Jump to content

ஏமாற்றத்தில் தினகரன்; ஏற்றத்தில் கமல், சீமான்- வாக்கு விவரங்கள் என்ன சொல்கின்றன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

க.சே.ரமணி பிரபா தேவி

 

 
TTV-Dhinakaran710x400xtjpg

கோப்புப்படங்கள்

 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் வேலூர் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் அமமுக, திராவிடக் கட்சிகளின் வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்தனர். குறிப்பாக தினகரனின் வசீகரத் தலைமை, பணபலம் மற்றும் அதிமுக தலைமை மீதான அதிருப்தி ஆகியவற்றால், அமமுக கணிசமான எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது.

 

அதே நேரத்தில் கடந்த தேர்தல்களில் சில ஆயிரங்களில் வாக்குகளைப் பெற்று வந்த சீமான், இம்முறை சற்றே அதிகமாகப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே மக்களவைத் தேர்தலைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசனுக்கு எப்படிப்பட்ட ஆதரவு கிடைக்கும் என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுந்தது. இந்த ஆரூடங்கள் அனைத்துக்கும் தமிழக மக்கள், வாக்குகளின் வாயிலாக விடையைச் சொல்லி இருக்கின்றனர்.

பிற்பகல் 4 மணி நிலவரப்படி,

மத்திய சென்னையில் அமமுக 3.08% வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி 3.73% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே வேளையில் கமலின் மக்கள் நீதி மய்யம் 11.58% வாக்குகளைப் பெற்றுள்ளது.

வட சென்னையில் மூவருக்குமான போட்டியில் முந்துகிறார் கமல். அவர் கட்சியின் வேட்பாளர் மவுரியா 11.53% வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் 6.97% வாக்குகளோடு 4-ம் இடத்தில் இருக்க, அமமுகவின் சந்தானகிருஷ்ணன் 3.65% வாக்குகளோடு 5-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல தென்சென்னை தொகுதியிலும் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்ததாக கமலின் மநீம, 12.72% வாக்குகளை வாங்கியுள்ளது. அதேபோல நாம் தமிழரின் ஷெரின் 4.36% வாக்குகளோடு இருக்க, அமமுக 2.67 சதவீதத்தில் பின்னுக்குச் சென்றுள்ளது.

கன்னியாகுமரியில் நாம் தமிழர் 1.56% வாக்குகளையே பெற்றுள்ளது. எனினும் அதைவிடக் குறைவாக மநீம 0.77%-ம், அமமுக 1.2% வாக்குகளே மட்டுமே பெற்றுள்ளன.

கரூரில் நாம் தமிழர் கட்சி முந்தியுள்ளது. அக்கட்சியின் கருப்பையா 3.68% வாக்குகளைப் பெற்றுள்ளார். மநீம-க்கு 1.69% வாக்குகளும், அமமுகவுக்கு 2.49% வாக்குகளும் கிடைத்துள்ளன.

கிருஷ்ணகிரியில் 1% வாக்குகளைக் கூட அமமுகவால் பெற முடியவில்லை. நாம் தமிழர் 2.36%-ம், மநீம 1.37%-ம் பெற்றுள்ளன. மதுரையில் 7.39% வாக்குகளைப் பெற்ற அமமுகவைப் பின்னுக்குத் தள்ளி உள்ளது மநீம. அக்கட்சியின் வேட்பாளர் அழகர் 8.5% வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழரின் பாண்டியம்மாள் 4.32% பெற்றுள்ளார்.

நாமக்கல்லில் நாம் தமிழர் 3.45%-ம் மநீம 2.8%-ம் பெற்றுள்ள நிலையில் அமமுக 2.05% வாக்குகளையே தக்கவைத்துள்ளது. நீலகிரியில் நாம் தமிழர் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடியான நிலையில், மநீம 4.07%-ம், அமமுக 4%-ம் வாங்கியுள்ளன.

பெரம்பலூரில் மநீம வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் 4.88%-ம், அமமுக 4.13%-ம் பெற்றுள்ளன. பொள்ளாச்சியில் மநீம 5.58% வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் 2.92 மற்றும் அமமுக 2.43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேபோல சேலத்திலும் அமமுக, நாம் தமிழரைப் பின்னுக்குத் தள்ளி மநீம அதிக வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் கணிசமான வாக்கு வங்கியை கமல் கைப்பற்றியுள்ளார். அவரின் மக்கள் நீதி மய்யம் 9.16% வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் 6.31% மற்றும் அமமுக 3.27% பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் மநீம போட்டியிடாத நிலையில், நாம் தமிழர் 5.05% வாக்குகளும் அமமுக 4.5% வாக்குகளும் பெற்றுள்ளன.

தஞ்சாவூரில் நாம் தமிழர் முந்தியுள்ளது. அக்கட்சி 5.44% வாக்குகளைப் பெற்ற நிலையில், மநீம 2.28 சதவீதமும் அமமுக 2.52 சதவீதமும் பெற்றுள்ளன. திருவள்ளூரில் மநீமவும் நாம் தமிழரும் தலா 4.71, 4.34 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆனால் அமமுகவோ வெறும் 2.63% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

கொங்கு மண்டலத்தில் என்ன நிலை?

கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் 12.2% பெற்றுள்ளார். இது பாஜக வேட்பாளரின் வெற்றியைப் பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி 4.97% வாக்குகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் அமமுக வெறும் 3.08% வாக்குகளையே கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் கமலே ரேசில் முந்துகிறார். அவரின் மநீம 4.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. சீமான் 3.66%-ம், டிடிவி 2.44%-ம் பெறுகின்றனர். அதேபோல திருப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் சந்திரகுமார் 5.6% வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் 3.72%-மும் அமமுக 3.88%-மும் பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் அமமுக வேட்பாளரால் ஓரிலக்க வாக்குகளைக் கூடப் பெற முடியவில்லை. அமமுக வேட்பாளர் தமிழ்மாறன் 0.52% வாக்குகளும் நாம் தமிழர் 2.75%-மும் மநீம 4.73%-மும் பெற்றுள்ளனர்.

*

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மூலம் அமமுக பொதுச் செயலாளரான தினகரனின் வாக்கு வங்கி, கமல் மற்றும் சீமானின் வாக்கு வங்கியை விடக் குறைவாக இருப்பது தெரியவருகிறது. மேலே குறிப்பிட்ட தொகுதிகளைத் தவிர்த்து சில இடங்களில் மட்டுமே அமமுக மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்தத் தரவுகளின் மூலம் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுகவைத் தோற்கடித்து எம்எல்ஏவாக சட்டப்பேரவை சென்ற டிடிவி தினகரன் மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

கமல்ஹாசனுக்கு கணிசமான ஆதரவு உருவாகி இருப்பதையும் காண முடியும். அதே நேரத்தில் சீமானின் வாக்கு வங்கி கடந்த தேர்தல்களைக் காட்டிலும் குறிப்பிட்ட அளவு அதிகரித்திருப்பதையும் உணர முடிகிறது.

 
 

https://tamil.thehindu.com/tamilnadu/article27221726.ece?utm_source=articlePage&utm_medium=artRel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.