Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

   கமலகாசனின் திரைப்படங்களை பார்த்து வீணீர் வடிக்கும் கூட்டம் அவருக்குத்தானே வாக்களிக்கும். கமலுக்கு ஒரு கூட்டம் ரஜனிக்கு ஒரு கூட்டம் விஜய் அஜித் என்று கட்டவுட்டுக்கு பால் ஊத்தும் கூட்டதை பல வலைத்தளங்களில் அதிகமாக பார்த்திருப்பீர்கள் தானே.....அதில் கொஞ்சமாவது இங்கும் இருக்கத்தானே செய்யும்.......🤣

2 hours ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

சீமான் கூடாது....வரவே கூடாது.........ஆனால் அந்தநாள்   தொடக்கம்  மூக்கு முட்ட கொள்ளையடிச்சு....கொள்ளையடிச்சு...ஜெயிலுக்கு போய் வந்தும் உத்தமர்களாக தெரிவது உங்களைப்போன்ற கண்களுக்குத்தான்.
வாழ்க ஊழல் கொள்ளை.

13 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

மாமேதைகள் உலாவும் தளத்தில் பட்டிக்காட்டானுக்கு என்ன வேலை??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

அவர், மோடி கவிழ்வார், காங்கிரஸ் மேலே வரும் எடப்பாடி அரசு டிஸ்மிஸ், அப்புறம் தேர்தல் என்று கணக்கு போட்டிருந்தார்.

ஆகவே இடைத்தேர்தலை விட, பாராளுமன்ற தேர்தலை நம்பினார். 

அரசனை நம்பி புரிசனை விட்ட கதை.

மாறாக, மிக துல்லியமாக, எவ்வளவு பணமும் இறைத்தாவது, இவ்வளவு சீட் வெல்ல வேணும் என திட்டம் போட்டு, சரியான தொகுதிகளை தெரிவு செய்து வென்றார் எடப்பாடி.

அவரை அசைக்முடியாது, அதேவேளை தனது வெற்றி வெறுமையானது என ஸ்ராலின் விரைவில் உணர்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் வெற்றி வெறுமையானதா இல்லையா என்பதை வெற்றிக்கு பின்னான வெற்றியாளரினதும், தோல்வியாளரினதும் அணுகுமுறையே தீர்மானிக்கும்.

மத்தியில், காங், சமாஜ்வாடி, பிஜேடி, பகுஜன்சமாஜ், மதச்சார்பற்ற ஜேடி, திரினாமூல், தெலுங்குதேசம் இப்படி பல கட்சிகளை இணைத்து தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட வேண்டும் என்பதே ஸ்டாலின் போன்றோரின் நிலையாக இருந்தது. இதற்காக ராகுலே பிரதமர் என்ற அளவுக்கு விட்டுக் கொடுக்க தயாராய் இருந்தார் ஸ்டாலின். ஆனால் உபியில் காங்கிரசுக்கு 2 சீட் ஒதுக்கியது, மம்தாவின் பிரதமர் கனவு,என சில விடயங்களால் இந்த முயற்சி பலிக்கவில்லை.

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இருக்கும் மவுசு (!),  பிஜேபி சொல்லும் சொல்லுக்கு எடப்பாடி அரசு ஒத்தூதும் போக்கு, அத்தனையும் தமிழகத்தை அடுத்த 2 ஆண்டில் ஸ்டாலின் பக்கம் திருப்பவே வாய்ப்பு அதிகம்.

அதை ஸ்டாலின் லாவகமாக கையாள்வாரா என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

Link to comment
Share on other sites

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

 

25 minutes ago, இசைக்கலைஞன் said:

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

 

உங்கள் வரவிற்கு நன்றி.
இனி இங்கும் முகநூலிலும் விஷ ஜந்துக்கள் அண்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நான் நம்பீட்டன் !!!😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

போறாரே...அவர் இல்லாமலா?

 

1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

அட்ரா..........அட்ரா.........அட்ரா.........அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.....:cool:

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

 

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

அட இந்த கூட்டம் இன்னும் இருக்கா? முன்பு சிலர் சில உண்மைத்தன்மையற்ற செய்திகைளை சொல்லி அதை உண்மை என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள் .எப்படி இதை உண்மை என்று சொல்கிறாய் என கேட்டால் அவர்கள் சொல்வது இன்ரர் நெற்றில் பார்த்தது என்று அதுவும் எந்த இணையத்தளதில் இருந்து என்றும் தெரியாது ஆக அவர்களுக்கு இன்ரர் நெற்றில் இருக்கிறதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். அதே மாதிரி இப்போ வாட்சப்பில் வருகிறது எல்லாம் உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க இப்படி வெல்லும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை 

வாக்குகளை களவாடி என்றாலும் 3 பா ஜா க கார்கள் தமிழகத்தில் 
வெல்லுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன்.

நாம் தமிழர் கட்சி முடிவு இந்தளவுக்கு நான் எதிர்பார்க்கவே இல்லை 
இது பெருத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.

ராகுல் காந்தி ... இந்த நேரு குடும்பம் தோத்து தோத்து 
அரசியலை விட்டே ஓட வேண்டும் என்று எதிர்பார்த்தேன் 
கொஞ்சம் என்றாலும் நடந்தது மகிழ்ச்சி.
பிரியங்கா என்பவர் கொழுத்த அடாவடி காரி சாதாரண 
மனிதர்களை மதிக்க கூட தெரியாதவர் இந்த தேர்தலுக்கு போட்ட 
நாடங்களை பார்த்து பார்த்து வயிறு எரிந்துகொண்டு இருந்தேன்.
நேரு குடும்பத்தை புறம் தள்ளிய காங்கிரஸ் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை. 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் கட்சியினர்  4.34 வீதமான வாக்குகளை பெற்றுக் கொண்டமையே..  வெற்றி தான்.
சீமான் முன்பு குறிப்பிட்டது போல்... தனது வாக்காளர்கள், பாடசாலையில் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாக்குப் போடும் வயது வரும் போது... தமது கட்சி ஆட் சியை பிடிக்கும் என்றார்.  அது உண்மையாகி வருகின்றது போலுள்ளது.

Link to comment
Share on other sites

இங்கு இருக்கும் சிலர் நாம் தமிழர் மீது திமுக காரர் அளவுக்கான காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது.. நான் கூட சீமானை  நண்பர்களிடத்தில் ஓட்டோ ஓட்டென ஓட்டுவேன்..அதற்காக கண்முன் தெரியும்  அவரின் கட்சியின் வளர்ச்சியினை மறுதலிப்பது நேர்மையற்ற அணுகுமுறை ..சீமான் கட்சி வெற்றி பெறவில்லை வளர்ச்சி இருக்கிறது ..இது அவர்களின் இரண்டாவது தேர்தல் ..கமலின் ஜனவசியத்துடன் சீமானை ஒப்பிட முடியாது இருந்தும் கமலின் கட்சி வாங்கிய மொத்த ஓட்டுகளை விட சீமானின் கட்சியினர் கிட்டத்தட்ட 1 லட்சம. வாக்குகள் அதிகம் 

சீமான் கட்சியில் நின்றோர் எவரும் 10ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் இல்லை கமல்கட்சியில்  ஆக்க்குறைந்த வாக்கு எண்ணிக்கை இருக்கு..

சீமானிற்கு முட்டும் கொடுக்க வேண்டாம் அவர்மேல் காழ்ப்பணர்வும் வேண்டாம் நாங்கள் பார்வையாளர்கள் தானே அவர்களின் அரசியலில் பங்காளர்கள் இல்லையே.. ஆரம்பத்தில் எல்லோரும் பிழை விடுவது உண்டு காலம்செல்ல செல்ல அவர்களாகவே திருந்தவும் சந்தர்ப்பம் உண்டு தானே..

சீமானையோ அவரின் கட்சியினையோ தவிர்த்து அல்லது தோற்கடித்து விட்டு தமிழக மக்கள் என்ன ஆபிரகாம் லிங்கனையோ அல்லது லீ குவான் யூ வையா கொண்டுவரப்போறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சி. Mainstream கட்சியாக வரவேண்டுமென்றால் நடுவுக்கு வரவேண்டும். பலரை அனுசரித்துப்போகவேண்டும். அப்படி சீமான் ஒரு நிலை எடுப்பாரா தெரியாது. தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டம் ஒருபோதும் ஐந்து வீதத்தைத் தேறாது!

விகிதாசார வாக்குமுறை இருக்குமட்டும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் நாம் தமிழர் கட்சி MP களையோ MLA களையோ கொண்டுவரமுடியாது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்த 2009இல் இலண்டனில் மாவீரர் நாள் நடந்தபோது, சீமான் வானலையூடாக உரையாற்ற வர நம்ம வாலுகள் அப்ப இருந்த சோகத்திலும் அடித்த விசில் இருக்கே. அது என்னால் மறக்கமுடியாது. இந்த விசிலடிச்சான் கூட்டங்கள் மக்களின் அவலங்களைத் தீர்க்க கடந்த பத்து வருடங்களில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தமுறை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுக்குப் போனபோதும், அங்கு கோஷம் வைத்த ஒரு சிலர் சீமானுக்குப் பின்னால் ஒன்றுதிரளவேண்டும் என்றனர். அப்படியானவர்கள் யாழ் களத்திலும் இருக்கத்தானே வேண்டும்.😃

 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

 புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான வாட்சப் பதிவை நீங்கள் இங்கு இணைத்து மேற்கோள் காட்டுவதுதான் நம்ப முடியாமல் உள்ளது. புலம்பெயர் தமிழர் வாழ்வாதராத்துக்காக பிச்சை எடுக்கும் முன்னாள் போராளிகளுக்கு கூட  பணம் அனுப்ப மறுக்கும் நிலையில் சீமானுக்கு அனுப்பினார்கள் என்று ஒரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால் அதை நம்புறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு என்றால் இதை எல்லம் எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சண்டமாருதன் said:

என்றுரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால்

அவர் என்னுடன் படித்தவார்தான்😀

ஆதாரம் இருக்கு என்று வேறு சொல்லியுள்ளார். கேட்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

சண்டமாருதன்,

வெகு எதார்த்தமான பார்வை உங்களது । 

இந்திரா காந்தி ரேபரேலியில் தோற்ற சமயம் - முடிவு வந்தது பின்னிரவில் - நான் சிறு வயது - நன்கு தூங்கிக் கொண்டிருந்த மூத்த தமயனாரை எழுப்பி இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டேன் । அந்தளவு இந்திய அரசியல் இரத்தத்தில்  ஊறிக் கிடக்கு.

ஆம் இலங்கை அரசியலை போல இந்திய அரசியலும்   இலங்கைத்   தமிழருக்கு முக்கியமானது  தான் । எமது அடிப்படைப் பிரச்சனையின் தோற்றப்பாடே  இந்த அம்சத்திலிருந்து தானே எழுந்தது !.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

 

சிலருக்கு  ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் எது செய்தாலும் தவறுதான் என்று முட்டையில் மயிர் புடுங்குவதே வேலையாகி விட்டது. பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராகவர 22 வருடங்கள் எடுத்தது. அதுவரை அவர் மிக பொறுமையாகவே தனது அரசியலை மிகவும் அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்தார் . அது சிலருக்கு புரியவில்லை போல. சிலருக்கு தாங்கள் மட்டும்தான் பெரிய அரசியல் விற்பன்னர்கள் மற்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்றநினைப்பு. சீமான் செய்வது எல்லாம் சரியென்று இங்கு நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவருக்கிருக்கும் அரசியல் அறிவு (சுத்தமான) இங்கு குத்திமுறியும் பலருக்கு 1% கூட இல்லை. அதில் நக்கல் வேறை.

அதுசரி தமிழனை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலாவது வேற்று மாநிலத்தவர் முதலமைச்சராக வரமுடிந்ததா அல்லது முடியுமா? தமிழன்தான் இளிச்சவாய் கூட்டம் அவன் தலையில்தான் எல்லோரும் மிளகாய் அரைக்க வெளிக்கிடுகிறார்கள். இங்கும் சில கள உறவுகள் உட்பட.

தமிழகத்தில் பிரச்சனை சீமானின் பேச்சுக்களால் மட்டும் மாறிவிடப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போது ஒவ்வொரு தமிழனும் கிடைக்கும் இலவசங்களும் திறக்கப்படும் டாஸ்மார்க்குகளும் தங்கள் இனத்தை ஒரு உறங்கு நிலையில் வைத்திருக்க திராவிடக் காட்சிகள் செய்யும் மாயாஜாலமே என்று புரிந்து கொண்டு விழித்தெழுகிறார்களோ அன்றுவரை  தமிழக தமிழனை  அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

 

 

கோசான் மக்களவை தேர்தலில் ஸ்டாலின் வென்றது BJP க்கு  எதிரான தமிழக மக்களின் உணர்வலையே ஒழிய DMK யின் பெரும் வளர்ச்சியல்ல. சட்டமன்ற தேர்தலில் அவர்களால் அந்தளவு வெற்றியை பெறமுடியவில்லையே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.