Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

சீமான் தனது அரசியலுக்கு தான் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்துகிறார். இவர் தமிழக முதல்வராக வந்தால் இவரும் சுயநலவாதியாகவே செயற்படக்கூடும். இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க முற்படுவார். தமிழீழ மக்களுக்கு எதுவும் செய்வார் என நினைக்கவில்லை. இவர் ஒரு முதல்வராக தமிழீழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க வெளிக்கிட்டால் றோ இவரை போட்டுத்தள்ளி விட்டு இன்னொருவரை முதல்வராக கொண்டு வரும். 

ஆனால் ஏனைய திராவிடக்கட்சிகள் படு கேவலம் என்பதால் இவரை மட்டும் இங்கு விமர்சித்து இவரை தரம் தாழ்த்த வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தனி மனித துதிபாடல் மனோநிலையில் இருக்காமல் எதையும் சமன் செய்து சீர்தூக்கி பார்க்கும் கண்ணோட்டம் கைவரப் பெறும் போது நல்லன நடக்கும் போது ஒத்துகொள்வதும், தவறானது நடக்கும் போது சுட்டிக் காட்டுவதும் இயல்பாக வரும் சகோ 😂.

டொட் டொட்.

இரண்டு  டொட்  போட்ட  பின்பும் தொடர்வதற்கு  மன்னிக்கவும்

மேலே  நீங்க குறிப்பிட்ட

அல்லது  சந்தேகம்  தெரிவித்த

அத்தனை கோணங்களிலும்  எனக்கும் சீமான்  மீது வேறு பார்வையுண்டு

ஏனெனில்  நாம்  ஏமாறுவது  அல்லது  ஏமாற்றப்படுவது  இது  முதல்முறையல்லவே??

 

ஆனால்  கண்ணுக்கெட்டிய  தூரம்

பாழுங்கிணற்றிலிருந்து வெளியில்  வர  வேறு  ஒரு  துரும்பும்  தெரிவில்லையே  சகோ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழி தெரியவில்லை -எனக்கும்தான்.

இந்த வழியும் அது பாட்டுக்கு ஓடட்டும். அதிலும் எனக்கு உடன்பாடுதான்.

ஆனால் இந்த ஒரு வழிக்காக, நாம் தமிழ் நாட்டின் அத்தனை சக்திகளையும் பகைவர்கள் ஆக்குகிறோம். 

2009 இன் நரித்தனத்துக்கு கலைஞர் ஆட்சியில் இருந்தார் செய்யவில்லை ஓகே. பசி சதி செய்தார் ஓகே. முள்ளிவாய்க்கால நேரம் எதிர்கட்சி தலைவி ஜெயா - தன் ஆள் அம்பு டிவி சேனையை வைத்து தமிழ்நாட்டை கிடுகிடுக்க வைத்திருக்க முடியாதா?

வைகோ, கம்யூஸ்ட்கள், திகவினர் தம்மால் இயலுமானவரை போராடினார்கள். அப்போ 2008 இல்நா ன் தமிழ்நாட்டில் நின்றேன்.

ஆனால் ஜெயாவுக்கு சப்போர்ட். மகிந்தவின் பங்காளி மணல் மாபியா காரன் வீட்டு திருமணத்தில் விருந்தாளி, லைக்காவுக்கு சப்போர்ட். கேட்டால் விஜை தமிழன். அப்போ விஜையின் அம்மா மலையாள வந்தேறி இல்லையா?

பூராவும் சுத்த சுத்துமாத்து சகோ. இந்த சுத்துமாத்து கோஸ்டிக்காக மேலும் மேலும் நண்பர்களை பகைவர் ஆக்குகிறோம்.

கேட்டால், முள்ளிவாய்க்கால் நேரத்தில் எங்கே போனார்கள் என்று ஈசியாய் ஒரு கேள்வி.

பிரபாவை 2006 சந்தித்து, தமிழ்நாட்டுக்கான விநியோக உரிமையை பெற்றவர் போல பேசும் சீமான் 2006-2009 எங்கே இருந்தார் என்றால் பதிலில்லை.

அவர்கள் இருக்கும் வரைக்கும் பம்மிக் கொண்டு இருந்து விட்டு, இப்போ ஆமை ஓட்டில் சவாரி செய்தேன் என்று அவர்களை விற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் வ‌ன்னிக்கு வ‌ந்த‌ 2008ம் ஆண்டு ஆர‌ம்ப‌ கால‌ ப‌குதியில் / போர் உச்ச‌ க‌ட்டத்த‌ தொட்ட‌து 2008ம் 9 மாச‌ம் / 

2008ம் ஆண்டு க‌ட‌சியில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ அண்ண‌ன் சீமான் குள்ள‌ ந‌ரி க‌ருணாநிதியால் கைது செய்து சிறையில் அடைக்க‌ ப‌ட்டார் / 

அண்ண‌ன் சீமான் அப்போது த‌னி ம‌னித‌ர் , ஒரு க‌ட்ட‌த்தில் த‌மிழ் நாட்டில் மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியா இருந்த‌ மாதிமுக்கா என்ன‌ செய்திச்சு 2009ம் ஆண்டு , வேடிக்கை பார்த‌த‌ த‌விர‌ வைக்கோ கோபால‌சாமி வேர‌ என்ன‌த்த‌ செய்தார் / முத்துக்குமார் தீ மூட்டிய‌ போது பெரும் புர‌ட்சி வெடிச்சு இருக்கும் / அதையும் குள்ள‌ ந‌ரி க‌ருணாநிதி அட‌க்கினார் ஏவ‌ல்துறையை வைச்சு / 

ஒரு சில‌  விம‌ர்ச‌னம் அண்ண‌ன் திருமாள‌வ‌ன் மேல‌ இருந்தாலும் போர‌ நிப்பாட்ட‌ த‌னி ஆளா போராடினார் , ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ்சையும் கேட்டார் வாங்க‌ன்ன‌ இர‌ண்டு பேருமா உண்ணா விர‌த‌ம் இருப்போம் ஏதாவ‌து மாற்ற‌ம் வ‌ரும் என்று / அதுக்கு ராம‌தாஸ் ச‌ம்ம‌திக்க‌ வில்லை / இது உண்மையும் கூட‌ / ராம‌தாஸ் இன்னொரு போலி

இன‌ அழிவில் ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியை ப‌ல‌ர் வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி வ‌சை பாடுவ‌து ஏற்று கொள்ள‌ முடியாது / 
போன‌ பேருந்துக்கு கை காட்டி என்ன‌ பிரோச‌ன‌ம் / 

எம் இன‌ம் எம் க‌ண் முன்னே துடி துடிக்க‌ அழிந்து போனார்க‌ள் / 2009ம் ஆண்டு ஓல‌ குர‌ல் கேக்காத‌ இட‌மே இல்லை /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்நாட்டு அரசியலில் சீமானை ஆதரிக்காதவர்கள் வேறு யாரை ஆதரிக்கின்றோம் என வெளிப்படையாக இங்கு தெரிவித்தால் பல விதண்டாவாதங்களை தவிர்க்கலாம் என நான் நினைக்கின்றேன். இதை சொல்ல நீ யார் என்று கேட்டாலும் என்னிடம் பதில் இருக்கு அல்லது இல்லை.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குமாரசாமி அண்ணை கேட்ட கேள்வியே முகாந்திரம் இல்லாதது. நான் தமிழ்நாட்டின் ஒரு வாக்காளன் என்றால் நிச்சயமாக என் வாக்கு நாம்தமிழருக்கே.

அது ஏன் என்பதற்க்கான விளக்கத்தை மணிமாறன் மேலே எழுதிய பதிவு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சீமான் தமிழ்தேசியத்தை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி விட்டு தான் முதலமைச்சர் ஆகலாம் என நினைக்கிறார்.  நாம் சீமானை தேவையான அளவுக்கு பயன்படுத்தி, தமிழ் தேசியத்தை வேரூன்ற செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் சீமான் எப்படிபட்டவர் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே நம்மால் இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெல்ல முடியும். இது சீமானுக்கும் தெரியும். ஆகவேதான் புலிகளுடன் கொஞ்சமேனும் நெருக்கமாக இருந்தோரை அவர்கள் புலம் பெயர்ந்தவராயினும் , தமிழ்நாட்டவர் ஆயினும் சீமான் கொத்தி கலைகிறார். இதுதான், வைகோ, கொளத்தூர் மணி, வேல்முருகன், திருமுருகன் என எல்லாரையும் சீமான் தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பதன் அடிப்படைக்காரணம். 

சீமானை பற்றிய இந்த தெளிவான பார்வை இருந்தாலே போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மேலே குமாரசாமி அண்ணை கேட்ட கேள்வியே முகாந்திரம் இல்லாதது. நான் தமிழ்நாட்டின் ஒரு வாக்காளன் என்றால் நிச்சயமாக என் வாக்கு நாம்தமிழருக்கே.

அது ஏன் என்பதற்க்கான விளக்கத்தை மணிமாறன் மேலே எழுதிய பதிவு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சீமான் தமிழ்தேசியத்தை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி விட்டு தான் முதலமைச்சர் ஆகலாம் என நினைக்கிறார்.  நாம் சீமானை தேவையான அளவுக்கு பயன்படுத்தி, தமிழ் தேசியத்தை வேரூன்ற செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் சீமான் எப்படிபட்டவர் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே நம்மால் இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெல்ல முடியும். இது சீமானுக்கும் தெரியும். ஆகவேதான் புலிகளுடன் கொஞ்சமேனும் நெருக்கமாக இருந்தோரை அவர்கள் புலம் பெயர்ந்தவராயினும் , தமிழ்நாட்டவர் ஆயினும் சீமான் கொத்தி கலைகிறார். இதுதான், வைகோ, கொளத்தூர் மணி, வேல்முருகன், திருமுருகன் என எல்லாரையும் சீமான் தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பதன் அடிப்படைக்காரணம். 

சீமானை பற்றிய இந்த தெளிவான பார்வை இருந்தாலே போதுமானது.

2010ம் ஆண்டு ஆர‌ம்ப‌ கால‌ ப‌குதியில் ஜ‌யா கொள‌த்தூர் ம‌னிய‌ முன்னுக்கு நில்லுங்கோ தான் பின்னுக்கு நிக்கிறேன் என்று அண்ண்ன் சீமான் கொள‌த்தூர் ம‌னியிட‌ம் சொன்னாரா இல்லையா என்று கேட்டு வ‌ந்து சொல்லுங்கோ ( கோஷ‌ன் சே )

பெரியாரின் வாரிசுக‌ள் , அண்ண்ன் சீமானோடு ஒரு போதும் ப‌ய‌ணிக்க‌ மாட்டார்க‌ள் / அவ‌ர்க‌ளின் கொள்கை வேறு அண்ணன் சீமானின் கொள்கை வேறு / 

அண்ண‌ன் சீமான் திராவிட‌த்தை 
ஆதார‌த்தோடு விம‌ர்ச‌ன‌ம் செய்து விட்டு அவ‌ர்க‌ளோடு போய் நின்றால் கால‌ போக்கில் அண்ணன் சீமானையும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் ம‌க்க‌ள் / அது தான் அண்ண‌ன் சீமான் எல்லாத்திலும் தெளிவா இருக்கிறார் / அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்கும் பாத‌ மிக‌ ச‌ரி 👏🙏  / 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது பையன்,

இங்கே சீமானையும் தமிழ்நாட்டையும் பற்றி போதுமான அளவு கதைத்து விட்டோம்.

இன்னொரு திரியிலும் கூட இன்னும் கதைக்கிறோம்.

பார்க்கலாம் காலம் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை. நன்றி வணக்கம்.

நேரத்துக்கு நன்றி. கிரிகெட் திரியில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

வேறு வழி தெரியவில்லை -எனக்கும்தான்.

இந்த வழியும் அது பாட்டுக்கு ஓடட்டும். அதிலும் எனக்கு உடன்பாடுதான்.

ஆனால் இந்த ஒரு வழிக்காக, நாம் தமிழ் நாட்டின் அத்தனை சக்திகளையும் பகைவர்கள் ஆக்குகிறோம். 

 

10 hours ago, goshan_che said:

மேலே குமாரசாமி அண்ணை கேட்ட கேள்வியே முகாந்திரம் இல்லாதது. நான் தமிழ்நாட்டின் ஒரு வாக்காளன் என்றால் நிச்சயமாக என் வாக்கு நாம்தமிழருக்கே.

அது ஏன் என்பதற்க்கான விளக்கத்தை மணிமாறன் மேலே எழுதிய பதிவு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சீமான் தமிழ்தேசியத்தை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி விட்டு தான் முதலமைச்சர் ஆகலாம் என நினைக்கிறார்.  நாம் சீமானை தேவையான அளவுக்கு பயன்படுத்தி, தமிழ் தேசியத்தை வேரூன்ற செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் சீமான் எப்படிபட்டவர் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே நம்மால் இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெல்ல முடியும். இது சீமானுக்கும் தெரியும். ஆகவேதான் புலிகளுடன் கொஞ்சமேனும் நெருக்கமாக இருந்தோரை அவர்கள் புலம் பெயர்ந்தவராயினும் , தமிழ்நாட்டவர் ஆயினும் சீமான் கொத்தி கலைகிறார். இதுதான், வைகோ, கொளத்தூர் மணி, வேல்முருகன், திருமுருகன் என எல்லாரையும் சீமான் தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பதன் அடிப்படைக்காரணம். 

சீமானை பற்றிய இந்த தெளிவான பார்வை இருந்தாலே போதுமானது.

 

தமிழ்த்தேசியம் அல்லது  ஈழ  உணர்வு

தமிழகத்தில் முதலமைச்சர்  ஆக்கும்  என்பதே உங்களது பெரிய எதிர்பார்ப்புத்தானே  சகோ??

என்னைப்பொறுத்தவரை

தமிழுணர்வை

ரத்த பாசத்தை  நம்பலாம்  என்பது தான் சகோ

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

5 hours ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் திராவிட‌த்தை 
ஆதார‌த்தோடு விம‌ர்ச‌ன‌ம் செய்து விட்டு அவ‌ர்க‌ளோடு போய் நின்றால் கால‌ போக்கில் அண்ணன் சீமானையும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் ம‌க்க‌ள் / அது தான் அண்ண‌ன் சீமான் எல்லாத்திலும் தெளிவா இருக்கிறார் / அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்கும் பாத‌ மிக‌ ச‌ரி 👏🙏  / 

சீமான் அவர்கள் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். தமிழன் பயணிக்கப்போகும் பாதையும் சீராகச் செப்பனிடப்படும். ஆனால் செப்பனிடும் பணியில் விலைமதிப்பில்லாத உயிர்கள் காவுகொள்ளப்படும் என்பதையும் மறுக்க முடியாது. ஏனெனில் இந்தியன் என்ற பாம்பின் நிர்வாகம்தான் இன்று தமிழ்நாட்டைச் சுற்றி நிற்கிறது. அது கடிக்காமல் விடாது. ஈழப்போராட்டத்தையும் கடித்துக் குதறியதில் இந்தப்பாம்புக்குப் பெரும் பங்கிருப்பதை அனைவரும் அறிவர்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சீமான் அவர்கள் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். தமிழன் பயணிக்கப்போகும் பாதையும் சீராகச் செப்பனிடப்படும். ஆனால் செப்பனிடும் பணியில் விலைமதிப்பில்லாத உயிர்கள் காவுகொள்ளப்படும் என்பதையும் மறுக்க முடியாது. ஏனெனில் இந்தியன் என்ற பாம்பின் நிர்வாகம்தான் இன்று தமிழ்நாட்டைச் சுற்றி நிற்கிறது. அது கடிக்காமல் விடாது. ஈழப்போராட்டத்தையும் கடித்துக் குதறியதில் இந்தப்பாம்புக்குப் பெரும் பங்கிருப்பதை அனைவரும் அறிவர்.     

உண்மை தான் உற‌வே / 
உங்க‌ளின் பார்வை மிக‌ ச‌ரி /
அண்ண‌ன் சீமானின் பாதுகாப்பில் இப்ப‌வே தொண்ட‌ர்க‌ள் மிக‌ க‌வ‌ன‌மாய் இருக்கிறார்க‌ள் / த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர‌ கொள்கையாய் கொண்டு ப‌ய‌ணிக்கிர‌ க‌ட்சி மேல் உள‌வுதுறையில் இருந்து ப‌ல‌ரின் க‌ண் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் இருக்கு ம‌றுப்ப‌துக்கு இல்லை / 
அண்ண‌ன் சீமான் பிரிவினை வாத‌ம் பேசாம‌ த‌ந்திர‌மாய் காய் ந‌க‌ர்த்தி ம‌க்க‌ளின் ஆத‌ர‌வை பெற்று கொண்டு வ‌ருகிறார் ,

இப்போது உள்ள‌ த‌மிழ் நாட்டு அர‌சை விஜேப்பி தான் இய‌க்குது 
அது தான் ம‌க்க‌ள் விரும்பாத‌ ப‌ல‌
நாச‌கார‌ திட்ட‌ங்க‌ள் த‌மிழ் நாட்டில் , தூத்து குடி துப்பாக்கி சூட்டு ச‌ம்ப‌வ‌த்தை இப்போது உள்ள‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ர் தொலைக் காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டாராம் , இதில் இருந்து என்ன‌ தெரியுது , 

அர‌சிய‌லில் அண்ண‌ன் சீமான் பெரிய‌ இல‌க்கை அடைஞ்சு ம‌க்க‌ளின் ஆத‌ர‌வை பெற்று விட்டால் , வ‌ட‌ நாட்டான் அட‌க்கி தான் வாசிப்பான் / 
 ஊழ‌ல‌ வைச்சும் மிர‌ட்ட‌ ஏலாது , ஏன் என்றால் அண்ண‌ன் சீமான் போன்ற‌வ‌ர்க‌ள் ஊழ‌லுக்கு அப்பாள் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் , நான் சொன்னா நீ கேக்க‌னும் என்ர‌  வ‌ட‌ நாட்டானின் ஆனுவ‌ பேச்சும் இருக்காது / 

திராவிட‌த்தால்  த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் ச‌ரி ஈழ‌த்து ம‌க்க‌ளுக்கும் ச‌ரி ஒரு ந‌ன்மையும் ந‌ட‌க்க‌ போர‌து இல்லை /

திராவிட‌ குள்ள‌ ந‌ரிக‌ள் அவ‌ங்க‌ உல்லாச‌மா வாழ்ந்து போட்டு போவாங்க‌ள் , ஆனா பாதிக்க‌ ப‌ட‌ போர‌து த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தான் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/actress-kasthuri-praises-naam-tamilar-party-members-activities/articlecontent-pf382279-353861.html 

குண்டி கழுவ நீர் இல்லை.. குந்திய இடத்தில் இந்தி திணிப்பு.. சீமானின் தம்பிகளோ அபாரம்.. கஸ்தூரி ட்வீட்

HemavandhanaUpdated: Wed, Jun 12, 2019, 15:13 [IST]

Actress Kasthuri about Seeman: யாரை கேட்டு களத்தில் இறங்கினீர்கள்?.. கஸ்தூரி அடடே ட்வீட்- வீடியோ

சென்னை: "சீமானின் தம்பிகளை பார்த்து கேட்கிறேன்.. யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? உங்களை எல்லாம் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பொதுவாக கஸ்தூரியின் ட்வீட், ஃபேஸ்புக் பதிவு என்றாலே காரசாரமாக இருக்கும். சில சமயங்களில் எதையாவது ஆர்வ கோளாறினால் பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். சில சமயங்களில் புத்திசாலித்தன கருத்துக்களால் கைதட்டல்களையும் வாங்கி விடுவார்.

இப்போது நாம் தமிழர் கட்சியைதான் மனசார பாராட்டி இருக்கிறார். சும்மா இல்லை, அக்கட்சியினர் செய்து வரும் நல்ல காரியங்களை பட்டியலிட்டுள்ளார். மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு தொண்டர்கள் செய்த பணிகளை போட்டோவுடன் போட்டு சபாஷ் சொல்லி உள்ளார். கஸ்தூரியின் ஃபேஸ்புக் பதிவுதான் இது:

  • ஆட்டுமந்தை

    'தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களுக்கு அரசியல் என்றாலே ஒரு நல்ல பிசினஸ் என்றுதான் தெரியும். பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது.

  • சாதி மதம்

    குண்டி கழுவ நீர் இல்லாமல் தமிழன் தவித்துக்கொண்டிருக்க, குந்திய இடத்தில் இந்தியை வைத்து நம்மை திசைதிருப்புவோர் மத்தியில் சீமானின் தம்பிகள் வேளச்சேரியில் நீர்நிலைகளை தூர் வாருகிறார்கள்! மரம் நடுகிறார்கள், ஆண் பெண் சாதி மதம் கடந்து இணைந்து பார்க்காமல் குப்பை அள்ளுகிறார்கள் சாக்கடை அடைப்பை சுத்தம் செய்கிறார்கள்...

  • மருத்துவ கல்லூரி

    ஒரு ஏரி என்று ஒன்று இருந்தால் அதை என்ன செய்ய வேண்டும்? முதலில் திருட்டுத்தனமாக தண்ணீரை விற்க வேண்டும். பிறகு ஏரி மணலை விற்க வேண்டும். அப்புறம் குப்பையால் நிரப்பி ஏரியை காணாமலடிக்க வேண்டும் . பிறகு அதை வாகாக வளைத்து ஏரி இருந்த இடத்தில் மருத்துவ கல்லூரி மல்டிப்ளெஸ் மாடிவீடு என்று கட்டிக்கொள்ள வேண்டும். இதுதானே காலம் காலமாக நடக்கிறது?

  • தொலைநோக்கு பார்வை

    இப்போது திடீரென்று ஒரு அரசியல் அமைப்பு மக்கள் பணியில் இறங்கினால் எப்படி சமாளிப்பது? நாம் தமிழர் தொண்டர்களை நான் கேட்கிறேன், யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? அப்புறம் மக்கள் எல்லா அரசியல்வாதிகளிடமும் சமூக பொறுப்பு , சுற்றுசூழல் விழிப்புணர்வு, தொலைநோக்கு பார்வை எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்களா? 20 ஆண்டுகளாக இந்த ஏரியை காட்டி காண்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள் நிலைமையை எண்ணி பார்த்தீர்களா?

  • கமல்ஹாசன்

    ரத்த தானம் என்ற நல்ல வழக்கத்தை தன் ரசிகர் மன்றத்தில் விதைத்தவர் கமல்.மக்கள் நீதி மைய்யத்தின் சமூக செயல்பாடுகளில் ரத்ததானத்துக்கு மிக முக்கிய இடமுண்டு.அதே போல நா த க வினரும் குருதிக்கொடைக்கென ஒரு பாசறையே வைத்து செயல்படுகிறார்கள் .

  • நல்ல விஷயம்

    நாம் தமிழர் கட்சியின் குறுகிய இனவாதத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் என்பது இனமல்ல , உணர்வு என்று நினைப்பவள் நான். ஆனால் அந்த கட்சியின் செயல்பாட்டை வியக்காமல் இருக்க முடியவில்லை. தமிழர்கள் மட்டுமா உள்ளனர்? பழமொழிபேசுபவர், பல ஊர் காரர், ஏன், பசு பறவைக்கு கூட நல்லது நடந்துள்ளதே.

  • மகேசன் சேவை

    பெரிது பெரிதாய் வாய்கிழிய கொள்கை பேசுபவர்கள் என்னத்தை கிழித்தார்கள், தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை அடகுவைத்து சமரசங்கள் செய்வதை தவிர? மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கை மட்டுமே தேவை. அது எங்கு இருப்பினும் வரவேற்கப்படவேண்டியது' என்று பதிவிட்டுள்ளார்.

  •  

     

    தமிழகத்தை பொறுத்தவரை ,பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான்...https://www.facebook.com/actresskasthuri/posts/1263525470491926?__xts__[0]=68.ARBFNQlFAbRATFdR0XFW0xTE4gkBaTUSi15Z4IhlpqDz1IX0IwbmrQ7fSo8B05OfF4prql_JgmjRaE8RWB4z7SqnYATbxgetwN7WnyDqNMe_6eDsgQsKTC8rigCONukqkcTo0ZTl5BRz7oxtNBd_yKHOug7mxcY7gi8xERFw_2jdAbm1d1-01n9X-VtvrvtnPazFr6tF3gCC7WWqJ79FNrVIcsiPE7A4IJ0v4ANmPVOYjWxy1mkjVW76qSemwDyiz3gu55qHIOw7n_X-M0zibSkb_1ZNvnIqybHMDuofhsiqNYd7IzGQRfjFeKnFtH0tt2LQZqL5y0YEeD4pSErs7Zokbg&__tn__=-R 

     
     
     
     

     

    சபாஷ்

    சீமானை கஸ்தூரி பாராட்டினாலும், அதே சமயம் கமலையும் விட்டுக் கொடுக்காமல் பதிவிட்டுள்ளதற்கு, இரு கட்சிகளின் தொண்டர்களும் வரவேற்று கஸ்தூரிக்கு சபாஷ் சொல்லி வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.