Jump to content

'நான் களைப்படைந்துவிட்டேன் எதிர்காலம் ஆன்மீகத்திலேயே' - ஞானசார தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் என பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

60956276_2349135995410871_29032785650196

விடுதலை பெற்ற பின்னர் ருக்மல்கம விகாரைக்கு  சென்றிந்தபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

http://www.virakesari.lk/article/56622

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201710

Link to comment
Share on other sites

'நான் களைப்படைந்துவிட்டேன் எதிர்காலம் ஆன்மீகத்திலேயே' - ஞானசார தேரர்

கடந்தகாலம் கூட ஆன்மீகத்திலேயே இருந்திருந்தால் ...

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களும் கூட ஆன்மீகத்திலேயே இருப்பின் இலங்கை அமைதியாக இருக்க நிச்சயம் உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தை அடைச்சு வைச்சுட்டு, நாட்டையே சின்னாபின்னமாகிட்டாங்களே !!!

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

சிங்கத்தை அடைச்சு வைச்சுட்டு, நாட்டையே சின்னாபின்னமாகிட்டாங்களே !!!

இப்ப வெளில விடுறதுக்காக தான் அடைச்சு வைச்சிருந்தார்களோ தெரியேல்லை.

ஆளை பார்த்தால் களைப்புற்ற ஆள் மாதிரி தெரியேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யோ மெய்யோ4500 சிங்கள பெண்களுக்கு முஸ்லீம் வைத்தியர் கர்ப்பத்தடை செய்த விடயத்தை யாராவது இந்த மகானின் காதில் ஊதி விட்டால் நாளைக்கே கராட்டி பழகிக்கொண்டு அறிக்கை விடுவார் மாற்றி பேசுவதில் வல்லவர் .சிறையில் இருந்து அவசரமாக  விடுதலை செய்ததே ஏன் என்பது அவருக்கு தெரியும் 

Link to comment
Share on other sites

 

Quote

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் 

சிங்கள மக்கள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nunavilan said:

 

சிங்கள மக்கள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்😆

இவ்வளவு பெரிய ஆளுமை....வீணாகப் போவதில்.....எனக்கும் உடன்பாடில்லை!🤩

Link to comment
Share on other sites

11 hours ago, பிழம்பு said:

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்

இதுவரை சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தை முன்னெடுத்த நான் இனி .....பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறிச் சொல்லிப் போட்டார். 

மியான்மாரில் இருந்து, தீவிரவாத பிக்கரை கொண்டாந்து மகாநாடு நடாத்திய ஆள்.

உண்மையில், ஆன்மீகத்தில் களைத்து விட்டார்.

எடுறா அந்த கத்திய, எங்கப்பா, ரிசாத் என்று கிளம்ப போகுது சிங்கம்.

எத்தனை தல உருளப்போகுதோ?

Link to comment
Share on other sites

23 minutes ago, Nathamuni said:

மாறிச் சொல்லிப் போட்டார். 

மியான்மாரில் இருந்து, தீவிரவாத பிக்கரை கொண்டாந்து மகாநாடு நடாத்திய ஆள்.

உண்மையில், ஆன்மீகத்தில் களைத்து விட்டார்.

எடுறா அந்த கத்திய, எங்கப்பா, ரிசாத் என்று கிளம்ப போகுது சிங்கம்.

எத்தனை தல உருளப்போகுதோ?

சிறையாலை வெளிலை வந்த பிறகு பயங்கரவாதத்தை அடக்க வேணும் என்று சொன்னவராம் என்று ஒரு சிங்களவர் twitter இல் எழுதியிருந்தார். உண்மையோ பொய்யோ என்று தெரியாததாலை நான் அதை இங்கு இணைத்திருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/23/2019 at 5:48 PM, பிழம்பு said:

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்

அப்போ இதுக்கு முன் ஆன்மீகத்தில் இருக்கவில்லை என்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது - ஞானசார தேரர்

(எம்.மனோசித்ரா)

நான் களைப்படைந்து விட்டேன். இனி போராடப்போவதில்லை என்று கூறினாலும் இளைஞர்களது கோரிக்கைக்கு இணங்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

IMG-20190526-WA0018.jpg

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மாகாநாயக்க தேரர்களை நேற்யை தினம் சந்தித்ததன் கண்டி - தலதா மாளிக்கைக்கு விஜயம் செய்த அவர், விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, 

IMG-20190526-WA0013.jpg

நான் சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து ஒரு நாளைக் கூட நிம்மதியாகக் கழிக்க முடியாதளவிற்கு தற்போது நாட்டின் நிலைமை மிக மோசமாகக் காணப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கான எமது சுக துக்கங்களை துறக்க வேண்டியுள்ளது. எனவே வெகுவிரைவாக பௌத்த சங்க சம்மேளனத்தைக் கூட்டி இதற்கான தீர்வினை காணப்பதற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஏனைய பௌத்த மதகுரமார்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். 

இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதையும், ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதையும் நிறுத்த வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினைக் காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

 

http://www.virakesari.lk/article/56841

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.