Jump to content

பேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை

 

நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சிறைத்­தண்­டனை  அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­ தேரர்  பொது­மன்­னிப்பில்  விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இவ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கு­வ­தற்­கான  ஆவ­ணங்­களில்   நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   கைச்­சாத்­திட்­ட­தை­ய­டுத்து நேற்று அவர் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். 

61020911_677820125989505_897835155284662 

61068064_2192412740877423_84157122114601

60930376_444958802964057_855553139715289

நீதி­மன்றை  அவ­ம­தித்­த­தாக   குற்­றம்­சாட்­டப்­பட்டு  தாக்கல் செய்­யப்­பட்ட   வழக்கில்   அனைத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும்   அவரை  குற்ற­வா­ளி­யாக கண்ட  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம்   அவ­ருக்கு  19 வரு­ட­கால  சிறைத் தண்­டனை விதித்து கடந்த  2018ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம்  8ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.  நீதி­மன்ற அவ­ம­திப்பு உள்­ளிட்ட நான்கு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட இந்த சிறைத் தண்­ட­னையை   ஆறு­ வ­ரு­டங்­களில்   அனு­ப­விக்­க­வேண்டும்  என்று அப்­போ­தைய  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின்   தலைமை நீதி­ப­தியும்  தற்­போ­தைய  உயர் நீதி­மன்ற   நீதி­ய­ர­ச­ரு­மான   ப்ரீதி  பத்மன் சூர­சேன  மற்றும்  ஷிரான் குண­ரத்ன  ஆகியோர் அடங்­கிய  நீதி­ப­திகள் குழாம்  கட்­ட­ளை­யிட்­டி­ருந்­தது. 

2016ஆம் ஆண்டு  ஜன­வரி 25 ஆம் திகதி  ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற   தனக்கு சம்­பந்­தமே இல்­லாத வழக்­கொன்றில் ஆஜ­ராகி நீதி­மன்றின்  கௌரவம், மற்றும் சட்­டத்தின் ஆட்­சிக்கு  சவால்­ வி­டுத்­த­மையின் மூலம் மன்றை அவ­ம­தித்­தமை, எக்­னெ­லி­ய­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை  குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு   எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது அதனை  நெறிப்­ப­டுத்­திய  அரச சிரேஷ்ட சட்­ட­வாதி  திலீப பீரிஸை  முறை­யற்ற வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பயன்­ப­டுத்தி   திட்டி அவ­மா­னப்­ப­டுத்­தி­யமை, நீதி­மன்ற கட்­ட­ளைக்கு  செவி­சாய்க்­காமை,  நீதி­மன்ற சுயா­தீன  தன்­மைக்கு சவால் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் அர­சி­ய­ல­மைப்பின்  105 ஆவது  அத்­தி­யா­யத்­திற்கு அமை­வாக  சட்­டமா அதி­ப­ரினால்  ஞான­சார தேரருக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இந்த நான்கு குற்­றச்­சாட்­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி  நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து  அவ­ருக்கு  முதலாம் இரண்டாம்  குற்­றங்­க­ளுக்கு தலா நான்­கு­ வ­ருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் மூன்றாம் குற்­றத்­திற்கு ஆறு­வ­ருட  கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும்  நான்­கா­வது குற்­றத்­திற்கு ஐந்து வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னை­யு­மாக மொத்தம் 19 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை  விதித்து நீதி­மன்றம்  தீர்ப்­ப­ளித்­த­துடன் அதனை ஆறு­வ­ரு­டங்­களில்   அனு­ப­விக்­க­வேண்­டு­மென்றும்   உத்­த­ர­விட்­டது. 

இந்த  கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையை  பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் அனு­ப­வித்து வந்த நிலை­யி­லேயே தற்­போது   அவர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.  கல­கொட அத்தே ஞான­சார தேரர் சிறைத் தண்­டனை   பெற்­ற­தை­ய­டுத்து  அவ­ருக்கு  ஜனா­தி­பதி  பொது­மன்­னிப்பு வழங்­க­வேண்­டு­மென்று  பல தரப்­பி­னரும்  கோரிக்­கை­களை  முன்­வைத்­து­ வந்­தனர்.  முன்னாள் நீதி­ய­மைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ   இந்த விடயம் தொடர்பில்  பல தட­வைகள்  பகி­ரங்­க­மாக   வலி­யு­றுத்­தி­ வந்தார். கடந்த சுதந்­திர  தினத்­திற்கு முன்னர் ஞான­சார தேரரை விடுவிக்­க­வேண்­டு­மென்றும்  அவர் கோரி­யி­ருந்தார். 

இதே­போன்றே  மேல்­மா­காண ஆளுநர்  அசாத் சாலி   உட்­பட  பல முக்­கி­யஸ்­தர்கள் சிறைச்­சா­லையில்  ஞான­சார தேரரை சென்று   பார்த்து  பேசி­ய­துடன்   அவரை  விடு­விக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும்   வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.   இத­னை­விட பொது­ப­ல­சேனா உட்­பட பல   பௌத்த    பேரி­ன­வாத அமைப்­புக்கள்    ஞான­சார தேரரின்   விடு­தலை தொடர்பில்  தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தன. பல  போராட்­டங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. 

ஆளும் கட்சி   மற்றும் எதிர்க்­கட்சி  அமைச்­சர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் பலரும்   தேரரின்  விடு­தலை தொடர்­பாக   கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.  பெரு­ம­ள­வானோர் இந்த விட­யத்தில்  எதிர்ப்­புக்­களை    தெரி­விக்­காத நிலையில்  சாத­க­மான கருத்­துக்­க­ளையே கூறி­வந்­தி­ருந்­தனர்.  

இந்த நிலை­யில்தான் தற்­போது ஒன்­பது மாதங்கள் சிறைத் தண்­டனை  அனு­ப­வித்த நிலையில்  ஞான­சார தேரர்  விடுவிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்த    செயற்­பா­டா­னது  பெரும் சர்ச்­சை­களை  தற்­போது  ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.   நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  எந்­த­வொரு தண்­டனை பெற்ற கைதிக்கும்  பொது­மன்­னிப்பு  அளிக்க முடியும்.  அர­சி­ய­ல­மைப்பில்  அது  உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால்   நீதி­மன்­றத்தை   அவ­ம­தித்த குற்­றச்­சாட்டின் பேரில்  கடூ­ழிய சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்த   ஞான­சார தேர­ருக்கு  ஜனா­தி­பதி   பொது மன்­னிப்பு வழங்­கி­யது  சரியா தவறா என்ற சர்ச்சை தற்­போது  எழுந்­தி­ருக்­கின்­றது. 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பொது­ப­ல­சேனா அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.   இந்த அமைப்பின் செய­லா­ள­ராக  பத­வி­வ­கித்த  கல­கொட அத்தே ஞான­சார தேரர்  சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு அதுவும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான  செயற்­பாட்­டினை மேற்­கொண்­டி­ருந்தார்.   இவ­ரது தலை­மை­யி­லான  பொது­ப­ல­சேனா அமைப்­பினர்   முஸ்லிம் மக்­க­ளுக்கு    எதி­ரான கருத்­துக்­களை  தெரி­வித்து வந்­த­துடன்  அவர்­களை   தீவி­ர­வாத கண்­ணோட்­டத்­துடன்   பார்த்து வந்­தனர்.  

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில்  தம்­புள்ளை பள்­ளி­வாசல் முதல் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை  தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.  ஹலால்  பிரச்­சினை   பூதா­க­ர­மாக்­கப்­பட்டு   முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களும்  அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தன.  அளுத்­கம, தர்­கா­நகர்,  பேரு­வளை  பகு­தி­களில்   முஸ்லிம் மக்­களை இலக்­கு­வைத்து  வன்­முறை இடம்­பெற்­றி­ருந்­தது.    பொது­ப­ல­சேனா அமைப்­பினர் அங்கு  திட்­ட­மிட்­ட­வ­கையில்  கூட்டம் நடத்த  முயன்­ற­தை­ய­டுத்தே   இந்த வன்­முறை  ஏற்­பட்­டி­ருந்­த­தாக   குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. 

இதே­போன்றே முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பல்­வேறு செயற்­பாடு­களில்   பொது­ப­ல­சேனா உட்­பட  பல பேரி­ன­வாத அமைப்­புக்கள்  கடந்த ஆட்­சியில்   செயற்­பட்டு வந்­தி­ருந்­தன.   முஸ்லிம்  தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக தாம்  போரா­டு­வ­தாக தெரி­வித்தே பொது­ப­ல­சேனா  அமைப்­பினர் அப்­போது செயற்­பட்டு வந்­தனர். 

இந்த பின்­ன­ணி­யில்தான்  ஆட்­சி­மாற்றம்  ஏற்­பட்­ட­தை­ய­டுத்து   பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரின் செயற்­பா­டுகள்  ஓர­ள­விற்கு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தி­ருந்­தது.  ஆனாலும்   நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்று இரண்டு வரு­டங்­க­ளுக்குப் பின்னர் மீண்டும்   கல­கொட ஞான­சார தேரர் தலை­மை­யி­லான   பொது­ப­ல­சே­னா­வி­ன­ரது செயற்­பாடு தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தது. 

இந்த நிலை­யி­லேயே  நீதி­மன்ற  அவ­ம­திப்பு குற்­றச்­சாட்­டுக்கு இலக்­கான ஞான­சார  தேரர் சிறைக்கு செல்ல வேண்­டிய நிலைமை   ஏற்­பட்­டது.   முஸ்­லிம்­க­ளி­டையே தீவி­ர­வாதம்   வளர்ந்து வரு­வ­தாக பொது­ப­ல­சேனா அமைப்­பினர் தொடர்ச்­சி­யாக குற்­றம்­சாட்டி வந்­தனர்.  இதனால்   முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளிலும் அவர்கள்  ஈடு­பட்டு வந்­தனர்.  

தற்­போது  உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற   தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து  பொது­ப­ல­சே­னா­வி­ன­ரது அன்­றைய செயற்­பாடு   சரி­யா­னது என்ற பார்வை  பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  அதனை  கருத்தில் கொண்­டுதான்  கடந்த  வெசாக் தினத்­தன்று  கைதி­களின்  விடு­தலை  நிகழ்­வுக்­காக வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு விஜயம் செய்த  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஞான­சார தேரரை சந்­தித்துப் பேசி­ய­துடன்  அவரை விடுவிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை  எடுத்­தி­ருக்­கின்றார். 

பொது­மன்­னிப்­ப­ளித்து ஜனா­தி­பதி ஞான­சார தேரரை விடு­வித்­துள்ள விட­ய­மா­னது  நீதித்­து­றைக்கும்  நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்­கு­மி­டையில் மீண்டும்   முரண்­பாட்டை  ஏற்­ப­டுத்­தி­வி­டுமோ என்ற  கேள்­வியும் எழுந்­தி­ருக்­கின்­றது.  ஜனா­தி­ப­தியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக  சிரேஷ்ட சட்டத்தரணிகள்  ஒன்றிணைந்து நீதிமன்றத்தை   நாடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இவ்வாறு நீதிமன்றத்தை   நாடுமிடத்து  நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமிடையில் முரண்பாடு ஏற்பட   வாய்ப்புள்ளது. ஆனாலும்  அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு  எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க அதிகாரமுள்ளமையினால்  பெரும் இழுபறி நிலை ஏற்படப்போவதில்லை.  ஆனாலும்   ஞானசார தேரரின் விடயத்தில்  ஜனாதிபதியின்  செயற்பாடு நீதித்துறையின்  சுயாதீனத்தன்மையை   கேள்விக்குட்படுத்துவதாகவே  அமைந்துள்ளது. 

இனவாத, பேரினவாத  சக்திகளுக்கு   ஊக்கமளிக்கும்  செயற்­பாடா­­­­கவே   இது அமைந்திருக்கின்றது.  இந்த  முன்னுதார­ணமானது  எதிர்காலத்தில்   இன மதங்களுக்கிடையில் விரிசல்­களை ஏற்படுத்துவதற்குக்கூட காரணமாக அமையலாம்.    பேரினாத சக்திகளுக்கு ஆதரவளிப்பது என்பது  நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை அரசியல் தலைமைகள் உணர்ந்துகொள்வது நல்லது.

 

http://www.virakesari.lk/article/56633

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.