Jump to content

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் விடுதலைப்புலிகள் புகழ்ந்து பேசிய அமைச்சர்!


Recommended Posts

விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/120644

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களின் மிதவாத தலைவர், இவர் பிரபாகரனை சந்தித்தவர். சம்பந்தருடன் நல்ல தொடர்பில் உள்ளவர்.

ஹிஸ்புல்லா, ரிஷாட், அதாவுல்லாவின் அடாவடி அரசியலினால் ஓரம் கட்டப்பட்டார். ஜனாதிபதி தேர்தல் வரை இவர்கள் அரசியலில் இருப்பார்கள். அதன் பின்னர் சட்டம் அவர்களை கண்டு கொள்ளும்.

இப்போது அவர்கள் ஓரம்கட்டப்படுவதால், இவர் மீண்டும் முன்னணிக்கு வருகிறார்.

தமிழ் பேசும் மக்களாக இணைவது தான் வழி என்பது அவரது நிலைப்பாடு. அதற்க்கான அடித்தளமே இந்த சொல்லாடல். 

Link to comment
Share on other sites

8 hours ago, Nathamuni said:

தமிழ் பேசும் மக்களாக இணைவது தான் வழி என்பது அவரது நிலைப்பாடு. அதற்க்கான அடித்தளமே இந்த சொல்லாடல். 

நல்லது நடந்தால் மகிழ்ச்சி. ஆனால் நார்வே நாட்டின் அனுசரணையுடன் நடந்த முக்கிய பேச்சுவார்த்தைகளின் போதும் அதட்கு சில நாட்களுக்கு முன்னரும் இவருடைய செயல்பாடுகள் அவற்றை குழப்பும் நோக்கில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. முக்கியமாக திருகோணமலையில் நடந்த கடத்தல் நாடகம் ஒன்று இந்த பேச்சுகளில் பின்னடைவை தமிழர் தரப்புக்கு தந்திருந்தது. ஆனால் பேச்சு முடிந்த சில நாளில் இவரின் அமைச்சின் பின்னணியில் உள்ளவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என தெரியவந்தது. 

அரசின் ஒரு தரப்பாக பங்குபெற்றிய இவர் முஸ்லீம் சமாதான செயலகம் ஒன்று உருவாக்கியதன் பின்னர் தமக்குள் கடிபட்டு கொண்டனர். அந்த கடிபாடுகளை பேர்ச்சுவார்தை மேசையில் கொண்டுவந்து போட்டு தமிழர் தரப்பின் எரிச்சலை கூடியவர் இவர். ICG தனது அறிக்கையில் சுட்டிக்காடியது போல் பின்னர் தனி அலகு என்ற விடயம் பேச்சு மேசையில் வந்து நின்றது. இப்ப வகாபி மார்க்கத்தை பிடித்து அழகு பார்த்து விட்டுவிட்டு புலிகள் மேல் புகழ் படுகிறார். ஆனால் ICGன் 2006 ஆண்டு அறிக்கை காத்தான்குடியில் வகாபி போதனை நடைபெறுவதாகவும் அதனால் மோதல்கள் அங்கு வழமையாக நடக்கிறதென்றும் குறிப்பிட்டுளார்கள். 13 ஆண்டு  கழித்து இப்ப அவர்கள் முஸ்லீம் அரசியலுக்கு பாதகமாக வந்தவுடன் வேறுகதை. அன்று இவர் இந்த குளறுபடி சக்திகளை மீறி தனித்துவத்தை பேணியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திராது. அதுமட்டுமில்லாமல் அரசை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக இவர்கள் இருந்த நாட்களில் அதை இவர்கள் எப்படியாக பயன்படுத்தி இருந்தார்கள் என்ற ஒரு விமர்சனமும் உள்ளது. 

CGன் 2006 ஆண்டு அறிக்கை: https://www.refworld.org/pdfid/45a4af7f2.pdf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, puthalvan said:

நல்லது நடந்தால் மகிழ்ச்சி. ஆனால் நார்வே நாட்டின் அனுசரணையுடன் நடந்த முக்கிய பேச்சுவார்த்தைகளின் போதும் அதட்கு சில நாட்களுக்கு முன்னரும் இவருடைய செயல்பாடுகள் அவற்றை குழப்பும் நோக்கில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. முக்கியமாக திருகோணமலையில் நடந்த கடத்தல் நாடகம் ஒன்று இந்த பேச்சுகளில் பின்னடைவை தமிழர் தரப்புக்கு பின்னடைவை தந்திருந்தது. ஆனால் பேச்சு முடிந்த சில நாளில் இவரின் அமைச்சின் பின்னணியில் உள்ளவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என தெரியவந்தது. 

அரசின் ஒரு தரப்பாக பங்குபெற்றிய இவர் முஸ்லீம் சமாதான செயலகம் ஒன்று உருவாக்கியதன் பின்னர் தமக்குள் கடிபட்டு கொண்டனர். அந்த கடிபாடுகளை பேர்ச்சுவார்தை மேசையில் கொண்டுவந்து போட்டு தமிழர் தரப்பின் எரிச்சலை கூடியவர் இவர். ICG தனது அறிக்கையில் சுட்டிக்காடியது போல் பின்னர் தனி அலகு என்ற விடயம் பேச்சு மேசையில் வந்து நின்றது. இப்ப வகாபி மார்க்கத்தை பிடித்து அழகு பார்த்து விட்டுவிட்டு புலிகள் மேல் புகழ் படுகிறார். ஆனால் ICGன் 2006 ஆண்டு அறிக்கை காத்தான்குடியில் வகாபி போதனை நடைபெறுவதாகவும் அதனால் மோதல்கள் அங்கு வழமையாக நடக்கிறதென்றும் குறிப்பிட்டுளார்கள். 13 ஆனது கழித்து இப்ப அவர்கள் முஸ்லீம் அரசியலுக்கு பாதகமாக வந்தவுடன் வேறுகதை. அன்று இவர் இந்த குளறுபடி சக்திகளை மீறி தனித்துவத்தை பேணியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திராது. அதுமட்டுமில்லாமல் அரசை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக இவர்கள் இருந்த நாட்களில் அதை இவர்கள் எப்படியாக பயன்படுத்தி இருந்தார்கள் என்ற ஒரு விமர்சனமும் உள்ளது. 

CGன் 2006 ஆண்டு அறிக்கை: https://www.refworld.org/pdfid/45a4af7f2.pdf

 

இவர்கள் என்னதான் பேசினாலும், ஞானசேர தேரர் போன்ற அதி தீவிர வாதிகள் வெளியே விடப்பட்டதன் நோக்கம் இவர்களுக்கு புரியும்.

பிரித்தாளும் சூழ்ச்சியுடன், இஸ்லாமியர்கள் வியாபார ஆளுமை அடக்கி ஒடுக்கும்வரை, தமிழர்களை தமது பக்கத்தில் வைத்துக்கொள்ள, சிங்களவர்கள் முனைவர்.

இந்த தருணத்தில், தமிழ் பேசும் மக்களாக இணைந்து போரிடாமல் இருந்தால், அவர்களுக்கு தான் அழிவு கூட.

காரணம் உள்நாட்டு, வெளிநாட்டு அனுதாபங்கள் எதுவும் இன்றய நிலையில் முஸ்லிம்களுக்கு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் எந்த அளவிலும் ஒற்றுமையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவரின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது ஒரு பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #ISIS #eastersundayattacklk #LTTE #SLMC #ரவூப்ஹக்கீம் #தமிழீழவிடுதலைப்புலிகள்

http://globaltamilnews.net/2019/122675/

Link to comment
Share on other sites

ஹக்கீம் ஒரு சந்தர்ப்பவாதி!
சிங்களவனை உசுப்பிவிட ஒரு உண்மையை அவிட்டுவிட்டு பார்க்கிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, போல் said:

விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தலைவரால் அழைத்துப்பேசப்பட்டு

ஒற்றுமையாக

வலுவானதொரு  அமைப்புக்குள் பேச்சுவார்த்தை  தொடர

எடுக்கப்பட்ட முயற்சியை

தலைவரை  சந்தித்து  வந்து  சில  நாட்களிலேயே

தனி  அலகு  கேட்டு கெடுத்ததோடில்லாமல்

அதிலிருந்து  விலகி பலவீனப்படுத்தி

தொப்பி  பிரட்டிய சுயநலவாதி இவர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.