Jump to content

யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லை

May 24, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

house.jpg?resize=800%2C438யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் ,

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அவர்களுக்கு தற்போது 10 இலட்ச ரூபாய் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4ஆயிரத்து 693 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களிற்குள் அதி கூடிய தேவை உடைய தொகை இதுவாகும். அதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 113 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. இது குறைந்தளவு தொகையாகும்.

நிதி மூலங்கள் கிடைக்கும் பட்சத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் பணிகளை முன்னெடுக்க முடியும்.

யாழ்.மாவட்டத்தில் வீடுகள் , காணிகள் இல்லாமல் அதிகளவானோர் வாழ்கின்றனர். அதில் காணிகள் இருந்தும் வீடுகள் இல்லாதோர் தொகை அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்

#யாழ்.மாவட்டத்தில்   #காணிகள் #வீடுகள்  #jaffna #home

 

http://globaltamilnews.net/2019/122542/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இருக்கிற சொந்த மண்ணின்  அகதிகளுக்கே நிவாரணம் இல்லை இதுக்குள்ள வெளிநாட்டு அகதிகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.