பட்டுள்ளன என்கிறார் அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு.

ஈழ விடுதலையின் சாவி, கொழும்பில் இல்லை, தமிழகத்தில் தான் உள்ளது என்கிறார் அவர்.

அதனாலேயே, சீமானுடன் அவரறியாமல் ஒரு உளவாளியை நெருக்கமாக பழக வைத்து, அவரை மதிப்பீடு செய்தே தலைவர் அழைத்து பேசினார் என்று சீமான், தான் தலைவரிடம் அறிந்ததாக சொன்னார்.

கிருபன் சொல்வது நடந்தது தான், ஆயினும் இந்த உண்டியல் கோஸ்டிகள் குறித்து தெளிவான புரிதல் இப்போது சீமானுக்கு உள்ளது.

சீமானுக்கு வாக்களித்தவர் தொகை, ஈழத்தமிழர் தொகையிலும் அதிகம். இவர்கள் பணத்துக்கு வந்தவர்கள் அல்ல. ஆகவே இந்த தொகை கூடும்.

கூடி, ஒரு காலத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய அளவு வளர்ந்தாலே நமக்கு போதும்.

சந்திரிக்கா தருவார், மகிந்த கிழிப்பார், மைத்திரி புடுஙகுவார், இனி ரணில் வந்தா ஓகே, கோத்தா வந்தாலும்.... அவர் துணிவான ஆள், நிணைச்சா செய்வார் என்று சப்பை கொட்டாமல், நம்மவன் சீமானையும் வளர்ந்து வரட்டும். வந்தால் டெல்லியை அசைப்பார் எனவும் நம்புவோம். அதனால் குடிமுழுகப்போவதில்லையே.

 

நாதம்ஸ், திருநாவுக்கரசு சொல்வது எல்லாம் உங்களுக்கு வேத வாக்கா?...கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கள் எங்கே,எப்போது சிங்களவர்களது கொட்டத்தை தமிழக சேனைகள் அடக்கிய வரலாற்றை?...சீமான் இப்படி எத்தனை புளுகுக் கதைகள் கதைச்சவர்?

புலத்தில் உங்களை மாதிரி நல்ல வசதியாய்,நல்ல  வேலையில் இருப்பவர்கள் தான் பொழுது போகாமல் அவருக்கு பின்னாலே வால் பிடித்து திரியினம்...ஈழத்தில் இருக்கிற ஒரு சனமும் அவரை கணக்கிலும் எடுப்பதில்லை...உப்ப நீங்கள் ,இவருக்கு பின்னால் வால் பிடிப்பது மாதிரி அந்த நேரம் கருணாநிதிக்கும்,எம்ஜியாருக்கும் பின்னால் கொஞ்ச பேர் வால் பிடித்தவை?... அப்ப, உப்ப மாதிரி இணைய வசதிகள் இருக்கேல்ல.

சிங்களவர்கள் எமக்கான உரிமையை தரப்பு போவதில்லை...அதை நாம் தான் போராடிப் பெற வேண்டும். நாம் என்றால் நாம் தான் ..சீமான் தமிழ் நாட்டில் முதல்வராய் வரட்டும்...முற் கூட்டிய வாழ்த்துக்கள் ...காசை வேண்டிக் கொண்டு வோட் போட்டு விட்டு முதல்வர் ஒன்றும் செய்யேல்ல,அமைச்சர்கள் ஒன்றும் செய்யேல்ல என்று புலம்பிற சனம் தமிழ் நாட்டு சனம்...அவர்கள் மூலம் ஈழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகுது?...தங்களையே ஒழுங்காய்  காப்பாற்ற தெரியாதவர்கள் எங்களுக்கு ஈழம் பெற்று கொடுத்திடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
1 hour ago, ரதி said:

நாதம்ஸ், திருநாவுக்கரசு சொல்வது எல்லாம் உங்களுக்கு வேத வாக்கா?...கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கள் எங்கே,எப்போது சிங்களவர்களது கொட்டத்தை தமிழக சேனைகள் அடக்கிய வரலாற்றை?...சீமான் இப்படி எத்தனை புளுகுக் கதைகள் கதைச்சவர்?

சிங்களவர்கள் எமக்கான உரிமையை தரப்பு போவதில்லை...அதை நாம் தான் போராடிப் பெற வேண்டும். நாம் என்றால் நாம் தான் ..சீமான் தமிழ் நாட்டில் முதல்வராய் வரட்டும்...முற் கூட்டிய வாழ்த்துக்கள் ...காசை வேண்டிக் கொண்டு வோட் போட்டு விட்டு முதல்வர் ஒன்றும் செய்யேல்ல,அமைச்சர்கள் ஒன்றும் செய்யேல்ல என்று புலம்பிற சனம் தமிழ் நாட்டு சனம்...அவர்கள் மூலம் ஈழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகுது?...தங்களையே ஒழுங்காய்  காப்பாற்ற தெரியாதவர்கள் எங்களுக்கு ஈழம் பெற்று கொடுத்திடுவார்கள் 

உங்களுக்கு தாரு சொன்னது, சீமான் வந்து எங்களுக்கு ஈழம் பெற்று கொடுத்திடுவார்கள் எண்டு நாங்கள் சொன்னது எண்டு. சீமானே அப்படி சொல்லும் முட்டாள் இல்லை.

சிலவேளை சீமானின், அம்மான் மேலான சில கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அது வேறு விடயம். 

நான் ஒருபோதும் சொல்லவில்லையே. சீமான், சிங்கத் தமிழால் கவரப்பட்டேன். கருணாநிதி, வைகோ போல இல்லாமல் அவர் உண்மையாக பேசுகிறார் என்பதால் அவரை ஆதரிக்கிறேன்.

அதேவேளை அவர் ஒரு அழுத்தம் கொடுக்கக்கூடிய அரசியல் சக்தியாக வந்தால், எமக்கு ஒரு சிறு ஆதரவு கிடைக்கலாம். MGR தம்மால் முடிந்தளவு 4 கோடி பணம் தந்தாரே அது போல ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் நன்றே.

முதலில் வரலாறை கொஞ்சம் வாசித்து பாருங்கோ. எல்லாளன் ஒரு சோழ மன்னன். ராசராசன் ஒரு சோழ மன்னன். முதலாமவர் அனுராதபுரத்தினையும், இரண்டாமவர் பொலன்னறுவையும் தலைநகரமாக கொண்டு ஆண்டார்கள். 

அடுத்து பல பாண்டிய மன்னர்கள் படை எடுப்புகள் குறித்து மகாவம்சம் சொல்கிறது.

அண்மையில், கண்டி மன்னன், ஸ்ரீ விக்கிரம ராசசிங்கன், கண்ணப்பன் என்ற பெயர் கொண்ட நாயக்கர் வம்சம். ஆங்கிலேயர்கள் அவரை தமிழகம் கொண்டு சென்று, இறந்த பின் புதைத்த இடம் வேலூர்.

ஐரோப்பியர்களுக்கு எதிரான போரில், சிங்கள மன்னர்களுக்கு உதவ வந்து, கண்டி ராஜ்யத்தினை மடக்கி மன்னர் ஆனவர்கள் இந்த தென் இந்திய அரசர்கள்.

ஆகவே ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்திய அரசியலில், மோடி, கடந்தமுறையும் இந்தமுறையும் சொந்தமாக தேவையான MP கள் வென்று வைத்திருப்பதால், தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ, இந்தமுறை ஸ்டாலினோ உதவி செய்ய வேண்டிய தேவையில்லை. ஆகவே அழுத்தம் தர முடியாது.

ஆனால் 2009ல் கருணாநிதி, காங்கிரசுக்கு தேவையான MP கள் வைத்திருந்தார், கொடுத்தார். எமக்காக அழுத்தம் கொடுக்காமல், தனது உறவினர்களுக்கு பதவியினை கேட்டு வாங்கி கொண்டார். அதனால் தான் இன்றும் பலிக்கப்படுகின்றார்.

ஒருகாலத்தில், மத்திய அரசமைக்க வேண்டும், பெரும்பான்மை இல்லை என்ற அந்த 2009 நிலை வந்தால், அதை ஒரு தமிழக கட்சி தரும் என்ற நிலையில், அந்த கட்சி சீமான் கட்சி ஆக இருந்தால், நிச்சயம் எமக்காக அழுத்தம் தருவார் என்று உறுதியாக சொல்லமுடியும்.

இந்திய மத்திய அரசின் அழுத்தம் இன்றி, எமக்கு ஒரு உரிமையும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையில், இவ்வகை அழுத்தம் தான், திருநாவுக்கரசர் சொன்ன சாவி.

இப்போது தமிழகத்தில் அகதியாக இருக்கும் திருநாவுக்கரசு சொல்லும் 'தமிழகத்து சாவி' என்பது வன்னியில் புலிகள் இருக்கும் போது, அவர்களது தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்து. அதாவது, நீங்கள் என்னதான் சண்டை செய்தாலும், தமிழ்நாடு அழுத்தம் தந்து, மத்திய அரசு ஏதாவது செய்தால் தான், எமது விடுதலை சத்தியம் என்றார்.

அதனை அங்கீகரித்தே, சீமானை தலைவர் சந்தித்ததாகவும் சொல்வார்கள்.

சீமான் 1.2% வாக்குகள் வாங்கிய போது எமது விடயத்தில் என்ன சொன்னாரோ, அதனையே 4% வாங்கிய போதும் சொன்னார். மாறவில்லை.

பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதுவும் இந்தியாவில் அரசியல் வாதிக்கு பலவழிகள். உங்களுக்கு ஈழம் வாங்கி தருகிறேன் என்று காசு பார்க்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை என்றே நம்புகிறேன்.

அவரது அரசியலை மழுங்கடிக்கவே கமலை இறக்கினார்கள். இனி ரஜனியையும் இறக்குவார்கள். இதுக்கு இலங்கை அரசும் பணம் கொடுக்கலாம், யாருக்கு தெரியும்.

முதலில், ஒரு விடயத்தினை மறுத்து எழுத முன்னர், அதுகுறித்து விளக்கம் கேட்பது நல்லது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழர் முன்னணி என்ற பெயரில் செந்தமிழன் சீமானின் அடிப்பொடிகள் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அதில் ஈழத்தமிழர்களும் உள்ளனர்தானே. இந்த முன்னணிமூலம் பணம் போனதாம்!

நாம் தமிழர் கட்சிக்கு திமுக, அதிமுக ஆதரவாளர்கள் திரண்டுவரப்போவதில்லை. இடையில் இருக்கும் protest வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியைக் காட்ட சிலவேளைகளில் NOTA க்குப் பதிலாக மூன்றாவது இடத்திற்கு வந்த சில்லறைக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டிருக்கலாம்!

மூன்றாவது இடத்தைக் கைப்பற்றிய கட்சிகள் இரண்டாம் இடத்திற்கு வரமுடியுமோ? முடியவே முடியாது என்பதுதான் எனது பதில்!

ஒட்டுமொத்தமாக அ.ம.மு.க. 5.16% வாக்குகளோடு 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் நாம் தமிழர் கட்சி 3.89 சதவீதமும், மக்கள் நீதி மய்யம் 3.72 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன.

——

ஆய்வாளர் திருநாவுக்கரசு சொல்லும் திறவுகோலை வைத்து முதலில் தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெறமுடியுமா பார்த்தால் நல்லது. அவர்களை இந்தியப் பிரஜைகளாக்க வேண்டும் அல்லது அவர்கள் விரும்பும்பட்சத்தில் தாயகத்தில் குடியமர உதவிசெய்யவேண்டும். 

இன்னும் பத்தாண்டுகளில் தாயகத்தில் திறவுகோலை வைத்து திறக்க எதுவும் இருக்காது. ஜெராவின் கட்டுரையில் கடந்த பத்தாண்டு காலத்தில் நடந்தவற்றின் சுருக்கமான வரலாற்றை பார்க்கும்போது ஈழத்தமிழர்கள் இன்னும் பின்னோக்கித்தான் செல்வார்கள் என்றுதான் தெரிகின்றது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.