Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

   கமலகாசனின் திரைப்படங்களை பார்த்து வீணீர் வடிக்கும் கூட்டம் அவருக்குத்தானே வாக்களிக்கும். கமலுக்கு ஒரு கூட்டம் ரஜனிக்கு ஒரு கூட்டம் விஜய் அஜித் என்று கட்டவுட்டுக்கு பால் ஊத்தும் கூட்டதை பல வலைத்தளங்களில் அதிகமாக பார்த்திருப்பீர்கள் தானே.....அதில் கொஞ்சமாவது இங்கும் இருக்கத்தானே செய்யும்.......🤣

2 hours ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

சீமான் கூடாது....வரவே கூடாது.........ஆனால் அந்தநாள்   தொடக்கம்  மூக்கு முட்ட கொள்ளையடிச்சு....கொள்ளையடிச்சு...ஜெயிலுக்கு போய் வந்தும் உத்தமர்களாக தெரிவது உங்களைப்போன்ற கண்களுக்குத்தான்.
வாழ்க ஊழல் கொள்ளை.

13 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

மாமேதைகள் உலாவும் தளத்தில் பட்டிக்காட்டானுக்கு என்ன வேலை??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

அவர், மோடி கவிழ்வார், காங்கிரஸ் மேலே வரும் எடப்பாடி அரசு டிஸ்மிஸ், அப்புறம் தேர்தல் என்று கணக்கு போட்டிருந்தார்.

ஆகவே இடைத்தேர்தலை விட, பாராளுமன்ற தேர்தலை நம்பினார். 

அரசனை நம்பி புரிசனை விட்ட கதை.

மாறாக, மிக துல்லியமாக, எவ்வளவு பணமும் இறைத்தாவது, இவ்வளவு சீட் வெல்ல வேணும் என திட்டம் போட்டு, சரியான தொகுதிகளை தெரிவு செய்து வென்றார் எடப்பாடி.

அவரை அசைக்முடியாது, அதேவேளை தனது வெற்றி வெறுமையானது என ஸ்ராலின் விரைவில் உணர்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் வெற்றி வெறுமையானதா இல்லையா என்பதை வெற்றிக்கு பின்னான வெற்றியாளரினதும், தோல்வியாளரினதும் அணுகுமுறையே தீர்மானிக்கும்.

மத்தியில், காங், சமாஜ்வாடி, பிஜேடி, பகுஜன்சமாஜ், மதச்சார்பற்ற ஜேடி, திரினாமூல், தெலுங்குதேசம் இப்படி பல கட்சிகளை இணைத்து தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட வேண்டும் என்பதே ஸ்டாலின் போன்றோரின் நிலையாக இருந்தது. இதற்காக ராகுலே பிரதமர் என்ற அளவுக்கு விட்டுக் கொடுக்க தயாராய் இருந்தார் ஸ்டாலின். ஆனால் உபியில் காங்கிரசுக்கு 2 சீட் ஒதுக்கியது, மம்தாவின் பிரதமர் கனவு,என சில விடயங்களால் இந்த முயற்சி பலிக்கவில்லை.

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இருக்கும் மவுசு (!),  பிஜேபி சொல்லும் சொல்லுக்கு எடப்பாடி அரசு ஒத்தூதும் போக்கு, அத்தனையும் தமிழகத்தை அடுத்த 2 ஆண்டில் ஸ்டாலின் பக்கம் திருப்பவே வாய்ப்பு அதிகம்.

அதை ஸ்டாலின் லாவகமாக கையாள்வாரா என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

Link to comment
Share on other sites

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

 

25 minutes ago, இசைக்கலைஞன் said:

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

 

உங்கள் வரவிற்கு நன்றி.
இனி இங்கும் முகநூலிலும் விஷ ஜந்துக்கள் அண்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நான் நம்பீட்டன் !!!😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

போறாரே...அவர் இல்லாமலா?

 

1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

அட்ரா..........அட்ரா.........அட்ரா.........அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.....:cool:

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

 

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

அட இந்த கூட்டம் இன்னும் இருக்கா? முன்பு சிலர் சில உண்மைத்தன்மையற்ற செய்திகைளை சொல்லி அதை உண்மை என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள் .எப்படி இதை உண்மை என்று சொல்கிறாய் என கேட்டால் அவர்கள் சொல்வது இன்ரர் நெற்றில் பார்த்தது என்று அதுவும் எந்த இணையத்தளதில் இருந்து என்றும் தெரியாது ஆக அவர்களுக்கு இன்ரர் நெற்றில் இருக்கிறதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். அதே மாதிரி இப்போ வாட்சப்பில் வருகிறது எல்லாம் உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க இப்படி வெல்லும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை 

வாக்குகளை களவாடி என்றாலும் 3 பா ஜா க கார்கள் தமிழகத்தில் 
வெல்லுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன்.

நாம் தமிழர் கட்சி முடிவு இந்தளவுக்கு நான் எதிர்பார்க்கவே இல்லை 
இது பெருத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.

ராகுல் காந்தி ... இந்த நேரு குடும்பம் தோத்து தோத்து 
அரசியலை விட்டே ஓட வேண்டும் என்று எதிர்பார்த்தேன் 
கொஞ்சம் என்றாலும் நடந்தது மகிழ்ச்சி.
பிரியங்கா என்பவர் கொழுத்த அடாவடி காரி சாதாரண 
மனிதர்களை மதிக்க கூட தெரியாதவர் இந்த தேர்தலுக்கு போட்ட 
நாடங்களை பார்த்து பார்த்து வயிறு எரிந்துகொண்டு இருந்தேன்.
நேரு குடும்பத்தை புறம் தள்ளிய காங்கிரஸ் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை. 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் கட்சியினர்  4.34 வீதமான வாக்குகளை பெற்றுக் கொண்டமையே..  வெற்றி தான்.
சீமான் முன்பு குறிப்பிட்டது போல்... தனது வாக்காளர்கள், பாடசாலையில் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாக்குப் போடும் வயது வரும் போது... தமது கட்சி ஆட் சியை பிடிக்கும் என்றார்.  அது உண்மையாகி வருகின்றது போலுள்ளது.

Link to comment
Share on other sites

இங்கு இருக்கும் சிலர் நாம் தமிழர் மீது திமுக காரர் அளவுக்கான காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது.. நான் கூட சீமானை  நண்பர்களிடத்தில் ஓட்டோ ஓட்டென ஓட்டுவேன்..அதற்காக கண்முன் தெரியும்  அவரின் கட்சியின் வளர்ச்சியினை மறுதலிப்பது நேர்மையற்ற அணுகுமுறை ..சீமான் கட்சி வெற்றி பெறவில்லை வளர்ச்சி இருக்கிறது ..இது அவர்களின் இரண்டாவது தேர்தல் ..கமலின் ஜனவசியத்துடன் சீமானை ஒப்பிட முடியாது இருந்தும் கமலின் கட்சி வாங்கிய மொத்த ஓட்டுகளை விட சீமானின் கட்சியினர் கிட்டத்தட்ட 1 லட்சம. வாக்குகள் அதிகம் 

சீமான் கட்சியில் நின்றோர் எவரும் 10ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் இல்லை கமல்கட்சியில்  ஆக்க்குறைந்த வாக்கு எண்ணிக்கை இருக்கு..

சீமானிற்கு முட்டும் கொடுக்க வேண்டாம் அவர்மேல் காழ்ப்பணர்வும் வேண்டாம் நாங்கள் பார்வையாளர்கள் தானே அவர்களின் அரசியலில் பங்காளர்கள் இல்லையே.. ஆரம்பத்தில் எல்லோரும் பிழை விடுவது உண்டு காலம்செல்ல செல்ல அவர்களாகவே திருந்தவும் சந்தர்ப்பம் உண்டு தானே..

சீமானையோ அவரின் கட்சியினையோ தவிர்த்து அல்லது தோற்கடித்து விட்டு தமிழக மக்கள் என்ன ஆபிரகாம் லிங்கனையோ அல்லது லீ குவான் யூ வையா கொண்டுவரப்போறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சி. Mainstream கட்சியாக வரவேண்டுமென்றால் நடுவுக்கு வரவேண்டும். பலரை அனுசரித்துப்போகவேண்டும். அப்படி சீமான் ஒரு நிலை எடுப்பாரா தெரியாது. தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டம் ஒருபோதும் ஐந்து வீதத்தைத் தேறாது!

விகிதாசார வாக்குமுறை இருக்குமட்டும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் நாம் தமிழர் கட்சி MP களையோ MLA களையோ கொண்டுவரமுடியாது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்த 2009இல் இலண்டனில் மாவீரர் நாள் நடந்தபோது, சீமான் வானலையூடாக உரையாற்ற வர நம்ம வாலுகள் அப்ப இருந்த சோகத்திலும் அடித்த விசில் இருக்கே. அது என்னால் மறக்கமுடியாது. இந்த விசிலடிச்சான் கூட்டங்கள் மக்களின் அவலங்களைத் தீர்க்க கடந்த பத்து வருடங்களில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தமுறை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுக்குப் போனபோதும், அங்கு கோஷம் வைத்த ஒரு சிலர் சீமானுக்குப் பின்னால் ஒன்றுதிரளவேண்டும் என்றனர். அப்படியானவர்கள் யாழ் களத்திலும் இருக்கத்தானே வேண்டும்.😃

 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

 புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான வாட்சப் பதிவை நீங்கள் இங்கு இணைத்து மேற்கோள் காட்டுவதுதான் நம்ப முடியாமல் உள்ளது. புலம்பெயர் தமிழர் வாழ்வாதராத்துக்காக பிச்சை எடுக்கும் முன்னாள் போராளிகளுக்கு கூட  பணம் அனுப்ப மறுக்கும் நிலையில் சீமானுக்கு அனுப்பினார்கள் என்று ஒரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால் அதை நம்புறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு என்றால் இதை எல்லம் எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சண்டமாருதன் said:

என்றுரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால்

அவர் என்னுடன் படித்தவார்தான்😀

ஆதாரம் இருக்கு என்று வேறு சொல்லியுள்ளார். கேட்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

சண்டமாருதன்,

வெகு எதார்த்தமான பார்வை உங்களது । 

இந்திரா காந்தி ரேபரேலியில் தோற்ற சமயம் - முடிவு வந்தது பின்னிரவில் - நான் சிறு வயது - நன்கு தூங்கிக் கொண்டிருந்த மூத்த தமயனாரை எழுப்பி இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டேன் । அந்தளவு இந்திய அரசியல் இரத்தத்தில்  ஊறிக் கிடக்கு.

ஆம் இலங்கை அரசியலை போல இந்திய அரசியலும்   இலங்கைத்   தமிழருக்கு முக்கியமானது  தான் । எமது அடிப்படைப் பிரச்சனையின் தோற்றப்பாடே  இந்த அம்சத்திலிருந்து தானே எழுந்தது !.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

 

சிலருக்கு  ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் எது செய்தாலும் தவறுதான் என்று முட்டையில் மயிர் புடுங்குவதே வேலையாகி விட்டது. பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராகவர 22 வருடங்கள் எடுத்தது. அதுவரை அவர் மிக பொறுமையாகவே தனது அரசியலை மிகவும் அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்தார் . அது சிலருக்கு புரியவில்லை போல. சிலருக்கு தாங்கள் மட்டும்தான் பெரிய அரசியல் விற்பன்னர்கள் மற்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்றநினைப்பு. சீமான் செய்வது எல்லாம் சரியென்று இங்கு நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவருக்கிருக்கும் அரசியல் அறிவு (சுத்தமான) இங்கு குத்திமுறியும் பலருக்கு 1% கூட இல்லை. அதில் நக்கல் வேறை.

அதுசரி தமிழனை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலாவது வேற்று மாநிலத்தவர் முதலமைச்சராக வரமுடிந்ததா அல்லது முடியுமா? தமிழன்தான் இளிச்சவாய் கூட்டம் அவன் தலையில்தான் எல்லோரும் மிளகாய் அரைக்க வெளிக்கிடுகிறார்கள். இங்கும் சில கள உறவுகள் உட்பட.

தமிழகத்தில் பிரச்சனை சீமானின் பேச்சுக்களால் மட்டும் மாறிவிடப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போது ஒவ்வொரு தமிழனும் கிடைக்கும் இலவசங்களும் திறக்கப்படும் டாஸ்மார்க்குகளும் தங்கள் இனத்தை ஒரு உறங்கு நிலையில் வைத்திருக்க திராவிடக் காட்சிகள் செய்யும் மாயாஜாலமே என்று புரிந்து கொண்டு விழித்தெழுகிறார்களோ அன்றுவரை  தமிழக தமிழனை  அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

 

 

கோசான் மக்களவை தேர்தலில் ஸ்டாலின் வென்றது BJP க்கு  எதிரான தமிழக மக்களின் உணர்வலையே ஒழிய DMK யின் பெரும் வளர்ச்சியல்ல. சட்டமன்ற தேர்தலில் அவர்களால் அந்தளவு வெற்றியை பெறமுடியவில்லையே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.