Jump to content

வீடற்ற நிலையில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் யாழில் உள்ளனர் – புள்ளிவிபரம்


Recommended Posts

srilankas.jpg

யாழ்.மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

அவர்களுக்கு தற்போது 10 இலட்ச ரூபாய் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4 ஆயிரத்து 693 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களிற்குள் அதி கூடிய தேவை உடைய தொகை இதுவாகும்.

அதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 113 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. இது குறைந்தளவு தொகையாகும். நிதி மூலங்கள் கிடைக்கும் பட்சத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் பணிகளை முன்னெடுக்க முடியும்.

யாழ்.மாவட்டத்தில் வீடுகள் , காணிகள் இல்லாமல் அதிகளவானோர் வாழ்கின்றனர். அதில் காணிகள் இருந்தும் வீடுகள் இல்லாதோர் தொகை அதிகமாக உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வீடற்ற-நிலையில்-25-ஆயிரத்த/

Link to comment
Share on other sites

இலங்கை அரசையோ இல்லை தமிழ் அரசியல்வாதிகள் இதை தீர்ப்பார்களோ என எதிர்பார்ப்பதை  கைவிடல் வேண்டும்.

தாமே தமது அடைப்படை தேவைகளை ( உணவு , உடை, வீடு, ...) பூர்த்தி செய்யும் முறைகளை வழிகளை தேடல் வேண்டும்.

தனியார் மயம் ஊடாக தீர்வுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.