Jump to content

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கிறது நாம் தமிழர் – மக்கள் நீதி மய்யம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, புதிய சக்திகளாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் முடிவடைந்த தேர்தலில் கிடைத்துள்ள வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்தி உள்ளன. இரு கட்சிகளும் ஏறத்தாழ தலா 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஆளுக்கு 15 லட்சம், 16 லட்சம் என வாக்குகளைப் பெற்றுள்ளமையானது மிகப் பெரிய சாதனையாக நோக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியை இனவாத, தமிழ் தேசியவாத கட்சியாக மட்டுமே பலரும் பார்த்து வந்த நிலையில் தாம் உறுதியாகவே களத்தில் இருப்பதாக சீமானும், நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமானவர்கள் என மக்களும் இந்த தேர்தலில் காட்டியுள்ளனர்.

இதேவேளை புதிதாக பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு என்ன மாதிரியான ஆதரவு கிடைத்து விடப் போகிறது என்ற அலட்சியம் திமுக அதிமுக கட்சிகளிடையே இருந்த நிலையில் கொள்கையை உறுதியாக வைத்து தொடர்ந்து முன்னேறி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி முதல் முறையாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளை மக்கள் நீதி மய்யம் ஏறத்தாள 16 லட்சம் அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. கோவை, வட சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சம் வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

# திமுக #அதிமுக   #நாம் தமிழர் கட்சி  #மக்கள் நீதி மய்யம்

http://globaltamilnews.net/2019/122605/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்து 14 மாதங்கள்தான்; இது பெரிய சாதனை: கமல்ஹாசன் மகிழ்ச்சி

புதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

"14 மாதங்களே ஆன குழந்தையை எழுந்து மக்கள் ஓட விடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை நம்பி நேர்மையாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்களுக்கும், எங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நான் வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன். இவர்களுக்கு அற்புதமான ஒத்திகையையும், வரவேற்பையும் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம் .

எல்லோரும் எங்களை கொக்கரித்துக் கொண்டிருந்தபோது மக்களிடத்திலிருந்து எங்களுக்கு பாராட்டுகள் வந்தன. தப்பித்துவிட்டோம் என நான் பெருமூச்சு விடவில்லை. நல்ல வழியில், நேர்வழியில் சென்றால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் புத்தி சொல்லவோ, அவர்களிடம் நாங்கள் மன்றாடவோ செய்யவில்லை. இதில், தமிழகமே மார்தட்டிக் கொள்ளலாம்.

14 மாதங்களில் என்ன முடியுமோ அதனை செய்திருக்கிறோம், வேறு எங்கும் இப்படியொரு சரித்திரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வேறு கட்சியிலிருந்து உடைந்து, கிழிந்து வந்த கட்சியல்ல இது. புதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான்.

மாற்றத்தை வேண்டி மக்கள் வாக்களித்தார்கள். மக்களின் வறுமையை வெல்வது கடினம் என்பதுதான் நாங்கள் கற்றுக்கொண்ட பெரும் பாடம். இத்தனை பணப்புயலுக்கு நடுவே இந்த இலக்கை நாங்கள் தொட்டதை பெரும் விஷயமாக கருதுகிறோம்" என கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

திமுக வெற்றி குறித்து அவர் கூறுகையில், "திமுகவின் வெற்றியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை. அரசியலில் அப்படி ஏமாற்றமெல்லாம் கிடையாது. 13 ஆண்டுகள் வனவாசம் இருந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். நாங்கள் பிறந்து 14 மாதங்கள் தான் ஆகியிருக்கின்றன. இது எங்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூடிய சூழலை மக்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

பாஜகவின் வெற்றி குறித்து தெரிவிக்கையில், "அந்த வெற்றி மக்களின் தீர்ப்புதான். ஆனால், அது தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்பதில்தான் எனக்கு சந்தோஷம். தமிழகத்திற்கு தனி வெற்றி" என்று கூறினார்.

பாஜகவின் 'பி' டீம் சர்ச்சை குறித்து பதிலளிக்கையில், "எல்லா பக்கமும் இந்த கேள்வியை கேளுங்கள். இந்த கேள்வி எங்களுக்கு சற்றே அவமானமாக இருக்கிறது. நாங்கள் நேர்மைக்கு 'ஏ' டீம். தமிழ்நாடை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும், வைத்திருக்க வேண்டியது பாஜகவின் கடமை.

வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக இதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இதுதான் பிரதமருக்கு என்னுடைய வேண்டுகோள்" என, கமல்ஹாசன் தெரிவித்தார்.

https://www.kamadenu.in/news/tamilnadu/30995-14.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.