Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் - தேர்தல் 2019

தற்போது வரை 💪😍😍🔥🔥🔥

Arakkonam - 24495
Arani - 32151
Chennai Central - 30684
Chennai North - 49412
Chennai South - 34818
Chidambaram - 26049
Coimbatore - 58289
Cuddalore - 32785
Dharmapuri - 16769
Dindigul - 49741
Erode - 38849
Kallakurichi - 29806
Kancheepuram - 62390
Kanniyakumari - 13135
Karur - 32553
Krishnagiri - 27145
Madurai - 32178
Mayiladuthurai - 30721
Nagapattinam - 41361
Namakkal -38378
Perambalur - 52494
Pollachi - 31181
Ramanathapuram - 26762
Salem - 25376
Sivaganga - 56315
Sriperumbudur - 35627
Tenkasi - 58855
Thanjavur - 55643
Theni - 14317
Thiruvallur - 41207
Thoothukkudi - 43107
Thiruchirappalli - 64979
Tirunelveli - 49528
Tiruppur - 41670
Tiruvannamalai - 27192
Viluppuram - 24399
Viluppuram - 52552
Puducherry - 15568

Total - 14,18,481

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes
 
 

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ( சுமார் 15 லட்சம் வாக்குகள்) 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

www.ns7.tv | #Results2019 | #Verdict2019 |#ElectionResultsWithNews7Tamil | #News7Tamil

L’image contient peut-être : 1 personne, sourit, texte
 
 
 
Link to comment
Share on other sites

ஒரு உண்மையான சனநாயக பண்பின் அடிப்படையில் 4% உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து இருக்கலாம். அந்த நிலைமை இங்கு  இல்லை.

ஆனால், அண்ணன் சீமான் கூறுவது போல இது ஒரு ஆரம்பமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தற்போதைய நிலவரப்படி #நாம்_தமிழர்_கட்சி சிறப்பாக வாக்குகள் பெற்றிருக்கும் தொகுதிகள்...

1. வட சென்னை (6.37%)
2. தென் சென்னை (4.38%)
3. திண்டுக்கல் (5.01%)
4. காஞ்சிபுரம் (5.39%)
5. மதுரை (4.55%)
6. நாகப்பட்டினம் (4.43%)
7. பெரம்பலூர் (4.46%)
8. இராமநாதபுரம் (4.79%)
9. சிவகங்கை (5.66%)
20. திருபெரும்புதூர் (6.55%)
11. தென்காசி (5.02%)
12. தஞ்சாவூர் (5.36%)
13. தூத்துக்குடி (4.15%)
14. திருச்சிராப்பள்ளி (6.37%)
15. திருநெல்வேலி (5.08%)
16. விருதுநகர் (4.98%)

அருமை... வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

பலவாறும் சொல்லி  வந்தார்கள்

புதுச்சின்னம்

அதை  மக்களுக்குள் கொண்டு போவது  கடினம்

இதனால் போனமுறையை  விட குறைவான  வாக்ககளே  கிடைக்கும் என.

5 வீதம் என்பது  சின்னத்தை  நிரந்தரமாக்க.

மற்றும்படி 5 வீதம்  என்பது தவிர்க்க  முடியாத  சக்தியாக்க.

 

ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

பலவாறும் சொல்லி  வந்தார்கள்

புதுச்சின்னம்

அதை  மக்களுக்குள் கொண்டு போவது  கடினம்

இதனால் போனமுறையை  விட குறைவான  வாக்ககளே  கிடைக்கும் என.

5 வீதம் என்பது  சின்னத்தை  நிரந்தரமாக்க.

மற்றும்படி 5 வீதம்  என்பது தவிர்க்க  முடியாத  சக்தியாக்க.

 

ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...

 

 

சட்ட மன்ற தேர்தலில் 1% வாக்குகள்; இந்த முறை 5% வாக்குகள் ..........!!!!!  👍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல், தினகரன் இப்படிப் பல புதியோர் களத்தில் நிற்கும் போது, 5 சதவீதம் எடுப்பது லேசான விசயம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

நாம் தமிழருக்கு வாக்குச் சதவீதம் 4% ஆல் அதிகரித்திருப்பது மக்கள் மாற்றத்தை நோக்கிப் போகிறார்கள் என்பதையே ஆகும். அதிலும் மக்கள் சரியான மாற்றம் ஒன்றை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

இந்த வாக்கு வங்கியை... உள்ளூராட்சி சபைகள்.. நகர சபைகள்.. மாநகர சபைகள்.. பஞ்சாயத்து சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி.. தமக்கான மக்கள் சேவையை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்குமாக இருந்தால்..

நிச்சயம் நாம் தமிழருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கிருபண்ணா போன்றவர்கள்.. தலைவரையும் கொடியையும் மறந்திட்டால்.. மறைச்சிட்டால் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லித் திருச்சிச்சினம்.. மீளாய்வு.. ஆராய்வுன்னு எழுதித் தள்ளிச்சினம்.. பின் புலித்தத்துவம்.. முன் புலித் தத்துவம்.. என்று பல தத்தக்கபித்தக்க போட்டிச்சினம்.. என்னத்தை கடந்த 10 ஆண்டுகளில் சாதிச்சவை என்று கேளுங்கோ... பூச்சியம்.

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும். 

Link to comment
Share on other sites

 
 
 
3 minutes ago, nedukkalapoovan said:

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

 

சீமான் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனது கருத்துக்களையும் உளப்பூர்வாமாக உள்வாங்குபவராகத் தெரியவில்லை. அவரைப்பொறுத்த வரையில் தன்னைப் பிரபல்யமாக்க தற்போதைக்கு தேவையானவை புலிகளின் பெயர். தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழ் உணர்வாளர்களை தனது படிக்கல்லாக்கி அதிகாரத்தில் அமர்வது தற்போதைய அவரது நோக்கு

அவரது வளர்ச்சி ஆரோக்கியமான தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும்

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம். தேசிய தலைவரும் அவரை எல்லாம்.. கூப்பிட்டு ஒரு நட்புறவாடல் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

எம்மவர்கள் எமது தலைவரையும்.. போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிப் பிழைத்ததை விடவா.. சீமான பிழைச்சிட்டார்..?!

பிரபாகரனை.. புலியை தூக்கிய படியால்.. அவர்கள் பட்ட வேதனையும் சோதனையும் தான் அதிகம். அதை தூக்காமல்.. பெரியார்.. அண்ணா.. திராவிடம் என்று சீமானும்.. வை.கோ ரேஷ்சில் பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் கலந்திருப்பாரானால்.. இப்போ... அவரின் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருப்பார். 

ஆனால்.. பிரபாகரனை புலியை தூக்கி சீமான் அனுபவித்தது சிறையும்.. வழக்குகளும் தான் அதிகம். 

எமக்காக குரல் கொடுப்பவர்களை எமது அரைகுறைப் புத்தியால் மட்டும் பார்க்கக் கூடாது. நியாயத்தோடு அவர்கள் தொழிற்படும் சூழலை கருத்திக் கொண்டு.. அந்த சூழலில்.. இன்றிருக்கும் நாம் அன்று எதிர்பார்த்த மாற்றங்களின் அளவு என்ன என்பதை எல்லாம் கணக்கிட்டு கருத்துச் சொல்லனுமே தவிர..

தமிழ் தேசிய அரசியலை நிராகரிக்க.. எனி எந்தத் தமிழனாலும் முடியாது. அப்படி நிராகரித்தால்.. தமிழன் என்ற இனம் இந்த உலகில்.. இல்லாமல் போகும். அவ்வளவும் தான். 

3 minutes ago, கிருபன் said:

ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்

இதை விட பலமா..?!

கிட்டத்தட்ட எல்லாரும் கூட்டணி.

மதிமுக.. பாமக.. தே திமுக.. காங்கிரஸ்.. இடதுசாரி தாடிக்காரக் கூட்டம்.. எல்லாமே.

இதில் கமல்.. சுதாகரன் அவரவர் வாக்கு வங்கியை இனங்காட்ட தனித்து நின்றார்கள். அதிலும் செல்வாக்கு.. பணம்.. தேர்தல் பொருள். சுத்தமா கொள்கை கிடையாது.

ஆனால்.. நாம் தமிழர் மட்டுமே கொள்கையோடு தனித்து நின்றார்கள். சல்லிக் காசும் மக்களுக்கு கொடுக்கவில்லை.. வாக்கு வாங்க.

எது பலம்.. எது பலவீனம்..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

சென்னை: "யார் என்று தெரிகிறதா?" என்று வட சென்னையில் வைத்துக் காட்டி விட்டார் கமல்ஹாசன். அட்டகாசமான ஒரு போட்டியை வட சென்னை பார்த்திருக்கிறது. புதிதாக பிறந்து வந்த மக்கள் நீதி மய்யமும், அதற்கு சளைக்காமல் சலங்கை கட்டி ஆடிய நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் அதிமுக, திமுக கூட்டணிகளை அதிர வைத்துள்ளனர். வட சென்னையில் தேமுதிக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார். இவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏஜி மெளர்யாவை களம் இறக்கியது. நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் அக்கா களம் கண்டார்.

மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் என்ன வாக்குகளை பெற்று விடப் போகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இருவரும் அதிர வைத்து விட்டனர்.

திமுக வாரிசு வட சென்னையில் திமுகவுக்கே வெற்றி. அக்கட்சி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். திமுக காரர், வீராசாமி வாரிசு என்ற பலத்தின் பின்னணியில் போட்டியிட்ட அவரது வெற்றி பெரிய விசேஷம் இல்லை.

தேமுதிக மோகன்ராஜ் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். இவருக்காக விஜயகாந்த்தே களம் இறங்கி தெருத் தெருவாக வேனில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மோகன் ராஜ் வெல்ல முடியவில்லை. 2வது இடமே அவருக்குக் கிடைத்தது.

புதிய சக்திகள் இப்படி இரு பெரும் கட்சிகள் போட்டா போட்டி போட்ட நிலையில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து தனி ஆட்டம் ஆடியுள்ளன மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும். இதுதான் படு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சிகள் இறங்கி அடித்து அசத்தியுள்ளன.

மெளர்யாவுக்கு ஒரு லட்சம் ஒரு லட்சம் ஓட்டுக்களைத் தாண்டிப் பெற்று அதிர வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மெளர்யா. இவருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மோகன்ராஜை விட 25,000 ஓட்டுக்களே குறைந்து பெற்றுள்ளார் மெளர்யா என்பது முக்கியமானது. இது மிகப் பெரிய சாதனையாகும். எல்லாம் கமல் அடித்த டார்ச் லைட் வெளிச்சத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்பதில் சந்தேகமே இல்லை.

கலக்கிய காளியம்மாள் அடுத்து நம்மைக் கவர்ந்தவர் காளியம்மாள்தான். அக்கா அக்கா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் காளியம்மாள், குறுகிய காலத்தில் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி. அத்தனை அழகாக பேசுகிறார். புள்ளி விவரங்களை அடுக்கிப் பேசுகிறார். அடுக்குமொழி பேசத் தெரியாதவர். ஆனால் உலுக்கி எடுத்தது இவரது ஒவ்வொரு பேச்சும்.

பாசக்கார அக்கா காளியம்மாளின் பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இவருக்காக சீமான் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தமிழக அளவில் மிகவும் கவனிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் வரிசையில் காளியம்மாளும் இடம் பிடித்ததே நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். காளியம்மாள் 59,000 வாக்குகளைத் தாண்டி போய் விட்டார். இது மகத்தான சாதனைதான்.

புதிய சக்தி இப்படி பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யமும்,நாம் தமிழர் கட்சியும் புகுந்து விளையாடியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வருங்கால அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகள் இவர்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டனர். டாக்டர் தமிழிசை சொல்வது போல இவர்களுக்குக் கிடைத்திருப்பது நிச்சயம் வெற்றிகரமான தோல்விதான்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ntk-and-mnm-shine-well-in-north-chennai/articlecontent-pf376887-351657.html?c=hboldsky

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

இப்படி வாட்ஸப்பில்.. பதிவு போடுறவை.. கடந்த 10 வருசமா தமிழ் மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் என்ன விடிவை பெற்றுக் கொடுத்திட்டு.. சீமானை திட்ட வெளிக்கிட்டினம்.

காணும்.. நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம். சீமான்.. தலைவர்.. பெயர் படம்.. உயிர் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போய் அவர் தலைவரின் பெயரால்.. அரசியல் செய்து பிழைத்தாலும் பறுவாயில்லை..

எம்மவர்கள்.. போல தலைவரை ஒளிச்சு வைக்காமல்.. இருப்பதே அவரின் கொள்கைக்கு செய்யும் மறைமுக உதவியாக இருக்கும். தலைவர் ஒளிக்கப்பட வேண்டியவரல்ல. ஒரு இனத்துக்கான போராளி என்று நிரூபிக்கப்பட வேண்டியவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

தனது அரசியலுக்கு பிரபாகரன் பய்னன்படுத்துகிறார் என்று நம்மில் பலர் அதுவும் புலிகளை பிடிக்காதவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் சாதி பிரச்சனைகள் காரணமாக, வெளியார் தலைமை வருகிறது, வெல்கிறது. இதுவே ரஜனி ஆசைப்படவும், MGR, அவர் மனைவி ஜானகி, துணைவி ஜெயலலிதா பதவிக்கு வரவும். அண்ணாதுரை, கலைஞர் பதவிக்கு வரவும் முடிந்தது.

வெளிநாட்டவராக இருந்தாலும், தமிழர் என்ற காரணத்தினால் பிரபாகரன் காட்டப்படும் போது, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் ஏற்றுக் கொள்ளப் படுகின்றார். அந்த ஒரு காரணத்துக்காகவே, சாதியம் கடந்து சீமான், பிரபாகரன் படத்துடன் சகல தமிழக, மறைந்த சாதிய தலைவர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவிக்க முடிகிறது. 

ஈழத்தில் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர் பிரபாகரன் என்கிற ஒரே காரணத்துக்காகவே பிரபாகரன் சீமானால், அதே காரணத்துக்காக அங்கே முன்னிறுத்தப்படுகின்றார்.

ஈழத்தில் பிரபாகரனை வெறுத்த நானறிந்த பலரும், சீமானின் இந்த நோக்கத்தினை ஏற்றுக் கொள்கின்றனர்.

அது புரியாமல், சீமான் பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்கின்றார் என்று தமக்கு தோன்றியதை எல்லாம் பேசுகின்றனர்.

எத்தனை பேர் கொடுக்கிறார்கள்? இந்திய அரசுக்கு தெரியாமல் பணம் போக முடியுமா? சீமானின் இயக்கத்தினுள் எத்தனை உளவாளிகள் உள்ளனர் என்பதை சீமானே வெளிப்படையாக சொன்னாரே.

ஒன்று புரிந்து பேசுவோம் அல்லது புரியாமல் பேசிக்கொண்டே இருப்போம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம்.

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

10 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இப்ப புலி இல்ல.. கழுவி ஊத்திறதுக்கு.. சீமானை ஊத்திக் காலத்தைக் கழிக்க வேண்டியான். இதை விட எதைச் சாதித்தீர்கள்.. புலிகள் இருக்கும் போதும் சரி.. இல்லாத கடந்த 10 ஆண்டுகளிலும் சரி. ஒரே தசாப்தத்தை.. இப்படி வெட்டி நக்கல் அடித்தே கழித்தது தான் மிச்சம். 

கடைசி சீமானாவது முன்னேறட்டும்.. விட்டு விடுங்கள். உங்களால் முடியாததை அவர் செய்ய முனைவது எரிச்சலாகத்தான் இருக்கும்.. என்ன செய்வது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

சீமானே வெல்ல இன்னும் காலம் இருக்கு, அதுவரை உழைக்கவேண்டும் ன்று எப்பவோ,  சொல்லீட்டார். 

கணக்க கவலைப்படாதீங்க.... இன்னும் பல திரி கொழுத்துவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் இப்படி எல்லா தேர்தல்களையும் அவதானிப்பேன். கிட்டத் தட்ட இது ஒரு spectator sport போல. உலக கிண்ணம் பார்பதில்லையா அப்படி.

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

ஆனால் திரை, சின்னத்திரை, மெல்லிசை, சங்கீதம், நாட்டியம், நாவல், என சகலதிலும் இலங்கை படைப்புகளை விட இந்திய படைப்புகளை விரும்பி நுகரும் நாம், இதில் மட்டும் வேறுபடாமல் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே.

6 minutes ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

Link to comment
Share on other sites

ஒரு காணொளியில் இளையவர் ஒருவர் வாக்குக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுப்பதை பார்த்தேன் 
இந்த வாக்களித்த மக்களில் கணிசமானோர் இளையோர் 
இளையவர்கள் நாளைய பெரும்பன்மை வாக்காளார்கள் 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது 
மாறுவது எல்லாம் உயிரோடு 
மாறாதது எல்லாம் மண்ணோடு 

மாற்றம் என்பது இலகுவானது அல்ல
அதுவும் ஊறிப்போன எண்ணங்களில் மாற்றம் வருவது என்பது கடினம்
சரியான மாற்றத்தை கொண்டுவருவது அதைவிட கடினம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.