Jump to content

அன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை . 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள அப்பா, அம்மா ... இந்தா ஒரு அவஸ்தை JsiaxbKl.jpg, . 


எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு உறவினர் வீட்டில் ஒரு துன்பகரமான சம்பவம்.
நிகழ்வு அவர்களின் குடும்ப வாழ்க்கையை சூறாவளியாய் சுழட்டி அடிக்கிறது.
என்னிடம் துன்பத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்... என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை கேட்டு இருக்கிறார். 
நானும் எனது யாழ்களத்து சொந்தங்கள் உங்களிடம் இதை பகிறுகின்றேன். 
உங்கள் அனுபவங்கள், மன முதிர்வுகளினூடாக வெளிப்படும் கருத்துகளில் நல்லவற்றை அவரிடம் பரிந்துரைக்க நினைக்கின்றேன்.
உறவு யாழ்ப்பாணத்தில்தான் வாசிக்கின்றார். 2 மகள்கள். மூத்தவள் வயது 22, இளையவளுக்கு  இன்னும் மூன்று மாதங்களில் 18  வயது ஆகும். உறவு சுமாரான ஒரு தொழிலில் வாழ்க்கையை செவ்வனே கொண்டு நடத்துகின்றார். அவரின் மனைவி காலை, மாலை, இரவு, கோயில் , பூசை, அர்ச்சனை , விரதம், இதுவே அவரின் நாளாந்த வாழ்வு. 
ஒட்டு மொத்தத்தில் சூது வஞ்சகம் தெரியாத, மற்றவர் சோலி சுரட்டுக்கு போகாத பெற்றார்கள் இந்த இருவரும்.
அப்போ, அப்போ நானும் உதவிக்கு தேவை படும் பொழுது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கொஞ்ச பண உதவிகள் செய்வதுண்டு.
சரி சம்பவத்துக்கு வருவோம். 
இரண்டாவது மகள் (<18) கடந்த ஒரு வருடமாக ஒரு பையனுடன் காதல். படிப்பில் கவனம் குறைந்து O /L  பரீட்சசையில் பெரியபடியாக நல்ல புள்ளிகள் எடுக்காத நிலை.
குறிப்பிட்ட பையன் இன்னும் 20 வயதையும் தாண்டவில்லை. படிப்பிலும் நாட்டமில்லை. தவிர பையன் வேற்று மதத்தையும், சமூகத்தையும் சார்ந்தவராம். (இதை இங்கே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் - நான் மேலே சொன்ன சூறாவளிக்கு இதுவும் ஒரு காரணம்)
அரசல் புரசலாக இந்த விவரம் தெரிய வர பல முறை இது குறித்து குடும்பத்தில் விவாதங்கள், இது தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன. கண்காணிப்புகள் , தடைகள் என்பதையும்  தாண்டி இருவரின் காவிய காதல் தொடர்புகள் தொடந்து உள்ளன. பையன் 2, 3 கைத்தொலைபேசியை பல சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒருவகையில் இந்த பிள்ளையிடம் கொடுத்து அதன் மூலம் அன்றாடம் கதைத்து, பேசி "டெக்ஸ்ட்டித்து" வந்துள்ளான்.
தகப்பன் கஷ்டப்பட்டு வேலை வேலை என்று திரிய , தாயும் பக்தி மார்க்கத்தில் திரிய வீட்டில் தேவையான கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் காதலும் வரம்பு மீறி வளர்ந்திருக்கிறது. மூத்தமகளும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் , எதுவுமே காதில் எடுக்காத பட்சத்தில் ஒரேயடியாக தங்கையுடன் கதைப்பதையும் கூட தவிர்த்து விட்டாள்.
பெரியப்பாமார், சித்திமார், மாமாமார் , அப்பம்மா இப்படி நீண்ட பட்டியல் அவளுக்கு எத்தனையோ நல்ல புத்திமதிகளை எடுத்து சொல்லியும் இருக்கிறார்கள். 
ஒரு கட்டத்தில் 3 கைத்தொலைபேசிகளும் பறிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அடி, உதை கொடுக்கப்பட்டு, கொழும்புக்கும் ஊரு கடத்தப்பட்டு... ஆவண எல்லாம் செய்யப்பட்டு ...
இந்த காதல் மட்டும் அகோரமாக வளர்ந்த நிலையில் ... ஓரிரு கிழமைக்கு முன்னர் இந்த பிள்ளை வீட்டை விட்டு உடுத்த உடுப்போடு திரும்பியும் பார்க்காமல் அந்த பையனோடு ஓடியே போய்விட்டாள்!!!

இது நடந்தது யாழ்ப்பாணத்தில். கையிலே அடையாள அட்டை கூட இல்லாமல் ...
எல்லா இடத்தில தேடியும் 6,7 நாட்களாக பிள்ளை இன்னும் அகப்படவில்லை.
போலீசிலும் முறைப்பாடு செய்து , கொஞ்ச பணத்தையும் செலவு செய்து ஒரு மாதிரியாக இருவரையும் பிடித்து விட்டார்கள். பையனுக்கு  18 வயதுக்கு மேல் என்ற படியால்  அவனை ஒன்றுமே செய்யாது வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
பிள்ளையை ஒரு சிறுவர் சீர்திருத்த அமைப்பு ஒன்றில் கொண்டு போய் விட்டு இருக்கிறார்கள். அதுவும் 
அரச பாதுகாப்பான ஒரு அமைப்பு என்றும் கேள்வி.

சரி நடந்தது என்ன.....
இந்த பிள்ளை அங்கும் கூட ஒரு கை தொலைபேசியை களவாக எடுத்துச்சென்று அந்த பையனுடன் தொடர்பை ஏற்படுத்தி கச்சிதமான ஒரு திட்டம் வகுத்து மூன்றே நாளில் அந்த இடத்துக்கும் டாட்டா காட்டி விட்டு ஓடி போய் இருக்கிறாள்.!!!
ஏற்கனவே நடைப்பிணம் போல் இருந்த குடும்பம் இன்றைய நிலையில் தவிடு பொடியாக இருப்பதை போல சூழ்நிலை.
நடந்த சம்பவங்களை என்னால் கட்பனை செய்துகூடவும் பார்க்கமுடியாமல் இருந்தது.
அந்த பிள்ளையின் முகத்தில் இன்னுமே அந்த பருவத்துக்கான கலை வரவில்லை. மாறாக ஒரு பதின்ம வயது பிள்ளையை போலத்தான் இருப்பாள்.  சரியாக தேனீர் கூட வைக்க தெரியாதாம் என்று வேறு கதை.
 
இப்போது திரும்பவும் போலீஸ் அவர்கள் இருவரையும் தேடுகிறார்கள். குடும்பம் கண்ணீரில் தள்ளாடுகிறது.
நானும் எனக்கு தெரிந்த சில ஆறுதல்களை அறிவுரைகளை சொல்லி இருக்கிறேன்.

தவிர; இதுபோன்று பல நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் நிகழ்வதாகவும் தகவல். கைத்தொலைபேசி பாவனையும் இதற்கு முக்கிய ஒரு காரணம் என்றும் கேள்விப்படுகிறேன். 
சரி நீங்கள் என்னதான் அந்த குடும்பத்துக்கு சொல்ல நினைப்பீர்கள் ?  இப்படியான கலாச்சார சீரழிவுகளை எப்படித்தான் தடுக்கலாம் ...

கேட்க ஆவலாக இருக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

தவிர; இதுபோன்று பல நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் நிகழ்வதாகவும் தகவல். கைத்தொலைபேசி பாவனையும் இதற்கு முக்கிய ஒரு காரணம் என்றும் கேள்விப்படுகிறேன். 
சரி நீங்கள் என்னதான் அந்த குடும்பத்துக்கு சொல்ல நினைப்பீர்கள் ?  இப்படியான கலாச்சார சீரழிவுகளை எப்படித்தான் தடுக்கலாம் ...

சசி வர்ணம்! சமூகம் சமபந்தமான நல்லதொரு விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள்.
இப்படியான சம்பவங்கள் எமது மூத்ததுக்கு மூத்த சந்ததியிலிருந்தே நடந்தேறி வருகின்றது. இப்படி வீட்டைவிட்டு ஓடின சம்பவங்களால் பல கொலைகளே நடந்தேறியுள்ளது. அதுவும் சாதி மாறி ஒடிய ஓட்டங்களால். என்கண்ணெதிரே இன்னும் அந்த நான்கு சம்பவங்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இன்றைய காதலர்களுக்கு கைத்தொலைபேசி  இன்னொரு உதவியாக இருக்கின்றதே தவிர........உந்த ரன்னிங் கேஸ் மிக மிக பழமை வாய்ந்தது. இப்படியானவர்களை ஆக நெருக்கினால் தற்கொலை செய்து கொள்வார்கள். அவ்வளவுதான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு கு.சா அண்ணா.

நான் மேலே எழுதிய விடயத்தில் "பையனின் சமூகம்" என்ற அந்த விடயம் பெரிதாக அலட்டிக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. நாம் அனைவரும் தமிழர் அது ஒன்று தான் நிஜம்.

அவர்கள் தங்கள் உற்றாரினதும் , ஊராரினதும் சூடு சொல்லுக்குத்தான் பயப்படுகிறார்கள் போல தெரிகிறது. 
அதனையும்  விட முக்கியமான விடயம் மகளின் வயது இன்னும் 18ஐ கூட தாண்டவில்லை என்ற பயமும், என்ன ஆகும், ஏதாகும் என்ற கவலையும் தான் மேலோங்கி நிட்கிறது. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி,

1. இப்படி காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப்போய், ஊரே மெச்ச வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். இளவயதில் பிள்ளை, பின் பிரிவு என நாசமாய் போனவர்களும் இருக்கிறார்கள்.

2. சாதியத்தின் மீது எமக்கு பிடிப்பில்லை, நாம் எல்லோரும் தமிழர் என்பதெல்லாம் சரி, ஆனால் அந்த குடும்பம் நாளைக்கும் அதே ஊரில் வசவுகளை கேட்டபடிதான் வாழ வேண்டும். கூட இன்னொரு பெண்பிள்ளை வேறு கரைசேர வேண்டும்.

3. இதில் யாராலும் அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நான் அந்த தகப்பன் ஸ்தானத்தில் இருந்தால் என்ன செய்வேன்? என யோசித்ததில் மனதில் பட்டது:

பொடியனை கூப்பிட்டு கதைச்சு பார்ப்பேன். ஆள் அதிகம் மோசமில்லாட்டில், ஒரு கடையையோ எதையோ போட்டுக் கொடுத்து, கல்யாணத்தை முடித்து அருகிலேயே வைத்துக் கொள்வேன். உலகம் தெரியாத பிள்ளை என்க்கிறீர்கள், உதவாக்கரை பையன் - பெற்றார் ஆதரவும் இல்லாமல் போனால் அந்த பிள்ளையின் வாழ்க்கையே சூனியமாகப் போய்விடும். மகள் தன் தவறை உணரும் போது எல்லாம் ரூலேட் ஆகிவிடும். 

ஆகவே பிள்ளையின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்ய எது செய்ய வேண்டுமோ அதையே செய்ய வேண்டும்.

சாதி மாறிக் கட்டியதால் ஊர் தூற்றும், அவமானம் - இவை எல்லாம் இந்த குடும்பத்தை பொறுத்தவரை ஏற்கனவே கைமீறிப் போய்விட்ட விடயங்கள்.

பிள்ளையை ஒதுக்கி வைப்பதால் வரட்டு கெளரவம் மிஞ்சுமே ஒழிய, ஊர் வாயை அடைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில்...சில பெரியவர்கள் ...சமூகத்தில் மதிபுபு மிக்கவர்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் சொல்லுக்குப் பலர் கட்டுப்படுவார்கள்! இது ஒரு உத்தியோகப் பற்றில்லாத் கவுன்ஸிலிங் மாதிரி! இவ்வாறானவர்கள் யாராவது... இவர்களுடன் கதைத்து... இருவரையும் கொஞ்சக் காலம் பொறுத்திருக்கும் படி ஆலோசனை கூறலாம்! அவர்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்!

மதம் பற்றி எனக்குக் கவலையில்லை! மனிதனுக்காக மதம் என்பது மாறி.. மதத்துக்காக மனிதன் என்று மாறும் போதே..., மதம் அங்கு செத்துப் போய் விடுகின்றது! தெய்வம் மீண்டும் கல்லாகி விடுகின்றது என்பதே எனது நிலைப்பாடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொண்ணூறு வீதம் தடுக்க முடியாது.....இதைவிட மோசமாக நடந்த சம்பவங்களை எழுதலாம்....எனது பதிவுகள் உறவினர் பலருக்கும் தெரியுமென்பதால் எழுத முடியவில்லை..அந்தப் பெற்றோர்கள் கசப்போடும் கண்ணீரோடும் கடந்து போகத்தான் வேண்டும்.காதலை மூர்க்கமாக  எதிர்ப்பவர்கள் யாரென்று நினைக்கின்றிர்கள், ஏற்கனவே காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பெறோர்கள்தான்.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படியான விடையங்களுக்கு வரும் முன் காப்பது தான் சரி.அதாவது பிள்ளைகளுடன் நெருக்கமான நட்ப்பு ரீதியான உறவைப் பேணுவது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் உதே வயதைக் கடந்து தான் வந்தோம். அதுவும் யாழ் நகரில்.. அழகான ஒத்தவயதுப் பெண்களுக்கும் குறைவில்லை. ஆனாலும் இப்படி எல்லாம் செய்யத் தோன்றவில்லை. காரணம்.. வாழ்கை எப்படி ஆகுமோ என்ற ஒரு ஏக்கம்... விதைக்கப்பட்டிருந்தது. கல்வி பிரதானமாக கண் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

போர்ச் சூழலை சொல்ல முடியாது. அப்போதும் இப்படி ஓடியோர் பலர். இப்ப கைத்தொலைபேசி செய்வதை அப்போ கோவில் திருவிழாக்கள் செய்தன. 

அந்தப் பிள்ளைக்கு வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய தெளிவூட்டல் ஒன்றைத் தவிர.. வேறு எதுவும் உருப்படியான மாற்றத்துக்கு வழி வகுக்காது.

அந்தத் தெளிவூட்டலை எப்படிக் கொடுப்பது..??!

சரி.. ஓடிப் போறாய். கல்யாணம் கட்டுகிறாய்.. அடுத்து..???!

சரி குழந்தை.. அப்புறம்...????????!

இந்த 3 சாதாரண கேள்விகள் ஒரு மனிதனை சிந்திக்க வைக்கும்.. நிச்சயம். 

சரி அப்படியும் தெளிவு வரவில்லையா.. அவர்களை அவர்கள் எண்ணப்படி நீங்களே உங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பு என்று அவர்கள் தெரிவின் படி வாழ விட வேண்டியான். நிச்சயம்.. அவர்களா கஸ்டப்படாமல் அவர்கள் வாழ்க்கை இனிக்காது. எவர் வாழ்கையும் தான். அந்த நிலையை புரிகிற போது.. எல்லாம் தெளியும். 

வீணாகப் பெற்றோரும் மற்றப் பிள்ளைகளும்.. இது தொடர்பில் அதிகம் மன உளைச்சலுக்கு ஆகாது அவர்கள் அவர்களின் வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்ல வேண்டும். வாழ்கை சிறியது. அதில் பெரும் பகுதியை மன உளைச்சலுக்கு செலவு செய்வது அல்லது எதிர்பார்ப்புக்களோடு கடத்திச் செல்வது.. அதுவும் பிள்ளைகள் என்றாலும் அடுத்தவரிடம் எதிர்பார்ப்பது.. கால விரயமாகும். நமக்குச் சரியென்று தோன்றுவதை செய்து கொண்டு.. அடுத்தவருக்கு தொந்தரவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே போயிடனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுக்கு பிறந்ததால் 

சாதி 
மதம் 
பெற்று கொள்கிறீர்கள் 

குறித்த இடத்தில் பிறந்ததால் 
சமூகம் 
மொழி 
அறிவை 
பெற்று கொள்கிறீர்கள் 

சுயமாக 
பசி 
காதல் 
காமம் 
கோபம்  என்று அடுக்கிகொண்டு போகலாம்.
ஆனாலும் இவை ஒன்றோடு ஒன்று எதோ ஒரு நேர் கோட்டில் முட்டி மோதி கொள்கின்றன 
யாரோ வேறு வேறு சாதியில் காதலித்து ஓடியதுக்கு வாளை தூக்கி வெட்டபோய் ஜெயிலுக்கு 
சென்று வாழ்வை தொலைத்தவரக்ளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இவர்கள் சொந்த சாதி கொடுத்த 
வெகுமானம் சிறை வாழ்வு ஒன்றுதான்.  பிடித்தவருடன் வாழ போய் பிறந்த சாதி காரணமாக யாரோ ஒரு மூன்றாம் நபரால் வெட்டுண்டு இறந்தவர்களும் இருக்கிறார்கள். 
குமாரசாமி அண்ணர் எழுதியதுபோல்  கைத்தொலைபேசி தவிர்த்து எல்லாம் பழையானவைதான். 

இதில் அறிவுரை என்று பொதுவாக எழுதி யாருக்கும் பயன்பெற போவதில்லை 
இதில் அம்மா அப்பா பெண் பையன்  இவர்களுடைய உணர்ச்சி பிழம்புகள் எப்படியான 
நிலையில் இருக்கிறது என்று ஓரளவுக்கு தெரிந்த நீங்கள்தான் ஓர் முடிவை எட்ட முடியும் என்பதே 
என்னுடைய நிலைப்பாடு. அந்த பெற்றோரின் கையறு நிலைமை என்பதுக்கு மிகவும் மனம் வருந்துகிறேன் 
அவரவருக்கு இப்படியான சூழல் வரும்போதுதான் இதன் வலிகளை புரிந்து கொள்ள முடியும். 

சாதி குறைவு என்பதால் பல பள்ளி மாணவிகளை மன ரீதியாக எமது 
சமூகம் எவ்வளவு துன்பங்களை எந்த மனித மன சாட்சியும் அற்று கொடுத்தது என்பதை 
என் கண்ணால் பார்த்து இந்த யாழ் சமூகம் பற்றி எழுந்த கேள்விகளுக்கு நான் இன்னமும் பதில் 
காணவில்லை. 
யாரோ எங்கோ எப்போதோ விதைக்கும் விதை ஒரு மரமாகி எழுந்து நிற்கும்போது 
யாரோ எங்கோ செல்பவன் வந்து இளைப்பாறலாம். அதுவே ஒரு முள் மரமாக இருப்பின் யார் யாரோ 
சையிக்கிள் டயர்களை பஞ்சர் பண்ணி பயணத்தை கெடுக்கலாம். 

சமூகத்தில் இருக்கும் ஒவ்வரு விதையும் என்ன தன்மை கொண்டது என்பதை 
புரிந்து முளையிலேயே கிள்ளுவதும் நீர் ஊற்றி வளர்ப்பதும் ஒவ்வரு மனிதனின் கடமை. 
இது எதோ ஒரு வகையில் எல்லோரையும் வாழ்வின் எதோ ஒரு புள்ளியில் சந்த்திதே தீரும்.

குறித்த சம்பவம் 
சிறுவர் பராமரிப்பு மையம் 
போலீஸ் 
என்ற அளவில் சென்று விட்டதால்  பெண்ணுக்கு வயது 18 இல்லை என்ற காரணமும் இருப்பதால் 
சட்ட ரீதியாக பெற்றோருக்கு இதில் பல சாதகம் உண்டு. கோசன் அவர்கள் எழுதி கருத்தை உள்வாங்கி 
பையனை பற்றிய தகவல் எறிந்துவிட்டு .... சட்ட மூலம் அணுகுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் சின்னனில் இருந்து வளர்ப்பதில் தான் இருக்கு...கோசான் சொன்ன மாதிரி கடையை போட்டு கொடுத்து பக்கத்தில வைத்திருக்கலாம் அதே சமயம் அந்த பெட்டையையும் மேலே படிக்க ஊக்குவிக்கலாம் உண்மையிலேயே, உண்மையான காதலாயிருந்தால் அந்த பெடியன் சாதியில் குறைவாயிருந்தால் என்ன,வசதியில்,படிப்பில் குறைவாய் இருந்தாலும் அந்த பெட்டையை வைச்சு காப்பாத்துவான்...அதே வெறும் காமமாயிருந்தால் விட்டுட்டு ஓடிடுவான்...அந்த பெட்டைக்கு ஒரு இளிச்சவாயன் வெளி நாட்டு மாப்பிள்ளை கிடைக்காமலா போய் விடும் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

.அந்த பெட்டைக்கு ஒரு இளிச்சவாயன் வெளி நாட்டு மாப்பிள்ளை கிடைக்காமலா போய் விடும் ?

 

இதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

இதன் அர்த்தம் என்ன?

ஏன் உங்களுக்கு தெரியாதா மீரா?...அந்தப் பெண் காதலனோடு ஓடி இருக்கா...எப்படியும் அவனோடு உடலுறவு கொள்ளாமல் இருந்திருப்பாவா?... எத்தனை பேர் உண்மையை சொல்லி கல்யாணம் கட்டி வைப்பினம்? ... வெ.நாடு போய் புது வாழ்க்கை தொடங்கட்டும் என்று யாரையாவது பார்த்து கட்டி வைப்பினம்...இப்ப ஊர்ல அநேகமாய் அது தானே நடக்குது ..அந்த பெற்றோரை நான் குறை சொல்லவில்லை அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

ஏன் உங்களுக்கு தெரியாதா மீரா?...அந்தப் பெண் காதலனோடு ஓடி இருக்கா...எப்படியும் அவனோடு உடலுறவு கொள்ளாமல் இருந்திருப்பாவா?... எத்தனை பேர் உண்மையை சொல்லி கல்யாணம் கட்டி வைப்பினம்? ... வெ.நாடு போய் புது வாழ்க்கை தொடங்கட்டும் என்று யாரையாவது பார்த்து கட்டி வைப்பினம்...இப்ப ஊர்ல அநேகமாய் அது தானே நடக்குது ..அந்த பெற்றோரை நான் குறை சொல்லவில்லை அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் 

ஏன் விரும்பியவனுடன் உடலுறவு கொள்வது தவறா? அல்லது இங்கிருப்பவர்கள் திறமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

குமாரசாமி அன்னார் எழுதியதுபோல்  கைத்தொலைபேசி தவிர்த்து எல்லாம் பழையானவைதான்.

தயவு செய்து இந்த எழுத்துப்பிழையை சரியாய் எழுதி விடுங்கோப்பா....வாசிக்க எனக்கே ஒரு மாதிரிக்கிடக்கு......:(
இதை இப்பிடியே விட்டால் நாளைக்கு சனம் எனக்கு அஞ்சலி செலுத்தினாலும் செலுத்தும்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிள்ளையாக இருந்து ஊரில் இருந்திருந்தால் என்ன செய்வேனோ தெரியவில்லை. ஆனால் இப்ப இருக்கும் நிலைக்கு பெற்றோர் மகளையும் அந்த பெடியனையும் அங்கீகரித்து அனுசரித்து போவதே புத்தி என்று நினைக்கிறன். விஷயம் இவ்வளவு தீவிரமானத்துக்கு காரணமே கடுமையான கெடுபிடித்தான். அந்த வயதில் செய்யக்கூடாது என்று  சொல்லவதை தான் முன்னின்று செய்வார்கள். ஊரிலும் புலம் பெயர் சமுதாயத்திலும் மற்றவர்களுக்காக வாழ்வதே முதன்மய உள்ளது. எனது குடும்பம் என் பிள்ளை என்ற முக்கியத்துவம் அற்று மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்பதே எமக்கு முக்கியம். இந்த பெண் பிள்ளை செய்தது முற்றிலும் பிழையான விடயம். ஆனால் இது வயது கோளாறால் நடந்த ஒரு துரதிஷ்டம். நாங்களும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களை கடந்து வந்தவர்கள் தான். ஆனால் பெற்றோருக்கு மீறி ஒன்றும் செய்யக்கூடாது என்ற மனப்போக்குடன் வளர்த்த படியால் இப்படியான  தப்பான வலைகளில் விழவில்லை. இந்த பெண் விழுந்து விட்டார். இப்போது உள்ள ஒரே வழி அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவதுதான். விட்டால் அந்த பையன் பெற்றோர் ஆதரவு இல்லாத பெண் தானே என்று நாளை அவளை எதுவும் செய்து விடலாம். நடுத்தெருவில் விட்டும்  போகலாம். அப்போது நிலைமை இன்னும் மோசமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பக்க பெற்றோரின் ஆதரவு இல்லாமல்  கஷ்ட படுவார்கள் .நிச்சயம் பிள்ளை திரும்பி தாய் தந்தையிடம் வருவா ஒரு சில மாதங்களில் .     இது தடுமாறும் வயதுப் பிரச்சினை ..பெற்றவர்  மன்னித்து  ஆறுதலாக   இருந்து ..வழி நடத்த வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷானின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன்.

ஏற்கனவே, பொலிஸ்வரை போயும் பெண்பிள்ளை காதலில் தீவிரமாக இருப்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எதைச் செய்யமுடியுமோ அதைத்தான் இருபகுதி பெற்றோரும் செய்வது நல்லது.

சில விடயங்களில் தெளிவு இல்லை.

பெண்ணுக்கு 18 ஆகவில்லை என்றால் புரியாத வயதுப்பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக செயற்பட சட்டம் இல்லையா? பொலிஸ் ஒன்றும் செய்யாமல் விட்டது அப்படி எதுவும் இல்லை என்றுதான் சொல்கின்றது.

பையனின் பெற்றோர், உறவினர்கள் இந்த காதல் பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்றும் தெரியவில்லை.

 

மேலும், இளவயதுத் திருமணம்  ஒரு பொறுப்பை இருவருக்கும் கொடுக்குமானால் வாழ்வில் நன்றாக வருவார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வில்லாமல் போகும்போது, குடும்பம் என்பதன் சுமை பாரமாக உணரும்போது, அதற்கேற்ப பொருளாதாரம் இல்லாதபோது வாழ்வு கசக்கும். இதை என் கண்ணால் ஊரிலும் புலம்பெயர்ந்த நாட்டிலும் பார்த்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயது அலைபாயும் மனதுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் விடயம் கைமீறிப்போய்விட்டது. இருதரப்பும் இணைந்தோ அல்லது தனித்தோ ஆரோக்கியமான முடிவெனில் இருவரது காதலையும் ஏற்கிறோம் என்ற உறுதிமொழியைக் கொடுத்து, முதலில் பெண்பிள்ளை படிப்பை முடிப்பதோடு, ஆண்பிள்ளை தன்னை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்தி உரிய காலத்தில் இருவரையும் திருமணத்தில் இணைத்து விடலாம். இந்தக் கால இடைவெளியில் இருவரது முதிர்வுநிலை உறவுநிலையில்கூடத் தெளிவைத் தரலாம். பொறுப்புகள் பற்றி சிந்திக்கவும் செயற்படவும் ஒரு கால அவகாசமாகவும் அமையலாம். அதேவேளை பலரது கருத்தின்வழியே தெளிந்த குமுகாய அமைப்புமுறையினை உருவாக்குதலும் அவசியமாகின்றது என்பதையும் உணரமுடிகிறது. 

முன்பென்றால் பாட்டா பாட்டி என்ற வடிவில் ஒரு அமைதியான ஆனால் கண்டிப்புடன் கூடிய ஆளுமைகள் அப்பப்போ கொடுக்கு உளஉரணும் கண்காணிப்புகளும் சரியான வழியிலே செல்ல உதவியது. அது குடும்பப் பாதுகாப்பரணாக மட்டுமன்றிக் குமுகாயப் பாதுகாப்பரணாகவும் இருந்தது.   

ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமொன்று சாதி மதமென்று பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது என்பதே உண்மை. புரிந்துகொள்ளுமா ஈழத்தமிழினம் என்பது புரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

ஏன் விரும்பியவனுடன் உடலுறவு கொள்வது தவறா? அல்லது இங்கிருப்பவர்கள் திறமா?

18 வயசுக்கு மேற்பட்டவர்கள் என்றால் விரும்பியவர்களுடன் உடலுறவு கொள்வதை ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் இங்கு இப் பெண் ஒரு சிறுமி...இங்கிருப்பவர்கள் திறம் என்று நான் எழுதவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

தயவு செய்து இந்த எழுத்துப்பிழையை சரியாய் எழுதி விடுங்கோப்பா....வாசிக்க எனக்கே ஒரு மாதிரிக்கிடக்கு......:(
இதை இப்பிடியே விட்டால் நாளைக்கு சனம் எனக்கு அஞ்சலி செலுத்தினாலும் செலுத்தும்....😎

எழுதியவருக்கு நன்றி போட்டிருக்கேன். சாமியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

18 வயசுக்கு மேற்பட்டவர்கள் என்றால் விரும்பியவர்களுடன் உடலுறவு கொள்வதை ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் இங்கு இப் பெண் ஒரு சிறுமி...இங்கிருப்பவர்கள் திறம் என்று நான் எழுதவில்லை 

 

நீங்கள் ஆரம்பத்தில் எழுதியதற்கும் இதற்கு தொடர்பு உண்டா????

18 வயதிற்கு உட்பட்ட உடலுறவு கொண்டவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தானா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

நீங்கள் ஆரம்பத்தில் எழுதியதற்கும் இதற்கு தொடர்பு உண்டா????

18 வயதிற்கு உட்பட்ட உடலுறவு கொண்டவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தானா?????

சில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டணில், தமிழ் குடும்பம், பெட்டை 16 வயது. அவரோ வேறுமதம், சமூகம், கிட்டத்தட்ட பெட்டையிலும் பார்க்க டபுள் வயது, 30.

முகப்புத்தகம் மூலம் வயது குறைந்தவராக நடித்து பெட்டைய மடக்கினது மட்டுமல்லாமல், கொண்டு ஓடியும் விட்டார்.

போலீசார் பெரிசா மினக்கெடவில்லை.

பெற்றோர் இனவாத காரணமோ என்று கூட  நினைத்தார்கள்.

இறுதியாக பெற்றோரை அழைத்தார்கள். நாம் இருவரையும் அழைத்து பேசினோம்.

அவருக்கு சட்டம் தெரியும் என்பதால், பாலியல் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது. (மருத்துவ சோதனை மூலம், போலீஸ் சொன்னது).

தான் எங்கேயோ வழி தவறி போனதாகவும், அவர் தனக்கு திரும்பிவர லிப்ட் தந்து உதவியதாகவும், வழியில் கார் பழுதாகியதால், வீட்டுக்கு வரமுடியாமல், மோட்டலில் தங்கி விட்டதாகவும், ‘சட்டத்துக்கு’ விளக்கம் தருகிறார்கள். ஆனாலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள், காதலில் இருக்கிறார்கள்.

பிரித்து அனுப்பினால், மறுபடியும் இதுவே தொடரும். மனக்கவலையும், நேரவிரயமும் தான் மிஞ்சும்.

அவர்களை கூப்பிட்டு, வாழ்க்கை திட்டம் என்ன? வீட்டு வாடகை, சாப்பாடு, உடுப்பு, பயண செலவுகள் திட்டம் என்ன. கலியாண செலவு எப்படி, யார், யாரை அழைப்பீர்கள் என யதார்தமான கேள்விகளை வைத்து, அதற்கான பதிலை சொல்ல அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

அவர்களை தகப்பன் அழைத்த போது, நாம் இணைபிரியா காதலர்கள், செத்தாலும் சாவோம், பிரித்துவிடாதீர்கள்.... என்று வசனங்களை மனப்பாடம் செய்து வந்தவர்களுக்கு, இந்த யதார்தமான நிதானமான கேள்விகள் சம்மட்டியாக இறங்கி வேறுவிதததில் சிந்திக்க வைத்தது.

தம்பி, வாடகைக்கு வீடு எடுக்க அட்வான்ஸ் காசு இல்லை என்று சொல்கிறீர். எனது பிள்ளை பட்டிணி கிடக்காமல் இருப்பாள் எண்டதை உறுதி செய்து கொண்டு வாரும், அது வரை பிள்ளை படிக்கட்டும் என்று சொல்ல, இருவரும் சம்மதித்தனர்.

இரண்டு மாதத்தில் சிந்திக்க ரேரம் கிடைத்ததால், தாமாகவே பிரிந்து விட்டனர்.

பலருக்கு தெரியாமல் முடிந்த கதை இது.

தகப்பன், இதை சிறப்பாக கையாண்டிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிரிந்தன பிரச்சனையாக பெண்ணின் பெற்றோருக்கு தோற்றமளிப்பதுவும், தடங்கலாகவும் இருப்பது சாதி.

மறுவளமாக, பெண் 18 வயது அடையாவிட்டாலும், ஆண் சராசரி வருமானத்திழும் அதிகமாக white collar வேளையில் உழைப்பவராய் யிருந்தால், இந்த சாதி என்பது இரண்டாம் பட்சமாகவே அநேகமாக கருத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.

இருவரையும் அழைத்து, இரு வீட்டாரும் முன்னிலையிலும் இருந்தால் இன்னும் நன்று, , வாழ்கைக்கு வேண்டிய வரவு செலவு திட்டத்தையும் விலா வாரியாக நாதமுனி சொல்லியபடியே அவர்கள் இருவரிடமும், குறிப்பாக ஆணிடம், எப்படி வாழ்க்கையை கொண்டு நடுத்துவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கலாம்.

உணர்ச்சி வசப்படாமல் இதை அணுக வேண்டும்.

பெண்ணின் தந்தை, ஆண் படித்து ஏதாவது ஓர் துறையில் வேலை எடுப்பதத்திற்கு கூட உதவி செய்வதத்திற்கு தயார் என்றும் சொன்னால், பெண் மற்றும் ஆண் சிந்திபதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சாதி இதில் இரண்டாம் பட்சமே.

பெண்ணின் தந்தை, தனது மக்களின் வாழ்க்கையை, தன்னால் இயலுமானவரை,  எப்படி ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக ஆக்கலாம் என்பதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலண்டணில், தமிழ் குடும்பம், பெட்டை 16 வயது. அவரோ வேறுமதம், சமூகம், கிட்டத்தட்ட பெட்டையிலும் பார்க்க டபுள் வயது, 30.

முகப்புத்தகம் மூலம் வயது குறைந்தவராக நடித்து பெட்டைய மடக்கினது மட்டுமல்லாமல், கொண்டு ஓடியும் விட்டார்.

போலீசார் பெரிசா மினக்கெடவில்லை.

பெற்றோர் இனவாத காரணமோ என்று கூட  நினைத்தார்கள்.

இறுதியாக பெற்றோரை அழைத்தார்கள். நாம் இருவரையும் அழைத்து பேசினோம்.

அவருக்கு சட்டம் தெரியும் என்பதால், பாலியல் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது. (மருத்துவ சோதனை மூலம், போலீஸ் சொன்னது).

தான் எங்கேயோ வழி தவறி போனதாகவும், அவர் தனக்கு திரும்பிவர லிப்ட் தந்து உதவியதாகவும், வழியில் கார் பழுதாகியதால், வீட்டுக்கு வரமுடியாமல், மோட்டலில் தங்கி விட்டதாகவும், ‘சட்டத்துக்கு’ விளக்கம் தருகிறார்கள். ஆனாலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள், காதலில் இருக்கிறார்கள்.

பிரித்து அனுப்பினால், மறுபடியும் இதுவே தொடரும். மனக்கவலையும், நேரவிரயமும் தான் மிஞ்சும்.

அவர்களை கூப்பிட்டு, வாழ்க்கை திட்டம் என்ன? வீட்டு வாடகை, சாப்பாடு, உடுப்பு, பயண செலவுகள் திட்டம் என்ன. கலியாண செலவு எப்படி, யார், யாரை அழைப்பீர்கள் என யதார்தமான கேள்விகளை வைத்து, அதற்கான பதிலை சொல்ல அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

அவர்களை தகப்பன் அழைத்த போது, நாம் இணைபிரியா காதலர்கள், செத்தாலும் சாவோம், பிரித்துவிடாதீர்கள்.... என்று வசனங்களை மனப்பாடம் செய்து வந்தவர்களுக்கு, இந்த யதார்தமான நிதானமான கேள்விகள் சம்மட்டியாக இறங்கி வேறுவிதததில் சிந்திக்க வைத்தது.

தம்பி, வாடகைக்கு வீடு எடுக்க அட்வான்ஸ் காசு இல்லை என்று சொல்கிறீர். எனது பிள்ளை பட்டிணி கிடக்காமல் இருப்பாள் எண்டதை உறுதி செய்து கொண்டு வாரும், அது வரை பிள்ளை படிக்கட்டும் என்று சொல்ல, இருவரும் சம்மதித்தனர்.

இரண்டு மாதத்தில் சிந்திக்க ரேரம் கிடைத்ததால், தாமாகவே பிரிந்து விட்டனர்.

பலருக்கு தெரியாமல் முடிந்த கதை இது.

தகப்பன், இதை சிறப்பாக கையாண்டிருந்தார்.

நாதம், 

நீங்கள் எழுதியது எல்லாமே நடைமுறையில் நடக்காத விடயங்கள்.

1. 16 வயது தாண்டி விட்டால் (15 முடிந்து 16ம் பிறந்த தினத்தோட) இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் உரிமை வந்து விடும். 16 வயதுக்கு மேற்பட்ட இருவரை, பெண்ணாக தான் வல்லுறவுக்கு உள்ளானதாக சொல்லும் வரை, நீங்கள் உடலுறவு கொண்டீர்களா என ஒரு போதும் பொலீஸ் கேட்காது. இதில உடலுறவு நடந்ததா இல்லையா எனும் சோதனையை பொலீஸ் செய்தது என்பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இப்படி நடந்திருந்தால் இந்த பெண் நஸ்ட ஈட்டாக பெரும் தொகை பெறலாம். ஆனால் ஒரு போதும் இதை பொலீஸ் செய்யாது. இதுவே இருவரில் ஒருவர் 16 க்கு குறைந்தவர் என்றால் கதையே வேறு. Age of consent 16. அதுக்கு கீழே இருப்பவருடன் உடலுறவு வைப்பது statutory rape. ஆகவே முதலாவது கேள்வியே உடலுவை பற்றியதாகவே இருக்கும்.

2. இதில் இந்த மோட்டல் கதை எங்கே வருகிறது? ஒரு 16 வயது பெண்ணும் 30 வயது ஆணும் சுய விருப்பில் என்னவும் செய்யலாம். பொலீஸ் முதலாவதாக வயதை செக் பண்ணும், பின் இருவரிடமும் சுயவிருப்பிலா போனீர்கள் என கேட்க்கும். அத்தோடு பைலை மூடிவிடும். லிப்ட், மோட்டல் எந்த “சட்டத்துக்கேற்ற விளக்கமும்” கொடுக்கத் தேவையில்லை.

3. பொலீஸ் பெற்றாருக்கு இப்படி கேள்வி கேளுங்கள் என்று அட்வைஸ் செய்தது என்பது இன்னொரு நம்ப முடியாத விடயம். இது சினிமாவில் வரும் தமிழ்நாட்டு பொலீசல்ல. They are both above the age of consent. We won’t get involved in this matter. It’s a family dispute என்று கதையை முடிப்பதுடன், மீறி தடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.

4. லண்டலில் கார் வைத்து ஓடும் ஒரு 30 வயது இளந்தாரி வாடகை கொடுக்க அட்வான்ஸ் இல்லாமல் இருப்பதா? அட்லீஸ்ட் ஒரு வீட்டில் ஒரு அறைக்காவது?

5. லண்டலில் 16 வயது, பள்ளிகூடம் ஏல் படிக்கும் புள்ளை, மோட்டலில் தங்கும் அளவுக்கு கில்லி, இங்கே எழுதுபவர்களை விட, சட்டமும், பொது அறிவும் இந்த பிள்ளைக்கு இருக்கும். உங்கள் உடம்பு உங்கள் உரிமை என 10 வயதிலேயே எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். இந்த பிள்ளையும், ஒரு 30 வயது ஆளும் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துணிந்த பின், அப்பாவின் கதையை கேட்டு பிரிந்தார்கள் என்பதும் நம்பக் கடினமானதே.

6. நீங்கள் சொல்லும் இந்த கதையில் அவர்கள் பிரிய வேறு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டிருக்கலாம். சலித்துப் போயிருக்கலாம். இங்கே யூகேயில் இது பெரிய மேட்டர் இல்லை. கோவிலில், தமிழ் பள்ளியில் சில சனம் குசுகுசுக்கும். தாய் தேப்பன் தமிழ் சனத்துக்கு ஒழிச்சி திரியவும் கூடும். ஆனால் அந்த பிள்ளைக்கு இது சப்பை மேட்டர். அவரை சுற்றி இருக்கும் உலகுக்கும் அப்படியே. பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதிருக்கும்.

ஆனால் ஊரில் நிலைமை அப்படி அல்ல. ஊரே கூடி முதுகுக்கு பின்னால் கதைக்கும். மூத்த பிள்ளைக்கு அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல வரன் அமைவது என்பது முயல்க்கொம்பாய் ஆகிவிடும்.

தவிரவும், இப்படி ஓடிப்போகும் அளவுக்கு காதல் வயப்பட்டவர்களுக்கு மோகம் ஒருபோதும் 30 நாளில் தீராது. எப்படியும் ஒரு 3 வருடம் ஓடும். அதுகுள்ள என்ன கூடாத விளைவுகள் ஏற்பட வேண்டுமோ எல்லாம் ஏற்பட்டு விடும். அதற்கு பின் பிள்ளை திரும்பி வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஓடிப்போய், மனைவியை படிப்பித்து டாக்ரர் ஆக்கியவர்களும் இருக்கிறார்கள், எல்லா பொருத்தமும் பார்து கல்யாணம் கட்டிய மனைவியை வைத்து சூதாடியவர்களும் இருக்கிறார்கள். 

Everything is case-specific and facts-sensitive. பிள்ளையின் நல்வாழ்வு என்ற ஒற்றை குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படுவதே ஒரே வழி.

பிகு: மேலே சொன்ன கருத்துகள் உங்களை பழிக்கும் எண்ணத்தில் எழுதியவை அல்ல. நீங்கள் அண்மையில் எனக்கும் நேற்று ரதிக்கும் சொன்னீர்கள் “மட்டம் தட்டி எழுத வேண்டாம்” என்று. இதனாலே இந்த கருத்தை 3 தடவை எடிட் செய்து எழுதினேன். ஆனால் முற்றிலும் தவறான தகவல்களை பகிரும் போது சும்மா கடந்து போகவும் மனம் ஒப்பவில்லை. இந்த மனநிலை வரும் போது அநேகமாக யாழில் இருந்தும், வாழ்கையில் இருந்தும் ஒதுங்கிவிட வேண்டியதுதான் போலும் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.