Jump to content

Recommended Posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்படுகின்றது. அத்துடன் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணியும் உடைக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கன்னியா வென்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்தாத பட்சத்தில் எதிர்வரும் வாரம் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120563?ref=rightsidebar

தமிழரின் பழம்பெரும் பூமிக்கு வந்த பேராபத்து; தமிழ் சட்டவாளர்களிடம் அவசர கோரிக்கை!

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மானப்பணிகளின் போது அங்கு காணப்பட்ட இந்துக்கோவிலின் அஸ்திவாரமாந்து உடைக்கப்பட்டு அதற்கு அருகே உள்ள சிவன் ஆலயத்தின் அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.

அதனை அடுத்து இன்று மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார வருகைதந்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்தார்.

கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் கடந்த ஒருவார காலமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் இவ் விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதனூடாக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் மீண்டும் அவ் அத்திவார உடைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதியில் இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும் எனும் காரணத்தால் அப்பகுதியின் புனரமைப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்ததோடு இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக தொல் பொருள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டபிள்யூ. சுமணதாச கரு த்துத் தெரிவிக்கையில்,

“கன்னியா பகுதியில் 5.7 ஏக்கர் காணிப்பகுதியானது அரசினால் தொல்பொருள் திணைக்களத்திற்கு அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியில் நாம் கடந்த 2016ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபின்னர், புனர் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள இருந்த வேளை, போதிய நிதிப்பற்றாக்குறை காரணமாக குறித்த பணிகள் பிற்போடப்பட்டு அவை மீண்டும் இப்போது ஆரம்பிக்கப்படுள்ளன. இதன்போதே குறித்த பகுதியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு தமிழ் சமூகத்தினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க தனது பேரனின் காலத்திலிருந்து 8ஏக்கரும் 22பேர்ச் அளவுடைய குறித்த காணியானது தம்மால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்காண காணி உறுதிப்பத்திரமும் தம்வசம் இருப்பதாகவும் குறித்த காணியின் உரிமையாளர் கணேஸ் கோகிலறமணி தெரிவித்தார்.

1985 களில் குறித்த பிள்ளையார் கோவிலானது பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் 2002ம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிக ளுக்காக குறித்த கோவிலானது இடிக்கப்பட்டபோது வில்கம் விகாரையின் பிக்குவால் இடையூறுகள் ஏற்படுத் தப்பட்டு சுமார் நான்கு வருடங்களாக அது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்றதா கவும் தெரிவித்தார்.

குறித்த வழக்கின் பிரதான சாட்சியாளரான தேரர், குறித்த வழக்கிற்கு வருகை தராததன் காரணமாக வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நான்கு வருடத்தின் பின்னர் குறித்த காணி தொல்பொருள் திணைக்களத்தினரால் சுவீகரிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.

அரசினால் எந்தவொரு காணியும் கைப்பற்றப்பட முன்னர் குறித்த காணியின் உரிமையாளாருக்கு அது தொடர் பிலான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டுமெனினும் இது தொடர்பிலான எந்தவொரு அறிவித்தலும் தமக்கு வழங்கப்படாது அடாத்தாக குறித்த காணி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டார்.

இதற்கு எதிராக வழகு தொடர்வதற்கு தமக்கு நீதித் துறையில் சிரேஷ்ட நிபுணர்களது உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/120616?ref=rightsidebar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொடிக்கு தந்தியடியுங்கோ .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் பார்லிமெண்டுக்கு போய் என்னத்தை புடுங்குதுகள் எண்டு எனக்கு தெரியேல்லை? 😡
அது......அது நான் சொன்னனே........அந்தக்காலம் எல்லாம் போயிட்டுது.....அவங்கள் சும்மா கொக்கரிச்சுப்போட்டு சம்பளம் எடுத்து சொகுசாய் வாழ்வாங்கள்.🤬
எங்கடையள் அரைப்பரப்பு காணிக்கு கோட்டு கச்சேரி  எண்டு ஏறி இறங்க வேண்டியதுதான்..:(

Link to comment
Share on other sites

 

சம்மந்தப்பட்ட பிரதேசத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தும் சம்மந்தன் இன்னும் வீரகேசரியில் இந்த செய்தியைப் படிக்கவில்லையாம்! அதனால் மோடிக்கு வாழ்த்திவிட்டு இன்னும் அரச சொகுசுகளை அனுபவித்தபடி நித்திரையில் இருக்கிறார்!

Link to comment
Share on other sites

பௌத்தமயமாகும் கன்னியா வெந்நீர் ஊற்று

 

Link to comment
Share on other sites

தமிழர் தலைநகரில் புராதன பிள்ளையார் ஆலயம் பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைப்பு!

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைக்க தொல்பொருள் திணைக்களம் துணை போகின்றது.

சட்டம் பௌத்தத்திற்கும் இந்துவிற்கும் இடையே பாகுபாடு காட்டுவதினால் இலங்கையில் எப்படி நல்லுறவு ஏற்படும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு 25ஆம் திகதி கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி ஆலயத்தின் அன்றாட பூசைக்கு நாம் சென்ற பொழுது எமது புராதன பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாம் “அதனை ஏன் உடைக்கின்றீர்கள்” என கேட்டோம்.

அதற்கு பதிளித்த சிலர் “இவ்விடத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளோம்” என தெரிவித்தனர்.

உடனடியாக அங்கிருந்து சென்று பலருக்கும் இதை தெரிவித்தேன். அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதை நிறுத்தினோம்.

எனினும் வரலாற்று பொக்கிசங்களையும் ஆலயங்களையும் தொல்பொருள் திணைக்களம் பௌத்த பிக்குமாரின் தலையீட்டின் காரணமாக அபகரித்து வைத்து அவற்றை உடைத்து அழிப்பதுடன், இந்த நிலை நீடித்துக்கொண்டே போகின்றமை இன நல்லுறவுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.

கன்னியா இந்துக்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான பாரம்பரிய இடம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதை அனைவரும் ஏற்கும் நிலையில் சில பௌத்த குருக்களின் அடாத்தான செயற்பாடுகள்லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இவை நிறுத்தப்பட வேண்டும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின்குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120854

Link to comment
Share on other sites

சம்பந்தனின் கோட்டையும் பறிபோகும் அபாயத்தில்! உடனடி தடுப்பு நடவடிக்கை அவசியமென எச்சரிக்கை!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கிண்ணியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது

தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மன்னன் இராவணனால், கிண்ணியா வெந்நீர் ஊற்று அமைக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவுகளின்படி அப்பகுதி தமிழர்களின் பாரம்பரியத்துடன் இரண்டறக் கலந்த மிக முக்கியமான பிரதேசமாக கொள்ளப்பட்டு வருகின்றது.

வராலாற்று சிறப்பு மிக்க இப்பகுதியை திட்டமிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் ஆசியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒருபோதும் நாட்டின் நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்காது என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையோரும் உணர்ந்து கொள்வது அவசியம். எந்தெவொரு மதத்துக்கும் எந்தவொரு மதவாதிக்கும் ஏனைய மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அந்த மத சின்னங்களை அழிப்பதற்கும் அதிகாரம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களால் இப்பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இவைகளை தடுத்து நிறுத்துவதற்கு அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் அதற்கு நிரந்தர தீர்வுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது கண்டனத்துக்குரியதாகும். இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்களும் இன்று ஆட்சியில் இருப்பவர்களும் தமிழ் மக்களின் மீது சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முற்பட்டதே இந்த நாடு கடந்த முப்பது ஆண்டுகளாக மிகப்பெரிய அவலங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை உளமார உணர்ந்தவர்களாக ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தென்படவில்லை. இந் நிலை மாற்றப்படவேண்டும்.

இந்நிலையில் தற்போது, குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு அப்பகுதியை கையகப்படுத்தும் செயற்பாடொன்று முழு மூச்சில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களும் தொல்பொருள் திணைக்களமும் காணியின் உரிமையாளரும் பிள்ளையார் ஆலய அறங்காவலருமான திருமதி.க.கோகிலறமணியிடம் இருந்து அக்காணியை பறிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.22பேர்ச் அளவுடைய இக்காணியை கோகிலறமணியின் பேரனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் இக்காணியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்களையே தேரர்கள் முன்னெடுத்திருந்தனர். எனினும் உரிமையாளரான கோகிலறமணி அதற்கு சம்மதித்திருக்கவில்லை.

இந்நிலையில், அக் காணியைக் கையகப்படுத்துவதற்கு முனையும் தேரர்களின் செயற்பாட்டுக்கு இசைவாக, அரசாங்கமும் வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதன்மூலம் வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கலை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு துணைபோகின்றது என்பது உறுதியாகின்றது.

வடக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்கள, பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான முறையான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என அடையாளம் காட்டி வரும் கூட்டமைப்பில் உள்ள தற்போதைய பிரதிநிதிகளும் தயாராக இல்லை.

ஆரம்பத்தில் தமிழர்களுக்கு தீர்வினைத்தரும் புதிய அரசியலமைப்பு வருகின்றது ஆகவே அரசாங்கத்தினை எதிர்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருந்து வந்தது. தற்போது அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து எதனையும் செய்வதாக இல்லை என்று நன்கறிந்த பின்னரும் அதே நிலைமையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தற்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கிண்ணியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது.இதேபான்று முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி புத்த சிலையும் கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு, இன நல்லிணக்கம் இவற்றை தற்போதைய ஆட்சியாளர்களிடத்திலிருந்தும் எதிர்பார்க்க முடியாதுள்ளது என்பது வெளிப்படையாகிவிட்ட நிலையில், ஆகக்குறைந்தது தமிழர்களின் இருப்பினையாவது பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அந்த வகையில் தனியாருக்குச் சொந்தமான கிண்ணியா பாரம்பரியப்பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விரைந்து செயற்பட வேண்டியுள்ளது. இல்லாது விட்டால் தமிழர்களின் வரலாறு செறிந்த திருமலை மாவட்டம் பறிபோய் தமிழர்கள் அநாதைகளாகும் நிலைமையே ஏற்படும் ஆபத்துள்ளது.

இனியும் அமைதியாக இருப்பதன் ஊடாக அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதிக்க விளைகின்றார்கள் என்ற கேள்வியே இங்கு எழுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/120910

Link to comment
Share on other sites

இந்துக்களின் பூர்வீகத் தலங்களுக்கு எதிரான மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

 

MP-Velukumar-720x450.jpg

தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அத்துடன், மதம் என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், அதை விளையாட்டுப் பொருளாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டிக் கிளை அலுவலகத்தில், இந்து மத செயற்பாட்டாளர்கள் சிலருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “போர்முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களும், அடையாளச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் எச்சங்களும் திட்டமிட்ட அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்துவருகின்றனர்.

மன்னார், திருகோணமலை உட்பட நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் இவ்வாறான அட்டூழியங்களை அரங்கேற்றுவது வேதனைக்குரிய விடயமாகும். சில அதிகாரிகளும் இதற்கு பக்கச்சார்பாகவே நடந்துகொள்கின்றனர்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுடன் தொடர்புடைய இறைத்தலங்களிலும், ஏனைய இடங்களிலும் ஆய்வுகளை நடத்தவேண்டுமெனில், அதற்கான நடைமுறைகள் உரியவகையில் பின்பற்றப்படவேண்டும். மாறாக மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.

அண்மையில் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கும் சோதனை வந்தது. குறித்த ஆலயம் உரிய வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கும் தொல்லியல் திணைக்களத்தினர் நுழைந்துள்ளனர். இதற்கு பிக்குமார் சிலரே பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளனர்.

எனவே, மதத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் எவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படக்கூடாது. அனுமதிக்கவும் முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்’’ என்று தெரிவித்தார்.

http://athavannews.com/இந்துக்களின்-பூர்வீகத்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/24/2019 at 9:39 PM, putthan said:

மொடிக்கு தந்தியடியுங்கோ .........

ரியூட்டரில கொழுவி விடுறது தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.