Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சீமான் பேசியது இனவாதம் கூட இல்ல. சாதி வாதம். சீமானைப் பொறுத்தமட்டில், வன்னியரும், தலித்களும், முக்குலத்தோரும், தன்சார்ந்த நாடாரும், கவுண்டரும்தான் தமிழர் என்ற ஒரு மிக குறுகிய சாதிய அடிப்படையில் இன அடையாளத்தை வரையறுக்கும் கொள்கையே சீமான் முதலில் சொன்னது. 

அன்று நாயக்க சாதியை, முதலியார், கோனார் சாதிகளை நீ தமிழன் இல்லை, வந்தேறி என்று விமர்சித்த சீமான் சொன்னது, மலையாளி எம்ஜிஆர், கன்னட பிராமணி ஜெயா, தெலுங்கு இசைவேளாளன் கருணாநிதி, கன்னட நாயக்கன் பெரியார் எல்லாரும் தமிழ் நாட்டை வேண்டும் என்றே வஞ்சித்து விட்டார்கள் என்பது. ஆனால் இவர்கள் யாரும் செய்யாத சரணாகதி அரசியலை நீட்டிலும், ஸ்ரெலைடிலும் பச்சை தமிழர்களான பன்னீரும் எடப்பாடியும் செய்தபோதே சீமானின் கொள்கை பிசுபிசுத்து விட்டது.

தமிழ்நாட்டை தமிழர் அல்லாதோர் மட்டுமல்ல அவர்களை விட நல்ல விலைக்கு தமிழர்களும் விற்பார்கள் என்பது தற்போது நிருபணாமாகி விட்டது. எனவே இனி சீமான் இந்த குதிரையில் ஏற முடியாது.

ஆகவேதான் அவர் சுருதி இப்போ மாறி விட்டது. 

 இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னம் சீமானை என்னளவுக்கு யாழில் எதிர்த்தோர் யாருமில்லை - ஆனால் சீமானிடம் அப்போது இருந்த வெளிப்படையான சாதிவாதம் இப்போது இல்லை.

இது சந்தர்பவாதம் என்பது வெளிபடையாக தெரிந்தாலும் இம்மாற்றம் நல்லதே.

சீமான் முதலில் பெரியாரை தூக்கி எறிந்தார், பின் கடவுள் மறுப்பு, இப்போ வந்தேறி அரசியல்லை தூக்கி தூர வைக்கிறார்.

தான் அரசியலில் முன்னுக்கு வர எதையும் செய்யும் அவர், இப்போ இந்திய தேசியத்தை தன் தம்பிகளுக்கு ஊட்டி வளர்பதாக பையனே சொல்கிறார்.

சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வருகிறார் என்று கிருபன் சொல்கிறார். சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வர, வரத்தான் அவர் முதலமைச்சர் கனவும் கிட்ட, கிட்ட வரும்.

அது கைகூடும் போது சீமான் தமிழ்தேசியத்தையும், மாநில சுயாட்சியையும் தலையசுற்றி வீசிவிட்டிருப்பார்.

சீமான் ஆட்சி அதிகாரத்தை கைபற்றும் போது, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயா எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட ஒரு இந்திய தேசிய காவலராகவே இருப்பார்.

ஆனால் இவரை ஒரு Trojan horse போல பாவித்து தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கலாம். 

அந்த வகையில் சீமானின் வளர்சி நல்லதே!

 

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

முன்னர் சீமான் பேசியது இனவாதம் கூட இல்ல. சாதி வாதம். சீமானைப் பொறுத்தமட்டில், வன்னியரும், தலித்களும், முக்குலத்தோரும், தன்சார்ந்த நாடாரும், கவுண்டரும்தான் தமிழர் என்ற ஒரு மிக குறுகிய சாதிய அடிப்படையில் இன அடையாளத்தை வரையறுக்கும் கொள்கையே சீமான் முதலில் சொன்னது. 

அன்று நாயக்க சாதியை, முதலியார், கோனார் சாதிகளை நீ தமிழன் இல்லை, வந்தேறி என்று விமர்சித்த சீமான் சொன்னது, மலையாளி எம்ஜிஆர், கன்னட பிராமணி ஜெயா, தெலுங்கு இசைவேளாளன் கருணாநிதி, கன்னட நாயக்கன் பெரியார் எல்லாரும் தமிழ் நாட்டை வேண்டும் என்றே வஞ்சித்து விட்டார்கள் என்பது. ஆனால் இவர்கள் யாரும் செய்யாத சரணாகதி அரசியலை நீட்டிலும், ஸ்ரெலைடிலும் பச்சை தமிழர்களான பன்னீரும் எடப்பாடியும் செய்தபோதே சீமானின் கொள்கை பிசுபிசுத்து விட்டது.

தமிழ்நாட்டை தமிழர் அல்லாதோர் மட்டுமல்ல அவர்களை விட நல்ல விலைக்கு தமிழர்களும் விற்பார்கள் என்பது தற்போது நிருபணாமாகி விட்டது. எனவே இனி சீமான் இந்த குதிரையில் ஏற முடியாது.

ஆகவேதான் அவர் சுருதி இப்போ மாறி விட்டது. 

 இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னம் சீமானை என்னளவுக்கு யாழில் எதிர்த்தோர் யாருமில்லை - ஆனால் சீமானிடம் அப்போது இருந்த வெளிப்படையான சாதிவாதம் இப்போது இல்லை.

இது சந்தர்பவாதம் என்பது வெளிபடையாக தெரிந்தாலும் இம்மாற்றம் நல்லதே.

சீமான் முதலில் பெரியாரை தூக்கி எறிந்தார், பின் கடவுள் மறுப்பு, இப்போ வந்தேறி அரசியல்லை தூக்கி தூர வைக்கிறார்.

தான் அரசியலில் முன்னுக்கு வர எதையும் செய்யும் அவர், இப்போ இந்திய தேசியத்தை தன் தம்பிகளுக்கு ஊட்டி வளர்பதாக பையனே சொல்கிறார்.

சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வருகிறார் என்று கிருபன் சொல்கிறார். சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வர, வரத்தான் அவர் முதலமைச்சர் கனவும் கிட்ட, கிட்ட வரும்.

அது கைகூடும் போது சீமான் தமிழ்தேசியத்தையும், மாநில சுயாட்சியையும் தலையசுற்றி வீசிவிட்டிருப்பார்.

சீமான் ஆட்சி அதிகாரத்தை கைபற்றும் போது, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயா எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட ஒரு இந்திய தேசிய காவலராகவே இருப்பார்.

ஆனால் இவரை ஒரு Trojan horse போல பாவித்து தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கலாம். 

அந்த வகையில் சீமானின் வளர்சி நல்லதே!

 

 

உங்க‌ளின் பார்வை த‌வ‌று / ஜாதியை வைத்து அண்ண‌ன் சீமான் ஒரு போதும் அர‌சிய‌ல் செய்த‌து இல்லை / ஆதார‌ம் இருந்தா காட்டுங்கோ , 

நான் எழுதின‌து , விஜேப்பி க‌ட்சியை சேர்ந்த‌  எச் ராஜா போன்ர‌ கூட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் ஒரு சில‌ர் , சீமான் பிரிவினைவாத‌ம் பேசுகிறார் என்று குற்ற‌ம் சாட்டினார்க‌ள் / அதுக்கு தான் நான் எழுதினேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் ( த‌ங்க‌ளின் நாடு இந்தியா என்று சொன்னார்க‌ள் என்று ) அண்ண‌ன் சீமானும் பார‌த‌ தேச‌ம் ப‌யிந் த‌மிழ‌ர் தேச‌ம் என்று பேசினார் என்று / அண்ண‌ன் சீமான் ஒன்றும் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தியும் சொல்லி குடுக்க‌ வில்லை ஜாதிவெறியையும் சொல்லி கொடுத்த‌தும் இல்லை / 
அவ‌ரின் கொள்கையை ஏற்று போன‌ பிள்ளைக‌ள் இன்றும் அவ‌ரோடு நிக்கிறார்க‌ள் /

த‌மிழ் நாட்டின் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக்கு 
அண்ண‌ன் சீமான் தான் முத‌ல் ஆளாய் போய் நிப்பார் /

குற்ற‌ சாட்டை வைக்கும் போது ஆதார‌த்தோடு வையுங்கோ / 
யாரோ இரு த‌ன் அண்ண‌ன் சீமானுக்கு எதிரா ஒரு ப‌திவு எழுதினா அது உண்மையாகி விடாது / 
 

Link to comment
Share on other sites

 
 
 
39 minutes ago, goshan_che said:

 

ஆனால் இவரை ஒரு Trojan horse போல பாவித்து தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கலாம். 

அந்த வகையில் சீமானின் வளர்சி நல்லதே!

சீமானால் வெறித்தனமாக காறி உமிழும் தமிழ்த் தேசியமல்லாது தமிழீத் தேசியத் தலைவரால் நடைமுறையில் செய்து காட்டப்பட்ட ஒரு தமிழ்த் தேசியம் ஒன்று மீண்டும் உருவாக வேண்டும். 

சீமானைப் பாவித்து தமிழ்த்தேசியத்தை கட்டியெழுப்ப முயல்வதில் தப்பில்லை. ஆனால் சீமானின் வேடம் வெளுக்கும் போது அதனிலிருந்து விடுபட்டு உண்மைத் தேசியத்தை உணரும் தெளிவுள்ள மக்கள் கூட்டமாக நாம் இருக்க வேண்டும்.

தமிழ்த்தேசியம் என்பது ஆயிரம் தடவை தமிழ்த் தேசியம் என்று சொல்வதில் இருந்து உருவாகுவதில்லை. அதனை அறிவுபூர்வமாக எப்படி கட்டியெழுப்புவது என்பதில்தான் உள்ளது. அதனைத்தான் தமிழீத் தேசியத் தலைவர் செய்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானுக்கு எதிரா க‌ருத்தை ப‌திவிடும் உங்க‌ளிட‌ம் வெளிப் ப‌டையாய் கேக்கிறேன் , 

த‌மிழீழ‌த்துக்கான‌ உங்க‌ளின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌ /

அல்ல‌து இப்ப‌டியே அடுத்த‌வையை குறை சொல்லி சொல்லி உங்க‌ளின் கால‌த்த‌ ஓட்ட‌ போறீங்க‌ளா /

2009ம் ஆண்டு மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌ ஆயுத‌ம் மெள‌வுன‌ம் க‌லைஞ்சு மீண்டும் த‌மிழீழ‌த்துக்காக‌ ஆயுத‌ போராட்ட‌ம் ந‌ட‌ந்தா போராட்ட‌ க‌ள‌த்தில் உங்க‌ளை இணைத்து கொள்ளுவீர்க‌ளா / 

இதுக்கு ப‌தில‌ சொல்லி போட்டு  அண்ண‌ன் சீமான‌ விம‌ர்ச‌ன‌ம் செய்யுங்கோ , உங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளு நான் த‌ய‌ங்காம‌ ப‌தில் அளிக்கிறேன் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நாம் தமிழர் கட்சி !
தேர்தலை நம்பி இல்லை என்ற மூலத்தையே மறந்துவிட்டு 
எப்படி சீமானை விமர்சிக்கிறீர்கள்?

தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கப்போகின்றார்களா? இல்லைத்தானே!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் தன்னாட்சிதானே. இதையெல்லாம் தேர்தல் இல்லாமல் புரட்சி செய்து கொண்டுவருவேன் என்று சொன்னது எனக்குத் தெரியாமல் போச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

த‌மிழீழ‌த்துக்கான‌ உங்க‌ளின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌ /

முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதால் அவர்களைக் கொண்டு போராட்டம் நடாத்தி முதலில் கிழக்கையும் பின்னர் வடக்கையும் கைப்பற்றி தமிழீழத்தை அடைவது.😬 போராடி வென்றால் தமிழீழத்தின் “அன்பான சர்வாதிகாரியாக” ஹிஸ்புல்லாவை ஏற்றுக்கொள்வது😆 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கப்போகின்றார்களா? இல்லைத்தானே!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் தன்னாட்சிதானே. இதையெல்லாம் தேர்தல் இல்லாமல் புரட்சி செய்து கொண்டுவருவேன் என்று சொன்னது எனக்குத் தெரியாமல் போச்சே!

ஆதார‌த்தை காட்டுங்கோ நீங்க‌ள் எழுதின‌து போல‌ அண்ண‌ன் சீமான் பேசின‌ காணொளியை , ந‌ன்றி 

4 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதால் அவர்களைக் கொண்டு போராட்டம் நடாத்தி முதலில் கிழக்கையும் பின்னர் வடக்கையும் கைப்பற்றி தமிழீழத்தை அடைவது.😬 போராடி வென்றால் தமிழீழத்தின் “அன்பான சர்வாதிகாரியாக” ஹிஸ்புல்லாவை ஏற்றுக்கொள்வது😆 

ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்காம‌ , நான் கேட்ட‌ கேள்விக்கு த‌குந்த‌ ப‌தில் அளியுங்கோ ப‌தில் அளிக்க‌ முடியா விட்டால் பேசாம‌ இருங்கோ ,  ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

ஆதார‌த்தை காட்டுங்கோ நீங்க‌ள் எழுதின‌து போல‌ அண்ண‌ன் சீமான் பேசின‌ காணொளியை , ந‌ன்றி 

சீமான் கையில் சிக்கிக்கிட்டு இந்தியநாடு என்ன பாடுபடும் என்று பாரு என்று தெளீவாச் சொல்றாரே!

காணொளியைப் பார்த்தவுடனே 40 தொகுதியும் கைக்குள்ள வந்தமாதிரி எகிறிச்சு!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

சீமான் கையில் சிக்கிக்கிட்டு இந்தியநாடு என்ன பாடுபடும் என்று பாரு என்று தெளீவாச் சொல்றாரே!

காணொளியைப் பார்த்தவுடனே 40 தொகுதியும் கைக்குள்ள வந்தமாதிரி எகிறிச்சு!😂

இதை தான் கொள்க‌ட்டா முத‌ல் அமைச்ச‌ர் Mamata Banerjee சொன்னா / இதில் சிரிக்க‌ என்ன‌  இருக்கு ,

 இந்திய‌ அர‌சிய‌ல் எப்போதும் ஒரு மாதிரி இருக்காது / 

இப்போது உள்ள‌ பாஜாக்காவின் ப‌ல‌ம் ஓட்டு இய‌ந்திர‌ம் தான் , 2014ம் ஆண்டு தேர்த‌லும் ச‌ரி 2019ம் ஆண்டு தேர்த‌லும் ச‌ரி நேர்மையா ந‌ட‌ந்த‌து இல்லை /

இந்தியா தேர்த‌ல் ஆனைய‌த்தில்
வேலை செய்த‌வ‌ர்க‌ள் உண்மையை வெளியில் சொல்ல‌ மோடி அர‌சால் ஒரு சில‌ர் கொல்ல‌  ப‌ட்ட‌வை /
அதில் த‌ப்பிய‌  ஒரு சில‌ர் அமெரிக்காவில் த‌ஞ்ச‌ம் புகுந்து உண்மையை வெளியிட்ட‌வை அமெரிக்கா ஊட‌க‌ம் மூல‌ம் , 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பையன்26,

அது கொல்கத்தா முதல்வரல்ல, மேற்குவங்க முதல்வர்.

நீங்கள் சீமான் சாதி பேதம் வளர்ததுக்கு ஆதாரம் கேட்பதை நினத்தால் உண்மையிலேயே என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குறிப்பிட்ட சாதித் தலைவர்களை மேடை தோறும் அவர்கள் தமிழர்களே இல்லை என்று கூறினாரே?

பெரியார் கன்னட நாயக்கன், அண்ணா தெலுங்கு முதலியார், வைகோ தெலுங்கு நாயக்கன் என அவர்களை தமிழர் இல்லை என்றாரே?

300 வருடங்களாக தமிழ்நாட்டில், தமிழ் மட்டுமே பேசி வளர்ந்த எத்தனை இச்சாதி மக்கள் நெஞ்சில் அது ஈட்டியாய் பாய்ந்திருக்கும்?

ராமதாசு செய்வது சாதி அரசியல் இல்லை என்றாரே?

இமானுவேல் சேகரன் தனக்கு அருகில் உட்கார்ந்து விட்டார் என்பதற்க்கா அவரை கொல்ல வைத்த சாதி வெறியன் முத்து ராமலிங்கனை இன்று வரை போற்றுகிறாரே?

இந்திராவிக்கு கூஜா தூக்கிய காமராசரை நாடார் என்பதுக்காக தூக்கி பிடிக்கும் சீமான், இட ஒதுக்கீட்டு நாயகன் பெரியாரை துஸ்டனாக சித்தரிக்கிறாரே?

இன்னும் கனக்க இருக்கு ராசா. 

முளைச்சு மூணு இலை விடாத நீங்கள் எல்லாம் வைகோவை தரம்தாழ்தி பேசுமாறு வைத்துள்ளாரே.

ராசா,

நாங்கள் எல்லாம் கிளாகிகிலாயும், கொம்படிக்கிளாலயும் ஓடி வந்த 91-97 காலத்தில், வைகோ, அத்தனை கெடுபிடிக்கும் மத்தியில் தன் கலிங்கபட்டி வீட்டில் வைத்து எத்தனை போராளிகளுக்கு மருத்துவம் பார்த்தார் என்பதை விபரம் அறிந்தோரிடம் கேட்டு அறியுங்கள்.

என்நன்றி கொன்றார்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொண்ட மகர்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

goshan Che 

உங்க‌ளுக்கு நான் வைக்கோவை ப‌ற்றி எழுதுவ‌து எப்ப‌டி க‌ச‌க்குதோ அதே போல‌ தான் நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுதும் போது  / 
வைக்கோ அருகில் மாத்தையா கூட‌ தானே நின்றான் / அவ‌னின் செய‌ல் பாடு பின்னாளில் எப்ப‌டி இருந்த‌து  / விஞ்ஞான‌ம் பெரிசா வ‌ள‌ராத‌ கால‌த்தில் இந்திய‌ன் உள‌வுதுறைக்கு த‌க‌வ‌ல் மாத்தையாவால் எப்ப‌டி குடுக்க‌ முடிஞ்ச‌து /

ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவை த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் புக‌ழ்ந்து பேசின‌ அல‌வுக்கு வைக்கோவை ப‌ற்றி த‌லைவ‌ர் பேச‌ வில்லை / காணொளி வேனும் என்றால் இணைக்கிறேன் , 

போன‌ நூற்றாண்டை ப‌ற்றி ஏன் எழுதுவான்  , இந்த‌ நூற்றாண்டுக்கு வ‌ருவோம் , 

உங்க‌ ஆள் வைக்கோவிட‌ம் கேலுங்க‌ள் திராவிட‌ம் பெரிசா த‌மிழீழ‌ம் பெரிசா என்று , 

2014ம் ஆண்டு மோடியோடு கூட்ட‌னி வைக்கும் போது தெரிய‌ வில்லையா வைக்கோவுக்கு விஜேப்பி ம‌த‌வாத‌ க‌ட்சி என்று ,

2019ம் ஆண்டு தேர்த‌லில் விஜேப்பி க‌ட்சி கார‌ங்க‌ள் த‌மிழ் நாட்டில் தோல்வியை ச‌ந்திக்கேக்க‌  ம‌ட்டும் தான் (பெரியார் ம‌ண்ணில் ம‌த‌வாத‌ கூட்ட‌த்துக்கு இட‌ம் இல்லை ) இது வைக்கோவின் ஆக‌ சிற‌ந்த‌ காமெடி /  

திராவிட‌ம் என்றாலே திருட்டு பித்த‌ல் ஆட்ட‌ம் , இது தானே திராவிட‌ம்  , ர‌யில் வ‌ராத‌ த‌ண்டாவால‌த்தில் த‌லையை வைத்து அர‌சிய‌ல் செய்வ‌து /

வைக்கோ ந‌ம்ப வைச்சு க‌ழுத்து அறுத்த‌ குள்ள‌ ந‌ரி /
2006ம் ஆண்டை திரும்பி பாருங்கோ , வைக்கோ சொன்ன‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு ந‌ட‌ந்தா தமிழ் நாட்டில் இர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
2009ம் ஆண்டு எம் இன‌ம் எம் க‌ண் முன்னே அழியும் போது இந்த‌ வைக்கோ என்ன‌ செய்தார் /

நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடே இருக்காது , இது இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் வைக்கோ சொன்ன‌து

வைக்கோவின் த‌லைவ‌ர்க‌ள் அடைஞ்சா திராவிட‌ நாடு இல்லை சுடு காடு , 

இந்த‌ திருட‌ர்க‌ளால் தான் எங்க‌ளுக்கு த‌னி நாடு கிடைக்க‌ த‌ட‌ங்க‌ள் ஏற்ப‌ட்ட‌து , இல்லாட்டி இந்திரா காந்தி அம்மையார் கால‌த்திலே த‌மிழீழ‌ம் கிடைச்சு இருக்கும் ,  திராவிட‌ நாட்டு போராட்ட‌ம் த‌மிழீழ‌த்துக்கு எதிரா அமைந்து விட்ட‌து /

வ‌ய‌தில் சிறிய‌வ‌னா இருந்தாலும் என‌க்கும் ப‌ல‌ வ‌ரலாறுக‌ள் தெரியும் / 

அடுத்த‌வை என‌க்கு பாட‌ம் எடுப்ப‌தை நான் ஒரு போதும் விரும்புவ‌து இல்லை , தெரியாத‌த‌ ஏதோ ஒன்றை த‌ட்டி தெரிந்து கொள்ளுவேன் 

 

வைக்கோ ஒரு எச்ச‌ 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

சீமான், ஆவேசமாக பேசிய பல காணொளிகள் உள்ளன.

தெலுங்கன் என்னடா, தமிழனை ஆளுவது, விஜயகாந்த் எப்படி எம்மை ஆளுவது என்பது போன்ற பல வசனங்களை பேசி உள்ளார்.

ஆரம்பத்தில், அவரது பேச்சில், வேகம் இருந்த அளவுக்கு, நிதானம் இருக்கவில்லை.

பலர் வெகுண்டார்கள். வைக்கோ போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவர் வந்தால், நமக்கு ஆபத்தோ என்று பல தமிழர் அல்லாதோர் பயந்தனர். மலையாளிகள், தெலுங்கர்கள் இந்த பயத்தினை வெளிக்காட்டினர்.

இந்த நிலைமை சீமான் தனி மனிதனாக தொடங்கி ஆரம்பித்த போது காணப்பட்டது.

விரைவிலேயே, அவரினை சரியாக அடையாளம் கண்டு கொண்ட ஒரு அறிவு சார் கூட்டம் ஒன்று, அவர் நெருங்கி, நெறிப்படுத்த தொடங்கியது.

இந்த கூட்டத்தின் பங்களிப்பினால், சீமான் தனது நிலைப்பாடு  குறித்த, தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டி வந்தது.

இப்போதெல்லாம், அந்த வகையான பேச்சுக்கள் இல்லை.

ஆரம்பத்தில்,  இவரது பேச்க்கள் காரணமாகவே அவர் வளர மாட்டார் என நினைத்த பெரிய கட்சிகள் இன்று அவரை ஒரு தீர்க்கமான எதிரியாக பார்க்கின்றன.

இன்று சத்தியம் டிவி பேட்டி. அதே ஆளுடன் கடைசியாக நிகழ்ந்த பேட்டியில், சீமானின் கருத்து, மலையாளி ஆகிய தன்னை யோசிக்க வைக்கிறது என்று தனது பயத்தினை நேரடியாகவே சொன்னார்.

இன்று அதே ஆளிடம் சீமான் சொல்கிறார், அனுபவம், முதிர்ச்சி காரணமாக நாம் தெளிவினை பெற்று, நிலைப்பாட்டினை மாத்தி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இருந்த ஆவேச சீமான் இன்றும் இருக்கிறார், ஆனால் அவரது கருத்தில், தெளிவு, விவேகம் காணப்படுகின்றது.

அடுத்ததாக, நம்மில் பலர், பிரபாகரனை தூக்கிப் பிடிப்பதால், அவர் தமிழீழம் பிடித்து தருவதாக சொல்லி புலம் பெயர் மக்களிடம் பணம் வாங்குகிறார் என்று கருதுகிறார்கள். 

இந்த கருத்தை உள்வாங்கியே, வைக்கோவும் கருத்து வெளியிட்டார்..

அது உண்மையல்ல என்பது நிதானமாக சிந்திப்பவர்களுக்கு புரியும். புலம் பெயர் தமிழர் பணம் அனுப்பலாம், விடலாம், அது வேறு.

ஆனால், உண்மையான காரணம், தமிழகத்தின் சாதிய தீண்டாமை.

சீமான் தன்னை தலைவனாக முன் நிறுத்தினால், அவரது சாதியை சொல்லி எதிராளிகள் அரசியல் செய்வார்கள்.

தமிழர் இல்லாத, வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவரை, சாதியத்துக்கு அப்பால் தலைவராக ஏற்க தயாரான தமிழகம், தம்மில் ஒருவரை ஏற்கத் தயங்குகிறது. இதுவே, எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் வசதியானது. ரஜனி முதலமைச்சர் கதிரையினை ஆசையுடன் பார்க்கும் காரணமும் இதுவே.

பிரபாகரனை, ஒரு வெளிநாட்டவரை, தலைவராக காட்டும் போது, அது சாதியத்தினை கடந்து சிலரால் ஏற்கப் படுகினறது. பிரபாகரன் அவர் எந்த சாதி என்பதனை, அவர் வெளி நாட்டவர் என்பதனால் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று தோன்றுகினறது. மேலும் அவர் ஒரு தமிழர் என்பது முக்கியமானதாகின்றது.

இதே சீமான், முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன், என்று கிளம்பி இருந்தால், 'நாம் தமிழர்' கட்சி பெயர், நாம் தேவர் போன்ற பெயரில் ஒரு சாதிக்கட்சியாக மாறி இருக்கும். 'வன்னியர் கட்சி' யாக ஆரம்பித்தார், ராமதாஸ்.  கட்சி பெயரை மாத்தினாலும், குத்தப்படட சாதிய முத்திரை, நீக்கப்பட முடியாமல் தத்தளிக்கிறது.

பிரபாகரனை தலைவனாக கொண்டதாக கட் சி ஆரம்பிக்க, சீமான் செலுத்திய விலை சிறை. ஆனாலும் அது சிறந்த முடிவாக உள்ளது.

இந்த யதார்த்தம் புரியாமல், பிரபாகரனை ஏன் தலைவராக கொண்டுள்ளார்கள் என்று புரியாமல், பலர், இவர் எமக்கு ஈழம் பிடித்து தர தான் அவ்வாறு செய்துள்ளார் என்பதும், அந்த வகையில் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும், முதிர்சியானதாக தெரியவில்லை.

அவர்களது மக்களின் அவலத்தினை போக்க, நமது நாட்டினை சேர்ந்த ஒருவர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்ற வகையில் பார்த்தால், வேறு குழப்பங்கள் வராது.

நமது நாட்டில் கூட, காந்திய போராட்டம், தமிழர் விடுதலை கூட்டணி கட்சி கொடியாக உதய சூரியன் என்று இந்தியாவில் இருந்து எடுத்தோமே. அங்கே யாருமே பினாத்தவில்லையே. நாம் மட்டும் ஏன்?

எம்மை பொறுத்த வரை, சீமான் வென்றால் மகிழ்ச்சி. வென்றால், தென் இந்திய முதல்வர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் ஆதரவினையும் பெற்று, இந்திய மத்திய அரசின் கொள்கை முடிவினை மாத்த முடிந்தால் நன்று. 

காலமாகலாம். ஆனாலும் நமது போராட்டம் ஒரு தனிமனிதனை நம்பி இல்லையே. அது 2020ம் ஆண்டு 500 வருட, போர்த்துக்கேயருடன் ஆரம்பித்த அடிமைத்தனத்தினை கொண்டாட போகின்றது.

இந்த 500 வருடத்தில் நாமும் வாழும் இந்த காலப்பகுதியும் கடந்து போகும்.

காலம் என்ன வைத்திருக்கிறதோ தெரியாது. ஆகவே சொல்ல வருவது என்னவென்றால், தமிழகத்து அரசியலை, தனியாக, அந்த மாநில அரசியலாக மட்டுமே பாருங்கள். அதனுடன், ஈழத்து அரசியலை சேர்த்து பார்க்காதீர்கள்.

    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

கிருபன்,

சீமான், ஆவேசமாக பேசிய பல காணொளிகள் உள்ளன.

தெலுங்கன் என்னடா, தமிழனை ஆளுவது, விஜயகாந்த் எப்படி எம்மை ஆளுவது என்பது போன்ற பல வசனங்களை பேசி உள்ளார்.

ஆரம்பத்தில், அவரது பேச்சில், வேகம் இருந்த அளவுக்கு, நிதானம் இருக்கவில்லை.

பலர் வெகுண்டார்கள். வைக்கோ போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவர் வந்தால், நமக்கு ஆபத்தோ என்று பல தமிழர் அல்லாதோர் பயந்தனர். மலையாளிகள், தெலுங்கர்கள் இந்த பயத்தினை வெளிக்காட்டினர்.

இந்த நிலைமை சீமான் தனி மனிதனாக தொடங்கி ஆரம்பித்த போது காணப்பட்டது.

விரைவிலேயே, அவரினை சரியாக அடையாளம் கண்டு கொண்ட ஒரு அறிவு சார் கூட்டம் ஒன்று, அவர் நெருங்கி, நெறிப்படுத்த தொடங்கியது.

இந்த கூட்டத்தின் பங்களிப்பினால், சீமான் தனது நிலைப்பாடு  குறித்த, தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டி வந்தது.

இப்போதெல்லாம், அந்த வகையான பேச்சுக்கள் இல்லை.

ஆரம்பத்தில்,  இவரது பேச்க்கள் காரணமாகவே அவர் வளர மாட்டார் என நினைத்த பெரிய கட்சிகள் இன்று அவரை ஒரு தீர்க்கமான எதிரியாக பார்க்கின்றன.

இன்று சத்தியம் டிவி பேட்டி. அதே ஆளுடன் கடைசியாக நிகழ்ந்த பேட்டியில், சீமானின் கருத்து, மலையாளி ஆகிய தன்னை யோசிக்க வைக்கிறது என்று தனது பயத்தினை நேரடியாகவே சொன்னார்.

இன்று அதே ஆளிடம் சீமான் சொல்கிறார், அனுபவம், முதிர்ச்சி காரணமாக நாம் தெளிவினை பெற்று, நிலைப்பாட்டினை மாத்தி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இருந்த ஆவேச சீமான் இன்றும் இருக்கிறார், ஆனால் அவரது கருத்தில், தெளிவு, விவேகம் காணப்படுகின்றது.

அடுத்ததாக, நம்மில் பலர், பிரபாகரனை தூக்கிப் பிடிப்பதால், அவர் தமிழீழம் பிடித்து தருவதாக சொல்லி புலம் பெயர் மக்களிடம் பணம் வாங்குகிறார் என்று கருதுகிறார்கள். 

இந்த கருத்தை உள்வாங்கியே, வைக்கோவும் கருத்து வெளியிட்டார்..

அது உண்மையல்ல என்பது நிதானமாக சிந்திப்பவர்களுக்கு புரியும். புலம் பெயர் தமிழர் பணம் அனுப்பலாம், விடலாம், அது வேறு.

ஆனால், உண்மையான காரணம், தமிழகத்தின் சாதிய தீண்டாமை.

சீமான் தன்னை தலைவனாக முன் நிறுத்தினால், அவரது சாதியை சொல்லி எதிராளிகள் அரசியல் செய்வார்கள்.

தமிழர் இல்லாத, வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவரை, சாதியத்துக்கு அப்பால் தலைவராக ஏற்க தயாரான தமிழகம், தம்மில் ஒருவரை ஏற்கத் தயங்குகிறது. இதுவே, எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் வசதியானது. ரஜனி முதலமைச்சர் கதிரையினை ஆசையுடன் பார்க்கும் காரணமும் இதுவே.

பிரபாகரனை, ஒரு வெளிநாட்டவரை, தலைவராக காட்டும் போது, அது சாதியத்தினை கடந்து சிலரால் ஏற்கப் படுகினறது. பிரபாகரன் அவர் எந்த சாதி என்பதனை, அவர் வெளி நாட்டவர் என்பதனால் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று தோன்றுகினறது. மேலும் அவர் ஒரு தமிழர் என்பது முக்கியமானதாகின்றது.

இதே சீமான், முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன், என்று கிளம்பி இருந்தால், 'நாம் தமிழர்' கட்சி பெயர், நாம் தேவர் போன்ற பெயரில் ஒரு சாதிக்கட்சியாக மாறி இருக்கும். 'வன்னியர் கட்சி' யாக ஆரம்பித்தார், ராமதாஸ்.  கட்சி பெயரை மாத்தினாலும், குத்தப்படட சாதிய முத்திரை, நீக்கப்பட முடியாமல் தத்தளிக்கிறது.

பிரபாகரனை தலைவனாக கொண்டதாக கட் சி ஆரம்பிக்க, சீமான் செலுத்திய விலை சிறை. ஆனாலும் அது சிறந்த முடிவாக உள்ளது.

இந்த யதார்த்தம் புரியாமல், பிரபாகரனை ஏன் தலைவராக கொண்டுள்ளார்கள் என்று புரியாமல், பலர், இவர் எமக்கு ஈழம் பிடித்து தர தான் அவ்வாறு செய்துள்ளார் என்பதும், அந்த வகையில் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும், முதிர்சியானதாக தெரியவில்லை.

அவர்களது மக்களின் அவலத்தினை போக்க, நமது நாட்டினை சேர்ந்த ஒருவர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்ற வகையில் பார்த்தால், வேறு குழப்பங்கள் வராது.

நமது நாட்டில் கூட, காந்திய போராட்டம், தமிழர் விடுதலை கூட்டணி கட்சி கொடியாக உதய சூரியன் என்று இந்தியாவில் இருந்து எடுத்தோமே. அங்கே யாருமே பினாத்தவில்லையே. நாம் மட்டும் ஏன்?

எம்மை பொறுத்த வரை, சீமான் வென்றால் மகிழ்ச்சி. வென்றால், தென் இந்திய முதல்வர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் ஆதரவினையும் பெற்று, இந்திய மத்திய அரசின் கொள்கை முடிவினை மாத்த முடிந்தால் நன்று. 

காலமாகலாம். ஆனாலும் நமது போராட்டம் ஒரு தனிமனிதனை நம்பி இல்லையே. அது 2020ம் ஆண்டு 500 வருட, போர்த்துக்கேயருடன் ஆரம்பித்த அடிமைத்தனத்தினை கொண்டாட போகின்றது.

இந்த 500 வருடத்தில் நாமும் வாழும் இந்த காலப்பகுதியும் கடந்து போகும்.

காலம் என்ன வைத்திருக்கிறதோ தெரியாது. ஆகவே சொல்ல வருவது என்னவென்றால், தமிழகத்து அரசியலை, தனியாக, அந்த மாநில அரசியலாக மட்டுமே பாருங்கள். அதனுடன், ஈழத்து அரசியலை சேர்த்து பார்க்காதீர்கள்.

    

அருமையான‌ விள‌க்க‌ம் , ந‌ன்றி உற‌வே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கப்போகின்றார்களா? இல்லைத்தானே!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் தன்னாட்சிதானே. இதையெல்லாம் தேர்தல் இல்லாமல் புரட்சி செய்து கொண்டுவருவேன் என்று சொன்னது எனக்குத் தெரியாமல் போச்சே!

தமிழரை தமிழராக தலைநிமிர்ந்து நிற்க செய்வதுதான் 
இன்றைய தேவையும் நாம்தமிழரின் புரட்ச்சியும்.

தமிழ் நாட்டை கூறுபோட்டு விற்கும் போலி திராவிட வாதிகளை 
அரசியலில் இருந்து ஓரம் கட்ட தேர்தலில் நிற்கவேண்டும் 
ஆளும் தரப்பில் உணர்வு உள்ள உண்மையான தமிழர்கள் இருந்து இருப்பின் 
நாம் தமிழர் என்று ஒரு கட்சியே உருவாகி இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அபராஜிதன் said:

இசைக்கலைஞன் அண்ணருக்கு பிறகு யாழில் இன்னொரு சீமானின் கடின சாவு விசிறி 

அவ்வளவு தான், 

Die hard fan? 😂 மொழிமாற்றம் தூள்பறக்கிறது.

பையன்26,

உங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. வைகோ எனது ஆளும் இல்லை. வைகோ மாத்தையாவுடன் நிக்கிறார் ஆகவே அவர் மூலம்தான் இந்தியச் சதி நிறைவேறி இருக்கும் என்பது போல் குழந்தைதனமாக நீங்கள் எழுதுவதை பார்த்தால் எந்த வகுப்புபெடுப்பும் உங்களுக்கு உதவாது என்பது புரிகிறது.

ஒரு வீடியோ யுடீப்பில் கூட இருக்கிறது. வைகோவுக்கு மாத்தையாவை பிரபா அறிமுகம் செய்கிறார். நல்லவேளை இதனடிப்படையில், பிரபா தனக்கெதிரான சதிக்கு, தானே திட்டமிட்டார் என்று எழுதாமல் விட்டீர்கள். 

மாத்தையா விடயம் நடந்தது 1992 இல். 2009 வரை வைகோவுடன் நல்லுறவு வைத்திருந்தார் பிரபா. அப்போ 17 வருடம் பிரபாவாலேயே இனம் காணப்பட முடியாத வைகோவின் துரோகத்தை இப்போ சீமான் கண்டு பிடித்துவிட்டார், அப்படித்தானே?

வைகோவின் தகிடுதத்தங்கள் உலகறிந்த விடயம். ஒரு போர்வாள் துருபிடித்து அழிந்தது என நானே யாழில் அவரை பற்றி எழுதியுள்ளேன். ஆனால் நெடுமாறனுக்கு அடுத்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விடயத்தில் மாறாத கொள்கையுடன் இன்றுவரை பயணிக்கும் ஒருவர் என்றால் அது வைகோ மட்டுமே.

ஒரு கணம் சிந்தித்து பார்த்தேன். புலிகள் இப்போதும் இருந்து, நீங்கள் வன்னியில் போய் பொது வெளியில் வைகோ ஒரு எச்சை என்று எழுதி இருந்தால் உங்கள் நிலை என்னவாகி இருக்கும் என்று. 

இதுதான் சீமான் தம்பிகளை வளர்த்தெடுக்கும் விதம். பிரபாகரனின் மாவீரர் தின பேனருக்கு முன்பாக, கமெராவை செட் பண்ணி ஒரு பெண்ணை பாலியல் இம்சை செய்கிறார் ஒரு தம்பி. கெட்ட வார்தையில் போன் போட்ட நாயக்க இளைஞனை திட்டுகிறார் சீமான். ஒரு கோரிக்கை வைக்கும் தன் தொண்டரை கெட்ட வார்தையால் திட்டுகிறார். சமூக வலைத்தளம் எங்கும் இவர்களின் ஆபாச அடாவடிதான்.

ஒரு கட்டுபட்டியான இனத்தில் இருந்து வந்த ஆயிரம் ஆயிரம் சகோதரிகளை, ஒரு ஒற்றை மனிதனதும் அவர் தம் இயக்கத்தினதும் கட்டுக்கோப்பும் கண்ணியமும் அவப் பெயரின் நிழல் கூட படாமல் கட்டிக் காப்பாற்றியதையும், அனிதா பிரதாப் முதல் பலர் போற்றும் கண்ணியம் மிக்க ஆயிரம் ஆயிரம் துடிப்புள்ள இளைஞர்களையும் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.

புலிகளின் தலைமை மீது விமர்சனத்தை வைக்கும் எனக்கே, இந்த காவாலிக் கூட்டம் அவர்களின் படங்களை, இலச்சினையை பயன்படுத்துவதை காணச் சகிக்கவில்லை. அவர்கள் மீது குருட்டுப் பக்தி கொண்ட உங்களால் இதை எப்படி ஏற்க முடிகிறதோ நானறியேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2019 at 11:03 PM, பையன்26 said:

இல்லாட்டி இந்திரா காந்தி அம்மையார் கால‌த்திலே த‌மிழீழ‌ம் கிடைச்சு இருக்கும்

தரமான நகைச்சுவைக்கு நன்றி.

கடைசியாக ஒன்று வைகோவின் பித்தலாட்டங்களுக்கும் சீமான் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என சொல்லி ஜெயலலிதாவுக்கும் வாக்கு கேட்டதுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைக்கு ஜெயலலிதா எனும் கன்னட பிராமணப்பெண் தமிழ் நாட்டை வஞ்சித்துவிட்டார், அதிமுக எனும் திராவிட கட்சி தமிழ்நாட்டை சீரழித்தது, திருட்டுத் திராவிடம் ஈழம் அமைவதை தடுத்தது எனும் சீமானுக்கு, இவை எல்லாம் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் போது தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

47 minutes ago, goshan_che said:

Die hard fan? 😂 மொழிமாற்றம் தூள்பறக்கிறது.

பையன்26,

உங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. வைகோ எனது ஆளும் இல்லை. வைகோ மாத்தையாவுடன் நிக்கிறார் ஆகவே அவர் மூலம்தான் இந்தியச் சதி நிறைவேறி இருக்கும் என்பது போல் குழந்தைதனமாக நீங்கள் எழுதுவதை பார்த்தால் எந்த வகுப்புபெடுப்பும் உங்களுக்கு உதவாது என்பது புரிகிறது.

ஒரு வீடியோ யுடீப்பில் கூட இருக்கிறது. வைகோவுக்கு மாத்தையாவை பிரபா அறிமுகம் செய்கிறார். நல்லவேளை இதனடிப்படையில், பிரபா தனக்கெதிரான சதிக்கு, தானே திட்டமிட்டார் என்று எழுதாமல் விட்டீர்கள். 

மாத்தையா விடயம் நடந்தது 1992 இல். 2009 வரை வைகோவுடன் நல்லுறவு வைத்திருந்தார் பிரபா. அப்போ 17 வருடம் பிரபாவாலேயே இனம் காணப்பட முடியாத வைகோவின் துரோகத்தை இப்போ சீமான் கண்டு பிடித்துவிட்டார், அப்படித்தானே?

வைகோவின் தகிடுதத்தங்கள் உலகறிந்த விடயம். ஒரு போர்வாள் துருபிடித்து அழிந்தது என நானே யாழில் அவரை பற்றி எழுதியுள்ளேன். ஆனால் நெடுமாறனுக்கு அடுத்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விடயத்தில் மாறாத கொள்கையுடன் இன்றுவரை பயணிக்கும் ஒருவர் என்றால் அது வைகோ மட்டுமே.

ஒரு கணம் சிந்தித்து பார்த்தேன். புலிகள் இப்போதும் இருந்து, நீங்கள் வன்னியில் போய் பொது வெளியில் வைகோ ஒரு எச்சை என்று எழுதி இருந்தால் உங்கள் நிலை என்னவாகி இருக்கும் என்று. 

இதுதான் சீமான் தம்பிகளை வளர்த்தெடுக்கும் விதம். பிரபாகரனின் மாவீரர் தின பேனருக்கு முன்பாக, கமெராவை செட் பண்ணி ஒரு பெண்ணை பாலியல் இம்சை செய்கிறார் ஒரு தம்பி. கெட்ட வார்தையில் போன் போட்ட நாயக்க இளைஞனை திட்டுகிறார் சீமான். ஒரு கோரிக்கை வைக்கும் தன் தொண்டரை கெட்ட வார்தையால் திட்டுகிறார். சமூக வலைத்தளம் எங்கும் இவர்களின் ஆபாச அடாவடிதான்.

ஒரு கட்டுபட்டியான இனத்தில் இருந்து வந்த ஆயிரம் ஆயிரம் சகோதரிகளை, ஒரு ஒற்றை மனிதனதும் அவர் தம் இயக்கத்தினதும் கட்டுக்கோப்பும் கண்ணியமும் அவப் பெயரின் நிழல் கூட படாமல் கட்டிக் காப்பாற்றியதையும், அனிதா பிரதாப் முதல் பலர் போற்றும் கண்ணியம் மிக்க ஆயிரம் ஆயிரம் துடிப்புள்ள இளைஞர்களையும் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.

புலிகளின் தலைமை மீது விமர்சனத்தை வைக்கும் எனக்கே, இந்த காவாலிக் கூட்டம் அவர்களின் படங்களை, இலச்சினையை பயன்படுத்துவதை காணச் சகிக்கவில்லை. அவர்கள் மீது குருட்டுப் பக்தி கொண்ட உங்களால் இதை எப்படி ஏற்க முடிகிறதோ நானறியேன்.

🤣🤣

எனக்கு சீமான் மற்றும் வைகோ அல்லது வேறு எந்த தமிழக  தலைவர் மீதும் விமர்சனத்துடன் கூடிய பார்வையே உண்டு..அதனால் கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் எல்லா பேச்சுகள்/ நடவடிக்கைகளிற்கு முட்டு கொடுப்பவர்களை எதிர்க்கிறேன்..நல்லது செய்யும் போது பாராட்டுங்கள் / மற்றவற்றை விமர்சியுங்கள் அது அவர்களை செம்மை படுத்தும்,  அண்மையில் நாம் தமிழர் கட்சியின் இரத்ததானம் / மற்றும ஆடு மாடுகளிற்கான தண்ணீர் தொட்டி / குளம்/ ஏரி சீர்படுத்தல்கள் வலைதளங்களில் பராட்டை பெற்றுள்ளன 

நாங்கள் எப்படி எங்களின் அரசியல் தேவைக்கு அவர்களை பயன்படுத்துகிறோமோ அதே போல அவர்களும் எங்களை  பயன் படுத்துகிறார்கள்

போராட்ட ஆரம்பத்தில் எங்களிற்கு உதவிய குளத்தூர் மணி போன்றவர்கள் ஆரம்ப கால வைகோ போன்றவர்கள் தான் எந்த பிரதிபலன் பராது எங்களிற்கு குரல் கொடுத்தார்கள் ..இப்போதைய நிலை எல்லாமே வாக்குகளிற்காகவே ..ஆனால் எங்கள் பற்றிய அனுதாபம் ஆதரவு நிலைக்கு தமிழ் நாட்டில் உண்மையாகவே  வாக்கு வங்கி உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு 

சீமான் இன்னும் இன்னும் கிராம மக்களிடமும் வளர்ந்து வரும் தலைமுறையுடனும் செல்வாராகின் அவரால் இன்னும் தன் நிலையை வலுப்படுத்த முடியும் .. கொடுக்கும் பேட்டிகளில் பேசும் பேச்சுகளில் அதிக கவனம் எடுத்தல் வேண்டும் .. இப்போது வலைத்தளங்களில் அதிக ட்ரோல் பண்ணப்படுபவர் சீமான்.. விஜயகாந்தின் வீழ்ச்சியில் குடும்ப அரசியலும் வெளியிடங்களில் அவரின் நடத்தைகளையும் விட மீடியாக்களால் கொடுக்கப்பட்ட நெக்கட்டிவ் தோற்றமும் வலைத்தளங்களின் ட்ரோலுமே அவரின் வேகமான வீழ்ச்சிக்கு காரணங்கள் ..அதை அவர் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் 

வெளிநாட்டில் சீமானிற்கு உண்டியல் குலுக்குவதோ..இங்கிருந்து போய் அவர்களின்கு வேலை செய்வதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாயினும்.. ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சீமானிற்கு ஆதரவு பணம் கொடுக்கிறார்கள் ஈழத்தை போல இங்கேயும் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் என்ற திமுக வினரின் இன்னோரென்ன குற்றசாட்டுகளை வலுப்படுத்தவே உதவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:

🤣🤣

எனக்கு சீமான் மற்றும் வைகோ அல்லது வேறு எந்த தமிழக  தலைவர் மீதும் விமர்சனத்துடன் கூடிய பார்வையே உண்டு..அதனால் கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் எல்லா பேச்சுகள்/ நடவடிக்கைகளிற்கு முட்டு கொடுப்பவர்களை எதிர்க்கிறேன்..நல்லது செய்யும் போது பாராட்டுங்கள் / மற்றவற்றை விமர்சியுங்கள் அது அவர்களை செம்மை படுத்தும்,  அண்மையில் நாம் தமிழர் கட்சியின் இரத்ததானம் / மற்றும ஆடு மாடுகளிற்கான தண்ணீர் தொட்டி / குளம்/ ஏரி சீர்படுத்தல்கள் வலைதளங்களில் பராட்டை பெற்றுள்ளன 

நாங்கள் எப்படி எங்களின் அரசியல் தேவைக்கு அவர்களை பயன்படுத்துகிறோமோ அதே போல அவர்களும் எங்களை  பயன் படுத்துகிறார்கள்

போராட்ட ஆரம்பத்தில் எங்களிற்கு உதவிய குளத்தூர் மணி போன்றவர்கள் ஆரம்ப கால வைகோ போன்றவர்கள் தான் எந்த பிரதிபலன் பராது எங்களிற்கு குரல் கொடுத்தார்கள் ..இப்போதைய நிலை எல்லாமே வாக்குகளிற்காகவே ..ஆனால் எங்கள் பற்றிய அனுதாபம் ஆதரவு நிலைக்கு தமிழ் நாட்டில் உண்மையாகவே  வாக்கு வங்கி உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு 

சீமான் இன்னும் இன்னும் கிராம மக்களிடமும் வளர்ந்து வரும் தலைமுறையுடனும் செல்வாராகின் அவரால் இன்னும் தன் நிலையை வலுப்படுத்த முடியும் .. கொடுக்கும் பேட்டிகளில் பேசும் பேச்சுகளில் அதிக கவனம் எடுத்தல் வேண்டும் .. இப்போது வலைத்தளங்களில் அதிக ட்ரோல் பண்ணப்படுபவர் சீமான்.. விஜயகாந்தின் வீழ்ச்சியில் குடும்ப அரசியலும் வெளியிடங்களில் அவரின் நடத்தைகளையும் விட மீடியாக்களால் கொடுக்கப்பட்ட நெக்கட்டிவ் தோற்றமும் வலைத்தளங்களின் ட்ரோலுமே அவரின் வேகமான வீழ்ச்சிக்கு காரணங்கள் ..அதை அவர் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் 

வெளிநாட்டில் சீமானிற்கு உண்டியல் குலுக்குவதோ..இங்கிருந்து போய் அவர்களின்கு வேலை செய்வதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாயினும்.. ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சீமானிற்கு ஆதரவு பணம் கொடுக்கிறார்கள் ஈழத்தை போல இங்கேயும் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் என்ற திமுக வினரின் இன்னோரென்ன குற்றசாட்டுகளை வலுப்படுத்தவே உதவும் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கோ அல்ல‌து எம் போராட்ட‌த்துக்கோ , எம் உற‌விக‌ளில் வாசிலில் போய் உண்டிய‌லுட‌ன் நின்ட‌து இல்லை ஒரு போதும்  , உந்த‌ உண்டிய‌ல் வேலையை ஒரு சில‌ர் பார்க்கின‌ம் , உண்டிய‌ல் கூட்ட‌த்திட‌ம் நேர்மை இருப்பதாக‌ தெரிய‌ வில்லை 😠/

நான் என் இன‌த்துக்காக‌ எது செய்தாலும் என்ர‌ சொந்த‌ செல‌வில் தான் / குறுக்கு வ‌ழிய‌ விரும்பின‌து இல்லை 😉 , 

பெரும் க‌ன‌வோடு ஒரு கொள்கையோடு ப‌ய‌ணிக்கும் போது , அந்த‌ கொள்கையை அடையும் வ‌ர‌ தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்க‌னும் 👏 /


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தரமான நகைச்சுவைக்கு நன்றி.

கடைசியாக ஒன்று வைகோவின் பித்தலாட்டங்களுக்கும் சீமான் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என சொல்லி ஜெயலலிதாவுக்கும் வாக்கு கேட்டதுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைக்கு ஜெயலலிதா எனும் கன்னட பிராமணப்பெண் தமிழ் நாட்டை வஞ்சித்துவிட்டார், அதிமுக எனும் திராவிட கட்சி தமிழ்நாட்டை சீரழித்தது, திருட்டுத் திராவிடம் ஈழம் அமைவதை தடுத்தது எனும் சீமானுக்கு, இவை எல்லாம் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் போது தெரியவில்லையா?

2009ம் ஆண்டு ஜெய‌ல‌லிதா என்ன‌ சொன்னாரோ , அத‌ வைச்சு தான் இழை ம‌ல‌ர்ந்தால் ஈழ‌ம் ம‌ல‌ரும் என்று அண்ண‌ன் சீமான் சொன்னார் /

அண்ண‌ உங்க‌ள‌ மாதிரி அறிவாளி வேச‌ம் போட்ட‌ ப‌ல‌ர‌ யாழில் பார்த்து விட்ட‌ன் 😁😁 ,
உங்க‌ள் க‌ட‌மை எதுவோ அத‌ ச‌ரியாய் செய்யுங்க‌ள் , என் க‌ட‌மை எதுவோ அத‌ நான் ச‌ரியாக‌ செய்து கொண்டு இருக்கிறேன் /

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி,

உங்களை மாரியேதான் எனக்கும் வகுப்பெடுப்பவரை பிடிக்காது. ஆகவே நான் எந்த வேடம் போடுகிறேன் என்ற வீண் சர்சைகளை விட்டு விட்டு கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர்க ரீதியில் தர முடிந்தால் தரவும். இல்லை நன்றி வணக்கம் சொல்லிப் போவதாயினும் ஓகே.

அப்போ, 1970 களில் இருந்து ஜெயா செய்த அரசியல். புலிகளை கெட்ட சக்தி என வர்ணித்தமை, புலிகள் பயங்கரவாதிகள் என்றது எல்லாவற்றையும் மறந்து விட்டு, 2009 இல் ஜெயா சொன்னதை வைத்து மட்டும் சீமான் அவருக்கு வோட்டு கேட்டாரா?

அப்போ ஸ்டாலின்/ திமுக இதுவரை செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து விட்டு இப்போ ஸ்டாலின் சொல்வதை வைத்து, வைகோ அவருக்கு வாக்கு கேட்பதும் சரிதானே?

சீமான் கருணாநிதியை விட சுயநலமிக்க, தந்திர அரசியல்வாதி என்பதுக்கான, tell-tale sings அவரின் பொது வாழ்க்கையை கூர்ந்து பார்க்கும் யாருக்கும் இலகுவில் புலப்படும்.

அவரிற்க்காக் வேலை செய்வது உங்கள் சுய விருப்பம். பிரபாகரனை போல் ஒருவர் என சீமானை நினைக்கும் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் இளைஞர்களுக்கு உண்மை ஒருநாள் புரியத்தான் போகிறது.

அந்த புரிதல் வரும் வரை 5ம் வேதக்காரர் போல அவர்கள் சீமான் புகழ் பாடவே போகிறார்கள்.

அதை பொது வெளியில் பாடும் போது, எதிர் கருத்து எழவே செய்யும்.

தொடர்ந்து பயணிப்போம். நன்றி வணக்கம்.

கிருபன் பாணியில், டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

தம்பி,

உங்களை மாரியேதான் எனக்கும் வகுப்பெடுப்பவரை பிடிக்காது. ஆகவே நான் எந்த வேடம் போடுகிறேன் என்ற வீண் சர்சைகளை விட்டு விட்டு கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர்க ரீதியில் தர முடிந்தால் தரவும். இல்லை நன்றி வணக்கம் சொல்லிப் போவதாயினும் ஓகே.

அப்போ, 1970 களில் இருந்து ஜெயா செய்த அரசியல். புலிகளை கெட்ட சக்தி என வர்ணித்தமை, புலிகள் பயங்கரவாதிகள் என்றது எல்லாவற்றையும் மறந்து விட்டு, 2009 இல் ஜெயா சொன்னதை வைத்து மட்டும் சீமான் அவருக்கு வோட்டு கேட்டாரா?

அப்போ ஸ்டாலின்/ திமுக இதுவரை செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து விட்டு இப்போ ஸ்டாலின் சொல்வதை வைத்து, வைகோ அவருக்கு வாக்கு கேட்பதும் சரிதானே?

சீமான் கருணாநிதியை விட சுயநலமிக்க, தந்திர அரசியல்வாதி என்பதுக்கான, tell-tale sings அவரின் பொது வாழ்க்கையை கூர்ந்து பார்க்கும் யாருக்கும் இலகுவில் புலப்படும்.

அவரிற்க்காக் வேலை செய்வது உங்கள் சுய விருப்பம். பிரபாகரனை போல் ஒருவர் என சீமானை நினைக்கும் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் இளைஞர்களுக்கு உண்மை ஒருநாள் புரியத்தான் போகிறது.

அந்த புரிதல் வரும் வரை 5ம் வேதக்காரர் போல அவர்கள் சீமான் புகழ் பாடவே போகிறார்கள்.

அதை பொது வெளியில் பாடும் போது, எதிர் கருத்து எழவே செய்யும்.

தொடர்ந்து பயணிப்போம். நன்றி வணக்கம்.

கிருபன் பாணியில், டொட்.

 ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்கும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 😉😁 /

த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ருக்கு நிக‌ர் தேசிய‌ த‌லைவ‌ர் தான் , அந்த‌ மாபெரும் த‌ல‌வைர்ரோட‌ யாரையும் ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது 👏

அண்ண‌ன் சீமானை ந‌ம்பி போர‌ ம‌க்க‌ளுக்கே அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , ஆனா உங்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது  வேர்வையை முத‌ல் துடையுங்கோ 😠/

அண்ண‌ன் சீமான விம‌ர்சிக்க‌ முத‌ல் உங்க‌ளை நீங்க‌ள் ஒரு க‌ன‌ம் பார்க்க‌னும் , விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ அதுக்கு நீங்க‌ள் த‌குதியான‌வரா என்று 😉

சீமான் என்ர‌ ஒரு த‌னி ம‌னித‌ன்
இல்லாட்டி இன்று த‌மிழ் நாட்டில் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் த‌ல‌ ர‌சிக‌ன் த‌ள‌ப‌தி ர‌சிக‌ன் என்ர‌ கோட்டுக்கையே இருந்து இருப்பார்க‌ள் / 

த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளி வீட்டில் க‌ண் கூடா பார்க்க‌ முடியுது , த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை ப‌ச்ச‌ குத்தி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ர‌ நெஞ்சில் சும‌க்கும் பிள்ளைக‌ளும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கின‌ம் ,

அண்ண்ன் சீமான் த‌ன் தொண்ட‌ர்க‌ளுக்கு சொல்வ‌து  எம‌க்கு எல்லாம் ஒரு த‌லைவ‌ர் தான் , அது த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் /

அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் நேர‌ம் 
செய்த‌ ப‌ணிக‌ள் க‌ண்ணீல் க‌ண்ணீர‌ வ‌ர‌ வைச்ச‌து /
வ‌லி உண‌ர்ந்த‌வ‌னுக்கு தான் அத‌ன் வ‌லி தெரியும் /

புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு இணைய‌த‌ள‌த்துக்காள் நக்க‌லும் நய்யாண்டி செய்ப‌வ‌ர்களால் அதை தான் செய்ய‌ முடியும் 😉 ,

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்டு ப‌த்து ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ / புல‌ம் பெய‌ர் நாட்டு வாய்ச் சொல் வீர‌ர்க‌ளால் என்ன‌த்த‌ சாதிக்க‌ முடிஞ்ச‌து 😠

உங்க‌ளை மாதிரி போலி விம‌ர்ச‌க‌ர‌ க‌ண்டு அண்ண‌ன் சீமானோ அவ‌ர் த‌ம்பிக‌லோ அஞ்ச‌ போர‌து இல்லை , எம் க‌ட‌மை எதுவோ அதை ச‌ரியாண‌ வ‌ழியில் செய்திட்டு இருக்கிறோம் / 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/reconstruction-works-in-melmarungur-village-by-naam-tamilar-party/articlecontent-pf381846-353675.html

வெறும் வார்த்தைகளில் வராது மாற்றம்.. மக்களிடம் படு வேகமாக நெருங்கும் நாம் தமிழர் கட்சியினர்!

HemavandhanaPublished:June 10 2019, 16:40 [IST]

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய சக்தியாக உருவெடுக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மாயம்- வீடியோ

சென்னை: இந்த வேலை, அந்த வேலை என்றெல்லாம் நாம் தமிழர் கட்சி பார்ப்பது இல்லை.. எதுவானாலும் என்ன அது மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒவ்வொன்றையும் பார்த்து அணுகுவதே இந்த கட்சியின் சிறப்பு!

என் மக்கள், என் இனம் என்ற ஒரு கோட்பாட்டை தூக்கி எறிந்து பொதுமக்களுடன் கலந்த கட்சிகளில் பிரதானமானவை நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம்தான்.

இவர்கள் மக்களை நெருங்குவதே அவர்களின் பிரச்சனைகளை முன் வைத்துதான். அதனால்தான் வாக்கு வங்கி மற்றும் தமிழக அரசியல் அந்தஸ்துகளில் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.

navjotsinghsidhu1-1560162402.jpgஎன்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு

  • பிரச்சனைகள்

    அதிலும் நாம் தமிழர் கட்சிக்கு ஒருவரையறை, எல்லை, நியதி இதெல்லாம் கிடையாது. எதுவானாலும் இறங்கி தூர் வாருவதுதான் பிரதான பணியே. அது மண், மக்கள், எதை பாதிக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி.

  • பிடிக்குளம் கிராமம்

    அந்த வகையில், மேல்மருங்கூர் ஊராட்சியில் பிடிக்குளம் என்ற கிராமத்திலும் சேவையை விரிவுபடுத்தி உள்ளனர். அந்த கிராமத்தில் நீர்நிலையில் உள்ள, சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் அதி தீவிரமாக ஈடுபட்டனர்.

  • அவலம்

    தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடும் நிலையில், கிணற்றில் இருக்கும் நீரை கூட எடுக்க முடியாதவாறு அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த அவலத்தை உணர்ந்த அக்கட்சியினர், கிணற்றை சிமெண்ட் போட்டு வேலையை ஆரம்பித்தனர்.

  •  

    View image on TwitterView image on TwitterView image on Twitter
     

    #மேல்மருங்கூர் ஊராட்சி#பிடிக்குளம் கிராமத்தில் நீர்நிலையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள் ✊

     
     
     
     

     

    ஈரம்

    மண்ணோடு மண்ணாக, ஒட்டிப்போய் இருந்த கிணற்றை சுற்றி சீரமைத்து, சிமெண்ட் போட்டு, மக்கள் எளிதாக தண்ணீர் இறைக்கும்படி சீரமைத்துவிட்டனர்! நாம் தமிழர் கட்சியினரின் இந்த செயலை கண்டு, இப்போது கிணற்றில் மட்டுமல்ல.. கிராம மக்களின் மனதிலும் ஈரம் ஊற்றெடுக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

https://tamil.oneindia.com/news/chennai/reconstruction-works-in-melmarungur-village-by-naam-tamilar-party/articlecontent-pf381846-353675.html

வெறும் வார்த்தைகளில் வராது மாற்றம்.. மக்களிடம் படு வேகமாக நெருங்கும் நாம் தமிழர் கட்சியினர்!

HemavandhanaPublished:June 10 2019, 16:40 [IST]

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய சக்தியாக உருவெடுக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மாயம்- வீடியோ

சென்னை: இந்த வேலை, அந்த வேலை என்றெல்லாம் நாம் தமிழர் கட்சி பார்ப்பது இல்லை.. எதுவானாலும் என்ன அது மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒவ்வொன்றையும் பார்த்து அணுகுவதே இந்த கட்சியின் சிறப்பு!

என் மக்கள், என் இனம் என்ற ஒரு கோட்பாட்டை தூக்கி எறிந்து பொதுமக்களுடன் கலந்த கட்சிகளில் பிரதானமானவை நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம்தான்.

இவர்கள் மக்களை நெருங்குவதே அவர்களின் பிரச்சனைகளை முன் வைத்துதான். அதனால்தான் வாக்கு வங்கி மற்றும் தமிழக அரசியல் அந்தஸ்துகளில் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.

navjotsinghsidhu1-1560162402.jpgஎன்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு

  • பிரச்சனைகள்

    அதிலும் நாம் தமிழர் கட்சிக்கு ஒருவரையறை, எல்லை, நியதி இதெல்லாம் கிடையாது. எதுவானாலும் இறங்கி தூர் வாருவதுதான் பிரதான பணியே. அது மண், மக்கள், எதை பாதிக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி.

  • பிடிக்குளம் கிராமம்

    அந்த வகையில், மேல்மருங்கூர் ஊராட்சியில் பிடிக்குளம் என்ற கிராமத்திலும் சேவையை விரிவுபடுத்தி உள்ளனர். அந்த கிராமத்தில் நீர்நிலையில் உள்ள, சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் அதி தீவிரமாக ஈடுபட்டனர்.

  • அவலம்

    தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடும் நிலையில், கிணற்றில் இருக்கும் நீரை கூட எடுக்க முடியாதவாறு அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த அவலத்தை உணர்ந்த அக்கட்சியினர், கிணற்றை சிமெண்ட் போட்டு வேலையை ஆரம்பித்தனர்.

  •  

    View image on TwitterView image on TwitterView image on Twitter
     

    #மேல்மருங்கூர் ஊராட்சி#பிடிக்குளம் கிராமத்தில் நீர்நிலையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள் ✊

     
     
     
     

     

    ஈரம்

    மண்ணோடு மண்ணாக, ஒட்டிப்போய் இருந்த கிணற்றை சுற்றி சீரமைத்து, சிமெண்ட் போட்டு, மக்கள் எளிதாக தண்ணீர் இறைக்கும்படி சீரமைத்துவிட்டனர்! நாம் தமிழர் கட்சியினரின் இந்த செயலை கண்டு, இப்போது கிணற்றில் மட்டுமல்ல.. கிராம மக்களின் மனதிலும் ஈரம் ஊற்றெடுக்கிறது!

என்ன  சொல்ல  வாரீங்க  சகோ..

சரியான  பாதை  என்று  தானே?

இதைத்தான்  நாமும் சொல்கின்றோம்

வரவேற்கின்றோம்

டொட்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித துதிபாடல் மனோநிலையில் இருக்காமல் எதையும் சமன் செய்து சீர்தூக்கி பார்க்கும் கண்ணோட்டம் கைவரப் பெறும் போது நல்லன நடக்கும் போது ஒத்துகொள்வதும், தவறானது நடக்கும் போது சுட்டிக் காட்டுவதும் இயல்பாக வரும் சகோ 😂.

டொட் டொட்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.